தைபூசம் என்பது முருகபெருமானுக்கு உரியது என்றாலும் அந்நாளின் சிறப்புக்களில் முக்கியமானது நடராஜர் திருக்கோலத்தை வியக்யபாதரதரும், பதஞ்சலி முனிவரும் தில்லையில் கண்ட நாள்
அந்நாளில் நடராஜ கோல வழிபாடும் அவசியம், நடராஜரை ஆருத்ரா தரிசனம் என மார்கழி மாதம் மட்டும் வழிபடுவதை விட இந்நாளிலும் வழிபடுதல் நன்று
நடராஜ கோலத்தை பதஞ்சலி முனிவர் எப்படி பெற்றார் என்றால் அது பாற்கடலில் இருந்து தொடங்குகின்றது
ஆதிஷேஷனின் பாம்பு படுக்கையில் படுத்திருக்கும் போது அவரின் எடை அதிகரித்தது , திடீரென ஏற்பட்ட இந்தமாற்றம் பற்றி ஆதிஷேஷன் பெருமாளிடம் கேட்க அவர் சொன்னார் , "ஆதிஷேஷா, சிவனின் நடன கோலத்தை கண்டு நாம் மகிழ்ந்த பூரிப்பு அது"
அதுமுதல் ஆதிஷேஷனுக்கு சிவனின் நடராஜ கோலத்தை காணும் ஆவல் வந்தது, பொதுவாக ராமாயணத்தில் லட்சுமணனாக, மகாபாரத காலத்தில் பலராமனுமாக வந்தவர் ஆதிஷேஷன்
அவர் விஷ்ணு வாமணனாக வந்த காலத்தில் தனித்து பாற்கடலில் இருக்கும் நேரம் சிவநடனத்தை காணும் பொருட்டு விஷ்ணுவின் அனுமதிபேரில் பதஞ்சலி முனிவராய் வந்தார்
அவருடன் துணைக்கு வந்த பிறப்பு வியாக்ரபாதரர் எனும் புலிக்கால் முனிவர்
இருவரும் சேர்ந்து நடராஜ கோலம் காண தவமிருந்தார்கள், சிவன் அவர்களை நவபுலியூர் தலங்களை உருவாக்க செய்து கடைசியில் சிதம்பரத்தில் நடன கோலத்தை காட்டினார்
அது ஒரு தை மாதம் பூச நட்சத்திரம் அன்று நிகழ்ந்தது
சிவநடனம் என்பது ஆழ்ந்த விஞ்ஞான பிரபஞ்ச தத்துவத்தை கொண்டது
சிவநடனம் என்பது இந்த பிரபஞ்சம் ஓய்வில்லாமல் இயங்கிகொண்டிருப்பதை குறிப்பது
இந்த உலகில் எல்லாமே இயங்குகின்றன கண்ணுக்கு தெரியாத உயிர்கள் இயங்குகின்றன, கண்ணுக்கு தெரியாத அணுக்களுக்குள் புரோட்டானும் நியூட்ரானும் இன்னும் பலவும் இயங்குகின்றன
கண்ணுக்கு தெரிபவை எல்லாம் இயக்கமே, செத்துவிட்டது என எரிக்கபடும் உடலில் கூட நெருப்பின் இயக்கம் உண்டு, சாம்பல் நீரில் கரைந்து இன்னொன்றாக மாறிவருவதிலும் இயக்கம் உண்டு
இங்கு எல்லாமே இயக்கம், பிரபஞ்சத்தில் பூமி சூரியனை சுற்றுகின்றது சூரியன் தன் பாதையில் சுற்றுகின்றது இப்படி எல்லாமே இயக்கம்
இப்படி காண்பவை காணாதவை என எல்லாவற்றையும் இயக்குபவன் சிவனே எனும் தத்துவத்தில் எல்லாவற்றுக்கும் அடிப்படை இந்த சக்தியே அணுமுதல் வானியல் கோள் வரை இயக்குவது அந்த சக்தியே
அந்த நடனம் நின்றால் உலக இயக்கம் நின்றுவிடும் , வானத்து கோள்கள் நின்றாலோ சூரியன் சந்திரன் நின்றாலோ என்னாகும் உலகம்?
உலகம் இயங்க அந்த இயக்கும் சக்தி இயங்கிகொண்டே இருக்க வேண்டும், அதைத்தான் சிவநடனம்
( சிவனுக்கு போட்டியாக காளி ஆடவந்து அதுதோற்றதாகவும் ஒரு புராணாகதை உண்டு , அவர்கள் மானிடருக்கு சொன்ன காரணம் காளி காலை தூக்கி ஆடமுடியவில்லை என்றாலும் அதன் உள் அர்த்தம் நுணுக்கமானது
இயக்கம் என்பது எல்லா வகையிலும் இருத்தல் வேண்டும், வானமும் கிரகங்களும் அவற்றின் உயிர்களும் சரியான வகையில் எல்லா கோணத்திலும் இயங்குதல் வேண்டும்
ஏதாவது ஒரு இயக்கம் சரியில்லாவிடில் மொத்த இயக்கமும் பாதிக்கும்
காளி நடனத்தில் ஒரு அசைவினை செய்யமுடியாமல் தோற்றாள் என்பது ஏதோ ஒரு இயக்கம் அவளால் முடியவில்லை அல்லது அதுசிவனால் மட்டும் முடியும் என்பதை சொல்லவே அன்றி அதில் அவமானமோ, பெண் அடிமைதனமோ எதுவுமில்லை)
அன்றைய மக்களுக்கு சிவன் ஒருவரே எல்லா வகையிலும் இந்த பிரபஞ்சத்தை இயக்கி காக்கமுடியும் என்பதை காட்டிய நடனம் அது
(இந்த இயக்க தத்துவத்தைத்தான் சுவிட்சர்லாந்தின் அணுஆராய்ச்சி மையம் கவனித்து நடராஜருக்கு தங்கள் ஆய்வகம் முன்னாலே சிலை வைத்திருக்கின்றது
அணுவினை பிளந்தால் வரும் நெருப்பு என்பதையே சிவன் ஒரு கையில் வைத்திருப்பதாகவும் இன்னும் இதர சக்திகளும் நடராஜர் சிலையில் தத்துவமாக வைத்திருப்பதாகவும் அதை தாங்கள் ஆய்வதாகவும் அந்த அமைப்பு சொல்கின்றது)
சிவ நடனம் என்பது எல்லாமே இயங்கி கொண்டிருக்கின்றது, அணு இயங்குகின்றது அண்டவெளி நில்லாமல் இயங்குகின்றது
மானுட உடலில் கூட கோடிகணக்கான செல்கள் தினமும் உருவாகின்றன, அதே எண்ணிக்கை செல்கள் மறைகின்றன, மானிட உடலும் நில்லாமல் இயங்குகின்றது
அண்டம் முதல் பிண்டம் வரை ஓயாது இயங்குகின்றது அந்த இயக்கத்தை செய்பவர் சிவன் என்பதே நடராஜர் நடனத்தின் தாத்பரியம்
சிவன் ஐந்து தொழிலை செய்பவர், அந்த ஐந்து தொழிலுக்கும் அடிப்படையானது காலம்
காலத்த்தாலே கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என வகையாய் காரியம் ஆற்றமுடியும், காலமே எல்லாவற்றையும் முடிவு செய்யும்
அந்த காலத்தையே சிவன் இயக்குகின்றார் என்பதும் இந்த நடனத்தின் பொருள்
தை பூசம் என்பது நடராஜ கோலத்தை வழிபட்டு அருள் பெறவேண்டிய நாளும் கூட, பதஞ்சலி முனிவர் புலிக்கால் முனிவருடன் வழிபட்ட நவபுலியூர் முதல் சிதம்பரம் வரை இந்நாளில் வழிபடுதல் நன்று
அப்படியே எல்லா சிவாலயங்களிலும் வழிபாடுகள் அவசியம்
குறிப்பாக பஞ்ச சபைகளில் வழிபடுதலும் நன்று, குற்றாலம், நெல்லை செப்பறை, மதுரை, சிதம்பரம், திருவாலங்காடு எனும் ஐந்து சபைகளில் வழிபடுதல் இன்னும் நன்று
மதுரை சொக்கநாதர் ஆலய வழிபாடு சால சிறந்தது, காரணம் மீண்டும் விக்யாபாதரர்க்கு அதே நடனத்தை சிவன் காட்டிய தலம் அது, அங்கு வழிபடுதலும் நன்று
இந்நாள் நடராஜ பெருமானுக்கானது, பூசம் என்றால் பசுவின் மடி என பொருள் அதாவது தாய்மையில் கேட்டதை எல்லாம் தருவது என பொருள்
அந்நாளில் உலகை இயக்கும், இந்த பிரபஞ்சத்தை இயக்கும் சிவனிடம் வேண்டுங்கள், அவர் உங்களையும் மிக சரியாக இயக்கும் வரமருள்வார், சிவனருளில் எல்லாமே வெற்றியாகும், மறக்காமல் வழிபடட்டு பலனடைய வாழ்த்துக்கள்
இந்நாளில் நடராஜ பெருமானுக்குரிய துதிகளை சொல்லி பாடுதல் நன்று, அவ்வகையில் நடராஜர் பத்து எனும் பாடல் விஷேஷமானது மறக்காமல் பாடுதல் நன்று
நடராஜ பெருமானின் அடியாராக சிறுமணவூர் முனுசாமி முதலியார் என்பவர் இருந்தார், அவர் தில்லையில் பாடிய நடராஜர் பத்து எனும் பாடல் மிக சிறப்பானது, முருகபெருமானின் அருளில் முதலியார் இந்த அற்புத பாடலை மிக உருக்கமாக பாடினார் என்பது வரலாறு
அப்பாடலை இன்று பாடி நடராஜ பெருமானை தொழுவது சால சிறந்தது
"மண்ணாதி பூதமொடுவிண்ணாதி அண்டம் நீ
மறை நான்கின் அடிமுடியும் நீ
மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ
மண்டல மிரண்டேழும் நீ
பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ
பிறவும் நீ ஒருவன் நீயே
பேதாதி பேதம் நீ பாதாதி கேசம் நீ
பெற்ற தாய் தந்தை நீயே
பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ
போதிக்கவந்த குரு நீ
புகழொணாக் கிரகங்க ளொன்பதும் நீ யிந்தப்
புவனங்கள் பெற்றவனும் நீ
எண்ணரிய ஜீவகோ டிகளீன்ற அப்பனே
என் குறைக ளார்க் குரைப்பேன்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராஜனே !
மானாட மழுவாட மதியாடப் புனலாட
மங்கை சிவகாமியாட
மாலாட நூலாட மறையாடத் திரையாட
மறைதந்த பிரம்மனாட
கோனாட வானுலகு கூட்டமெல் லாமாட
குஞ்சர முகத்தனாடக்
குண்டல மிரண்டாடத் தண்டைபுலி யுடையாடக்
குழந்தை முருகேசனாட
ஞானசம் பந்தரொடு யிந்திரர்பதி னெட்டு
முனியாட பாலகருமாட
நரைதும்பை யறுகாட நந்தி வாகனமாட
நாட்டிப் பெண்களாட
வினையோட உனைப்பாட யெனைநாடி யிதுவேளை
விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராஜனே
கடலென்ற புவிமீதில் அலையென்ற வுருக்கொண்டு
கனவென்ற வாழ்வை நம்பி
காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே
கண்டுண்டு நித்த நித்தம்
உடலென்ற கும்பிக்கு உணவென்ற யிரைதேடி
ஓயாம லிரவு பகலும்
உண்டுண் டுறங்குவதைக் கண்டதே யல்லாது
ஒருபய னடைந்தி லேனே
தடமென்ற மிடிகரையில் பந்தபா சங்களெனும்
தாபரம் பின்னலிட்டுத்
தாயென்று சேயென்று நீயென்னு நானென்று
தமியேனை யிவ் வண்ணமாய்
இடையென்று கடைநின்று யேனென்று கேளா
திருப்பதுன் னழகாகுமோ
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராஜனே"

No comments:
Post a Comment