Friday 4 February 2022

சகல கஷ்ட நிவர்த்திக்கு சல்லிய தோஷம் நிரந்தர தீர்வு


 

          சல்லிய தோஷம்  நிரந்தர தீர்வு 


பொதுவாகவே ஒருவர்,  வீடு வாங்குவதாக இருந்தாலோ அல்லது நிலம் வாங்குவதாக இருந்தாலோ அந்த சொத்தில் ஏதாவது வாஸ்து பிரச்சனை இருக்கிறதா என்று பார்த்து தான் வாங்குவார்கள். இருந்தும், கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு பிரச்சினையில், விதியின் வசத்தால் மாட்டிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும்

. இப்படி கண்ணுக்குத் தெரியாத ஒரு வாஸ்து பிரச்சனையை பற்றித்தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாஸ்து நிபுணர்களுக்கு இந்த தோஷம் கட்டாயமாக தெரியும். சல்லிய தோஷம்என்று சொல்லப்படும் ஒரு வாஸ்து தோஷத்தினால் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.


 பிரசன்னம் பார்ப்பதன் மூலம் இந்த சல்லிய தோஷத்தை கண்டறிவார்கள். ஒரு நிலத்தை புதிதாக வாங்கிய உடன் சல்லிய தோஷத்தை நிவர்த்தி செய்ய வேண்டியது மிகவும் அவசியம். சில பேர் இப்படி ஒரு தோஷம் இருப்பதே தெரியாமல் அந்த இடத்தில் வீட்டை கட்டி விட்டால், அதன் மூலம் வீட்டின் நிம்மதி சந்தோஷம் நிலையாக இருக்காது. பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். இப்படி இருக்க, இந்த தோஷத்தை எப்படி நிவர்த்தி செய்வது என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சல்லியம் என்ற சொல்லிற்கு வேண்டாத, துன்பம் தருகின்ற என்பது பொருள். சல்லிய தோஷம் என்பது குடியிருக்கும் வீடு, தோட்டம், பண்ணை நிலம் , ஆலைகளின் பூமியில் பூமியில் உள்ள குற்றம் மற்றும் குறைகளாகும். ஒருவர் வாங்கும் வீடோ, நிலமோ பல வருடங்களுக்கு முன்பாக வேறு மனிதர்களாலோ, விலங்குகளாலோ பயன்படுத்தப்பட்டு இருந்இருந்திருக்கலாம். அந்த இடத்தில் இறந்த மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடல்கள், நகம், முடி, எலும்பு புதைத்திருக்கலாம். இது போன்று நிலத்திற்கு அடியில் உருவாகி அந்த இடத்தின் அதிர்வலைகள் கட்டுப்படுத்தும் தோஷம்தான் சல்லிய தோஷமாகும்.பல வருடங்களுக்கு முன்பாக மனிதர்கள் நகருக்குள் வீடு கட்டி வசித்தனர். விலங்குகள் காடுகளில் வாழ்ந்தன.

 தற்காலத்தில் மக்கள் தொகை பெருக்கத்தால் காடுகள், குளங்கள், குட்டைகள் என கிடைத்த இடத்தை வாங்கி வீடு கட்டுகின்றனர். அந்த இடங்களில் குப்பை மண், மக்கியத் துர்நாற்றம் வீசுகின்ற மண், இறந்த உயிர்கள், , எலும்புகள் என அனைத்தும் இருக்கத்தான் செய்யும். இது தெரியாமல் இருக்க மேற்புரத்தில் சுத்தமான மண்ணை கொட்டி விற்பவர்களிடம் ஏமாந்து மனை வாங்குபவர்அதிகம். இதற்கும் ஒரு படி மேலே போய் சிலர் மலிவு விலை என பயன்படுத்தாத சுடுகாடு அல்லது சுடுகாடு இருந்த இடத்திற்கு அருகில் பிளாட் போடும் மனையை அறியாமையால்வாங்குகிறார்கள். அது போன்ற இடங்களில் சடலங்களின் எலும்புகள் புதையுண்டு கிடக்கும்.

மேலும் பிணங்களை எரித்த சாம்பலும் பரவிக் கிடக்கும். அத்துடன் பலர் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அழுது புலம்பிய அழுகுரலின் அவல ஒலிகளின் அதிர்வலைகள் இருக்கும். இதை நம்பாதவர்கள் கூட காலப்போக்கில் பாதகத்தை அனுபவிக்கும் போது சல்லிய தோஷத்தை நம்புகின்றனர்.வாஸ்து சாஸ்திரமானது நுல்களில் 16 வகையானப் பொருட்களைச் சல்லியம் என்று கூறுகின்றன. அவை எலும்பு, தலையின் மண்டை ஓடு, செங்கல், மண் ஓடு, அடுப்பு, சிலை, சாம்பல், கரி, பணம், தானியம், பொன், கல், தேரை, விலங்கின் கொம்பு, எலும்புகள், ஜாடி ஆகும்.

வீடுகள் எல்லாம் வாஸ்துப்படி கட்டியிருக்கலாம் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும் எந்த பூஜைகள் செய்து இருந்தாலும்முன்னேற்றம் இல்லாமல் இருக்கும்

இதற்கு எளிய பரிகாரம் ஏதாவது ஒரு நாளில் ஞாயிற்றுக்கிழமைகாலையில் சனி ஓரையில் 10: மணியிலிருந்து 11 மணிக்குள் வடகிழக்கு மூலையில் ஒரு அடி அகலம்  1.5 அடி ஆழம் குழி தோண்டவும் அதில் உள்ள மண்ணை அருகில் உள்ள ஆற்றில் அல்லது கடலில் அல்லது வாய்க்காலில் கரைத்து விட்டு அதில் உள்ள தண்ணீர் ஓடுகின்ற இடத்தில் மணல் எடுத்துக் கொண்டு வரவும் இரவு 10 மணிக்கு மேல்

பரிகாரம் என்னவென்றால் நாட்டு சுண்ணாம்பு சீனி சக்கரை சுத்தமான மஞ்சத்தூள் இந்த மூன்றையும் ஒரு பாத்திரத்தில் கலக்கவும் தோண்டிய குழியில்ஊற்றவும் பிறகு பாதி மணலைஅதற்குள்போடவும்

பிறகு பஞ்சகவியம் என்கின்ற பஞ்சகவ்வியம் என்பது  பசுமாட்டில் இருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை மட்டும் பயன்படுத்தி 1]பசுமாட்டு கோமியம்கொஞ்சம்  *2] பசுமாட்டு சாணம்கொஞ்சம்*    3] பசு மாட்டுதயிர்100 மில்லி * 4  பசு மாட்டுபால்கால் லிட்டர்*                5 பசு நெய்50 மில்லி இவைகளை 

ஒரு பாத்திரத்தில் கலந்து தோண்டிய குழியில்ஊற்றவும் மீதமுள்ள மணலைப் போட்டு சமன் செய்யவும் பிறகு ஒரு வெண்பூசணி ஒரு தேங்காய்* ஒரு எலுமிச்சம்பழம் இந்த மூன்றையும் பலிகொடுக்க வேண்டும்

எலுமிச்சம் பழத்தை 4 வெட்டிகுங்குமம் தடவிநான்கு திசைகளிலும் வீச வேண்டும்

 வெண் பூசணியை நாலாவெட்டிகுங்குமம் தடவிகுழியில்மேல்புறத்தில்    4 திசைகளிலும் வைக்கவும்

தேங்காயில் சூடம் ஏற்றி உங்கள் வீடு முழுவதும் சுற்றி வந்து உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் சுற்றி சல்லிய தோஷம்  பரிகாரம் செய்த இடத்தையும் சுற்றி

அந்தத் தேங்காயை சிதறு காய் போட்டு உடைக்கவும்இந்தப் பொருள்களை அனைத்தும் எடுத்துமுச்சந்தியில் யாருக்கும் இடைஞ்சல்இல்லாமல் போட்டு வரவும்போட்டு

 போட்டுவந்தவர்கள்குளித்து விட்டு வீட்டுக்குள் வரவும் இதை செய்தால் வீட்டில் உள்ள அனைத்து விதமான திருஷ்டி தோஷங்களும் விலகும்

Jothidam Nilayam Maha Shree Palani Vadivel

செல்  9994150658

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...