Monday 5 April 2021

ஜோதிட உலகத்தில் இருக்கும் அறிவியல் சார்ந்த சில உண்மைகள்.

             ஜோதிட உலகத்தில் இருக்கும் அறிவியல் சார்ந்த சில உண்மைகள்.

★ராசி நட்சத்திரம்,லக்னம் நட்சத்திரம் லக்னாதிபதி நின்ற நட்சத்திரம் இந்த மூன்று நட்சத்திரங்கள் தான் நம்முடைய ஜாதகத்தில் மிக மிக முக்கியமாக பார்க்க வேண்டியவை. ★ராசி நட்சத்திரம் உடல், லக்ன நட்சத்திரம் உயிர் ,லக்னாதிபதி நின்ற நட்சத்திரம் ஆத்மா. ★இவைதான் ஜாதகத்தில் உடல் உயிர் ஆத்மா என்று அழைக்கப்படுகிறது அதாவது விதி மதி கதி ★ராசி நட்சத்திரத்தை விட லக்னமும் லக்னாதிபதியும் விழுந்த டிகிரி அல்லது நட்சத்திரம் தான் மிக முக்கியமானது. ★9 கிரகங்கள் வேறொன்றும் கிடையாது நமது உடலில் உள்ள ஒவ்வொரு உடல் உறுப்புகளும் தான்.ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு உடல் உறுப்பு சொந்தம் இருக்கிறது. ★அவற்றில் சிலவற்றை மட்டும் பார்க்கலாம். 1.(சூரியன்) முதுகுத்தண்டு ,இருதயம், எலும்பு மண்டலம், கண் 2.(சந்திரன்) நமது உடலில் இருக்கும் சுரப்பிகள் நம்முடைய ஆழ்மனம்,ரத்தம். நம்முடைய ரத்த நாளங்கள். ★செவ்வாய் ரத்ததிற்கு அதிபதி கிடையாது. சந்திரன்தான் ரத்தத்திற்கு அதிபதி.செவ்வாய் நம்முடைய மூட்டு ,leg joins ,தசைகள். ★செவ்வாய் தான் நம் உடலை இயக்கும் சக்தி.அதனால்தான் கால புருஷனுக்கு 10ம் பாவமான மகரத்தில் செவ்வாய் உச்சம். 3.(செவ்வாய்) ★செவ்வாய் நம்முடைய தசைகள். மூட்டு,leg joins,பற்கள் 4.(குரு) குரு நம்முடைய மூளை மற்றும் கல்லீரல். 5.(சனி) ஊனம்.நமது உடலில் இருக்கும் அங்க அவஈன அடையாளங்கள். 6.(புதன்) தோல் மற்றும் நரம்பு மண்டலம் 7.(சுக்கிரன்) சுக்கிரன் கிட்னி ,கர்ப்பப்பை விந்துபை,ஆணுறுப்பு பெண்ணுறுப்பு. 8.(ராகு, கேது) ராகு கேது நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்கள் ★அந்த 12 பாவங்கள் வேறொன்றும் கிடையாது நமது உடலில் இருக்கும் 12 உடல் உறுப்புகள். அவற்றில் சிலவற்றை மற்றும் பார்க்கலாம். ★தலை ,முகம் ,கழுத்து, மார்பு, மேல் வயிறு ,அடி வயிறு ,இடை, பிறப்புறுப்பு ,தொடை, முழங்கால் கணுக்கால் ,பாதம் ★இந்தப் 12 உறுப்புகள்தான் நமது ஜாதகத்தில் இருக்கும் 12 பாவங்கள். ★அந்த 27 நட்சத்திரங்கள் என்பது நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு செல் அமைப்புகள். ★அதாவது நமது உடலில் இருக்கும் 27 தலைமுறைகளின் கர்ம பதிவுகள் தான் அந்த 27 நட்சத்திரங்கள். ★27 நட்சத்திரம் 12 ராசி 9 கிரகங்கள்.இவற்றை கூட்டினால் 48 வரும்.இதுதான் ஒரு மண்டலம். ★ஒரு மண்டலம் என்பது 48 அதுதான் இந்தப் 12 ராசிகளும் 9 கிரகங்களும் 27 நட்சத்திரங்களும் கூட்டினால் வருவது. ★நாம் 48 நாள் விரதம் இருப்பது ,48 நாள் கடவுள்களுக்கு மாலை போடுவது 48 நாள் மண்டல பூஜைகள் செய்வது அனைத்தும் இந்த 27 நட்சத்திரங்கள் 12 ராசிகள் 9 கிரகங்கள்.இவற்றின் கால சுழற்சிதான். ★ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் 4 பாதங்கள் இருக்கின்றன.27 நட்சத்திர பாதங்கள் கூட்டினால் 108 வரும். ★இந்த உலகத்தில் இருக்கும் பெண்ணாய் பிறந்த மனிதர்களுக்கும்,விலங்குகளுக்கும் மாதவிடாய் என்பது இருக்கும் ★சந்திரனின் ஒரு சுழற்சி காலம் தான் மாதவிடாய் காலம் ஆகும். ★சந்திரன் 27 நட்சத்திரங்களையும் தொட்டு 28வது நட்சத்திரமான அபிஜித் நட்சத்திரத்தை தொடும் போது தான் பெண்களுக்கு மாதவிடாய் வரும். ★சந்திரனுடைய ஒரு மாதகால சுழற்சிதான் பெண்களின் மாதவிடாய் காலம் ஆகும். ★அந்தக் காலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் இராஜாக்கள் முனிவர்கள் சாந்தி முகூர்த்தத்திற்கு திதியையும், நட்சத்திரத்தையும் குறித்து தருவார்கள். ★இந்தத் திதியில் தான் இந்தநட்சத்திரத்தில் தான் ஓரு ஆணும் பெண்ணும் இணைய வேண்டும் என்று சொல்வார்கள். ★ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து உடன் 72 மணி நேரம் கழித்து முதல் கரு உருவாகி விடும். ★அந்தக் கரு எந்த நட்சத்திரத்தில் உருவாகிறதோ சரியாக 10வது மாதத்தில் அதே நட்சத்திரத்தில் தான் அந்த குழந்தை பிறக்கும். ★உதாரணமாக திருவாதிரை நட்சத்திரத்தில் கரு உருவானால் சரியாக 10வது மாதத்தில் அதே திருவாதிரை நட்சத்திரத்தில் தான் அந்த குழந்தை பிறக்கும். ★அந்த கரு எந்த திதியில் உருவாகிறதோ அந்த திதியின் தாக்கும் அந்த வம்சத்திற்கே இருக்கும். ★கரு உருவான திதி அமாவாசை பௌர்ணமி ஆக இருந்தால் மட்டும் தான் பிறக்கும் குழந்தை ஊனமாகவோ மனவளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தையாக பிறக்கும். ★இதற்காக தான் பிறக்கும் குழந்தை நன்றாகவும் சக்தி உடையவனாகவும் பிறக்க வேண்டும் என்பதற்காகத் தான் நம் முன்னோர்கள் சாந்தி முகூர்த்தத்திற்கு திதியும் நட்சத்திரத்தையும் குறித்துக் கொடுப்பார்கள். ★நாம் பிறந்த திதி வேலை செய்யாது.நமது கரு உருவான திதி தான் வேலை செய்யும். ★நாம் எந்தத் திதியில் நம்முடைய முதல் கரு உருவானது என்பதை கண்டுபிடிக்க நாம் பிறந்த திதியில் இருந்து 9 திதிகளை கழித்தால் வரும் திதி தான் நமது தாயின் கர்ப்பப்பையில் நாம் உருவான திதியாகும்.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...