Saturday 7 January 2023

🌷 வாசலில் சாணம் தெளிப்பது ஏன் !!


🌞 தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் மகாலட்சுமி வீதியில் வலம் வருவார்களாம். யார் வீட்டு வாசலை சுத்தம் செய்து அழகிய கோலம் போட்டு வைத்திருக்கிறார்களோ, அவர்களது இல்லத்திற்கு காலடி எடுத்து வைத்து உள்ளே வருவார்களாம். அதனால் தான் அதிகாலையில் கோலம் போடும் வழக்கத்தை நமது முன்னோர்கள் கடைபிடித்து கொண்டிருந்தனர்.
🌞 கோலம் போடுவது வெறும் அழகிற்காக அல்ல. வீட்டில் மகாலட்சுமி தேவி நுழையவும், ஈ, எறும்புகள் பசி தீரவும் தான். அந்த காலம் முதல் இந்த காலம் வரை தொடர்ந்து கோலம் போடுவது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
🌞 கோலம் போடுவதன் முக்கிய தாத்பரியம் ஓரறிவுள்ள ஜீவ ராசிகளுக்கு உணவளிப்பது தான். காலையில் பச்சரிசியில் கோலம் போட்டால் மாலைக்குள் பாதியளவு நிச்சயம் எறும்புகள், மற்ற சிறு ஜீவன்கள் உண்டு தீர்த்து விடும். கர்ம பலன் குறைய தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் தர்மம் துணையாக இருக்கும். இதன் பலனாக உங்களுக்கு இருக்கும் கடன்கள் தொடராமல் இறைவன் அருள்புரிவார். அறிவியல் ரீதியாக காலையில் எழுந்து கோலம் போடுவதால் உடலும், மனமும் ஆரோக்கியம் அடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
🌞 கோலம் போடுவதால், மும்மூர்த்திகளின் ஆசிகளும், நமக்கு கிடைக்கும். அரிசி மாவில் கோலம் போடும் போது, அதன் வெண்மை நிறம் பிரம்மாவையும், சுற்றிலும் இடும் காவி நிறம் சிவபெருமானையும் குறிக்கும். கோலத்தின் நடுவில், சாணம் வைத்து, பூசணி பூ வைக்கும் போது, மகாலட்சுமி மனம் மகிழ்ந்து வருவாள். அவளுடன், மகாவிஷ்ணுவும் சேர்ந்து வந்து, நம்மை ஆசீர்வதிப்பார்.
*🌷சாணம் தெளிப்பது ஏன் !*
🐄 ஈசனின் ஆணைக்கிணங்க அனைத்து தெய்வங்களும் காமதேனுவில் ஐக்கியம் ஆவது என முடிவு செய்தனர். அதன் படி ஒவ்வொரு தெய்வமும் காமதேனுவின் ஒவ்வொரு இடத்தில் அமர்ந்தனர். லட்சுமி தேவி சற்று தாமதமாக வந்ததால், அவருக்கு காமதேனுவின் ஆசனவாயில் தான் இடம் கிடைத்தது.
🐄 அதனால் காமதேனுவின் ஆசனவாயிலிருந்து வரும் கோமியமும், சாணமும் மகாலட்சுமியை தழுவிக்கொண்டு வருவதால் இவை மிக சிறப்பு வாய்ந்ததாக மாறியது. இரண்டுமே லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது.
🐄 காலையில் எழுந்ததும் சாணத்தை எடுத்து தண்ணீரில் கரைத்து வீட்டின் முன் தெளிப்பதால், நம் விரல்களின் வழியாக பிரபஞ்ச சக்தி கிடைக்கும். தரித்திரம் நீங்கும், கிருமி நாசினியாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
🐄 மகாலட்சுமியே வீட்டிற்கு வருவதால் சின்ன சின்ன பூச்சிகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், நோய்கள் தீரும். இதனால் மருத்துவ செலவுகள் குறையும். செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
*🌷பலன்கள் :
👉 விரல்களால் கோல மாவை எடுத்து, வளைத்து வளைத்து கோலம் போடும் போது, அது நம் கை விரல்களுக்கு, நல்ல பயிற்சியாக அமைகிறது.
👉 குனிந்து, நிமிர்ந்து கோலம் போடுவதால், உடலுக்கு யோகப் பயிற்சி செய்த பலன் கிடைக்கிறது.
👉 தினசரி சூழலால், சஞ்சலமாகும் மனமும் கூட, கோலம் போடும் போது ஒருமுகப்படும்.
👉 கோலம், நம் கற்பனை திறனையும், நினைவாற்றலையும் வளர்க்கிறது.
👉 அழகாக கோலம் போடுபவரின் கையெழுத்து, பார்க்க தெளிவாக, அழகாக இருக்கும்.
👉 கோலம், தீய மற்றும் துஷ்ட சக்திகளை, வீட்டிற்குள் வர விடாமல் தடுக்கும்.
👉 லட்சுமி தேவியை, நம் வீட்டிற்கு வரவழைக்கும்.
👉 கோலம் போடுவதால், வீடு மங்கலகரமாக காட்சி அளிக்கும்.
👉 தினமும் கோலம் போடும் போது, வீட்டில் மங்கல நிகழ்ச்சிக்கு குறைவே ஏற்படாது

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...