Saturday 1 September 2018

#தாந்திரீகம்_4

#தாந்திரீகம்_4
~~~~~~~~~~~~
மாந்திரீகம் பெரியளவில் கையாளப்படும் இடங்களில் நீங்கள் இருந்தால், நகங்களைப்பற்றி மிக கவனமாகவே இருக்கவேண்டும். நகம், முடி குறித்து மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.
இந்தியாவின் சில பகுதிகளில், நீங்கள் அடுத்தவர் வீட்டிற்கு செல்லும் போது உங்கள் தலை முடியை சீவ அனுமதியில்லை. ஏனென்றால் தலைமுடி உதிரும், சிலர் இதற்காக காத்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் அதை எடுத்து உங்களுக்கு சிலவற்றை செய்துவிடுவார்கள்.
பெண்கள் வெளியிடங்களில் தலைசீவ அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் வெளியில் செல்லும் போது தலையில் நன்றாக எண்ணெய் தடவி இறுக்கமான பின்னலிட்டுக்கொள்ள வேண்டும். இந்த மாதிரி சூழ்நிலைகளும் பிரச்சனைகளும் உள்ள போது இது போன்ற கவனம் மேற்கொள்ளப்பட்டது.
இன்று, நீங்கள் யாருடைய வீட்டிற்கோ சென்றால் அங்கே தண்ணீர் பருகுவதில்லை, மாறாக கையில் தண்ணீர் பாட்டிலுடன் செல்கிறீகள். ஆம், இன்று நீங்கள் மாயமந்திரங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.
பாக்டீரியா, வைரஸ் மற்றும் பலவற்றைக் கண்டு கவலை கொள்கிறீர்கள். ஆகையால் அதைப்பற்றி நீங்கள் கவனம் கொள்கிறீர்கள். சில வகையான சமூகத்திலோ, உலகின் சில குறிப்பிட்ட பகுதிகளிலோ நீங்கள் இல்லையென்றால் பழங்காலங்களில் மேற்கொள்ளப்பட்ட இது போன்ற கவனங்கள் இன்று பொருத்தமானவை அல்ல.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...