Monday 31 December 2018

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ருண விமோசன ஸ்தோத்திரம்

                       ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ருண விமோசன ஸ்தோத்திரம்

கடன் ரொக்க கடன் மட்டுமல்ல ,நாம் பாக்கி வைத்ததால் பிறந்த பிறவிகடன் ,பித்ரு கடன், தெய்வங்களுக்கு பிரார்த்தனை வாய்த்த தெய்வக்கடன் இவற்றை முற்றிலும் நீக்கி பிறவிப்பிணி நோய் நீங்கி முக்தி கிடைக்க வழி காட்டும் கடன் தீர்க்கும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ருண விமோசன ஸ்தோத்திரம் பதிவு செய்துள்ளோம். இன்னும் ஒரு சிறப்பு தகவல்,நாம் நியாயமாக கொடுத்து வரவேண்டிய கடன் பாக்கியும்,நமக்கு நியாயமாக வர வேண்டிய ஆக்கிரமிப்பு சொத்துக்கள் ,பங்காளி மூலம் சொத்து பிரச்னைகள் அனைத்தும் தீரும்
ருணம் எனில் கடன் என்று பொருள். லட்சுமி நரசிம்மரைக் குறித்த இந்த ருண விமோசன ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து வந்தால் எல்லாவித கடன்களும் அடைபடும். லட்சுமி நரசிம்மரின் திருவருள் கிட்டும்.
ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மப்பெருமாளே போற்றி
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ருண விமோசன ஸ்தோத்திரம் !
தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபாஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே.
தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வர தாயகம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே.
மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களைத் தருபவரும், மஹாவீரருமான ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே.
ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாக அணிந்தவரும், சங்கம், சக்ரம், தாமரை, ஆயுதம் இவைகளை கைகளில் தாங்கியவரும், மஹாவீரருமான ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ஸ்மரணாத் ஸ்ர்வ பாபக்னம் கத்ரூஜ விஷ நாசநம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே.
நினைத்த உடனேயே அனைத்து பாபங்களையும் போக்கடிப்பவரும், கொடிய விஷத்தை முறியடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ஸிம்ஹாநாதேந மஹதா திக்தந்தி பயநாசனம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே.
மிக பயங்கரமான சிம்ஹத்தின் கர்ஜனையால் எட்டுத் திசையிலும் உள்ள திக்கஜங்களுக்கும் பயத்தை போக்கடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ப்ரஹ்லாதவரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரணம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே.
பக்தனான ப்ரஹலாதனுக்கு அனுக்ரஹம் செய்தவரும், மஹாலக்ஷ்மியுடன் கூடியவரும், அரக்கர் தலைவனான ஹிரண்யகசிபுவை சம்ஹரித்த மஹாவீரருமான,ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
க்ரூரக்ரஹை பீடிதானாம் பக்தாநாம பயப்ரதம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே.
உக்ரமும் கோரமும் உடைய கிரஹங்களால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு அபயம் அளிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
வேத வேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே.
வேதங்கள், உபநிஷதங்கள், யாகங்கள் முதலியவைகளுக்கு தலைவரும், ப்ரம்மா, ருத்ரன் முதலியவர்களால் வணங்கப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ய: இதம் படதே நித்யம் ருணமோச ந ஸம்ஜிதம்
அந்ருணீ ஜாயதே ஸ்த்யோ தநம் சீக்ரமவாப் நுயாத்
யார் இந்த ருணமோசனம் என்ற பெயருடைய ஸ்லோகத்தை தினம் படிக்கின்றாரோ அவர் விரைவிலேயே கடனிலிருந்து விடுபட்டவனாகி மேலும் சகல செல்வத்தையும் அடைவார்
ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மப்பெருமாளே போற்றி!

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...