Monday 5 November 2018

ஏகாதச ருத்ர வேள்வியின் சிறப்பு.

                                          ஏகாதச ருத்ர வேள்வியின் சிறப்பு.

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

 அகத்தியர் பெருமான் திருவானைப்படி சித்தர்களின் குரல்- மஹா சித்தர்கள் ட்ரஸ்ட் அன்பர்களின் ஏற்பாட்டினால் உலக நன்மைக்காகவும் , உலகில் மாபெரும் சித்தர்களின் அருளாட்சி மலரவும் , ஈழவள நாடு மாபெரும் சிவபூமியாகவும் , ஸ்வர்ண பூமியாகவும் , குபேர பூமியாகவும் திகழவும் வருகின்ற கார்த்திகை மாதம் 2018 நவம்பர் 19/20/21/22 ஆகிய திகதிகளில் இலங்கையில் மட்டக்களப்பில் களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் தேவஸ்தானத்தின் நடைபெறவுள்ள ஸ்ரீ ஏகாதச ருத்ர வேள்வியின் சிறப்புக்களும் , அதன் பின்னால் உள்ள உண்மைகளும் .
( இந்த நான்கு நாட்களும் ஆறு காலம் நடைபெறவுள்ள ஸ்ரீ ஏகாதச ருத்ர வேள்வியின் அதி சிறப்பாக வேத மந்த்ர தந்திர சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்ற சதுர்வேத பண்டிதர்களான சிவாச்சார்யார்கள் , வேத உபனிக்ஷதங்களை உலகிற்கு அளிப்பதக்காக தில்லை வாழ் அந்தணர் வழியில் வந்த பல தீக்ஷிதர்களும்
சித்த மரபில் வந்த பல சித்த குருமார்களும் பல ருத்ர உபாசகர்களும் சிவனடியார்களும் இணைந்து ருத்ரஷக்திகளுக்குரிய மூல மந்திரங்கள் , காயத்ரி மந்திரங்கள் , மாலா மந்திரங்கள் , விசேட மந்திரங்கள் , ரகசிய மந்திரங்கள் மூலமாக அக்கினியிலே ருத்ர உபனிஷததிலே சொல்லப்பட்டதட்கு நடைபெறுவதால் வாழ்க்கையில் எப்பேற்பட்ட தடைகளையும் உடைத்தெறிந்து அருளையும் பொருளையும் வரங்களையும் கேட்பதற்கு முன்னமே அள்ளி கொடுக்க கூடிய வல்லமை இந்த ருத்ர வேள்விக்கு உண்டு. )
பல முகவரிகளுக்கு எழுதிய கடிதங்களை ஒரே
தபால் பெட்டியில் போடுகிற மாதிரி, பல தேவதைகளுக்கு பலவிதமான திரவியங்களை
மந்திரப் பூர்வமாக அக்னியில் விடுவதைத்தான் ஹோமம் என்கிறோம். அக்னி இவற்றை தானே எடுத்துக் கொள்ளாமல் இவற்றின் சாரத்தை அந்தந்த தேவதைக்கு அனுப்பி வைக்கின்கிறன என்பது சிவாகமங்களில் சொல்லப்பட்ட ரகசியம்.
நாம் செய்கிற ஹோமங்களில் திருப்தி அடைந்து நமக்கு அனுக்கிரகத்தை அள்ளித் தருகின்றனர்,
தேவர்கள். கடலிலுள்ள நீர் ஆவியாகி மீண்டும்
மழையாகப்பொழிந்து வரும் சுழற்சியைப்
போன்றதுதான் இந்த ஹோமங்கள்.
நமக்கு அருகேயுள்ள சக்திகளை தொடர்பு
கொள்ள வைக்கும் விதம்தான் மந்திரப்பூர்வமான ஹோமங்கள். மந்திரங்களால் நிறைந்த
பிரதேசங்களின் அலைவரிசை நம் மனதிற்கு
பலத்தைக் கொடுக்கிறது. எங்கேயோ
தடைபட்டிருந்த சக்திகளை மந்திர ரூபமாக
உள்ள தேவர்கள் அகற்றுகின்றனர்.
பூமியில் உட்கார்ந்து கொண்டு அண்டத்திலுள்ள
செயற்கைகோளை சரி செய்வதுபோன்ற ஒரு
செயலை ரிஷிகள் அநாயாசமாக அன்றாட
வாழ்க்கைக்கு உபயோகமாகும் விதமாக
ஹோமங்களாக வடிவமைத்துக்
கொடுத்துள்ளனர்.
இந்திராய ஸ்வாஹா... என்றால் அங்கு இந்திரன் வரவேண்டும், இது வேதத்தின் சத்தியக் கட்டளை.
அழைக்கும்போதே அனுக்கிரகத்தோடு வரும்
கருணை. இது, மனிதர்கள் தாங்கள்
தனித்தவர்கள் அல்ல. தங்களைச் சுற்றிலும்
பல்வேறு சக்திகள் இயக்கியும்,
இயங்கியபடியும் உள்ளன என்பதன்
சூட்சுமமும் உள்ளது. எனவே, இன்ன
ஹோமம் செய்தால் இன்ன பலனை கொடுத்தே
தீருவார்கள். அவற்றில் முதன்மையானதுதான்
இந்த ஸ்ரீ ஏகாதச ருத்ர வேள்வி.
வேள்வியின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய விதி முறைகள்.
************************************************************************
யாக குண்டத்திற்கான மணல் பெரும்பாலும் புனித நதிப் படுகையிலிருந்தே பெறப்படுவது சிறப்புடையது ஆகும். அல்லது இதற்குரிய நல்வாய்ப்பு கிட்டாவிடில், கிடைக்கின்ற மணலை நன்கு சுத்தப்படுத்தி கங்கை, காவிரி போன்ற புனித நீரைத் தெளித்து, "ஸ்ரீபூமாதேவ்யை நம: ஓம் பூமா தேவியே போற்றி" என்று 108 முறையேனும் துதித்து மிருத்திகா பூஜை செய்த பிறகே அதனை ஹோம குண்டத்தின் அடித்தளமாகப் பயன்படுத்துதல் வேண்டும்.
யாக குண்டத்தில் பிள்ளையார் சுழியோ அல்லது யந்திரங்களோ, சக்கரங்களோ வரைகையில் சூரிய விரலான வலது மோதிர விரலைக் கொண்டே அவற்றை வரைதல் வேண்டும்.
மணலில் நிருதி திக்கில் (தென்மேற்கு) ஒரு சூலமோ அல்லது சங்கு, சக்கரமோ வரைந்து இருப்பது சிறப்புடையது ஆகும். ஹோம குண்டத்திற்குப் பயன்படும் செங்கற்கள் உடைபடாது பின்னமில்லாது சுத்தமாக, புதிதாக ஒரு முறை ஹோமத்திற்கு பயன்படுத்தப்பட்ட செங்கற்களை மீண்டும் பயன்படுத்துதலைத் தவிர்த்தல் வேண்டும்.
ஒவ்வொரு ஹோம செங்கற்கலுக்கும் சந்தனம், விபூதி, குங்குமம், மஞ்சள் பூசிடுக!
யாக வழிபாடு என்பது அக்னி வழிபாடு ஆகையினால் ஹோமத்தை நடத்துகின்றவர் (ஹோமகர்த்தா) அக்னி திக்கான தென்கிழக்குத் திசையில் அமருவது தான் உத்தமமானது.
ஹோமத்தில் பங்கு கொள்கின்ற அனைவரும் தரையில் அமராது, பலகையின் மீதோ, துணியிலோ, தர்ப்பைப் பாயின் மீதோ தான் அமர வேண்டும்.
இல்லையெனில் இதில் ஹோமத்தின் பலன்களாகக் கிடைக்கின்ற ஆன்மீகக் கதிர்கள் உடலில் சேராது பூமியில் இறங்கி விடும்.
ஹோமத்திற்காக சுத்தமான பசு நெய்தான் ஆஹுதி அளிக்கப்பட வேண்டும். உலோகப் பாத்திரங்களைத் தவிர்த்து மரக்கிண்ணம், மரப்பாத்திரம் அல்லது வசதியிருப்பின் வெள்ளி, தங்க கிண்னங்களையே வைத்திடுக! தென்னை, பனை ஓலையினால் ஆன தொன்னை ஓலைப் பாத்திரமும் சிறப்பானதே யாகத்தில் ஆஹுதியாக இடும் பொழுது மரக்கரண்டியை அல்லது மாவிலையை மட்டும் பயன்படுத்துதல் வேண்டும். எவர்சில்வர் ஸ்பூன் அல்லது வேறு உலோகத்தினால் ஆன ஸ்பூனிலோ பசு நெய்யை எடுத்து நேரடியாக அக்னியில் ஊற்றுவது சாபங்களையே பெற்றுத் தரும்.
யாக மரக்கரண்டியும் குறித்த சில மரங்களினால் செய்யப்படுவதே நன்மை பயக்கும். மா, பலா, தேக்கு, சந்தனம், வேங்கை போன்ற மரங்கள் ஏற்புடையவை. புளி, சவுக்கு போன்ற விறகு மர ஹோமக் கரண்டிகளைக் கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது. யாகத்தில் இடப்படும் ஆஹுதிகள், அரசு, ஆல், வில்வம் போன்ற மூலிகை மரப் பொருட்களாக இருக்க வேண்டுமே தவிர விறகுகளையோ சிராத்தூள்களையோ ஒரு போதும் பயன்படுத்துதல் கூடாது. இதுவே தற்போதைய ஆலய ஹோமங்களிலும் பெரும்பாலான இல்லற ஹோமங்களிலும் கடைப்பிடிக்கப்படுகின்ற தவறான வழக்கம் ஆகும். தயவு செய்து இதற்கு முற்றுப் புள்ளி வைக்கவும். ஹோம குண்டம் அடுப்பு அல்ல, எல்லாவற்றையும் உள்ளே தள்ளுவதற்கு!
ஆண்கள், உடல் சுத்தியுடன் பெண்கள் இருவருமே ஆஹுதிகள் அளித்திடலாம்.
ஆஹுதி அளிக்கும் பொழுது தர்ப்பையிலான மோதிரத்தை (பவித்திரம்) அணிதல் விசேஷமானதாகும்.
மிகவும் சக்தி வாய்ந்த தெய்வீக அக்னிக் கதிர்களை நேரடியாக நம் சரீரத்தில் பெற முடியாதாதலின் தர்ப்பையே இதனை நமக்குப் பெற்றுத் தருகிறது.
ஆஹுதி அளிக்கப்படும் பொழுது "சுவாஹா" என்று சொல்லப்படும் பொழுது அளிக்கப்படும் ஆஹுதிகளை மட்டும் தான் "சுவாஹா" எனப்படும் தேவ மூர்த்தி பெற்று அந்தந்த தேவதா மூர்த்திகளுக்கு அளிக்கின்றாள்.
யாகங்கள் நடக்கும் பொழுது தேவையில்லாமல் அக்னியைக் கிண்டுவதோ, அனாவசியமாக விசிறி, காற்றை எழுப்புவதோ கூடாது. ஏனென்றால் அக்னியை ஆசனமாகக் கொண்டு பல கோடி தேவதைகள் தேவதா மூர்த்திகள் ஹோம குண்டத்தினுள் உறைகின்றனர்.
பசு நெய் தவிர வேறு எண்ணெயை, ஒரு போதும் அக்னி எழுப்புதவதற்காகப் பயன்படுத்துதல் கூடாது.
யாகப்புகை, மிகுந்த தெய்வீக சக்தி உடையதாகையால் இயன்ற வரையில் ஹோமப் புகையை சுவாசிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
ஒரு முறை வேள்வியில் எழுப்பப் படுகின்ற ஹோமப் புகையினால் 120 வருடங்களுக்கு அந்த நாட்டில் சேருகின்ற தீவினைச் சுழல்களை எளிதில் கழித்து விடலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஆண்டாண்டு காலமாக மனதில் நெஞ்சிலும் உள்ள தீயவினைப் படிவுகளை யாக புகை ஒன்று தான் நீர் வடிவில் அவற்றை வெளியேற்றுகின்றது.
ஒரு வேள்வி வழிபாடானது பல்லாயிரக்கணக்கான அர்ச்சனை, ஆராதனைகளின் பலன்களைத் தரவல்லது ஆகும். எனவே இது மிகச் சிறந்த சமுதாயப் பணியாகப் பரிமளிக்கின்றது.
வியாபார/ வருமான நோக்கு இல்லாமல் பொது மக்களின் நன்மைக்காக இலவசமாக யாகத்தை நடத்தித் தருவதே தெய்வீகமானது!
தனிப்பட்ட முறையில் ஹோமம் செய்வதை விடப் பலரும் சேர்ந்து சத்சங்கமாக, கூட்டு வழிபாடாக யாக வழிபாட்டை மேற்கொள்தலே உத்தமமானது.
யாக என்றால் அக்னி ரூபத்தில் தெய்வ மூர்த்தியை வழிபடுதல் என்று பொருள் ஆகும்.
யாகத்தில் இடப்படுகின்ற ஆஹுதிகளின் சக்தியை "சுவாஹா" தேவதைப் பெற்றுத் தந்து அந்தந்த லோகத்தில் உள்ள தெய்வ மூர்த்திகளிடம் சமர்ப்பிக்கின்றன. ஸ்ரீஅக்னி மூர்த்தியின் பத்னி தேவியே ஸ்ரீசுவாஹா தேவி ஆவாள்.
யாகத்தில் வழிபாட்டில் ஸ்ரீஅக்னி மூர்த்தியானவர் தானே ஒரு அக்னி ஆலயத்தை ஏற்படுத்தி அதில் நம்மை வழிபடுவதற்கு வழிவகை செய்கின்றார். எனவே யாக வழிபாடு என்பது அக்னியால் ஆன ஆலயத்தில் நாம் வழிபாட்டைச் செய்வது ஆகும்.
நம்முடைய வாழ்க்கையில் ஒரு பெரும் பங்கு வகிப்பது அக்னியாகும். சமையல், நிலவொளி, வீட்டிற்கு, அலுவலகத்திற்கு வெளிச்சம், தொழிற்சாலை போன்ற பல இடங்களிலும் அக்னி நமக்குப் பெருமளவில் உதவி செய்கின்றது.
ஆனால் இதற்காக என்றைக்கேனும் அக்னி பகவானுக்கு நன்றி செலுத்திப் பிரார்த்தனை செய்துள்ளோமா?
வீட்டில் தீபம் ஏற்றுவது கூட ஒரு வகை அக்னி வழிபாடே ஆகும். எனவே நம்முடைய வாழ்க்கைக்குப் பெரிதும் உதவி வருகின்ற ஸ்ரீஅக்னி பகவானை வழிபடுவதற்காக நாம் மாதந்தோறும் ஒரு சிறிய அளவிலான எளிய ஹோமத்தையேனும் செய்து வருதல் வேண்டும்.
தஞ்சைப் பகுதிகளில் அக்னி பூஜைக்கு செப்பாலான மிகவும் சிறிய அளவிலான ஹோம குண்டங்கள் கிடைக்கின்றன.
இதனை வீட்டில் வாங்கி வைத்துக் கொள்வார்களேயானால் மிகச் சிறிய அளவிளான தினந்தோறும் உங்கள் குழந்தைகள் மூலம் ஹோமத்தை செய்து அவர்களுக்கு நல்ல இறைப் பக்தியை அடித்தளமாக ஏற்படுத்தித் தரலாம் அல்லவா! இதனைத்தான் அக்காலத்தில் சமிதா தானம், அக்னி சந்தானம், ஔபாசனம் போன்ற அக்னி வழிபாடாக நம் பெரியோர்கள் போற்றி வந்தனர்.
ஹோம வழிபாட்டை நாம் சரிவரக் கடைபிடிப்பது இல்லை. சோம்பேறித்தனம், பக்தியின்மை, நேரமின்மை என்ற சாக்கு காரணமாக யாக வழிபாட்டை அறவே ஒதுக்கி விட்டோம்.
மேலும் யாகத்தை நடத்தித் தருகின்றவர்களும் மிகவும் அதிகமான தொகையைக் கேட்பதால் பெரும்பாலானோர் யாக வழிபாட்டையே மறந்து / ஒதுக்கி விட்டார்கள். யாக வழிபாட்டிற்கு எத்தகைய கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது. யாக நடத்த கட்டணம் பெறுதல் என்றால் வேதத்தையே விற்பது போல் ஆகும். அக்னி தெய்வ மூர்த்தியை வழிபடுவதற்குப் பேரம் பேசலாமா? ஆனால் யாக வழிபாட்டை இலவசமாக நடத்தித் தருகின்ற உத்தமர்களுக்குத் தாமே மனம் உவந்து சன்மானம் அளிப்பதில் தவறு கிடையாது.
இந்தத் தொகையைத் தந்தால் தான் யாகத்தை நடத்தித் தர முடியும் என்று விதிப்பது அக்னியையே விலை பேசுவது போலாகி பெரும் சாபங்களைப் பெற்றுத் தரும்.
பிறருக்கு இலவசமாக யாகத்தை நடத்தித் தருவது என்பது மிகப் பெரிய தர்மம் ஆகும். இத்தகைய பாக்கியத்தைப் பெற்றோர் ஒரு சிலரே. இவர்களுக்கு தேவர்களே தலை வணங்குவார்கள் என்பது இறை வாக்கு. இவ்வாறு இதனை இலவசமாக நடத்தித் தருவோருக்கும் பலவிதமான அற்புதமான பலன்கள் காத்துக் கிடக்கின்றன. எனவே பெறுதற்கரிய இந்த மானுடப் பிறவியில் யாக வழிபாட்டை நன்கு அறிந்தவர்கள் இயன்ற வரையில் ஏழை எளியோருக்கும் இந்த யாக வழிபாட்டின் பலன்கள் சென்றடையும் வண்ணம் அவர்களுக்கென இலவசமாகவே யாகத்தை நடத்த வேண்டுகின்றோம்.
இலவசமாக யாக பூஜையை நடத்தித் தருவது கலியுகத்தின் மிகப் பெரிய தர்மமாக அமைந்திருக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள்.
நம்முடைய கலியுக உணவு முறையில் மூலிகைப் பொருட்கள் இடம் பெறுவதே கிடையாது.
பலவிதமான நாட்டு மருந்து பொருட்களும், மூலிகைப் பொருட்களும் உடலில் சேர்ந்தால்தான் நமது உடல் திடகாத்திரமாகவும், ஆயுள் விருத்தியுடனும் விளங்கும்.
யாக குண்டத்தில் பலவிதமான மூலிகைப் பொருட்களும், தெய்வீக சக்தி நிறைந்த பலவிதமான திரவியங்களும் சேர்க்கப்படுகின்ற பொழுது அவற்றின் சாரமானது வாயு வடிவத்தில் நம் உடலைச் சேருகின்றது. தலை முதல் பாதம் வரை அனைத்து தேகங்களுக்கும் 72,000 நாடி நரம்புகளுக்கும் இத்தகைய தெய்வீக மூலிகா பொருட்களின் வாயு பந்தன சக்தியானது ஹோமப் புகை மூலம் சேருவதால் இது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தருவதோடு, மனதிற்குத் தெளிவையும், உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் தருகின்றது.
யாக குண்டதின் சிறப்பு !
**************************
நமது இந்துமதத்தினர் நல்ல விஷேசங்கள்
ஆனாலும் கெட்ட காரியங்கள் ஆனாலும்
ஹோமம் வளர்ப்பது வாடிக்கையான
சம்பிராதயம் மரகுச்சிகளை போட்டு நெருப்பு
வளர்ப்பதில் என்ன இருக்கிறது என்று கேலி பேசியவர்கள் போபால் விஷவாயு தாக்கிய சம்பவத்தில் அக்னி ஹோத்ரா ஹோமம்
செய்தவர்கள் மட்டும் தப்பியதை அறிந்தபிறகு
அதில் ஏதோ இனம் புரியாத விஷயம் அடங்கி
உள்ளது என்று சற்று வாய்மூட
ஆரம்பித்துவிட்டார்கள்.
புதிய வேலைகளை துவங்குவதற்கு கணபதி
ஹோமம் ஜாதக தோஷங்களை விலக்குவதற்கு
நவக்கிரக ஹோமம், எதிரிகளின் தொல்லை
அதிகமாகாமல் தடுக்க சுதர்சன ஹோமம்
என்று செய்வதை கேள்விபட்டிருக்கிறோம் அந்த ஹோமங்கள் செய்யும் போது சதுரவடிவிலேயே குண்டங்கள் அமைக்கப்படுவதையும் பார்த்திருக்கிறோம்.
இவை தவிர வேறு சில ஹோமங்கள் செய்யும்
போது சதுரம் மட்டும் அல்லாமல் பல்வேறு
வடிவிலும் ஹோம குண்டங்கள்
அமைக்கப்படுவதை காண்கிறோம்.
ஹோமம் என்பதே நெருப்பை வளர்த்து
கடவுளை வழிபாடும் ஒரு சடங்குதானே,
இதற்கு ஒரே வடிவத்தில் குண்டங்கள்
அமைத்தால் போதாதா வட்டம் முக்கோணம்
என்று அமைக்க வேண்டுமா என்று பலருக்கும்
தோன்றும்.
ஒரு ஹோமம் நடத்த ஆகுதி பொருட்களும்
மந்திரமும் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் ஹோம குண்டத்தின் வடிவமுறை
காரணம். ஹோம குண்ட வடிவங்கள் நாம் நினைப்பது போல சாதாரண தோற்றங்கள்
அல்ல அந்த தோற்றங்களுக்குள் பல இயற்க்கை
தத்துவங்கள் ரகசியங்கள் மறைந்துள்ளன
நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற ஐம்பூதங்கள் தான் இயற்கையின் மூலங்கள்
என்று நமக்கு தெரியும்.
அத்தகைய இயற்க்கை மூலங்களான
ஐம்பூதங்களுக்கு பண்டைய கால இந்திய
விஞ்ஞானப்படி குறியீட்டு உருவமும் சக்தமும்
கண்டறியப்பட்டுள்ளது! அதன் அடிப்படையில்
தான் ஹோமகுண்ட உருவங்கள் வடிவமைக்க
படுகின்றன. இதன்படி செய்யும் யாகங்களுக்கு கைமேல் பலன் கண்டிப்பாக கிடைக்கும் என்று நமது வேதங்கள் சொல்கின்றன.
பூமியை குறிக்கும் குறியீட்டு வடிவம்
சதுரமாகும் இதன் ஒலி அதிர்வு அதாவது.பீஜமந்திரம் லம் என்பதாகும் நீரை குறிக்கும் வடிவம் பிறைச்சந்திர வடிவாகும் இதன் பீஜ மந்திரம் வம் என்பதாகும் நெருப்பை குறிப்பது முக்கோண வடிவம் இதன் மந்திரம்
ரம் என்பதாகும் காற்றை குறிப்பது அறுகோண
வடிவாகும் இதன் பீஜம் யம் என்பதாகும்
ஆகாயத்தை குறிப்பது வட்டவடிவாகும் இதன்
பீஜம் ஹம் என்பதாகும்.
உதாரணமாக எதிரிகளின் தொல்லைகளை
முறியடிக்க வெற்றி வாகை சூட யாகங்கள்
செய்யும் போது அதன் குண்ட வடிவம்
முக்கோணத்தில் அமைப்பார்கள், குழந்தைகள்
பெற பொருள் ஈட்ட யாகங்கள் செய்தால்
வட்டவடிவ யாககுண்டம் அமைப்பார்கள்.
இப்படி ஒவ்வொரு தேவைக்கும் தனித்தனியான
யாககுண்ட வடிவமுறைகள் இருக்கின்றன
அவைகளை துல்லியமாக கணக்கிட்டு
அமைத்து செய்யப்படும் யாகங்கள் எதுவும்
தோர்ப்பது இல்லை.
பசு நெய்.. பசுஞ்சாண வரட்டி கோயில்களில் ஹோமம் செய்யும் போது, பசு நெய்யை ஊற்றுகிறார்கள். நெய் கலந்த. அரிசியை இடுவதும் உண்டு. இப்படியெல்லாம், நெய்யை ஊற்றலாமா! நாலு ஏழை பிள்ளைகளுக்கு கொடுக்கக்கூடாதா
என்று வாதம் செய்வோர் உண்டு.
ஆன்மிகத்தைப் பொறுத்தவரை, யாக
குண்டங்களில் இடப்படும் பொருட்கள், அக்னி
மூலமாக, எந்த தெய்வங்களுக்குரிய
மந்திரத்தைச் சொல்கிறோமோ, அந்த
தெய்வங்களையோ, தேவர்களையோ
அடையும் என்று சொல்கிறது.
அறிவியல் என்ன சொல்கிறது தெரியுமா?
பசுநெய்யை யாகத்தில் விடும் போது, சுற்றுச்சூழல் தூய்மையடைகிறது. காற்றிலுள்ள மாசு குறைகிறது. நெய் கலந்த அரிசியை ஹோமத்தில் இடும்போது, அசிட்டிலின், எத்திலீன் ஆக்ஸைடு உள்ளிட்ட சில வாயுக்கள் கிளம்புகின்றன.
இவை <ரத்த அழுத்தம், தலைவலி, ஆஸ்துமா, குடல்களில் ஏற்படும் நோய்களை குணமாக்கும்
சக்தியுடையவை. நரம்பு மண்டலம்
வலுவடையும். டென்ஷன் குறையும்.
வீடுகளில் இடமிருந்தால் பசுஞ்சாண
வரட்டியையும் எரிக்கப் பயன்படுத்துங்கள்.
அந்தக்காலத்தில், வீட்டுக்கு வெளியே
இருக்கும் பரந்த இடத்தில், பசுஞ்சாணம்
சேகரித்து, வரட்டி தட்டி காயவைத்து வெந்நீர்
போட, சமைக்க என பயன்படுத்தினார்கள்.
இந்தச் சாம்பலை செடி, கொடிகளில்
தெளித்தால் பூச்சிகள் ஓடிவிடும். பல்
தேய்க்க இந்த சாம்பலை பயன்படுத்துவார்கள்.
தேமல் இருந்து, அதில் பூசினால்
குணமானது. என்னதான் நவீனம் வளர்ந்தாலும்,
பசுவளர்ப்பை ஊக்கப்படுத்த வேண்டும்.
சுத்தமான நெய், வரட்டி முதலானவை
கிடைக்க வீட்டுக்கு வீடு ஏற்பாடு செய்ய
வேண்டும். பசுக்களை தெருக்களில் அலைய
விடக்கூடாது. பசு வளர்ப்புக்கென இடம்
ஒதுக்க வேண்டும். அருகிலேயே
மேய்ச்சலுக்கு பயன்படும் வகையில் புல் வளர்க்க வேண்டும். பசுக்களைப் பாதுகாத்தால், ஆன்மிக ரீதியாக புண்ணியம். அறிவியல் ரீதியாக ஆரோக்கியம்.
ருத்ர ஹோமம்: குறிப்பாக ருத்ர ஹோமத்தில் சேர்க்கப்படும் மூலிகைகளில் , சீந்தில் , தர்பை , வன்னி, எருக்கன் , அரசு , ஆலம் போன்ற கல்ப மூலிகைகளும் , திப்பிலி, சுக்கு, சிவனார் வேம்பு , சிவகரத்தை போன்ற கடைச் சரக்குகளை யாகத்தீயில் நெய் சேர்த்து எரிக்கும் போது வெளி வரும் மூலிகைக் புகையை நாம், சுவாசிக்கும் போது , சுவாசத்தின் வழியாக இரத்தத்தில் கலந்து , நம் இரத்தத்தை சேதப் படுத்தும் கிருமிகளை அழிக்கின்றது . இதனால் நோய்கள் விரைந்து குணமாகிறது.
சமித்து:
*********
சமித்து அப்டினா ஹோமத்துக்கு பயன்படுத்துற சின்ன சின்ன குச்சிகள். அந்த காலத்துல ஞானிகள், குருக்கள் எல்லோரும் மரத்துல இருந்து காய்ந்து தானாக உதிர்ந்த/ உடைந்த குச்சிய மட்டும் தான் ஹோமத்துக்கு பயன்படுத்துனாங்க..
ஏன்னா விருட்சம் (மரம்) நம்ம இயற்கை சகோதரன், நம்ம லாபத்துக்காக வெட்டக்கூடாது, அப்டி வெட்டி பயன்படுத்துனா ஹோமதுக்கே பயனில்லை.
சூரிய ஒளி, நாம கொடுக்குற தண்ணி அல்லது மழை காத்து இதெயெல்லாம் எடுத்துகிட்டு நமக்கு பழத்தை கொடுக்கும், இன்னும் நிறையா பலனையும் கொடுக்கும் விருட்சம் தெய்வம் போல ன்னு எண்ணி வாழ்ந்தாங்க..
நாம மரத்த காக்கவும் மாட்டோம் நடவும் மாட்டோம், வெட்டி சாச்சு காசு பாப்போம். வினை விதைத்தவன் வினை அறுப்பான்..
சரி அந்த சமித்து என்ன என்னன்னு பாப்போம்...
வில்வம் : சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது
துளசி சமித்து : நாராயணனுக்குப் பிடித்தது
அத்தி சமித்து : சுக்கிரனுக்குப் பிடித்தது
நாயுருவி சமித்து : புதனுக்குப் பிடித்தது
பலாமர சமித்து : சந்திரனுக்குப் பிடித்தது
அரசரமர சமித்து : குருவிற்குப் பிடித்தது
வன்னிமர சமித்து : சனீஸ்வரனுக்குப் பிடித்தது
அருகம் புல் : விநாயகருக்கும்,
ராகுவுக்கும் பிடித்தது
மாமர சமித்து : சர்வமங்களங்களையும் சித்திக்கும்
பாலுள்ள மரத்தின் சமித்துக்கள் : வியாதி நாசினி
தாமரை புஷ்பம் : லஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானது
மாதுளை மரம் : அழகான் வடிவமும்,வசீகரமும் கிடைக்கும்.
சமித்து குச்சிகளும் பலன்களும்:
அத்திக் குச்சி : மக்கட்பேறு.
நாயுருவி குச்சி : மகாலட்சுமி கடாட்சம்
எருக்கன் குச்சி : எதிரிகள் இல்லாத நிலை
அரசங் குச்சி : அரசாங்க நன்மை
கருங்காலிக் கட்டை: ஏவல் ,பில்லி ,சூனியம் அகலும் .,
வன்னிக் குச்சி : கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும்.
புரசங் குச்சி : குழந்தைகளின் கல்வி வளர்ச்சி
வில்வக் குச்சி : செல்வம் சேரும்
அருகம்புல் : விஷபயம் நீங்கும்.
ஆலங் குச்சி :புகழைச் சேர்க்கும்.
நொச்சி : காரியத்தடை விலகும்.
(யாக புகை அண்டத்திற்க்கும் பிண்டத்திற்க்கும் நன்றே. தமிழில் தாவரம் என பெயர் சூட்டி மகிழ்ந்ந்தனர். ஆம் தா + வரம் தாவரம்)
( யாகத்திற்கு பலன் உண்டு இன்னும் சித்தர்கள் சொன்ன முறையில் செய்தால் சுவாஹா சொல்லுகீறார்கள் ஆனால் சித்தர்கள்
சிவ அக என்று சொல்லுகிறார்கள்)
ருத்ர ஹோமத்தின் பெருமை:
*********************************
சிவபெருமானின் பூரண அருளைப் பெறக் ருத்ர
ஹோமம் மிகவும் முக்கியமானது. "ருத்ர சம்கிதை " என்ற அதர்வ வேத நூலில் என்னென்ன திரவியங்கள் கொண்டு என்னென்ன பிரயோகங்கள் செய்தால் முழு பலன்களையும் பெற முடியும் என ஆதி கால ரிஷிகள் சொல்லி இருக்கிறார்கள்.
எவன் ஒருவன் சிவபெருமானை வேண்டி பக்தி சிரத்தையுடன் மூல மந்திரங்களை ஜெபம் செய்து 1,000 மோதகம் , 1,000 கொழுக்கட்டை , 1,000 அப்பம் , 1,000 அதிரசம் , 1,000 எள்ளுருண்டை இவற்றை தேனில் நனைத்து ருத்ர ஜெபத்துடன் ஹோமம் செய்கிறானோ அவன் மனதில் நினைத்த அனைத்து காரியங்களையும் 11 கோடி ருத்ர சக்திகளே நிறைவேற்றி கொடுப்பார்கள்.
எவன் ஒருவன் 11 வேதியர்களை கொண்டு ஏகாதச ருத்ர ஹோமம் ஹோமம் செய்கிறானோ , அவன் சூரியன் மாதிரியான ஒளிமயமான வாழ்க்கை வாழ்வான்.
எவன் ஒருவன் 18 வகையான மூலிகை சமித்து குச்சிகளை (ஆல், அரசு, பலா,அத்தி , இத்தி, பலாசு, வில்வம், வன்னி, வெள்ளெருக்கு, மகிழ், கருங்காலி , நாயுருவி , சந்தனம் , அகில் , தேவதாரம் , மூங்கில் , காஞ்சுரம் , சீந்தில் ) நெய்யில் நனைத்து பஞ்ச சூக்தங்களை ருத்ர ஜெபத்துடன் ஹோமம் செய்கிறானோ அவன் 21 தலைமுறைக்கும் நோய்களே தாக்காது.
எவன் ஒருவன் அருகம்புல்லை 1,000 கட்டுகளாக கட்டி நெய்யில் நனைத்து ஹோமம் செய்கின்றானோ அவன் அறிவாற்றல் , நினைவாற்றல், கலையாற்றல் பெருகி ஞானியாக திகழ்வான்.
எவன் ஒருவன் சிவ பரம்பொருளை வேண்டி வேண்டி 11 விதமான பழங்களை (வாழைப்பழம் , மாம்பழம் , பலாப்பழம் , மாதுளம்பழம், விளாம்பழம் , திராட்சை பழம் , எலுமிச்சம்பழம் , தோடம்பழம் , நாரதம்பலம் அத்திப்பழம் , வில்வம்பலம் ) கொண்டு ஹோமம் செய்கிறானோ அவன் அந்த ஊரிலேயே மாபெரும் செல்வந்தனாக மாறுவான்.
எவன் ஒருவன் சிவ பரம்பொருளை வேண்டி வேண்டி 1,000செந்தாமரை மலர்களை தேனில் நனைத்து ருத்ர ஜெபத்துடன் ஹோமம் செய்கின்றானோ அவன் எப்பேர்ப்பட்ட கடன் பிரச்சனைகளும் அடுத்த வருடத்துக்குள் தீரும்.
அஷ்டத்திரவியம், தேங்காய்த்துண்டு ஆகியவை அதற்குச் சிறந்த ஹோமத்திரவியங்கள்.
1000 தேங்காய்க் கீற்றினால் ஹோமம் செய்ய செல்வம் வளரும்.
ஸத்துமா, நெல் பொரி, திரிமதுரம் ஆகியவை
ஸர்வ வச்யம் நல்கும்.
திரிமதுரம் கலந்த நெல்பொரி கல்யாண ப்ராப்தியைத் தரும்.
நெல் கலந்த அன்னம், நெய் ஆகியவை விருப்பத்தை ஈடேற்றும்.
நெற்பொறியினால் ஹோமம் செய்தால் பேரும் புகழும் கிட்டும்.
கரவீர புஸ்பத்தினால் ஹோமம் செய்தல் ஆசைப்பட்ட வாழ்க்கை துணையை அடையலாம்.
சீந்தில் கொடியால் ஹோமம் செய்தால் புற்றுநோய் போன்ற தீராத நோய்கள் கூட உடனே தீரும்.
சக்கரையால் ஹோமம் செய்தால் மக்களை வசியம் செய்கிற ஆளுமை கிடைக்கும்.
நெல் முதலிய நவ தானியங்களினால் ஹோமம் செய்தால் செல்வம் கொழிக்கும்.
பருத்தி விதையால் ஹோமம் செய்தால் எதிரிகள் செயலற்று போவார்கள்.
தேன் தங்கம் தரும்.
நெய்யில் நனைத்த அப்பம் மந்திர சித்தி, ராஜ வச்யம் தரும்.
மோதகம் போரில் வெற்றி தரும்.
மட்டை உரிக்காத தேங்காய் 48 இனால் ஹோமம் மந்திர சித்தி நல்கும்.
தாமரை செல்வ வளர்ச்சி தரும்.
வெண்தாமரையால் வாக் சித்தி ஏற்படும்.
அருகம்புல் குபேர சம்பத்து தரும்.
மோதகம் நினைத்ததைத் தரும்.
வில்வ இலை, நெய்யில் நனைத்த சமித் ஆகியவையும் அப்படியே.
தேங்காய், அவல் மிளகு ஆகியவை ஸர்வ
வசியம் தரும்.
இவ்வாறு ஹோமத்திற்குரிய பெரிய பட்டியலே சொல்லப்பட்டிருக்கிறது.
பார்த்திப லிங்க பூஜை
************************
சிவாகமங்களில் சிவபெருமானே அன்னை பார்வதிக்கு சொன்ன அதி உன்னத வழிபாடு இந்த பார்த்திப லிங்க பூஜை. கலியுகத்திலே மணலிலே சிவலிங்கம் செய்து வழிபடுவது தான் உயர்ந்த வழிபாடு. அனைத்து பேறுகளையும் கேட்கின்றவரங்களையும் உடனே வழங்க கூடிய வழிபாடு என பரமேஸ்வரனே அன்னை பார்வதிக்கு சொல்கிறார். இந்த வழிபாட்டை செய்து தான் அன்னை பார்வதி தேவி முத்தி பேரு அடைகிறார். அன்று முதல் ராமபிரான் ராவனேஸ்வரனை கொன்ற ப்ரமகத்தி தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் இதே வழிபாட்டை செய்து தான் தன் தோஷங்களை போக்கினார். இதே போல் சூரபத்மனை அழித்த போது முருக பெருமானுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடிக்கிறது. அப்போது திருச்செந்தூரில் கடற்கரையில் பஞ்ச லிங்கங்களை மணலிலே பிடித்து வழிபாடு செய்து தோஷங்கள் நீங்க பெறுகிறார். இதே வழிபாடை தான் திருகோணமலையில் மணலிலே 1,008 சிவலிங்கங்கள் செய்து இலங்கை வேந்தன் ரராவனேஸ்வரன் பல்லாயிரம் வருடங்களுக்கு முன் செய்து இலங்கை வளநாட்டையே மாபெரும் சிவ பூமியாக ஸ்வர்ண பூமியாக மாற்றினான் என பல மிக பழமையான கிரந்த நூல்களில் சொல்பட்டுள்ளது. இதே பூஜையை தான் இலங்கையில் நடைபெறவுள்ள ஸ்ரீ ஏகாதச ருத்ர வேள்வியில் வருகிற 2018 நவம்பர் 21ம் திகதி புதன்கிழமை காலை 7 மணிக்கு மீண்டும் இலங்கை மாபெரும் சிவபூமியாக , குபேர பூமியாக மாற களுதாவளை மண்ணில் உரிய வேத சிவாகம முறைப்படி மணலிலே 1,008 சிவலிங்கங்கள் செய்து வழிபாடுகள் நடைபெற இருக்கிறது. இந்த பூஜையை செய்பவர்கள் மாபெரும் குபேர சம்பத்துகளையும் அனைத்து வல்லமைகளையும் பெருவார்கள் என்பது மட்டும் உறுதி. அனைவரும் இந்த மாபெரும் பார்த்திப லிங்க பூஜையில் கலந்து கொள்க.. அனைத்து வரங்களையும் பெருக....

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...