விநாயகரும் , விருட்சங்களும்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் என்று சொல்லும் பிள்ளை விநாயகர் எந்த இடத்திலும் காட்சியளிப்பவர். எளிமையான இடத்திலும் ஏழ்மையான மனிதன் வணங்க எழுந்தருள்வார்.

மரத்தடியில் குடிக்கொண்டிருக்கும் இவருக்கு அனைவரும் சமமே. இவரை வணங்கினால் எந்த ஒரு தீமையும் அருகே வராது. வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுபவர்கள் முதன்முதலில் இவரை தான் வணங்க வேண்டும்.

எந்த ஒரு செயலை செய்ய தொடங்கும் முன்னும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்கினால் அந்த செயல் ஜெயமாகும். எந்த மரத்தின் அடியில் இருக்கும் பிள்ளையாரை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.

வன்னி மரத்தின் அடியில் குடிக்கொண்டிருக்கும் விநாயகரை வழிபட திருமணத்தடை நீங்கும்.

புன்னை மரத்தின் அடியில் குடிக்கொண்டிருக்கும் விநாயகரை வழிபட தம்பதியர் ஒற்றுமை ஆவர்.

மகிழமரத்தின் அடியில் குடிக்கொண்டிருக்கும் விநாயகரை வழிபட இடமாற்ற பிரச்சனைகள் தீரும்.

மாமரத்தின் அடியில் குடிக்கொண்டிருக்கும் விநாயகரை வழிபட கோபம், பொறாமை நீங்கி வியாபாரம் செழிக்கும்.

வேப்ப மரத்தின் அடியில் குடிக்கொண்டிருக்கும் விநாயகரை வழிபட மனம் போல் மாங்கல்யம் கிடைக்கும்.

ஆலமரத்தின் அடியில் குடிக்கொண்டிருக்கும் விநாயகரை வழிபட தீராத வியாதி தீரும்.

அரசமரத்தின் அடியில் குடிக்கொண்டிருக்கும் விநாயகரை வழிபட விளையுள் கூடும்.

வில்வமரத்தின் அடியில் குடிக்கொண்டிருக்கும் விநாயகரை வழிபட பிரிந்த தம்பதியர் இணைவர்.
எங்கும் எதிலும் ஜெயமுண்டாக பிள்ளை விநாயகரை வழிபடவும். வாழ்வில் ஜெயமுண்டாக கஜமுகனை வழிபடுவோம்.
No comments:
Post a Comment