ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்

Sunday, 25 March 2018

யோனிப்பொருத்தம்

யோனிப்பொருத்தம்

யோனி என்பது புணர்ச்சி உறுப்புகளைக்குறிக்கும். தாம்பத்திய உறவில் ஈடுபடும் ஆண்,பெண் இருவருக்குமிடையே எந்த அளவிற்கு மன ஒற்றுமை, உடல் ஒற்றுமை இருக்கும் என்பதை கண்டறிய இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.
மனித யோனிகளின் தன்மைகளை மிருக யோனிகளின் தன்மையோடு ஒப்பிட்டு கூறியிருக்கிறர்கள் ரிஷிகள். தாம்பத்திய உறவில் ஈடுபடும் மனிதனின் எண்ணம்மற்றும் செயல்பாடுகள் அவர்களுடைய ஜென்ம நட்சத்திரத்திற்குரிய மிருகத்தின் செயல்பாடுகளை ஒத்திருக்கும் என்பது ரிஷிகளின் கருத்தாகும். நட்சத்திர யோனி விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
அசுவினி - ஆண் குதிரை
பரணி - ஆண் யானை
கார்த்திகை - பெண் ஆடு
ரோகிணி - ஆண் நாகம்
மிருகசீரிஷம் - பெண் சாரை
திருவாதிரை - ஆண் நாய்
புனர்பூசம் - பெண் பூனை
பூசம் - ஆண் ஆடு
ஆயில்யம் - ஆண் பூனை
மகம் - ஆண் எலி
பூரம் - பெண் எலி
உத்தரம் - எருது
அஸ்தம் - பெண் எருமை
சித்திரை - ஆண் புலி
சுவாதி - ஆண் எருமை
விசாகம் - பெண் புலி
அனுஷம் - பெண் மான்
கேட்டை - கலைமான்
மூலம் - பெண் நாய்
பூராடம் - ஆண் குரங்கு
உத்திராடம் - மலட்டு பசு (சில பஞ்சாங்கங்களில் கீரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)
திருவோணம் - பெண் குரங்கு
அவிட்டம் - பெண் சிங்கம்
சதயம் - பெண் குதிரை
பூரட்டாதி - ஆண் சிங்கம்
உத்திரட்டாதி - பாற்பசு
ரேவதி - பெண் யானை
மிருகங்களை மூன்று வகையாக பிரிக்கலாம் அவை:
1.தாவர உண்ணிகள்
2.ஊண் உண்ணிகள்
3. அனைத்துண்ணிகள்.
தாவர உண்ணிகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம் அவை:
1. கொம்புள்ளவை
2. கொம்பில்லாதவை
ஆடு, எருது,பசு,எருமை,மான், இவை கொம்புள்ள தாவர உண்ணிகளாகும்.
குதிரை,யானை இவை கொம்பில்லாத தாவர உண்ணிகளாகும்.
நாய்,பூனை, புலி,சிங்கம், நாகம்,சாரைஇவை ஊண் உண்ணிகளாகும்.
எலியும் குரங்கும் அனைத்துண்ணிகளாகும்.
கொம்புள்ள தாவர உண்ணிகள் அனைத்திற்கும் புணர்ச்சி உறுப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும். இதுபோல் கொம்பில்லாத தாவர உண்ணிகள் அனைத்திற்கும் புணர்ச்சி உறுப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும்.
ஊண் உண்ணிகள் அனைத்திற்கும் புணர்ச்சி உறுப்பு ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும்.
எலி, கீரி போன்ற அனைத்துண்ணிகளுக்கு புணர்ச்சி உறுப்பு ஒரே மாதிரியாக இருக்கும்.
நாகம்,சாரை போன்ற ஊண் உண்ணிகளுக்கு புணர்ச்சி உறுப்பு ஒரே மாதிரிதான் இருக்கும்.
மனிதர்களின் யோனி பேதங்கள் மிருகங்களின் யோனி பேதங்களை ஒத்திருக்கும் என்பது ரிஷ்களின் கருத்தாகும். ஆண்,பெண் இருவருடைய யோனி பேதங்களை அவர்களுடைய ஜென்ம நட்சத்திரம் மூலமாக கண்டறிந்து அவை பரஸ்பரம் இணைவதற்கு ஏற்றவைதானா என்பதை கண்டறிவது யோனிப்பொருத்தம் பார்ப்பதின் நோக்கமாகும்.
மிருகங்கள் புணர்ச்சியில் ஈடுபடும்போது குண பேதங்கள் காணப்படும். உதாரணமாக ஆடுகள் அடிக்கடி புணர்ச்சியில் ஈடுபடும். ஆனால் புணர்ச்சி நேரம் மிகவும் குறைவுதான். நாய்கள் அடிக்கடி புணர்ச்ச்சியில் ஈடுபடுவதில்லை, ஆனால் புணர்ச்சி நேரம் அதிகமாகும்.
பூனை, புலி,சிங்கம் போன்ற மிருகங்கள் புணர்ச்சியின்போது மிகவும் ஆக்ரோஷமாக செயல்படும்.
யானை,நாகம் போன்றவை மறைவான இடத்தில் மட்டுமே புணர்ச்சியில் ஈடுபடுபவை.
அவரவர் ஜென்ம நட்சத்திரத்தை தெரிந்துகொண்டால் அவரின் எண்ணம் மற்றும் செயல்பாடுகள் புணர்ச்சியின்போது எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
தாவர உண்ணிகளுக்கும் அனைத்துண்ணிகளுக்கும் ஊண் உண்ணிகள் பகையாகும்.
கொம்புள்ள தாவர உண்ணிகள் கொம்பில்லா தாவர உண்ணிகளுக்கு பகையாகும்.
ஒரே வகையை சேர்ந்த மிருகங்களின் யோனிகள் பரஸ்பர நட்பாகும்.
வெவ்வேறு வகையை சேர்ந்த மிருக யோனிகள் பரஸ்பரம் பகையாகும்.இதன் அடிப்படையில் மிருக யோனிகளின் பகை விவரம் தரப்பட்டுள்ளது.
குதிரை X எருமை
குதிரை X பசு
யான X சிகம்
ஆடு X குரங்கு
பாம்பு Xகீரி
பூனை X நாய்
பசு X புலி
எருமை X புலி
மான் X புலி
எலி X பூனை
எலி Xபாம்பு
மான் X நாய்

at March 25, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Saturday, 24 March 2018

சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீர பரிகாரங்கள்

சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீர பரிகாரங்கள்

அசையா சொத்துக்களான காலி மனை, வயல் ,தோட்டம் ,வீடு ஆகியவைகளை குறிக்கும் பாவம் நான்காம் பாவமாகும். ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு வரவை குறிக்கும் பாவம், அந்த பாவத்திற்கு இரண்டாம் பாவமாகும். ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு செலவை அல்லது விரையத்தைக்குறிக்கும் பாவம், அந்த பாவத்திற்கு பன்னிரண்டாம் பாவமாகும். இதன் படி நான்காம் பாவத்திற்கு வரவை குறிக்கும் பாவம் நான்கிற்கு இரண்டாவதாக வரும் ஐந்தாம் பாவமாகும். நான்காம் பாவத்திற்கு விரையத்தைக் குறிக்கும் பாவம் நான்கிற்கு பன்னிரண்டாவதாக வரும் மூன்றாம் பாவமாகும்.
காலப்புருச லக்கினமான மேசத்திற்கு நான்காம் பாவம் கடகமாகும். கடகத்திற்கு இரண்டாமிடம் சிம்மமாகும். சிம்ம ராசிக்கு அதிபதி சூரியனாகும். சூரியன் சுய ஒளியில் பிரகாசிக்கும் கிரகமாகும். சூரியனுக்கு அதி தேவதை சிவனாகும். எனவே சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை வழிபட்டுவந்தால் சொத்து சேர்க்கைகள் உண்டாகும். இதுபோல் காலப்புருச ராசியான கடகத்திற்கு நான்காமிடம் துலாம் ராசியாகும். துலாம் ராசிக்கு இரண்டாமிடம் விருச்சிக ராசியாகும். விருச்சிக ராசிக்கு அதிபதி செவ்வாயாகும். விருச்சிகம் ஒரு நீர் ராசியாகும். செவ்வாய் கிரகத்தின் அதிதேவதை முருகனாகும். எனவே நீர் நிலைகளுக்கு அருகில் அமைந்திருக்கும் முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டால் சொத்துக்கள் சேரும். கடற்கரையில் அமைந்துள்ள முருகன் ஆலயம் திருசெந்தூராகும். அங்கு சென்று வழிபட்டு வந்தால் விரைவில் சொத்துக்கள் அமையும். மேலும் ஆயுதத்தை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும், நிலத்தைக்குறிக்கும் கிரகமும் செவ்வாய்தான். பரசு ராமன் தன் கையில் உள்ள கோடாரியை கடலில் வீச , அந்த கோடாரி உருவத்தில் கடல் நீர் விலகி நில பரப்பு தோன்றிய இடம் பரசுராம க்ஷேத்திரமாகும். தற்போதைய கேரளாவும்,கன்யாகுமரிப்பகுதியும் இணைந்த பகுதிக்கு பரசுராம க்ஷேத்திரம் என்று பெயர். திருவனந்தபுரம் நகரத்தில் திருவல்லம் என்னுமிடத்தில் பரசு ராமருக்கு தனிக்கோயில் உள்ளது. அங்கு சென்று வழிபட்டு வந்தாலும் விரைவில் சொத்துக்கள் அமையும்.
காலப்புருச லக்கினமான மேசத்திற்கு நான்காம் பாவம் கடகமாகும். கடகத்திற்கு பன்னிரண்டாமிடம் மிதுனமாகும். மிதுன ராசிக்கு அதிபதி புதனாகும். புதனுக்குரிய அதி தேவதை விஷ்ணுவாகும். விஷ்ணு அவதாரங்களில் மச்ச அவதாரத்திற்கும்,கூர்ம அவதாரதிற்கும் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு தனிக்கோயில்கள் இல்லை. ஆனால் வராக மூர்த்திக்கு தனிக்கோயில்கள் உண்டு. வராகம் என்றால் பன்றி என்று பொருள். பன்றி எப்பொழுதும் சேற்று உடலோடு(மண்) காணப்படும் ஒரு மிருகமாகும். எனவே விஷ்ணு அவதாரங்களில் வராக மூர்த்தியை வழிபட சொத்துக்கள் எளிதில் விற்பனையாகும். மிதுன ராசியின் உருவம் இரட்டையராகும் எனவே லக்ஷ்மி வராகரை வழிபடவேண்டும். இதுபோல் காலப்புருச ராசியான கடகத்திற்கு நான்காமிடம் துலாம் ராசியாகும். துலாம் ராசிக்கு பன்னிரண்டாமிடம் கன்னி ராசியாகும். கன்னி ராசியின் அதிபதியும் புதன்தான். கன்னியில் புதன் உச்சமாகும். எனவே மிகவும் பிரசித்தி பெற்ற விஷ்ணு ஸ்தலத்தில் எழுந்தருளியுள்ள வராகப்பெருமாளை வழிபட்டாலும் சொத்துக்கள் எளிதில் விற்பனயாகும். மிகவும் பிரசித்தி பெற்ற விஷ்ணு ஸ்தலம் திருப்பதியாகும். எனவே திருப்பதியில் உள்ள வரகப்பெருமாளை தசித்தால் சொத்துக்கள் எளிதில் விற்பனையாகும்.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சிக்கு அருகில் உள்ள கீழப்பாவூர், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம், காஞ்சிபுரம், திருக்கோவிலூர், சென்னைக்கு அருகே உள்ள திருவிடந்தை, திருப்பதி ஆகிய ஊர்களில் வராகப்பெருமாளுக்கு கோயில்கள் அமைந்துள்ளன.
நான்கிற்கு ஆறாமிடம் சொத்து சம்பந்தமான சண்டை சச்சரவு மற்றும் வழக்குகளைக்குறிக்கும். காலப்புருச லக்கினமான மேசத்திற்கு நான்காம் பாவம் கடகமாகும். கடகத்திற்கு ஆறாமிடம் தனுசு ஆகும். தனுசு ராசியின் உருவம் வில்லாகும். கையில் வில்லேந்தியவன் ராமனாகும். பட்டத்திற்குரிய ராமன் கைகேயின் சூழ்ச்சியால் நாட்டை துறந்து காட்டிற்கு சென்று பலவிதமான பிரச்சினைகளுக்குப்பின் திரும்பவும் நாட்டை அடைந்த கதை ராமாயணம் படித்தவர்கள் அனைவருக்கும் தெரியும். யாராவது உங்கள் சொத்துக்களை மோசடி செய்து அபகரிக்க நினைத்தால் ஸ்ரீராமனை வழிபட சொத்து மோசடிகளிலிருந்து தப்பிக்கலாம். இதுபோல் காலப்புருச ராசியான கடகத்திற்கு நான்காமிடம் துலாம் ராசியாகும். துலாம் ராசிக்கு ஆறாமிடம் மீனராசியாகும். மீன ராசியில் புதன் நீச்சம். நீச்ச புதன் சயன கோலத்திலிருக்கும் பெருமாளைக்குறிக்கும். எனவே ஸ்ரீ ரங்க நாதரை வழிப்பட்டாலும் சொத்து மோசடிகளிலிருந்து தப்பிக்கலாம். வழக்கில் சிக்கியுள்ள மண்ணில் மச்ச யந்திரம் புதைத்து வைத்தால் வழக்கின் தீர்ப்பு நமக்கு சாதகமாக முடியும்.
No automatic alt text available.

at March 24, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

தோப்புக்கரணம்

தோப்புக்கரணம்

கல்வி கற்பதில் கண்கள்,கைகள்,காதுகள், மூளை ஆகிய நான்கு உறுப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் கண்கள் வாசிக்கும் திறனையும், கைகள் எழுதும் திறனையும், காதுகள் கேட்கும் (செவி சாய்க்கும்) திறனையும், மூளை நினைவாற்றல் மற்றும் பகுத்தறியும் திறனை பெற்றுள்ளன. கற்பிப்பவர்கள், கைகள், வாய், மூளை ஆகிய மூவுறுப்புகளை பயன்படுத்துகின்றனர். கற்பவர்கள் கண்கள், கைகள், காதுகள், மூளை ஆகிய நான்கு உறுப்புகளைப் பயன்படுத்துகின்றனர். புத்தகங்களை கண்களின் துணையோடு வாசித்து கற்கலாம் என்றாலும் நீண்ட நேரம் வாசித்தால் கண்கள் களைப்படைந்து விடும். ஆனால் கேட்பது மிகவும் எளிது. இதன் காரணத்தினாலேயே பள்ளி,கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டாலும். ஒரு ஆசிரியர் பாடங்களை நடத்தியதை காதில் வாங்கிக்கொண்டு பிறகு புத்தகங்களை வாசிப்பது எளிதாக அமைகிறது. ஆனால் ஆசிரியர் பாடம் நடத்தும்போது காது கொடுத்து கேட்காத மாணவர்களால் பாடங்களை எளிதில் புரிந்துகொள்ள முடியாது. பாடங்களை வாசிக்கும்போதும் சில மாணவர்களுக்கு கவனக்குறைவு ஏற்படுகிறது. இப்படி கவனக்குறைவாக உள்ள மாணவர்களை 10 முறை, 20 முறை பாடங்களை எழுதிக்கொண்டு வருமாறு ஆசிரியர்கள் கூறுவர். இதனால் என்ன ஆகிறது என்றால் ஒரு வார்த்தை கூட விடாமல் திரும்ப திரும்ப எழுதுவதால் அந்த பாடம் எளிதில் மனதில் தங்குகிறது.அதிக நேரம் பேனா பிடித்து எழுதுவதால் அது ஒரு நுண்ணழுத்த சிகிச்சையாக அமைந்து மூளையை திறம்பட செயல்பட வைக்கிறது. கவனக்குறைவுள்ள மாணவர்கள் தினமும் 10 முறை தோப்புக்கரணம் போட்டு பழகி வந்தால், கண், காது, மூளை, கைகள் நான்கும் ஒருங்கிணைந்து செயல்பட ஆரம்பிக்கும். இதன் மூலம் உரிய நரம்புகள் தூண்டப்பட்டு வாசிக்கும் திறன், கேட்கும் திறன், விரைவாக எழுதும் திறன், நினைவாற்றல் முதலியவை அதிகரிக்கும்.
Image may contain: 1 person, sitting and outdoor
at March 24, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

இந்தியாவில் கிரக தேவதை வழிபாடுகள்

இந்தியாவில் கிரக தேவதை வழிபாடுகள்

ஒரு ஜோதிடர் முருகன் வழிபாடு இந்தியாவில் தமிழ் நாட்டில் மட்டுமே உள்ளது. வட இந்தியாவில் முருகன் வழிபாடு இல்லை, ஆனால் அங்கு பிள்ளையார் வழிபாடு அதிகமாக உள்ளது. இதற்கு என்ன காரணம் என்று கேட்டிருந்தார். அவருக்கு பதில் கூறும் முகமாக இந்த கட்டுரையை எழுதுகிறேன். இந்த கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் என் மனதில் தோன்றிய அனுமானங்கள் மட்டுமே. இதுதான் நிச்சயமான காரணம் என்று சொல்ல நான் விரும்பவில்லை.
உலக நாடுகளில் இந்தியாவில் மட்டுமே நவக்கிரக வழிபாடும், நவக்கிரக தேவதா வழிபாடும் உள்ளது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இது போன்ற வழிப்பாட்டு முறைகள் கிடையாது என்பதால் ஜோதிட அடிப்படையில் இந்த வழிபாட்டு முறைகள் இந்தியாவில் எப்படி அமைந்துள்ளது எனப்பார்ப்போம்.
ராசி மண்டலத்தை நான்கு திசைகளாக பிரித்துள்ளார்கள். அந்த விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
மேசம்-சிம்மம்-தனுசு- கிழக்கு
ரிசபம்-கன்னி-மகரம்-தெற்கு
மிதுனம்-துலாம்-கும்பம்-மேற்கு
கடகம்-விருச்சிகம்-மீனம்-வடக்கு
நக்கிரகங்களில் சூரியன் கிழக்கு திசையைக்குறிக்கும் மேச ராசியில் உச்சமடைகிறான். சந்திரன் தெற்கு திசையைகுறிக்கும் ரிசப ராசியில் உச்சமடைகிறான். செவ்வாய் தெற்கு திசையைக்குறிக்கும் மகரத்தில் உச்சமடைகிறான். புதன் தெற்கு திசையைக்குறிக்கும் கன்னியில் உச்சமடைகிறான். குரு வடக்கு திசையைக்குறிக்கும் கடக ராசியில் உச்சமடைகிறான். சுக்கிரன் வடக்கு திசையைக்குறிக்கும் மீன ராசியில் உச்சமடைகிறான். சனி மேற்கு திசையைக்குறிக்கும் துலாம் ராசியில் உச்சமடைகிறான். ராகு தெற்கு திசையைக்குறிக்கும் ரிசப ராசியில் உச்சமடைகிறான். கேது வடக்கு திசையைக்குறிக்கும் விருச்சிகத்தில் உச்சமடைகிறான்.
நக்கிரகங்களில் சூரியன் மேற்கு திசையைக்குறிக்கும் துலாம் ராசியில் நீச்சமடைகிறான். சந்திரன் வடக்கு திசையைக்குறிக்கும் விருச்சிகத்தில் நீச்சமடைகிறான். செவ்வாய் வடக்கு திசையைக்குறிக்கும் கடகத்தில் நீச்சமடைகிறான். புதன் வடக்கு திசையைக்குறிக்கும் மீனத்தில் நீச்சமடைகிறான். குரு தெற்கு திசையைக்குறிக்கும் மகரத்தில் நீச்சமடைகிறான். சுக்கிரன் தெற்கு திசையைக்குறிக்கும் கன்னி ராசியில் நீச்சமடைகிறான். சனி கிழக்கு திசையைக்குறிக்கும் மேச ராசியில் மேச ராசியில் நீச்சமடைகிறான். ராகு வடக்கு திசையைக்குறிக்கும் விருச்சிக ராசியில் நீச்சமடைகிறான். கேது தெற்கு திசையைக்குறிக்கும் ரிசபத்தில் நீச்சமடைகிறான்.
நவக்கிரக தேவதைகள்
சூரியன்-சிவன் வழிபாடு
சந்திரன்- பார்வதி (அம்மன்) வழிபாடு
செவ்வாய்-முருகன்
புதன்- விஷ்னு
குரு- பிரஹஸ்பதி (ஆசாரியன்)
சுக்கிரன்-லக்ஷ்மி
சனி- சனி வழிபாடு
ராகு-சித்தர் வழிபாடு,துர்கை வழிபாடு
கேது-ரிஷி வழிபாடு, பிள்ளையார் வழிபாடு
வடக்கு திசை ராசியில் செவ்வாய்,சந்திரன், ராகு, புதன் நீச்சம். குரு,சுக்கிரன்,கேது உச்சம். எனவே வட இந்தியாவில் முருகன் வழிபாடு, அம்மன்வழிபாடு, சித்தர் வழிபாடு விஷ்ணு வழிபாடுகள் குறைவு. ஆனால் அங்கே மகான் (குரு) வழிபாடு, லக்ஷ்மி வழிபாடு ,ரிஷி வழிபாடு மற்றும் பிள்ளையார் வழிபாடு அதிகம்.
தெற்கு திசை ராசியில் செவ்வாய், சந்திரன், ராகு, புதன் உச்சம். குரு, சுக்கிரன்,கேது நீச்சம். எனவே தென் இந்தியாவில் குரு வழிபாடு, ரிஷி வழிபாடு,லக்ஷ்மி வழிபாடு குறைவு. ஆனால் முருகன் வழிபாடு , அம்மன் வழிபாடு , சித்தர் வழிபாடு விஷ்ணு வழிபாடுகள் அதிகமாக உள்ளது.
கிழக்கு திசை ராசியில் சூரியன் உச்சம், சனி நீச்சம். எனவே கிழக்கு இந்தியாவில் சிவ வழிபாடு அதிகம். சனி வழிபாடு குறைவு.
மேற்கு திசை ராசியில் சனி உச்சம், சூரியன் நீச்சம். எனவே மேற்கு இந்தியாவில் சனீஸ்வரன் வழிபாடு அதிகம். சிவ வழிபாடு குறைவு.
No automatic alt text available.

at March 24, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

பெயர் ஜோதிடத்தில் ஆங்கில எழுத்துக்கள்

பெயர் ஜோதிடத்தில் ஆங்கில எழுத்துக்கள்

----------------------------------------------------------------
A I J – ஆண் எழுத்துக்கள் (லிங்க எழுத்துக்கள்)
B D O – வசீகர பெண் எழுத்துக்கள் (ரகசியம் காக்கும் எழுத்துக்கள்)
P Q R – வசீகர ஆண் எழுத்துக்கள். (ஓரளவுக்கு ரகசியம் காக்கும் எழுத்துக்கள்)
C E F L – ஏமாளிப்பெண் எழுத்துக்கள்
G S – குழப்பமான பெண் எழுத்துக்கள்.
H K M N W X – அர்த்த நாரி எழுத்துக்கள் (ஆண்,பெண் தன்மைகள் கலந்தது)
T - மன வளர்ச்சியற்ற ஆண் எழுத்து.
Z – மன வளர்ச்சியற்ற பெண் எழுத்து.
U V Y- பெண் எழுத்துக்கள் (யோனி எழுத்துக்கள்)
பெயரின் முதல் எழுத்தைக்கொண்டு மனிதர்களிடமிருந்து வெளிப்படும் ஆண் ,பெண் தன்மைகளை தெரிந்துகொள்ளலாம். ஆணுக்கு ஆண் எழுத்து பெயரின் முதல் எழுத்தாக அமைந்தால் அந்த ஆண் முழுமையாக ஆண் தன்மைகளை வெளிப்படுத்துவான். பெண்ணுக்கு பெண் எழுத்து பெயரின் முதல் எழுத்தாக அமைந்தால் அந்த பெண் முழுமையாக பெண் தன்மைகளை வெளிப்படுத்துவாள். ஆணுக்கு பெண் எழுத்தும், பெண்ணுக்கு ஆண் எழுத்தும் பெயரின் முதல் எழுத்தாக அமைந்தால் அவர்கள் மாறுபட்ட பாலின தன்மைகளை கொஞ்சம் வெளிப்படுத்துவர்.
இவை பொதுப்பலன் மட்டுமே. 
at March 24, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

ஆங்கில தேதிக்கு கிழமை கண்டுபிடிக்கும் வழி

ஆங்கில தேதிக்கு கிழமை கண்டுபிடிக்கும் வழி

ஆங்கில வருடங்களில் எந்த வருடமானாலும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட தேதிக்கு கிழமை கண்டுபிடிக்க ஒரு எளிய வழிமுறை இருக்கிறது . அதை இங்கு விளக்குகிறேன்.
1 வருடத்திற்கு 365 நாட்கள்
1லீப் வருடத்திற்கு 366 நாட்கள்
1 வாரத்திற்கு 7 நாட்கள்
கிழமைகள் 7 நாட்களுக்கு ஒரு முறை திரும்ப திரும்ப சுழற்சியாக வரும். ஆகவே ஒரு வருடத்தின் மொத்த நாட்களான 365 ஐ 7 ஆல் வகுக்க வேண்டும்.
365/7 = ஈவு 52 மீதி 1
ஈவை தள்ளிவிட்டு மீதத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
(1)ஒரு வருடத்திற்கு மீதம் -1 நாள்
(2)100 வருடத்திற்கு மீதம் – 100 நாள்
(100*1=100)
(3) 100 வருடங்களில் 24 லீப் வருடங்கள் வரும். லீப் வருடங்களில் வரும் அதிக நாட்கள் -24 நாட்கள்
(2)+(3) = 100+24= 124 நாட்கள்
இந்த 124ஐ திரும்பவும் 7 ஆல் வகுக்க வேண்டும்.
124/7= ஈவு 17 மீதி 5
ஈவை தள்ளிவிட்டு மீதத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
எனவே
(அ) 100 வருடங்களுக்கு மீதம் – 5 நாட்கள்
(ஆ) 400 வருடங்களிக்கு மீதம் (4*5=20) – 20 நாட்கள்
(இ) 400 வது வருடம் லீப் வருடமாகும் ஆகவே அதிக நாட்கள் – 1 நாள்
(100 வது, 200வது, 300வது வருடங்கள் லீப் வருடங்கள் இல்லை)
(ஆ)+(இ) = 20+1=21 நாட்கள்
இந்த 21 ஐ திரும்பவும் 7 ஆல் வகுக்க வேண்டும்.
21/7= ஈவு 3 மீதம் 0
ஞாபகத்தில் வைக்க வேண்டியது
100 வருடங்களுக்கு மீதம்- 5 நாட்கள்
400 வருடங்களுக்கு மீதம்- 0 நாட்கள்
எந்த வருடத்தில் எந்த தேதிக்கு கிழமை கண்டுபிடிக்க வேண்டுமோ அந்த வருடத்திற்கு முந்தைய வருடதிற்கான மீத நாட்களை கண்க்கிட்டுக்கொண்டால் தேவையான ஆண்டில் வரும் தேதிக்கு கிழமையை கண்டு பிடிக்கலாம்.
உதாரணமாக 28-07-1968 அன்று என்ன கிழமை என்று பார்ப்போம்.
முதலில் 1968 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டான 1967 க்கு மீத நாட்கள் எத்தனை என்று பார்ப்போம்.
1967 கீழ் கண்டவாறு பிரித்து எழுதிக்கொள்ள வேண்டும்
(க)1600 (4*400=1600) வருடங்களுக்கு மீதம் – 4*0 = 0 நாட்கள்
(கா) 300 (3*100 = 300) வருடங்களுக்கு மீதம் – 3*5 = 15 நாட்கள்
(கி) 67 வருடங்களுக்கு மீதம் – 67 நாட்கள்
(கீ) 1900 முதல் 1967 வரை 16 லீப் வருடங்கள் வருகின்றன ,எனவே இந்த 16 லீப் வருடங்களுக்கு அதிக நாட்கள் – 16 நாட்கள்
(க)+(கா)+(கி)+(கு) = 0+15+67+16 =98
98 ஐ 7 ஆல் வகுக்க வேண்டும்.
98/7= ஈவு 14 மீதி 0
ஈவை தள்ளிவிட்டு மீதத்தை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
இப்பொழுது 28-07-1968 அன்று என்ன கிழமை என்று பார்ப்போம்.
(ச) 1967 ஆம் ஆண்டின் மீதம் – 0 நாட்கள்
(சா) 1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் – 31 நாட்கள்
(சி) 1968 ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் – 29 நாட்கள்
(1968 லீப் ஆண்டு)
(சீ) 1968 ஆம் ஆண்டு மார்ச் மாதம் – 31 நாட்கள்
(சு) 1968 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் – 30 நாட்கள்
(சூ) 1968 ஆம் ஆண்டு மே மாதம் – 31 நாட்கள்
(செ) 1968 ஆம் ஆண்டு ஜூன் மாதம் – 30 நாட்கள்
(சே) 1968 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் தேதி வரை- 28 நாட்கள்
(ச)+(சா)+(சி)+(சீ)+(சு)+(சூ)+(செ)+(சே) = 0+31+29+31+30+31+30+28 = 210
இந்த 210 ஐ 7 ஆல் வகுக்க வேண்டும்
210/7 = ஈவு 30 மீதி 0
ஈவை தள்ளிவிட்டு மீதத்தை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
மீதி 0 வந்தால் ஞாயிற்றுக்கிழமை
மீதி 1 வந்தால் திங்கள் கிழமை
மீதி 2 வந்தால் செவ்வாய்க்கிழமை
மீதி 3 வந்தால் புதன் கிழமை
மீதி 4 வந்தால் வியாழக்கிழமை
மீதி 5 வந்தால் வெள்ளிக்கிழமை
மீதி 6 வந்தால் சனிக்கிழமை
நாம் உதாரணமாக எடுத்துக்கொண்ட 28-07-1968 அன்று மீதி 0 வருவதால் அன்று ஞாயிற்றுக்கிழமையாகும். இவ்வாறு எந்த வருடத்தில் உள்ள தேதியானாலும் கிழமை கண்டு பிடித்துக்கொள்ளலாம்.
Image may contain: 1 person, sitting

at March 24, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

பருவ காலங்கள்

பருவ காலங்கள்
------------------------
சூரியனை பூமி சுற்றுவதால் பூமியில் பருவ மாற்றங்கள் ஏற்படுகிறது. ஆனால் பூமியிலிருந்து பார்க்கும்பொழுது சூரியன் பூமியை சுற்றி வருவதுபோல் காட்சியளிக்கிறது. இதற்கு ஒப்புமை இயக்கம் என்று பெயர். இத்தகைய ஒப்புமை இயக்கத்தின் மூலம் சூரியன் மாதத்திற்கு ஒரு ராசி வீதம் நகர்ந்து செல்கிறது. இதன்படி சித்திரையில் மேசத்திலும், வைகாசியில் ரிசபத்திலும், ஆனியில் மிதுனத்திலும், இப்படியாக 12 மாதங்களில் 12 ராசிகளில் நகர்ந்து செல்கிறது. சித்திரை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன் நகர்ந்து செல்லும்பொழுது பூமியில் வெப்பம் மிகவும் அதிகமாக உச்சத்தில் இருக்கும். இதன் அடிப்படையிலேயே கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதை அக்னி பகவான் என்று கூறப்பட்டுள்ளது. இதுபோல் ஐப்பசி மாதம் சூரியன் சுவாதி நட்சத்திரத்தில் நகர்ந்து செல்லும்பொழுது பூமியில் அதிகம் காற்று வீசும் , குறிப்பாக நம் பாரதத்தில் உள்ள ஒரிசா, ஆந்திரா பகுதியில் பலத்த காற்று வீசும், இதன் அடிப்படையில்தான் சுவாதி நட்சத்திரத்தின் அதிதேவதை வாயு பகவான் என்று கூறுகிறார்கள். தை மாதம் திருவோண நட்சத்திரத்தில் சூரியன் செல்லும் காலம் மண் பூதம் வளரும் காலம். இதன் அடிப்படையிலேயே திருவோணம் நட்சத்திரத்தின் அதிதேவதை விஷ்ணு (வாமன அவதாரம்) என்று கூறப்படுகிறது. வாமனன் மூன்றடியில் பூமியை (மண்ணை) அளந்தவன். தை மாதம் அறுவடைக்காலமாகும். அறுவடைக்காலத்தில் அறுவடை பணியில் உள்ள உழவர்கள் வயலை கூறு பிரித்துக்கொண்டு அறுவடை செய்வார்கள். கூறு பிரிக்கும் ஆளுக்கு கூறுவாடி என்று பெயர். இந்த கூறுவாடி தன் கால்களால் எட்டு வைத்து வயலை அளந்து கூறு வைப்பான். அதன் பின் அறுவடை செய்யும் பணியாளர்கள் வயலை அறுக்கத்தொடங்குவார்கள்.பொங்கல் பண்டிகையை பெரும்பாலும் சூரிய வழிபாடு என நினைக்கிறார்கள். உண்மையில் பொங்கல் பண்டிகை மண் வழிபாடாகும். மண்ணில் விளைந்ததை மண்ணிற்கு (முற்றம்) படைத்து கொண்டாடுவதாகும். ஆடி மாதம் பூசம் நட்சத்திரத்தில் சூரியன் செல்லும் காலம் நீர் வளம் பெருகும் காலம்.பூசம் நட்சத்திரத்தின் அதி தேவதை பிரஹஸ்பதி(குரு).ஆடி பெருக்கு கொண்டாடுவது, ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதை கொண்டாடத்தான்.
No automatic alt text available.

at March 24, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Friday, 23 March 2018

*கோவிலுக்குள் மணி அடித்துவிட்டு வணங்குவது ஏன் தெரியுமா?

*கோவிலுக்குள் மணி அடித்துவிட்டு வணங்குவது ஏன் தெரியுமா?

🕉 *ஓம் நமசிவாய!* 🔔
*கோவிலில் மணி அடிப்பதற்கு பின் ஒளிந்துள்ள ரகசியம்...!!*
கோவிலுக்கு செல்லும் அனைவரும் ஏன்? எதற்கு? என தெரியாமல் பின்பற்றும் விஷயங்களில் ஒன்று கோவில் மணி அடிப்பது. கோவிலில் மணி அடித்துவிட்டு வணங்கினால் கடவுள் காது கொடுத்து கேட்பார் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். கோவிலில் அடிக்கும் மணி ஓசைக்கும், மனிதர்களின் மூளைக்கும் இடையே தொடர்பு உள்ளது என சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.
*கோவிலுக்கு செல்லும் அனைவரும் மணி அடிப்பது ஏன்?*
🔔 பூஜை செய்யும் போது பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக உள்ள மணி ஓசையின் பின் ஒரு அறிவியல் நுண்ணறிவும் இருக்கிறது. கோவில் மணி அடித்துவிட்டு வணங்கினால், தங்களின் வேண்டுதலை கடவுள் காது கொடுத்து கேட்பார் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் அது உண்மை அல்ல.
🔔 ஆகம சாஸ்திரங்களின் படி, கோவில் மணியில் இருந்து வெளிப்படும் ஓசை எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும், உடலுக்கும் நேர்மறை சக்தியை அதிகரிக்க செய்கிறது.
🔔 கோவில் மணியின் ஓசை மனிதனின் மூளை செயல்திறனை மேலோங்க செய்கிறது என்று அறிவியலில் ஒரு பின்னணி இருக்கிறது.
கோவில் மணியின் ஓசை தனித்துவமாக கேட்பது ஏன்?
🔔 கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியில் ஒரு தனித்துவம் இருக்கும். அதற்கு கோவில் மணிகளில் உள்ள கேட்மியம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்கள் தான் காரணமாகும்.
🔔 கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியானது, மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு வர உதவுகின்றது.
🔔 *கோவில் மணியில் இருந்து வெளிப்படும் சத்தம் உடலில் நேர்மறை ஆற்றல் மற்றும் மூளையில் செயல்திறனை அதிகரிக்கச் செய்து, விழிப்புணர்வை மேம்படுத்தி, மனதிற்கு நிறைவான அமைதி மற்றும் நிம்மதியை அளிக்கிறது.*
🙏 *ஓம் நமசிவாய!*
மணியடிப்பது என்பது துர்தேவதைகளை விரட்டுவதற்காக என்று பெரியோர்களால் சொல்லப்பட்டுள்ளது. பூஜையின்போது மணியை உபயோகப்படுத்துவதற்கு முன்பாக ‘ஆகமார்த்தம் து தேவாநாம் கமனார்த்தம் து ரக்ஷஸாம், கண்டாரவம் கரோம்யாதௌ தேவதாஹ்வான லாஞ்ச்சநம்’ என்ற மந்திரத்தைச் சொல்வார்கள். தீய சக்திகள் விலகி இறைசாந்நித்யம் இந்த இடத்தில் பெருகட்டும் என்பது இதன் பொருள். 

மணியடிப்பது என்பது அதற்காக மட்டுமல்ல. பூஜையின்போது நமது மனம் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தாலும், முக்கியமான தருணத்திலாவது இறைவனின்பால் நமது மனம் ஒன்றவேண்டும் என்பதற்காகவே மணி ஓசையை எழுப்புகிறார்கள். தீபாராதனையின்போது மணி ஓசை எழுவதால் நாம் அநாவசிய பேச்சுகளை நிறுத்தி இறைவனின்பால் நமது சிந்தனையைச் செலுத்துகிறோம். மணிஓசை கேட்டதும் நம்மையும் அறியாமல் நமது கரங்கள் இறைவனைத் தொழுகின்றன. சிந்தனையை ஒருமுகப்படுத்துவதற்காக மணியடிக்கப்படுகிறது என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய கருத்து. 

நைவேத்யம் செய்யும்போது கண்டிப்பாக மணிஓசையை எழுப்ப வேண்டும் என்கிறது சாஸ்திரம். மணி ஓசையைக் கேட்டதும் இறைவன் ஓடோடி வந்து நமது காணிக்கையை ஏற்றுக்கொள்கிறான். மணி ஓசையினால் நமது சிந்தனையும் ஒருமுகப்படுகிறது. சிரத்தையோடு இறைவனின்பால் நமது கவனமும் செல்கிறது. சிரத்தையுடன் கூடிய பக்தியைத்தான் இறைவன் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கிறான். நைவேத்யம், தீபாராதனை நேரங்கள் தவிர வெறுமனே மணியை அடிப்பது தவறு.
at March 23, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Thursday, 22 March 2018

நாக தோஷம் போக்கும் எளிமையான பரிகாரங்கள்,


நாக தோஷம் போக்கும் எளிமையான பரிகாரங்கள்,


நாக தோஷம் போக்கும் எளிமையான பரிகாரங்கள்,


  • ராகு, கேது, ஸ்தலங்களுக்கு சென்று முறையான பரிகாரங்களை செய்து வந்தால் நாக தோஷம் விலகி நல்ல குழந்தைகள் பிறப்பார்கள்.
    ராகு, கேது, தலமான காளகஸ்திக்குச் சென்று மூன்று இரவுகள் தங்கி ஈசனை வணங்கி வந்தால் நாக தோஷம் விலகி நல்ல குழந்தைகள் பிறப்பார்கள்.
    ராமேஸ்வரம் சென்று மூன்று நாள் தங்கி கடலில் நீராடி ராமலிங்க சுவாமியை வணங்கி வந்தால் சர்ப்ப தோஷம் பரிகாரமடைந்து குழந்தைகள் பிறப்பார்கள்.
    இராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் இறங்கி தேவிபட்டினம் போகும் பஸ்சில் ஏறி நவபாஷணத்தில் இறங்கவும். கடலில் ஸ்ரீராமபிரானால் அமைக்கப்பட்ட நவக்கிரகங்கள் இருக்கின்றன. கடலில் நீராடி நவக்கிரக பூஜை செய்தால் நாகதோஷம் பரிகாரமடையும். இதனால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
    ராமநாதபுரத்திலிருந்து தர்ப்ப சயனம் சென்று விபீடணனுக்கு அபயமளித்த சேத்திரம் வணங்கி, அங்குள்ள தல விருட்சத்தில் தாங்கள் கட்டியுள்ள உடையில் சிறிது கிழித்து ஒரு சிறு கல் வைத்து மரக்கிளையில் கட்டி வந்தால் நாகதோஷம் விலகும்.
    நாகர்கோவிலில் நாகேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. அங்கு சென்று மூன்று இரவு தங்கி ஈசனை வணங்கினால் நாகதோஷம் பரிகாரமாகும்.
    கும்பகோணத்திற்கு அருகில் திருநாகேசுவரம் இருக்கிறது. அந்த ஆலயத்திற்குச் சென்று ஈசனை வழிபட்டால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.
    பொருள் படைத்தவர் தங்கத்தால் குழந்தை உருவம் செய்து ஏழைக்கு அன்னம் அளித்து வேட்டி, துண்டு தாம்பூலம் பழத்துடன் சொர்ண விக்ரகத்தைத் தானம் செய்தால் நாகதோஷம் விலகும்.
    தங்கத்தில் செய்ய சக்தியில்லாதவர்கள் வெள்ளியில் செய்து தானம் அளிக்கலாம்.
    தங்கம் அல்லது வெள்ளி சிறு ஐந்து தலை நாகம் செய்து வீட்டில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகம் செய்து, பூஜித்து பிறகு ஒருவருக்கு புது வேட்டி, துண்டு தாம்பூலம் தட்சணையுடன் நாக விக்கிரகத்தையும் தானம் செய்யலாம்.
    கருங்கல்லில் நாகப் பிரதிஷ்டை செய்து ஆறு, குளம் அருகில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகத்துடன் பூசித்து தினமும் 108 முறை வலம் வந்தால் நாக தோஷம் நிவர்த்தியாகும்.
    இரண்டு நாகங்கள் பின்னிக்கொண்டு ஒன்றின் முகத்தை ஒன்று பார்க்குமாறு கல்லில் வடித்து அரசமரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாட்கள் விளக்கேற்றி வைத்து பூஜித்தால் நாகதோஷம் விலகும்.
    கண்ணன் நடனமாடுவது போலவும், அவனுக்கு ஐந்து தலைநாகம் குடை பிடிப்பது போலவும் கல்லில் வடித்து வேம்பும் அரசும் இணைந்திருக்கும் குளக்கரையில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள் விளக்கேற்றி வலம் வந்து வணங்கினால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.
    சிவலிங்கத்திற்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் சிலை வடித்து நதிக்கரை அல்லது குளக்கரையில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள் பூஜித்து வலம் வந்தால் நாகதோஷம் பரிகாரமாகும்.
    குளம் அல்லது நதிக்கரையில் அரசு வேம்பு கன்றுகளை நட்டு, முறையாகத் திருமணம் செய்து குறைந்தது நூறு தம்பதிகளுக்கு விருந்தும் தட்சணை தாம்பூலம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகும். நல்ல குழந்தைகள் பிறப்பதுடன் வாழ்க்கையும் இன்பமாக அமையும்.
    வசதி உள்ளவர்கள் ஓர் ஏழைக்கு பயிர் நிலம் வாங்கி தானம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.
    ஓர் ஏழைக்கு அன்னதானம் செய்து அளித்து புது வேட்டி துண்டு. தாம்பூலம் தட்சணையுடன் பால் பசுவும் கன்றையும் தானம் செய்தால் நாகதோஷம் விலகி சத்புத்திரர்கள் பிறப்பார்கள்.
    வீட்டில் ராகு படம் வைத்து தினமும் பூஜை செய்யலாம்.
    தினமும் இராமாயணம் படிக்கலாம்.
    மாதம் ஒரு சிவாலயம் சென்று ஈசனை வழிபட்டு வரலாம். நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபாடு செய்யலாம்.
    ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஒரு தம்பதிக்கு உணவு அளித்து தாம்பூலம் தட்சணை கொடுத்து வலம் வந்து நமஸ்கரித்து வருவதால் எல்லா தோஷங்களும் நிவர்த்தியாகி வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
    புத்திரதோஷம் ராகுவால் ஏற்பட்டால் செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தின் போது ராகுவின் இஷ்ட தெய்வமான பத்ரகாளிக்கு எலுமிச்சம் பழத்தோலில் எண்ணெய் விட்டுத் திரிபோட்டு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். தோஷம் நீங்கி குழந்தை பிறந்து நீண்ட ஆயுளுடன் இருப்பர்.
    சிவாலயம் சென்று நவக்கிரகப் பிரதட்சணம் செய்யும் போது முதலில் வசமாக ஒன்பது முறை வலம் வந்து பிறகு ராகு கேதுவுக்கு பிரீதியாக இரண்டு முறை இடமாக வலம் வரவேண்டும். இவ்விதம் தினமும் செய்து வந்தால் நாகதோஷம் விலகி சத்புத்திரர்கள் பிறந்து நீண்ட ஆயுகளுடன் இருப்பார்கள்.
    நவக்கிரகங்களை பிரதட்சணம் செய்யச் செல்லும் போது ஓரு பிடி உளுந்து எடுத்துச் செல்லவும். ராகுவின் பாதங்களில் உளுந்தையும் கேதுவின் பாதங்களில் கொள்ளையும் வைத்து வணங்கி வந்தால் நாக தோஷம் பரிகாரமாகும்.
    ராகுவை பிரீதி செய்ய கருப்பு வேட்டி வாங்கி தானம் செய்வதாலும் நாகதோஷம் அகலும்.


at March 22, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

எல்லா தொழிலுக்கும் ஏற்ற மந்திரங்கள்!

எல்லா தொழிலுக்கும் ஏற்ற மந்திரங்கள்!

சகல தொழிலுக்கும்
பிருகு முனிவர் பாடல் :

பாரப்பா அகரத்தை முந்தி நாட்டு
பகடில்லை ஆகாரம் பின்னே நாட்டே
சேரப்பா இகாரத்தை செபிப்பாய் பின்னே
செயமான ஈகாரம் உகாரம் கேளு
பாரப்பா ஊ -எ -ஏ-ஐ-ஒ -என்று
மகிமையுள்ள ஔம் தனிலே முடித்துப்போடு
காரப்பா பீசமிவை பதினொன்றாகும்
கண்மணியே இதைக்கடந்து மெய்யை நோக்கே ..

தமிழ் மொழியின் தொன்மையை உணர்ந்தவர்கள் சாகாவரம் பெற்றவர்கள் ஆவார்கள். தமிழ் மொழியில் உள்ள உயிர் எழுத்துகள் மற்றும் மெய் எழுத்துகளை தெரிந்து கொண்டு அதனுடன் "ம் " மற்றும் "ங்" போன்ற எழுத்துகளை(பீஜங்கள்) சேர்த்து கொண்டு உச்சரிக்கும்போது பலவித சித்திகளும் ,முக்தியும் கிடைக்கும் என பிருகு முனிவர் கூறுகிறார்.
முதலில் "அம்" என்று செபம் செய்து ,பிறகு "ஆம்" என்றும் ,"இம்", "ஈம்" ,"உம்", "ஊம்","எம்", "ஏம்","ஐம்", "ஓம்", "ஔம்" என்றும் பதினோரு வகையான உயிர் பீசங்களை தனித் தனியாக செபம் செய்யவேண்டும் .
மனதிற்குள் செபித்தால் தான் மந்திரத்திருக்கு பலன் அதிகம் .
இவ்வாறு ஒவ்வொரு மந்திரத்தையும் மனதிற்குள் ஒரு லட்சம் முறை கூறவேண்டும் என கூறுகிறார்.
பிறகு மெய் எழுத்துகளுடன் "ங்" பீஜத்தை சேர்த்து கொண்டு செபிக்கவேண்டும் எனவும் கூறுகிறார். முதலில் "கங்" என்றும், பிறகு தொடர்ச்சியாக எல்லா மெய் எழுத்துகளுடன் இந்த பீஜத்தை சேர்த்து லட்சம் முறை செபிக்க வேண்டும் என கூறுகிறார்.
உதாரணமாக :
முதலில் "ஓம்" பிறகு "அம்" இறுதியில் "நம:" என்று உச்சரிக்கலாம் .
"ம்" பீஜத்தை சேர்த்து மந்திரம் கூறும் முறை ..
"ஓம் அம் நம: "-என்று உச்சரித்தால் சித்தி கிடைக்கும்.
"ங்" பீஜத்தை சேர்த்து மந்திரம் கூறும் முறை ..
"ஓம் அங் நம: " என்று உச்சரித்தால் முக்தி கிடைக்கும்.
நமக்கு சித்திகள் வேண்டும் என்றால் "ம்" பீஜத்தையும் முக்தி வேண்டுமென்றால் "ங்" பீஜத்தையும் சேர்த்து உச்சரித்து பலன்களை பெறலாம் என்று கூறுகிறார்.
இவ்வாறு பீசங்களை செபிக்கும்போது மைவிழியாள் போகத்தை நிறுத்த வேண்டும் என கூறுகிறார். இவ்வாறு செய்தால் அறுபத்து நான்கு வகையான சித்திகளும் நிச்சயம் கிடைக்கும் என கூறுகிறார்.
சில முக்கிய தமிழ் மந்திரங்கள் உங்களுக்காக....
ஓம் அம் நம: -சித்து விளையாடும் தன்மை கிடைக்கும்,மரணத்தை வெல்லலாம் .
ஓம் அங் நம: -முக்தி வழியான ஞானம் கிடைக்கும்
ஓம் ஆம் நம:- நினைத்தை வரவழைக்கும் ஆகர்ஷண தொழில் சித்தியாகும்.
ஓம் இம் நம: -உடல் புஷ்டி ஆகும்.
ஓம் ஈம் நம: -சரஸ்வதியின் கடாட்சம் கிடைக்கும் .
ஓம் உம் நம: -சகல தொழிலுக்கும் பலமுண்டாகும்.
ஓம் ஊம் நம:-உச்சாடன தொழில் சித்தியாகும்.
ஓம் எம் நம: சத்வ குணம் உண்டாகும்.
ஓம் ஏம் நம:-சர்வமும் வசியமாகும்.
ஓம் ஐம் நம:- ஆண்களை வசியபடுத்தும்.
ஓம் ஓம் நம: வாக்கு பலித சித்தி உண்டாகும்.
ஓம் ஔம் நம: - வாக்கில் ஒளி உண்டாகும்
.
at March 22, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள்

ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள்

ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் வளரும் ஒருவகையான மரத்தின் விதைதான் ருத்ராட்சம். இதற்கு தனித்துவமான சிறப்புகள் பல உண்டு. தன்னைச் சுற்றிலும் அபூர்வமான அதிர்வலைகளை இது கொண்டிருக்கிறது. எனவே இதை அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது. நீங்கள் புதுஇடங்களுக்கு செல்லும் போது அங்கிருக்கும் அதிர்வுகள் உங்களுக்கு ஏற்றதாக இல்லையென்றால் உங்களால் அமைதியாக இருக்க முடியாது. ஆனால்இ ருத்ராட்சம் அணிந்தால் எவ்விதமான பாதிப்பும் நம்மை தீண்ட முடியாது.மனநிலை சாந்தமாகவே இருக்கும். சக்திவட்டம் நம்மைக் கவசம் போல் பாதுகாக்கும். ஐந்துமுகம் கொண்ட ருத்ராட்சம் உடல் ஆரோக்கியம் தரும். ஆண்பெண் பேதமின்றி எல்லோரும் அணியலாம். இது ரத்த அழுத்தத்தை சீராக்கிஇமன அமைதியையும்இ சுறுசுறுப்பையும் தரும். ஆறுமுகம் கொண்ட சண்முகி ருத்ராட்சத்தை 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அணிவதால் தாயின் பூரண அன்பிற்கு பாத்திரமாகலாம் எப்படி ருத்திராட்சம் தோன்றியது ? ருத்திரன் என்ற பெயரில் இருந்து வந்ததே ருத்திராட்சம் ஆகும். சிவபெருமானின் முக்கண்களிலிருந்தும் தெறித்த ஆனந்தக் கண்ணீர் சொட்டுகளே ருத்திராட்சங்களாகின. மொத்தம் முப்பத்தெட்டு விதமான ருத்திராட்சங்கள் தோன்றின. வலது கண்ணிலிருந்து மஞ்சள் நிற ருத்திராட்சங்கள் பன்னிரண்டும் இடது கண்ணில் இருந்து பதினாறு வெண்ணிற ருத்திராட்சங்களும் தோன்றின. நெற்றிக் கண்ணிலிருந்து கருப்பு வண்ணத்தில் பத்து ருத்திராட்சங்கள் வெளிப்பட்டன. தோற்றம் ஒரு முகம் முதல் 16 முகம் வரை கொண்ட பதினாறு வகை ருத்திராட்சங்கள் உண்டு. ருத்திராட்சத்தின் மேல் உள்ள கோட்டின் எண்ணிக்கையைக் கொண்டு ருத்திராட்சம் எத்தனை முகம் கொண்டது என்பதை அறியலாம். சாணைக்கல்லில் உரைத்தால் மஞ்சளாக தங்கம்போல் பிரகாசிப்பதும்இ நல்ல வர்ணமுள்ளதுமான ருத்திராட்சம்இ த ண்ணீரில் போட்டால் மூழ்குவதும்இ இரு செப்புத் தகட்டுக்கு இடையில் வைத்து சோதனை செய்தால் சுற்றக்கூடியது மான ருத்திராட்சம் ஆகியவை மிகவும் விசேஷமானவை. கழுத்தில் மாலையாக 32 ருத்திராட்சங்களும்இ கை மணிக்கட்டுகளில் 12 ருத்திராட்சங்களும்இ மேல் கையில் பதினாறும்இ மார்பில் நூற்றியெட்டும் தரிக்கலாம். ருத்திராட்ச மாலையின் பெருமை என்று சொன்னால் இ ஏக முக ருத்திராட்சத்தின் அதி தேவதையாக தத் பரமசிவனைக் கூறுவார்கள். இந்த ஏக முக ருத்திராட்சத்தை அணிவதால் சிவபெருமான் ப்ரீத்தி அடைந்து பிரம்மஹத்தி தோஷம் விலகும். இரண்டு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை ஸ்ரீகண்ட பரமசிவம். இந்த இரண்டு முக ருத்திராட்சத்தை அணிவதால் சிவசக்தி ப்ரீதி ஏற்பட்டு பசுவைக் கொன்ற தோஷம் விலகும். மூன்று முக ருத்திராட்சத்தின் அதிதேவதை அக்னி தேவனாகும். இதை அணிவதால் மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைகிறார்கள். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும். நான்கு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை பிரம்மாவாகும். இதை அணிவதால் பிரம்மா ப்ரீதி அடைவதுடன்இ மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும். ஐந்து முக ருத்திராட்சத்தின் அதிதேவதை காலாக்னி ருத்ரன். இதை அணிவதால் சதாசிவம் சந்தோஷம் அடைகிறார். செய்யக்கூடாத செயல் களைச் செய்வதால் உண்டாகும் தோஷம் விலகும். ஆறு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை சுப்ரமணியராகும். இதை அணிவதால் ஆறுமுகன் சந்தோஷம் அடைவதுடன்இ பிரம்மஹத்தி தோஷம் விலகும். ஏழு முக ருத்திராட்சத்தின் அதிதேவதையாக ஆதிசேஷன் சொல்லப்படுகிறது. இதை அணிவதால் சப்தமாதர்கள் சந்தோஷம் அடைவதுடன் களவு தோஷமும் கோபத் தீயும் விலகும். எட்டு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை விநாயகப் பெருமானாகச் சொல்லப்படுகிறது. இதை அணிவதால் அட்டவித்யேச்வரர் சந்தோஷம் அடைவதுடன்இ செய்யக்கூடாத பாவங்களைச் செய்த தோஷம் விலகுகிறது. ஒன்பது முக ருத்திராட் சத்தின் அதிதேவதை பைரவர். இதை அணிவதால் நவதீர்த்தங் களில் குளித்தால் என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் கிட்டும்; பைசாச உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும் விலகும். பத்து முக ருத்திராட்சத் தின் அதிதேவதை விஷ்ணு. இதை அணிவதால் அஷ்டதிக் பாலகர்களும் சந்தோஷம் அடைவதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஜோதிடத் தில் வரும் நாக தோஷமும்; பூத- பிரேத- பைசாச தோஷங் களும் விலகும். பதினோரு முக ருத்திராட் சத்தின் அதிதேவதை பதினோரு ருத்ரர்களாகச் சொல்லப்பட்டுள் ளது. இதை அணிவதால் 11 ருத்திரர்களும் ப்ரீதி அடைகிறார்கள். பல அஸ்வமேத யாகம் செய்த பலன் களும் பல வாஜபேய யாகம் செய்த பலனும் கிட்டும். பலன்? ருத்திராட்சம் அணிவதால் அனைத்து நற்குணங்களும் அவர்களால் பிறர் அனைவரும் பயன்பெறும் வகையிலும நன்மைகளும் அமையும். ருத்திராட்சம் தாம் அணியாவிட்டாலும்இ அப்படி ருத்திராட்சம் அணிந்தவருக்கு அன்னமளிப்பவர்களும்இ ருத்திராட்சமரத்தைப் பராமரிக்கிறவர்களும்இ புதிய ருத்திராட்சத்தை தானம் செய்பவர்களும்இ சிவபெருமானுக்கு ருத்திராட்ச ஆபரணம் அணிவிப்பவர்களும் பல சிறப்பு நலன்களைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள். ருத்திராட்சத்தால் ஜபம் செய்கிறவருக்கு அனைத்து மந்திர சித்திகளும் எளிதில் கைவரப்பெறும். ஒரு முக ருத்திராட்சம் முதல் பதினாறு முகம் ருத்திராட்சம் வரை அணிவதன் மூலம் பல பலன்களை அடையலாம். குணங்கள் சிவ தத்துவத்தில் இருக்கும் முனிவர்கள் வைத்திருக்கும் பொருட்களை கவனித்தால் சங்குஇ ஜடாமுடிஇ மண்டை ஓடுஇ ருத்ராஷம்இமிருக தோல் அனைத்தும் இயற்கையாக கிடைத்த பொருட்கள். இந்த பொருட்களை செயற்கையாக உருவாக்க முடியாது. சில பொருட்களை உருவாக்கினாலும் செயற்கை என தெரிந்துவிடும். செயற்கை நிலையில் இயங்கக்கூடிய மனிதன் இயற்கை நிலை எனும் நிர்விகல்ப சமாதியை அடைய அவனுக்கு இயற்கையன பொருட்கள் உதவுகிறது. இயற்கை பொருட்கள் மூலம் மனிதன் தனது சுயதன்மையான புருஷ நிலையை அடைய முயற்சிக்கும் பொழுதுஅதிகம் பயன்படுவதும் எளிமையாக கிடைப்பதும் ருத்ராஷம் எனும் இயற்கையானமணிகள் ஆகும். ருத்ராஷம் எனும் இயற்கையில் விளையும் இந்த காய் (விதை) கனி வடிவம் பெருவதில்லை. அத்தி பூக்காது விதை அளிப்பது போல ருத்ராஷம் விதை தன்மை கொண்டது.மித வெப்பமும் மிதமான குளிரும் கொண்ட பகுதிகளில் ருத்ராஷம் விளைகிறது. நேபாள தேசம் மேலே குறிப்பிட்ட தட்ப வெட்ப நிலையில் இருப்பதால் அதிகமான ருத்ராஷத்தை விளைவிக்கும் நாடாக திகழ்கிறது. இந்தியாவில் அதிக அளவில் ருத்ராஷம் கிடைப்பதில்லை. ருத்ராஷத்தின் வடிவம்இ அதில் உள்ள துளை அனைத்தும் இயற்கையானது. பார்க்கும்பொழுது எந்த வித செயல்படும் இல்லாத பொருளாக தெரிந்தாலும் ருத்ராஷத்திற்குள் புதைந்திருக்கும் ஆற்றல் விவரிக்க முடியாத ஒன்று. சிறந்த ருத்ராஷத்தை தேர்ந்தெடுத்துஇ ஆன்மீக ஆற்றல் கொண்டவர்களிடம் சக்தியூட்டப் பணிந்தோம் என்றால் அத்தகைய ருத்ராஷம் பிரஞ்சத்தின் சிறு மாதிரி வடிவமாகி உங்களை பிரபஞ்சத்தை கையில் வைத்திருப்பவராக மாற்றும். ருத்ரன் எனும் சிவ அம்சம் அதிக ஆற்றல் வாய்ந்தஇ வேகமான ஆன்ம உணர்வை ஊட்டும் நிலையாகும். தவநிலையிலிருந்து வெளிப்பட்டவுடன் அதிக வேகமான இயக்க நிலைக்கு சிவன் மாற்றம்மடையும் தன்மை ருத்ராம்சம் என அழைக்கப்படும். சூரியனுக்கு ஒப்பான ஆற்றல் கொண்டது ருத்ராக்ஷம் என்றும் மனதில் கொள்ளவேண்டும். சூரியன் எவ்வாறு தன்னுடைய ஆற்றல் மூலம் சூரிய மண்டலத்தை உருவக்கியதோ அது போல ருத்ராக்ஷம் தனது ஆற்றல் மூலம் அதன் சூழ்நிலை முழுவதும் கட்டுப்பட்டில் வைக்கும் சக்தி கொண்டது. ருத்ராக்ஷத்திற்கு என சில இயல்பு குணங்கள் உண்டு. சக்தியூட்டப்பட்ட ருத்ராக்ஷம் அணிந்திருப்பவர்களை மிருகம் மற்றும் விஷ ஜந்துக்கள் தீண்டாது என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்ட உண்மை. இதனால்தான் காடுகளில் தவம்செய்ய செல்லும் ரிஷிகள் தங்களின் உடல் முழுவதும் ருத்ராக்ஷத்தை அணிந்தார்கள். ருத்ராக்ஷம் என்பது நமக்கு நிகரான ஒர் உயிரின் வடிவம் என அறிந்து கொள்வது அவசியம்.நீங்கள் ருத்ராக்ஷத்தை தொடர்ந்து அணிபவராக இருந்தால் உங்களுக்கு ஏற்படும் சுக-துக்கங்களின் வெளிப்பாடு ருத்ராக்ஷத்திலும் தெரியும். உங்களின் உடலில் அதிகமான உடலுக்கு ஒத்துக்கொள்ளாத வேதிப்பொருட்கள் இருந்தால் ருத்ராக்ஷம் தனது இயல்பு நிறத்தை மற்றிக்கொள்ளும். விஷபொருட்கள் உடலில் கலந்தால் ருத்ராக்ஷம் அந்த விஷப்பொருட்களைப் பிரித்தெடுத்து தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளும். ருத்ராக்ஷம் பயன்படுத்த எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. குறிப்பிட்ட ஜாதிஇ மதஇ இன வேறுபாடு கிடையாது. ஆண்ஃபெண் என இருவரும் பயன்படுத்தலாம். வயது மற்றும் இதர விசயங்கள் தடையாக இருக்காது. ஆனால் ஒழுக்கமும் தூய்மையும் ருத்ராக்ஷத்திற்கு முக்கியமான ஒன்று. தூய்மையற்ற நிலையிலும் ஒழுக்கமற்ற நிலையிலும் பயன்படுத்தும் பொழுது ருத்ராக்ஷத்தின் இயல்பு நிலையான தன்மை பாதிக்கப்படுகிறது. மேலும் தெய்வீகமான ஒர் பொருளை எவ்வாறு பாதுகாப்போமோ அதற்குண்டான மரியாதை செலுத்துவது நல்லது. குரு தீஷை பெற்றவர்கள் தினமும் ஜெபம் செய்த பிறகு ருத்ராக்ஷ மாலையை கழுத்தில் அணிவது நல்லது.ஜெபிக்கப்பட்ட மந்திரமானது ருத்ரக்ஷ மாலையில் தொடர்ந்து அதிர்வுகளை உண்டு பண்ணி அன்ரு முழுவதும் அவர்களை ஆனந்திக்கச் செய்யும். மந்திர ஜெபம் செய்யாதவர்கள் கூட ஆன்மீக ஆற்றல் வாய்ந்தவர்களிடத்தில் பிரசாதமாக வாங்கி அணிந்து கொள்ளலாம். இதை தவிர வேறு தன்மையில் ருத்ராக்ஷம் அணிந்தால் அது ஓர் சாதாரண அணிகலனுக்குச் சமமானது. வேரு விசேஷம் அதில் இல்லை. ருத்ராக்ஷ மாலையை பயன்படுத்தும் பொழுது நன்றாக பாதுகாப்பது முக்கியமான ஒன்று. கெமிக்கல் பொருட்கள்இ சோப் மற்றும் இதர செயற்கைப் பொருட்கள் படாமல் பாதுகாக்க வேண்டும். பயன்படுத்த துவங்குவதற்கு முன்னால் ஒரு வார காலம் பசு நெய் அல்லது நல்லெண்ணையில் ஊறவைக்க வேண்டும். பின்பு நீரால் கழுவி ஈரம் போக துடைத்து விட்டு திருநீறில் ஒரு நாள் முழுவதும் வைக்கவேண்டும். பின்பு காய்ச்சாத பசும்பாலில் கழுவி நீரில் முக்கி எடுத்து நன்றாக துடைத்துக் கொள்ளவும். பின்பு பூஜையில் வைத்து ஜெபங்கள் செய்து அணியலாம். இந்த தூய்மையாக்கும் முறையை வருடத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். மாத சிவராத்திரி அல்லது மஹாசிவராத்திரி அன்று அணியுமாறு தூய்மை வேலையை துவக்க வேண்டும். ருத்ரக்ஷத்தை தூய்மை செய்ய இத்தனை வேலை செய்ய வேண்டுமா என்ற மனநிலை ஏற்படுகிறதா? இதை செய்ய வேண்டிய அவசியத்தை நிதர்சனமான விஷயத்திலிருந்து பார்ப்போம். உங்கள் உடலில் மேல்தோல் முழுவதும் இல்லாமல் வெறும் சதைப்பகுதி மட்டும் வெளியே தெரிந்தால் உங்கள் உடல் எவ்வளவு உணர்வு மயமாக இருக்கும். இதற்கு ஒப்பானது ருத்ராக்ஷத்தின் உணர்வு நிலை. அதனால் தான் மேற்பகுதியை கடினமாக்கவும்இ உணர்வு மிகாமல் சரியான நிலையை அடைய இயற்கையான பொருள் மூலம் சுத்திகரிக்க முயல்கிறோம். ருத்ராக்ஷ மணிகளில் பல வகைகள் உண்டு. ஒன்று முதல் பதினான்கு முகங்கள் வரை ருத்ராக்ஷ மணிகள் கிடைக்கிறது. முகம் என்பது ருத்ரக்ஷ மணிகள் மேல் உள்ள செங்குத்தான கோடுகள் ஆகும். ஆரஞ்சு பழத்தை தோல் உரித்தால் உள் பகுதியில் ஒவ்வொரு சுளைக்கும் இடையே தெரிவது போல உள்ள பகுதியை முகம் என அழைக்கிறார்கள். ஒவ்வொரு முக தன்மைக்கு ஏற்ப ருத்ராக்ஷம் ஆற்றலை வேறுபடுத்துகிறது என்றும் அதன்மூலம் கிடைக்கும் பலன்கள் வேறுபடுகிறது என்றும் கூறுகிறார்கள். உண்மையில் ருத்ராக்ஷத்திற்கு பலன் தருவதுஇ செல்வம் கொடுப்பது போன்ற செயல் கிடையாது.நவரத்தின கல் போல இதனையும் வியாபாரமாக்கும் யுக்தியே இந்த பிரச்சாரம். ருத்ரக்ஷத்தை தங்கம்இ தாமிரம் அல்லது பருத்தி நூலில் மாலையாக அணிவது நல்லது. நூலில் அணியும் பொழுது மட்டும் நெருக்கமாக கோர்த்து அணிய வேண்டும். ருத்ரக்ஷ வடிவங்களுக்கு என்று சில முக்கிய செயல்கள் உண்டு. இந்த ஒவ்வொரு வகையான ருத்ரக்ஷமும் அடிப்படையில் ஒன்றான செயல்களை செய்தாலும்இ சில பிரத்யேக காரணங்களுக்கும் பயன்படுத்தலாம். 1. ஐந்து முக ருத்ராக்ஷத்தை மட்டுமே (கிரஹஸ்தர்கள்) குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்கள் பயன்படுத்தலாம். 2. ஏக முகி என அழைக்கப்படும் ஒருமுக ருத்ராக்ஷம் சன்யாசிகள் மட்டுமே அணியவேண்டும். பிறர் வீட்டில் உள்ள சாலிக்ராமம் மற்றும் விக்ரஹம் போல வைத்து பூஜை செய்யலாம். 3. நான்கு முக ருத்ராக்ஷத்தை பயன்படுத்தினால் கலை நயம்இ சங்கீத ஞானம் போன்ற கலையாற்றல் வளரும். குழந்தை பிறப்பு இல்லாமல் சிரமப்படுபவர்களுக்கு நான்கு முக ருத்ராக்ஷத்தை பயன்படுத்துவதால் தடை நீங்க வாய்ப்பு உண்டு. 4. துடிப்பு இல்லாமல் சோர்வுடன் இருக்கும் பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆறுமுக (ஷண்முகி) ருத்ராட்சம் நல்ல பலனை அளிக்கும். 5. மணவாழ்க்கையில் வாழ்க்கைத் துணைவருடன் பிரிவு உள்ளவர்கள் கௌரி சங்கர் என்ற ருத்ராட்ச வகையை அணிந்தால் மண வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. தனியாக ஒரே ஒரு ருத்ராக்ஷம் அணிவதை விட மணிமாலையாக அணிவது நல்லது. பஞ்சமுக ருத்ராக்ஷத்தை தவிர வேறு வகையான ருத்ராக்ஷம் அரிது. எனவே நமது பஞ்ச ப்ராணன்களில் சக்தி நிலை மேம்பட 108 மணிகள் கொண்ட ஐந்துமுக ருத்ராக்ஷத்தை அணிந்தால் அனைத்து மேம்பாட்டையும் பெறலாம். ருத்ராக்ஷத்தில் போலியான மணிகள் வருவதுண்டு. இதை எவ்வாறு கண்டறிவது என குழப்பம் அனைவருக்கும் உண்டு. ருத்ராக்ஷம் தனக்கெனசில தனித் தன்மைகளைக் கொண்டது. தாவர வகையாக இருந்தாலும் நீரில் மூழ்கிவிடும். மரவகைகள் நீரில் மிதப்பதைப் போல மிதக்காது. ருத்ராக்ஷத்தில் செயற்கையாக எதையும் இணைக்க முடியாது. ருத்ராக்ஷ மணியின் துளைகளுக்கு அருகே செப்பு நாணயங்களை வைத்தால் ருத்ராக்ஷம் காந்தப்புலம் விலகுவதை போல வேறு திசைக்கு மாற்றமடையும். ருத்ராக்ஷம் போன்ற உருவத்தில் இருக்கும் சில மரவகைகள் உண்டு. இதை” பத்ராட்சம் ” என அழைப்பார்கள். இதில் சாயத்தைக் கொடுத்து ருத்ராக்ஷம் போல விற்பனை செய்வார்கள். தகுந்த பரிசோதனைக்குப் பிறகு வாங்குவது நல்லது. ஜோதிட ரீதியாக ருத்ராக்ஷம் பயன்படுமா என்றால் முடியும் என்றே கூறலாம். ஒருமுக ருத்ராக்ஷம் முதல் அதன் வரிசைகிரமமாக உள்ள முக அமைப்புகள் சூரியன் முதல் சனி வரை உள்ள வானியல் அடிப்படையான கிரக வரிசைக்கு சமமானவை. எந்த கிரகத்தின் ஆற்றல் தேவையோ அந்த கிரகத்தின் அமைப்பு கொண்ட ருத்ராக்ஷத்தில் கிரகத்தின் மூலமந்திரத்தை ஜெபம் செய்து அணியலாம். ருத்ராக்ஷத்தை பல லட்ச ரூபாய் விலையில் விற்கவும் வாங்கவும் ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். பத்திரிகையிலும்இ தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் செய்கிறார்கள். பல கோடி ரூபாய் செல்வம் சேர ருத்ராக்ஷம் அணியுங்கள் என பிரச்சாரம் செய்கிறார்கள். எனக்கு தெரிந்தவரை எந்த ஒரு உடல் முழுவதும் ருத்ராக்ஷம் அணியும் எந்த சிவனடியாரும் கோடிஸ்வரராக இருந்து பார்த்ததில்லை. பிறருக்கு கோடிகளை அளிக்கும் ருத்ராக்ஷத்தை விற்கும் வியாபாரி ஏன் கோடீஸ்வரன் ஆவதில்லை என சிந்தித்துப் பார்த்தால் நிதர்சனம் புரியும். ருத்ராக்ஷத்தைக் கொண்டு கோடீஸ்வரனாக முடியாது. ஆனால் அண்டத்தைப் படைத்த ஈஸ்வரனாக முடியும். லஷ்மியை அடைய முடியாவிட்டாலும் ஆன்ம லஷியத்தை அடையமுடியும். பிறப்பு இறப்பு அற்ற நிலையை அடையும் முக்தி எனும் விருட்சத்தை வளர்க்க ருத்ராக்ஷம் என்ற விதையை விதையுங்கள். இறந்த வீட்டிற்கு செல்லும் பொழுது சிலர் அணிய கூடாது என சொல்லுவார்கள். ருத்திராட்சத்தை காக்கும் கடவுளாக பார்க்க வேண்டும். எங்கெல்லாம் உங்கள் உடல்இமனம் மற்றும் ஆன்மா தவறான சக்திக்கு ஆட்படுமோ அங்கெல்லாம் அணியலாம். எப்பொழுதும் ஜபம் செய்த மாலையை கழுத்தில் அணிவது நல்லது. ஜபிக்கபட்ட மந்திரங்கள் அதில் நிறைந்திருக்கும். உங்கள் அலைபேசியில் சார்ஜ் செய்து விட்டுஇ வீட்டில் வைத்திருந்தால் என்ன பலன்? ஜபம் செய்ததும் மாலையை அணிந்தால் அன்று வித்தியாசமான உள்ளுணர்வு இருப்பதை உணரலாம். முயற்சித்து பார்த்து விட்டு சொல்லுங்கள். ஆன்மீக குருஇ ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர்கள் மூலம் மந்திர உபதேசம் பெற்று ஜபம் செய்ய துவங்கலாம். ஜபம் செய்யும் மந்திரம்இ மாலை அனைத்தும் அவர்க்ளின் கருத்தாக இருக்கவேண்டும். நாம் முடிவு செய்ய கூடாது. இரு முக ருத்திராட்சம் தம்பதிகளுக்கு நல்லது. அதைகாட்டிலும் கெளரிஷங்கர் எனும் வகை உண்டு. அது சிறப்பு வய்ந்தது. இரவில் அணிய கூடாது என சொல்லுவதற்கு காரணம். தாம்பத்திய காலத்தில் ருத்திராக்‌ஷம் அசுத்தமாக கூடாது என்பதற்காக தான். உடலுறவு காலத்தில் உடலின் ப்ராண சக்தி அதிகமாக குறைவு ஏற்படுவதால்இ அத்தருணத்தில் ருத்திராக்‌ஷம் செயல் இழக்க வாய்ப்பு உண்டு. ருத்திரஷத்தை வேறு எந்த பொருளுடனும் இணைக்காமல் தனியே அணிவதே சிறந்தது. ஸ்படிகம்இ முத்துஇ பவளம் என எதையும் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. ஒன்றரை அடி உயர அபூர்வ ருத்ராட்சம்! ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மகேஷ்வரன், ஒன்றரை அடி உயர ருத்ராட்சத்தை பாதுகாத்து வருகிறார். கிருஷ்ணன்கோவில் காயத்ரி தியான பீடத்தை நடத்தி வரும், ஸ்ரீவில்லிபுத்தூர் வக்கீல் மகேஸ்வரன், ருத்ராட்ச மரம் வளர்க்கிறார். தியான பீடத்திற்கு வந்த, வட மாநில பக்தர்கள், முக்கால் அடி, ஒரு அடி, ஒன்றே கால் அடி, ஒன்றரை அடி உயரமுள்ள ஒரு முக ருத்ராட்சங்கள் நான்கை வழங்கினர். இதை அவர் பாதுகாத்து வருகிறார். அவர் கூறியதாவது,"" 21 முகம் வரை ருத்ராட்சம் கிடைத்தாலும், ஒரு முக ருத்ராட்சம் கிடைப்பது அரிது. இதை வீட்டில், செம்பு, பித்தளை, வெள்ளி குடங்களில் , கண்ணாடி கூண்டில் வைத்து பாதுகாத்து வருகிறேன். மேலும், கவுரி சங்கரம், திரிவேணி அம்சம், சூரிய கலை, சந்திர கலை உள்ளிட்ட வடிவங்களிலும், எட்டு அபூர்வ ருத்ராட்சங்களும் உள்ளன.
at March 22, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

கள்ளக்காதல் ரகசியம்

கள்ளக்காதல் ரகசியம்

குரு போக காரகன், சுக்கிரன் காம காரகன். இந்த இருவரும் இணைவது, பார்ப்பதில் நல்லதும் கெட்டதும் இருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களுக்கும் பாவ கிரக பார்வை, நீச்ச சேர்க்கை ஏற்பட்டால் ரகசிய உறவுகள் ஏற்படலாம். 8-ம் இடத்தில் குரு அல்லது சுக்கிரன் இருப்பதால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் காதல் கொள்வதற்கான, கள்ளக்காதல் ஏற்படுவதற்கான சூழல் உள்ளது.


காமம், காதல், கள்ள உறவுகள் ...
ஜோதிடம் ஒரு முழுமையான அறிவியல்.ஒழுங்காக உழைத்துப்பிழைக்கத் தெரியாத பல சோம்பேறிகள் ஜோதிடத்தொழிலுக்கு வந்து ஜோதிடத்தின் மரியாதையைக் கெடுத்துவிட்டனர்.
ஒரு மனிதன் ஏன் காதல் வயப்படுகிறான்? ஏன் தகாத உறவுகள்..? பொருத்தம் பார்த்த கல்யாணம் ஏன் தடுமாற வைக்கிறது? கட்டுப் படுத்த முடியாத காமம் ஏன் ஒருவர் வாழ்க்கையை புரட்டி போடுகிறது..?  ஆயில்யம், சுவாதி, அவிட்டம், அசுபதி,திருவாதிரை இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அதே நட்சத்திரங்களில் பிறந்தவர்களை திருமணம் செய்வதே நல்லது.மற்ற நட்சத்திரங்களில் பிறந்தவரை மணம் முடித்தால் ஒருவரின் புத்திசாலித்தனத்திற்கு மற்றவர் அடிமையாகத்தான் வாழ வேண்டியிருக்கும்.

இன்று ரோட்டோரக்கடைகளில் ஒரே நிமிடத்தில் திருமணப்பொருத்தம் பார்ப்பது எப்படி? என ரூ.10/-க்கு புத்தகம் விற்பனையாகிக்கொண்டு இருக்கிறது.அதில் வெறும் நட்சத்திரப் பொருத்தம் மட்டும்தான் இருக்கும்.அது மட்டும் கொண்டு ஒரு திருமணத்தை முடிப்பதால்தான் இன்று நீதிமன்றங்களில் தினமும் விவாகரத்து வழக்குகள் குவிகின்றன. தவிர, திருமணத் தரகர்கள் இன்றைய காலகட்டத்தில் ஒரு திருமணம் நடப்பதற்காக என்னவேண்டுமானாலும் செய்கின்றனர்.உதாரணமாக ஜாதகத்தையே போலியாக தயாரிக்கின்றனர். சில பெண்கள் யோகக்காரிகளாக இருப்பர்.அது முறையாகக் கற்ற ஜோதிடர்களுக்கு மட்டுமே தெரியும்.அதனால் தான் மனைவியை மகாலட்சுமி என்று அழைக்கிறோம். அது போன்ற யோக்காரப்பெண்களால்தான் உங்களின் தெருவில் வாழும் சாதாரண ஆண் சில வருடங்களில் கோடீஸ்வரனாகியிருக்கின்றனர்.  இன்றைய காலகட்டத்தில் உங்கள் ஜாதியைச் சேர்ந்த ஜோதிடரிடம் ஜாதகம் பார்க்காமல் இருப்பது மிக நன்று.(இதில் விதிவிலக்கும் உண்டு). பல வருடங்களுக்கு முன் அந்த நமது ஜாதியை சேர்ந்த ஜோதிடருக்கும் நமது குடும்பத்தாருக்கும் ஏதாவது பகை ஆகியிருக்கும்.நாம் மறந்திருப்போம்.அவர் பலனில் சூப்பராக பழிவாங்கிவிடுவார். சில பெண்களை ஒருபோதும் மணம் முடிக்ககூடாது.ஏனெனில், சில குறிப்பிட்ட கிரகநிலையில் பிறந்த பெண்கள் திருமணம் முடிந்தபின்னரே விபச்சாரியாகிறார்கள்.தகுந்த ஜோதிடரைக் கொண்டு பெண்ணின் பிறந்த ஜாதகத்தைப் பார்த்து மணம் முடிக்கவும். காதல் படுத்தும் பாடு - பொருத்தம் பார்க்காமல் நிறைய மணங்கள் நடக்கின்றன. நல்லவிதமாய் பொருத்தம் இருந்தால் சரி.. பொருந்தாதவை ... உடனே மன (மண) முறிவை ஏற்படுத்தி விடுகின்றன. சில சினிமா நடிகைகளை பார்த்தால் , பாவமாக இருக்கும். அவர்கள் சொந்த வாழ்வு அவ்வளவு சோகமாக இருக்கும்.. பணம், புகழ் இருக்கும். ஆனால் வாழ்க்கை துணை... ...?
தாலி கட்டினால் தான் மனைவி என்று இல்லை. இந்த கலி காலத்தில் விருப்பத்துடன் உறவு கொண்டாலே அவர் மனைவி ஸ்தானம் தான். ஒருவர் ஜாதகம் பார்க்கும்போதே தெரியும். இவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள்  என்று. அப்படி என்றால் அவர் தாலி கட்டி குடும்பம் நடத்துவார் என்று இல்லை.  .


ஒருவருக்கு ஏற்படும் காம கொந்தளிப்பு அவர்களை விலை மாதுக்களிடம் செல்ல வைக்கிறது. அவர்களின் ஜாதக நிலைமை யாருக்கு தெரியும்? அப்படி செல்பவர்களுக்கு , அந்த பெண்களின் ஜாதகப்படி கண்டிப்பாக இவரது வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.  அதனால் தான் பொருத்தம் பார்த்து மனம் முடித்து தாம்பத்யம் தொடங்குகின்றனர்.  சில பெண்களை தொட்ட உடனே , பெரிய அளவில் பிரச்னைகள் , நிம்மதியின்மை ஏற்படும்.. .... சில பெண்களை தொட்டாலே மரணம் தான்.. சில பெண்களுடன் உறவு கொண்டால் அவரது ஆண்மை பறிபோய் விடும்.....

மனைவியை தவிர மற்றவரை பார்த்து ஏங்குவதொடு  நிறுத்திக் கொள்ளுங்கள். ... தப்பி தவறி தொட்டு விட்டால்... எதுவும் நடக்கும்..  எதற்கு வம்பு? 


at March 22, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

இந்துக்கள் அதிகம் மதம் மாறுவதற்கு காரணம் என்ன?

இந்துக்கள் அதிகம் மதம் மாறுவதற்கு காரணம் என்ன?

பிற மதத்தவர்கள் மூளைச் சலவை செய்வது, கஷ்டப்படுபவர்களை தேர்ந்தெடுத்து சேலை, பணம் கொடுத்து கரெக்ட் செய்வது, நோயை குணமாக்குகிறேன் என்று ஏமாற்றி வித்தைகள் காட்டுவது, ஜாதி ஏற்றத்தாழ்வு இருப்பது என்று ஏகப்பட்ட காரணங்கள் நம்மில் பலருக்கும் தோன்றலாம். ஆனால், நன்கு யோசித்து பார்த்தால் வேறு ஒரு முக்கிய காரணம் இதன் பின்னணியில் இருப்பது தெரியும்..

சுதந்திரம். இதுதான், இந்து மதத்தின் பலவீனம். பலமும் அதுதான். மதமாற்றத்திற்கு இம்மக்கள் உள்ளாகுவதற்கு, சுதந்திரம் முக்கிய காரணம். மலைக்காடுக்குள் மரங்களை கும்பிட்டு, இலைதழைகளை கட்டிக் கொண்டு ஜிம்பாலே, ஜிம்பாலே என்று ஆடும் மலைவாசிகளாகட்டும், வேத மந்திரங்கள் ஓதி, யாகம் வளர்க்கும் பிராமணர்களாகட்டும் இந்துக்களாகவே கருதி அரவணைப்பதுதான் இந்த மதம்.

வழிபடும் முறை முக்கியமில்லை, நோக்கம்தான் முக்கியம் என்ற நல்ல கொள்கை கொண்டது இந்து மதம். இதனால்தான், ஒரு இந்து என்பவன் இப்படி, இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த வரைமுறையும் வகுக்கப்படவில்லை. தினமும் இத்தனை முறை சாமி கும்பிட வேண்டும், ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களில் எல்லோரும் கூடி நின்று வழிபட வேண்டும், முக்கியமாக, பகவத் கீதையை படித்தே ஆக வேண்டும் என்று எந்த கட்டுப்பாடும் இந்து மதத்தில் கிடையாது.

ஆனால், பிற மதங்களில் இதுபோன்ற கட்டுப்பாடு மிக கடுமையாக செயல்படுத்தப்படுகிறது. குர்ஆன் படிக்காத முஸ்லீமோ, பைபிள் படிக்காத கிறிஸ்தவரோ இருக்க முடியாது. அவ்வாறு செய்யாவிட்டால், அது பெரும் பாவம் என்று போதிக்கப்படுகிறது. ஆனால், பகவத்கீதை எப்படி இருக்கும் என்று தெரியாதவர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ள முடியும். அந்த அளவுக்கு இந்து மதத்தில் சுதந்திரம் உள்ளது. இந்த சுதந்திரத்தை பயன்படுத்தி நம் வழியில் நாம் சென்றுகொண்டிருந்தால் பரவாயில்லை.

ஆனால் தனது மதத்தை பற்றியோ, கீதையை பற்றியோ கூட தெரியாத ஒருவன், பிற மதத்தவர்கள் தங்கள் மதத்தை பற்றி படித்ததை பிரமாண்டப்படுத்தி சொல்லும்போது, வாயில் கொசு போவது தெரியாமல், ஆ.. என்று வாய் திறந்து கேட்டுக்கொள்கிறான். நமது மதம் எத்தகைய பாரம்பரியம் மிக்கது, ஹரப்பா, மொகஞ்சதாரோ காலத்தில் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களில் கூட சிவபெருமான், நாராயணர் உருவங்கள் உள்ளதே, 2000 வருடங்கள் பழமையான திருக்குறளில் கூட, விஷ்ணுவை பற்றி புகழப்பட்டுள்ளதே என்பதையெல்லாம் இந்து தெரிந்து வைத்திருக்க மாட்டான்.

இந்து மதம் கொடுத்த சுதந்திரத்தை நாம் சரியாக பயன்படுத்தாமல், முட்டாள்களாக வாழ பயன்படுத்திவிட்டோம். இந்துக்கள் மதத்தை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்வதில்லை. அது நல்ல விஷயமாக இருக்கலாம். ஆனால் மதம் மாற்றுவோர்கள் நம்மை சுற்றி பெருத்துவிட்ட இக்காலகட்டத்தில், இந்து மதத்தின் பெருமையை அறிய வேண்டியது அவசியம். இந்துக்கள் எப்போதும் தங்கள் வழியை மட்டும் பார்த்துக்கொண்டு செல்பவர்கள். எப்போதும் மதத்தை பற்றியே பேசுவோரை நாம் எரிச்சலோடுதான் பார்ப்போம். ஆனால், அதுவே பிற நாட்டுக்காரர்களுக்கு சாதகமாகிவிட்டதை தன்மானம், நாட்டுபற்று உள்ளோர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தனது தந்தை, தாய் பெருமையை உணராதவன்தான் அடுத்த வீட்டுக்காரர்களை பற்றி பெருமையாக நினைத்துக்கொண்டிருப்பான். எனவே, இந்து மதத்தை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். அதில் அக்கறை காட்டுங்கள். அப்போதுதான், நமது கலாச்சாரமும், தேசப்பற்றும் காப்பாற்றப்படும். அல்லது மீண்டும் இந்த நாடும், நாட்டு மக்களும் அடிமையாக மாறுவார்கள். எல்லோரையும் நேசிப்பது இந்துக்கள் குணம். நல்லது. ஆனால், முதலில் உன்னை நேசிக்க கற்றுக்கொள்.


at March 22, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

மச்ச ஜாதகம் பெண்களுக்கு

மச்ச ஜாதகம் பெண்களுக்கு

ஒரு பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்கிற இடத்தில் மச்சம் இருந்தால் அவளுக்கு உயர் பதவியிலும் பெரிய அந்தஸ்திலும் உள்ள லட்சாதிபதியான கணவன் அமைவான். அவனுக்கு வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும்.

நெற்றியின் வலது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் அதிர்ஷ்டம் நிறைந்தவளாக இருப்பாள். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கவளாக இருப்பாள். யார்க்கும், எதற்கும் அடங்கிப் போகாத குணம் இருக்கும்.

நெற்றியின் இடது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் ஒழுக்கத்தில் சிறந்தவளாக இருப்பாள். அதே மச்சம் கருப்பாக இருந்தால் அப்பெண் அற்பகுணம் உடையவளாகவும், வேண்டாத நபர்களின் சகவாசம் உள்ளவளாகவும் இருப்பாள்.

மூக்கின் மீது எங்காவது மச்சம் இருந்தால் அப்பெண் எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் மிகுந்தவளாக இருப்பாள்.

மூக்கின் நுனிப்பகுதியில் மச்சம் இருந்தால் அப்பெண்ணுக்கு அமையும் கணவர் மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார்.

மேல் உதடு அல்லது கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அவள் அதிர்ஷ்டம் மிகுந்தவளாக, நல்லொழுக்கம் உடையவளாக, வாசனை பொʊருட்களின் மீது பிரியம் உள்ளவளாக, சிறந்த கணவனை அடைந்தவளாக இருப்பாள்.

மோவாயில் மச்சம் உள்ளவள் மிக உயர்ந்த எண்ணங்களைப் பெற்றிருப்பாள். பொறுமையும், அமைதியும் அவளின் உடன் பிறந்ததாக இருக்கும். குணத்திலும், தோற்றத்திலும் அழகான ஆணை கணவராக அடைந்திடுவாள்.

இடது கன்னத்தில் மச்சம் உள்ளவள் மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் உள்ளவளாக இருப்பாள். அவள் விரும்பியதை செய்து முடிக்க பலர் காத்திருப்பார்கள்.

வலது கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் கஷ்டங்கள் பலவற்றை சந்தித்து முன்னேற்றம் அடையும் திறனைப் பெற்றிருப்பாள். கஷ்டமும்_சந்தோஷமும் சமமாக அனுபவிப்பாள்.

கழுத்தில் வலப்புறத்தில் மச்சம் உள்ளவள் முதல் பிரசவத்தில் ஆண் குழந்தையை பெறுவாள். பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டிற்கும் அதிர்ஷ்டத்தை தேடித் தருவாள்.

தலையில் மச்சம் : தலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணமும் நிறைய இருக்கும். வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது.

ஆடம்பர வாழ்வு :  நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவள் அதிகார பதவியில் அமர் வாள். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும். இரு புருவத்துக்கிடையே மச்சம் இருந்தா லும் மேற்சொன்ன பலனே. நெற்றியில் வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை வாட்டும். ஆனாலும் நேர்மையுடன் வாழ்வாள்.

கன்னத்தில் மச்சம் காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம் இருந்தால் வாழ்க்கை வசதிகர மாக இருக்கும். சந்தோசம் குடிகொண்டு இருக்கும். இதுவே வலதுபக்கம் என்றால் வறுமை வாட்டும்.

இடது தாடையில் மச்சம் இருந்தால் ஆள் அழகாக இருப்பாள். ஆண்கள் இவளைத் துரத்தித் துரத்திக் காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணமுடையவள். வலது தாடையில் மச்சம் என்றால் பிறரால் வெறுக்கப்படுவாள்.

கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாக இருக்கும்.

மூக்கு மீது மச்சம் இருந்தால் மிகப் பெரிய அதிர்ஷடம். நினைத்ததெல்லாம் நடக்கும். ஆடம்பர வாழ்வு, அந்தஸ்து இருக்கும். சமூக மதிப்பு கிடைக்கும்.

காதுகளில் மச்சம் இருந்தால் ஏகப்பட்ட செலவு செய்வார்கள். என்ன செலவு செய்தாலும் அதற்குத் தக்கபடி பணமும் வரும். சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு இருக்கும்.

நாக்கில் மச்சம் இருந்தால் அவள் கலைஞானம் கொண்டவளாக இருப்பாள். ரசனை அதிகம் இருக்கும்.

கழுத்தில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் 7 முறை அதிர்ஷடம் அடிக்கும்.

இடதுபக்க தோளில் மச்சம் கொண்டவள் ஏகப்பட்ட சொத்துகளுக்கு அதிபதியாவாள். பரந்த மனப்பான்மையுடன் பிறருக்கு தான தர்மம் செய்யும் குணம் இவளிடம் இருக்கும்.

மார்பில் மச்சம் : பெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள். அதுவே இடதுபுறமாக மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம். வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் போராட்டம் இருக்கும்.

நெஞ்சின் இடப்பகுதியில் மச்சம் இருந்தால் அவளுக்கு காலாகாலத்தில் திருமணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான்.

தொப்புளுக்கு மேலே, வயிற்றில் மச்சம் காணப்பட்டால் அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள்.

தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை. தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் வறுமையும், செல்வமும் மாறி மாறி வரும்.

முதுகில் மச்சம் : கண்களுக்குத் தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும். உடலில் ஆரோக்கியம் திகழும்.

உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டு ஆகியவற்றில் எங்கு மச்சம் இருந்தாலும் அவளது குடும்பம் இனிமையாக இருக்கும். கலாரசனை உடைய பெண் இவள். சிறந்த நிர்வாகியும்கூட.

பிறப்புறுப்பில் மச்சம் இருக்கும் பெண்ணைவிட வேறு ஒரு அதிர்ஷடசாலி பெண் இருக்க மாட்டாள். உயர்ந்த பதவிகள் தேடி வரும்.

தொடை : இடதுதொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷடப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமை அடைவாள். வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித் தனமும் இருக்கும்.

இடது முழங்காலில் மச்சம் இருக்கும் பெண், புத்தி கூர்மையானவளாகவும், தன்னம்பிக்கை உடையவளாகவும் இருப்பாள். அதுவே வலது முழங்காலில் என்றால் அவள் பிடிவாதக்காரி.
at March 22, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

ஏழரைச் சனி என்ன செய்யும்?

ஏழரைச் சனி என்ன செய்யும்?

காலத்தை கி.மு.& கி.பி. என வரலாறு பிரிக்கிறது. அதுபோல வாழ்க்கையை ஏ.மு.& ஏ.பி. என ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறது. அதாவது ஏழரைச் சனிக்கு முன், ஏழரைச் சனிக்குப் பின் என்று வாழ்வு கனிகிறது. ஏழரைக்குப் பிறகு வரும் தெளிவும் நிதானமும் ஆச்சரியமானது.

இந்த ஏழரைச் சனி என்னதான் செய்யும்? உங்கள் ராசிக்குப் பின் ராசியிலும் உங்கள் ராசிக்குள்ளும் உங்கள் ராசிக்கு அடுத்த ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம். சிறு வயதில் வரும் முதல் சுற்றை மங்கு சனி என்றும் வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை பொங்கு சனி என்றும் கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை கங்கு சனி என்றும் அழைப்பர்.

முதல் சுற்று

பிறந்ததிலிருந்து இருபது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கம் சிறுவர்களிடம் மிகத் தெளிவாகக் காணலாம். சனியின் முழுத் திறனும் இவர்களிடம் ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படும். முதல் சுற்று, முடக்கி முயற்சியை தூண்டும். ‘‘எதுக்கெடுத்தாலும் கத்தி கலாட்டா பண்றான்; எத்தனை தடவை அடிச்சாலும் துடைச்சுப் பொட்டுட்டு மறுபடி மறுபடி தப்பு பண்றான்; எத்தனை தடவை டாக்டர் கிட்ட காண்பிச்சாலும் மூக்கு ஒழுகிட்டே இருக்கு...’’ என்று பலவிதத்தில் பாதிப்புகள் இருக்கும். ஏழரைச் சனியின்போது பிறக்கும் குழந்தைகளின் பெற்றோரிடம் டாக்டர் கையெழுத்து வாங்கிக் கொள்ளும் அளவுக்கு உடல்நிலை பாதிக்கும்.

குழந்தைப் பருவம் முதல் டீன் ஏஜ் வரையிலான இந்த சுற்றில் பெற்றோருக்குள் கருத்து மோதல், பிரிவு, சந்தேகத்தால் சண்டை என்று பிரச்னைகள் வந்து நீங்கும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், கணவன் மனைவிக்குள் நேரடியாக எந்தப் பிரச்னையும் இருக்காது. ‘‘அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்க’’ என்று மூன்றாவது நபர் தலையீட்டால்தான் பிரச்னை உருவாகும். அதிலும் முக்கியமாக குறுகிய காலத்தில் அறிமுகமாகி நெருங்கிய நண்பராக மாறுவோரால்தான் கருத்து மோதல் பெரிதாகும். தேன் கூடாக இருந்த குடும்பம் தேள் கொட்டின மாதிரி ஆகும் சூழ்நிலை நேரும். 13லிருந்து 19 வரையுள்ள ஏழரைச் சனி நடக்கும் பிள்ளைகளுக்கு செல்போன் தராதீர்கள். கூடா நட்பினில் சிக்குவார்கள். திணறி வெளியே வருவார்கள். அவர்களை கண்கொத்தி பாம்பாக பாதுகாக்கவேண்டும்.

மந்தம், மறதி, தூக்கம் என்று இருப்பார்கள்.‘‘அடங்காதே, அலட்சியப்படுத்து’’ என்ற மனநிலை! பிறகு, ‘‘அப்பவே அம்மா சொன்னாங்க. அப்பா சொன்னாங்க நான் கேட்கலை’’ என்று வருந்துவார்கள். ‘‘வீட்ல அடங்காத பிள்ளை ஊர்ல அடங்கும்.’’ இதுதான் சனிபகவானின் திருத்தும் முறை. தடவித் தடவி சொன்னால் கேட்காத பிள்¬ளயை தடியெடுத்து திருத்தும் வாத்தியார்தான் சனிபகவான். ‘‘சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டுப்போடா’’ என்றால், ‘‘எங்கயோ இருக்கற சாமி என் பிரேயருக்குத்தான் வெயிட் பண்ணிகிட்டிருக்காரா’’ என்பார்கள். ஆனால், இடரும்போதும், சிக்கலில் சிக்கும்போதும் தாயின் சொற்கள் நினைவுக்கு வரும். ‘‘மத்தவங்க சொல்றபோது செய்யக் கூடாது; தனக்குன்னு எப்போ தோணுதோ அப்போ செய்யணும்’’ என்று முரண்டு பிடிப்பார்கள். தாமதித்து எதையும் செய்ய வைக்கும்.

ஏழரைச் சனியில் பெறக்கூடிய அனுபவங்களும் அவமானங்களும் காயங்களும் வடுக்களாகி, வாழ்க்கை முழுதும் மறக்க முடியாதபடி இருக்கும். இப்படி வருத்தப்பட வைத்தே வாழ்க்கையை வளர்ப்பார், சனிபகவான். அப்போ என்னதான் செய்யறது?‘‘குழந்தைகளை விட்டுப் பிடியுங்கள். நீ இப்படிப் பண்ணா இதுதான் ரிசல்ட்’’ என்று அன்பை மனதிற்குள் பூட்டி, வெளியே கண்டிப்பு காட்டுங்கள்.

சனி நேர்மறையாக மாறுவார். சனி தர்மதேவன். அதர்மத்தில் திருப்பி விட்டு சோதிப்பார். வலையில் மாட்டாது வெளியேற வேண்டும்; அதற்கு சில உபாயங்களையும் சொல்லித் தருவார்; இவற்றை நாம்தான் சரியாகப் புரிந்துகொண்டு கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். ‘‘நீ படிக்கறியோ இல்லையோ. வாராவாரம் அந்த கோயிலுக்கு மட்டும் போயிட்டு வந்துடு. காலையில சீக்கிரமா எழுந்திரு. பத்து நிமிஷம் சுவாமிகிட்ட உட்கார்ந்து நான் சொல்ற சுலோகத்தை மட்டும் சொல்லு’’ என்று பழக்குங்கள். சனி என்கிற கரி, வைரமாக மாறும் அதிசயம் நிகழும்.

இரண்டாவது சுற்று

இருபத்தேழு வயதுக்கு மேல் யாருக்கு ஏழரைச் சனி நடந்தாலும் அதற்கு பொங்கு சனி என்று பெயர். பறித்தல், பாதுகாத்தல், பலமடங்காக பெருக்கித் தருதல் & இதுதான் இரண்டாவது சுற்றின் கான்செப்ட். உள்ளுக்குள் கிடந்த திறமைகளை பூவாணம்போல பொங்க வைக்கும். செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். ஆனால், கொஞ்சம் கெடுக்கும். அதனால்தான் கொடுத்துக் கெடுப்பவர்; கெடுத்து கொடுக்கிறவர் என்ற பெயர் சனிக்கு உண்டு. ‘‘சும்மா, ஒண்ணுமே இல்லாத ஒட்டாண்டியா வந்தான். இப்போ உசரத்துக்கு போயிட்டான்’’ என்பார்கள். காசு, பணம், பதவி, கல்யாணம், சொத்து, சுகம் எல்லாவற்றையும் கொடுப்பார். ஆனால், நடுவில் பிடுங்கிக் கொள்வார். ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?

‘‘என்னால்தான் எல்லாமும் நடக்கிறது, எனக்கு மிஞ்சி என்ன இருக்கு!’’ என்று ஆணவத்தோடு பேசுவோரின் அனைத்து செல்வங்களையும் பறிக்கிறார். ஏனெனில், இந்த இரண்டாவது சுற்றின்போது சில மிதமிஞ்சிய செல்வ வளத்தால் தாமே சில பிரச்னைகளை உருவாக்கிக் கொள்வார்கள். ‘‘நான் யார் தெரியுமா?’’ என்று ஆணவத்துடன் தன் செல்வாக்கை நிரூபிக்க துணிவார்கள். தான்தான் பெரிய ஆள் என்று அடக்கமற்ற மனோநிலையில் திரிவார்கள். அப்படி மாறிய அடுத்த நிமிடமே சனி உங்களை ஆட்டம் காண வைக்கும் முயற்சியில் இறங்குவார். ஆகவே பேச்சிலோ, செயலிலோ கர்வக் கொம்பு முளைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சனிபகவானால்தான் நம் அறிவுக்கும் சக்திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கிறது என்பதை உணருவோம். ‘‘நம்ம கையில எதுவும் இல்லை’’ என்கிற சரணாகதி தத்துவமும் புரியும். ஏழரைச் சனியின்போது முடிந்தவரை கோர்ட் கேஸ் என்று போகக் கூடாது. பத்து லட்ச ரூபாய் பொருளுக்காக காக்கிக்கும் கருப்புக்கும் இருபது லட்ச ரூபாய் செலவு செய்வீர்கள். எல்லா வி.ஐ.பி.யையும் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால் ‘‘இந்த விஷயத்தைப்போய் நாம எப்படி சொல்றது! அவர் என்னை தப்பா நினைச்சிட்டா...?’’ என்று தயங்குவீர்கள்.

அப்போது எப்படித்தான் இருக்க வேண்டும்?

வசதி இருக்கும்போது எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருங்கள். கூழ் கிடைத்தாலும் குடியுங்கள். ஸ்டார் ஹோட்டலில் இருந்தாலும் கூழ் குடிக்கும் மனோநிலையிலேயே இருங்கள். அத்தனைக்கும் ஆசைப்பட்டு அத்தனையும் தனக்கே என்று வாரி சுருட்டும்போது சனிபகவான் சும்மாயிருக்க மாட்டார். அமைதியாக இருந்தால் வேலை பார்க்கும் நிறுவனத்தையே விலை பேசும் நிலைக்கு உயர்த்துவார். இந்த இரண்டாவது சுற்றில்தான் வியாபாரம் விருத்தியாகும். அதனால் தைரியமாக தொழில் தொடங்கலாம். ‘‘ரெண்டாவது ரவுண்டுல ரெட்டை வருமானம்’’ என்றொரு வாக்கியம் உள்ளது.

ஆனால், பாதை மாறினால் அதல பாதாளம்தான். ‘‘சார், நம்ம பிராண்டுக்கு மார்க்கெட்ல தனி மவுசு இருக்கு. அதனால டூப்ளிகேட்டையும்நாமே விடுவோம்’’ என்று சனி சிலரை அனுப்பி சோதிப்பார். ஏனெனில், ஒரு மனிதனின் மனதை சோதித்துப் பார்ப்பதில் இவருக்கு நிகர் எவருமிலர். ‘‘சாப்பாட்டுக்கே வழியில்லாம வந்து சேர்ந்தான். சரின்னு சேர்த்துகிட்டேன். அவன் கொடுத்த ஐடியாவை நம்பினேன். இப்போ அம்போன்னு நிக்கறேன். தப்பான வழியை காட்டிட்டு என்னையும் காட்டிக் கொடுத்துட்டான்’’ என்பீர்கள். நேர்மை என்கிற வார்த்தையை கல்வெட்டாக பதித்துக் கொள்ளுங்கள். ஏழரைச் சனியின் முடிவில் நீங்கள்தான் அந்த வட்டாரத்தின் முக்கியஸ்தர். செல்வந்தர்.
கோடிகோடியாக வைரம், வைடூரியம் குவிந்திருக்கும் திருப்பதியில், வெங்கடாஜலபதிக்கு மண் சட்டியில், தயிர் சாதம்தான் நிவேதனம். பெருமாளே அத்தனை எளிமையெனில் நாமெல்லாம் எப்படியிருக்க வேண்டும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இன்னொரு விஷயம். நம்பிக்கை துரோகம் செய்தவர்களைப் பார்த்து துடிக்காதீர்கள். டென்ஷன் ஆகாதீர்கள். ஆரோக்யம் பாதிக்கும். ஏழரைச் சனியில் யார் உங்கள் காசை சாப்பிட்டாலும் அது ஏற்கனவே நீங்கள்பட்ட கடன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அது பூர்வ ஜென்ம தொடர்பு என்பதாகவே எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக இந்த இரண்டாவது சுற்று ஜென்ம சனியின்போது பார்ட்டி, கேளிக்கைகளையெல்லாம் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது. சனி

பகவான், ‘‘நீ போய் கேளு. அவர் தறாரா இல்லையான்னு பார்க்கறேன்’’ என்று சிலரை அனுப்பி வைப்பார். அதனால் பிரதிபலன் பாராத உதவிகள் செய்தால் பொங்கு சனி நல்ல பலன்களை கொடுக்கும்.

மூன்றாவது சுற்று

கிட்டத்தட்ட ஐம்பது வயதைத்தாண்டி வரும் ஏழரைச் சனி. இதுதான் உங்களுக்கு கடைசி சனி என்று யாராவது பயமுறுத்தினால் பயப்படாதீர்கள். படபடப்பையும், பயத்தையும் தரும் சுற்று இது. உங்களை முடக்க முயற்சி செய்யும். அதற்குள், உங்களை மீறி உங்களிடத்தில் ஒரு கட்டுப்பாடு வந்துவிட வேண்டும். ‘‘காலையில நாலு இட்லி சாப்பிடுவேன்’’ என்றால் அதை மூணாக்கி அப்புறம் இரண்டே போதும் என்று நிறுத்திக் கொள்ளும் தெளிவு வேண்டும். அவ்வளவுதான். அதீத இயக்கத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னை தாழ்த்தியே உயர்த்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். மருமகள் மார்க்கெட்டிற்கு போக தயாராக இருந்தால் நீங்கள்போய் வாங்கிக் கொண்டு வரவேண்டும்.

எது நடந்தாலும் குற்றத்தை கண்டுபிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. இள வட்டங்கள் ஏளனமாகப் பேசும். இந்த மூன்றாவது சனியில் முதல் மரியாதையை எதிர்பார்க்கக் கூடாது. ‘‘எங்க போறாங்கன்னு எங்கிட்ட சொல்றதேயில்லை’’ என்று அடிக்கடி சொல்லக் கூடாது. வீட்டில் தனக்குத் தெரியாமல் எதுவும் நடக்கக் கூடாது என்று நினைக்கக் கூடாது. ‘‘நான் எவ்ளோ பெரிய போஸ்ட்டுல இருந்தேன்’’ என்றெல்லாம் பேசிக்கொண்டு வீட்டை அலுவலகமாக்கக் கூடாது. ஆடையைத் துறந்தால் மகாத்மாவாகலாம். ஆசையைத் துறந்தால் புத்தனாகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எல்லோருக்கும் எல்லா பணிகளிலும் உதவியாக இருங்கள். உங்களை சனி உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்ப்பார். ஏழரைச் சனியில் எப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று திரும்பத் திரும்ப சந்தேகம் வருகிறதா? ஏழரையில் மனசாட்சிக்கு பயப்படுங்கள். மனசாட்சியை மீறி எது செய்தாலும் சனியின் பாதிப்பிற்கு ஆளாவீர்கள். உங்கள் மனசாட்சி வேறல்ல... சனிபகவான் வேறல்ல என்பதை நீங்களே அறிவீர்கள்.
at March 22, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

புத்திர தோஷங்கள் எத்தனை வகை?

புத்திர தோஷங்கள் எத்தனை வகை?
புத்திர தோஷங்கள் எத்தனை வகை? புத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன? மொத்தம் எட்டுவிதமான புத்திர தோஷங்கள் இருக்கின்றன.இவை அனைத்தும் நம்மைச் சுற்றியுள்ள பலரது வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தால் அது தெரியும்.அவற்றை பார்ப்போம். 1.சர்ப்பசாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
 2.பித்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
3.மாத்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
4.சகோதர சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
5.மாதுல சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
6.பிராம்மண சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
7.பத்தினி சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
8.மந்திர சாபம்,பிரேத சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
இந்த தோஷம் எப்படி செயல்படுகின்றது? குழந்தை பிறந்த சில நாட்களில் இறந்து போவது, பாசமுள்ள பிள்ளைகள் பிறந்து வளர்ந்து இளைஞர்,இளம் பெண்ணாக இருக்கும்போது திடீரென இறந்து போவது; பெண் குழந்தைகளுக்கு கல்யாணம் தள்ளிப்போவதால் காலங்கடந்து கல்யாணம் நடப்பது, திருமணம் முடிந்து சில காலத்திற்குள்ளாகவே வாழாவெட்டியாக பெற்றோர் வீட்டிற்குத் திரும்புவது; மூளை வளர்ச்சியின்றி குழந்தை பிறப்பது. சரி! எந்த காரணங்களால் இந்த புத்திர தோஷங்கள் உருவாகின்றன? முற்பிறவியில் பெற்ற தாய் தந்தையரை சரியாக கவனிக்காததாலும்,அவர்களை வேதனைப்படுத்தியதாலும்,அவர்களின் கடைசிக்காலத்தில் சரியான நேரத்தில் உணவு தராமலும் ஏற்படுவது பித்ரு அல்லது பிதுரு சாபம். இதனால் இப்பிறவியில் தன் தந்தையரோடும் தன் பிள்ளைகளோடும் ஒத்துப்போக முடியாது.எப்போதும் ரத்த உறவுகளான அப்பா மற்றும் பிள்ளைகளால் அவமானமும்,வேதனையும் தினசரி நடவடிக்கைகளாகும். சகோதரர்களுக்குச் சேரவேண்டிய சொத்துக்களைத் தராமல் வஞ்சகம் செய்து எடுத்துக்கொள்வதாலும்,சகோதரர்களைக் கொடுமைப்படுத்துவதாலும் ஏற்படுவது சகோதர சாபம்.அந்த சாபத்தால் புத்திர தோஷம் ஏற்படுவது.சொத்துப்பிரச்னையில் தாய்மாமனை அவமானப்படுத்தியும்,சண்டை போட்டும் தாய்மாமன் சாபத்தால் ஏற்பட்ட புத்திரதோஷம். இந்த சாபத்தால் தாய்வழிப்பகையும்,புத்திரர்கள் பகையும் அவமானமும் ஏற்படும்.பெண் பிள்ளைகள் வாழாவெட்டியாவதும்,விவாகரத்து ஆகி வாழ முடியாமல் தவிப்பதும் இந்த சாபத்தால் ஏற்படுகின்றது. சாதுக்கள்,மகான்களையும் சிவனடியார்களையும் அவமானப்படுத்துவதால் ஏற்படுவது பிராம்மண சாபம்.இந்த சாபத்தால் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பது,மூளை வளர்ச்சி இல்லாத பிள்ளைகள் பிறப்பது,ஊமை,குருடு,செவிடு போன்ற குறையுள்ள குழந்தைகள் பிறப்பதும் ஒரு வித ஆனால் கடுமையான புத்திர தோஷம். மனைவியைக் கொடுமைப் படுத்துவதாலும், மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு வைப்பாட்டி வீடே கதி என இருப்பதாலும், பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து விலகி குடும்பத்தை விட்டுப் பிரிவதாலும், மனைவியின் மனம் கொதித்து அந்த சாபத்தால் ஏற்படுவது பத்தினி சாபம்.இதனால், மனைவி மக்களால் அவமானப்படுதலும்,பண்டாரம்,பரதேசியாகி பிச்சை எடுத்தலும், கடைசிக்காலத்தில் தன்னைக் கவனிக்க ஆளில்லையே என வருந்துதலும், குடும்பத்தோடு இருந்தாலும் குடும்பத்தை விட்டுப் பிரிந்துபோய் அனாதையாக இறந்து போகுதலும் ஏற்படும். மந்திர சாபம்,பிரேத சாபம் இவற்றால் ஏற்படும் புத்திர தோஷம் என்பது மாந்தீரிகர்களைத் தேடிப் போய் நமக்கு வேண்டாதவர்களுக்கு பில்லி சூனியம் வைப்பதும், குல தெய்வத்தை மறந்து வணங்காமல் இருப்பதும் ஆகும். இந்த சாபத்தால் மருத்துவத்துக்குப் புலப்படாத நோய்கள் உருவாகுவதும், சம்பாதிக்கும் பணம் முழுவதும் அதற்கே செலவழிப்பதும்,குடும்பம் விருத்தியில்லாமல் இருப்பதும், தொழில் நட்டம், தொழில் அமையாமலிருப்பது,பிள்ளைகளால் ஏற்படும் ஊதாரித்தனம்,துஷ்ட குணமுள்ள பிள்ளைகளால் வரும் பிரச்னைகள் போன்ற பலன்கள் ஏற்படும். இந்த புத்திர தோஷத்தை நீக்கிட பரிகாரம் என்ன? எப்படிச் செய்வது? குருபகவானுக்கு வியாழக்கிழமையன்று அர்ச்சனை செய்யலாம்.வியாழக்கிழமை திருச்செந்தூரில் அன்னதானம் செய்யலாம். எந்தக்கிரகம் புத்திர தோஷத்தை உருவாக்கியதோ அந்த கிரகத்தின் திசை அல்லது புக்திகாலத்தில் அந்தக் கிரகத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்யலாம். குலதெய்வம் கோவிலில் அவரவர் ஜன்ம நட்சத்திரம் அல்லது பவுர்ணமி அல்லது தமிழ் மாதப்பிறப்பு அல்லது தமிழ் வருடப்பிறப்பு அன்று அன்னதானம் ஒரு வருடம் வரை அல்லது ஆயுள் முழுவதும் செய்துவரலாம். நமது பாவத்தை நாம் தான் சுமக்கிறோம்.அதுபோல,நமது பரிகாரத்தை நாம்தான் நேரடியாகச் செய்ய வேண்டும்.அல்லது  குருமூலம் செய்யலாம்.  



பரிகாரங்கள் உடனே பலன் தருமா...?

கிரக தோஷங்களுக்கப் பரிகாரம் செய்தபின் அந்தத் தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிட்டன என்பதை எதை வைத்து முடிவு செய்வது? இப்படி பட்ட சந்தேகம் பலருக்கு உண்டு. தீராத வயிற்றுவலி வருகிறது. அதற்கு நாம் மருந்து சாப்பிடுகிறோம். சாப்பிடும் மருந்து வேலை செய்கிறதா இல்லையா என்பதை நோய் குணமாகும் அனுபவத்திலிருந்து தான் தெரிந்து கொள்ள முடியும். அதே போன்று தான் தோஷங்களுக்கான பரிகாரங்களும் ஆகும்.

குறிப்பிட்ட தோஷ நிவாரணத்திற்காகச் செய்யப்படும். பரிகாரம் காலச்சூழலில் பலன் தருவதை வைத்து தான் உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் உடனடியாகப் பலன்கள் ஏற்பட்டு விடும். என்று பலர் நம்புகிறார்கள். இது தவறான எதிர்பார்ப்பாகும். எந்தத் துயரமும் உடனடியாக நம்மைத் தாக்குவதில்லை. நிதானமாகத் தான் நம்மை கஷ்டத்திற்கு உள்ளாக்கும்.

நிதானமாகத் தான் விடுதலையும் செய்யும். 10 வருடப் பிரச்சினை ஒரே நாளில்
எந்தப் பரிகாரத்தாலும் தீராது. சற்று காலம் பிடித்து தான் தீரும். எனவே
கிரக பரிகாரங்கள் பலன் தருவதற்குக் குறைந்த பட்சம் 3 மாதங்களாவது ஆகலாம். 3லிருந்து 6 மாதத்திற்குள் பிரச்சினையின் வேகம் குறைய அரம்பிக்கவில்லை என்றால் பரிகாரம் பலன் தரவில்லை அல்லது சரியான பரிகாரம் செய்யப்படவில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்


 ஜோதிஷஆதித்யா,

பிரசன்ன திலகம் திரு.A.V. சம்பத் [எ] சண்முகராஜ் தம்பிரான் ஜி  
  திருவள்ளுவர் காலனி ராயபுரம் மேற்கு திருப்பூர்.


தொடர்புக்கு'  99941 50658 
at March 22, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

அர்சனை பூக்களின் பலன்கள் -

அர்சனை பூக்களின் பலன்கள் -

 அர்ச்சனைப் பூக்களின் அருமையான பலன்கள்
அல்லிப்பூ - செல்வம்  பெருகும்     
பூவரசம்பூ  - உடல் நலம் பெருகும்
வாடமல்லி- மரணபயம் நீங்கும்
மல்லிகை - குடும்ப அமைதி
செம்பருத்தி -ஆன்ம பலம்
காசாம்பூ - நன்மைகள்
அரளிப்பூ - கடன்கள் நீங்கும்
அலரிப்பூ - இன்பமான வாழ்க்கை
செம்பருத்தி - ஆன்ம பலம்
ஆவாரம் பூ -நினைவாற்றல்  பெருகும்
கொடிரோஜா - குடும்ப ஒற்றுமை
ரோஜா பூ - நினைத்தது  நடக்கும்
மருக்கொழுந்து  - குலதெய்வம் அருள்
சம்பங்கி - இடமாற்றம்  கிடைக்கும்
செம்பருத்தி பூ - நோயற்ற வாழ்வு
நந்தியாவட்டை - குழந்தை குறை நீங்கும்
சங்குப்பூ (வெள்ளை) -  சிவப்பூஜைக்கு  சிறந்தது
சங்குப்பூ (நீலம்) - விஷ்ணு பூஜைக்கு  சிறந்தது
மனோரஞ்சிதம்  -  குடும்ப  ஒற்றுமை, தேவ ஆகர்­ணம்
தாமரைப்பூ  -  செல்வம் பெருகும் அறிவு வளர்ச்சி பெறும்
நாகலிங்கப்பூ - லட்சுமி கடாட்சம், ஆரோக்யம்
முல்லை பூ  -  தொழில் வளர்ச்சி,  புதிய தொழில்கள்  உண்டாகும்
பட்டிப்பூ (நித்திய கல்யாணி பூ) - முன்னேற்றம் பெருகும்
தங்க அரளி (மஞ்சள் பூ) -   குருவின் அருள் , பெண்களுக்கு மாங்கல்ய பலம் கடன்கள் நீங்கும் , கிரக பீடை நீங்கும்
பவள மல்லி -   இது தேவலோக புஷ்பமாகும். இந்த செடியினை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும். இதன்மூலம் தேவர்களினதும், ரிஷிகளினதும் அருளும், ஆசியும் கிடைக்கும். பழைய புஷ்பங்கள், மலராத மொட்டுக்கள்,  தூய்மை இல்லாத பூக்களைக் கொண்டு இறைவனிற்கு அர்ச்சனை செய்யக்கூடாது. அரச்சனை செய்த பூக்கள்  கோவிலில்  சாமிக்கு போட்ட மாலைகள்  காலில் மிதிபடாதவாறு போட வேண்டும். முடிந்தால் தூய்மையான ஓடுகின்ற தண்ணீரில் விடலாம். அல்லது தூய்மையான இடத்தில் குழி தோண்டி போட்டு மூடிவிடலாம். கோவிலில்  சாமிக்கு போட்ட மாலைகளை வாகனங்களில்  முன்பக்கம் கட்டுவது மிகபெரிய சாபம் இதனால்  தீமைகள்  உண்டாகும்  நன்மைகள் கிடைக்காது.
திருமாலுக்கு -  பவளமல்லி , மரிக்கொழுந்து  துளசி
சிவன் - வில்வம்  செவ்வரளி
முருகன்  - முல்லை, செவ்வந்தி, ரோஜா
அம்பாளுக்கு  - வெள்ளை நிறப்பூக்கள் பூசைக்கு சிறப்பானவை.


பூஜைக்கு ஆகாதவை
ஆகாதபூக்கள்
விநாயகருக்கு - துளசி  
சிவனுக்கு  -  தாழம்பூ
அம்பாளுக்கு - அருகம்புல்
பெருமாளிற்கு - அருகம்புல்
பைரவர் -  நந்தியாவட்டை ,
சூரியனுக்கு - வில்வம்
at March 22, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Wednesday, 21 March 2018

எல்லாம் அஞ்சு தான் எம்பெருமானுக்கு

எல்லாம் அஞ்சு தான் எம்பெருமானுக்கு
 1.பஞ்ச பூதங்கள்
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்
2. பஞ்சாட்சரம்
நமசிவாய - தூல பஞ்சாட்சரம்
சிவாயநம - சூக்கும பஞ்சாட்சரம்
சிவயசிவ - அதிசூக்கும பஞ்சாட்சரம்
சிவசிவ - காரண பஞ்சாட்சரம்
சி - மகா காரண பஞ்சாட்சரம்
3.சிவமூர்த்தங்கள்
1.பைரவர் -வக்கிர மூர்த்தி
2.தட்சிணாமூர்த்தி -சாந்த மூர்த்தி
3.பிச்சாடனர் -வசீகர மூர்த்தி
4.நடராசர் -ஆனந்த மூர்த்தி
5.சோமாஸ்கந்தர் - கருணா மூர்த்தி
4.பஞ்சலிங்க சேத்திரங்கள்
1.முக்திலிங்கம் -கேதாரம்
2.வரலிங்கம் -நேபாளம்
3.போகலிங்கம் -சிருங்கேரி
4.ஏகலிங்கம் -காஞ்சி
5.மோட்சலிங்கம் -சிதம்பரம்
5.பஞ்சவனதலங்கள்
1.முல்லை வனம் -திருக்கருகாவூர்
2.பாதிரி வனம் -அவளிவணல்லூர்
3.வன்னிவனம் -அரதைபெரும்பாழி
4.பூளை வனம் -திருஇரும்பூளை
5.வில்வ வனம் -திருக்கொள்ளம்புதூர்
6.பஞ்ச ஆரண்ய தலங்கள்
1.இலந்தைக்காடு -திருவெண்பாக்கம்
2.மூங்கில் காடு -திருப்பாசூர்
3.ஈக்காடு -திருவேப்பூர்
4.ஆலங்காடு -திருவாலங்காடு
5.தர்ப்பைக்காடு -திருவிற்குடி
7.பஞ்ச சபைகள்
1.திருவாலங்காடு -இரத்தின சபை
2.சிதம்பரம் -பொன் சபை
3.மதுரை -வெள்ளி சபை
4.திருநெல்வேலி -தாமிர சபை
5.திருக்குற்றாலம் -சித்திர சபை
8.ஐந்து முகங்கள்
1.ஈசானம் - மேல் நோக்கி
2.தத்புருடம் -கிழக்கு
3.அகோரம் -தெற்கு
4.வாம தேவம் -வடக்கு
5.சத்யோசாதம் -மேற்கு
9.ஐந்தொழில்கள்
1.படைத்தல்
2.காத்தல்
3.அழித்தல்
4.மறைத்தல்
5.அருளல்
10.ஐந்து தாண்டவங்கள்
1.காளிகா தாண்டவம்
2.சந்தியா தாண்டவம்
3.திரிபுரத் தாண்டவம்
4.ஊர்த்துவ தாண்டவம்
5.ஆனந்த தாண்டவம்
11.பஞ்சபூத தலங்கள்
1.நிலம் -திருவாரூர்
2.நீர் -திருவானைக்கா
3.நெருப்பு -திருவண்ணாமலை
4.காற்று -திருக்காளத்தி
5.ஆகாயம் -தில்லை
12.இறைவனும் பஞ்சபூதமும்
1.நிலம் - 5 வகை பண்புகளையுடையது
(மணம் ,சுவை ,ஒளி ,ஊறு ,ஓசை )
2.நீர் - 4 வகை பண்புகளையுடையது
(சுவை ,ஒளி ,ஊறு ,ஓசை )
3.நெருப்பு - 3 வகை பண்புகளையுடையது
(ஒளி ,ஊறு ,ஓசை )
4.காற்று - 2 வகை பண்புகளையுடையது
(ஊறு ,ஓசை )
5.ஆகாயம் - 1 வகை பண்புகளையுடையது
(ஓசை )
13.ஆன் ஐந்து
பால் ,தயிர் ,நெய் ,கோமியம் ,கோசலம்
14.ஐங்கலைகள்
1.நிவர்த்தி கலை
2.பிரதிட்டை கலை
3.வித்தை கலை
4.சாந்தி கலை
5.சாந்தி அதீத கலை
15.பஞ்ச வில்வம்
1.நொச்சி
2.விளா
3.வில்வம்
4.கிளுவை
5.மாவிலங்கம்
16. ஐந்து நிறங்கள்
1.ஈசானம் - மேல் நோக்கி - பளிங்கு நிறம்
2.தத்புருடம் -கிழக்கு - பொன் நிறம்
3.அகோரம் -தெற்கு - கருமை நிறம்
4.வாம தேவம் -வடக்கு - சிவப்பு நிறம்
5.சத்யோசாதம் -மேற்கு - வெண்மை நிறம்
17.பஞ்ச புராணம்
1.தேவாரம்
2.திருவாசகம்
3.திருவிசைப்பா
4.திருப்பல்லாண்டு
5.பெரியபுராணம்
18.இறைவன் விரும்ப நாம் செய்யும் ஐந்து
1.திருநீறு பூசுதல்
2.உருத்ராட்சம் அணிதல்
3.பஞ்சாட்சரம் ஜெபித்தல்
4.வில்வ அர்ச்சனை புரிதல்
5.திருமுறை ஓதுதல்
19.பஞ்சோபசாரம்
1.சந்தனமிடல்
2.மலர் தூவி அர்ச்சித்தல்
3.தூபமிடல்
4.தீபமிடல்
5.அமுதூட்டல்
ஆடிய திருவடி சரணம்!! 
at March 21, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

கேஸ் சிலிண்டர் பற்றி கண்டிப்பாக

 இல்லத்தரசிகள் கேஸ் சிலிண்டர் பற்றி கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று நேற்று இரவு நல்ல மழை டிபன் இட்லி சாம்பார். மாவை ஊத்தி அடுப...

  • குழந்தைக்கு முடி எடுக்கக்கூடாத காலம்
                                    எங்களின் ஆன்லைன் சேவை -  http://astroav.in/                             குழந்தைக்கு முடி எடுக்கக்கூடாத க...
  • ஆத்துப்பொள்ளாச்சிஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் திருக்கோவிலை உலகம் உற்று நோக்கிறது!!!
    ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் திருக்கோவிலை உலகம் உற்று நோக்கிறது!!! ஸ்ரீ   ஆனந்தாய்பேச்சியம்மன்   (எங்கும் இல்லாத ஏழு கலசம்) '...
  • உடல்கட்டு மந்திரம்
                                                  எங்களின் ஆன்லைன் சேவை -  http://astroav.in/        உடல்கட்டு மந்திரம் நாம் பல்வேறு...

கும்பாபிஷேகம்

  • Home

About Me

sriannathaipechiamman
View my complete profile

Report Abuse

Labels

  • https://en.wikipedia.org/wiki/User_talk:Annathaiamman/sandbox#.E0.AE.AA.E0.AE.95.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.95.E0.AF.8B.E0.AE.9F.E0.AE.BF.E0.AE.95.E0.AE.B3.E0.AF.87

Blog Archive

  • ►  2025 (20)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  April (1)
    • ►  March (5)
    • ►  February (1)
    • ►  January (9)
  • ►  2024 (33)
    • ►  December (5)
    • ►  November (7)
    • ►  October (2)
    • ►  September (1)
    • ►  August (5)
    • ►  July (6)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (3)
  • ►  2023 (31)
    • ►  December (1)
    • ►  August (4)
    • ►  July (2)
    • ►  June (8)
    • ►  May (6)
    • ►  April (2)
    • ►  March (1)
    • ►  February (1)
    • ►  January (6)
  • ►  2022 (58)
    • ►  December (1)
    • ►  November (3)
    • ►  October (2)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  May (12)
    • ►  April (21)
    • ►  March (9)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2021 (23)
    • ►  May (15)
    • ►  April (6)
    • ►  March (1)
    • ►  January (1)
  • ►  2020 (14)
    • ►  August (1)
    • ►  May (4)
    • ►  February (3)
    • ►  January (6)
  • ►  2019 (305)
    • ►  December (8)
    • ►  November (15)
    • ►  October (32)
    • ►  September (96)
    • ►  August (19)
    • ►  July (66)
    • ►  June (5)
    • ►  May (18)
    • ►  April (3)
    • ►  March (17)
    • ►  February (13)
    • ►  January (13)
  • ▼  2018 (276)
    • ►  December (21)
    • ►  November (10)
    • ►  October (45)
    • ►  September (17)
    • ►  August (26)
    • ►  July (5)
    • ►  June (40)
    • ►  May (28)
    • ►  April (10)
    • ▼  March (23)
      • யோனிப்பொருத்தம்
      • சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீர பரிகாரங்கள்
      • தோப்புக்கரணம்
      • இந்தியாவில் கிரக தேவதை வழிபாடுகள்
      • பெயர் ஜோதிடத்தில் ஆங்கில எழுத்துக்கள்
      • ஆங்கில தேதிக்கு கிழமை கண்டுபிடிக்கும் வழி
      • பருவ காலங்கள்
      • *கோவிலுக்குள் மணி அடித்துவிட்டு வணங்குவது ஏன் தெரி...
      • நாக தோஷம் போக்கும் எளிமையான பரிகாரங்கள்,
      • எல்லா தொழிலுக்கும் ஏற்ற மந்திரங்கள்!
      • ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள்
      • கள்ளக்காதல் ரகசியம்
      • இந்துக்கள் அதிகம் மதம் மாறுவதற்கு காரணம் என்ன?
      • மச்ச ஜாதகம் பெண்களுக்கு
      • ஏழரைச் சனி என்ன செய்யும்?
      • புத்திர தோஷங்கள் எத்தனை வகை?
      • அர்சனை பூக்களின் பலன்கள் -
      • எல்லாம் அஞ்சு தான் எம்பெருமானுக்கு
      • சீரடி சாய்பாபாவின் மனதில் இடம் பிடித்தவர்கள்
      • 🙏உமீழ் நீர்:உயிர் நீர்
      • ஒர் எச்சரிக்கைப் பதிவு...
      • பழமொமிகள்_பலவிதமாய்
      • காரடையான் நோன்பு"
    • ►  February (19)
    • ►  January (32)
  • ►  2017 (494)
    • ►  December (6)
    • ►  November (4)
    • ►  October (20)
    • ►  September (5)
    • ►  July (41)
    • ►  June (109)
    • ►  May (140)
    • ►  April (102)
    • ►  March (54)
    • ►  February (13)
Watermark theme. Powered by Blogger.