Thursday 6 April 2017

பெற்றோருடன் குழந்தைகள்

                                                          பெற்றோருடன் குழந்தைகள்



 கண்களை உருட்டி, கைகளில் பிரம்பெடுத்து, நாக்கை கடித்து, குரலை உயர்த்தி... அடடா எதற்கு இந்த காளி அவதாரம்? கூல்....இனிமே உங்க குட்டிச் செல்லம் தான் உங்க எஜமான். இந்த அவதாரத்தை இனி  குழந்தைகளே எடுக்கப் போகிறார்கள். ஒரு வேளை நீங்கள் அவர்கள் முன் மண்டியிட்டு தோப்புக்கரணம் போட வேண்டி வரலாம். எதற்கும் தயாராக இருங்கள் பெற்றோர்களே என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.  
உங்கள் குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுடன் செலவழிக்கும் நேரத்தை வடிவமைப்பது பற்றி சொல்கிறார் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரபு. 
*அலுவலகப் பணிகள், செல்போனில் பேச வேண்டிய விஷயங்களை வீட்டுக்கு வெளியில் முடித்து விடுங்கள். குழந்தைகளுடன் இருக்கும் போது செல்போனை தவிர்த்துவிடுங்கள். ஆக, குழந்தைகளுக்கு நெருக்கமாகவும், செல்போனுடன் செல்லக் கோபத்துடனும் தள்ளியிருங்கள். 
* உங்க குட்டிச் செல்லம் என்ன பேசினாலும் ‘ம்’ கொட்டிக் கேளுங்கள். வியப்பை வெளிப்படுத்துங்கள். குழந்தைகளை நான் தான் வளர்க்கிறேன் என்ற எண்ணத்தை முதலில் ரீசைக்கிள் பின்னுக்கு தள்ளி விட்டு சுதந்திரக் காற்றை சுவாசிக்க விடுங்கள். அவர்களது குழந்தைத் தனம் வாங்கி மீண்டும் ஒரு முறை வளரப் பழகுங்கள். நாட்கள் ஒவ்வொன்றும் வெகு சுவாரஸ்யமாக மாறிப் போகும். 
* உங்கள் குழந்தைகள் சொன்னதை மறுபடியும் சொல்கிறார்கள் என்றால், நீங்களும் முதலில் கேட்ட அதே பாவனையோடு மீண்டும் கேளுங்கள்.
* பொடிசுகளுக்கு எதுக்கு மரியாதை என்று எண்ணாமல் அவர்களை உங்களுக்கு சமமாக எண்ணி, மரியாதை கொடுத்துப் பழகுங்கள். சிறப்பாக செய்யும் செயல்களுக்கு முத்தமழை பொழியுங்கள்.
* அவர்களுக்கு பிடித்த சேமிப்பு டப்பாவாக வாங்கி கொடுத்து சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். அவர்கள் நல்ல செயல்கள் செய்யும்போதெல்லாம், நாணயம் ஒன்றை கொடுத்து அந்த பாக்ஸில் போட செய்யுங்கள். ஊக்கப்படுத்துதல், சேமிப்பு என்று இரட்டிப்பு சந்தோஷம் குழந்தைகளுக்கு கிடைக்கும்.
* நெகட்டிவ் விஷயங்களை அவர்கள் முன் பேசுவதை தவிர்த்துவிடுங்கள். என்றோ அவர்கள் செய்த பிரச்னை ஏற்படுத்திய விஷயத்தை கூட ஞாபகப்படுத்திவிடாதீர்கள்.
* அவர்களுடைய நட்பு வட்டம், அவர்களுக்கு பிடித்த கலர், பிடித்த பொம்மை என அவர்கள் ரசனையை உங்களுக்கும் பிடித்ததாகக் காட்டிக் கொள்ளுங்கள். அவர்களுடைய நட்பு வட்டத்தில் இணைய இதுவே ஒரே வழி.
 * குரலை உயர்த்திப் பேசுவது, அவர்கள் முன்பு மிரட்டலாக நடப்பது, கெத்துகாட்டுவது எல்லாம் வேஸ்ட். அவர்களுடன் இணையுங்கள். சாப்பிடும்போது குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டால் அன்பின் ருசி கூடும்.  
* குழந்தைகளிடம் இயல்பாகவே உள்ள குறைகளை அடுத்தவர் முன்பு சுட்டிக் காட்டுவதைத் தவிர்க்கலாம். வழிபாடு, தியானம், ஊர் சுற்றுதல், திட்டமிடாப் பயணம் என்று உங்களது குழந்தைக்கு வித்தியாசமான அனுபவங்களை தரத் தவறாதீர்கள். 
* போரடிப்பதும், சோர்வாக இருப்பதும் குழந்தைகளுக்கு பிடிக்காது. சுறுசுறுப்பாக இயங்குவதற்கான வாய்ப்புகளை அள்ளிக் கொடுங்கள். குழந்தைகள் இயல்பாக செய்யும் தவறுகளை கிண்டலடிக்க வேண்டாம். ஏதாவது ஒரு வேலையில் இலக்கை முடிவு செய்து அவர்களோடு இணைந்து செய்து முடித்து விடுங்கள். 

*இப்போது நீங்களும் உங்கள் குழந்தையும் நெருங்கிய நண்பர்கள். இனி வாழ்வே சொர்க்கம் தானே. குழந்தைகளாகவே இருந்தாலும்  அடிக்கக்கூடாது  பெற்றோர்களே.


1 comment:

தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல...