Sunday 19 August 2018

குற்றத்தை செய்துவிட்டு..

குற்றத்தை செய்துவிட்டு..

குற்றத்தை செய்துவிட்டு..
அந்த குற்றத்தை எவ்வளவு பேர் ஒப்புக்கொள்கிறார்கள்..?
இறை அருளில் மூழ்காமல்
தன் விருப்பம் போல் ஆட்டம்
போடும் ஏ பிண நெஞ்சே..!

உன்னைப் போலத் தீவினை
செய்தவர்கள் இந்த உலகில் வேறு
யார் இருக்கிறார்கள்?
உன்னை விலக்கிவைக்க வேண்டு
மென்ற எண்ணம் சிறிதளவுகூட
இறைவனுக்கில்லை.
ஆனால் நீ தான் உன் வினைப்
பயனால், அவனுடைய திருவடி
மலர்களை அணுகாதிருப்பதை
உணர்ந்து, உன் தலையை முட்டி
மோதிக் கொள்ளவில்லை.
உன் உணர்ச்சியெல்லாம் இரும்பாக,
உள்ளம் கல்லாக இருக்கின்றன.
காது என்றால் என்ன என்றே எனக்குத்
தெரியவில்லை என நொந்துகொள்கிறாய்..
மனசு கல்லாகி விட்டது என
கூப்பாடு போடுகிறாய்...
உணர்வுகளும் இரும்பாகிப்
போச்சு என்கிறார்.
உனக்கு காது கேட்கவில்லையா என
கேட்டால் காது என்றால் என்ன? எனக் கேட்கிறாய்..
‘காது அடைத்திருக்கிறது’ என்று
சாக்குச் சொல்லாமல் “காதே இல்லை”
என ஒரே அடி அடிக்கிறாய்.
💜என் இறைவா.!
சிவபெருமானே..!💜
'எல்லாப் புகழும் இறைவனாகிய
உன் ஒருவனுக்கே' அதுபோல 'எல்லாத் தவறும் என்னுடையதே'
💚வினை என்போல்
உடையார் பிறரார்
உடையான் அடி நாயேனைத்
தினையின் பாகமும் பிறிவது
திருக்குறிப்பு அன்று மற்று அதனாலே
முனைவன் பாத நன்மலர் பிரிந்திருந்தும் நான் முட்டிலேன் தலைகீறேன்
இனையன் பாவனை இரும்பு கல் மனம் இன்னது என்று அறியேனே.💚
ஆத்ம சுத்தி
திருச்சதகம்..
கடவுள் நம்மை ஏற்றுக் காப்பாற்ற
எப்போதும் தயாராகவே இருக்கிறார். ஆனால் நாம்தாம் அவரை அணுகி
அருள் பெற முனைவதில்லை...
💚திருச்சிற்றம்பலம்.. 

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...