Monday 5 February 2018

கோவில்களில் அபிசேக ஆராதனை செய்யும் போது

கோவில்களில் அபிசேக ஆராதனை செய்யும் போது

 கோவில்களில் அபிசேக ஆராதனை செய்யும் போது, பால், தயிர், பழங்கள், பஞ்சாமிர்தம் ... இது போன்ற பொருட்கள் கொண்டு அபிசேகம் செய்கின்றனர் ...? ஏன் ...?

அனைவரும் கோவிலில் அபிசேகம் பார்த்திருப்போம்,
இந்த செயல் நம்மைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் இருக்கும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை கவர்ந்திழுத்து தம்முள் வைத்துக்கொண்டு, வளர்த்தி, அழித்து அதை மேலும் பரவாமல் தடுக்கும் பொருட்களால் நடக்கும்.
மேலும் இந்தப் பொருட்களில் இருக்கும் மினரல்கள் இறைவன் திருவுருவமாகிய கல்லின் உறுதிக்கு ஆதரவான, தேவையான பொருட்களை உள்ளடக்கம் கொண்டது. மேலும் இந்த செயல்கள் மனித உடலுக்கும் தேவையானதே.
அர்ஜனையின் போது முதலில் இறைவனை அகம விதியின் படி முதலில்
1) குளிர்ந்த நீரில் ஆரம்பிப்பார்கள்
2) பால்
3) தயிர்
4) பஞ்சாமிர்தம்.
5) பழங்கள்
6) இனிப்பு சுவையுள்ள பொருட்கள் (வெல்லம், கரும்புச்சாறு, கரும்புச்சர்க்கரை) போன்ற பொருட்கள்.
7) தேன்
8.)இளநீர்
9) சந்தனம்
10) திருமஞ்சன பொருட்கள் மற்றும் வாசனைத்திரவியங்கள்
11) உதிரிப்பூக்கள்
போன்ற பொருட்களைக்கொண்டு அபிஷேகம் செய்வார்கள்.
இதில் ஒவ்வொரு பொருட்களும் ஒரு கிருமிகள் இழுப்பானாக்ச் செயல்பட்டு, காற்றில் உள்ள கிருமிகளை தனக்குள் இழுக்கும்.
அதன் விளக்கம்
1) குளிர்ந்த நீர் :-
குளிர்ந்த நீரில் அபிஷேகம், இது கடவுள் சிலையை நுண்ணூட்டச் சத்துக்களை உள்ளிழுக்க தயார் செய்யும்.
2) அபிசேகப் பொருட்கள்
அபிசேகப் பொருட்களில் உள்ள அணைத்து ஊட்டச்சத்துக்களும் சிலைக்குள் செல்லாது, இங்குதான் அடுத்த சூட்சுமம் நடக்கத் துவங்குகிறது, அபிசேகப் பொருட்கள் அதன் அருகில் உள்ள காற்றுப் பகுதியில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை தன்பால் ஈர்க்கும். அதன்பால் ஈர்க்கப்பட்ட வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் அபிசேகப் பொருட்களுக்குள் சென்ன்றால் பின் அதன் அதனால் வெளிவரமுடியாது. அங்கு அது பல்கிப்பெருகி அந்தப் பொருளை அழிக்கும், ஆனால் அந்த பொருட்களைவிட்டு அதனால் வெளியே வந்து காற்றில் கலக்க முடியாது. பின் உயிரிழக்கும்.
இந்த செயல்பாடுகலுக்கானதே இந்த அபிசேகப் பொருட்களின் வேலை. .
இதில் இந்த செயல்பாடுகள் நடக்கும் போது பொருட்கள் கெட்டுப்போய் அதன் கெட்டுப்போன வாசம் அதிகமாக வரும், அதன் காரணமாக அதைத் தடுக்க சந்தனம் மற்றும் திருமஞ்சனப் பொருட்கள் உபயோகப்படுத்துகின்றோம்.
இவைகள் அனைத்தும் தினமும் ஏதாவது ஒரு கோவில்களில் நடந்துகொண்டே இருக்கும் அபிசேக நடைமுறைகளாகும்.
காற்று மண்டலத்தில் மனிதனுக்கு மிக அருகில் இருக்கும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தி அவைகளை பரவிடாமல் அழிக்கும் வேலைகள் இந்த செயல்பாடுகளின்மூலம் நடக்கின்றன.
3) இனிப்பு சுவையுள்ள வெல்லம், கரும்புச்சாறு, கரும்புச்சர்க்கரை, தேன் போன்ற பொருட்கள்.
இந்த அபிஷேகம் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் கோவில்களின் கழிவு நீர் மற்றும் கழிவுப் பொருட்கள் தேங்கும் நிலப்பரப்பின் மேல்பகுதி காற்று அதிகமாக உட்புக முடியாமல் கெட்டிப்படும். அந்த செயல்பாடுகளை தவிர்க்க நமக்கு மிகுந்த உதவி செய்பவை எறும்புகளும், கரையான்களும். இவைகள் மண்ணின் உட்பக்கமிருந்து மண்ணைக் குடைந்துகொண்டு மேலே வரும் இனிப்புப் பொருட்களை சாப்பிட, அதன் மூலம் அந்த நிலப்பகுதியில் நீர் வேகமா நிலப்பரப்பினுள் செல்லும், காற்றும் அதிகமாக மண்ணினுள் செல்லும். அந்தப் பகுதி மண்ணும் வளப்படும்.

இதுதான் நாம் செய்யும் அபிசேகத்தின் முக்கியமான பின் செயல்பாடுகள்.
இந்த அபிசேகத்தின் மூலம் நம் மனதை ஒருமுகப்படுத்தி அங்கு அமர்ந்து கடவுளின்பால் நமது முழு மனதையும் செலுத்தி வணங்குவதன் மூலம் நமது மனம் செம்மைப்படும்.

பிரசாதப் பொருட்களாக இதை நாம் அருந்தினால் அது நம் உடலுக்குத் தேவையான பல மினரல்களை நமக்குக் கொடுக்கின்றது.


No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...