Friday 5 May 2023

இராமேஸ்வரம் 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!


 இராமேஸ்வரம்

திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின்
மகிமைகளும்!
இராமேஸ்வரம் தல வரலாறு ஶ்ரீராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றார்.
ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ஶ்ரீராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.
எனவே...
ஶ்ரீராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு “ராம ஈஸ்வரம்” என்று பெயர் ஆனது.
மக்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.
22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்.
1. மகாலெட்சுமிதீர்த்தம்
இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது.
இதில் ஸ்ஞானம் செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.
2. சாவித்திரி தீர்த்தம்,
3. காயத்ரி தீர்த்தம்,
4. சரஸ்வதி தீர்த்தம்.
இம்மூன்று தீர்த்தங்களும் அனுமார் கோவிலுக்கு மேல்புறம் உள்ளது.
இம்மூன்று தீர்த்ங்களில் ஸ்னானம் செய்வதால் மத சடங்குகளை விட்டவர், சந்ததியில்லாதவர் இஷ்ட சித்தி அடையலாம்.
5. சேது மாதவ தீர்த்தம்,
இது மூன்றாம் பிரகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம்.
இதில் ஶ்ரீராமபிரானால் சகல லெட்சுமி விலாசமும், சித்த சக்தியும் பெறலாம்.
6. நள தீர்த்தம்,
மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு தென்புறம் உள்ளது.
இதில் நீராடுவதால் சுரிய தேஜசை அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.
7. நீல தீர்த்தம்,
மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு வடபுறம் உள்ளது.
இதில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.
8. கவாய தீர்த்தம்,
இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் உள்ளது.
இதில் நீராடுவதால் சக்குசாயம், கோபம் மனைவலினம், தேக ஆரோக்கியம் கிடைக்கும்.
9. கவாட்ச தீர்த்தம்,
இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் கவாய தீர்த்தத்திற்குஅருகில் உள்ளது.
இதில் நீராடுவதால் நரகத்திற்கு
செல்ல மாட்டார்கள்.
மன வலிமை, தேக ஆரோக்கியம்,
திட சரீரம் கிடைக்கும்.
10. கந்நமாதன தீர்த்தம்,
சேது மாதவர் சன்னதியின் முன்பகுதியில் கவாய், கவாட்ச தீர்த்தங்களுக்கு அருகில் உள்ளது.
இதில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தியும் பெற்று பிரம்ம ஹத்தியாதிபாப நிவர்த்தி பெறுவர்.
11. சங்கு தீர்த்தம்,
ஶ்ரீஇராமநாதசுவாமி கோவில்
பிரதான வாசல் உட்புறம் தெற்கு பக்கத்தில் இரண்டாம் பிரகாரத்தில் இதில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப் பெறும்.
12. சக்கர தீர்த்தம்.
ஶ்ரீஇராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் உள்ள இரண்டாம் பிரகாரத்தின் வடபுறம் உள்ள கருவூலத்தின் கீழ்புறம் உள்ளது.
இதில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி சௌக்கியம் அடைவர்.
13. பிரம்மாத்திர விமோசன தீர்த்தம்,
இது இரண்டாம் பிரகாரம் வடக்கு பக்கத்தில் பைரவர் சன்னதி அருகில் உள்ளது.
இதில் நீராடுவதால்
பிரம்மஹத்தயாதிதோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாவதடன்,
பில்லி சுனியமும் நீங்கும்.
14. சூர்ய தீர்த்தம்,
இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் அமைந்துள்ளது.
இத்திர்த்தத்தில் நீராடுவதால் திரிகாலஞானமும் உண்டாவதுடன் ரோகங்கள் நிவர்த்தியாகும்.
15. சந்திர தீர்த்தம்,
இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தின் மேற்கு பக்கம் உள்ளது.
இதில் நீராடுவதால்
ரோக நிவர்த்தி அகலும்.
16. கங்கா தீர்த்தம்,
17. யமுனா தீர்த்தம்,
18. காயத்ரிதீர்த்தம்,
இம்மூன்று தீர்தத்தங்களும் திருக்கோவில் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்தள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் உள்ள சூரியன், சந்திரன் தீர்த்தத்திற்குஎதிரில் அமைந்துள்ளது.
இவைகளில் நீராடுவதனால் பிணி,
மூப்பு, சாக்காடு ஆகியவைகளும் அஞ்ஞானமும் நீங்கி முக்தி அடையலாம்.
19. சாத்யாம்ருத தீர்த்தம்,
திருக்கோவில் அம்பாள் சன்னதியின் மூலஸ்தான நுழைவாயிலின் அருகே உள்ள அஷ்டலட்சுமி சன்னதியின் தெற்கு பக்கம் உள்ளது.
இதில் நிராடினால் தேவதாகோபம் பிராம்மணசாபம் நிவர்த்தியாவதுடன், சூரியமூர்த்தி, மோட்ச பிராப்தி ஆகியவை கிடைக்கும்.
20. சிவ தீர்த்தம்,
இந்த தீர்த்தம் சுவாமி சன்னதி நுழைவாயில் மற்றும் அம்மன் சன்னதி நுழைவாயில் ஆகியவற்றுக்கு இடையே நந்தி தேவருக்கு தென்புறம் அமைந்துள்ளது.
இதில் ஸ்ஞானம் நீராடினால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
21. சர்வ தீர்த்தம்,
இந்ததீர்த்தம் முதல் பிரகாரத்தில் இராமநாத சுவாமி சன்னதி
முன் உள்ளது.
இதில் நிராடினால் பிறவிக்குருடு, நோயம் நரை திரையும் நீங்கி வளமடையலாம்.
கோவிலுக்கு வெளியே பல தீர்த்தங்கள்.
இவை புயலாலும், ஆக்கிரமிப்பாலும் பாதிக்கப்பட்டதால் இவற்றில் நீராட இயலாது.
22. கோடி தீர்த்தம்.
இந்த தீர்த்தமானது ஶ்ரீ இராமர் லிங்கப் பிரதிஷஙடை செய்தபோது அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டது.
அதனால் ஶ்ரீராமனாவர் தன் அம்பின் நுனியை பூமியில் வைத்து அழுத்தினதால் அந்த இடத்தில் பூமியைப் பிளந்து கொண்டு நீர் வந்தது.
அதுவே கோடி தீர்த்தம் எனப்படுகிறது.
இந்நீரானது இராமநாதசுவாமி மற்றும் எல்லா சுவாமி அம்பாள் ஆகியவர்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படவதால் பக்தர்கள் இத்தீர்த்தத்தில் நேரடியாக தாங்களே தீர்தத்தை எடுத்து குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
இதற்கு கட்டணம் உண்டு.
பக்தர்கள் இத்திர்த்தத்தில் நீராட இரண்டாம் பிரகாரம் வடபகுதியில் உள்ள பைரவர் சன்னதி முன்புறம் உள்ள கோமுக் மூலம் தீர்த்தத்தை விடுவார்கள், அதன் மூலம் நீராடலாம்.
கோடி தீர்த்தத்தில் நிராடியபின் இவ்வூரில் இரவு தங்கலாகாது
என்பது சம்பிரதாயம்.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...