பெருமாள் கோயில்களில் நவகிரக சன்னதி ஏன் இல்லை?
பலருக்குத் தெரியாத வைணவ ரகசியம்!
“எல்லா கோயில்களிலும் நவகிரக சன்னதி இருக்கும்போது…
பெருமாள் கோயில்களில் மட்டும் ஏன் இல்லை?”
என்று கேட்டான்.
அந்தக் கேள்விக்கான பதில்,
வைணவத்தின் ஆழமான தத்துவத்தில் மறைந்திருக்கிறது…
பெருமாள், வாமன அவதாரத்தில்
மூன்று அடிகளில் பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் மட்டுமல்ல…
அண்ட சராசரங்களையும் அளந்தவன்.
அப்படியானால்,
அந்த அண்டங்களில் இருக்கும்
எல்லாம்…
பெருமாளுக்குள் அடங்கியவையே.
அதனால்தான் வைணவ மரபில்,
“பெருமாளை வழிபட்டாலே
நவகிரகங்களை வழிபட்ட பலன் கிடைக்கும்”
என்று தொன்று தொட்டு நம்பப்படுகிறது.
அப்படி இருக்க,
தனியாக ஒரு நவகிரக சன்னதி தேவையா?
இல்லை என்பதே வைணவ சித்தாந்தம்.
வைணவர்களைப் பொறுத்தவரை,
உயர்ந்தவன் ஒருவனே — நாராயணன்.
அதனால் தான்,
பெருமாளின் அவதாரங்களே
நவகிரக சக்திகளாக விளங்குகின்றன:
☊ வராக அவதாரம் — ராகு
☋ மச்சாவதாரம் — கேது
கிரகங்கள் பெருமாளை ஆட்சி செய்யவில்லை…
பெருமாளே கிரகங்களை ஆட்சி செய்கிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள
நவதிருப்பதிகள்,
நவகிரக தலங்களாகவே போற்றப்படுகின்றன:
ஸ்ரீவைகுண்டம் — சூரியன்
வரகுணமங்கை — சந்திரன்
திருக்கோளூர் — செவ்வாய்
திருப்புளியங்குடி — புதன்
ஆழ்வார்திருநகரி — குரு
தென்திருப்பேரை — சுக்ரன்
பெருங்குளம் — சனி
இரட்டை திருப்பதி (தேவர்பிரான்) — ராகு
இரட்டை திருப்பதி (அரவிந்த லோசனர்) — கேது
இதன் மூலம்,
நவகிரகங்களும் நாராயணனின் அருளுக்குள் தான்
என்பது தெளிவாகிறது.
திருப்பதி பெருமாளின் சுப்ரபாதத்தில் வரும் இந்தச் செய்யுள்:
“சூர்யேந்து பெளம புத வாக்பதி காவ்ய செளரி
ச்வர்பானு கேது திவிஷத் பரிஷத் ப்ரதானா
த்வத் தாச தாச சரமாவதி தாச தாசா
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்”
பொருள்:
பெருமாளின் தரிசனத்தையும்
அருளையும் பெற
காத்திருக்கும் அடியார்களே.”
நவகிரகங்கள் தனியாக இல்லாதது குறை அல்ல…
அது பெருமாளின் பரிபூரணத்திற்கான சான்று.
அதனால்தான்…
பெருமாள் கோயில்களில்
நவகிரக சன்னதி தனியாக இல்லை.

No comments:
Post a Comment