Wednesday 27 February 2019

எலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றலாமா ?

                                                               எலுமிச்சம்பழத்தில்  தீபம் ஏற்றலாமா ?
எலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா ?
அன்பானவர்களே, வணக்கம்.
சமீபகாலமாக கோவில்களில் தீபங்கள் ஏற்றுவது அதிகரித்துள்ளது காண்கிறோம்.
குறிப்பாக ..
ஸ்ரீ பைரவருக்கு தேங்காய் தீபம் ,
ஸ்ரீ ஹனுமனுக்கு வாழைப்பழத்திலும்,
ஸ்ரீ துர்க்கைக்கு எலுமிச்சம்பழத்திலும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.
மேலும் சாம்பல் பூசணியிலும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.
வீடுகளிலும் , கோவில்களிலும் ஒரேமாதிரி தீப வழிபாடு செய்யலாமா? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் காண்போம்.
சாஸ்திரப்படியும், ஒரு சில ஜோதிட க்ரந்தங்களிலும், பெரியோர்களின் வாய்மொழியின்படியும் விளக்கேற்றுவதை சிலவகைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தீப வழிபாடு என்பது ஆதிகாலம் முதலாக உள்ளதாக அறிகிறோம்.
அந்த காலம் முதல் இந்த காலம் வரையிலும் உள்ள ஜோதிடர்கள், தாங்கள் ஜாதக பலன்களை கூறும்போது “ தற்சமயம் இன்ன திசை நடப்பதால் இந்த ஸ்வாமிக்கு இந்த வகை தீபம் ஏற்றுங்கள் “ என்று கூறுவதுண்டு. இந்த முறைகள் வழி வழியாக தொடர்ந்து அதுவே ஒரு முறையாக ஆக்கப்பட்டு விட்டது .
வீட்டிலுள்ள வயது முதிர்ந்த பெரியோர்கள் (பெண்கள்), செவ்வாய் , வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இந்த தீபம் ஏற்றுவது நல்லது என்று தங்களின் அனுபவ சாதக பலனை தனது குடும்ப பெண்களுக்கு சொல்லித்தந்து அதுவும் ஒரு வகையில் சம்பிரதாயமாக ஆகிவிட்டது.
ஆனால் இந்த வகையினால் தீபம் ஏற்றினால் பலன் உண்டா – இல்லையா ? அல்லது இதற்கென்று வேறு ஏதேனும் முறைகள் இருக்கின்றதா ? என்றால், உண்டு.
எந்த ஒரு செயலுக்கும் அதற்கென்று சில வழிமுறைகளை நமது சாஸ்திரமும் , ஜோதிட கிரந்தங்களும் சொல்லியிருக்கின்றன.
மக்களின் வாழ்வை எண்ணி கவலையுற்ற தெய்வீக அருள்சக்தி பெற்ற மகான்கள் ,மக்களின் நலனுக்காக அருளிச் செய்த தீப வழிபாடு எனும் தெய்வ அனுகூல வழிபாடு இன்று கேலிக் கூத்தாகி எல்லா தெய்வங்களுக்கும் ஏதோ ஒரு தீபம் ஏற்றுவதை மக்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள் என்பதை காணும்போது மனம் சங்கடப்படுகிறது.
இப்போது எலுமிச்சம்பழத்தில் தீபம் நல்லதா? ஏற்றலாமா? பார்க்கலாம்.
கனிகளில் ராஜகனி என்று போற்றப்படுகிறது எலுமிச்சம்பழம்.
மதிப்புக்குரியவர்களை காணும்போது அவர்கள் கைகளில் எலுமிச்சம்கனியை அளிப்பது இன்றும் வழக்கில் உள்ள செயலாகும்.
இறைவியான துர்க்கைக்கு நிகரானதாக கருதப்படும் எலுமிச்சம்பழம் ,
தனது பிஞ்சு, காய், பழம், ஊறுகாய் போன்ற எல்லா நிலைகளிலும் தனது புளிப்புத்தன்மையை மாற்றிக் கொள்ளாதது.
(இறைவனாரும் எந்த நிலையிலும் தன் இறைத்தன்மை மாறாதவர்).
இப்படி எல்லா வகையிலும் உயர்ந்த கனியை
ஸ்ரீஸ்ரீ துர்க்கைக்கு முன்பாகவே வைத்து இருதுண்டாக்கி , அதனை பிதுக்கி திருப்பி அதில் எண்ணையை ஊற்றி விளக்கேற்றினால்
அதனால் நிச்சயமாக எந்த நற்பலனும் ஏற்படாது.
மேலும் தீய பலன்கள் நடைபெறத்தான் வழியுள்ளது.
ஏதோ விபரமறியாத சில ஜோதிடர்கள் சொன்ன வார்த்தையை கேட்டு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி
அதனால் அவர்களுக்கே தெரியாமல் மேலும் மேலும் துன்பங்களை அடைகிறார்கள்.
இந்த காரியத்தினால்தான் நாம் துன்பம் அடைகிறோம் என அறியாமல் மக்கள்,
“ நானும் துர்க்கைக்கு வாராவாரம் விளக்கெல்லாம் வைத்தேன் , ஆனால் ஒரு பயனும் இல்லை “
என சலித்துக் கொள்வார்கள் .
அதுமட்டுமல்ல எலுமிச்சம்பழ விளக்கினால் கர்ப்பப்பையில் கோளாறுகள் ஏற்படுவதாக மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன ,
அதிலுள்ள சிட்ரிட் எனும் அமிலம் நமது சுவாசத்தில் கலந்து உள்சென்று தீங்கினை செய்கின்றது.
அதாவது ஒருவர் வைத்து விட்டுப் போன எலுமிச்சம்பழ விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போது மற்றொருவர் தனக்காக சில எலுமிச்சம்பழ விளக்குகளை ஏற்றுவார் அல்லவா?
அப்போது இவருக்கு முன்னர் ஏற்றப்பட்ட விளக்கிலிருந்து எலுமிச்சம்பழத்தின் ஓரங்கள் கருகி எரியும் போது அதிலிருந்து வெளிப்படும் சிட்ரிட் அமிலப் புகையானது நமது உள்சென்று கர்ப்பப்பையினை அரித்து குழந்தையினை தாங்கும் வலிமையை இழந்து விடுவதாகவும்
அதனால் புத்திரபாக்கியமே கிடைக்காது எனவும் தெரிவிக்கின்றார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.
அப்படியென்றால் எலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றக்கூடாதா ?
என்றால் ஏற்றலாம்.
எப்படி? ,
சாஸ்திரம் என்ன சொல்கிறது என்றால்...
எலுமிச்சை மரத்தில் எப்போதாவது ஒருமுறை எலுமிச்சம்பழம் மேல் நோக்கியவாறு காய்க்குமாம்,
(எல்லா பழங்களும் கீழ்நோக்கி நிற்க ஒன்றுமட்டும் மேல்நோக்கி இயற்கையை எதிர்த்து நிற்பதால்)
அந்த பழம் பாதிஅளவு மஞ்சளும், பாதியளவு பச்சையுமாக கனிந்துவரும் போது ஒரு வெள்ளிக்கிழமை காலையில் முதல்ஓரையான சுக்கிர ஓரையில் ஆயுதமின்றி விரல்களால் கிள்ளி எடுத்து , அதனை ஒரு சிகப்பு கலர் பட்டுத்துணியின் உள்வைத்து ,
இரண்டு கைகளாலும் அப்படியே அந்த பழத்தை கசக்க வேண்டும். அதிலிருந்து கொஞ்சமும் நீர் வெளியாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
பின்னர் அந்த பழத்தினை விரல் நகத்தினால் இரண்டாக கிழித்து
அந்த சாற்றினை அந்த பட்டுத் துணியிலேயே பிழிந்து அந்ததுணியை
ஸ்ரீஸ்ரீ துர்க்கையின் பாதங்களில் சார்த்தி ,
பின் அந்த எலுமிச்சம்பழத்தை பிதுக்கி திருப்பாமல் அப்படியே வைத்து எருமை நெய்விட்டு விளக்கேற்ற வேண்டும்.
இப்படி விளக்கேற்ற முடியுமானால்
யார் வேண்டுமானாலும் எலுமிச்சம்பழ விளக்கேற்றுங்கள்.
இறைவன், இறைவி உலக மக்களின் நன்மையை கருதி தரும் எல்லாமே கீழ்நோக்கி இருக்கும்,
நாம் கையேந்தி வாங்குவதாக அமையும் ,
ஆனால் இயற்கையை மீறி இறைவனை எதிர்த்து மேல் நோக்கி இருக்கும் அந்த எலுமிச்சம்கனியை
உண்பதால் மனிதர்களுக்கு தீமையைத் தரும்
ஆகவே அதனை அன்னை தனக்கே தீபமேற்ற பணிக்கிறாள் ,
அதை விடுத்து அவள் நமது நன்மைக்காக தந்த பரிசினை அவள் எதிரிலேயே கசக்கி பிழிந்து எரியூட்டினால் நன்மை விளையுமா ?
தீமை விளையுமா?
எல்லோராலும் எலுமிச்சம்பழ விளக்கேற்ற முடியாது , எலுமிச்சம்பழ மரம் வீட்டில் இருப்பவர்கள்
வேண்டுமானால் கவனித்து பார்த்து ஏற்றி மகிழலாம், அன்னையை மகிழ்விக்கலாம்.
ஆகவே , எலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது எல்லோருக்கும் உகந்ததல்ல எனும் காரணத்தினால் நல்லதல்ல.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...