Saturday, 24 May 2025

திருமூலர் தரும் ரகசிய கணக்கு:


மூச்சை வெளிவிடும்போது தானாகவே விருட்டென்று வெளியேற முயலும். அவ்வாறு வெளியேற விடாமல், மெதுவாக ஊர்ந்து செல்லுமாறு வெளிவிட வேண்டும். அவ்வாறு வெளிவிட வேண்டுமானால் பெருமூளைப் புறணியின் கட்டளை வேண்டும். தானாக நிகழ்கிற செயலைக்கூட மூளையின் கட்டளைக்கு உட்படுத்தும் போது, சோர்ந்திருக்கும் மூளை செயல்பாட்டுக்கு வருவது இந்த முந்நிலை மூச்சுயிர்ப்பின் சிறப்பு.
இங்கு கணக்கிட்டுச் சூத்திரம் தருகிறார் என்குரு திருமூலர்:
ஏறுதல் பூரகம், ஈர்எட்டு வாமத்தால்;
ஆறுதல் கும்பம், அறுபத்து நாலதில்;
ஊறுதல் முப்பத்து இரண்டுஅதி ரேசகம்;
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகம் ஆமே.
- திருமந்திரம்:568
மூச்சை ஏற்றும்போது, இடது நாசியின் வழியாகப் பதினாறு மாத்திரை அளவுக்கு ஏற்றலாம். புதிய காற்றை உள்விடாமலும் உள்வந்த காற்றை வெளிவிடாமலும் ஆறுதலாக அறுபத்துநாலு மாத்திரை அளவுக்கு நிறுத்திக்கொள்ளலாம். முப்பத்திரண்டு மாத்திரை அளவுக்கு வலது நாசியின்வழியாக மெதுவாக ஊரவைத்து வெளியேற்றலாம். அளவு மாறினால் சிக்கல்.
அடுத்ததாக குதிரைகள் செய்யும் கும்பகத்தை பற்றி சொல்கிறார்...
குதிரைகள் தாவி ஓடுவதற்குக் கூடுதல் ஆற்றல் வேண்டுமென்பதால், கூடுதல் மூச்சை உள்ளிழுக்கின்றன. ஒரு பாய்ச்சலுக்கு ஒரு மூச்சு. பாயும்முன் உள்ளிழுத்த காற்றைப் பாயும்போது உள்நிறுத்துகின்றன; மேலெழுந்த கால்கள் கீழேபடும்வரை தம்மை அறியாமலே கும்பகம் செய்கின்றன. மேலெழுந்த கால்கள் கீழே படும்போதுதான் மூச்சை வெளிவிடுகின்றன. உள்ளிழுத்த அதே அளவு காற்று வெளிவிடப்படுகிறது. ஆற்றலின் தேவை மிகும்போது, உள்ளிழுத்தல், உள்நிறுத்தல், வெளியேற்றலின் அளவும் கூடும்.
புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள்உண்ண வேண்டாம்; தானே களிதரும்;
துள்ளி நடப்பிக்கும்; சோம்பு தவிர்ப்பிக்கும்;
உள்ளது சொன்னோம் உணர்வு உடையோருக்கே.
- திருமந்திரம்:566
பறவையைக் காட்டிலும் சிறப்பாகப் பறக்கும் குதிரை. அதை வசப்படுத்தி ஏறிக்கொண்டால், அதைவிடக் களிப்புத் தருவது கள்ளும்கூட இல்லை; சோம்பல் நீங்கி உங்களில் ஒரு துள்ளல் வரும்; உள்ளதைச் சொன்னோம்; உணர்வுடையோர் கேளுங்கள் என்று சொன்னதோடு விடாமல்,
ஈர்ஆறு கால்கொண்டு எழுந்த புரவியைப்
பேராமல் கட்டிப் பெரிதுஉண்ண வல்லீரேல்,
நீர் ஆயிரமும் நிலம்ஆயிரத்து ஆண்டும்
பேராது காயம் பிரான்நந்தி ஆணையே
- திருமந்திரம்:722
என்று ஆணையிட்டும் சொல்கிறார். நான்கு கால் குதிரையே மூச்சைப் பிடித்து விண்ணில் எழுகிறது. உங்களுக்குக் கிடைத்திருப்பது பன்னிரண்டு கால் குதிரை அல்லவோ? அந்தக் குதிரையைக் கட்டியாள உங்களால் முடியுமென்றால், ஏது இறப்பு? நீராலும், நிலத்தாலும் பிற பூதங்களாலும் யாக்கப்பட்ட உங்கள் உடம்பு அழியாது.
பன்னிரண்டு கால் புரவி என்பது பன்னிரண்டு விரற்கடை அளவுக்குப் பாயும் மூச்சுக் குதிரை.
இந்தச் சூத்திரத்தைப் பிடித்துக்கொள்ளும் பத்திரகிரியார்.....
பன்னிரண்டு கால்புரவி
பாய்ந்துசில்லம் தப்பாமல்
பின்னிரண்டு சங்கிலிக்குள்
பிணைப்பதுஇனி எக்காலம்?
- பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல்:141

என்று ஏங்குகிறார். பன்னிரண்டு கால் குதிரை பாய்வதில் சிக்கலில்லை; பாயும் வேகத்தில் சிதறிச் சில்லாகிவிடாமல் கணக்காகப் பாயப் பழக்கவேண்டாமா? இடம் வா என்றால் இடம் வரவும், வலம் வா என்றால் வலம் வரவும், நில்லென்றால் நிற்கவும் வேண்டாமா? குதிரை பழக்கிக் கடிவாளம் போடுவது எக்காலம்?

Saturday, 17 May 2025

27 நட்சத்திர கோயில்கள் –

 27 நட்சத்திர கோயில்கள் – ஜாதக தோஷ நிவாரணத்திற்கான தெய்வீக வழிகாட்டி!


பிறப்பின் நேரத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருந்ததோ அதுவே ஜாதக நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் ஒரு மனிதனின் மனநிலை, உடல்நிலை, துல்லியமான சிந்தனை மற்றும் வாழ்க்கையின் பல துறைகளையும் தீர்மானிக்கிறது. இந்த நட்சத்திரத்தின் விளைவாக சிலருக்கு நல்ல எதிர்வினை கிடைக்கும், சிலருக்கு அதிர்ஷ்டம் தாமதமாகவே வரும். ஆனால், இதற்கு தீர்வாகவே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஏற்ற 27 ஆலயங்களை நம் முன்னோர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவை நட்சத்திர பரிகார ஸ்தலங்கள் என அழைக்கப்படுகின்றன.
இந்த கோயில்களில் நடைபெறும் வழிபாடுகள், ஹோமங்கள், அர்ச்சனைகள் மற்றும் அபிஷேகங்கள் மூலம், நட்சத்திரத்தின் ஒழுக்குகளும், தோஷங்களும் நீங்கிச் சாந்தி, செழிப்பு, ஆரோக்கியம், குழந்தைப் பேறு மற்றும் தொழில் வளர்ச்சி உண்டாகும்.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு கோயில் – ஒரு பரிகார வழிகாட்டி
1. #அசுவினி – பிள்ளையார்பட்டி மாருத்தீஸ்வரர் கோயில், சிவகங்கை
இந்த நட்சத்திரம் கொண்டவர்கள், உடல்நல பிரச்சினைகள், வாகன விபத்துகள், மற்றும் சிந்தனையிலான குழப்பங்களை அனுபவிப்பவர்கள். இவர்கள் மாருத்தீஸ்வரரை வழிபட்டால் உடல்நலம் மேம்படும்.
2. #பரணி – அக்னீஸ்வரர் கோயில், கும்பகோணம்
பரணி நட்சத்திரம் பெரும் தீவிர சக்தி கொண்டது. அக்னீஸ்வரர் வழிபாடு, ராகு, கேது மற்றும் சுக்கிர தோஷங்களை நீக்குகிறது.
3. #கார்த்திகை – கார்த்திகேயபெருமான் கோயில், சுவாமிமலை
முருகன் வழிபாடு, மன உறுதி, படிப்பு மற்றும் காரிய வெற்றிக்கு உதவும். கார்த்திகை நட்சத்திரத்தை கொண்டவர்கள் வழிப்பட வேண்டிய முக்கிய ஆலயம் இது.
4. #ரோகிணி – நந்தீஸ்வரர் கோயில், நந்தீபுரம்
மன அழுத்தம், பணத்தடை, உறவுப் பிரச்சனை போன்றவை நிவர்த்தி செய்ய நந்தீஸ்வரரைக் கருதப்படுகிறது.
5. #மிருகசீரிடம் – ஆம்ரவனேஸ்வரர் கோயில், திருவாமூர்அ
நீதி, கல்வி மற்றும் ஆன்மீக மேம்பாடு தேவைப்படும் வாழ்வில், இந்தக் கோயில் வழிபாடு மிக அவசியம்.
6. #திருவாதிரை – நந்தீஸ்வரர் கோயில், திருநெல்வேலி
இங்கே வழிபடுவது நரம்பியல் நோய்கள் மற்றும் மனவியாதிகளை தாண்ட உதவுகிறது.
7. #பூசம் – ஆறப்பரிச்வரர் கோயில், பட்டுக்கோட்டை
அதிக கப தோஷம், மன அழுத்தம், குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு சரியான பரிகாரம்.
8. #ஆயில்யம் – நகுலீஸ்வரர் கோயில், நாகப்பட்டினம்
நாக தோஷம், ராகு/கேது பகவானின் கிரஹ தோஷங்கள், குழந்தை பிரச்சனைகள் நீங்கும்.
9. #மகம் – மகாலிங்கஸ்வரர் கோயில், திருக்கடையூர்
மனம் நிலையாக இல்லாத நிலை, அதிர்ஷ்டக் குறைவு போன்றவற்றில் இருந்து விடுபட உதவும்.
10. #பூரம் – நித்தியசுந்தரேஸ்வரர் கோயில், புடுக்கோட்டை
மிகவும் சக்திவாய்ந்த ஆலயம். பரிகார பூஜைகள் செய்வதன் மூலம் கல்வி மற்றும் வேலைக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும்.
11. #உத்திரம் – பாகவலீஸ்வரர் கோயில், திருச்சி
அழுக்காறு, பிசாசு தோஷம் மற்றும் குடும்பக் குழப்பங்கள் தீரும்.
12. #அஸ்தம் – இராசர குபேர லட்சுமி சமேத யமராஜர் கோயில், திருக்கோவிலூர்
பரிகார யம தரிசனம், வம்ச தோஷ நிவாரணம், செல்வ வளைச்சல்.
13. #சித்திரை – சித்ரசாபதேஸ்வரர் கோயில், திருநல்லூர்
கலை, கணிதம், ஆழ்ந்த சிந்தனையை மேம்படுத்தும்.
14. #சுவாதி – முசுந்தேஸ்வரர் கோயில், புஞ்சை
மூளை சம்பந்தமான நோய்கள் மற்றும் தர்மபதி வாஸ்து தோஷங்கள் நீங்கும்.
15. #விசாகம் – முசுந்தேஸ்வரர் கோயில், மேலமங்கலம்
மதம், ஞானம், ஆன்மீகம், துறவிகள், தன்னிறைவு பெற இங்கு வழிபடலாம்.
16. #அனுஷம் – கமலாபதி சமேத கமலாம்பிகை சமேத சம்புமூர்த்தி கோயில்
பிணி நீக்கம், தீராத நோய்கள், பூர்வ ஜன்ம தோஷங்களை களைக்கும் ஆலயம்.
17. #கேட்டை – வரதராஜபெருமாள் கோயில், நாகப்பட்டினம்
நாராயணர் அருள் பெறுவதற்காக, கெட்ட சக்திகள் மற்றும் கனவிலே பயங்கரத் தோற்றங்களை நீக்க.
18. #மூலம் - ரங்கநாதசுவாமி கோயில், மயிலாடுதுறை
ஆன்மீக வளர்ச்சி, திருமண தடை, பண வசீகரம் ஆகியவற்றில் பெருமளவு பலன்கள்.
19. #பூராடம் – தண்டாயுதபாணி கோயில், மயிலாடுதுறை
இளமை, புத்திசாலித்தனமும், கல்வித் திறமையும் மேம்படும்.
20. #உத்திராடம் – ஆழ்வார்திருநகரி கோயில், திருநெல்வேலி
முன்னோர்களின் அருள், குடும்ப இணக்கம் மற்றும் நிதி நிலை நல்லது.
21. #திருவோணம் – பிரம்ம விஷ்ணு ருத்ரர் கோயில், திருநந்தி
சம்பந்தமான கிரஹ தோஷங்களைத் தீர்க்கவும், புத்தி மேம்படவும்.
22. #அவிட்டம் – பத்ரகாளி அம்மன் சமேத சிவசுந்தரேஸ்வரர் கோயில், சிகரலை
மனப் பிரச்சனை, அலர்ஜி, குழந்தை பிரச்சனைக்கு தீர்வு.
23. #சதயம் – வாடாபத்ரசாயி கோயில், திருக்கண்ணங்குடி
முதன்மை காட்சி — சதய நட்சத்திரம் பெற்றவர்கள் தொழில் முனைவோர், சமூக சேவையாளர்களுக்கு பரிகாரம்.
24. #பூரட்டாதி – சுந்தரவரதர் கோயில், திருவல்லிக்கேணி
பரிகாரம் வழிபாடு நன்மை தரும். அதிக வெற்றி, செல்வ விருத்தி.
25. #உத்திரட்டாதி – பவளக்குன்று சுவாமி கோயில், திருவண்ணாமலை
தவம், தியானம், ஆன்மீக ஒளி பெற பரிகாரம் தரும்.
26. #ரேவதி – சீதாலக்ஷ்மி சமேத ரேவதீஸ்வரர் கோயில், திருவெண்காடு
மன அமைதி, குடும்ப சமரசம், தீராத நோய்களுக்கு நிவாரணம்.
27. #ஆதிரை – நந்தீஸ்வரர் கோயில், திருநெல்வேலி
காரண நோய்கள், மூச்சுத் தடைகள், மன வலிமை வளர்க்கவும் பரிகாரம் தரும்.
நட்சத்திர ஆலயங்களுக்கு செல்வது ஏன் அவசியம்?
1. #தோஷ_நிவாரணம்:
சந்திர தோஷம், களத்திர தோஷம், நாக தோஷம், ராகு/கேது தோஷம், முன் ஜென்ம பாபம்.
2. #வாழ்க்கை_முன்னேற்றம்:
கல்வி, திருமணம், தொழில், பிள்ளை பேறு, நிதி வளர்ச்சி.
3. #ஆன்மீக_மேம்பாடு:
மன உறுதி, ஆழ்ந்த சிந்தனை, தவ வாழ்வு.
4. #சமூகவாழ்க்கை:
குடும்ப ஒற்றுமை, சமூக பண்பாடு, பொறுமை, சகிப்புத்தன்மை.
வழிபாட்டு முறை:
உங்கள் ஜாதக நட்சத்திரத்தின்படி அந்தக் கோயிலில் பவித்ரமா சென்று விஷேஷ அர்ச்சனை செய்ய வேண்டும்.
சிறப்பு அன்னதானம் அல்லது விளக்கேற்றம் செய்தால் பலன்கள் அதிகரிக்கும்.
சந்திர வாரத்தில் (திங்கட்கிழமை) பயணம் மேற்கொள்ளலாம்.
பக்திபூர்வமான நாமஜபம் மற்றும் ஸ்லோக பாராயணம் செய்வது மேலானது.
இந்த 27 நட்சத்திரக் கோயில்கள் — ஒரு ஜாதகர் வாழ்க்கையின் எல்லா பரிமாணங்களிலும் அமைதி, ஆற்றல், வளம் மற்றும் ஆனந்தத்தை கொண்டு வரும்
ஜாதகம்பார்க்க9994150658 

Thursday, 15 May 2025

திருச்செந்தூர் தல வரலாறு என்ன?


 சிவமயம் சிவாயநம

ஞானத்தை அருளக்கூடிய முருகன் இருக்கும் இடமாகிய திருச்செந்தூர் தல வரலாறு என்ன? என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாகும். இத்தலத்தில் முருகப்பெருமான் சூரபத்மன் என்னும் அசுரனை வென்றபின் சிவபெருமானை ஐந்து லிங்கங்கள் வடிவில் வைத்து வழிப்பட்டார். அலைகள் வந்து புரளும் கடற்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது.
தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார்.
இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார்.
வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோவில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் ‘செயந்திநாதர்” என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே ‘செந்தில்நாதர்” என மருவியது. தலமும் ‘திருஜெயந்திபுரம்” என அழைக்கப்பெற்று, பின்பு திருச்செந்தூர் என மருவியது.
*கோவில் அமைப்பு 😘
150 அடி உயரம் கொண்ட இக்கோவிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவபெருமானுக்கு பூஜை செய்தார்.
தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்கு தீபாராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.
இது தவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் பஞ்சலிங்க சன்னதியும் இருக்கிறது. திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.
பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைந்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒருநாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும்.
*திருக்கோவில் சிறப்புகள்:*
முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோவிலாக அமைந்துள்ளது.
திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் என்னும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.
திருச்சிற்றம்பலம்.

கேஸ் சிலிண்டர் பற்றி கண்டிப்பாக

 இல்லத்தரசிகள் கேஸ் சிலிண்டர் பற்றி கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று நேற்று இரவு நல்ல மழை டிபன் இட்லி சாம்பார். மாவை ஊத்தி அடுப...