Friday 12 May 2023

*நடராஜர் தலங்களும் திரு நடனமும்*.


 *நடராஜர் தலங்களும் திரு நடனமும்*.

சிவலோகத்து *ஐந்து தொழில் புரியும் *பஞ்ச கிருத்திய நடராஜர்* அன்பர்களுக்காகப் பலவிதத் திருநடனக் காட்சி அருளிய திருத் தலங்கள் .
*1* . *_சிதம்பரம்_ – ஆனந்த நடராஜர், மாணிக்கக் கூத்தர்*
*2** .*_மதுரை_ ---- சுந்தரக் கூத்தர்*
*3* . *_திருநெல்_ _வேலி_ --- செல்வ நடராஜர்*
*4* . *_திருக்_ _குற்றாலம்_ – சித்திரக் கூத்தன்*
*5* *_திருவாலங்காடு_ --- ஊர்த்துவத் தாண்டவர்*
*6* *_திரு_* *_உத்தர கோச_* *_மங்கை_ ---- மரகத நடராஜர்*
*7* . *_தாருகாவனம்_ --- ஞானக் கூத்தர்*
*8* . *_திரு விடை வாய்_* ------ *சந்தியா தாண்டவர்*.
.
*9* . _*திருவாரூர்*_*--------ஆயிரம் புஜங்க லலித நடராஜர்*
*10* .*கொள்ளிக்காடு_ ----– திரு மேனியின் *மேல் பாதி பெண்ணாகும் இருபால் அர்த நாரி அம்மை யப்ப நடராஜர்.*
*11* . *_திருவாய்மூர்_ ---- அம்மை நடராஜர்*
*12* . *_திரு நல்லம்_* (கோனேரி ராஜ புரம்) --- *சுயம்பு நடராஜர்*
*13* . *செப்பறை*,
_*திருப் பனையூர்*_ ----- *அழகிய கூத்தர்*
*14* . _*கும்ப கோணம்* *நாகேஸ்வரன்* *கோயில்* , *நல்லூர் பெரிய ஆண்டவர்*_ *_கோயில்_* ---- *சதுரத் தாண்டவர்*.
*15 . _திருவெண் காடு_* ----- *அற்புதக் கூத்தர்.*
*16 . _திரு இடைச் சுரம்_ ------- அதிசயக் கூத்தர்*. .
*17* . _*பேரூர் பட்டீஸ்வரம்*_ . *ஆனந்த நடராஜர்*
*18 _திருவாதவூர்_*, *_இராமேஸ்வரம்_ , திருவதிகை, திரு வடுகூர் ------ அருள் கூத்தர்.* .
*19 _திரு நீடூர்_ ---- கான நிருத்தர்*
*20 . _திருத்_ _தலையாலங்காடு_ ----- வரத நடராஜர் மகுடக் கூத்தர்*.
*21.* _*தீர்த்தன கிரி*_ ( திருத்தினை நகர் ) ------- *இசைக் கூத்தர்*
*22* . *திருப் பனையூர்* ------ *ஒரு காதில் தோடு அணியும் அர்த நாரி அம்மையப்ப நடராஜர்.* .
இவ்வாறு இன்னும் பல தலங்கள்.     

★ ஒவ்வொரு யுகம் முடிந்ததும் உலகம் அழிந்து போகும். அப்போது சிவன், எல்லா உயிர்களையும் தன்னுள் அடக்கிக் கொள்வார். அப்போது, ஒவ்வொரு உயிரின் தலையிலும் அது செய்த பாவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதைப் பார்ப்பார்.

★ அடேங்கப்பா! இந்த உயிர்கள் எத்தனை பெரிய பாவ மூட்டைகளை கரைக்க வேண்டியிருக்கிறது! அதற்கு ஏகப்பட்ட பிறவிகள் எடுக்க வேண்டுமே என்று வருத்தப்படுவார். அப்போது, அவர் உள்ளத்தில் கருணை பொங்கும், மீண்டும் உயிர்களைப் படைக்க முடிவெடுப்பார்.

★ மகிழ்ச்சியில் அப்போது நடனம் புரிவார். அதையே 'ஆனந்த தாண்டவம்" என்பர். சிவன் நடனமாடும் போது 'நடராஜர்" என்ற பட்டப்பெயர் பெறுவார்.

நடராஜருக்கு களி படைப்பது ஏன்?🌹🌿

★ சிதம்பரத்தில் வாழ்ந்த சேந்தனார் என்னும் அடியவர் தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவிடுவது வழக்கம். ஒருநாள் மழை பெய்த சமயத்தில், அடியவர் ஒருவர் உணவுக்காக வந்தார். சேந்தனாரின் மனைவி களி தயாரிக்க அரிசி, உளுந்துமாவு எடுத்தார்.

★ அடுப்பு பற்ற வைக்க முடியாமல், விறகெல்லாம் மழையில் நனைந்திருந்தது. இருந்தாலும், ஈரவிறகை வைத்தே ஒருவழியாக சமைத்து அடியவருக்கு களி படைத்தார். அவரும் அதை சாப்பிட்டு மகிழ்ந்தார். அன்றைய நாள் திருவாதிரை நாளாக இருந்தது.

★ சேந்தனார் மறுநாள் சிதம்பரம் நடராஜரை தரிசிக்கச் சென்றார். அங்கு கோவிலில் சுவாமியின் வாயில் களி ஒட்டியிருந்ததைக் கண்டார். மெய் சிலிர்த்துப் போனார். அடியவராக வந்து தங்களை ஆட்கொண்டவர் நடராஜரே என்பதை உணர்ந்தார். அன்று முதல் 'திருவாதிரை" அன்று களி படைக்கும் வழக்கம் வந்தது.                          

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...