Thursday 22 March 2018

கள்ளக்காதல் ரகசியம்

கள்ளக்காதல் ரகசியம்

குரு போக காரகன், சுக்கிரன் காம காரகன். இந்த இருவரும் இணைவது, பார்ப்பதில் நல்லதும் கெட்டதும் இருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களுக்கும் பாவ கிரக பார்வை, நீச்ச சேர்க்கை ஏற்பட்டால் ரகசிய உறவுகள் ஏற்படலாம். 8-ம் இடத்தில் குரு அல்லது சுக்கிரன் இருப்பதால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் காதல் கொள்வதற்கான, கள்ளக்காதல் ஏற்படுவதற்கான சூழல் உள்ளது.


காமம், காதல், கள்ள உறவுகள் ...
ஜோதிடம் ஒரு முழுமையான அறிவியல்.ஒழுங்காக உழைத்துப்பிழைக்கத் தெரியாத பல சோம்பேறிகள் ஜோதிடத்தொழிலுக்கு வந்து ஜோதிடத்தின் மரியாதையைக் கெடுத்துவிட்டனர்.
ஒரு மனிதன் ஏன் காதல் வயப்படுகிறான்? ஏன் தகாத உறவுகள்..? பொருத்தம் பார்த்த கல்யாணம் ஏன் தடுமாற வைக்கிறது? கட்டுப் படுத்த முடியாத காமம் ஏன் ஒருவர் வாழ்க்கையை புரட்டி போடுகிறது..?  ஆயில்யம், சுவாதி, அவிட்டம், அசுபதி,திருவாதிரை இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அதே நட்சத்திரங்களில் பிறந்தவர்களை திருமணம் செய்வதே நல்லது.மற்ற நட்சத்திரங்களில் பிறந்தவரை மணம் முடித்தால் ஒருவரின் புத்திசாலித்தனத்திற்கு மற்றவர் அடிமையாகத்தான் வாழ வேண்டியிருக்கும்.

இன்று ரோட்டோரக்கடைகளில் ஒரே நிமிடத்தில் திருமணப்பொருத்தம் பார்ப்பது எப்படி? என ரூ.10/-க்கு புத்தகம் விற்பனையாகிக்கொண்டு இருக்கிறது.அதில் வெறும் நட்சத்திரப் பொருத்தம் மட்டும்தான் இருக்கும்.அது மட்டும் கொண்டு ஒரு திருமணத்தை முடிப்பதால்தான் இன்று நீதிமன்றங்களில் தினமும் விவாகரத்து வழக்குகள் குவிகின்றன. தவிர, திருமணத் தரகர்கள் இன்றைய காலகட்டத்தில் ஒரு திருமணம் நடப்பதற்காக என்னவேண்டுமானாலும் செய்கின்றனர்.உதாரணமாக ஜாதகத்தையே போலியாக தயாரிக்கின்றனர். சில பெண்கள் யோகக்காரிகளாக இருப்பர்.அது முறையாகக் கற்ற ஜோதிடர்களுக்கு மட்டுமே தெரியும்.அதனால் தான் மனைவியை மகாலட்சுமி என்று அழைக்கிறோம். அது போன்ற யோக்காரப்பெண்களால்தான் உங்களின் தெருவில் வாழும் சாதாரண ஆண் சில வருடங்களில் கோடீஸ்வரனாகியிருக்கின்றனர்.  இன்றைய காலகட்டத்தில் உங்கள் ஜாதியைச் சேர்ந்த ஜோதிடரிடம் ஜாதகம் பார்க்காமல் இருப்பது மிக நன்று.(இதில் விதிவிலக்கும் உண்டு). பல வருடங்களுக்கு முன் அந்த நமது ஜாதியை சேர்ந்த ஜோதிடருக்கும் நமது குடும்பத்தாருக்கும் ஏதாவது பகை ஆகியிருக்கும்.நாம் மறந்திருப்போம்.அவர் பலனில் சூப்பராக பழிவாங்கிவிடுவார். சில பெண்களை ஒருபோதும் மணம் முடிக்ககூடாது.ஏனெனில், சில குறிப்பிட்ட கிரகநிலையில் பிறந்த பெண்கள் திருமணம் முடிந்தபின்னரே விபச்சாரியாகிறார்கள்.தகுந்த ஜோதிடரைக் கொண்டு பெண்ணின் பிறந்த ஜாதகத்தைப் பார்த்து மணம் முடிக்கவும். காதல் படுத்தும் பாடு - பொருத்தம் பார்க்காமல் நிறைய மணங்கள் நடக்கின்றன. நல்லவிதமாய் பொருத்தம் இருந்தால் சரி.. பொருந்தாதவை ... உடனே மன (மண) முறிவை ஏற்படுத்தி விடுகின்றன. சில சினிமா நடிகைகளை பார்த்தால் , பாவமாக இருக்கும். அவர்கள் சொந்த வாழ்வு அவ்வளவு சோகமாக இருக்கும்.. பணம், புகழ் இருக்கும். ஆனால் வாழ்க்கை துணை... ...?
தாலி கட்டினால் தான் மனைவி என்று இல்லை. இந்த கலி காலத்தில் விருப்பத்துடன் உறவு கொண்டாலே அவர் மனைவி ஸ்தானம் தான். ஒருவர் ஜாதகம் பார்க்கும்போதே தெரியும். இவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள்  என்று. அப்படி என்றால் அவர் தாலி கட்டி குடும்பம் நடத்துவார் என்று இல்லை.  .


ஒருவருக்கு ஏற்படும் காம கொந்தளிப்பு அவர்களை விலை மாதுக்களிடம் செல்ல வைக்கிறது. அவர்களின் ஜாதக நிலைமை யாருக்கு தெரியும்? அப்படி செல்பவர்களுக்கு , அந்த பெண்களின் ஜாதகப்படி கண்டிப்பாக இவரது வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.  அதனால் தான் பொருத்தம் பார்த்து மனம் முடித்து தாம்பத்யம் தொடங்குகின்றனர்.  சில பெண்களை தொட்ட உடனே , பெரிய அளவில் பிரச்னைகள் , நிம்மதியின்மை ஏற்படும்.. .... சில பெண்களை தொட்டாலே மரணம் தான்.. சில பெண்களுடன் உறவு கொண்டால் அவரது ஆண்மை பறிபோய் விடும்.....

மனைவியை தவிர மற்றவரை பார்த்து ஏங்குவதொடு  நிறுத்திக் கொள்ளுங்கள். ... தப்பி தவறி தொட்டு விட்டால்... எதுவும் நடக்கும்..  எதற்கு வம்பு? 


No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...