Tuesday 13 August 2019

அபூர்வ சிவ சக்கரம்

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

அபூர்வ சிவ சக்கரம்
*********************
சிவ சக்கரம் பெரிய தவஞ் செய்து அடையும் பயனைச் செய்யும்.விளங்கும் பரம்பொருளாய் சிவத்திடத்துத் தம்மை முழுமையாக ஒப்படைத்து அவர்களுக்கு எல்லா நலன்களும் விளையும்.
இந்த சிவன் சக்கரத்தை கருவூர் தேவர்....
வீதியந்த ஆறு தெரு அமைந்த வீதி
விளையாடி நின்ற திருமாளிகை கண்டாய்
என மாளிகை சிறப்பிக்கின்றனர்.
எட்டு வரையில்மே லெட்டு வரைகீறி
இட்ட நடுவுள் இறைவன் எழுத்தொன்றில்
வட்டத்தி லேயறை நாற்பத்தெட் டும்மிட்டுச்
சிட்டஞ் செழுத்துஞ் செபிசீக் தினமே.
தானவர் சட்டர் சதிரர் இருவர்கள்
ஆன இம் மூவரோ டாற்றவ ராதிகள்
ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமுஞ்
சேனையுஞ் செய்சிவ சக்கரந் தானே.
- திருமந்திரம் 964,965.
குறுக்கும் நெடுக்குமாக 8 கோடுகளின் மேல் 8 கோடுகள் கீறப்பட்டால் அதன்கண் நாற்பத்தொன்பது அறைகள் அமையும் . அவற்றுள் நடு வறையில் "சிவ" எழுத்தாகிய "சி " பொறிக்கப் படுதல் வேண்டும் . மேலும் கீழும் , பக்கமும் ஒவ்வோர்அறைகள் தள்ளப்பட ஐவைந்தறை களாகும் இவற்றின் கண் திருவைந் தெழுத்தை (சிவய நம) அமைத்தல் வேண்டும்.
இந்த பஞ்சாட்சர அமைப்பைச் ஊற்றி அதன் மேல் ஒன்று முதல் இருபத்தி நான்கு அறைகளிலும் ஊர் காவலராகவும் ஐயனாரும் , நகரக் காவலராகவும் பைரவரும் .திருக்கோயில் காவலரும் பிள்ளையாரும் முருகனும் திருவாயில் காவலரான துவாரபாலகர்கள இருவரும்
விந்து ,நாதம் முதலாக கூறப்படும். தூமாயை ஐவரும் ,சிவகணத் தலைவரும் இந்தச் சக்கரத்தில் பாதுகாவலர்களாக காட்டப்படுகின்றன இவர்களை எண் வடிவில் அமைத்து காட்டுகிறார் திருமூலர்.
இப்படி ஒன்று முதல் 21 வரை அமைக்கப்படும் .என் தேவதைகளைச் சிலர் அரபுப் குறியீடுகளாகவும் சிலர் தமிழ் குறியீடுகளாகவும் அமைப்பார்.
இந்த 24 எடுத்திருக்கும் திரு மூலர் வேறு ஒரு விளக்கம் அளிக்கின்றனர்.
ஆறெழுத் தாவ தாறு சமயங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்
சாவித் திரியில் தலையெழுத் தோன்றுள
பேதிக்க வல்லவர் பிறவியற் றார்களே.
- திருமந்திரம் 970.
"ஓம் சிவாய நம" என ஆறு எழுத்தும் ஆறு சமயங்களும் இவை உலகத்திலேயே பறந்து செல்லும் படி உயிரானது அவற்றை சாராது . பிணிப்பினின்றும் நீங்கிச் சிவத்தைச் சாரின் முத்தியாகும்
பிரணவத்தால் காணாபத்தியம்கணபதியை முழுமுதற் கடவுளாக கொண்ட சமயம் சிகரத்தை சைவம் சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயம் வகாரத்தால் சாக்தேயமும் சக்தியை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயம்.யகாரத்தால் கெளமாரமும் முருகனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயம். நகரத்தால் செளரமும் சூரியனை முழுமுதல் கடவுளாகக் கொண்ட சமயம். மகரத் தாலும் சைனவம் உன் மாயாவாதம் திருமலை முழுமுதற் கடவுளால் கொண்ட சமயம் இப்படி ஆறு எழுத்துக்கள் ஆறு சமயங்களும் அடங்கின.
இவற்றுள் ஒவ்வொன்றும் அகம் அகப்புறம் புறம் புறப்புறம் என நான்காய் விரிவு பட 6 ×4 - 24 இருபத்து நான்கெழுத்தாம் . இதனை காயத்ரி மந்திரமாகும் போற்றுவார்.
காயத்ரி 24 எழுத்துக்களைக் கொண்டது இந்த காயத்ரியின் முன் சேர்ந்த மொழியும் எழுத்து ஓங்காரம் ஆகும்.இந்த பிரணவத்தை மட்டும் தனியே பகுத்து உணரும் ஆயின் அங்கும் "சிவய நம" என ஐந்து பொருள் மென்மையும் ஆகிய படுதலின் சைவத்தின் மேன்மை புலனாகும்.
உலகில் நிலவும் பல வகையான சமயங்களுக்கும் ஆதாரம் ஓம் நமசிவய. இஃதுவே சைவத்தின் பஞ்சாட்சரம் ஆகும் இந்த காயத்திரி சொல்லி சிவ சக்கரத்தை வழிபாட்டின் உயிர்கள் ஏய்தும் முடிந்த எல்லையாகிய பெரு முதல் அங்கு வெளிப்படும் என்று திருமூலர் விளக்கம் அளிக்கின்றார்.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...