Wednesday 24 January 2018

ராகு கால நேரத்தில்

ராகு கால நேரத்தில்



 ராகு கால நேரத்தில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்பது பலரது பொதுவான கருத்தாக உள்ளது.
ஆனால் இது விசேஷ பூஜைகள் செய்து, வேண்டிய வரத்தினை பெறுவதற்கான உகந்த நேரம் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
சர்ப்ப கிரகங்களான ராகுவும்–கேதுவும்,
துர்க்கை தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.
ஒரு நாளில் உள்ள இருபத்தி நாலு மணி நேரத்தில்
1½ மணி நேரம் ராகுவும்,
1½ மணி நேரம் கேதுவும்
அம்பிகையை பூஜிக்கின்றனர்.
அதில் ராகு வழிபாடு செய்யும் நேரம் ‘ராகு காலம்’
என்றும், கேது வழிபாடு செய்யும் நேரம் ‘எமகண்டம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் அந்த நேரத்தில் குறைந்திருக்கும்
என்பதால்தான், ராகு காலத்தில் சுப காரியங் களைத் தவிர்க்கச் சொன்னார்கள்.
அதே சமயம் ராகு காலத்தில் அம்மனை ஆராதிப்பத
ு, குறிப்பாக சண்டிகையாகவும், துர்க்கையாகவும் தேவியை வணங்குவது சிறப்பான பலனைத் தரும் என்கிறது தேவி பாகவதம்.
ராகு காலம் என்பது ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட 1½ மணி நேரமாகும
். ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜை சிறப்புமிக்கது.
செவ்வாய்க் கிழமைகளில் வரும் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை அதிலும் சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது.
ஏனெனில் அந்த தினத்தில் ராகுவோடு இணைந்து செவ்வாயும் அம்பிகையை மங்கள சண்டிகையாக வணங்குகிறார்.
இதனால் கூடுதல் பலன் கிடைக்கும்.
மங்களன் என்ற பெயர், அங்காரகனாகிய செவ்வாய்க்கு உரியது.
பொதுவாக ஒருவரது வாழ்வில் மங்கல காரியங்கள் நடப்பதற்கு செவ்வாய் மற்றும் சர்ப்ப தோஷங்களே காரணமாகச் சொல்லப்படுகின்றன.
செவ்வாய், ராகு
ஆகிய கிரகங்களால் தோஷம் இருந்தாலோ
அல்லது வாழ்வில் தடைகளும்,
துன்பங்களும் தொடர்ந்தாலோ ராகு கால
பூஜையை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
துர்க்கையை வணங்குவது மிகவும் நல்லது
கிழக்கு அல்லது மேற்கு நோக்கி தீபம் ஏற்றி கொண்டு வந்தால நல்ல பலன் கிடைக்கும்

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...