Friday 7 July 2017

ஜோதிட அடிப்படையில் வீட்டில் மீன், செடிகள் வளர்ப்பது பற்றி?

ஜோதிட அடிப்படையில் வீட்டில் மீன், செடிகள் வளர்ப்பது பற்றி?


எதையும் நாங்கள் ராசி அடிப்படையில் தான் பார்க்கிறோம். மீன் என்றால் மீன ராசி. 


மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் ராசிக்காரர்கள் எல்லாம் வீட்டில் மீன் வளர்க்காமல் இருப்பது நல்லது. இவர்களுக்கு இது சரியாக இருக்காது.

மற்றவர்களுக்கு மீனம் என்கிற வீடு யோக வீடாக இருக்கும். எனவே மற்றவர்கள் மீன் வளர்க்கலாம்.

உதாரணமாக ஒருவர் பெசன்ட்நகரில் நிறைய பொருட்செலவில் பெரிய வீடு கட்டினார். 6 மாதம் கழித்து வீட்டில் மீன் தொட்டி வைத்தார்கள். அதில் இருந்து அவர்களுக்கு பிரச்சினை ஆரம்பித்தது. என்னிடம் வந்தார். அவர்களு‌க்கு பிரஷ்ணம் பார்த்ததில், வீட்டில் ஏதாவது லவ் பேர்ட்ஸ், மீன் வளர்க்கின்றீர்களா என்று கேட்டேன்.

ஆமாம், சமீபத்தில் தான் மீன் வளர்க்க ஆரம்பித்தோம். அப்போதில் இருந்து தான் பிரச்சினை ஆரம்பித்தது என்று அந்த பெண்மணி கூறினார். உடனடியாக அதை அகற்றி விடுங்கள் என்று சொன்னேன். அவர்களும் அதையே செய்தார்கள்.

எல்லாமும் எல்லாருக்கும் பொருந்தாது. 

ஒரு பட அதிபர் வந்திருந்தார். தனுசு ராசிக்காரர். அவரு‌க்கு 6வது வீடாக ரிஷபம் இருந்தது. அவர் தனது படத்திற்கு காளை என்று பெயர் வைத்தார். அந்த படம் சரியாக ஓடவில்லை.

எதையும் நம்முடைய ராசிக்கு ஒத்து வருமா என்று பார்க்க வேண்டும். 

மீன் வளர்ப்பது என்பது எங்கு வளர்த்தாலும் சரியாக வராது. மீன் வளர்க்க ராசியில்லாதவர்கள் மீன் பண்ணை, இறால் பண்ணை வைத்து நஷ்டம் அடைந்தது எல்லாம் கதை உண்டு.

தாவரம் எல்லோரும் வளர்க்கலாம். ஆனால் முள் செடிகள் மட்டும் சிலருக்கு ஒத்து வராது. அதாவது ரோஜா செடி சிலருக்கு ஒத்து வராது. டிசம்பர் பூக்கள், கனகாம்பரம் போன்ற செடிகளை மேஷ ராசிக்காரர்கள் வளர்க்கக் கூடாது.

இது போன்றவற்றை சிலர் பைத்தியக்காரத்தனம் என்று சொல்லக் கூடும். ஆனால் ஒவ்வொரு பொருளும் அதற்கான தாக்கம் கொண்ட மனிதர்களை வீட்டிற்குள் கொண்டு வந்துவிடும்.

மேஷ ராசிக்காரர்கள் கனகாம்பரமோ, டிசம்பர் செடியையோ வைத்தால் எதிர்மறையான எண்ணம் கொண்டவர்கள் வீட்டிற்கு வர ஆரம்பித்துவிடுவார்கள். அந்த செடிகளை..


மனிதனின் குணம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக இருக்கக் காரணம்?


நமது ஜோதிடம் சந்திரனை அடிப்படையாக வைத்தது. சந்திரன் இரண்டரை நாட்களுக்கு ஒரு முறை இடம் பெயர்வான். மேலும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நட்சத்திரம் என்று மாறுபடும்.

எனவேதான் அன்றைய நாளின் நட்சத்திரத்திற்கு ஏற்றபடி நமது குணங்கள் மாறுபடும். சந்திரன்தான் மனோகாரகன்.

எனவே அந்த நாளைய நட்சத்திரத்தின் படிதான் மனநிலை அமையும். எனவே அதன் போக்கில் சென்று அதனை காண வேண்டும்.

கோப உணர்ச்சி வரும்போது?

கோப உணர்ச்சி வரும்போது, அதற்கான காரணத்தையும், என்ன செய்வது என்பதையும் யோசிக்க வேண்டும்.

சிலரை எல்லாம் கோபப்படு என்றே சொல்கிறேன். செங்கல்லை எடுத்து அடித்து இரண்டாக உடைத்துப் போடு. பூவை எடுத்து பிச்சிப் பிச்சிப் போடு என்று சொல்கிறோம். இதனை செய்யும்போது என்னடா மனநிலை சரியில்லாதவர் போல செய்கிறோமே என்று நமக்கேத் தோன்றி, அதனை நிறுத்திவிடுவோம்.

மேலும், காமம் மேலிடும்போது இதுபோன்று தண்ணீரில் போய் அமர்ந்து கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்கிறோம். 

எனவே கோபம் வரும்போது அதனை எப்படி சமாளிப்பது என்று யோசித்து அதனை செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...