Monday 9 July 2018

திருமண சடங்குகள்

திருமண சடங்குகள்

 நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த கட்டுரை இன்று வெறும் செயல்களாக மாறிப்போன சக்தி வாய்ந்த திருமண சடங்குகளை பற்றியது. காரியத்தை மறந்து வெறும் காரணங்களை மட்டும் வைத்து கொண்டது இன்றைய தலைமுறை.
இந்த பூமியில் ஜனித்த அனைத்து ஜீவராசிகளின் தலையாய கடமை இனபெருக்கம் செய்வது மட்டுமே.
இதை இன்றைய சுழலில் கூறினால் எத்தனையோ மாறுபட்ட கருத்துகளும் விவாதங்களும் உள்ளாகும். ஆனால் உண்மை இதுதான். இந்த இனபெருக்க விசயத்தை மிகவும் முறைபடுத்தி நல்லதொரு வாரிசுகளை இந்த பூமியில் அவதரிக்க செய்ய, பல விஷயங்களை உள்ளடக்கி, ஒரு ஆணுக்கும்,பெண்ணுக்கும் மட்டுமே ஒரு பந்தம் உருவாக்கி ஒரு உறவை பலபடுத்தி அதன் மூலமாக நல்ல வாரிசுகளை உருவாக்க ஏற்பட்டதுதான் இந்த திருமண உறவு
, இது இந்த பூமியில் உள்ள ஜீவராசிகளில் மனித இனத்தில் மட்டுமே இப்படி ஒரு ஏற்பாடு. அதனால் தான் என்னமோ பரிணாம வளர்ச்சியில் மனித இனத்தின் வளர்ச்சி உச்ச நிலையை அடைந்திருக்கிறது.
ஆணுக்கும்,பெண்ணுக்கும் திருமண உறவுக்கு தேர்வு செய்கிறபோது, மனம்,உடல் ரீதியான பொருத்தங்களை பார்த்து (ஜாதகம்) , அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒத்து வருகிற சூரிய மாதத்தில்,நட்சத்திரத்தில்,திதியில், திருமணம் செய்வார்கள். ஆணுக்கும்,பெண்ணுக்கும் குரு அச்சமயத்தில் நல்ல ராசிகளை கடக்குகிற காலமும், நல்ல தட்ப வெப்ப சூழ்நிலையும், பெண்ணின் கரு முட்டையுணுடைய பலத்தை அறிய அப்பெண்னின் மாதவிடாய் காலத்தை கணக்கிட்டும் திருமண நாளை தீர்மாணிப்பார்கள்
.திருமணத்திற்கு முன் ஆணையும்,பெண்ணையும் மன ரீதியாக உடல் ரீதியாக தயார் செய்வதுதான் சடங்குகள் என்ற பெயரில் சொல்லபடுகின்றன.
இந்த சடங்குகள் ஆண்,பெண் இரு பாலரின் சமுதாயத்தை பொருத்து மாறுபடும்,அவர்களுடைய வாழ்க்கை முறை, வாழுகிற தட்ப,வெப்ப நிலை,உணவு,இவைகளை வைத்துதான் திருமண சடங்குகள் ஏற்படுத்த பட்டன.
உதாரணத்திற்கு
புலால் உணவை திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன் இருந்து உண்ணாது இருத்தல்.(உடலில் தாமசகுணம் ஏற்பட) வெளியூர் பயணம் மறுத்தல்(தட்ப,வெப்ப மாறுதல், விபத்து போன்றவை நேராமல் இருக்க) ஆடல்,பாடல்,(மனதை குதூகலமாக வைத்து இருத்தல்). பலவகை பொருட்கள் கொண்டு நீராடல் (உடலின் வெப்பத்தை தணித்து உடம்பிலும் ,மனத்திலும் ஒரு நிதானத்தை கொண்டு வர) மேலும் சமுதாயம் சார்ந்த சீர்கள் தாய்மாமன்,சம்மந்தி வீடு சீர், என்று ஒரு பாதுகாப்பு உணர்வை அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் அளித்தல்.சொந்தங்களையும் பந்தங்களையும் இணைத்தல்,இது போக பல்வேறு மன வருத்தங்களில் இருக்கிற சொந்த பந்தங்களை சரி செய்து அவர்களை மன நிறைவோடு பங்குபெற செய்து வாழுகிற கூட்டத்தை பல படுத்தல்.
திருமணம் செய்கிற ஆணுக்கும்,பெண்ணுக்கும் ஒரு உற்சாகமான மனநிலையில், பாதுகாப்பான உணர்வில் இருவரின் குண நலன்களும் உடலும்(நட்சத்திரம்) பொருந்துகிற ஹோரையில் இணைய வைப்பார்கள்,அப்படி இணைகிற பொழுது உருவாகிற வாரிசு திட மனதுடன்,நல்ல குண நலன்களுடனும்,திடமான உடல் வாகுடனும் பிறக்கும் என்ற அறிவியல் சார்ந்த விஷயங்களை உள்வாங்கியதுதான் இந்த திருமண சடங்குகள்.
இப்பொழுது பலன்களை மறந்து சடங்குகள் மட்டுமே இருக்கின்றன என்பதை நாம் காண்கிறோம்.திருமணத்திற்கு செல்லும் போது சடங்குகளை உற்று கவனிங்கள் உங்களுக்கே தெளிவுற புரியும் இனிமேல். இன்னும் வரும்.......... அஸ்ட்ரோ பாபு

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...