Friday 3 January 2020

கண்திருஷ்டி

                                                                கண்திருஷ்டி
  வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்துடன் சிலர் சதாசர்வ காலமும் உழைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஏனோ அதற்கான பலன் அவர்களுக்கு கிடைக்காமலேயே இருக்கும்.
நாள் முழுவதும் உழைப்பைக் கொட்டினாலும் அதற்கான பலன் கிடைக்காது தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கும். இதற்கான காரணங்கள் பல உள்ளது. முறையாக நேரத்தை பயன்படுத்திக் கொள்ள தெரியவில்லை, எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை என்று பல காரணங்களை சொன்னாலும் கடைசியாக இப்படியும் இருக்கலாம் என்று சிந்திக்கும் விஷயம் கண் திருஷ்டி!
நம் அம்மாக்கள்,பாட்டிமார்கள் எல்லாம் இந்த வார்த்தையை பயன்படுத்திக் கேட்டிருப்போம். சிலரது #பொறாமை குணம் நம் மீது வெறுப்பாகவும், அர்த்தமில்லாத கோபமாகவும் மாற்றிடும். அதுவும் முன்னேறிக் கொண்டே செல்பவர்கள் திடிரென சறுக்கினால் கண் திருஷ்டி பட்டுருக்கும் அதான் இப்டி நடக்குது என்று சொல்வோம். அப்படி தொடர் தோல்விகள் ஏற்பபட்டால் அல்லது கண் திருஷ்டி பட்டிருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அவற்றை நீக்க நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
எப்படி கண்டுபிடிப்பது? :
திருஷ்டிப்பட்டவர் உடலில் அசதி உண்டாகும். அடிக்கடி கொட்டாவி வரும். எந்த வேலையிலும் மனம் லயிக்காது. எதாவது புது உடை அணிந்தால் அது கிழியலாம்.
சில சமயம் அதில் எதாவது கருப்புக்கறை படலாம். வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும்.
கணவன்-மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்னைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை, சுபநிகழ்ச்சிகளில் தடை, ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படுதல், சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவை உண்டாகும்.
தூக்கம் அதிகமாகலாம். சப்பாடு பிடிக்காமல் போகலாம். அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும். கிடைக்கும் சந்தர்ப்பத்தில் இருந்த விஷயங்கள் எல்லாம் கை நழுவிப் போகும்.
கவனிக்க :
இந்த பிரச்சனை நீங்க திருஷ்டிக்கழிக்க, அந்தி சாயும் நேரம் உகந்தது. திருஷ்டிக் கழிப்பவர் திருஷ்டி சுற்றிக்கொள்பவரை விட வயதில் மூத்தவராக இருத்தல் அவசியம். திருஷ்டிக்கழிக்கும் நாட்கள் செவ்வாய் அல்லது ஞாயிறு மாலைப் பொழுதாக இருக்க வேண்டும். கிழக்குத் திசையை நோக்கி நிற்க வேண்டும்.
தனியாகவோ அல்லது கூட்டமாகவோ எப்படி வேண்டுமானலும் திருஷ்டி கழிக்கலாம். ஆனால் கூட்டத்தில் நிற்பவர்களில் பாதிபேருக்கு ஒருவரும், மீதி பேருக்கு மற்றொருவர் என்று மாற்றி மாற்றி திருஷ்டி கழிக்க கூடாது. நிற்கிற அத்தனை பேருக்கும் ஒரே நபர் தான் திருஷ்டி கழிக்க வேண்டும்.
மலர்கள் :
வாசலில் அல்லது வீட்டிற்கு வருகிறவர்களின் கண் படும்படியான இடத்தில் பெரிய பாத்திரத்தில் பூக்களை மிதக்க வைக்கலாம். பூக்களுக்கு திருஷ்டியை கிரகத்துக் கொள்ளும் ஆற்றல் உள்ளது.
வீட்டு வாசலில் செடிகள் வைக்கிறவர்கள் வெறும் அலங்காரச் செடிகளை வைக்காமல் ஒரு ரோஜா செடியாவது வைக்க வேண்டும். ஏனென்றால் ரோஜா செடியில் முட்கள் இருக்கும். முள் செடிகள் திருஷ்டியை போக்கிடும்.
வாழை :
ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. சிலர் பூசணிக்காய்,அகோரமான பொம்மை என தொங்க விடுவார்கள்.
இவை எல்லாவற்றையும் விட இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் வாழையை நடுங்கள்.
ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்போதே களைந்துவிடும் அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது.
மீன் தொட்டி :
இது வீடு, அலுவலகம் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வருகிறவர்களின் பார்வையை திசை திருப்பும் பொருட்டு மீன் தொட்டியை வைக்கலாம்.
உப்பு :
குளிக்கும் போது அந்த நீரில் சிறிது கல்உப்பு சேர்த்து குளித்தால் கண் திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி,சோம்பல்,அலர்ஜி எதாவது ஏற்பட்டால் நீங்கிடும். இதனை வாரம் ஒரு முறை செய்யலாம். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமைகள் அல்லது செவ்வாய் கிழமைகளில் இப்படிக் குளிக்கலாம்.
எலுமிச்சை :
நம் வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையாமல் தடுக்கவும்,கெட்ட எண்ணம் உடைய மனிதர்களின் தாக்கம் பாதிக்காமல் இருக்கவும்,கண் திருஷ்டி விலகவும் வீட்டு வாசலில் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் கற்றாழை கட்டி தொங்கவிடலாம்.
வாசலில் ஒரு எலுமிச்சை,ஒரு பச்சை மிளகாய் என மாற்றி மாற்றி 3 எலுமிச்சை நான்கு பச்சை மிளகாய் என கெட்டியான கயிறில் கோர்த்து தொங்கவிடலாம்.செவ்வாய் கிழமையில் இதைச் செய்ய வேண்டும்.
படிகாரம் :
உங்கள் உழைப்புக்கு கிடைத்த பலன் அல்லது உங்களது தொடர் வெற்றியால் கூட கண் திருஷ்டி விழும். இதனால் வேலையில் திடீர் மாற்றங்கள், தடங்கள்கள் அடிக்கடி வரும். இப்படியிருந்தால் அதனை படிகாரத்தைக் கொண்டு சரி செய்யலாம். கடைகளில் படிகாரம் என்று கேட்டாலே தருவார்கள். திருஷ்டி கழிக்க வேண்டியவரை கிழக்கு நோக்கி நிற்க வைத்து தலையை இடமிருந்து வலமாகவும்,வலமிருந்து இடமாகவும்,மேலிருந்து கீழாக பாதம் வரை சுற்றிப் போடவேண்டும். பிறகு தெருவில் போட்டு விட்டு திரும்பி பாராமல் வந்து விடவேண்டும்.
வாரம் ஒருமுறையாவது கோவிலுக்கு செல்ல வேண்டும். கர்ப்பகிரகத்தினுள், உள்ள மூலவரிடமிருந்து வரும் கதிர்வீச்சு, நிச்சயம் நம் உடலில் உள்ள திருஷ்டியை
நீக்கி விடும்.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...