Thursday 8 August 2019

ஸ்ரீ மகா லக்ஷ்மி மூல மந்த்ர ஜபம்

 

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

பணம், பொருள், செல்வம், வீடு, மனை, வாகனங்கள், பால் பாக்கியம், சுப, செளக்கிய, செளகரிய, செளபாக்கியங்கள், தீர்க்க ஆயுள், ஆரோக்கியம், பட்டு வஸ்த்திரங்கள், நகைகள், நல்ல வருமானங்கள் ஆகியவைகளை நாம் ஸ்ரீ மகா லக்ஷ்மியை எவ்வளவு மேன்மையாக ஆராத்திகிறோமோ, அந்த அளவிற்கு ஸ்ரீ மகா லக்ஷ்மி நமக்கு கொடுப்பாள்.
ஜபம் என்பது மிகவும் முக்கியம். ஜபத்தால் நாம் அனைத்து காரியங்களையும் சாதிக்கலாம்.
இந்த ஜப பலனால், ஸ்ரீ மகா லக்ஷ்மி கடாட்சம் பரிபூரணமாக ஜபம் செய்பவர்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும்.
நாம் ஒருவருக்கு ஒரு மந்திரத்தை உபசேதசம் செய்கின்றோம். இது அவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம். ஆனால் அதை அவர் முறைப்படி ஜபம் செய்து கொண்டு வந்தால்தான் பலன் கிடைக்கும். அதாவது அவரது சிரத்தையும் தேவை.
ஒருவரிடம் நாம் ஒரு தக்காளியைக் கொடுத்தால் அவர் அதை அப்படியேயும் சாப்பிடலாம் அல்லது சமைத்தும் சாப்பிடலாம். அதனுடைய பலன் அத்துடன் முடிந்து விடும். அல்லது நாம் அவரிடம் தக்காளியின் நல்ல விதையையோ அல்லது தக்காளி செடியின் நாத்து ஒன்றையோ கொடுத்தால், அதை அவர் ஊன்றி தண்ணீர் ஊற்றி வளர்த்தால், நிறைய தக்காளிப் பழங்களை அறுவடை செய்யலாம் அல்லவா?.
மேற்சொன்ன இரண்டாவது உபாயத்தை, சற்று சிரத்தை எடுப்பவர்களும் தேர்ந்தெடுப்பார்கள். அதிக பலன்களையும் அடைவார்கள்.
அதே போல், நாம் ஸ்ரீ மகா லக்ஷ்மி மூலமந்திர ஜபத்தை எப்படி செய்ய வேண்டும் என்ற முறையை சொல்லிக் கொடுத்து, ஏற்பாடுகளையும் செய்து தருகிறோம். அவரவர் சிரத்தைப்படியும், முயற்சிபடியும், அவர்கள் ஜபம் செய்து ஸ்ரீ மகா லக்ஷ்மி கடாட்சத்தைப் பெறலாம்.
நாம் கருவியாக இருந்து அவர்களை ஊக்குவிப்போம். மேலும் இது செலவே இல்லாத உயர்ந்த உபாயம் ஆகும்.
ஜபம் என்றால் என்ன?
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு மூல மந்த்ரம் உள்ளது. இதை நாம் குரு மூலம் உபதேசம் பெற்று, குறிப்பிட்ட எண்ணிக்கை ஜபம் செய்து, புரசரனைகளையும் செய்து விட்டால், அந்த தெய்வத்தின் பரிபூரண கடாட்சம் கிடைக்கும். அந்த தெய்வத்திடம் பேசலாம்.
வேத காலத்தில் நம் முன்னோர்கள், ரி´கள், முனிவர்கள் ஜபம் மூலம் தான் அனைத்தையும் தெரிந்து கொண்டார்கள். ஜப சித்தி மூலம் ஞான திருஷ்டி பெற்று, அனைத்தையும் தெரிந்து கொண்டார்கள். உதாரணமாக கிரகங்கள் எப்படி உள்ளன, தட்ப வெப்ப நிலைகள் எப்படி இருக்கும், மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற பல வி­யங்களை ஞான திருஷ்டி மூலம் கண்டுபிடித்தார்கள், அது இன்று விஞ்ஞான முறைப்படி சரியாகவும் இருக்கிறது.
நம் முன்னோர்கள் இந்த மாதிரியான எத்தனையோ வி­யங்களை ஞான திருஷ்டியின் மூலம் அறிந்து நமக்கு தெரிவித்து உள்ளார்கள்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், ஜபம் மூலம் பல காரியங்களை சாதிக்கலாம்.
இது கலியுகம், பணம் எல்லோருக்கும் தேவை, அதனால், மகா லக்ஷ்மியைப் பிடித்துக் கொள்வோம். ஸ்ரீ மகா லக்ஷ்மி கடாட்சத்தை பரிபூரணமாக பெறுவோம்.
ஸ்ரீ மஹா லக்ஷ்மி உபாசனை
எல்லா ஜீவன்களின் சுகங்களையும் காப்பவள் ஸ்ரீ மஹா லக்ஷ்மி. தன்னை வேண்டுபவர்களின் வரங்களை நிறைவேற்றுவது இவள் குணம், எளிமையிலும், எளிமையானவள். தன்னைச் சார்ந்தவர்களை மிகவும் உயர்ந்தவர்களாகவும், தனவான்களாகவும் ஆக்கி வைப்பாள். ஏழ்மை இவள் அடியார்களைக் கண்டால் வெட்கப்பட்டுத் தலை குனிந்து ஓடிவிடும்.
தன்னை எவர் உள்ளன்புடன் நேசிக்கிறார்களோ அல்லது உண்மை அன்பைக் காட்டுகிறார்களோ அவர்களை விட்டு இவள் என்றும் பிரிவது இல்லை. நேசிக்கும் இதயத்தில் என்றும் நிரந்தரமாக வாசம் செய்வாள்.
திருப்பாற்கடலைத் தேவர்களும், அசுரர்களும் கடைந்தார்கள். அளவற்ற பெருமையும், மதிப்பும் மிக்க பல செல்வங்கள் அதில் இருந்து வெளி வந்தன. முதலில் ஆலகாலவி­மும் பின்பு உச்சைச்சிரவம், கெளஸ்துபமணி, பஞ்சதருக்கள், காமதேனு, கற்பக விருட்சம், சந்திரன் ஐராவதம் ஆகியவை வெளிவந்தன. பிறகு மஹாலக்ஷ்மி வெளி வந்தாள்.
செந்தாமரை மலரைத் திருக்கையில் ஏந்தியவளும், பி ர ஸ ன் ன ம V ன தி ரு மு க த் ç த உ ç ட ய வ ளு ம் , செளபாக்கியத்தைத் தருபவளும், தனது மற்ற இருகரங்களாலும் அபயம் தருபவளும், பற்பல ரத்ததினங்களால் அலங்காரம் செய்து கொண்டவளும், ஹரி, ஹர, பிரம்மமாதிகளால் போற்றப்பட்டவளும், செந்தாமரைக் கண்களையும், மிகத் தூய ஆடை பூண்டவளும், சந்தனம், மணமிக்க புஷ்பஹாரம் இவைகளால் சோபையுடன் விளங்குபவளும், மனதை வசீகரிப்பவளும், மூவுலகுக்கும் ஐஸ்வர்யத்தை வழங்குபவளுமான ஸ்ரீ மகா லக்ஷ்மி பாற்கடலில் இருந்து சுபசோபனத்துடன் தோன்றினாள்.
இவள் யார் வீட்டு வாசற்படியைத் தொடுகிறாளோ, அப்படித் தொட்ட உடனேயே, அவன் வீடு லக்ஷ்மி ராஜ்யமாகிவிடுகிறது.
ஸ்ரீ மகா லக்ஷ்மியை ஸ்ரீமன் நாராயணன் தன்னுடைய இதயத்தில் வைத்துள்ளார். ஸ்ரீ மகா லக்ஷ்மி தன்னை பூஜிப்பதைவிட நேசிப்பதையே பெரிதும் விரும்புவாள். எங்கே உண்மையும் நியாயமும் இருக்கிறதோ அங்கே இவள்
இருப்பாள்.
இவள் கடலில் இருந்து பிறந்தவள். கடலைப் போன்றே விரிந்த மனமுடையவள். கடலுக்குள் இருக்கும் செல்வங்களுக்கு எல்லையே கிடையாது. அதுபோல, இவளுக்கு இருக்கும் செல்வங்களுக்கும் எல்லையே கிடையாது. அவள் இல்லாத இடம் எதுவும் இல்லை.
இந்த மகா லக்ஷ்மியின் உபாசனை மகத்தானது. இவள் எல்லாத் தேவ பெண்டிர்களையும் தனது சேவகிகளாக வைத்துக் கொண்டுள்ளாள். இதனால் இவளை வழிபாடு செய்பவர்களுக்கு மற்ற தேவர்களின் அதாவது 33 கோடி தேவர்களின் அருளும் கிடைக்கிறது. மஹாலக்ஷ்மி அருள் பெற மந்திர சாஸ்திர நூல்களும், பல்வேறு புராணங்களும் பல வழிகளைச் சொல்லுகின்றன. இதில் ஒரு முக்கிய முறை, ஸ்ரீ மகா லக்ஷ்மி மூலமந்த்ரத்தை ஜபம் செய்வதே ஆகும்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
சகல செளபாக்கியம் தேஹிமே
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மியை நமஹ.
இந்த மூலமந்த்திர உபாசனை மனிதர்களுக்கு இதமானது. இந்த ஸ்ரீ மகா லக்ஷ்மியை உபாசனை செய்து நற்பலன் பலவற்றை அடைந்தவர்கள் பலர்.
இந்த உபாசனை மூலமந்த்ரத்தை குரு மூலம் உபதேசம் பெற்று, ஒரு லட்சம் முறை ஜபம் செய்தால் ஸ்ரீ மகா லக்ஷ்மி கடாட்சம் முழுமையாக பெறலாம். இவள் பிரத்யட்சமாக தோன்றுவாள். அருள்புரிவாள்.
உபதேசத்தின் முக்கியத்துவம்:
ஒரு மூல மந்த்ரத்தை ஜபம் செய்ய வேண்டுமானால் அந்த மந்த்ரத்தை ஒரு குரு மூலம் உபதேசம் பெற்று தான் ஜபம் செய்ய வேண்டும். உபதேசம் பெறாமல் செய்தாலும் ஜபத்திற்கு பலன்கள் உண்டு என்றாலும், உபதேசம் பெற்று ஜபம் செய்தால் 100% பலன்கள் கிடைக்கும். உபதேசம் பெறாமல் ஜபம் செய்தால் 10% பலன்கள் கிடைக்காமலா போய் விடும்? ஸ்ரீ மகாலக்ஷ்மி கருணை கடல், பலன்கள் கொடுக்காமல் இருக்க மாட்டாள். இருந்தாலும், 10% க்கும் 100% க்கும் வித்யாசம் உள்ளது அல்லவா? அதனால் உபதேசம் பெற்று ஜபம் செய்தலே உசிதம் ஆகும்.
நம் நாட்டில் இருந்த முனிவர்கள், மஹரி´கள், மகான்கள் அனைவரும் அவரவர் செய்த மூல மந்த்ர உபாசனையை ஒரு தகுந்த குரு மூலம் உபதேசம் பெற்று தான், ஜபம் செய்தார்கள். பலன்களையும் பெற்றார்கள். அவர்கள் மூலம் இந்த சமுதாயமே பெரிய பெரிய பலன்களை பெற்றது. அதாவது அவர்கள் தன்னலம் கருதாது, ஜபம் செய்து மக்களுக்கு வேண்டிய மிக முக்கியமான வி­யங்களை, ஞான திருஷ்டி மூலம் அறிந்து சொன்னார்கள்.
இதில் அதி முக்கியம் என்னவென்றால் ஒரு குரு மூலம் பெற்ற உபதேசமே ஆகும். வேதங்கள் என்ன சொல்கிறது என்றால் நல்ல சிஷ்யனை குரு தேடுவாராம். தேர்ந்து எடுப்பாராம். ஒரு சிஷ்யன் ஒரு குருவை அடைய புண்யம் செய்து இருக்க வேண்டும். எப்பொழுதுமே குருவை தேடுவதிலேயே இருக்க வேண்டும்.
உபதேசம் கிடைப்பது பூர்வ புண்ய பலனை பொருத்துதான். ஏனென்றால் குரு அனைவருக்கும் உபதேசம் செய்வது இல்லை. சிரத்தை உள்ளவர்களுக்கே உபதேசம் செய்வார். மேலும் ஒரு குரு சிஷ்யனுக்கு ஒரு மூல மந்த்ரத்தை உபதேசம் செய்தால், அவர் அந்த மூல மந்த்ரத்தை வாழ் நாள் முழுவதும் எவ்வளவு எண்ணிக்கை ஜபம் செய்து இருந்தாரோ, அதில் 10% அதாவது 10 இல் ஒரு பங்கு சிஷ்யனுக்கு போய் சேர்ந்து விடும். இதற்கு தசாம்ச விதி என்று கூறப்படுகிறது.
அதேபோல் அந்த குருவானவர், 10 சிஷ்யர்களுக்கு அந்த மந்த்ரத்தை உபதேசம் செய்தால், அவர் வாழ்நாள் முழுவதும் செய்த ஜபம் அனைத்தும் அந்த 10 சிஷ்யர்களுக்கு போய் சேர்ந்து விடும். அதற்கு பிறகு அவர் திவால் தான். அதாவது பிறகு, அவர் ஆரம்பத்தில் இருந்து ஜபம் செய்து சேர்க்க வேண்டியது தான்.
அதேபோல் அந்த குருவானவர், 10 சிஷ்யர்களுக்கு அந்த மந்த்ரத்தை உபதேசம் செய்தால், அவர் வாழ்நாள் முழுவதும் செய்த ஜபம் அனைத்தும் அந்த 10 சிஷ்யர்களுக்கு போய் சேர்ந்து விடும். அதற்கு பிறகு அவர் திவால் தான். அதாவது Bankrupt. பிறகு, அவர் ஆரம்பத்தில் இருந்து ஜபம் செய்து சேர்க்க வேண்டியது தான்.
மேற்சொன்ன வி­யங்கள் அனைத்தும் எல்லா சாஸ்திரங்களிலும் கூறப்பட்டுள்ளது.
அதனால் தான், எவ்வளவு பெரிய மகான்களாக இருந்தாலும், உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தாலும், அவரவர் செய்த மந்த்ர ஜபத்தை ஒருவருக்குக் கூட உபதேசம் செய்வதே இல்ç. சிலர் தன்னுடைய மகனுக்கு கூட உபதேசம் செய்வது இல்லை.
இதற்கு காரணம் என்னவென்றால்,
ஜப பலன்கள் நம்முடைய அடுத்த அடுத்த ஜன்மாவிற்கு தொடர்ச்சியாக தொடர்ந்து வரும்.
ஜப பலன்கள் நம்முடைய சந்ததியினருக்கு போய் சேரும். அதாவது, இந்த ஜபத்தினால் நல்ல பலன்கள், மகன், பேரன், கொள்ளுபேரன், எள்ளுபேரன் என்று அனைவருக்கும் தொடர்ச்சியாக கிடைக்கும்.
நாம் நம்முடைய சந்ததியினருக்கு சொத்தும் பணமும் சேர்த்து வைக்க வேண்டும் தான். ஆனால் அதை அவர்கள் காப்பாற்றுவார்களா? அல்லது அவை எல்லாம் அவர்களுக்கு பயன்படுமா என்பதும் கேள்விக்குறிதான், ஆனால், ஜப பலன்கள் கண்டிப்பாக அவர்களுடைய வாழ்க்கையில் சுபீட்சத்தைக் கொடுக்கும்.
இவ்வளவு சிறப்பான இந்த உபதேசத்தை யார் தான் அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்வார்கள்.
ஒரு பெரிய ஸ்தானத்தில் இருப்பவரிடம் இந்த மூல மந்த்ரத்தை எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்று கேட்கிறோம் என்று வைத்துக் கொள்வோம் இந்த மூல மந்த்ரம் இதுதான் என்று ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்தோ அல்லது அச்சடித்து கொடுத்தோ, இதை தினமும் ஜபம் செய்யுங்கள் பலன்கள் கிடைக்கும் என்று சொல்வார்கள். ஆனால் உபதேசமாக செய்ய மாட்டார்கள். நீங்கள் உங்கள் நண்பர்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், உங்களுக்கு தெரிந்த ஆன்மீக நண்பர்கள் அனைவரையும் கேளுங்கள், உங்களுக்கு ஏதாவது ஒரு மூல மந்த்ரம் முறைப்படி உபதேசம் செய்யப்பட்டுள்ளதா என்று. உபதேசம் கிடைப்பது அரிதிலும் அரிது என்று உங்களுக்கு புரியும். இது பூர்வ புண்ணியத்தைப் பெருத்தது தான். உபதேசம் பெற்று கொண்டுதான் ஜபம் செய்ய வேண்டும். ஆனால் உபதேசத்தை யாரும் செய்வது இல்லை. இதற்கு என்ன தான் தீர்வு என்று நீங்கள் கேட்கலாம்.
இதற்கு ஒரு விடை காணவும். ஒரு வழியை கண்டு பிடிக்கவும், 15 வருடங்களுக்கு முன் யோசித்தேன். பல வருடங்கள் யோசித்தேன். பல பெரியவர்களை சந்தித்து கேட்டேன் அனைவரும் இந்த 10% அதாவது இந்த தசாம்ச விதியை தான் கூறினார்கள். மேலும் பல புத்தகங்களை படித்தாலும் இந்த விதியைத்தான் எல்லா புத்தகங்களும் கூறுகின்றன.
அனைவருக்கும் ஸ்ரீ மகாலக்ஷ்மியின் கடாட்சம் வேண்டும். முக்கியமாக, பணம், பொருள், செல்வம், வீடு, மனை, வாகனங்கள், பால்பாக்கியம், சுப, செளக்கிய, செளகரிய, செளபாக்கியங்கள், தீர்க்க ஆயுள், ஆரோக்கியம், பட்டு வஸ்த்திரங்கள், நகைகள், நல்ல வருமானங்கள ஆகிய 16 விதமான யோகங்களையம், பாக்யங்களையும் ஸ்ரீ மகாலக்ஷ்மி தான் கொடுக்க வேண்டும். ஸ்ரீ மகாலக்ஷ்மி நினைத்தால், ஒரு குறைந்த காலத்திலேயே நாம் இவற்றை எல்லாம் பெற்றுவிடலாம்.
அதனால் லோக க்ஷேமத்திற்காகவும், அனைவருக்கும் ஸ்ரீ மகா லக்ஷ்மி கடாட்சம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், இந்த உபதேசத்தை அனைவருக்கும் செய்யலாம் என்று நினைத்து பல வருடங்கள் யோசித்தேன். அதே சமயம் நாம் 10 பேருக்கு உபதேசம் செய்து கொடுத்து விட்டு நாம் "0' ஆகிவிடக் கூடாது என்ற பயமும் இருந்தது.
இப்படி பல வருடங்கள் ஆலோசித்த பொழுது, ஒரு முக்கியமான இடத்தில் இருந்து தியானம் செய்யும் பொழுது, ஒரு அருமையான விடை கிடைத்தது. அதன் பிறகு நான் அனைவருக்கும் அவர்கள் குடும்ப சுபீட்சத்திற்காக ஸ்ரீ மகா லக்ஷ்மியின் மூலமந்த்ரத்தை உபதேசம் செய்து வருகின்றேன். தைரியமாக செய்கிறேன். தசாம்ச விதி நம்மை தொடவில்லை. காரணம், லோக க்ஷேமத்திற்காக செய்கின்றோம் என்று ஸ்ரீ மகா லக்ஷ்மிக்கும் தெரியும் என்று நினைக்கின்றேன். நான், மேலும் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றேன். அந்த விடையை தாங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? இதை ஒரு கதையின் மூலம் தான் விளக்க முடியும்.
கர்ணன் மரணம் ஏற்படும் தருணத்தில் இருக்கிறான். அங்கு தர்ம தேவதை வருகிறாள். "கர்ணா ஸ்ரீ கிருஷ்ணர் பிராமண சொரூபத்தில் வந்து உன்னிடம் உள்ள தர்ம பலன்களை யாசகம் கேட்க வருகிறார். இந்த தர்ம பலன்களை தாரை வார்த்து கொடுத்து விடாதே. கொடுத்தால் உன் உயிர் பிரிந்து விடும்" என்றாள். ஸ்ரீ கிருஷ்ணர் பிராமண சொரூபத்தில் கர்ணனுக்கு பக்கத்தில் வருகின்றார். கர்ணனுக்கு பிராமன சொரூபத்தில் வந்திருப்பது ஸ்ரீ கிருஷ்ணர் என்று தெரிகிறது. கர்ணன் "கிருஷ்ணா, ஸ்வாகதம், உன் வரவு நல்வரவு ஆகட்டும். நீ கிருஷ்ணனாக வந்து எனக்கு இந்த நேரத்தில் தரிசனம் கொடுக்கக் கூடாதா? ஏன் பிராமண சொரூபத்தில் வந்தாய்?" என்று கேட்கிறான். அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் "கர்ணா, உன்னிடம் ஒரு யாசகம் கேட்க வந்துள்ளேன். பிராமணர்களுக்கு தான் யாசகம் வாங்க தகுதி உண்டு. அதனால் பிராமண சொரூபத்தில் வந்தேன்", என்கிறார். அதற்கு கர்ணன் "கிருஷ்ணா, இப்பொழுது நான் உனக்கு கொடுக்கும்படியாக என்னிடம் எதுவுமே இல்லையே" என்கிறான். அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் "உன்னிடத்தில் உள்ளதை தான் கேட்க வந்தேன்" என்று கூறியதும், கர்ணன் மிகவும் சந்தோ­ப்பட்டு "கிருஷ்ணா, என்னிடம் இருப்பதை கேட்க நினைத்தாயே. அதற்கு மிகவும் நன்றி. உனக்கு என்ன வேண்டும் என்று கேள்" என்றான்.
அதற்கு கிருஷ்ணர் "உன்னிடம் இருக்கும் தர்ம பலன்களை எனக்கு நீ தாரை வார்த்து கொடுக்க வேண்டும்" என்று கேட்டார். அதற்கு கர்ணன் மிகவும் சந்தோ­ப்பட்டு ஸ்ரீ கிருஷ்ணரின் கையில் தன்னுடைய உடலில் இருக்கும் ரத்தத்தை எடுத்து தாரை வார்த்து கொடுக்கிறார். அதாவது தாரை வார்த்து கொடுக்கும் பொழுது ஜலத்தினால் தான் தாரை வார்த்து கொடுக்க வேண்டும். ஆனால் இங்கு கர்ணனுக்கு ரத்தம் என்ற திரவம் தான் உடனடியாக கிடைத்தது. உடனே ரத்தத்தால் தாரை வார்த்து கொடுத்தான். தாரை வார்த்து கொடுக்கும் பொழுது கிழ்க்கண்டவாறு சொல்லி தாரை வார்த்து கொடுத்தான்.
"கிருஷ்ணா என்னுடைய எல்லா தர்ம பலன்களையும் உனக்கு தாரை வார்த்துக் கொடுக்கிறேன். அதே சமயம் இப்பொழுது நான் என்னுடைய தர்ம பலன்களை உனக்கு தாரை வார்த்துக் கொடுப்பதால், அதற்கு என்று ஒரு மிகப் பெரிய தர்ம பலன்கள் எனக்கு கிடைக்கும் அல்லவா?அந்த பலன்களையும் சேர்த்து உனக்கு தாரை வார்த்து கொடுக்கிறேன். அப்பொழுது தான் உன் எண்ணமும் ஈடேறும்'' என்றான். ஸ்ரீ கிருஷ்ணர் இதை கேட்டதும் மிகவும் ஆச்சரியத்துடன், சந்தோ­ப்பட்டு "கர்ணன் இவ்வளவு உயர்ந்த தர்மவானா' என்று நினைத்து, உடனே கர்ணனுக்கு விஸ்வரூப தரிசனத்தைத் தந்தார். கர்ணன் "இப்படி தாரை வார்த்து கொடுத்தால் தான் உன் எண்ணம் ஈடேறும்' என்று கூறி தாரை வார்த்துக் கொடுத்தான். இதற்கு என்ன அர்த்தம் என்றால், தர்மப் பலன்களை ஒட்டு மொத்தமாக ஸ்ரீ கிருஷ்ணருக்கு கர்ணன் தாரை வார்த்துக் கொடுத்தால் தான், கர்ணன் உயிர் பிரியும். ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜூனனை காப்பாற்றுகிறேன் என்று வாக்கு கொடுத்து இருந்தார். கர்ணன் உயிர் பிரிந்தால் தான் அர்ஜூனனை ஸ்ரீ கிருஷ்ணர் காப்பாற்ற முடியும். இது கர்ணனுக்கும் தெரியும். அதனால் தான் அப்படிக் கூறி கர்ணன் தாரை வார்த்துக் கொடுத்தான்.
இந்த இதிகாசப் புராணத்தில் இருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் ஒருவருடைய குடும்ப சுபீட்­த்திற்காக, நான் ஸ்ரீ மகா லக்ஷ்மியின் மூல மந்த்ரத்தை உபதேசம் செய்து கொடுக்கும் பொழுது, நமக்கும் ஒரு அதீத பலன் கிடைக்காமலா போய் விடும். இந்த ஞானோதயம் கிடைத்ததும், அனைவருக்கும் ஸ்ரீ மகா லக்ஷ்மியின் மூல மந்த்ரத்தை உபதேசம் செய்து கொடுக்கிறேன். அவர்களும் நன்றாக இருக்கிறார்கள். நாமும் நம்முடைய பீடமும் வளர்ச்சியை நோக்கி போய் கொண்டுதான் இருக்கிறது.
மற்றவர்கள் உபதேசம் செய்வது இல்லை என்பது எதனால் என்றால், ஒன்று பயம், அடுத்தது வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு ஜபம் செய்து வந்ததை அடுத்தவர்களுக்கு கொடுப்பது சங்கடம் தானே. மேலும் இந்த வி­யத்தில் யாரும் Risk எடுக்க மாட்டார்கள்.
உபநி­த்தில் கீழ்க்கண்டவாறு உள்ளது : "பணம், பொருள்களை எல்லோருக்கும் கொடுக்கலாம். மந்த்ர ஜப பலன்களை மட்டும் அடுத்தவர்களுக்கு கொடுக்காதே அல்லது நல்ல சிஷ்யனுக்கு மட்டும் கொடு".
நம் எல்லோருக்கும் ஸ்ரீ மகா லக்ஷ்மியின் கடாட்சம் நிச்சயமாக வேண்டும். ஜபம் தான் மிகவும் சிறந்தது. அதே சமயம், இது செலவில்லாத உயர்ந்த உபாயம் ஆகும்.
அதனால் சிரத்தை உள்ளவர்களுக்கும், ஜபம் செய்ய விரும்புவர்களுக்கும் உபசேதம் செய்து கொடுக்கிறோம். ஒரு பழமொழி உண்டு. "பாத்திரம் அறிந்து பிச்சை இடு" என்பது. அதே போல் இந்த உபதேசத்தை செய்யலாம் என்று நாம் நினைத்தாலும், இந்த உபதேசத்தை பெறும் தகுதியை பெற்றவர்களுக்கு மட்டும்தான் உபதேசம் செய்யப்படும்.
ஜபம் செய்வதற்கு பிராமணர்கள், பிராமணர் அல்லாதவர்கள் என்ற எந்த பாகுபாடும் இல்லை. அனைவருக்கும் உபதேசம் செய்யலாம். அதாவது சிரத்தையும், குரு பக்தியும் உள்ளவர்களுக்கு
மட்டும் என்பது தான் மிகவும் முக்கியம்.
உபதேசம் பெற விரும்புபவர்கள் குருஜியை நேரில் சந்தித்து மற்ற வி­யங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஸ்ரீ மகா லக்ஷ்மி கடாட்சம் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...