Saturday 16 December 2017

... ஏன் பிறந்தோம்...?

...
ஏன் பிறந்தோம்...?


 இந்த பிறவியில்
எதை செய்ய வேண்டும் என
ஆத்மம்
பிறந்த ஆத்மம் எதிர்பார்க்கிறது..?
...
மனதின் ஆசை
சாமான்ய மக்களுக்கும் புரிகிறது...,
இந்த
ஆத்மத்தின்
பிறந்த
ஆத்மத்தின் ஆசைதான் என்ன...?
..
பிறந்தவன்
செல்வம் தேடுவது குற்றமா...?
..
உறவுகளை
தேடி ஓடுகிறானே
அது ஏன்
வலிகளை தருகிறதே.. .?
...
உறவுக்கும்
பிறந்த
மனிதனுக்கும்
இருக்கும்
ரகசியம் தான் என்ன...?
...
கடவுள் இருக்கிறாரா...?
ஏன் இருககிறார்....?
கடவுளை மற்ற உயிரினங்கள்
உணர்ந்து வாழ்வது போல தெரிந்தாலும்
அவைகள் ஏன்
கடவுளை தேடவில்லை...?
...
மனிதனுக்கு
கடவுள் தேவையா....?
ஏன்
எதற்கு
மனிதனுக்கு கடவுள் தேவை...?
...
...
இப்படி
அடக்கடுக்காக உள் இருந்து வரும் கேள்விகள்..,
அதற்கான பதிலையும்
சிவம்
பிறந்த உயிருக்குள்ளேயே
வைத்து இருப்பது
இறை உணரந்த இதயம் எல்லாம் உணர்ந்ததே..!
...
பிறந்தவன்
செல்வம் தேடுகிறான் தவறு அல்ல,
அந்த
செல்வத்தை
ஏன் தேடுகிறான் என்பதை
உணராமால் போவதே தவறு.
பிறந்தவன்
உறவுகளை தேடுகிறான் தவறு அல்ல..,
அந்த உறவுகளை
யார் ,,?
அந்த உறவுகள் எதற்க்கா
என்பதை உணராததாலே
தேடிய உறவுகளால் வரும் வலி.
...
எதறக்காக பிறவி...?
...
முக்தி அடைவததற்க்காகவா..?
...
முக்தியை
ஒருவன் தேடி பிடிக்க முடியாது
அது
தானாக
நிலை புரிந்து
இறை தரும் வரம்..
..
எது அந்த நிலை...?
...
ஆத்தமத்தின் முழு நிறைவு...?
...
ஆத்மத்தின்
முழு நிறைவு எது..?
அது
எங்கே
எப்படி துவங்குகிறது...?
...
ஒரு மனதின்
ஆசை முடியும்போது
ஆத்மத்தின் ஆசை தொடங்குகிறது..
ஒரு
ஆத்மத்தின் ஆசை முடியும் போது
முக்தி உலகத்தின்
இறை கதவுகள் திறக்கிறது.
..
ஆத்மத்தின் ஆசை என்ன..?
...
ஆத்மம் சரீரத்தின் மூலம்
பிறந்த மனம்
அதன் ஆசைகளை உணர்ந்து
அடங்க வேண்டும் என்பதில்
ஆரம்பிக்கும்
ஆத்மத்தின் ஆசை
ஒரு ஸ்தூல குருவை தேடுகிறது.
...
ஸ்தூல குரு
அனைத்ணையும் போதிக்க முடியுமா...?
...
நிச்சயமாக முடியாது...
..
ஒரு அளவுக்குத்தான்
ஸ்தூல குருமார்களின் பாடம்
சீடருக்கு கிடைக்கும்
..
முழுமையான
பாடத்தை
உலகில்
எந்த
ஸ்தூல குருமார்களாலும்
கொடுக்க இயலாது...
அப்படி கொடுத்தாலும்
அது
சீடருக்கு புரியாது.
...
பாடத்தின்
முதல் கட்டத்தை மட்டுமே
ஸ்தூல குருமார்கள் தர முடியும்.
அடுத்த கட்ட பாடத்தை
உயிர் உள் இருக்கும்
சத் இறை குருவே நடத்த முடியும்.
அதற்காக
பிறந்த பிறவியை
நோக்கி நகர்த்துவதே
ஆத்மதின்
ஆரம்ப கால ஆசை..
...
பிறவி நோக்கம்
அது
கற்றலே...
...
பிறந்த பிறவியின் அழியா செல்வம்
கல்வியே...
...
இறந்த பின்
எடுத்து செல்ல கூடிய செல்வமும்
கல்வி செல்வமே.
...
உடலை விட்டு
உயிர் பிரியும் வரை
கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்
என்பது
ஆத்மத்தின் அதீத ஆசையே...
...
ஏன்
அந்த கல்வி ஆத்மத்திற்கு தேவை...?
...
அந்த
கல்வியை முழுமையாக கற்க்காததாலே
பிறந்ததே இப்பிறவி..
...
அப்படி ஆனால்
கல்வியே கற்காதவர்களால்
இறை உலகை நெருங்க முடியாதா..?
..
நிச்சயமாக முடியாது.
...
கல்வியே கற்காமால்
இறையோடு இறையாக கலந்தவரும்
உண்டு தானே...?
...
நிச்சயமாக உண்டு..
..
பின்
ஏன்
அவர்கள் பிறந்தார்கள்..?
..
கற்ற கல்வியை
கற்றதோடு விட்டு விட்டு
அதன் படி வாழாததாலே..
அவர்களுக்கு
கல்வி
சென்ற பிறவியிலே கிடைத்து விட்டது
ஆதலால்
அவர்கள்
கற்றபடி
ஒரு வாழ்க்கையே
வாழ பிறந்தவர்கள்..
...
நல்ல
குரு மார்களும் பிறக்கிறார்களே..?
பாவம்
அவர்கள் என்ன தவறு செய்தார்கள்..?
..
அவர்கள்
கற்றதை யாருக்கும் சொல்லி கொடுக்காமால்
மடிந்ததாலே...
...
சிறந்த குருமார்களை
இறைவன்
திருப்ப பிறக்க வைப்பது உண்டு தானே..?ஏன்..?
...
நிச்சயமாக உண்டு...
...
அவர்கள்
கல்வியும் கற்றார்கள்
கல்விமையும்
விற்றார்கள்
தீட்சை தர மறந்தார்கள்...
முழுமைமான தீட்சை தர மறுத்தார்கள்.
இறுதி வரை
மௌன நிலைக்கு செல்லாமால்
இறுதி வரை பேசிக்கொண்டே இருந்ததாலே
இப்பிறவிமில்
மௌவுனமாக மட்டுமே
பாரினில் திரிந்து
அதன் மூலம்
சில நிலைகளை எட்டிய
சீடருக்கு
சரீர ஆத்ம தரிசனம்
தருவதற்க்கா பிறந்தவர்கள்...
...
முக்தி அடைந்த குருமார்கள்
பிறப்பது உண்டு தானே..?
நிச்சயமாக உண்டு..
..
இவர்கள்
மானிடருக்கு அருகே இருந்தாலும்
யாருக்கும்
சுலபமாக
இவர்களை அடையாளம் காட்டதவாறு
இருப்பார்கள்..
..
ஸாதூ குருமார்களின்
ஸ்தூல பாடம் முடிந்த பின்னே
மீண்டும்
சில ஸ்தூல ரகசியத்தை
தூண்டுவதற்ககா
பிறந்த சத் சிவ குரு இவர்கள்...
...
பிறந்த பிறவியில்
ஆத்மம் விரும்புவது
ஒவ்வொரு நாளும் கல்வி
கற்றுகொண்டே இருப்பதும்
அதன் படி வாழ்வதுமே..
...
ஒரு கட்டத்தில்
உள் இருக்கும் குருவை கண்டு
அவரோடு
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு பாடத்தை படித்து
அதன் படி வாழ்வதே
ஆத்மத்தின் ஆசை...
...
கடவுள் இருக்கிறாரா..?
ஏன்
மனிதனுக்கு கடவுள் தேவை...?
...
உயிரோடு இருந்து கொண்டு
இந்த கேள்வியை கேட்கிறாரே...
அந்த கேட்பவரே கடவுள்...
..
இதற்கு ஒரு பதிலும் கிடைக்க செய்கிறாரே
அதை நடத்துவதும் இறைவன்
...
கடவுள் எங்கும் இருக்கிறார்..
அனைத்துமாக இருக்கிறார்..
...
கடவுள்
பணம் கொடுக்கவா ...?
உழைத்தால் பணம் வருமே
அதற்கு ஏன் கடவுள்..
..
நோயை குணமாக்கவா..?
அதற்கு மருத்துவர்களும் இருககிறாரே..
..
ஆனந்தத்தை தரவா கடவுள் தேவை...?
..
ஆனந்தத்தை
தர மனமும் உண்டே...?
..
இதை எல்லாம்
கடவுளால் கொடுக்க கொடுத்து கொண்டு
இருந்தாலும்
அதையும் தாண்டி
இத்தனையும் தாண்டி
கடவுள்
மனித பிறவிக்கு
தேவைப்படுவது
எமனிடம் இருந்து
பிறப்பு இறப்பு கடந்து
ஆத்மத்தை காப்பதே..
அதுவே
ஆத்தமத்தின் ஆசை..
..
அதற்கு
ஆத்மம் விரும்புவது
கற்றலும்
கற்றபடி நடப்பதும்
கற்றதை போதிப்பதும்
போதிப்பது போல வாழ்ந்து காட்டுவதும்
மௌனத்தை ருசிப்பதும்
சுவாசத்தை ரசிப்பதும்
முழுமை அடைந்து
இறையோடு கலப்பதும்
பிறந்தது ஆத்மம்
இதற்காகவே
நம
ஓம்
நமசிவாய

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...