விநாயகர் கோயில்களும் வியப்பூட்டும் வித்தியாசமான தகவல்களும்!
— உலகில் வேறெங்கும் காண முடியாத கணபதி தரிசனங்கள்
விநாயகர் என்றாலே
யானை முகம், தும்பிக்கை, மூஷிக வாகனம்
என்ற உருவமே நம் நினைவிற்கு வரும்.
ஆனால்…
இந்த உலகில்
அந்த வழக்கமான வடிவத்தைக் கடந்து,
வியப்பூட்டும் திருக்கோலங்களில்
விநாயகர் அருள்பாலிக்கும் கோயில்கள் பல உள்ளன.
அத்தகைய
அரிய விநாயகர் திருத்தலங்களின் ஆன்மிகக் கதைகளையே
இப்போது பார்க்கலாம்…
திருவாரூர் மாவட்டம்,
நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் அருகே
கூத்தனூரில் உள்ள புகழ்பெற்ற சரஸ்வதி கோயிலுக்கு
சுமார் 1 கி.மீ. வடக்கே
செதலபதி என்ற சிற்றூரில்
அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
தும்பிக்கை இல்லாமல், இரண்டு கைகளுடன், மனித முகத்தில்
விநாயகர் காட்சி தருகிறார்.
இது
வேறு எந்தக் கோயிலிலும்
காண முடியாத அபூர்வ வடிவம்.
கடலூர் அருகே உள்ள
திருநாரையூர் – அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில்
சிவாலயமாக இருந்தாலும்,
இங்கு விநாயகருக்கே முதன்மை.
‘பொள்ளாப்பிள்ளையார்’
என அழைக்கப்படுகிறார்.
உளியால் செதுக்கப்படாத —
அதாவது சுயம்பு விநாயகர்.
சங்கடஹர சதுர்த்தி அன்று இரவு:
பொள்ளாப்பிள்ளையாருக்கு விசேஷ பூஜை
பின்னர்,
சிலைக்கு அல்ல…
நிலாவிற்கே பூஜை!
இதை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.
சென்னை – திருவள்ளூர் அருகே
திருமழிசை வேங்கடேசப் பெருமாள் கோயிலில்
விஷ்வக்ஸேனர் என்ற பெயரில்
யானை முகத்துடன் விநாயகர் காட்சி தருகிறார்.
இங்கு மட்டுமே காணக்கூடியது.
சீர்காழி – தரங்கம்பாடி சாலையில்
திருவெண்காட்டிலிருந்து 2 கி.மீ. தொலைவில்
ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.
மேற்கு திருச்சுற்றில்
மகாகணபதி அருள்பாலிக்கிறார்.
நண்டு உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
நண்டு பூஜித்த விநாயகர்
கடக ராசிக்காரர்கள் வழிபட்டால்
விநாயகரின் வாகனம் – நண்டு
(மூஷிகம் இல்லை!)
விழுப்புரம் மாவட்டம்,
திருக்கோவிலூர் வட்டத்தில்
ஒப்பிலா மண்ணீஸ்வரர் கோயில் உள்ளது.
இங்கு
பல்லவர் கால விநாயகர்
பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக
அமர்ந்த கோலத்தில் உள்ளார்.
எங்கு நின்று பார்த்தாலும்
விநாயகர் நம்மையே பார்ப்பது போல தோன்றும்!
யோக தண்டம்
ஜப மாலை
ஓலைச்சுவடி
கரும்பு
ஏந்தி அருள்பாலிக்கிறார்.
தஞ்சை மாவட்டம்,
பாபநாசத்தில்
ஸ்ரீ சர்ப்ப விநாயகர் கோயில் உள்ளது.
ஐந்து தலை பாம்பு குடையாக
விநாயகரின் உடலில்
ஐந்து பாம்புகள் அணிகலன்களாக
ராகு – கேது தோஷங்கள்
இவரை வழிபட நீங்கும்.
திண்டிவனம் அருகே
தீவனூரில்
500 ஆண்டுகள் பழமையான
சுயம்பு பொய்யாமொழி விநாயகர் அருள்பாலிக்கிறார்.
சிவலிங்கம் போலவே காட்சி.
அபிஷேகத்திலும் சிவலிங்கம்
அலங்காரத்திற்குப் பிறகே
விநாயகர் திருமேனி வெளிப்படும்
மூன்று ஆலமரங்கள் —
மும்மூர்த்திகளின் வடிவம் என நம்பிக்கை.
கோவை மாவட்டம்,
சூலூர் அருகே
அப்பநாயக்கன்பட்டி கிராமத்தில்
பெண் விநாயகர் கோயில் உள்ளது.
ஆண்கள் அனுமதி இல்லை
பெண்களே பூசாரிகள்
பெண் சக்தியின்
அரிய வெளிப்பாடு இந்தத் தலம்.
பஞ்சாப் மாநிலம்
கிலரெய்பூரில்
‘அனுமனை வென்ற விநாயகர்’ கோயில் உள்ளது.
தினமும் 8 கால பூஜை
நைவேத்தியம்: கோதுமை அல்வா
கோதுமை வைக்கோலால்
கூரை அமைக்கும் தனிச்சிறப்பு!
குஜராத் மாநிலம்
அகமதாபாத் அருகே சதரஸ் கிராமத்தில்
ஒரு விநாயகர் கோயில் உள்ளது.
கடலை, பருத்தி செழிக்க
கடலைப் புண்ணாக்கை
தரையில் புதைத்து
அதன் மேல் விநாயகர் சிலை
பருத்தி & கடலை புண்ணாக்கு
ஒவ்வொரு விநாயகர் கோயிலும்
ஒரு ஆன்மிகப் பாடம்.
அவரின் வடிவங்கள் மாறினாலும்,
அருளின் கருணை ஒன்றே…

No comments:
Post a Comment