Saturday 16 April 2022

மகாசிவராத்திரி சிறப்புப் பதிவு

                                               மகாசிவராத்திரி சிறப்புப் பதிவு

✡️மகா சிவராத்திரி நாளில் அன்னதானம் சாப்பிடக்கூடாது என்று கூறுவதேன்?


🌺🌿மகா சிவராத்திரி நாளன்று, ஒரு பக்கம் கோவிலுக்குள்ளே சிவபெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போதே, மறுபக்கம் கோவிலுக்கு வெளியேயும், கோவிலின் மண்டபத்திற்குள்ளும், அன்னதானப் பிரியர்கள் பக்தர்களுக்கு அன்னதானத்தை பிரசாதமாக கொடுத்துக் கொண்டிருப்பார்கள். இவர்கள் இப்படி அன்னதானம் கொடுப்பதால், நாள் முழுக்க விரதமிருந்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் சிவராத்திரி விரதத்தின் நோக்கமே கெட்டுவிடும் என்பதை முதலில் உணர்ந்துகொள்வது அவசியமாகும்.


🌺🌿உண்மையில் சிவராத்திரி விரதம், நமக்கு முக்கியமான இரண்டு விஷயங்களை எடுத்துக் கூறுகின்றன. நம்முடைய அன்றாட தேவையாக நினைப்பது உணவு மற்றும் தூக்கம் என இரண்டையும் தான். இவை இரண்டுக்காகவும் தான், அல்லும் பகலும் உழைத்து சம்பாதிக்கிறோம். ஆனால், அந்த சிவராத்திரி தினத்தில் மட்டுமாவது, உணவு, தூக்கம் இரண்டையும் மறந்து, எம்பெருமான் இறையனாருக்காக நாள் முழுக்க கண் விழித்து விரதம் இருப்பது தான் இந்த நாளின் உண்மையான நோக்கமாகும்.


🌺🌿மகா சிவராத்திரி விரதம் தொடங்கிய நாள் முதல் காலையிலிருந்து இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவபெருமானை நினைத்து, அவரின் திருநாமங்களையும், அவரது பஞ்சாட்ஷர மந்திரங்களையும் உச்சரித்துக்கொண்டும், அருகிலுள்ள சிவாலயத்திற்கு சென்று, அங்கு நான்கு ஜாம பூஜைகளிலும் கலந்து கொண்டு, சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை கண்குளிர தரிசித்து வணங்க வேண்டும்.


🌺🌿மகா சிவாராத்திரிக்கு மறுநாள் அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளித்து முடித்து, கோவிலில் சிவபெருமானுக்கு நடைபெறும் தீபாராதனையை கண்டு தரிசித்து முடித்து, அதன் பிறகே விரதத்தை முடிக்க வேண்டும். அப்போது தான் சிவராத்திரி விரதம் இருப்பதன் முழு பலனும் நமக்கு கிடைக்கும். இதைத்தான் நம்முடைய முன்னோர்களும் செய்து வந்தனர்.


🌺🌿சிவராத்திரி நாளன்று அனைத்து சிவன் கோவில்களிலும், அன்னதானம் கொடுக்கிறேன் என்று அநேகம் பேர், கேசரி, சாம்பார் சாதம், காய்கறி சாதம், தயிர் சாதம் என வரிசை கட்டி நின்று கொடை வள்ளலாக மாறி வாரி வழங்கி வருகின்றனர். அன்னதானம் தான் இருப்பதிலேயே மிக உயரிய தானம் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அதை எதற்கு எப்போது கொடுப்பது என்ற ஒரு நியதி உண்டு. அப்படி செய்தால் தான், அன்னதானம் கொடுப்பவருக்கும், அதைப் பெறுபவருக்கும் உரிய பலனைக் கொடுக்கும்.


🌺🌿நம்முடைய ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துவது உணவும் உறக்கமும் தான். இந்த இரண்டையும் கட்டுப்படுத்தினாலே, ஐம்புலன்களும் தானாகவே கட்டுக்குள் வந்து விடும். அப்படி கட்டுப்படும் போது, நம் மனதிற்குள் இறையுணர்வு தானாகவே வந்து விடும். அப்போது நாம் நினைத்த காரியம் இனிதே நிறைவேறும். இதைத் தான் சிவராத்திரி விரதம் நமக்கு எடுத்துரைக்கின்றது.


🌺🌿நம்மைப் படைத்த பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்களும் முனிவர்களும், அட அன்னை பராசக்தியே உண்ணாமல் சிவராத்திரி விரதமிருந்து இறைவனை வழிபடும் போது, நாம் ஒரு நாள் உணவை தியாகம் செய்வதால் ஒன்றும் கெட்டுவிடாது. அதோடு, சிவபெருமான் சதாசர்வ காலமும் தியான நிலையிலேயே அமர்ந்திருப்பவர். ஆரவாரத்தை அறவே வெறுப்பவர். அவருக்கு பிடித்தது ஏகாந்தமான அமைதி தான்.


🌺🌿அதனால் தான் கோவிலுக்குள் நுழைந்து இறைவனை தரிசிக்க செல்லும் போது, அமைதியாக வந்து தரிசித்து அமைதியாக வெளியேற வேண்டும் என்று முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். எனவே, இனியாவது சிவராத்திரி தினத்தில் அன்னதானம் கொடுப்பதை தவிர்த்து விரதமிருப்பவர்களுக்கு உதவ வேண்டியது அனைவரின் கடமையாகும்.

ஆன்மீக சாதகர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்!!!

ஆன்மீகமும் ஆலயங்களும் நமது சனதான தர்மத்தில் பி்ண்ணிபிணைந்தவை.அத்தகைய ஆலயங்கள் மனிதர்களின் அறியாமையாலும் அகங்காராத்தாலும் பாழ்பட்டு பொலிவிழந்துள்ளன.ஆன்மீக அன்பர்கள் இந்த நிலைமாற என்ன செய்யவேண்டும்?ஆன்மீக அன்பர்களே போலீ ஆன்மீகவாதிகள் மற்றும் மதவாதிகளுக்கு லட்சங்கள் கொடுக்கும் நீங்கள் தங்கள் பகுதியில் உள்ள போதிய பராமரிப்பு இன்றி தீபம் கூட ஏற்ற முடியாத நிலையை உணர்ந்த்து உண்டா? ஆன்மீக,இறை உணர்வளார்களே நீங்கள் இலட்சங்களில் உதவவேண்டாம்,ஆனால் சில பத்துகளில் தீப எண்ணெய் வாங்கி ஆன்மீக ஓளி பரவ உதவ்வேண்டும்.தங்கள் பகுதிகளில் உள்ள ஆலயங்களில் விளக்கெறிய உதவுங்கள். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பல சித்தர்கள் மற்றும் பராமரிப்பு இல்லாத ஆலயங்களுக்கு தீபதொண்டர்கள் தன்னார்வ குழு மூலம் கோயில்களுக்கு தீப என்னெய் வழங்கிவருகிறோம். தங்கள் பகுதிகளில் இதுபோல் குழுக்கள் அமைத்தும் தீப எண்ணெய் வழங்குங்கள்


No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...