Sunday 22 May 2022

துளசி!


 பெருமாள் கோயிலில் துளசிகொடுப்பது எதனால் ? பெருமாள் கொடுத்த அற்புதம் துளசி!

பெருமாளை அர்ச்சனை செய்கின்றனர், துளசி தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்கின்றனர். துளசி தீர்த்தத்தை பக்தர்களுக்கு கொடுக்கின்றனர். அதை அருந்துவதன் மூலம் நம்முடைய பாவங்கள் தீர்வதோடு நோய் நொடிகளும் அண்ட விடாமல் நம் உடம்பிற்குள் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது !
பெருமாள் கோவில் பிரசாதம் என்று மட்டும் அல்ல, எந்த கோவிலில் இருந்து பெறப்படும் பிரசாதத்தையும் நாம் வீணாக்கக் கூடாது. அது சாப்பிடும் பிரசாதமாக இருந்தாலும் சரி அல்லது நெற்றிக்கு இட்டுக்கொள்ளும் விபூதி குங்குமம், தீர்த்தமாக இருந்தாலும் சரி, அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுவாகவே கோவிலில் இருந்து பிரசாதமாக பெறப்பட்ட துளசி அல்லது சாதாரணமாக செடிகளில் வளர்ந்த துளசியாக இருந்தாலும் அதற்கென்று ஒரு தனித்துவம் கட்டாயம் இருக்கத்தான் செய்கின்றது. ஆன்மீக ரீதியான மகத்துவங்கள் ஒரு பக்கம் இருக்க, நமக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுப்பதிலும் இந்தத் துளசிக்கு முதலிடம் உண்டு. ஆக மொத்தத்தில் துளசி என்பது நமக்கு கிடைத்த ஒரு வரம். ஒரு பொக்கிஷம் என்று கூட சொல்லலாம்.நிறைய பேர் பெருமாள் கோவிலில் இருந்து பெறப்பட்ட துளசியை, வெறும் இலைகளாக ஆக நினைத்து கைகளில் வாங்கி, அந்த கோவிலிலேயே ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். அதாவது கையில் விபூதி குங்கும பிரசாதத்தை கொட்டுவது போல பெருமாள் கோவிலில் இருந்து பெறப்பட்ட துளசியையும் கோவிலில் எங்காவது ஒரு இடத்தில் அப்படியே போட்டு விட்டு வருவது சிலருக்கு வழக்கமாக இருக்கும்.
இது மிகப்பெரிய தவறு. கோவிலில் கொடுக்கும் எந்த பிரசாதமாக இருந்தாலும் அதை கோவிலில் கொட்டி அசுத்த படுத்துவது முதல் தவறு. யாருடைய கால் மிதி படவே கூடாது அதோடு மட்டுமல்லாமல் கோவிலில் இருந்து பெறப்பட்ட பிரசாதத்தை துச்சமாக நினைத்து ஏதாவது ஒரு இடத்தில் கொட்டி விட்டு வருவது என்பது, சரியான காரியம் அல்ல. பெருமாள் கோவிலில் கொடுக்கக்கூடிய தீர்த்தம் உங்கள் கையிலிருந்து முடிந்தவரை தரையில் சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதை அப்படியே முழுமையாக குடித்து விட வேண்டும். உள்ளங்கையில் இருந்து வாயில்வைத்து பருகிய தீர்த்தத்தை எக்காரணத்தைக் கொண்டும் உச்சந்தலையில் தடவி கொள்ளாதீர்கள்.
பெருமாள் கோவிலில் இருந்து வாங்கி நாம் பருக கூடிய ஒரு சொட்டு தீர்த்தமானது நம் உடலையும் சுத்தப்படுத்தும் நம் மனதையும் சுத்தப்படுத்தும்.சரி, அப்போது இந்தப் பெருமாள் கோவிலில் இருந்து பெறக்கூடிய துளசியை என்னதான் செய்வது? கட்டாயமாக பெருமாள் கோவிலில் இருந்து உங்கள் கைக்கு வந்த அந்த பிரசாதத்தை, வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து விட்டு, அதன் பின்பு ஒரு டம்ளர் தண்ணீரில் அந்த துளசியை போட்டு விட்டு, அந்த தண்ணீரை தீர்த்தமாக நினைத்து குடித்து விடலாம். அப்படி இல்லை என்றால் அந்த துளசியை பணம் வைக்கும் பெட்டியில் வைக்கலாம். நகை வைக்கும் பெட்டியில் வைக்கலாம். உங்களுடைய பர்சில் வைக்கலாம்
.துளசி கட்டாயம் வாடி போகத் தான் செய்யும். தினம் தோறும் பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாளை தரிசனம் செய்பவர்கள், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை காய்ந்த துளசியை சேகரித்து செடிகளுக்கு அடியில் போட்டுவிடலாம். அப்படி இல்லை என்றால் இதை தூள் செய்து தினமும் நெற்றியில் இட்டுக்கொள்ளும் விபூதியோடு கலந்து கொள்ளலாம். அந்தத் துளசி தூளை கொஞ்சமாக தண்ணீரில் கரைத்து வீட்டின் மூலை முடுக்குகளில் தெரிவித்தால், வீட்டில் இருக்கும் தரித்திரம் நீங்கி சுபிட்சம் அடையும்.இப்படியாக பல வகைகளில் அந்த துளசியை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் கைக்கு பிரசாதமாக வந்த துளசியை நீங்கள் உங்கள் வீட்டு வாசல் படிக்கு உள்ளே கொண்டுவராமல் வீட்டுக்கு வெளியில் போடுவது பெரிய பாவத்தை, ஆன்மீக ரீதியாக நமக்கு கொண்டு வந்து சேர்க்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் பெருமாள் கோவிலில் இருந்து பிரசாதமாக வாங்கப்பட்ட துளசியை வீணாக்கக்கூடாது, கட்டாயம் அந்த துளசியை நம் வீட்டிற்குள் கொண்டு வர வேண்டும்,
துளசியின் மருத்துவ குணங்கள் மொத்தத்தில் துளசி இலையை தினமும் மென்று தின்பதனாலும், குடிநீரில் போட்டு குடிப்பதனாலும் அனேக நோய்களை விரட்டலாம் என்கிறது சித்த மருத்துவம்.
மருத்துவ & சமையல் குறிப்பு
நாம் சாதாரணமாக நினைக்கும் துளசியின் வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள்
துளசி என்பது கோவிலில் தரப்படும் பிரசாதமாக தான் நாம் பார்த்து வருகிறோம். ஆனால், இது பொது மக்களுக்கு உடல்நல பயனை அள்ளித்தரும் பன்முக மூலிகையாக திகழ்ந்து வருகிறது. துளசியை சாப்பிட்டால் மட்டுமல்ல, சுவாசித்தால் கூட உடலுக்கு நன்மை தான் என்று உங்களுக்கு தெரியுமா?
ஏதோ சில காரணங்களால் துளசி மாடமும் துளசி தீர்த்தமும் இந்து மதத்தை சார்ந்தது போல அனுமானம் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், இது மதத்தை தாண்டிய மாபெரும் மருத்துவம். துளசி மடத்தை தினமும் சுற்றி வருதல், தினமும் காலையில் துளசி நீர் பருகி வந்தால் பொதுவாக ஏற்படும் உடல்நல பாதிப்புகளில் இருந்து தீர்வுக் காணலாம்.
ஏன், அன்றாடம் நமது உடலுக்கு தொல்லைத் தரும் வகையில் அமையும் சிறு சிறு உடல் உபாதைகள், கோளாறுகள் ஏற்படாமல் கூட காக்க முடியும். இதனால் தான் துளசி மாடம் , துளசி நீர் புனிதமாக கருதப்பட்டுள்ளது. நம் முன்னோர்கள் உரைத்த அனைத்திற்கும் பின்னணியில் மருத்துவம் இருக்க தான் செய்கிறது…
மன அழுத்தம் குறையும்
துளசி அழுத்த எதிர்ப்பு தன்மை கொண்டது. உடலில் ஆண்டி-ஆக்ஸிடன்ட்சை அதிகரிக்க செய்து அழுத்தத்தின் அளவை குறைக்க துளசி பெருமளவில் உதவுகிறது.
நுரையீரல் தொற்று
அன்றாடம் துளசியை சிறிதளவு வெறும் வாயில் போட்டு மென்று உண்ணுதல் அல்லது துளசி நீர் அல்லது துளசி டீ பருகுவது போன்றவை சளி மற்றும் நுரையீரல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கின்றன. முக்கியமாக துளசி நுரையீரலில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மைக் கொண்டது ஆகும்.
துளசியின் மருத்துவ குணங்கள் சில
தினமும் காலையில் 10 துளசி இலையை மென்று தின்பதால் இரத்தம் சுத்தியடையும். மார்பு வலி, தொண்டை வலி, வயிற்று வலி ஆகிய கோளாறுகள் நீங்கும்.
துளசியைத் தினமும் உட்கொண்டு வந்தால் காது வலி, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்
துளசி கஷாயம் வாய் துர்நாற்றத்தையும் பால் விளை நோய்களையும் நீக்கும்.
உடலின் வெப்பத்தை ஒரே சீராக வைத்திருப்பதற்கு துளசி உதவுகிறது. துளசிச் சாறு சளித் தொல்லை, ஆஸ்துமா ஆகியவைகளைக் குணப்படுத்தும்.
துளசி ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.
இருதயம் போன்ற உறுப்புகள் சீராக இயங்குவதற்கு துளசி உதவுகிறது
இளமையை காக்கும் துளசி...இன்னும் பல நோய்களை தீர்க்கும்!
!
நந்தவனத்தில் எத்தனைச் செடிகள் இருந்தாலும், அது நந்தவனமாகாது. அதே நேரத்தில் ஒரு துளசி செடி மட்டுமே இருந்தாலும் அது நந்தவனம் ஆகிவிடும் என்கிறது வேதம். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தை. 300க்கும் மேற்பட்ட துளசி வகைகள் இருந்தாலும், வெண்துளசியைத்தான் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம்.
மூலிகைகளின் அரசி!
‘துளசி இலை நல்லது..அதை சாப்பிட்டா சளிப் போயிடும்...’ என்ற ஒற்றை சொல்லில் அலட்சியப்படுத்தும்
இளமையை காக்கும் துளசி...இன்னும் பல நோய்களை தீர்க்கும்!
துளசி, கட்டுப்படுத்தும் நோய்களின் எண்ணிக்கை ஓராயிரம். அதனால்தான் இதனை ‘மூலிகைகளின் அரசி’ என்கிறார்கள். நோய் வருமுன் காத்து, வந்த நோயை விரட்டி, எதிர்காலத்திலும் நோய் வராத அளவுக்கு எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும் அற்புத ஆற்றல் வாய்ந்தது.
நாம் நினைப்பதுப் போல நோய் நிவாரணி மட்டுமல்ல.. சுற்றுச்சூழலிலும் இதன் பங்கு மகத்தானது. காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை கிரகித்து ஆக்சிஜனாக வெளியேற்றும் அற்புத பணியை செய்கிறது. இந்த பணியை பெரும்பாலான தாவரங்கள் செய்தாலும், துளசிக்கும் மற்ற தாவரங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. துளசியிலுள்ள மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களால் வளிமண்டலத்திலுள்ள புகைக் கிருமிகள் போன்ற மாசுக்கள் சுத்திகரிக்கப்படுகின்றன. அதனால் சுத்தமான காற்று கிடைக்கிறது. துளசி, அதிகம் உள்ள இடங்களில் கொசுக்கள் வராது.
காய்ச்சலுக்கு கைகண்ட மருந்து!
மாதம் ஒரு பெயரில் புதுப்புது காய்ச்சல் வந்துக்கொண்டே இருக்கிறது... ஒவ்வொரு காய்ச்சலுக்கும் பெயர் வைப்பதில் காட்டும் வேகம், நிவாரண நடவடிக்கைகளில் காட்டுவதில்லை. ஆனால், இதுவரை வந்த காய்ச்சல், இனி வரப்போகும் காய்ச்சல் என எந்த காய்ச்சலாக இருந்தாலும், துளசியிடம் இருக்கிறது தீர்வு. இதை உலகளவில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஏற்கனவே வைரஸ் காய்ச்சல், ஜப்பானியர்கள், என்செபலாடிடிஸ் எனப்படும் மூளைக்காய்ச்சல் ஆகியவற்றுக்கு துளசியைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். ‘‘10 துளசி இலையுடன் 5 மிளகை நசுக்கி, 2 டம்ளர் நீர்விட்டு, அரை டம்ளர் சுண்டும்படி காய்ச்சி, குடித்து விட்டு, சிறிது எலுமிச்சை சாறை அருந்தி, கம்பளிக் கொண்டு உடம்பு முழுக்க மூடிக்கொண்டு படுத்தால் மலேரியா காய்ச்சல் கூட படிப்படியாக குறையும்’’ என்கிறது சித்த மருத்துவம்.
இருமலை இல்லாமல் செய்துவிடும்!
சளித்தொல்லைக்கான நிவாரணத்தையும் தன்னுள் வைத்துள்ளது துளசி. உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றுவதுடன், உடலில் உள்வெப்பத்தை ஆற்றும் குணமும் இதற்கு உண்டு. துளசி சாறுடன் கொஞ்சம் தேன் கலந்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் குணமாகும். இருமல், சளி, ஜலதோஷம் உள்ளிட்டவைகளுக்கு இலவசமாக கிடைக்கும் அருமருந்து துளசி. இருமலைக் கட்டுப்படுத்தும் யூஜினால் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இதில் உள்ளன.
ரத்த அழுத்தம் குறையும்!
இன்றைக்கு முக்கிய நோய்களாக மூன்றை சொல்லலாம். 'நீரிழிவு' என்ற சர்க்கரை நோய், 'ஒபிசிட்டி' என்ற உடல் பருமன், 'பிளட் பிரசர்' என்ற ரத்த அழுத்தம். இவை மூன்றில் ஒன்று நம்மில் பலருக்கும் இருக்கிறது. தினமும் சில துளசி இலைகளை மென்று தின்றாலே சர்க்கரையின் அளவு கட்டுப்படும். எடையைக் குறைக்க, எத்தனை தூரம் ஓடினாலும், நடந்தாலும், ‘நான் வளர்கிறேனே மம்மி’ என ஊட்டச்சத்து குடித்த குழந்தைப் போல தொப்பை மட்டும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்து, ஆயிரக்கணக்கான பணத்தை செலவழித்து எது எதையோ வாங்கி சாப்பிட்டும் பயனில்லை என புலம்புபவர்களுக்கான தீர்வும் துளசியிடத்தில் இருக்கிறது. துளசி சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து சூடுபடுத்தி, சிறிது தேன் கலந்து உணவுக்கு பின்பு உட்கொண்டு வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடை குறையும். துளசி இலை, முற்றிய முருங்கை இலைகளை சம அளவு எடுத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சாற்றில் 50 மில்லி எடுத்து, 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை இருவேளையும் 48 நாட்கள் உண்டு வந்தால் ரத்த அழுத்தம் குறையும். இதை சாப்பிடும் காலத்தில் உப்பு, புளி, காரம் குறைக்க வேண்டும்.
தோல் நோய் தொல்லை, இனி இல்லை!
துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு விழுது போல் அரைத்து, தோல் நோய்களுக்கு பற்றுப் போடலாம். இதனால் சொரி, சிரங்கு போன்றவை குணமாகும். துளசி இலையுடன், அம்மான் பச்சரிசி இலையை சம அளவு எடுத்து அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் தடவினால் முகப்பரு மறையும்’’ என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
என்றும் இளைமை!
இவையெல்லாம் விட, என்றும் இளமையுடன் திகழ உதவுகிறது துளசி நீர். சுத்தமான செம்பு பாத்திரத்தில், கொஞ்சம் நல்ல தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு கைப்பிடி துளசியைப் போட்டு 8 மணி நேரம் மூடி வைத்து பின்பு அந்த நீரைக் குடிக்க வேண்டும். இதை வெறும் வயிற்றில் 48 நாட்கள் செய்து வந்தாலே எந்த நோயும் அண்டாது. அத்துடன் தோல்சுருக்கம் நீங்கி, நரம்புகள் பலப்படும். பார்வை குறைபாடு நீங்கும்.
உடலுக்கான கிருமிநாசினி!
துளசி அதி அற்புதமான கிருமிநாசினி. வீட்டுக்கு கிருமிநாசினி பயன்படுத்துவதுப் போல மனித உடலுக்கான கிருமிநாசினியாக பயன்படுகிறது துளசி. ஆனால், நாம் தான் பயன்படுத்துவதில் அக்கறைக்காட்டுவதில்லை. தினமும் துளசி இலையை மென்று சாறை விழுங்கி வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பல பிரச்னைகள் வாழ்நாள் முழுக்க வரவே வராது. வாய் துர்நாற்றம் இருக்கவே இருக்காது. ‘உடலில் வியர்வை வாடை போகவே மாட்டேங்குது’ என கவலைப்படுபவர்கள், குளிக்கும் நீரில் முதல் நாளே துளசி இலைகளை ஊறவைத்தால், வியர்வை துர்நாற்றம் போய் உடல் மணக்கும்.
மொத்தத்தில் துளசி இலையை தினமும் மென்று தின்பதனாலும், குடிநீரில் போட்டு குடிப்பதனாலும் அனேக நோய்களை விரட்டலாம் என்கிறது சித்த மருத்துவம்.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...