Sunday 19 August 2018

நீ தேறமாட்டாய் " என்று வைத்தியர்

 நீ தேறமாட்டாய் " என்று வைத்தியர்

" நீ தேறமாட்டாய் " என்று வைத்தியர்
ஒரு நோயாளியைக் கைவிட்டு விட்டார்.
அவர் என்ன செய்தார் தெரியுமா?
இன்னொரு
டாக்டரைத் தேடிப் போகவில்லை.
வேறொரு
மருத்துவமனையை நாடவில்லை.

கடவுளைப் பக்கத்தில் இருக்கும்
ஒரு நண்பராகப் பாவித்துக் கொண்டார்.
" பார்த்தாயா தோழா!
டாக்டர் சொன்னது உன் காதில் விழுந்தது அல்லவா?
என்னைக் காப்பாற்றும் பொறுப்பு இனி உன்னுடையது.
நான் உழைக்க வேண்டும்.
அப்பொழுதுதான் என் குழந்தைகள் பிழைக்க முடியும்.
எனக்கு தைரியம் கொடு " என்று
உரத்த குரலில் பேசினார்.
பார்த்தவர்கள் அவருக்குப் பைத்தியமோ என்று பயந்தார்கள்.
வைத்தியர்களால் செய்ய முடியாத அற்புதத்தை வைத்தியநாதன் செய்தான்.
அன்று உற்சாகத்துடன் வேலை செய்தார்.
அடுத்த நாள்,
" டூகற்றுப் போலவே இன்றும் என்னுடன் இருக்க வேண்டும்.
என்னை முடுக்க வேண்டும்." என்று
வேண்டிக்கொண்டார்.ப
இப்படி அவர் ஒவ்வொரு செயலுக்கும் பக்கத்தில் உள்ள நண்பரைத் துணக்கழைப்பது போல் இறைவனை மனம் விட்டுக் கூவியழைத்தார்.
இரவு படுக்கும்பொழுது ,
" இறைவா!
உன்னால் இன்று முழுக்க நான் உற்சாகமாக இருந்தேன்.
என் குடும்பத்துக்கு உழைத்தேன்.
காலையில் இதே ஆர்வத்துடன் கடமையாற்ற என் பக்கத்திலேயே
பக்க துணையாக இரு " என்று
பிரார்த்தித்துக் கொண்டார்.
பிழைக்கமாட்டார் என்று கருதப்பட்டவர் குடும்பத்துக்குப் பிழைப்பு அளித்தார்.
எப்பொழுதும் நாம் இறைவனுடன் இருப்போம்.
அவன் உலக இச்சைகளை அடக்கி நம்மை உருப்பட வைப்பான்.
பலவீனம் இல்லாதவன் மனிதன் அல்ல.
மனித பலவீனத்தை மாற்றியமைக்க இன்னொரு மனிதனால் முடியாது.
இறைவனால்தான் இயலும்.
இறைவனை இறுகப்பற்றவும்.
இறுக்கிப் பிடிக்கவும்
பிரார்த்தனை துணை செய்யும்.
இந்த விடியல்
உங்கள் வாழ்விலும் விடியட்டும்.
முகமலர்ச்சியோடும்,
நம்பிக்கையுடனும் எழுந்து
புதிய நாளை துவங்க
இறைவன் அருள் புரியட்டும்.
ஒப்புயர்வான காலை வணக்கங்கள். 

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...