Wednesday, 29 October 2025

*பாரதி உயிரோடு இருந்த போது


 *பாரதி உயிரோடு இருந்த போது அவரையும் அவரின் குடும்பத்தையும் வறுமையின் கோரப்பிடியில் உழல விட்டு கண்டும் காணாது போலிருந்தது அவரைச்சுற்றி வாழ்ந்திருந்த அவரின் சமூகம்*

*குனிந்த தலை நிமிராமல் வரும் மனைவி*
*செல்லம்மாளின்*
*கையைப்பிடித்துக்* *கொண்டு பீடு நடை போட்டு வரும்* *பாரதியை பைத்தியக்காரன் என செல்லம்மாள் காது படவே சத்தம் போட்டுச் சொல்லி கேலி செய்தது அந்த சமூகம்*
*பாரதி சாதம் சாப்பிடும் முறையே விசித்திரமாக இருக்கும்*
*சாப்பிட உட்காரும் போதும் ஒரு மஹாராஜா உட்காருவது போல தரையில் உட்காருவார்*
*கட்டை விரல் நடுவிரல் மற்றும் மோதிர விரல் மற்றுமே பயன்படுத்துவார்*
*அவருக்குப் பிடித்த உணவே சுட்ட அப்பளாம் தான்*
*வறுமையின் கோரப்பிடியினால் மாதத்தில் பத்து நாட்கள் மட்டுமே ஏதாவது காய்கறி இருக்கும்*
*மற்ற நாட்களில் சுட்ட அப்பளாம் தான்*
*பாரதி பார்த்தசாரதி கோயில் யானையால் தாக்கப்பட்டு உடல் நலிவுற்றுக் காலமானதாக இக்கணம் வரை பள்ளிப்பாடங்களிலும் தவறாக சொல்லப்படுகிறது*
*அத்துயர நாளில் பாரதி யானைக்கு தேங்காய் பழம் கொடுக்கச் சென்றபோது பலரும் தடுத்து எச்சரித்தார்கள்*
*ஆனால் பாரதி நெருங்கியபோது யானை அமைதியாகவே இருந்தது*
*ஆனால் துதிக்கையால் தேங்காய் பழத்தைப் பற்றாமல் பாரதியின் இடுப்புக்கு மேலே சுற்றி தன் நான்கு கால்களுக்கும் நடுவே வீசியது*
*கண்ணிமைக்கும் நேரத்தில் குவளைக்கண்ணன் என்ற பாரதியின் சிநேகிதரான அந்த புண்ணிய ஆத்மா தன் உயிரையும் பொருட்படுத்தாது யானையின் கால்களுக்கு நடுவே புகுந்து பாரதியை க்குனிந்து தன் தோளில் போட்டுக் கொண்டார்*
*யானை நினைத்திருந்தால் தன் கால்களுக்கு நடுவே இருக்கும் இருவரையும் அக்கணமே நசுக்கி சட்னி செய்திருக்க முடியும்*
*ஆனால் தான் பண்ணிய மாபெரும் தவறு அதற்கு உரைத்ததோ என்னவோ அதற்குப்பிறகு அதனிடத்தில் எந்த சலனமும் இல்லை*
*கீழே பாரதி விழுந்த போது முண்டாசு இருந்ததால் பின்புற மண்டை தப்பியது*
*ஆனால் கட்டாந்தரையில் முகம் மூக்கு தோள்பட்டை முழங்கை மற்றும் முழங்கால்களில் பலத்த ரத்தக்காயத்தோடு பாரதி மயங்கினார்*
*காயம்பட்ட கவிஞனை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் நண்பர் சீனுவாசாச்சாரியார் கொண்டு போய்ச் சேர்த்தார்*
*பகைவனுக்கும் அருளச்சொன்ன பாரதி தன்னைப் பழுதாக்கிய யானையை பழித்தாரா இல்லவே இல்லை*
*கொஞ்சம் நினைவு வந்ததும் சொன்னாராம்*
*யானை முகவரி தெரியாமல் என்னிடம் மோதி விட்டது*
*என்ன இருந்தாலும் என்னிடம் இரக்கம் அதிகம் தான்*
*இல்லையென்றால் என்னை உயிரோடு விட்டிருக்குமா ?*
*அங்கங்களின் காயம் ஆறத்தொடங்கியது*
*பாரதியும் சுதேச மித்திரன் ஆபீஸூக்கு ஐந்தாறு மாதங்கள் சிரமத்தோடு சென்று வந்தார்*
*காயம் ஆறியதே தவிர அந்த அதிர்ச்சியோ அவசர வியாதிகளை அழைத்து வந்தது*
*அந்த ஒருநாளில் சீதபேதி பாரதியின் உடலைச் சிதைக்கத் தொடங்கியது*
*மீண்டும் அதே ராயப்பேட்டை ஆஸ்பத்திரி*
*செப்டம்பர் 11 ராத்திரிஅதிகாலை இரண்டு மணி*
*வெளியேறத்துடிக்கும் உயிரோ* *பாரதியின் உடலை உதைத்துக்கொண்டிருக்கிறது*
*சில நிமிடங்களில் அந்த 39*
*வருஷக்*
*கவிதைக்கு மரணம்* *முற்றுப்புள்ளி வைத்தது*
*ஒரு யுக எரிமலை எப்படி அணைந்தது ?*
*ஒரு ஞானக்கடல் எப்படித்தான் வற்றியதோ ?*
*குவளைக்கண்ணன் லட்சுமண ஐயர் ஹரிஹர சர்மா சுரேந்திரநாத் ஆர்யா நெஞ்சு கனத்துப்போன நெல்லையப்பர் ஐவரின் தோள்களும் அந்த ஞான சூரியனின் சடலத்தைச் சுமந்து கிருஷ்ணாம்பேட்டை மயானம் நோக்கி நடந்தன*
*இறுதி ஊர்வலத்தின் எண்ணிக்கையோ வெறும் பதினொன்று சுமந்தவர்களையும் சேர்த்து*
*மகா கவிஞனுக்கு மரியாதை பார்த்தீரோ ?*
*அவர் உடம்பில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையில் கூட ஆட்கள் வரவில்லையே*
*இது புலிகளை மதிக்காத புழுக்களின் தேசமன்றோ*
*தூக்கிச்சென்றவர்களோ தோளின் சுமையை இறக்கி வைத்தார்கள்*
*ஆனால் துயரத்தின் சுமையை?*
*எரிப்பதற்கு முன் ஒரு இரங்கல் கூட்டம்*
*பாரதியின் கீர்த்தியை சுரேந்திரநாத் ஆர்யா சொல்லி முடிக்க ஹரிஹர சர்மா சிதைக்குத் தீ மூட்டுகிறார்*
*ஓராயிரம் கவிதைகளை உச்சரித்த உதடுகளை*
*ஞான வெளிச்சம் வீசிய அந்த தீட்சண்ய விழிகளை*
*ரத்தம் வற்றினாலும் கற்பனை வற்றாத அந்த இதயத்தைத் தேடித்தேடித் தின்றன தீயின் நாவுகள்*
*மகா கவிஞனே எட்டையபுரத்து கொட்டு முரசே*
*உன்னைப்பற்றி*
*உள்ளூரே புரிந்து*
*கொள்ளாத போது* *இவ்வுலகதிற்குப் புரிவது ஏது ?*
*உன் எழுத்துக்களை வாழ்க்கைப்படுத்தினால் அன்றி உன் பெயரை உச்சரிக்கக் கூட எமக்கு யோக்கியதை தான் ஏது🙏🙏

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...