Saturday, 9 April 2022

திருக்குறள்

https://youtu.be/g0rU14bVZMY
                                                                  திருக்குறள்

👁‍🗨 திருக்குறள் முதன் முதலில் அச்சிடப் பெற்ற ஆண்டு – 1812 


👁‍🗨  திருக்குறளின் முதல் பெயர் – முப்பால். 


👁‍🗨 திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133 


👁‍🗨 திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380 


👁‍🗨 திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700 


👁‍🗨 திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250 


👁‍🗨 திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330 


👁‍🗨 திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000 


👁‍🗨 திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194 


👁‍🗨 திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை. 


👁‍🗨 திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை. 


👁‍🗨 திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்


👁‍🗨 திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி 


👁‍🗨 திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ப். 


👁‍🗨 திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல். 


👁‍🗨 திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில். 


👁‍🗨 திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து – னி. 


👁‍🗨 திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் – ளீ, ங. 


👁‍🗨 திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள். 


👁‍🗨 திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர். 


👁‍🗨 திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர். 


👁‍🗨 திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யு.போப். 


👁‍🗨 திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் – பரிமேலழகர். 


👁‍🗨 திருக்குறளில் “கோடி’ என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது. 


👁‍🗨 “எழுபது கோடி’ என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது. 


👁‍🗨 “ஏழு’ என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது. 


👁‍🗨 திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது 


👁‍🗨 திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது. 


👁‍🗨 திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர். 


👁‍🗨 திருக்குறள் நரிக்குறவர் பேசும் “வக்ரபோலி’ மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது*

திருக்குறள் அதிகாரம் அறத்துப்பால் திருக்குறள் அதிகாரம்                                              1 – கடவுள் வாழ்த்து திருக்குறள் அதிகாரம்                                                                      2 – வான்சிறப்பு திருக்குறள் அதிகாரம்                                                                             3 – நீத்தார் பெருமை திருக்குறள் அதிகாரம்                                                                      4 – அறன் வலியுறுத்தல் திருக்குறள் அதிகாரம்                                                                5 – இல்வாழ்க்கை திருக்குறள் அதிகாரம்                                                                         6 – வாழ்க்கைத் துணைநலம் திருக்குறள் அதிகாரம்                                                         7 – மக்கட்பேறு திருக்குறள் அதிகாரம்                                                                              8 – அன்புடைமை திருக்குறள் அதிகாரம்                                                                             9 – விருந்தோம்பல் திருக்குறள் அதிகாரம்                                                                         10 – இனியவை கூறல் திருக்குறள் அதிகாரம்                                                                  11 – செய்ந்நன்றியறிதல் திருக்குறள் அதிகாரம்                                                              12 – நடுவு நிலைமை திருக்குறள் அதிகாரம்                                                                      13 – அடக்கம் உடைமை திருக்குறள் அதிகாரம்                                                                 14 – ஒழுக்கம் உடைமை திருக்குறள் அதிகாரம்                                                                15 – பிறனில் விழையாமை திருக்குறள் அதிகாரம்                                                             16 – பொறையுடைமை திருக்குறள் அதிகாரம்                                                                    17 – அழுக்காறாமை திருக்குறள் அதிகாரம்                                                                  18 – வெஃகாமை திருக்குறள் அதிகாரம்                                                                            19 – புறங்கூறாமை திருக்குறள் அதிகாரம்                                                                         20 – பயனில சொல்லாமை திருக்குறள் அதிகாரம்                                                         21 – தீவினையச்சம் திருக்குறள் அதிகாரம்                                                                    22 – ஒப்புரவறிதல் திருக்குறள் அதிகாரம்                                                                       23 – ஈ.கை திருக்குறள் அதிகாரம்                                                                                 24 – புகழ் திருக்குறள் அதிகாரம்                                                                                   25 – அருளுடைமை திருக்குறள் அதிகாரம்                                                                   26 – புலால் மறுத்தல் திருக்குறள் அதிகாரம்                                                                 27 – தவம் திருக்குறள் அதிகாரம்                                                                                  28 – கூடா ஒழுக்கம் திருக்குறள் அதிகாரம்                                                                     29 – கள்ளாமை திருக்குறள் அதிகாரம்                                                                          30 – வாய்மை திருக்குறள் அதிகாரம்                                                                              31 – வெகுளாமை திருக்குறள் அதிகாரம்                                                                         32 – இன்னா செய்யாமை திருக்குறள் அதிகாரம்                                                             33 – கொல்லாமை திருக்குறள் அதிகாரம்                                                                      34 – நிலையாமை திருக்குறள் அதிகாரம்                                                                        35 – துறவு திருக்குறள் அதிகாரம்                                                                                  36 – மெய்யுணர்தல் திருக்குறள் அதிகாரம்                                                                      37 – அவா அறுத்தல் திருக்குறள் அதிகாரம்                                                                     38 – ஊழ்திருக்குறள் அதிகாரம்                                                                                      39 – இறைமாட்சி திருக்குறள் அதிகாரம்                                                                         40 – கல்வி திருக்குறள் அதிகாரம்                                                                                 41 – கல்லாமை திருக்குறள் அதிகாரம்                                                                           42 – கேள்வி திருக்குறள் அதிகாரம்                                                                             43  அறிவுடைமை திருக்குறள் அதிகாரம்                                                                    44- குற்றங்கடிதல் திருக்குறள் அதிகாரம்                                                                       45 – பெரியாரைத் துணைக்கோடல் திருக்குறள் அதிகாரம்                                              46 – சிற்றினம் சேராமை திருக்குறள் அதிகாரம்                                                               47 – தெரிந்து செயல்வகை திருக்குறள் அதிகாரம்                                                          48 – வலியறிதல் திருக்குறள் அதிகாரம்                                                                          49 – காலமறிதல் திருக்குறள் அதிகாரம்                                                                          50 – இடனறிதல் திருக்குறள் அதிகாரம்                                                                           51 – தெரிந்து தெளிதல் திருக்குறள் அதிகாரம்                                                                52 – தெரிந்து வினையாடல் திருக்குறள் அதிகாரம்                                                           53 – சுற்றந் தழால் திருக்குறள் அதிகாரம்                                                                       54 – பொச்சாவாமை திருக்குறள் அதிகாரம்                                                                    55 – செங்கோன்மை திருக்குறள் அதிகாரம்                                                                     56 – கொடுங்கோன்மை திருக்குறள் அதிகாரம்                                                                57 – வெருவந்த செய்யாமை திருக்குறள் அதிகாரம்                                                         58 – கண்ணோட்டம் திருக்குறள் அதிகாரம்                                                                    59 – ஒற்றாடல் திருக்குறள் அதிகாரம்                                                                            60 – ஊக்கம் உடைமை திருக்குறள் அதிகாரம்                                                                  61 – மடி இன்மை திருக்குறள் அதிகாரம்                                                                         62 – ஆள்வினை உடைமை திருக்குறள் அதிகாரம்                                                          63 – இடுக்கண் அழியாமை திருக்குறள் அதிகாரம்                                                             64 – அமைச்சு திருக்குறள் அதிகாரம்                                                                              65 – சொல்வன்மை திருக்குறள் அதிகாரம்                                                                      66- வினைத் தூய்மை திருக்குறள் அதிகாரம்                                                                    67 – வினைத்திட்பம் திருக்குறள் அதிகாரம்                                                                      68 – வினை செயல்வகை திருக்குறள் அதிகாரம்                                                             69 – தூது திருக்குறள் அதிகாரம்                                                                                    70 – மன்னரைச் சேர்ந்து ஒழுகல் திருக்குறள் அதிகாரம்                                                     71- குறிப்பறிதல் திருக்குறள் அதிகாரம்                                                                          72 – அவை அறிதல் திருக்குறள் அதிகாரம்                                                                      73 – அவை அஞ்சாமை திருக்குறள் அதிகாரம்                                                                 74 – நாடு திருக்குறள் அதிகாரம்                                                                                     75 – அரண்் திருக்குறள் அதிகாரம்                                                                              76- பொருள் செயல்வகை திருக்குறள் அதிகாரம்                                                               77 – படை மாட்சி திருக்குறள் அதிகாரம்                                                                          78 – படைச் செருக்கு திருக்குறள் அதிகாரம்                                                                    79 – நட்பு திருக்குறள் அதிகாரம்                                                                                      80 – நட்பாராய்தல் திருக்குறள் அதிகாரம்                                                                        81- பழைமை திருக்குறள் அதிகாரம்                                                                               82 – தீ நட்பு திருக்குறள் அதிகாரம்                                                                                 83 – கூடா நட்பு திருக்குறள் அதிகாரம்                                                                           84 – பேதைமை திருக்குறள் அதிகாரம்                                                                             85 – புல்லறிவாண்மை திருக்குறள் அதிகாரம்                                                               86- இகல் திருக்குறள் அதிகாரம்                                                                                      87 – பகை மாட்சி திருக்குறள் அதிகாரம்                                                                           88 – பகைத்திறம் தெரிதல் திருக்குறள் அதிகாரம்                                                            89 – உட்பகை திருக்குறள் அதிகாரம்                                                                                 90 – பெரியாரைப் பிழையாமை திருக்குறள் அதிகாரம்                                                      91- பெண்வழிச் சேறல் திருக்குறள் அதிகாரம்                                                                   92 – வரைவின் மகளிர் திருக்குறள் அதிகாரம்                                                                93 – கள்ளுண்ணாமை திருக்குறள் அதிகாரம்                                                                  94 – சூது திருக்குறள் அதிகாரம்                                                                                       95 – மருந்து திருக்குறள் அதிகாரம்                                                                               96- குடிமை திருக்குறள் அதிகாரம்                                                                                 97 – மானம் திருக்குறள் அதிகாரம்                                                                                 98 – பெருமை திருக்குறள் அதிகாரம்                                                                             99 – சான்றாண்மை திருக்குறள் அதிகாரம்                                                                    100 – பண்புடைமை திருக்குறள் அதிகாரம்                                                                   101- நன்றியில் செல்வம் திருக்குறள் அதிகாரம்                                                           102 – நாணுடைமை திருக்குறள் அதிகாரம்                                                                  103 – குடிசெயல் வகை திருக்குறள் அதிகாரம்                                                                   104 – உழவு திருக்குறள் அதிகாரம்                                                                                105 – நல்குரவு திருக்குறள் அதிகாரம்                                                                          106- இரவு திருக்குறள் அதிகாரம்                                                                                      107 – இரவச்சம் திருக்குறள் அதிகாரம்                                                                           108 – கயமை

தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உள்ளன. இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளுக்குள் வருகின்றன. திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மேல் கிளிக் செய்து அந்த அதிகாரத்திற்கான குறளை படிக்கலாம்.

Friday, 8 April 2022

வெள்ளிக்கிழமை அன்று சில விஷயங்களை செய்யக்கூடாது

 வெள்ளிக்கிழமை அன்று சில விஷயங்களை செய்யக்கூடாது என்று, நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். அந்த வரிசையில் இன்று நாம் எத்தனையோ பழக்கங்களை வெள்ளிக்கிழமை அன்று, செய்யக்கூடாத சில விஷயங்களை நேரமின்மை காரணமாக, செய்து கொண்டுதான் இருக்கின்றோம்.

 இருப்பினும் குறிப்பிட்ட இந்த தினத்தில் இதையெல்லாம் செய்யவே கூடாது என்றும், குறிப்பிட்ட சில விஷயங்களை செய்தால் மகாலட்சுமி எந்தவிதமான தடையும் இல்லாமல் நம் வீட்டிற்குள் வருவாள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அது என்னென்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

 காலை எழுந்தவுடன் பெண்களுக்கு வாசல் தெளித்து கோலம் போடும் பழக்கம் இருக்கும். வெள்ளிக்கிழமை அன்று, காலை உங்கள் வாசலில் தாமரை பூ கோலம் போடுவது மகாலட்சுமிக்கு மிகவும் உகந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. அதற்காக மற்ற கோலங்களை எல்லாம் போட்டால் தவறு இல்லை. இருப்பினும் வெள்ளிக்கிழமை அன்று வீட்டு வாசலில் தாமரைப் பூக்கோலம் லட்சுமி கலாச்சாரத்தை அதிகப்படியாக உண்டாகும்

. - Advertisement - மற்ற நாட்களில் எல்லாம் சமையலறையை சுத்தம் செய்யாமலே, சமைக்கும் பழக்கம் உங்களிடம் இருந்தாலும், (எந்த நாட்களிலும் சமையலறையை சுத்தம் செய்யாமல் சமையலை, காலையில் தொடங்கக்கூடாது தான்) வியாழக்கிழமை இரவு மட்டுமாவது எச்சில் பாத்திரங்களை சமையலறையில், அப்படியே போட்டு வைக்காமல் சமையலறையை சுத்தமாக சுத்தம் செய்துவிட்டு, வெள்ளிக்கிழமை காலை நீங்கள் உங்களது சமையலறையை, லட்சுமிகலாட்சியத்தோடு தொடங்குவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

 வெள்ளிக்கிழமை காலை 6 மணி நேரத்தில் சமையலறையில் எச்சில் பாத்திரமும், துடைக்கப்படாத மேடையும், அடுப்பும் அவ்வளவு சரியல்ல. வெள்ளிக்கிழமை அன்று வீடு கூட்டும் போது சில பெண்கள் மறதியாக, வீடு கூட்டும் துடைப்பத்தால் கதவு ஓரங்களில், ஜன்னல் ஓரங்களில், மூலைமுடுக்குகளில் இருக்கும் ஒட்டடைகளை சுத்தம் பண்ணி எடுப்பார்கள். - Advertisement - அதாவது, ஒட்டடைக்குச்சி இல்லாமல், வேறு ஒரு கிழமைமையில் கூட, துடைப்பத்தால் ஒட்டடை அடிப்பது தவறு. எப்போதுமே ஒட்டடையை துடைப்பத்தால் தட்டக்கூடாது. ஒட்டடைக்குச்சியால் தான் சுத்தம் செய்ய வேண்டும். 

குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று கூட்டும்போது அங்கங்கே ஒட்டடையை பார்த்தாலும் அதை சுத்தம் செய்யக்கூடாது. முடிந்தவரை உங்கள் வீட்டில் ஒட்டடையை சுத்தம் செய்யும் வேலையை ஆண்களிடம் கொடுத்து விடுங்கள்.

 பெண்கள் செய்வது அவ்வளவு உத்தமம் இல்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது. எந்த கிழமைமையாக இருந்தாலும் சரி, மாலை 4.30 மணிக்கு முன்பாக உங்களது வீட்டை கூட்டி விடுங்கள். அதாவது காலை ஒரு வேளை வீட்டை கூட்டுவார்கள், மாலை ஒருவேளை வீட்டை கூறுவார்கள் அல்லவா?

 வெள்ளிக்கிழமை என்றாலே துவரை பருப்பு சமைக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். உங்களால் பருப்பை தனியாக சமைக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. நீங்கள் சாதம் வடிப்பீர்கள் அல்லவா? அதில் ஒரு நான்கு துவரம்பருப்பை சேர்த்து போட்டு வேக வைத்து வடித்து விடுங்கள் அவ்வளவுதான்.

 இப்போதெல்லாம் தினம்தோறும் துணி துவைக்கும் பழக்கம் என்பதே இல்லை. அந்த காலங்களில் எல்லாம் அழுக்குத் துணியை இப்படி எடுத்து வைக்க மாட்டார்கள். தினம் தோறும் இருக்கும் அழுக்கு துணியை, தினம்தோறும் துவைத்து வைப்பார்கள். இன்று நேரமின்மை காரணமாக, ஆண்கள் பெண்கள் எல்லோரும் வேலைக்கு செல்வதன் காரணமாக அழுக்குத் துணிகளை சேர்த்துவைக்கும் சூழ்நிலை. சில பேர் வீடுகளில் அந்த அழுக்கு துணிகளை எல்லாம் வெள்ளிக்கிழமை அன்று காலை மொத்தமாக துவைப்பார்கள். இது மிகப்பெரிய தவறு. முடிந்தால் வியாழக்கிழமை அன்று சுத்தம் செய்து வைத்துவிடுங்கள். முடியாதவர்கள் அந்த அழுக்கு துணிகளில் வாடை வெளியே தெரியாத அளவிற்கு, ஏதாவது ஒரு கூடையில் போட்டு மூடி வீட்டிற்குள், யார் கண்ணுக்கும் தெரியாமல் ஒரு ஓரமாக எடுத்து வைத்து விட வேண்டும்.

 சனிக்கிழமை துவைத்துக்கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமையன்று மூட்டையாக சேர்த்து வைத்திருக்கும் அழுக்குத்துணி கட்டாயம் துவைக்கக் கூடாது. அதாவது ஒரு நாள் துணியை துவைப்பதில் தவறில்லை. சேர்த்துவைத்த துணியை கட்டாயம் துவைக்கக் கூடாது. அது தரித்திரத்தை தேடித்தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. சில பேர் வீடுகளில் எல்லாம் குப்பைத் தொட்டியும், குப்பை வாறும் முரமும், பார்க்கவே படு மோசமாக இருக்கும். குப்பைத் தொட்டியில் இருந்து ஒரு துர்நாற்றம் வீசிக் கொண்டே இருக்கும். இந்த நாற்றம் வீசாமல் அந்த குப்பை தொட்டியையும், குப்பை வாறும் முறம், துடைப்பம், இவை மூன்றையும், வாரத்திற்கு இரண்டு முறை சுத்தம் செய்து, வெயிலில் காய வைப்பது பெண்களின் கட்டாயக் கடமை. குறிப்பாக அந்த துடைப்பதில், சில பேர் வீடுகளில் முடி சுற்றிக்கொண்டு இருக்கும் பாருங்கள்! அதை எடுக்கவே மாட்டார்கள். கூட்டி முடித்தபின்பு அந்த முடியை எல்லாம் சுத்தமாக அந்த துடைப்பத்தில் இருந்து எடுத்துவிட வேண்டும். இப்படி செய்யும் பட்சத்தில்

 வீட்டிற்குள் மூதேவி வாசம் செய்ய மாட்டாள் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

வேதத்தில் என்ன இல்லை?

                                                        வேதத்தில் என்ன இல்லை?

வேத ரிஷிகள் காலத்தில் கோவில் கிடையாது; விக்ரஹாராதனை கிடையாது; ஸந்யாஸம் கிடையாது. அத்வைத த்வைத விசிஷ்டாத்வைதப் பிரிவுகள் கிடையா; பக்தி மாத்திரந்தானுண்டு. கோவிலும் மடமும் பெளத்தமதப் பழக்கத்தால் வெளி நாடுகளிலிருந்து நமக்குக் கிடைத்த பேறுகளென்று சரித்திரக்காரர் சொல்லுகிறார்கள். ஆனால் இப்போது ஹிந்துமதப் பயிற்சிகளுள்ளே கோவிலும் சிலையும் நெடுந்தூரம் ஆழ்ந்து போய்விட்டன. ஆதலால், இப்போது ஹிந்து மதத்திலிருந்து கோவிலைப் பிரிக்க முடியாது. – பாரதி

வேதத்தில் என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்கு முன் அதில் இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பல அதில் இல்லை என்பதை அறிந்து கொள்வோம். ஆம், இன்றைய இந்து சமயத்தின் அடையாளங்களாகக் கருதப்படும் வழக்கங்களில் பெரும்பாலானவை ரிக் வேதத்தில் காணப்படவில்லை.

அவை வேத விரோதமானது என்று நிரூபிப்பது நம் நோக்கம் அல்ல. வைதிக சமயம் பல தாக்கங்களுக்கு உட்பட்டு வெளித் தோற்றத்தில் மாறி வந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டால்தான் இத்தனை மாற்றங்களையும் ஏற்றுக் கொண்ட அந்த அடிப்படை என்ன என்பதை ஆராய முடியும்.

விநாயகர்

முதலில் பிள்ளையாரிலிருந்து ஆரம்பிப்போம். ரிக் வேதத்திலும் மற்ற வேதங்களிலும் விநாயகரைப் பற்றிய குறிப்பு இல்லை.

அது எப்படி இல்லாமல் போகும்?

கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமஸ்ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரம்மணாம் ப்ரம்மணஸ்பத
ஆநஸ் ஸ்ருண்வன் ஊதிபிஸ் ஸீதஸாதனம்

என்ற விநாயகர் துதி வேத மந்திரம் தானே [ரிக் 2.23.1] என்று வைதிகர்கள் பாயக் கூடும்.

இந்த மந்திரம் ரிக் வேதத்தில் பிரம்மணஸ்பதி மற்றும் பிருஹஸ்பதி என்ற தலைப்பில் வரும் 19 பாடல்களில், முதலாவது பாடல். இந்தப் பாடலில் எங்கும் கணபதியின் பிற பெயர்களோ, அவரது தோற்றம் பற்றிய குறிப்புகளோ காணப்படவில்லை. அந்தப் பாடலின் மீதி வரிகளிலோ, அந்த சூக்தத்தின் மற்றைய பாடல்களிலோ கணபதி என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் பிரம்மணஸ்பதி என்ற சொல் பல முறை குறிக்கப்படுகிறது. பிரம்மணஸ்பதி தான் விநாயகர் என்று கூறுவதற்கான எந்தத் தடயமும் இல்லை. சாயணர் காலத்தில் விநாயகர் வழிபாடு பரவி இருந்தும், இது விநாயகரைக் குறிப்பதாக சாயணர் கூறவில்லை.

கணேச சூக்தம் என்ற பெயரில் ஒரு தோத்திரம் உள்ளது. இது 15 மந்திரங்கள் கொண்ட ஒரு தொகுப்பு. இதில் எதுவும் விநாயகருக்கு உரியது இல்லை. இதன் முதல் 9 மந்திரங்கள் ரிக் வேதத்தின் 8வது மண்டலம் 81வது சூக்தத்திலிருந்து எடுக்கப்பட்டவை. இவை இந்திரனைக் குறித்தவை. அடுத்த 2 மந்திரங்கள் முன் சொன்ன 2வது மண்டலம் 23வது சூக்தத்தில் உள்ளவை. பிரம்மணஸ்பதியைப் போற்றுபவை. மற்ற 4 மந்திரங்கள் ரிக் வேதம் 10.112 இல் 9வது, 10வது பாடல்களாக உள்ளன. இவையும் இந்திரனைத் துதிப்பவையே.

ஒரு புதிய தெய்வம் ஏற்படுத்தப்பட்ட பிறகு, தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பது பற்றிக் கவலைப்படாமல், அந்தத் தெய்வத்திற்கு ஏதேனும் ஒரு வேதப் பாடலைப் பயன்படுத்துவது வழக்கம் என்பதற்கு இது ஒரு உதாரணம். இன்று நாம் சடங்குகளில் பயன்படுத்தும் மந்திரங்கள் அந்தச் சடங்கோடு தொடர்புடைய பொருள் கொண்டவை அல்ல. (இது பற்றிப் பின்னர் வரும் ஒரு தலைப்பில் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.)

சிவன்

வேதத்தில் சிவ வழிபாடு இல்லை. சிவ என்ற சொல் இருக்கிறது. மங்களகரமான என்ற பொருளில் இது பல தேவர்களுக்கு அடைமொழியாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. ருத்ரன் இருக்கிறார். ஆனால் ருத்ரனும் சிவனும் பிற்காலத்தில் ஒன்றாக்கப்பட்டார்களே அன்றி வேதம் கூறும் ருத்ரனுக்கு இன்றைய சிவனுக்குரிய அம்சங்கள் இல்லை.

ரிக் வேதத்தில் ருத்திரனைப் பற்றிய குறிப்புகளைப் பார்த்தால், பல இடங்களில் மருத் என்னும் தெய்வத்தின் தந்தை ருத்திரன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. [உ-ம் ரிக் 1.85.1] சில இடங்களில் மருத்துகளே ருத்திரர்கள் என்று கூறப்பட்டுள்ளது. [உ-ம் ரிக் 1.39.4,] இன்னும் சில இடங்களில் ருத்திரன் அக்னியின் மறுபெயராகக் கருதப்படுகிறார். [உ-ம் ரிக் 1.72.4,] சில இடங்களில் ருத்திரன் அஸ்வினி தேவர்களோடு ஒன்றாகக் கருதப்படுகிறார். [உ-ம் ரிக் 1.158.1] அவ்வகையில், காற்றாகவும், தீயாகவும், அஸ்வினி தேவர்களாகவும் இன்னும் பிறவாகவும் விளங்கும் பரம் பொருளைச் சில இடங்களில் ருத்திரன் என்று வேதம் அழைக்கிறது என்று தான் சொல்ல முடியும்.

ஒரே ஒற்றுமை சொல்ல வேண்டும் என்றால், ரிக் வேதத்தில் பல இடங்களில் நலம் தரும் மருந்துகளுடன் வந்து நோய் நீக்குபவராக ருத்திரன் கூறப்படுகிறார் [உ-ம் ரிக் 1.43.4, 2.33.4]. இது சிவனை வைத்தியநாதன் என்று இன்று நாம் வழங்குவதுடன் ஒக்கிறது.

யஜுர் வேதத்தின் ருத்ரம் (4வது காண்டம் 5வது பிரபாடகம்) இன்று சிவ வழிபாட்டில் பிரதானமாகப் பயன்படுத்தப்படும் மந்திரம். அதில் கூறப்படும் ருத்திரனின் பண்புகளில் சில சிவனுடைய பண்புகளுடன் ஒத்திருந்தாலும், ஒவ்வாதவையும் பல உள்ளன.

கோபமே வடிவானவர் என்பது ருத்திரனுக்கும் சிவனுக்கும் பொதுவான அம்சம். சிவன் யானைத் தோலையும் புலித் தோலையும் அணிந்தவர் என்று இன்று நாம் வழங்குவதற்கு இயைய யஜுர் 4.5.10.10 மிருகத் தோலை அணிந்தவர் ருத்திரன் என்று கூறுகிறது. யஜுர் 1.8.6.9 ருத்திரனை த்ரயம்பகன் (முக்கண்ணன்) என்கிறது.

இனி, முரண்பாடுகளைப் பார்ப்போம். பப்லுசாய என்பதற்கு எருதின் மேல் இருப்பவர் என்றும் ஸோம என்பதற்கு உமையோடு கூடியவர் என்றும் தற்போது பொருள் கூறப்படுகிறது. ஆனால் சாயணர் பப்லுசாய என்பதைப் ‘பழுப்பு நிறத்தவர்’ என்று எழுதுகிறார். ஸோம என்ற சொல்லுக்கு ஸோமக் கொடி என்னும் தாவரம் என்று பொருள் தருகிறார். தற்போது வழங்கும் இவ்விரண்டு பொருள்களும் சாயணருக்குப் பிந்திய காலத்தில் ஏற்பட்டதாக இருக்கலாம். மாதொரு பாகன் என்ற கருத்தை வேதத்தில் காண முடியவில்லை. அம்பிகா ருத்திரனின் சகோதரியாகக் கூறப்படுகிறார் [யஜுர் 1.8.6.6].

தற்போதைய வழக்கு, சிவனை நீலகண்டன், சடையன் என்று குறிப்பிடுகிறது. ஆனால் ருத்திரன் கழுத்து கறுத்தவர், கழுத்து வெளுத்தவர் என்று இருவகையாகவும் கூறப்பட்டுள்ளார் (நீலகண்டர், சிதிகண்டர் – யஜுர் 4.5.5.1). அதே போல, சடையர் என்றும் மொட்டைத் தலையர் என்றும் கூறப்பட்டுள்ளார் (கபர்தினர், வ்யுப்தகேசர் – யஜுர் 4.5.5.1).

மேலும், வேதத்தில் ருத்திரன் என்ற பெயர் ஒருமையிலும் வருகிறது, ருத்திரர்கள் என்று பன்மையிலும் பேசப்படுகிறது. தேவர்கள் நிலத்தில் 11, நீரில் 11, ஆகாயத்தில் 11 பேர் உள்ளனர் என்று ரிக் 1.139.11 கூறுவதை யஜுர் 1.4.10.1 மற்றும் யஜுர் 1.4.11.1 ருத்திரர்களாக எடுத்துக் கொள்கிறது. ஆயிரக் கணக்கில் உள்ளவர்கள் என்று யஜுர் 4.5.11.1 கூறுகிறது. வசுக்கள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள் என்று மூன்று தெய்வக் கூட்டங்கள் பல இடங்களில் சேர்த்தே சொல்லப் படுகின்றன (உதாரணம் – யஜுர் 1.1.11.16).

இந்த மந்திரங்களிலிருந்து ருத்திரனின் தன்மை இத்தகையது என்று நிர்ணயிக்க முடியாத நிலையில், வேத தெய்வமான ருத்திரனின் மாற்றுருவமே சிவன் என்று சொல்வதை விட, சிவன் என்னும் கருத்து உருவாகிய பின், அவருடைய வழிபாட்டுக்கு, ருத்ரனைக் குறித்த வேத மந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன என்று கூறுவதே பொருந்தும்.

திருமால்

வேதத்தில் திருமால் இருக்கிறாரா? விஷ்ணு என்ற சொல் இருக்கிறது. அது எங்கும் வியாபித்த சூரியனைக் குறிப்பதாகத் தான் உள்ளதே அன்றி இன்று நாம் வணங்கும் திருமாலைக் குறிக்கவில்லை. விஷ்ணு மூன்று அடி வைத்தது அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. அது சூரியனின் (காலை, பகல், மாலை ஆகிய) மூன்று நிலைகளைக் குறிப்பதாகத் தான் சாயணர் கூறுகிறார். நாராயணன் என்ற பெயர் ரிக் வேதத்தில் இல்லை.

தைத்திரிய ஆரண்யகத்தில் வரும் நாராயண சூக்தத்தில் விஷ்ணுவும் நாராயணனும் ஒன்று என்பதற்கான குறிப்பு இல்லை.

இன்று திருமால் வழிபாட்டில் பெருமளவு பயன்படுத்தப்படும் புருஷ சூக்தத்தில் விஷ்ணு என்ற பெயரும் நாராயணன் என்ற பெயரும் இல்லை. இவை பிற்காலத்தில் ஒன்றாக்கப்பட்டவை.

பிற தெய்வங்கள்

இன்று பெரும்பாலான மக்கள் முருகன், லட்சுமி முதலான தெய்வங்களையும், மாரியம்மன், ஐயனார் முதலான கிராமத் தெய்வங்களையும் வணங்குகிறார்கள். இவர்களுக்கு வேத மந்திரம் சொல்லி பூஜை செய்யப்படுவதையும் காண்கிறோம். இந்த தெய்வங்கள் எதுவும் வேத இலக்கியத்தின் அடிப்படை நூலான ரிக் வேதத்தில் இல்லை.

கோயில்கள் இல்லை, விக்கிரக ஆராதனை இல்லை. இன்று எந்த அர்ச்சனை செய்தாலும் ஒவ்வொரு பெயருக்கு முன்னாலும் ஓம் என்று சேர்த்துச் சொல்கிறோமே, அந்த ஓங்காரம் ரிக் வேதத்தில் இல்லவே இல்லை. அதைப் பற்றி பின்னர் வந்த உபநிடதங்கள் தாம் வானளாவப் புகழ்கின்றன.

அபிஷேகங்கள், அலங்காரங்கள், உற்சவங்கள் இல்லை. பஞ்ச பூதக் கோட்பாடு இல்லை. அஹிம்ஸைக் கொள்கை, கர்மாக் கொள்கை, மறு பிறப்பு, மோட்சம், சொர்க்கம், நரகம், பித்ரு லோகம், வைதரணி நதி எதுவும் இல்லை.

பிரம்மசர்யம் முதலான ஆசிரமங்கள் இல்லை. பிராமண க்ஷத்ரிய முதலான வர்ணப் பிரிவுகள் பற்றிய குறிப்பு இல்லை. ரிக் வேதத்தில் வரும் பிரம்ம என்ற சொல் நான் முகக் கடவுளைக் குறிப்பது அல்ல. உபநிஷத்துகள் கூறும் உருவமற்ற குணமற்ற பரம்பொருளையும் குறிப்பது அல்ல. பிரம்ம என்ற சொல் பிரார்த்தனை மந்திரம் என்ற பொருளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிரார்த்தனை சொல்பவர் ப்ரஹ்மணர் என்றும் ப்ராஹ்மணர் என்றும் கூறப்பட்டுள்ளார். இது வர்ணத்தையோ ஜாதியையோ குறிப்பதல்ல.

இவை எல்லாம் காலப் போக்கில் இந்து சமயத்தில் ஏற்பட்டு அதனை வளர்த்தவை.

இந்து சமயத்தின் வேர் வேதங்கள். அந்த வேதங்களுக்குள்ளே ஆணி வேரான ரிக் வேதமே பழமையானது; மற்ற வேதங்களுக்கும், பிராமணம், ஆரண்யகம், உபநிடதங்களுக்கு எல்லாம் ரிக் ஸம்ஹிதையே அடிப்படை என்கிறோமே, அது எந்த அடிப்படையில்? பிற்காலத்தில் பல மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வழி வகுத்த அதன் தனித்தன்மை என்ன? மாற்றங்கள் ஏற்பட்ட பின்னும் வேதமே அடிப்படை என்கிறோமே அப்படிக் கூறுமளவுக்கு வேதத்தின் எந்தக் கருத்து இன்று வரை மாறாமல் இருந்து மாற்றங்களை எல்லாம் வரவேற்று சமயத்தை வளர்த்து வருகிறது?
பாமரன் புதுக் கோணத்தில் பார்க்க முயன்றான். வேதத்தின் மையக் கருத்து என்ன என்று தெரிந்து கொண்டால் அதற்கு மாறானவற்றை இடைச் செருகலாகக் கருதி அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மற்ற பகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தலாம், மையக் கருத்தைத் தெரிந்து கொண்டு விட்டால் அதோடு தொடர்பு படுத்தி இது வரை புரியாத பல மந்திரங்களை அறிந்து கொள்ள முடியும் என நம்பினான்.

மையக் கருத்தை எப்படிக் கண்டு பிடிப்பது? எந்தக் கருத்து திரும்பத் திரும்பப் பேசப்படுகிறதோ, வலியுறுத்தப்படுகிறதோ அதுவே மையக் கருத்தாகக் கொள்ளலாம். அடிக்கடி வரும் சொற்களை மட்டும் தனியாகப் பிரித்து சிறப்பான கவனம் செலுத்திப் பார்க்க முயன்றான். அப்படி அடிக்கடி வரும் சொற்கள் யாவை? தேவ, யக்ஞ, ருதம் என்ற மூன்று சொற்களே ரிக் வேதத்தில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்ட சொற்கள்.

Saturday, 2 April 2022

குருவை நம்புங்கள்

                                                               


குருவை நம்புங்கள்

குருவை முழுமையாக சரணடைந்தால்

பரம்பொருளே நமக்கு வந்த ஆபத்தை "குருவாக" வந்து காப்பாற்றுகிறார்

ஒரு குருவும் சீடனும் அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தனர். இரவு நெருங்கவே ஒரு மரத்தின் அடியில் உறங்கி காலை நடை பயணத்தை தொடரலாம் என்று முடிவு செய்து ஒரு மரத்தை தேர்ந்தெடுத்து அதனடியில் உறங்கினர். 

மறுநாள் பொழுது விடிந்தது குருவும் சீடனும் ஆற்றை தேடி நீராட சென்றனர். ஆற்றை கண்டுபிடித்து நீராடினர் இருவரும். பின் குரு சூரியனை வாங்கினார்.

அப்பொழுது சூரிய பகவான் அசிரிரியாக தோன்றி, "வேத குருவே! வணக்கம். உங்கள் வணக்கத்தை நான் ஏற்று கொண்டேன். ஆனால் இன்று சூரியன் ஆகிய நான் மறைவதற்குள் உங்கள் சீடனின் உயிர் ஒரு ராஜநாகத்தால் தீண்ட பட்டு இறக்க நேரிடும். முடிந்தால் உங்கள் குரு வலிமையால் அவனை காப்பாற்றுங்கள் என்று கூறி அசரீரி மறைந்தது.

குருவும் சூரியனை வணங்கி விட்டு சீடனை கவலையோடு பார்த்தார். பின் இருவரும் சிறிது பழங்களை பறித்து பசியாறிய பின் அருகே இருக்கும் சிவன் கோயிலை நோக்கி நடக்க துவங்கினர் கோயில் வந்ததும் இறைவனை வணங்கினர் இருவரும்.

பின் ஊரை தாண்டி காடு வழியே நடந்து சென்றனர். சற்று களைப்பு ஏற்படவே இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து கண் அயர்ந்தனர்.

ஆனால் சீடன் தூங்கினானே தவிர குரு தூங்கவில்லை.

சீடனின் உயிரை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று நினைத்து விழித்து இருந்தார்.

அப்பொழுது ஒரு ராஜநாகம் படம்  எடுத்த படி சீடனின் அருகே அவனை கொல்ல வந்தது.

இதை பார்த்து பதை பதைத்த குரு ராஜநாகமே நில்என்று ஆணையிட்டார். ராஜநாகமும் குருவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நின்றது. 

குரு ராஜநாகத்தைப் பார்த்து, "நீ என் சீடனின் உயிரை எடுக்கவே வந்துள்ளதை நான் அறிவேன். 

குரு பக்தி மிகுந்த சீடனை காப்பாற்றுவது ஒரு குருவின் கடமை. 

அதனால் என் சீடனின் உயிரை எடுக்க நான் அனுமதிக்கமாட்டேன், என்று தடுத்தார்.

இப்பொழுது ராஜநாகம் பேசியது. வேத குருவே உங்கள் சீடனின் கழுத்தில் என் நாவை வைத்து ரத்தத்தை உறிஞ்சு எடுக்க வேண்டும் என்பது எனக்கு காலன் இட்ட கட்டளை. அனைத்தும் உணர்ந்த தாங்களே   என் கடமையை செய்ய விடாமல் இப்படி தடுத்து என்னை நிறுத்தலாமா?"

என்று முறை இட்டது.

உடனே குரு, "அப்படி என்றால் என் சீடனின் ரத்தத்தை உறிஞ்ச வேண்டும் என்பது தானே உனக்கு காலன் இட்ட கட்டளை. சரி, சற்று பொறு! நானே அவனது ரத்தத்தை உனக்கு ஊட்டுகிறேன். 

அதை உறிஞ்சியதும் நீ உன் கடமையை செய்து விட்ட பலனை பெறுவாய்."

என்று கூறி, ஒரு சிறு கத்தியை எடுத்த குரு அதை சீடனின் கழுத்தில் வைத்து ரத்தம் வரும் அளவு ஆழம் வைத்து கத்தியை கீறினர்.

தன் கழுத்தில் கூர்மையாய் எதோ கீறுவதை உணர்ந்த சீடன் கண் விழித்து பார்த்தான் குரு தன் கழுத்தில் கத்தியை வைத்து கீறுவதை உணர்ந்து பின் கண்மூடி படுத்த படியே இருந்தான்

சிறிதும் அசையாமல். பின் சீடனின் பல துளி ரத்தத்தை எடுத்த குரு அதை ராஜநாகத்துக்கு ஊட்டிவிட்டார் ராஜநாகமும் குருவின் சாபத்துக்கு நாம் ஆளாகாமல் நம் கடமை நிறைவேறியதே என்ற மகிழ்வோடு ரத்தத்தை உறிஞ்சி விட்டு வந்த வழியே சென்றது.

குருவும் சீடனின் உயிரை காப்பாற்றிய நிம்மதியோடு அவனது கழுத்தில் முன்னமே தான் எடுத்து வைத்திருந்த பச்சிலை சாற்றை பிழிந்து சீடனின் கழுத்து பகுதியில் பற்று போட்டு விட்டு நிம்மதியோடு உறங்க சென்றார். 

சிறிது நேரம் இருவரும் நன்றாக களைப்பு தீர உறங்கிய பின் எழுந்து அமர்ந்தனர்.

அப்பொழுது சீடன் தன் கழுத்தில் பற்று இருப்பதை தொட்டு பார்த்து விட்டு எதுவும் குருவிடம் கேட்காமல், "குருவே நாம் நடை பயணத்தை தொடரலாமா?" 

என்று கேட்டான். குரு புன்னகையுடன், "*சீடனே! நீ சற்று முன்    உறங்கும்போது  நான் உன் கழுத்தில் கத்தி வைத்த போது நீ என்ன நினைத்தாய் உனக்கு பயம் எதுவும் உண்டாகவில்லையா என்று புன்னகையுடன் கேட்டார். சீடன், "குருவே என் கழுத்தில் எதோ ஊறுவதை உணர்ந்தேன்.

விழித்தும் பார்த்தேன். கையில் கத்தியுடன் நீங்கள் என் கழுத்தை அறுப்பதை உணர்ந்தேன். ஆனால் என் குருநாதராகிய தாங்கள் எனக்கு எந்த கெடுதலும் செய்ய மாட்டீர்கள் என்பதை நான் அறிவேன். அதனால் நான் நிம்மதியாக உறங்கினேன்.

பின் இப்பொழுது எழுந்ததும் என் கழுத்தில் உள்ள மூலிகை பற்றை பார்த்தேன் என் குருநாதராகிய உங்களுக்கு என் ஊன், உயிர், உள்ளம் அனைத்தும் அர்ப்பணம். அதனால், எனக்கு அதிலும் எந்த வித கவலையும் இல்லை." என்று கூறி பணிந்து நின்றான்.

குருவும் சீடனை ஆற தழுவி எழுந்து அவனோடு நடக்கலானார்.

நண்பர்களே! நமக்கு விதித்த படி நடக்கும் நல்லது, கெட்டது எல்லாவற்றுக்கும் இறைவனே பொறுப்பு என்று அவனை *சரணடைந்து விட்டால், நமக்கு நடக்க இருக்கும் தீமையும் இறைவன் அருளால் நன்மையாக நடக்கும்.

இதில் சீடன் தான் நாம்.

குரு தான் நம் கடவுள்.

ராஜநாகம் தான் நம் விதி.

*ஞானகுரு சொல்லும் வார்த்தைகளை முழு நம்பிக்கையுடன் ஏற்று நம் வாழ்க்கையை சீரமைத்துக் கொண்டால், நம் வாழ்வில் எப்போதும் நல்லதே நடக்கும்                               

Thursday, 31 March 2022

நாய் போர்வை வாங்கிய கதை

                                 


! நாய் போர்வை வாங்கிய கதை தெரியுமா உங்களுக்கு ? தெருவில் வசிக்கும் நாய்கள் குளிர் காலத்தில் நடுங்கியபடி உடலை சுருட்டிக் கொண்டு நடுங்கியபடி படுத்திருப்பதைப் பார்த்திருப்பாய். பார்க்கவே பரிதாபமாக இருக்கும். அந்த நேரத்தில் அந்த நாய் நினைக்குமாம் , " என்ன ஒரு குளிர்! காலைல பொழுது விடிஞ்ச உடனே முதல் வேலையா கடைக்குப் போய் ஒரு நல்ல போர்வை வாங்கணும். இந்த குளிர் பிரச்சினை இன்னையோட முடிஞ்சது. நாளைக்கு ராத்திரிலேர்ந்து ஐயா போர்வையை போத்திக்கிட்டு ராஜா மாதிரி தூங்கப் போறார் பாரு ". விடியும் வரை அடிக்கடி விழித்தெழுந்து இதையே சொல்லிக் கொண்டிருக்கும். காலை கண் விழித்து எழுந்ததும் சோம்பல் முறித்துவெயில் சுள்ளென்று அடித்தது அட இவ்வளவு வெயில் அடிக்குது போர்வை வாங்கியிருந்தால் ஏமாந்து தான் போய் இருக்கணும்என்று நினைத்தது. மறுபடியும் இரவு வந்ததுகுளிரில் நடுங்கியபடியே நாளைக்கு காலைல பாரு. கண்டிப்பாமுதல் வேலையா போர்வை வாங்கிய ஆகணும் என்று நினைத்தது இதுபோல் சில மனிதர்களுடைய வாழ்க்கையும் கண்டிப்பாக நாளை


Wednesday, 30 March 2022

நான்” என்ற எண்ணம் இருக்கலாமா.....??? ஒரு அலசல் :-

                      நான்” என்ற எண்ணம் இருக்கலாமா.....??? ஒரு அலசல் :-


 எப்படிப்பட்டவன்.......???  


நல்லவனா.......??? 


பொல்லாதவனா......???  


நான் என்ற எண்ணம் இருக்கலாமா.....???  


இருக்கக் கூடாதா......??? 


ஒரு அலசல் :- 


என்னிடம் நான் என்ற அகம்பாவம் கிடையாது என்று நினைத்து விட்டாலே 


நான் தான் என்ற அகம்பாவம் தாண்டவம் ஆடுகிறது என்றே பொருள் 


தன்னை முன்னிலை படுத்த வேண்டும் என்று நினைத்தால் 


"நான்" அங்கே குடி கொண்டிருக்கிறது என்று அர்த்தம் 


தன்னை எல்லோரும் கவனிக்க வேண்டும் 


தான் சொல்வதை எல்லோரும் கேட்க வேண்டும் என்று நினைத்தாலும் 


இதே நிலை தான் 


தன்னை யாரும் கவனிக்கவில்லையே என்று கவலைப் பட்டாலும் 


அதுவும் அகங்காரத்தின் அடுத்த பக்கம் தான் 


கவலையை வெளிப்படுத்தினாலும் அகம்பாவம்


வெளிப்படுத்தாமல் தனக்குள்ளேயே கவலையுற்று இருந்தாலும் ஆணவம் தான் 


தனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்றாலும், 


அதை நினைத்து கண்ணீர் விட்டாலும் அகம்பாவமே ஆனந்த தாண்டம் ஆடுகிறது என்று அர்த்தம் 


ஆக, கவலைப் படுதலும், 


கண்ணீர் சிந்துவதும், 


கௌரவம் வேண்டும் என்று நினைப்பதும், 


அகம்பாவத்தின் வெவ்வேறு தோற்றப்பாடுகள் தான் 


இந்த விஷயத்தில் ஆன்மீக கருத்திற்கும், 


சுய முன்னேற்ற சிந்தனைக்கும் முரண்பாடுகள் இருப்பது போல தோன்றும் 


ஆன்மிகம் தன்னை அறியச் சொல்லும்.  


ஆனால், 


சுய முன்னேற்ற சிந்தனை தன்னை முன்னிலை படுத்த சொல்லும் 


இதில் எதை எடுத்துக் கொள்வது.....???


தன்னிலை விளக்கம் பெற்றால் நமக்கு தெளிவு வந்துவிடும் 


எங்கு..??? எதற்காக.....??? எப்படி நானை கையாள்வதென்று 


நான் என்னும் உணர்வு நிலை உணர்ச்சி நிலையாக மாறும்போது தான் பிரச்சினை தலை தூக்குகிறது 


அதற்கு மகரிஷி கொடுக்கும் பெயர் தான் “தன்முனைப்பு”


ஒரு காரியத்தை தன்னால் செய்ய முடியும் என்று நினைத்தால் அது தன்னம்பிக்கை


தன்னால் தான் முடியும் என்று நினைப்பது தற்பெருமை.  


தன்னால் மட்டுமே முடியும் என்பது தன்முனைப்பு


சுய மதிப்போடு வாழ முற்படுவது கெளரவம் 


சுயத்தை உயர்த்த பிறரை தாழ்த்துவது கர்வம் 


அகத்தை மீறும்போது 


அது பாவத்தை கொண்டு வந்து சேர்த்து விடுகிறது 


அதனால் தான் “அகம்பாவம்” என்று சொல்லி வைத்தார்கள்.


அன்றாட வாழ்வில் உறவுகளுக்குள் ஒருவருக்கொருவர் மதிப்பு கொடுக்கவில்லையானால் 


நாமும் பதிலுக்கு அதே முறையை வெளிப்படுத்தி 


தன்னை சுய மரியாதை மிக்கவராக காட்டிக் கொள்கிறோம்.  


இதற்கு துணையாக 


“மதியாதார் தலை வாசல் மிதியாதே”  


என்ற பழமொழியையும் முன்னிலை படுத்தி சமாதானம் தேடுகிறோம் 


ஆனால், 


“ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்” என்பதை மட்டும் மறந்து விடுகிறோம் 

 

நான் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று பார்ப்போம் 


எந்த ஒரு காரியத்தையும் முனைப்போடு செய்தால் தான் காரியத்தை சிறப்பாக செய்ய முடியும் 


இந்த இடத்தில் முனைப்பு முயற்சி, செயல் வேகம், ஈடுபாடு, தூண்டல், ஆர்வம், செயல் ஒழுக்கம், பங்களிப்பு பன்ற பல்வேறு அர்த்தங்கள் உண்டு 


நான் என்ற எண்ணம் சுயத்தைப் பற்றிய சிந்தனையாக மட்டும் இருக்கும் பட்சத்தில் ஒரு தீங்கும் நேராது 


ஏனெனில், 


சுயத்தினுடைய தன்மை சமப்படுத்துதல், ஒன்றாக்குதல், நிலைப்படுத்துதல், பாகுபாடற்ற தன்மை.....


எந்த ஒரு வகையிலும் நான் என்ற உள்ளார்ந்த தன்மை பிறரை தாக்காமல் இருக்குமோ 


அந்த நான் உயர்ந்த தன்மை கொண்ட நான்.  


துன்பம் தருபவர்களுக்கு கூட ஊகத்தையே உரமிட்டு 


அவர்களை காயப்படுத்தாமல் விலகிச் சென்றால், 


இந்த நான் நம்மை அமைதியாகவும் ஆனந்தமாகவும் வைத்திருக்கும்.  


இந்த நிலையில் உள்ள "நான்" என்ற உணர்வு ‘பொல்லாதவன்’ அல்ல “பொலன் ஆனவன்” (பொலன் = தங்கம். தமிழ் அகராதியில் தேடி எடுத்த வார்த்தை)


எண்ணம் போல் வாழ்வு

           


  உயர்ந்த எண்ணமே நல் வாழ்வை தரும்.,’’ 



உலகின் மிகச் சிறந்த வைரம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே.. 


எங்கு பார்த்தாலும் மனித மனங்களில் ஏதேதோ எண்ணங்கள்.. 


பார்க்கும் மனித முகங்கள் எல்லாம் சிந்தனை வயப்பட்டதாகவே தோன்றுகிறது. 


இறுக்கமான மனிதர்களாகவும், எந்திர கதியான மனிதர்களாகவுமே தென்படுகின்றனர்.


எண்ணக் குவியல் களின் கலவைகளையும், சிந்தனை ரேகைகளையும் கொண்ட மக்கள் கூட்டத்தைக் காணும் திசை எல்லாம் பார்க்க முடிகிறது.


சக மனிதனைக் கண்டு மகிழும் உள்ளமோ, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதலோ இல்லாமல் தனியொரு உலகில் சிந்தனைகளோடு பயணிக்கும் உலகமாக மாறி விட்டது. 


இதற்கெல்லாம் அடிப்படை என்ன  என்று சிந்தித்தால் அவரவருக்கான தனிப்பட்ட எண்ணங்களே ஆகும்.


எண்ண ஓட்டங்கள் தவறாக இருக்கும் போது அங்கே வாழ்வியல் நெறிகளில் மாற்றம் ஏற்படுகிறது. 


மனித நடத்தை மாறுபாடுகளை மாற்றி அமைக்கும் வல்லமை எண்ணங்களுக்கே உண்டு என்பதை மறுப்பதற்கில்லை


நமது செயல்கள் அனைத்தும் நம் எண்ணத்தின் பிரதிபலிப்பே ஆகும்.


ஒருவரின் எண்ணம் நல்ல விதமாக இருந்தால் செயலும் நல்ல விதமாக இருக்கும். 


கெடுதலான எண்ணங்கள் கெடுதலான செயல்களில் முடியும். எண்ணங்கள் செயல்களாகும். 


செயல்கள் பழக்க வழக்கங்களாகும்.

பழக்க வழக்கங்களே ஒருவருடைய நடத்தையை நிர்ணயம் செய்யும்..


 ஒரு தடவை ஒரு அப்பாவும் மகனும் ஒரு மலை மீது நடந்து சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது பையன் கல் தடுக்கி கீழ விழுந்து விட்டான்..


அடிபட்டதனால் அவன் ''ஆ..ஆ..ஆ..ஆ..ஆ'' ன்னு கத்தினான். தூரத்துல இதே மாதிரி இவன் கத்தின மாதிரியே '' ஆ ஆ ஆ ஆ ஆ'' சத்தம் திரும்ப கேட்டுது..


பையன் சத்தம் வரும் திசையை பார்த்து,'நீ யார்'' என்று சத்தமாக கேட்டான். திரும்பவும் அந்தப் பக்கத்தில் இருந்து' நீ யார்''னு கேட்டுது.


பையன், '' நான் உன்னை விரும்புகிறேன்'' என்று சொன்னான். அந்தப்பக்கமும் அதே வார்த்தை திரும்ப வந்தது..


பையன் '' நீ ஒரு கோழை" என்று சொன்னான்.அதே வார்த்தை திருப்பி கேட்டுது.. பைனுக்கு ஒரே ஆச்சிரியம். அவனின்       அப்பாவிடம்  கேட்டான்...


'' அது யாருப்பா அவன்.., நான் சொல்வதை எல்லாம் திரும்ப சொல்றானே'' ன்னு கேட்டான். 


அவனின் தந்தை சொன்னார். அது யாரும் இல்லை. அது உன் பேச்சின் எதிரொலி என்று சொல்லி விட்டு இதைப் போலத்தான் நம் வாழ்க்கை என்று சொன்னார்..


அப்பா சொன்னார்,' 'நீ என்ன எல்லாம் கொடுக்கிறாயோ அதுதான் உனக்கு திரும்ப கிடைக்கும்.


உன் பழக்க வழக்கம் எப்படி இருக்கின்றதோ, அது மாதிரிதான்  உன்னிடத்தில் பழகின்றவர்களும் இருப்பார்கள்..


உன் கோழைத்தனம் திரும்பவும் கோழைத்தனமான வாழ்க்கையைதான் உனக்கு கொடுக்கும்.


நீ உன்னை சுற்றி இருக்கிறதை ரசிச்தாய் என்றால் வாழ்க்கையும் உன்னை ரொம்ப ரசிக்கும்படியாக வைத்து இருக்கும்'' னு சொன்னார்.,


நம் மனதில் தோன்றும் எந்த எண்ணமும் வீணாவது இல்லை என்பதை நினைவில் கொள்வோம்.


மகிழ்ச்சியான, உயர்வான வாழ்க்கைக்கு அடிப்படை யான நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்வோம்.


நல்லதையே நினைப்போம். நல்லதையே செய்வோம்..


                        

இலங்கேஸ்வரான் உபதேசம்

                             


       இலங்கேஸ்வரான் உபதேசம்

 ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த ராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது. 


அப்போது ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார். 


லட்சுமணன் பவ்யமாக ராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்துவிடக்கூடாது. நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம் அதை இந்த உலகம் அறிந்து பயன் பெறும் எனவே எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான். 


லட்சுமணனை சிரித்துக் கொண்டே வரவேற்ற ராவணன், ராமர் தன்னிடத்தில் வைத்திருக்கும் மதிப்பு அறிந்து மகிழ்வுடன் தன் அறிவுரைகளைச் சொன்னான். 


லட்சுமணா ஒரு காலத்தில் சர்வ வல்லமை படைத்தவனாக நான் இருந்தேன். நவக்கிரகங்களும் எமனும் இந்திரனும் கூட எனக்குக் கீழ்ப்படிந்தனர். அப்போது நான் எண்ணியது என்ன தெரியுமா? 


நாட்டில் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும். நரகம் யாருக்கும் இல்லையென உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஒரு பறக்கும் ஏணி அனைவரையும் ஏற்றிச் செல்ல எமனைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும் என்பதே. 


ஆனால் இந்த நல்ல எண்ணத்தைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போட்டேன். அதன் விளைவாகவே இன்று நான் அவதிப்பட்டேன். 


சூர்ப்பனகை வந்து சீதாதேவி அழகின் சிகரம். அவள் உனக்கு ஏற்றவள் என்று கூறியதும் உடனே அந்தச் செயலை தள்ளிப் போடாமல் புறப்பட்டேன். விளைவு அனைவருக்கும் நாசம். 


அதனால் நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது.


1. நல்ல செயலை உடனடியாக செய்து முடி அது பலன் தரும்.


2. தீய செயலைத் தள்ளிப் போடு தள்ளிப்போடுவதால் அந்த தீய செயல் நடைபெறாமல் இருக்க வாய்ப்புண்டு.


3. உன் சாரதியிடமோ வாயிற்காப்போனிடமோ சகோதரனிடமோ பகை கொள்ளாதே உடனிருந்தே கொல்வார்கள்.


4. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே.


5. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.


6. நான் அனுமனை சிறியவன் என்று எடை போட்டது போல் எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டுவிடாதே.


7. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே. அவை நம் வழிகாட்டிகள்.


8. பொறுமையைவிட மேலான தவமுமில்லை.


9. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.


10. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.


11. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை என்று சொல்லி முடித்தான் ராவணன்.


லட்சுமணன் ராவணனை வணங்கி உபதேசங்களை பெற்றுக் கொண்டான்.

Saturday, 26 March 2022

பணத்தைப் பற்றி சில வரிகள்




 

     பணத்தைப் பற்றி சில வரிகள்

குழந்தை இல்லாதவர்கள் மற்றவர்கள் குழந்தை மேல்

அதிகமாக பாசம் வைக்க மாட்டார்கள் பணம் ஒன்றே குறிக்கோள் ஆக இருப்பார்கள்


பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும் என்று சொல்லுவார்கள் அந்த அளவிற்கு பணத்தின் ஆதிக்கம் மனிதர்களிடையே உண்டு.

இந்த உலகில் மனிதர்களை ஆட்டிப் படைக்கும் சக்தி பணத்திற்கு அதிகமாக இருக்கின்றது. இந்த பணத்தாசை அதிகமானால் ஒருவன் நிம்மதியாக இருக்க முடியாது.

பணமும் மகிழ்ச்சியும் பரம
விரோதிகள். ஒன்றிருக்கும்
இடத்தில் மற்றோன்று
இருப்பதில்லை.

பணத்தை வைத்திருப்பவனுக்கு
பயம். அது இல்லாதவனுக்கு
கவலை.

பணத்தை அடிக்கடி குறை
கூறுவார்கள். ஆனால்
அதை யாரும்
வெறுப்பதில்லை.

பணத்தின் உண்மையான
மதிப்பு பிறரிடம் கடன்
கேட்கும் போது தான்
தெரியும்.

பணத்தை சம்பாதிக்க
வேண்டும் என்பதற்காக
ஒழுக்கத்தை விற்று
விடாதீர்கள்.

சிலர் பணத்தை வெறுப்பதாக
கூறுவார்கள். ஆனால்
அவர்கள் வெறுப்பது
பிறரிடமுள்ள
பணத்தை தான்.

பணத்திற்கு கடல் நீரின்
குணம் உண்டு. கடல்
நீரைக் குடிக்க குடிக்க
தாகம் அதிகமாகும்.
அது போன்று தான்
பணமும்.

பணம் ஒன்று தான்
உங்கள் வாழ்வின்
இலட்சியம் என்றால்
நிச்சயம் அது தவறான
வழியிலே தான்
தேடப்படும்.

நாம் பணக்காரர்களாக
இருக்க கடமைப்படவில்லை.
ஆனால் ஒழுக்கம்
உள்ளவர்களாக இருக்க
கடமைப்பட்டிருக்கிறோம்.

பணக்காரன் ஆக வேண்டுமா..?
அதற்குப் பணத்தைக் குவிக்க
வேண்டியது இல்லை.
தேவைகளைக்
குறைத்துக் கொள்.

பணம் இருந்தால் உன்னை
உனக்குத் தெரியாது.
பணம் இல்லாவிட்டால்
யாருக்கும் உன்னைத்
தெரியாது.

மனிதனுக்கு பெருமை
சேர்ப்பது பட்டமோ..?
பதவியோ..? பணமோ..?
அழகோ..? அல்ல.
அறிவு ஒன்றே
ஒருவருடைய உயர்வுக்கு
வழிவகுக்கும்.

பணம் இருந்தால் நீங்களா..?
என ஆச்சரியமாக கேட்பதும்.
அதுவே பணம் இல்லாமல்
இருந்தால் “ஓ நீயா”
என்று கேவலமாகவும்
பார்ப்பது தான்
இந்த உலகம்.

பணமா பாசமா என்று
கேட்டால் எல்லோரும்
பாசம் என்று தான்
சொல்லுவார்கள். ஆனால்
அந்த பாசத்தின் அளவை
நிர்ணயம் செய்வதே
இங்கே பணம் தான்.

இங்கு உலகம் உன்னை
தூக்கி வைத்து ஆடுவதையும்
தூக்கி எறிந்து வீசுவதையும்
நிர்ணயிப்பது உன் குணமல்ல
நீ வைத்திருக்கும் பணம்.

பணம் கொடுத்தால் பல
உறவுகள் உன்னை
தலையில் தூக்கி
வைத்துப் போற்றும்..
கொடுத்த பணத்தை
திரும்ப கேட்டுப் பார்
மண்ணை வாரி
தூற்றும்.

உயிருள்ள உறவுகளில்
யார் யார் முக்கியம்
என்று உயிரற்ற
பணமே முடிவு செய்கிறது.

ஒருவரின் இறுதி
ஊர்வலங்கள்
எடுத்துரைக்கும்..
சம்பாதிக்க வேண்டியது
பணங்களை அல்ல
நல்ல மனங்களை
என்று.

கையில் இருக்கும்
போதும் காலி செய்யும்
போதும் தெரிவதில்லை
தேவைக்காக பிறரிடம்
கை கட்டி கை நீட்டி
வாங்கும் போது தான்
தெரியும் பணத்தின்
அருமை என்னெவென்று.

காலம் நமக்கு
கற்றுக் கொடுத்த பாடம்
“பணம் இருந்தால் நாலு பேர்
நம்மை திரும்பி பார்ப்பார்கள்
பணம் இல்லையோ நாம்
நாலு பேரை திரும்பி
பார்க்க வேண்டும்.”


கண்ணாடியை வீட்டில் இப்படி வைத்தால்

                              




          கண்ணாடியை வீட்டில் இப்படி வைத்தால்

காசு பணம் இல்லாத வீடுகள் கூட இருக்கும். ஆனால் கண்ணாடி இல்லாத வீடு கட்டாயமாக இருக்காது. நம்மை அப்படியே, நமக்கு பிரதிபலித்துக் காட்டும் இந்த கண்ணாடியை வீட்டில் எந்தெந்த இடத்தில் எல்லாம் எப்படி வைக்க வேண்டும் எப்படி வைக்கவே கூடாது என்பதை பற்றியும், இந்த கண்ணாடியின் மூலம் நம் வீட்டில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்னென்ன என்பதை பற்றியும் தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு. சாஸ்திர சம்பிரதாயங்களின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்கள் உங்களுடைய வீட்டில் இந்த தவறுகளை செய்து வந்தால் அதை கொஞ்சம் மாற்றி பாருங்கள். நிச்சயமாக வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் வரும்.

முதலில் படுக்கை அறையில் கட்டிலுக்கு நேராக கண்ணாடி கட்டாயம் இருக்கக் கூடாது. இது நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் கண்ணாடியை இப்படி வைப்பதன் மூலம் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னென்ன தெரியுமா. காலையில் எழுந்து நீங்கள் கண் விழிக்கும்போது உங்கள் படுக்கை அறையில் இருக்கும் கண்ணாடியில் கண் விழித்தால் உங்களால் வாழ்க்கையில் ஒருபோதும் ஜெயிக்கவே முடியாது. வாழ்க்கையில் தோல்விகள் பின் தொடர்வதற்கு இதுவும் ஒரு காரணம். உங்கள் வீட்டு படுக்கை அறையில் கண்ணாடி இருந்தால் இரவு அந்த கண்ணாடிக்கு ஒரு திரை போட்டு விடுங்கள். காலை எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு அதன்பின்பு அந்த திரையை விலக்கிக் கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக நிறைய பேர் வீட்டு நிலை வாசலில் கண்ணாடியை வைத்திருப்பார்கள். இது உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய விஷயமாக இருந்தால் பிரச்சனையில்லை. ஆனால் சில வீடுகளில் நிலை வாசலில் கண்ணாடியை வைப்பதன் மூலம் பிரச்சினைகள் அதிகமாக வருகின்றது. உங்கள் வீட்டில் அதிகப்படியான பணப்பிரச்சனை சண்டை சச்சரவுகள் இருந்தால் நிலை வாசலின் வெளியில் இருக்கும் கண்ணாடியை எடுத்து நிலை வாசலுக்கு உள்ளே, நேராக வீட்டிற்குள் இருக்கும் சுவற்றில் மாட்டி வையுங்கள். வீட்டிற்குள் நுழைபவர்கள், வீட்டிற்குள் நுழைந்தவுடன் பார்க்கும்படி இந்த கண்ணாடி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

நிலைவாசலின் வெளிப்பக்கத்தில் கண்ணாடியை வைக்கக்கூடாதென்று ஏன் சொல்லுகிறார்கள். நிலைவாசல் என்பது மகாலட்சுமியும் அஷ்டலட்சுமிகளும் வாழும் இடம். அந்த இடத்தில் கண்ணாடியை வைத்து விட்டால், உள்ளே நுழைபவர்களுடைய எண்ணங்களை அந்தக் கண்ணாடி தன்னகத்தே உள்வாங்கிக் கொள்ளும். அப்போது அந்த இடத்தில் இறை சக்தி குறைந்து விடும் என்பதற்காகவே நிலை வாசலில் கண்ணாடியை வைக்க வேண்டாம் என்று சொல்கிறார்கள்.

அடுத்தபடியாக நிறைய பேர் வீடுகளில் குளியல் அறையில் கண்ணாடி வைக்கும் பழக்கம் உள்ளது. குளியல் அறையில் கண்ணாடி வைக்கக்கூடாது. அப்படியே கண்ணாடி குளியலறையில் தேவை என்றால், நீங்கள் குளிக்கும் போது உங்களுடைய பிம்பம் கண்ணாடியில் தெரியும் படி இருக்கக் கூடாது. முகம் கழுவும் இடம் கைகழுவும் இடம், அதாவது வாஷ்பேஷன் மேலே கண்ணாடியை வைக்கலாம். நாம் குளிப்பது அப்படியே பிரதிபலிக்கும் படி எதிர்ப்பக்கத்தில் கட்டாயமாக கண்ணாடி இருக்கக்கூடாது.

குளியல் அறையில் கண்ணாடியானது வடக்கு திசையில் உள்ள சுவற்றில் அல்லது கிழக்கு திசையில் உள்ள சுவற்றில் தான் இருக்க வேண்டும். மாறாக குளியலறையில் தெற்கு திசை சுவற்றில், மேற்கு திசையில் உள்ள சுவற்றில் கண்ணாடியை மாட்டி வைத்திருந்தால் வீட்டில் உள்ளவர்கள் நோய்வாய் படுவார்கள். வீட்டில் இருப்பவர்களுக்கு மன பயம் இருக்கும். சில பேருக்கு மலச்சிக்கல் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளது. இதையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

இதேபோல் வீட்டிற்குள் அதாவது ஹாலில் அல்லது வேறு ஏதாவது இடத்திலோ கண்ணாடியை வைத்து இருந்தால் அதை வடக்கு திசையிலும் கிழக்குத் திசையிலும் வைக்கக்கூடாது. தெற்கு திசையில் இருக்கும் சுவற்றிலும், மேற்கு திசையில் இருக்கும் சுவற்றிலும் தான் வீட்டிற்குள் கண்ணாடி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

உங்களுடைய வீட்டில் கஷ்டம் இருந்தால் மேல் சொன்ன படி கண்ணாடியை ஏதாவது ஒரு இடத்தில் நீங்கள் தவறாக வைத்திருந்தால் கண்ணாடி இருக்கும் இடத்தை சரியான இடத்திற்கு மாற்றி பாருங்கள். நிச்சயமாக வாழ்க்கையில் ஏதோ ஒரு நல்ல மாற்றம் வரக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்

உலகில் மிக பெரியவை [பொது அறிவு ]

 பொது அறிவு

  1. உலகில் மிகப்பெரிய விலங்கு எது? திமிங்கிலம்
  2. உலகில் உயரமான விலங்கு எது? ஒட்டகச்சிவிங்கி
  3. உலகில் மிக உயரமான மலை எது? இமயமலை
  4. உலகிலேயே மிக நீளமான நதி எது? அமேசன்(6.750 கிலோ மீட்டர்)
  5. உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி எது? நைல் நதி(6.690 கிலோ மீட்டர்)
  6. உலகியே மிக ஆழமான ஆழி எது? மரியானாஆழி(11.522 மீட்டர்)
  7. உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? லண்டன்
  8. உலகிலேயே பெரிய பாலைவனம் யாது? சஹாராப்பாலைவனம்
  9. உலகிலேயே மிகச் சிறிய அரசு எது? வத்திக்கான்
  10. உலகிலேயே பெரிய சமுத்திரம் எது? பசுபிக் சமுத்திரம்
  11. உலகிலேயே பெரிய தீவு எது? கிறீன்லாந்து
  12. உலகிலேயே பெரிய கண்டம் எது? ஆசியாக்கண்டம்
  13. உலகிலேயே சிறிய கண்டம் எது? ஆஸ்ரேலியா
  14. உலகிலேயே பெரிய நாடு எது? கனடா(ரஷ்யா சிதறிய பிறகு)
  15. உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது? இந்தோனேஷியா
  16. உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது? சீரப்புஞ்சி
  17. உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி யாது? சுப்பீரியர் ஏரி
  18. சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் யாது? 365 நாடகள்.6 மணி 9 நிமிடம். 9.54 செக்கன்
  19. உலகிலேயே மிகவுயர்ந்த சிகரம் யாது? எவரெஸ்ட்
  20. உலகிலேயே பெரிய எரிமலை யாது? லஸ்கார் (சிலி) 5.990 மீட்டர்
  21. உலகிலேயே மிக நீளமான மலை எது? அந்தீஸ்மலை
  22. உலகிலேயே மிகவும் பரந்த கடல் எது? தென்சீனக்கடல்
  23. உலகிலேயே பெரிய ஏரி எது? கஸ்பியன் (ரஷ்யா-ஈரான்)
  24. உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது? ஏஞ்சல்ஸ்(வெனிசுவெலா) 979 மீட்டர்
  25. உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடு எது? சீனா
  26. உலகிலேயே குறைந்த மக்கள் தொகையுள்ள நாடு எது? வத்திக்கான்
  27. உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது? காரக்புர்
  28. உலகிலேயே மிக ஆழமான ஏரி எது? பைக்கால் ஏரி
  29. உலகிலேயே மிக நீளமான குகை எது? மாமத் குகை
  30. உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு எது? நேபாளம்
  31. உலகிலேயே மிகப்பெரிய பூ எது? ரவல்சியாஆர்ணல்டி
  32. உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம் எது? அலாஸ்கா
  33. உலகிலேயே மிகப் பழைமையான தேசப்படத்தை வரைந்தவர் யார்? தொலமி
  34. உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை எது? நேச்சர்
  35. ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு எது? பிலிப்பைன்ஸ்
  36. உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது? ஆஸ்ரேலியா
  37. உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி எது? டிடிக்காகா
  38. உலகில் மிக உயரமான அணை எது? போல்டர் அணை
  39. உலகிலேயே மிகப் பழைமையான கம்யுனிஸ நாடு எது? சீனா
  40. உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு எது? இந்தியா
  41. உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது? மாண்டரின் (சீனா)
  42. உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் எது? பைபிள்
  43. கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு எது? நெதர்லாந்து
  44. உலகில் ஆறுகளே இல்லாத நாடு எது? சவுதி அரேபியா
  45. உலகில் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு எது? இந்தோனோசியா
  46. உலகில் மிக உயரமான அணை யாது? போல்டர் அணை (manas hussain)

மூலிகை இலைகளும் அதன் மருத்துவக் குணங்களும்

 




துளசி: ஜீரண கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி முதலியவற்றிற்கு சிறந்தது. இரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கின்றது.

வில்வம்:

காய்ச்சல், அனீமியா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது. காலரா தடுப்பு மருந்தாக வில்வம் செயல்படுகிறது. சிவன் கோயில்களில் வில்வ இலை கிடைக்கும்.

அருகம்புல்:
எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் 9.00 மணிக்கு பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு. அருகம்புல் சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழம் சாப்பிட்டால் போதும். அடுத்து மதியச் சாப்பாடுதான். இந்த மாதிரி செய்தால் எல்லா நோய்களும் குணமடையும்.உடல் எடை குறைய, கொலாஸ்டிரல் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, இரத்தப்புற்று குணமடைய அருகம்புல் ஒரு உலகப் புகழ்வாய்ந்த டானிக். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்வதில் சிறந்தது அருகம் புல்தான். தோல் வியாதிகள் அனைத்தும் அருகம்புல்லில் நீங்கும். இரத்தத்தில் உள்ள விஷத்தன்மைகளை வெளியேற்றுவதில் திறமையானது. விநாயகர் கோயில்களில் அருகம்புல் கிடைக்கும்.

கல்யாண முருங்கை (முள் முருங்கை):
அதிகமான பித்தத்தை நீக்கும். முடி நரைக்காமலிருக்க உதவுகிறது. காய்ச்சலைக் குறைக்கும். நீர் பி¡¢யும், மலமிளக்கி, மாத விடாய்த் தொல்லையை நீக்கும் கிருமிகளை வெளியேற்றும். வீக்கங்களை குறைக்கும். நீ¡¢ழிவு, சீதபேதி, வாதம் குணமடையும், 17 வயது வரை வயதுக்கு வராத பெண்களுக்கு இதன் சாறு நல்ல பலன் தருகின்றது.

கொத்தமல்லி:
இதுவும் நல்ல டானிக் பசியைத் தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும். இரத்தத்தில் கலந்துள்ள சர்கரையை குறைக்கவும், இரத்த அழுத்தம், கல்லடைப்பு, வலிப்பு, ஆகியவை குணமாகும். மன வலிமை மிகும். மன அமைதி, தூக்கம் கொடுக்கும். வாய் நாற்றம், பல்வலி, ஈறு வீக்கம் குறையும்.

வல்லாரை:
நல்ல டானிக், எல்லா நோய்களையும் நீக்கும். மஞ்சள் காமாலை, அல்சர், தொழுநோய், யானைக்கால் வியாதி, பேதி, நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்தி முதலியவற்றிற்கு சிறந்தது. ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும்.

தூது வேளை:
நரம்புத்தளர்ச்சி மறையும், மார்புச்சளி அகற்றும், தோல் வியாதிக்கும் நல்லது. குழந்தைகளுடைய மூளை வளர்ச்சிக்கும், ஞாபகசக்தியை வளர்ப்பதற்கும் இது சிறந்த டானிக் ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும். காது மந்தம், நமைச்சல், உடல் இளைப்பு முதலியவற்றிற்கும் தூது வேளை நல்லது.


கறிவேப்பிலை:
நல்ல டானிக், பேதி, சீதபேதி, காய்ச்சல், எரிச்சல், ஈரல் கோளாறுகள் மறையும். பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். அதோடு கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது. குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.

புதினா:
நல்ல டானிக் சிறுநீர் பிரச்சினை, ஜீரணக் கோளாறு, உஷ்ண நோய்கள் மறையும். சிறந்த மலமிளக்கி. புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன

கற்பூர வல்லி (ஓமவல்லி):
மிகச் சிறந்த இருமல் மருந்து. 5 இலைகளை அப்படியே சாப்பிட்டால் உடனே மூக்கடைப்பு, தொண்டை வறட்சி, இருமல் மறையும். புகழ்பெற்ற இருமல் மருந்துகளைப் போல் விரைவாக செயல் புரியும். 

Thursday, 24 March 2022

விதி


 விதி 

.

இந்திரன் மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாக வளர்த்து வந்தாள்.

.

ஒருநாள் அந்த கிளி நோய் வாய்ப்பட்டு விட்டது.

.

அதை பரிசோதித்த மருத்துவர்

இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார்.

உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி,

இந்த கிளியை எப்படியாவது காப்பாற்றுங்கள்.

கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்றாள்.

இந்திரன்,

கவலைப்படாதே!! இந்திராணி...


நான் உடனே பிரம்மாவிடம்சென்று முறையிடுகிறேன்...


ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே?

அவரிடம்சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றியெழுதி விடுவோம் என்று சொல்லிவிட்டு

பிரம்மாவிடம் சென்று விஷயத்தை கூறினான்..


விஷயத்தைக்கேட்ட பிரம்மா ,

.

இந்திரா.... படைப்பது மட்டுமே என்வேலை.

.

உயிர்களை காப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவின் தொழில்.

.

நாம் அவரிடம்சென்று உதவிகேட்போம்...வா ...

நானும் உன்னுடன் வருகிறேன் என்று இந்திரனை அழைத்துக்கொண்டு மஹாவிஷ்ணுவிடம் சென்று விஷயத்தை தெரிவித்தார் பிரம்மா.

.

மஹாவிஷ்ணுவோ, உயிர்களை காப்பது நான்தான்.


ஆனால் உன் கிளி இறக்குந் தறுவாயிலி ருக்கிறது.

அழிக்கும்தொழிலை மேற்கொண்ட சிவன் தான் அதைக்காப்பாற்ற வேண்டும்.


வாருங்கள் நானும் உங்களுடன் வந்து சிவனிடம் பேசுகிறேன் என்று கிளம்பினார் விஷ்ணு.


விபரங்களைக்கேட்ட சிவன் , அழிக்கும் தொழில் என்னுடையதுதான்.


உயிர்களையெடுக்கும் பொறுப்பை நான்

எமதர்மராஜனிடம் ஒப்படைத்துள்ளேன்.


வாருங்கள் ....நாம் அனைவரும் சென்று எமதர்மனிடம் கூறி அந்த கிளியின் உயிரை எடுக்கவேண்டாம் என்று சொல்லிவிடுவோம் என்றுசொல்லி 

அவர்களை அழைத்துக்கொண்டு எமலோகம் செல்கிறார் சிவன்.


தன்னுடைய அவைக்கு சிவன் , மஹாவிஷ்ணு , பிரம்மா , இந்திரன் ஆகிய நால்வரும் வருவதைக்கண்ட எமதர்மன் உடனே எழுந்து ஓடிவந்து வரவேற்கிறார்.


விஷயம் முழுவதையும் கேட்ட அவர் ,

ஒவ்வொரு உயிரையும் எந்த நேரத்தில்? ,

எந்த சூழ்நிலையில்?, என்ன கார‌ணத்தால்? எடுக்கவேண்டும் என்ற காரணத்தை ஒரு ஓலையில் எழுதி ஒரு பெரிய அறையில் தொங்கவிட்டுவிடுவோம்.


அந்த ஓலை அறுந்துவிழுந்துவிட்டால், அவரின் ஆயுள் முடிந்துவிடும்.


வாருங்கள்... அந்த அறைக்குச்சென்று

கிளியின் ஆயுள் ஓலை எது? என்று பார்த்து , அதை மாற்றி எழுதிவிடுவோம் என்று அவர்களை அழைத்துச்சென்றார்.


இப்படியாக

இந்திரன்,பிரம்மா,விஷ்ணு,  சிவன் , எமதர்மன் ஆகிய ஐவரும் அந்த அறைக்குச்சென்றனர்.


அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து விழுகிறது.


உடனே அவர்கள் அவசரமாகச்சென்று அந்த ஓலையை எடுத்து பார்க்கின்றனர்.


அது அந்த கிளியின் ஆயுள் ஓலை.


அவசரமாக அதை படித்துப்பார்க்கின்றனர்....


அதில்,,,


இந்திரன் , பிரம்மா , விஷ்ணு , சிவன் , எம‌தர்மன் ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக இந்த அறைக்குள் நுழைகிறார்களோ

அப்போது இந்த கிளி இறந்துவிடும்.. என்று எழுதப்பட்டிருந்தது.

.

இதுதான் விதி!!


விதியை மாற்றுவது என்பது முடியாது என்பதே கதை?!

யாருக்கு விதி?!!

எங்கே? எப்படி முடியும்!!!

என்பது எழுதினவனுக்கே 

தெரியாது என்பது தான் உண்மை?! 


வாழும் காலம் நிரந்தரம் இல்லை? 

வாழும் காலத்திலாவது அனைவரிடமும் அன்பாக சிநேகமாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்!


உயிருடன் இருக்கும் போதே அனைவருடனும், அனைத்து ஜீவராசி களுடனும்  அன்பு காட்டி ஆனந்தமாக வாழ்வோம்!

இறையன்புடன் .....

நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து).......

 நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து)....... . இதய பிரச்சினைகளுக்கு, (ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன்...