Friday 21 April 2017

பித்ரு தோஷத்தின் உண்மை பற்றிய புரிதல்!

பித்ரு தோஷத்தின் உண்மை பற்றிய புரிதல்!

பல ஜோதிடர்கள் பல நேரம், தங்கள் வாடிக்கையாளர்களின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளது என கூறி அவர்களைப் பதற வைப்பார்கள். உண்மை என்னவென்றால், நம் முன்னோர்களின் செயல்களால் நாம் சில நன்மைகளை அடைவோம் அல்லது சில அவதிகளுக்கு ஆளாவோம்.
பித்ரு தோஷம் என்பது நம் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையாததால் வரும் தோஷம். பித்ரு தோஷத்தால் பாதிக்கப்பட்ட தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய நடைமுறை நிகழ்வுகளில் உள்ளன. 13 வருட ஜோதிட அனுபவத்தைப் பெற்ற ஒரு ஜோதிட வல்லுநர் இதனை கூறியுள்ளார். ஜோதிடம் பற்றி தெரியாதவரை கூட இதில் சம்பந்தப்படுத்தலாம். 4 அல்லது 5 புள்ளிகளை கொண்டிருந்தாலே ஒருவர் பித்ரு தோஷத்தால் அவதிப்படுவார்.
பித்ரு தோஷ அறிகுறிகள்
* திருமணம் தாமதமாகும் அல்லது நடக்காது.
* வீட்டின் சுவர்களில் விரிசல் ஏற்படுதல்
* பாலை கொதிக்க வைக்கும் போது அடிக்கடி பொங்கி வழிதல்.
* கையில் இருந்து உணவு பொருட்கள் அடிக்கடி கீழே விழுதல்.
பித்ரு தோஷ அறிகுறிகள்
* தொடர்ச்சியாக பழுது பார்த்த பின்னரும் கூட சுவர்களில் இருந்து தண்ணீர் கசிதல். ஒழுகும் சுவற்றில் தான் இறந்த ஆன்மாக்கள் வாழும்.
* வீட்டில் அடிக்கடி சாக்கடை அல்லது தண்ணீர் பிரச்சனை ஏற்படுதல். குழாய்களை பிளம்பரை கொண்டு பல முறை பழுது பார்த்திருந்தாலும் கூட தண்ணீர் ஒழுகக்கூடும்.
* தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும்.
பித்ரு தோஷ அறிகுறிகள்
* வணிகத்தில் இருப்பவர்கள் எப்போதும் கடனை கொண்டிருப்பார்கள். நெருப்பு அல்லது திருட்டினால் அடிக்கடி ஏற்படக்கூடிய நஷ்டம். திடீரென ஸ்தாபனம் மூடப்படும் நிலைக்கு வருதல்.
* அடிக்கடி வேலை மாற்றம் அல்லது வேலையே இல்லாமல் இருத்தல்.
பித்ரு தோஷ அறிகுறிகள்
* வீட்டில் உள்ள பெரியவர்களையும், குடும்ப மரபுகளையும் சிறியவர்கள் மதிக்காமல் நடந்து கொள்வது.
* குழந்தைகளிடம் பிறப்பு குறைப்பாடு இருத்தல் அல்லது குறைகளே இல்லாமல் இருத்தல். இவைகளுக்கு சில எளிய பரிகாரங்கள் உள்ளன. அவைகளை நம்பிக்கையுடன் செய்தால் அற்புதமான பயன் கிடைக்கும்.
பித்ரு தோஷ பரிகாரங்கள்
* குடும்ப மதிப்புகளுக்கு புத்துயிர் அளித்து, வீட்டில் உள்ள பெரியவர்களை மதித்து நடப்பது.
* நம்பிக்கையுடன் ஷரத்தை செய்தல். கயா அல்லது ஹரித்வாரில் தர்ப்பணம் செய்தல்.
* நம் முன்னோர்கள் செய்த தவறான செயல்களுக்கு மனதளவில் நாம் மன்னிப்பு கேட்டல்.
* முடிந்தவரை தேவையென வருபவர்களுக்கு உதவி செய்தல்.
பித்ரு தோஷ பரிகாரங்கள்
* நம் வருமானத்தில் இருந்து 5%-ஐ தொண்டு காரியங்களுக்கு பயன்படுத்துதல்.
* குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடம் நல்லுறவை பேணுதல். நம் கர்மாக்களை சமநிலைப்படுத்த, நம்மை காயப்படுத்துபவர்களை மன்னித்தல்.
* வேண்டுமென்றே நாம் காயப்படுத்தியவர்களிடம் மன்னிப்பு கோருதல்.

No comments:

Post a Comment

தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல...