Saturday, 27 July 2024

திருப்பட்டூர் அற்புதங்கள்!


 திருப்பட்டூர் அற்புதங்கள்!

1. சிவ பக்தியுடன் வாழ்ந்து வந்த வியாக்ரபாதர், சிவனாரை நோக்கி இந்த தலத்தில் தவம் செய்தார்.
2. இத்தலத்தில் உள்ள தீர்த்தக்குளத்து நீரை, எவர் கையில் எடுத்தாலும் அவர்களுக்கு கங்கையில் நீராடிய பலனும் கிடைக்கும்.
3. இத்தலத்தில் 3001 அந்தணர்கள் வேதங்களை அனுதினமும் பாராயணம் செய்ததால் அதில் உண்டான அதிர்வலைகள் அங்கிங்கெனாதபடி எங்குமாக பரவிக் கிடப்பதால் திருப்பிடவூர் எனப்பெயர்பெற்றது. திருப்பிடவூர் என்பதே காலப்போக்கில் திருப்பட்டூராக மாறியது.
4. இது காசிக்கு நிகரான தலம் மட்டுமல்ல. திருக்கைலாயத்திற்கு நிகரான தலமும் ஆகும். இத்தலத்தில் ஸ்ரீமந் நாராயணரை வணங்கி தொழுததால் ஆதிசேஷன் அடுத்த கணம் பதஞ்சலி முனிவராக மாறினார்.
5. கர்வத்தை ஒழிப்பவர்கள் மனதில் இறைவன் உறைவதும், அவனே இறைவனாக மாறிப்போவதும் இத்தலத்தில் நிகழும்.
6. திருக்கயிலாய ஞான உலா எனும் நூல் இத்தலத்தில் அரங்கேறியது.
7. சிவ பெருமான், தன் அடியவர்கள் பலரையும் இந்த தலத்திற்கு அழைத்து வந்து திருவிளையாடலை நிகழ்த்தி இருக்கிறார்.
8. சேர மன்னன் நாயானாரும், சுந்தரரும் நெகிழ்ந்து வணங்கிப் பேறு பெற்ற அற்புதமான இடம் இதுவாகும். மாசாத்தனார் ஓலை நறுக்குகளுடன் காட்சி தரும் விக்கிரகத் திருமேனியை கோவிலின் மூலமூர்த்தமாக இன்றைக்கும் இங்கு தரிசிக்கலாம்.
9. சிவபெருமான் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்த தலம் திருவையாறு அருகில் உள்ள திருக்கண்டியூர் தலத்திலாகும். அந்த பிரம்மன் பரிகாரம் தேடி கொண்டது திருப்பட்டூராகும்.
10. பிரம்மன் உருவாக்கிய பிரம்ம தீர்த்தக் குளம், சிவலிங்கச் சந்நிதிகளும் இங்கு அமைந்துள்ளன. இங்கு வழிபட்டால் 12 சிவாலயங்களுக்கு சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
11. பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாதாவாக பிரம்ம சம்பத்கவுரி கனிவு ததும்ப கருணை பொங்கக் காட்சி தருகிறாள். இவளுக்கு செவ்வாய், வெள்ளி கிழமைகளில் புடவை சார்த்தி வேண்டிக் கொண்டால் தடைப்பட்ட திருமணம் இனிதே நடைபெறும்.
12. பிரதோஷ நாளில் இங்கு ஒரே நேரத்தில் நந்திக்குச் செய்யப்படுகிற பூஜையையும், நரசிம்ம மூர்த்தியையும் தரிசிக்கலாம்.
13. ஏழேழு ஜென்ம பாவங்களை நீக்கி பஞ்சபூதங்களாக உறைந்து இத்தலத்து ஈசன் நம்மை காக்கிறார்.
14. பிரம்மாவை வணங்கும் போதே குரு தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.
15. குரு பகவானுக்கு அதி தேவதை யான பிரம்மா தனி சந்நிதியுடன் திகழும் தலம் இதுவாகும்.
16. இத்தலத்திற்கு திருப்படையூர் என்ற பெயரும் வழக்கத்தில் இருந்தது.
17. சுப்ரமணிய சுவாமிக்கு வஸ்திரம் சார்த்தி, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்தால் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.
18. தலை எழுத்தையே மாற்றி அருளும் திருப்பட்டூரில் குடி கொண்டிருக்கும் சுப்ரமணியரை வணங்கினால் மோட்சம் நிச்சயம் கிடைக்கும்.
19. தேய்பிறை அஷ்டமி யில், ராகு கால வேளையில் காலபைரவரைத் தரிசித்து அவரின் வலது காதில் நம் பிரச்சினைகளைச் சொல்லி வணங்கு வதற்காகத்தான் இத்தலத்தில் கால பைரவரின் வலது காது வித்தியாசமாக உள்ளது.
20. இத்தலத்தில் கால பைரவருக்கு நேர் எதிரில் இருக்கும் கஜலட்சுமியை வணங்கினால் ஐஸ்வர்யம் கிடைக்கும்.
21. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருச்சி, முசிறி மற்றும் துறையூர் என சுற்று வட்டார ஊர்களைச் சேர்ந்தவர்களுக்குக்கூட திருப்பட்டூர் என்கிற ஊரே தெரியாமல் இருந்தது. ஆனால் இன்றைக்கு இத்தலம் தமிழகத்தையும் கடந்த பெங்களூரு, ஆந்திரா முதலான மாநிலங்களையும் தாண்டி பிரபலமாகியுள்ளது.
22. இத்தலத்திற்கு வந்து காசி விஸ்வநாதரையும், பிரம்மபுரீஸ்வரரையும் கண்ணாரத் தரிசித்து
வணங்குபவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். புதிய சக்தியுடன் சிவத்தொண்டு புரிவர்.
23. திருப்பட்டூர் திருத்தலம் ஒரு காலத்தில் மிகச் செழிப்பாக இருந்தது. எப்போதும் வேத கோஷங்கள் காற்றில் நிரம்பி புண்ணிய பூமியாக திகழ்ந்தது.
24. பூணூல் கல்யாணம் எனும் சடங்கை இத்தலத்தில் செய்வது விசேஷம் ஆகும்.
25. திருபட்டூர் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் இங்கு வந்து அம்பாளின் திருவடியில் விதை நெல்லை வைத்து வணங்கி விட்டு, பிறகு அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று தங்களின் வயல்களில் விதைத்தால், தானியங்கள் செழிப்பாக வளர்ந்து லாபம் கொழிக்கும் என்கிறார்கள்.
26. இத்தலத்துக்கு வந்து பிரம்மாவின் திருச்சந்நிதியில் ஜாதகத்தை வைத்து மனதாரப் பிரார்த்திக்கும் பக்தர்கள், பிரார்த்தனை நிறைவேறியதும் வஸ்திரம் சார்த்தி நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.
27. 11 வியாழக்கிழமை தவறாமல் இங்கு வந்து தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும் என்கிறார் இங்கு வரும் பக்தர் ஒருவர்.
28. வெள்ளைத் தாமரை சார்த்தி பிரம்மாவை வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும் அதே போல் நீங்கள் பிறந்த நட்சத்திர நாளில் இத்தலத்தில் வழிபட்டால் புண்ணியம் நிச்சயம் சேரும்.
29. ஆடி சுவாதி நட்சத்திர நாளில், திருப்பட்டூர் வந்து மூன்று கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்யுங்கள். அப்படி தரிசித்த பலனை, அடுத்தடுத்த நாளிலேயே உணர்வீர்கள்.
30. ஒரேயரு முறை திருப்பட்டூர் தலத்தில் காலடி எடுத்து வையுங்கள். மனதின் அத்தனை துக்கங்களும் பறந்து, மனம், புத்தி, செயல், சிந்தனை யாவற்றிலும் ஓர் ஒழுங்கை, நேர்த்தியை, தெளிவை உணர்வீர்கள்

Friday, 26 July 2024

நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய 25 தத்துவங்கள்


 

நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய 25 தத்துவங்கள்…
1 இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை, உங்கள் பிரச்சினைகள் உட்பட.
2 சிாிக்கத் தவறும் ஒவ்வொரு நாளும் பயனற்றது.
3 சிரிப்புதான் வலிக்கு மருந்து! சிரிப்புதான் வலிக்கு நிவாரணம், சிரிப்புதான் உன் வலியை தீர்த்துவைக்கும்.
4 கனவுகள் எல்லாம் நனவாகும். நிறைய காயங்களுக்குப் பிறகு.
5 உன் மனம் வலிக்கும் போது சிரி. பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை…!
6 இதயம் வலித்தாலும் சிரி. அது உடைந்தாலும் சிரி.
7 என் வலி சிலருக்கு சிரிப்பைத் தரலாம். ஆனால், நிச்சயம் என் சிரிப்பு யாருக்கும் வலியைத் தராது.
8 எனக்கு நிறைய பிரச்சினைகள் உண்டு, ஆனால் என் உதட்டுக்கு அதெல்லாம் தெரியாது. அது சிரித்துக்கொண்டுதான் இருக்கும்.
9 பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம். ஆனால் வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றை பணத்தால் திருப்பி தர முடியாது.
10 கண்ணாடி என் நண்பன் ஏனென்றால், நான் அழும்போது அது சிரிப்பதில்லை.
11 ஆசைப்படுவதை மறந்து விடு. ஆனால், ஆசைப்பட்டதை மறந்து விடாதே.
12 உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.
13 போலிக்கு தான் பரிசும் பாராட்டும். உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே.
14 எப்போதும் மழையில் நனைந்தபடியே நடக்கப் பிடிக்கிறது. என் கண்களில் கண்ணீரை யாரும் பார்க்க முடியாது என்பதால்.
15 நீ எப்போதும் வானவில்லைக் காண முடியாது… உன் பார்வை கீழ் நோக்கியே இருந்தால்!
16 நண்பர்களின் சிரிப்பைப் பார்க்கும் போது கண்ணீரை மறக்கிறேன், நண்பர்களின் கண்ணீரைப் பார்க்கும்போது சிரிப்பை மறக்கிறேன்.
17 வாழ்க்கை அர்த்தம் தேடிக்கொண்டிருப்பதற்கல்ல, அனுபவிப்பதற்கு.
18 நீ மகிழ்ச்சியாய் இல்லாத போது வாழ்க்கை உன்னைப் பார்த்து சிரிக்கிறது. நீ மகிழ்ச்சியாய் இருக்கும்போது உன்னைப் பார்த்து புன்னகை செய்கிறது. ஆனால், நீ அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்தும்போது வாழ்க்கை உன்னை வணங்குகிறது.
19 உங்களை தனியாக விட்டாலே போதும்… வாழ்க்கை அழகானதாகத்தான் இருக்கும்.
20 புன்னகைத்துப் பாருங்கள்… வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்!
21 விவாதங்கள், மோதல்கள் அல்லது பிரச்சினைகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. வானமே இடிந்தாலும் அதிலிருந்து புதிய உலகம் பிறக்கும். வாழ்க்கை இப்படித்தான்.
22 ஒரு முறையாவது உங்களைப் பற்றி முழுமையாகச் சிந்தித்துப் பாருங்கள். வாழ்க்கையின் மிகச்சிறந்த நகைச்சுவையைத் தவறவிட்டுவிடுவீர்கள்.
23 நண்பனுக்கு உதவுவது சுலபமானதுதான். ஆனால், உங்கள் நேரத்தை அவனுக்காக கொடுக்கும் வாய்ப்பு மிகவும் அரிதானது.
24அதிகமா சிந்திக்கிறோம். மிகக் குறைவாகவே உணர்கிறோம்.
25 கெடுதல் செய்யத்தான் அதிகாரம் தேவைப்படும். மற்றபடி அன்பிருந்தால் எதையும் சாதிக்கலாம்.

ஹோமங்களின் ரகசியம்


 96 வகையான ஷண்ணவதி

-------------------------------------------------
ஹோமங்களின் ரகசியம்
(1)சமித்துவகைகள் _13
(2)ஹோமதிரவியம் _45
(3) ரஸவர்க்கம். _8
(4) பழவர்க்கம். _7
(5) கிழங்கு வகையறா_5
(6) உலோகம் _2
(7) வாசனாதிரவியம் _5
(😎 அன்னவர்க்கம் _ 4
(9) பக்ஷ்யம். _5
(10) பட்டுவஸ்திரம் _1
(11) தாம்பூலம் _1
மொத்தம்_ (96)
இதன் விளக்கம்.
===============
(1) 13:சமித்து
-----------------------
அரசன், ஆல், அத்தி, முருங்கை, கருங்காலி, சந்தனம், மா, மூங்கில், வன்னி, வில்வம், எருக்கன், பலா, பாதிரி சமித்து மேற்கண்ட சமித்தை தவிர வேற எந்த சமித்தும் ஹோமத்தில் போடக்கூடாது...
(2) 45:ஹோம திரவியம்
---------------------------------------
அரிசி மாவு, மூங்கில் அரிசி, வெல்லம்,
பச்சை கற்பூரம், நாட்டுச்சக்கரை, சத்துமாவு, பேரிச்சை, வால்மிளகு, வலம்புரிக்காய், இடம்புரி காய், மாசிக்காய், நாயுருவி, சீந்தில்கொடி, நெல்லி வத்தல், வெள்ளறுகு, சுக்கு , ஜட மஞ்சரி, களிப்பாக்கு, ஓமம், அகில்_குகில், அதிமதுரம், செண்பக மொட்டு, வெட்டி வேர் , ரோஜா மொட்டு, கிராம்பு, கோரோஜனை, அவல், நெல்லு பொரி, கொப்பரை தேங்காய், குங்குமம், விரளிமஞ்சள், வங்காளமஞ்சள், கஸ்தூரிமஞ்சள், கோதுமை, காராமணி, துவரை, பயறு, கருப்பு கொண்டை கடலை, மொச்சை, எள், உளுந்து, கொள்ளு, இந்த 45 பொருட்கள் மட்டுமே.....
(3) 8:ரஸ வர்க்கம்
-----------------------------
நெய், பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், வெண்ணெய், சந்தனாதிதைலம்,
(4) 7:பழ வர்க்கம்
----------------------------
வில்வம் பழம், பலாபழம், திராட்சைபழம் ,
அன்னாசிபழம், மலைப்பழம், விளாம்பழம், மாம்பழம்.
(5) 5:கிழங்கு வகையறா
-------------------------------------------
சக்கரவள்ளி, சேப்பங்கிழங்கு,
கருணை கிழங்கு, தாமரை கிழங்கு நீலோத்பல கிழங்கு, கரும்பு
(6) 2:உலோகங்கள்
---------------------------------
ஸ்வர்ணம், வெள்ளி
(7) 5:வாசனாதிரவியம்
----------------------------------------
ஜாதிபத்திரி, ஜாதிக்காய், ஏலக்காய், புனுகு, ஜவ்வாது,
(😎 4:அன்னவர்க்கம்
-----------------------------------
சக்கரை பொங்கல், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம்
(9) 5:பக்ஷ்யம்
-------------------------
லட்டு, பாயசம், வடை, அப்பம், மோதகம்
(10) பட்டு வஸ்த்திரம்.
(11) தாம்பூலம்
மேற்கண்ட பொருட்கள் அனைத்து ஹோமத்திலும் அவசியம் பயன் படுத்த பட வேண்டியவை...
ஒருசில யாகத்தில் சில பொருட்கள் மாறும் ....
ஹோம நெறிகளை கடைபிடிக்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், ‌நீங்கள் ஹோமம் செய்யும் பொழுது 54,108 ஹோம திரவிய பொட்டலம் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அதில் உள்ளதில் பல பொருட்கள் பூஜைக்கு கிடையாது. தயவுசெய்து நீங்கள் செய்ய கூடிய பூஜை பயன்உள்ளதாக அமைய மேற்கண்ட பொருட்கள் பயன்படுத்துங்கள். 

தன்னைச்சுடும் – ஒரு குட்டிக் கதை


  

தன்னைச்சுடும் – ஒரு குட்டிக் கதை
ஒரு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்..
அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது .
வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை
நடந்து சென்றே... ரெகுலராக ஒரு மளிகைக் கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம் !!
முருங்கை காயை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார் !!
கந்தசாமி கொண்டு வரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம் !!
இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்து விடுவார் !!
பல வருடமாக கந்தசாமி முருங்கைக்காய் கொண்டு வருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை !!
கந்தசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார் !!
காரணம் கந்தசாமி யின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது!
ஒரு நாள் கந்தசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார்....
சிறிது நேரத்தில்....
பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க...அவருக்காக மளிகைக்காரர் ... எடைபோட... அதில் ஒன்பது கிலோ
மட்டுமே இருந்தது !!
அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! கந்தசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே !!
இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள் தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே !!
அடுத்த முறை கந்தசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார் !!
நான்கு நாட்கள் கழித்து கந்தசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார் !!
நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார் !!
‘கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க ஒரு கட்டு பத்து கிலோ என்றார் கந்தசாமி ...
அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒவ்வொரு கட்டிலும் ஒன்பது கிலோ தான் இருந்தது .
வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என கந்தசாமியின் கன்னத்தில் அறைந்தார் !!
‘இத்தனை வருஷமா இப்படித் தான் ஏமாத்திட்டு இருக்கியா? கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன், இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய்...’ என துப்ப, நிலைகுலைந்து போனார் கந்தசாமி .
அய்யா...என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க...
ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டு வருவேன்.
‘இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ, .
மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது.....
தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார் !!
இத்தனை வருடங்களாக கந்தசாமி யை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும்...
அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டு தான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது !!
இது தான் உலகநியதி !!
நாம் எதைத் தருகிறோமோ
அதுதான் நமக்குத் திரும்ப வரும் ....
நல்லதை தந்தால் நல்லது வரும்,...
தீமையை தந்தால் தீமை வரும் !!
வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம் ,
ஆனா....
நிச்சயம் வரும் !!
ஆகவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம் !!
மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். இதனை எப்போதும் நினைவில் கொள்ளுதல் வேண்டும்...

Tuesday, 23 July 2024

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்

 அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்

⚫தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம்.
⚫ஆனால் வடக்கு பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம்.
⚫ஆனால் பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை.
⚫சரி அமாவாசை நல்ல நாளா? தீய நாளா?
⚫அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது அதாவது ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது அன்று முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள் அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.
⚫எனவே பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும் அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது. முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால் அது நல்லநாளே.
⚫இந்துக்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி,மாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது.
⚫முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.
⚫அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.
⚫அமாவாசையன்று மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும்.
⚫அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும் என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
⚫அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.
⚫ஜோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள். அனேகமானவர்கள் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனா்.
⚫சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.
⚫அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.
⚫சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு.
⚫அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.அப்போழுது நம்மை யாராவது எண்ணுகிறார்களா ,நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.
⚫வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம்.
⚫அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.
⚫அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.
⚫உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.
⚫ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும்.நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி! ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி! நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.
⚫நகரங்களில் வசிப்பவா்கள் அமாவாசையன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். இதர தானங்கள் தருவது அவரவா் வசதியைப் பொறுத்தது.
⚫அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.
⚫எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.
⚫முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும்...

படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்? அதனால் உண்டாகும் 6 தீய விளைவுகள்...


 படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்? அதனால் உண்டாகும் 6 தீய விளைவுகள்...

திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக கட்டியணைத்து உறங்குவார்கள் ஆனால் இரண்டு குழந்தைகளுக்கு பிறகு பல வீடுகளில் கணவன் மனைவி சேர்ந்து உறங்குவது கிடையாது ஏதே சில காரண்களுக்காக இருவரும் இடைவெளிவிட்டு அல்லது தனித்தனியே குழந்தைகளுடன் உறங்குவார்கள் இதனால் கணவன் மனைவி உறவில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம்...
1. நெருக்கம் குறைகிறது...
கணவன் மனைவி இருவருக்கும் கொஞ்ச நேரம் மனசு விட்டு பேச அல்லது காதலிக்க கிடைக்கும் நேரமே படுக்கையறை நேரம்தான். இந்த நேரத்தை உறவை மேலும் வழுப்படுத்த பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் நண்பர்களே, இங்கு இருவேறு துருவங்கள் போல் ஆளுக்கொரு பக்கம் பிரிந்து இருப்பது கணவன் மனைவி உறவுக்கு அவ்வளவாக நல்லதல்ல என பாலியல் மற்றும் மனத்தத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்...
2. எளிதில் சலித்துப் போய்விடும்...
படுக்கை அறையில் இருவரும் நெருக்கமின்றி படுத்து உறங்கவில்லை என்றால் உங்களது உறவு எளிதில் சலித்துவிடும், உங்கள் மனைவியோ, அல்லது கணவனோ ஆசையாக உங்களை தொடும்போது கூட உங்களுக்கு பெரிதாக எந்தவொரு உணர்ச்சியும் ஏற்படாது,
3. உடலுறவில் நாட்டமின்மை...
நீங்கள் தனித்தனியாக படுத்து உறங்குவதை வழக்கமாகவே கொண்டிருந்தால், நாளடைவில் உங்களுக்கு உடலுறவில் கூட அவ்வளவு பெரிதாக நாட்டமில்லாமல் போய்விடும்,
4. வேறு ஒருவர் மீது காதல்/ஆசை...
உங்களின் நெருக்கம் குறைவதால், நீங்கள் எப்போதும் நெருக்கமில்லாமல் இருந்தால், நீங்கள் படிப்படியாக வேறொருவர் மீது காதல்வயப்பட அதிக வாய்ப்புள்ளது, மேலும் உங்கள் மனைவியுடன் அல்லது கணவனுடன் தனிமையில் சேர்ந்து அமர்ந்து கரம் பிடித்து பேசுவதை கூட நீங்கள் விரும்பமாட்டீர்கள்...
5. சண்டைகள் & சந்தேகங்கள்...
ஒரு குடும்பத்தில் சந்தேகம் முன் வாசல் வழியாக வந்தால் சந்தோஷம் பின் வாசல் வழியாக ஓடிவிடுமாம், எந்த சூழ்நிலையிலும் சந்தேகம் என்பது புருசன் பொண்டாட்டி வாழ்க்கையில் கூடவே கூடாது... ஒருவருக்கொருவர் விளையாடுவது, மற்றும் சிறுசிறு காதல் தீண்டல்கள் உறவில் இல்லாமல் போகும்போதுதான் அடிக்கடி சண்டைகள் / ஏச்சுப் பேச்சுகள் கணவன் மனைவிக்குள் வரும்.
6. இந்நிலை இப்படியே நீடித்தால் இறுதியாக வெறுப்புதான் கிட்டும்...
அதாவது உங்களது கவனம் வேறொரு நபர் மீது திசை திரும்பிவிட்டால், வேறொருவரை நேசிக்க நீங்கள் ஆரம்பித்துவிட்டால் உங்களது துணையை நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெறுக்க ஆரம்பித்துவிடுவீர்கள் ஆகவே நண்பர்களே...
உங்களை நம்பி கரம் பிடித்தவரை காதலியுங்கள், துணையை அணைத்து துயரம் தவிர்த்திடுங்கள்...

Thursday, 27 June 2024

திருப்பூரில் சுக்ரீஸ்வரர் கோவில் முக்கிய சிறப்புகள்:-


 சுக்ரீஸ்வரர் கோவில் முக்கிய சிறப்புகள்:-

1. பொய் ஆகவே ஆகாது!
2. கோவில் மேல் கோவில!
திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. இத்தல இறைவன் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார்.
தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவில் சமயக்குரவர்களுள் ஒருவரான சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். ஆகையால் இது 8–ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கி.பி. 1220–ம் ஆண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டுதான் இங்கு காணப்படுகிறது.
இந்தக் கோவிலில் மூலவர் சுக்ரீஸ்வரர், லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். வலதுபுறம் ஆவுடைநாயகியாக அம்மன் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். சுற்றுப் பிரகாரங்களில் கன்னி மூல விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் சன்னிதிகளும், எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக கருவறைக்கு நேர் எதிரே பத்ரகாளியம்மன் சன்னிதியும் உள்ளது.
பஞ்சலிங்கங்க கோவில்:-
நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் இந்தக் கோவிலில் அமைந்துள்ளன. மூலவராக அக்னி லிங்கம், மீதம் மூன்று லிங்கங்கள் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ளன. சிவனுக்கு பிடித்த வில்வமரத்தின் கீழ், ஐந்தாவதாக ஆகாச லிங்கம் அமைந்துள்ளது.
நான்கு யுகங்களை கடந்தது இக்கோவில் வரலாறு:-
2,500 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்லியல் துறை கூறினாலும், 17.28 லட்சம் ஆண்டுகளை கொண்ட கிரதாயுகத்தில், காவல் தெய்வமாகவும், 12.96 லட்சம் ஆண்டுகளை கொண்ட திரேதாயுகத்தில் சுக்ரீவனாலும், 8.64 லட்சம் ஆண்டுகளை கொண்ட துவாபரயுகத்தில், இந்திரனின் வாகனமாக ஐராவதத்தாலும், வணங்கப்பட்டது எனவும், 4.32 லட்சம் ஆண்டுகளை கொண்ட, கலியுகத்தில், தேவர்களாலும், அரசர்களாலும் வணங்கப்பட்டு, நான்கு யுகங்களை கண்ட கோவில் என்ற வரலாறும், அதற்கான சான்றுகளும் கோவிலில் உள்ளன.
கோவில் மேல் கோவில்:-
1952–ம் ஆண்டு தொல்லியல் துறை இந்த கோவிலை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆய்வு செய்தது. அப்போது கோவிலை மீண்டும் புனரமைக்க முடிவு செய்து, கோவில் அஸ்திவாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுத்தது. கோவில் கற்களை பிரித்து பார்த்தபோது, தற்போதுள்ள கோவிலை போலவே பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கற்கோவிலுக்கு மேல் மற்றொரு கோவில் எழுப்பப்பட்டிருக்கும் இந்த அமைப்பு வித்தியாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
சிதம்பரம், பேரூர் கோவிலுக்கு அடுத்து, சிறப்பான வேலைப்பாடுகளுடன், சக்தி வாய்ந்ததாக சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு என 450 ஏக்கர் நஞ்சராயன்குளம், கோவிலை சுற்றிலும் தண்ணீர் தேங்கும் அகழி, தெப்பக்குளம், இப்பகுதியில் அமைந்திருந்த முகுந்த பட்டணத்தில் இருந்து, மூலவருக்கு அருகே வெளியே வரும் வகையில் அமைந்துள்ள குகை, சிறப்பான வேலைப்பாடுகளுடன் கூடிய கருவறை கோபுரம் என தெரியாத விஷயங்கள் பல உள்ளன.
அதேபோல் கோவிலுக்கு மேற்கு பகுதியில் 56 வகையான நட்சத்திர, ராசி, திசை மரங்கள் நடப்பட்டு பெண்கள் நலபயணம் மேற்கொள்ள தனியாக நடைபாதையும் போடப்பட்டுள்ளது.
பொய் ஆகவே ஆகாது!
மிளகு, பயிராக மாறியது:-
ஒரு வியாபாரி, பொதிச்சுமையாக, மாடுகள் மீது மிளகு மூடைகளை ஏற்றிக்கொண்டு அவ்வழியாக சென்றுள்ளார். அப்போது மாறுவேடத்தில் வந்த சிவன் மூட்டைகளில் என்ன என கேட்க, அந்த வியாபாரி மிளகுக்கு இருந்த விலைமதிப்பு காரணமாக, பாசிப்பயிறு என கூறியுள்ளார். பின்னர் 15 நாட்களுக்கு அந்த வியாபாரி சந்தைக்குச் சென்று பார்த்தபோது, மிளகு மூடைகள் அனைத்தும் பாசிப்பயிறு மூடைகளாக மாறியிருந்தன. அதிர்ச்சி அடைந்த விவசாயி, இறைவனிடம் கதறி அழுது வேண்டினார். இதைதொடர்ந்து இறைவன் கனவில் சென்று, உன் மாடுகள் எங்கு வந்து நிற்கிறதோ, அங்கு வந்து வணங்கு. உன் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதைதொடர்ந்து வியாபாரியும் மாட்டை ஓட்டி வந்து மாடு நின்ற இடத்தில் சுக்ரீஸ்வரரை வணங்கியதால் பாசிப்பயிராக இருந்த மூடைகள் மிளகு மூடைகளாக மாறின. இப்பகுதி மக்கள் மிளகு ஈஸ்வரரே என்று அழைத்துவருவது குறிப்பிடத்தக்கது. அதனால் இங்கு வந்து மிளகு பூஜை செய்தால் தீர்வு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இத்துடன் கடந்த 14 வருடங்களாக காள பைரவர் பூஜை அஷ்டமி, தேய்பிறையில் மாதந்தோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இரண்டு நந்தி:-
இந்தக் கோவில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இல்லை. இதற்கு ஒரு கதை கூறப்படுகிறது. கோவில் நந்தி அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து நந்தியின் காதையும், கொம்பையும் வெட்டியுள்ளார். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்தபோது, கற்சிலையான நந்தியின் காதில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என அறிந்ததும், தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு வணங்கியுள்ளார். பின்னர் தவறுக்கு பிராயச்சித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து அதனை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் போனதால், அந்தப் பணியை கைவிட்டு விட்டனர். மறுநாள் வந்து பார்த்தபோது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது. சிவன் கனவில் வந்து, உறுப்புகள் இல்லை என்றாலும், அதுவும் உயிர்தான் எனவும், பழைய நந்தி முன்னால் இருக்க வேண்டும்; மற்றது பின்னால்தான் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில், இன்றும் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில், இரண்டு சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது.
மிளகீசன்:-
சுக்ரீஸ்வரர் கோயில், ராமாயண காப்பியத்துடன் தொடர்புடையது, வானர அரசன் சுக்ரீவன் தனது அண்ணனைக் கொன்றதற்குப் பிராயச்சித்தம் செய்ய இங்குள்ள ஈசனை லிங்கம் அமைத்து வழிபட்டதால் இக்கோவில் சுக்ரீஸ்வரர் என பெயர் பெற்றது, இந்த சிற்பத்தில் சுக்ரீவன் ஈசனை பூஜை செய்வதை காணலாம். உடலில் 'மரு' உள்ளவர்கள் இப்பெருமானுக்கு மிளகைப் படைத்து, அதில் சிறிதளவு மிளகை எடுத்து வந்து 8 நாள்களுக்கு உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் 'மரு'க்கள் மறைந்துவிடும். இவ் ஈசனை மக்கள் 'மிளகீசன்' என்றும் அழைக்கின்றனர். கல்வெட்டில் இவ்விறைவன், 'ஆளுடைய பிள்ளை' என்று குறிக்கப்படுகிறார்.
கோயில் குறித்த சிறப்பம்சங்கள்:
1) ஆவுடைநாயகி அம்மனுக்கென தனி கோவிலும், சிவனுக்கென தனி கோயிலும் அமைந்துள்ளது. அம்மனுக்கான தனி கோவில், வலது புறம் இருப்பதால் பாண்டியர்களின் பணி என்பது தெரிகின்றது.
2) உத்தராயணமும் தட்சிணாயணமும் சந்திக்கும் - வேளையில் சூரிய ஒளி சுவாமி மீது படுகிறது.
3) கோயிலின் விமானம் சோழர்களின் பணியை காட்டுகின்றது.
4) ஒன்றின் பின் ஒன்றாக இரண்டு நந்திகள் உள்ள கோயில். இக்கோயிலில் உள்ள ஒரு நந்திக்கு இரண்டு காதுகளும் அறுபட்டுள்ளன. (இது தலவரலாறு தொடர்புடையது.)
5) ஐந்து லிங்கங்கள் உள்ள கோயில், மூன்று வெளியில், ஒன்று மூலவர், மற்றொன்று கண்ணுக்கு தெரியாதது.
6) கொங்கு பகுதியில் சிவன் கோயில்களில் இருக்கும் "தீப ஸ்தம்பம்" இந்த கோயிலில் கிடையாது.கோயில் கிழக்கே பார்த்து இருந்தாலும், உள்ளே செல்லும் படிகள் தெற்கு பார்த்து அமைந்துள்ளது.
7) கொங்கு நாட்டில் உள்ள நான்கு "சிற்ப ஸ்தலங்களில்" இந்த சுக்ரீஸ்வரர் கோயிலும் ஒன்று.
😎 வியாபாரம் செய்ய கடல் வழியாக இந்தியாவின் மேற்கு பகுதிக்கு வந்த கிரேக்கர்களும், ரோமானியர்களும், கப்பலில் இருந்து இறங்கி பின் சாலை வழியாக அன்றைய சோழ நகருக்கு செல்ல பயன்படுத்திய வழி.
9) பண்டைய கொங்கு வர்தக வழியில் அமைந்திருந்த இந்த கோயிலின் (Kongu Trade Route) சிவனை "குரக்குதை நாயனார்" என்று வழிபட்டுள்ளனர்.
10) பாண்டியர்களால் கட்டப்பட்ட கோயிலாக இருப்பினும், இங்குள்ள சில சிற்பங்கள்,கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலேயே, இந்த இடத்தில் சிவ லிங்கத்தை வைத்து அன்றைய பழங்குடி மக்கள் பூஜைகள் மேற்கொண்டு வந்துள்ளது தெரிகின்றது.
இவ்வளவு கலை அம்சத்துடனும், வரலாற்று பின்னணியுடனும் இருக்கும் இந்த கோயில் குறித்த தகவலை உங்களை நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.கோவை, திருப்பூர் செல்லும் போது கட்டாயம் சென்று காண வேண்டிய மிக அழகான கோயில்.
நான்கு வருடங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், சுற்றாலத்துறையும் இணைத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த கோயில் சிறப்பம்சம் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் எந்த பலனும் இல்லை.
சுற்றாலத்துறையின் போதுமான விளம்பர நடவடிக்கைகள் இல்லாததால், வேலைப்பாடுகள் நிறைந்த மிக அழகான கோயிலாக இருப்பினும், இந்த கலைப் பொக்கிஷம் குறித்த தகவல் உள்ளூர் பக்தர்களுக்கோ, வெளிநாட்டு கலை ஆர்வலர்களுக்கோ, இது போன்ற ஒரு கோயில் இருப்பதே சரியாக தெரியாது.
ஆகையால் நம்மால் முடிந்த அளவு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

சங்கமேஸ்வரர் திருக்கோயில், கூடுதுறை , பவானி.


 சங்கமேஸ்வரர் திருக்கோயில், கூடுதுறை , பவானி.

காவிரி மற்றும் பவானி நதிகள் செழுமைப்படுத்தும் இடம் கூடுதுறை....
இங்கு இரண்டு ஆறுகள் மட்டும் அல்ல மூன்றாவதாக அமிர்தநதி என்னும் நதி(கண்ணுக்கு தெரியாது) இங்குள்ள அமிர்தலிங்கேஸ்வரருக்கு அடியில் தோன்றி பவாநி, காவிரி நதிகளுடன் சங்கமிப்பதால் இது முக்கூடல் அழைக்கப்படுகிறது.
பவாநிக்கு கூடல்நகர் என்ற ஒரு பெயரும் உள்ளது
வடநாட்டில் காசிக்கருகே அலகாபாத்தில் கங்கா,யமுனா,சரஸ்வதி(கண்ணுக்கு தெரியாது) ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தை திரிவேணி சங்கமம் (முக்கூடல்) என்பார்கள்
அதை போல் பவாநியும் தென்திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது.
அதனால்தான் இந்தியாவின் மாபெரும் தலைவர்களின் அஸ்திகளை அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் கரைத்துவிட்டு பவாநி முக்கூடலிலும் இன்றும் கரைக்கிறார்கள்.
அதனால் பவாநி இரண்டு நதிகள் சங்கமிக்கும் இடமல்ல
மூன்று நதிகள் சங்கமிக்கும் இடம்.
திருஞானசம்பந்தரால் தேவாரப் பதிகம் பாடப்பெற்ற இக்கோயில் ஏறக்குறைய 1400 மேல் ஆண்டுகளுக்கு பழமையானதாக இருக்க வேண்டும்.
ஏழாம் நூற்றாண்டுகளில் காவிரி மற்றும் பவானி ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டப்படாத நிலையில் வருடத்தின் அனைத்து நாட்களிலும் நீரால் சூழப்பட்டு இருந்த இந்த இடம் எவ்வளவு ரம்மியமாக இருந்திருக்கும் என்னும் போதே மனதில் ஒரு பரவசம் ஏற்படுகின்றது .
சங்கமேஸ்வரர் கோயில் 14 நூற்றாண்டுகள் பழமையானதாக இருந்த போதிலும் இங்குள்ள மற்ற சன்னதிகள் 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை பல திருப்பணிகள் நடைபெற்று உள்ளது என்பதை இங்குள்ள பல்வேறு கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.
இந்தக் கோயிலில் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர்(1509 -1529) காலத்தில் கொங்கு மண்டலத்தின் நிர்வாகியாக இருந்த பாலதேவராசன் என்பவரது கல்வெட்டும் , தாரமங்கலத்தை மையமாகக் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர் கெட்டி முதலியார் என்பவரது கல்வெட்டும் இங்கு நடைபெற்ற திருப்பணிகளை பற்றி கூறுகின்றது. இந்த கெட்டி முதலியார் என்பவர் தாரமங்கலத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலை கட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வெட்டுகளில் இங்குள்ள இறைவன் திருநண்ணாவுடையார்
எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
சங்கமேஸ்வரர் திருக்கோயிலின் வடக்கு நோக்கி அமைந்துள்ள ராஜகோபுரத்தின் நேராக ராஜகோபுரத்தை நோக்கியவாறு ராஜகோபுர நந்தியும் அதற்கு சற்று முன்பு இடதுபுறத்தில் விநாயகரும், மற்றும் வலது புறத்தில் வீர ஆஞ்சநேயரும் தனி சன்னதிகளில் வீற்றிருக்கின்றார்கள்.
இத்திருக்கோயிலின் இந்த வடக்கு புற கோபுரம் ஒரு பெரிய கோட்டையின் பிரதான நுழைவாயிலைப் போல மிகவும் கவனத்துடன் பாதுகாப்பான முறையிலும், மிகுந்த கலை நுணுக்கத்துடனும் கட்டப்பட்டுள்ளது.இங்குள்ள மரகதவுகளில் இரும்பினாலான கூர்மையான கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றது.
இந்தக் கதவின் பின்புறத்தில் பக்கத்துக்கு இரண்டாக நான்கு சிறிய தளங்கள், போர்வீரர்கள் கோட்டைப் பாதுகாப்பிற்காக நின்று காவல் புரியலாம் என்று யோசிக்கும் அளவிற்கு நேர்த்தியான முறையில் உள்ளது.
நுழைவாயிலின் இடது மற்றும் வலது புறங்களில் குறுஞ்சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது, மேலும் விஜயநகர பேரரசுகளில் கட்டிடக்கலை பாணியில் , வாசலுக்கு முன் புறம் எட்டு தூண்கள் பக்கத்துக்கு நான்கு தூண்களாக நுணுக்கமான சிற்பங்களுடன் நம்மை வசீகரிக்கிறது.
இந்தப் பிரதான நுழைவாயில் கொண்ட ராஜ கோபுரத்தின் வலது புறத்தில் பரமபதவாசல் ஒன்றும் உள்ளது .
இந்த ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்ததும் , இடது புறத்தில் முத்துக்குமாரசாமி என்ற பெயருடன் , அழகிய முன் மண்டபத்துடன் கூடிய முருகன் தனி சன்னதியிலும் , வலது புறத்தில் ராஜ கணபதி தனி சன்னதியிலும் அமர்ந்து நம்மை வரவேற்கின்றார்கள்.
இவர்களை வணங்கி கடந்து செல்லும் பொழுது வலது புறத்தில் ஆதிகேசவப் பெருமாள் , வேணுகோபால சுவாமி ,லஷ்மி நரசிம்ம மூர்த்தி மற்றும் சௌந்தரவல்லி தாயார் ஆகியவர்கள் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றார்கள்.
இதற்கு அடுத்து வருவது வேதநாயகி அம்மன் கோயில். இந்தக் கோயிலின் முகப்பில் பல நுணுக்கமான பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கக் கூடிய அழகு மிகுந்த சிற்பங்களுடன் கூடிய மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் வழியே மகா மண்டபத்தை அடைந்து அர்த்த மண்டபத்தின் வழியாக கருவறையில் உள்ள வேதநாயகி அம்மனை காணலாம் .
இந்த மகா மண்டபத்தில் உள்ள தூண்களில் பலவகையான அரிய சிற்பங்களும், மகாமண்டபம் சுற்றுச்சுவரின் உன் பக்கத்தில் , சுவரும் மேல் தளமும் இணையும் இடத்தில் பல்வேறு புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றது...
இந்தப் புடைப்பு சிற்பத்தில் பிரம்மா, விஷ்ணு,மகிஷாசுரமர்தினி, முருகன்,விநாயகர் , பூதகணங்கள் முனிவர்கள் மற்றும் யானைத் தலையும், மனித உடலும் சிங்கதின் கால்களும் கொண்ட உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
மேலும் ராமாயணத்தில் அனுமன் சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள தசகண்ட ராவணனை, அவரது அமைச்சரவையில் சந்திக்கும் பொழுது , அந்த சிம்மாசனத்திற்கு சமமானதொரு ஆசனத்தை தன் வாலால் அமைத்து நேருக்கு நேராக அமர்ந்து உரையாடும் காட்சி ஒன்று தத்ரூபமாக காணப்படுகிறது.
இந்த மகா மண்டபத்திலிருந்து கர்ப்ப கிரகத்தை சுற்றி வர ஒரு உள்சுற்று பாதை உள்ளது இந்தப் பாதை, சிங்கங்களை தாங்கி நிற்கும் யானைகளை கொண்ட தூண்களால் அமைக்கப்பட்டுள்ளது. கர்ப்ப கிரகத்தை சுற்றி பல கோஷ்ட தெய்வங்கள் உள்ளனர் , மேலும் சுற்றி முடிக்கும் இடத்தில் வல்லபகணபதி பெரிய சிலையாக மேற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்.
இச் சுற்று முடிந்து மீண்டும் மகா மண்டபத்திற்குள் நுழையும்போது இடது புறத்தில் எண்கோண வடிவிலான அழகிய பள்ளி அறை உள்ளது.
வேதநாயகி அம்மன் சந்தித்து வெளியில் வரும் பொழுது தூங்கா விளக்கு மண்டபம் ஒன்றும் பலிபீடம் ஒன்றும் கோயிலுக்கு நேர் எதிரே காணப்படுகின்றது.
திருநண்ணாவுடையார் :
சங்கமேஸ்வரர் கோயிலில் நுழைய வடக்கு , கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நுழைவாயில்கள் உள்ளது வடக்குப் நுழைவாயிலின் முன்பு இரண்டு புறங்களிலும் முருகன் மற்றும் விநாயகர் சிறு கோயில்கள் உள்ளன . அதே போன்று கிழக்கு புறத்திலும் விநாயகர் மற்றும் முருகன் தனி சன்னதிகள் உள்ளன. கிழக்குப்புற வாயிலுக்கு எதிராக கொடி மரம் பலி பீடம் தூங்கா விளக்கு ஏற்றும் மிகப் பெரிய கல் தூண் ஒன்று சிறிய மண்டபத்துடன் உள்ளது இந்த அமைப்பிற்கு நேரெதிரே வெளி மதில் சுவரில் ஒரு சிறிய மண்டபத்துடனும் , ஒரு சிறிய கோபுரத்துடனும் காவிரியை நோக்கி ஒரு நுழைவாயில் உள்ளது.
இந்த வாயிலின் வழியாக காவேரிப் படித்துறை அடையலாம். கிழக்குப் புற வாயில் வழியாக கோயிலுக்குள் நுழையும் பொழுது அழகிய புடைப்புச் சிற்பங்களுடன் கூடிய பெரிய கல்தூண் மண்டபம் உள்ளது, இந்த மண்டபத்தில் அழகிய நந்தி ஒன்று சதா சங்கமேஸ்வரரை வைத்த கண் வாங்காமல் காவல் காத்து அமர்ந்துள்ளது....
இவற்றைக் கடந்து மகா மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னால் இரண்டு பெரிய துவாரபாலகர்கள் சிலையும், உள் சுற்று சுவர் ஆரம்பிக்கும் இடத்தில் சுவற்றில் ஜான் உயரமுள்ள பல, வசீகரிக்கக் கூடியதும், அழகிய முகபாவங்த்துடனும் கூடிய புடைப்புச் சிற்பங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றது. இவற்றை ரசித்துக்கொண்டே மகா மண்டபத்தில் நுழைந்து சற்றே தலை சாய்ந்த நிலையில் உள்ள சங்கமேஸ்வரரை காணலாம்.
நன்றாங் கிசைமொழிந்து நன்னுதலாள்
பாகமாய் ஞால மேத்த
மின்றாங்கு செஞ்சடையெம் விகிதர்க்
கிடம்போலும் விரைசூழ் வெற்பில்
குன்றோங்கி வன்றிரைகள் மோத
மயிலாலுஞ் சாரற் செவ்வி
சென்றோங்கி வானவர்க ளேத்தி
அடிபணியுந் திருந ணாவே
திருஞானசம்பந்தர்
மகாமண்டபத்தில் மைய மேல் தளத்திற்கும், பக்கத்தில் உள்ள தளத்திற்கும் இடையே உள்ள உயர வேறுபாட்டில் முழுவதுமாக சாளரங்கள், சூரிய ஒளியும் மற்றும் காற்று சுழற்சிக்கும் பயன்படும் வகையில் நுட்பமாக அமைக்கப்பட்டுள்ளது.
மகா மண்டபத்திலிருந்து தெற்குப் புறத்தில் உள்ள வழியின் மூலமாக உள் சுற்றுப் பாதையை அடையலாம், இந்த ஒரு சுற்றுப்பாதையில் இடதுபுறத்தில் 63 நாயன்மார்களின் சிலைகளும், சப்த கன்னிகள் மற்றும் வீரபத்திரர் சிலையும், வலது புறத்தில் விநாயகர் மற்றும் தக்ஷிணாமூர்த்தியின் தனி சிலைகளும் காணப்படுகின்றது. தக்ஷிணாமூர்த்திக்கு அருகில் அழகிய கல் சங்கிலியுடன் கூடிய நான்கு தூண்கள் உள்ளது.
மேற்குப் புறத்தில் இடதுபுறத்தில் விநாயகர் மற்றும் பஞ்சபூத லிங்க சிலைகள், அதற்கடுத்தாற்போல் வள்ளி, தெய்வயானை முருகன் சிலைகளும், வலது புறத்தில் லிங்கோத்பவர் மற்றும் சிறிய அளவிலான விஷ்ணு மூர்த்தி மற்றும் நான்முகனின் அழகிய புடைப்புச் சிற்பங்களும் காணப்படுகின்றது.
சுற்றுப்பாதையில் வடக்குப் புறத்தில் பிரம்மா மற்றும் விஷ்ணு துர்கா கர்ப்பகிரக சுவரிலும்,அதற்கு சற்று பக்கத்தில் கர்ப்ப கிரகத்தை நோக்கி சண்டிகேஸ்வரர் சிறு கோயில் ஒன்றும் உள்ளது.
இதற்கு அடுத்தாற்போல வெளி மதில் சுவரில் தெற்குப் பக்கமாக அமைந்துள்ள சிறிய கோபுரத்தின் வழியாக வெளியே சென்றால், சகஸ்ர லிங்கேஸ்வரர், காமாட்சி லிங்கேஸ்வரர், அமிர்தலிங்கேஸ்வரர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் சிறிய கோயிலாகவே உள்ளது.
இவற்றைக் கடந்து செல்லும்போது இரண்டு படித்துறைகள் கூடும் இடத்தையும் , இரண்டு அழகிய நதிகள் சங்கமிக்கும் அந்த அற்புதமான காட்சியைக் காணலாம் .🥰🥰🥰
பொன்னிநதியின் நளினத்தையும், பவானி ஆற்றின் அழகையும் ஒரே இடத்தில் கண்டு ரசிக்கலாம்.... வெகு நீண்ட வனப்பான பயணத்தை காவேரி நதி இந்த இடத்தில் பவானி ஆற்றுடன் பகிர்ந்து கொண்டு மேலே செல்கிறாள்....🙂🙂🙂
இந்த இயற்கை வனப்பையும், கூடல் சங்கமத்தையும் கண்டு மீண்டும் கோயிலின் தெற்குப் புற வாயிலாக உள்நுழைந்து, இடது புறம் சென்றால் கோயிலின் தல விருட்சமான இலந்தை மரமும், அதற்கு அடியில் விநாயகர் சிலை ஒன்றும் காணப்படுகின்றது.
மேலும் வடக்கு நோக்கி செல்லும் போது சங்கமேஸ்வரர் கோயில் மற்றும் வேதநாயகி அம்மன் கோயிலுக்கும் இடையில் தனி சன்னதியில் முருகனும், அவருக்குப் பின்னால் இடதுபுறத்தில் சனி பகவான் மற்றும் வலது புறத்தில் ஜுரஹரேஸ்வரர் தனி சன்னதியும் காணப்படுகின்றது....
பல நூற்றாண்டுகள் பழமையுடைய கோயிலாக இருந்தாலும் நானூறு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு பல சிற்ப அற்புதங்களை நமக்கு காட்சியாக்குகின்றது....🙂🙂

Thursday, 30 May 2024

வீட்டில், ஆண்கள் விளக்கை ஏற்றலாமா?


 வீட்டில், ஆண்கள் விளக்கை ஏற்றலாமா? அப்படி ஆண்கள் தீபம் ஏற்றி வழிபடும் போது கடைபிடிக்க

வேண்டிய ஒரு சூட்சுமம் ரகசியம்!
பல பேர் வீட்டில் ஆண்கள்,
விளக்கு ஏற்றும் பழக்கத்தை வைத்திருப்பார்கள்.
பெண்கள் வீட்டில் இருக்கும் போது, ஆண்கள் பூஜை அறையில் தீபம் ஏற்றலாமா? என்ற ஒரு சந்தேகம் நம்மில் பலருக்கு உண்டு.
பெண்களால் விளக்கை ஏற்ற முடியாத சூழ்நிலையில், ஆண்கள் விளக்கை ஏற்றலாம்.
அதில் எந்த ஒரு தவறும் இல்லை.
ஆனால், அப்படி விளக்கு
ஏற்றும் போது சில
விதிமுறைகளை
ஆண்கள் கடைப்பிடிக்க
வேண்டியது அவசியம்.
அந்த விதிமுறைகள் என்ன என்பதைப் பற்றிய இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வீட்டு பெண்களால் விளக்கு ஏற்ற முடியும் என்ற சூழ்நிலை இருக்கும் போது, கட்டாயம் பெண்கள் தான் தீபத்தை ஏற்ற வேண்டுமே தவிர, அந்த பொறுப்பை ஆண்கள்
கையில் கொடுக்கக்கூடாது.
சரி.!ஆண்கள் வீட்டில் விளக்கு வேண்டிய கட்டாய சூழ்நிலையில் எப்படி விளக்கேற்ற வேண்டும்.
ஆண்கள் வீட்டில் விளக்கு ஏற்றும் போது மேல்சட்டையை அணியாமல் தீபம் ஏற்ற வேண்டும்.
அதாவது பனியன் கூட போட்டுக் கொள்ளக்கூடாது.
வேட்டியோ அல்லது பேண்ட் அணிந்து கொண்டு தீபம் ஏற்றலாமே தவிர, கைலி(லுங்கி) அணிந்து கொண்டு தீபம் ஏற்றுவதை தவிர்க்கவும்.
பெண்கள் எப்படி நெற்றியில் குங்குமம் வைக்காமல் தீபம் ஏற்றக்கூடாதோ, அதேபோல் ஆண்கள் நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் எதுவும் வைத்துக் கொள்ளாமல் வெறும் நெற்றியுடன் தீபம் ஏற்றக்கூடாது.
நெற்றியில் விபூதி,சந்தனம் ஏதாவது ஒன்றை இட்டுக் கொண்டுதான் தீபம் ஏற்ற வேண்டும்.
நெற்றியில் இட்டுக் கொண்ட விபூதியை சிறிது உங்கள்
மார்பிலும் பூசிக் கொள்ளுங்கள்.
முடிந்தால் இருகைகளிலும் பூசிக்கொண்டு தீபத்தை ஏற்றி பாருங்கள்.
அதில் கிடைக்கும் ஆத்ம
திருப்தியே வேறு.
ஒரு முறை இந்த விதிமுறையை பின்பற்றி தீபமேற்றும் ஆண்கள், கட்டாயமாக தொடர்ந்து இதை அவர்களே கடைபிடிப்பார்கள்.
அந்த அளவிற்கு மன அமைதி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் சில ஆண்கள் குளித்த உடன் பூஜை அறைக்கு வந்து தீபத்தை ஏற்றினால்,அது மிகவும் தவறான பழக்கம்.
ஈரத்தலையோடு தீபம் ஏற்றக்கூடாது. ஈரத் துண்டோடும் தீபம் ஏற்றக்கூடாது.
ஆண்கள் கிழக்கு பார்த்தவாறுதான் தீபம் ஏற்ற வேண்டுமே தவிர, மற்ற திசைகளில் தீபம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக ஆண்கள் ஏற்றிய தீபத்தை பெண்கள் குளிர வைக்கக் கூடாது.
ஆண்கள் ஏற்றிய தீபத்தை ஆண்களும் குளிர வைக்கக்கூடாது.
தீபம் தானாக எண்ணெய் தீர்ந்து குளிருவதில் எந்த ஒரு தவறும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்கள் தீபம் ஏற்றும்போது கவனிக்கப்படவேண்டிய ஒரு சூட்சுமம் உள்ளது.
இதை ஆண்கள் கடைபிடித்தால் அதிகப்படியான அதிர்ஷ்டம் உண்டாகும் என்று சொல்கிறது சாஸ்திரம்.
அது என்னவென்று பார்த்து விடுவோம்.
தீபத்தை ஏற்றுவதற்கு முன்பாக, தீபத்தின் முன்பு ஒரு பூவோ அல்லது ஒரு ரூபாய் நாணயமோ அல்லது சிறிதளவு அரிசி, இவை மூன்றையும் வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.
உங்கள் வீட்டில் பூ இருந்தால்
பூவை வைத்துக் கொள்ளலாம்.
இல்லாவிட்டால் சிறிதளவு
அரிசியை வைத்துக் கொள்ளலாம்.
அரிசி வைக்க இஷ்டம் இல்லாதவர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை கூட வைக்கலாம்.
ஆக மொத்தத்தில் இந்த மூன்று பொருளில் ஏதாவது ஒரு பொருளை விளக்கின் முன்பாக வைத்து, விளக்கை இரு கைகளாலும் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு அதன் பின்பு தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த முறையை மட்டும் ஆண்கள் பின்பற்றி பாருங்கள் உங்களாலேயே வித்தியாசத்தை உணர முடியும்.
தீபத்தின் முன்பு வைத்த அந்த பொருளை என்ன செய்யலாம்?
அடுத்த நாள், பூவாக இருந்தால் காய்ந்த பூவை எடுத்து விட்டு நல்ல பூவை வைத்துக் கொள்ளலாம்.
அரிசி வைத்திருந்தால் அந்த அரிசியை எடுத்து சாப்பாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஒரு ரூபாய் நாணயத்தை உங்கள் செலவிற்காக வைத்துக் கொள்ளலாம். எந்த ஒரு தவறும் இல்லை.
அந்த தீபத்திற்கு மதிப்பு கொடுத்து நீங்கள் செய்யும் சமர்ப்பணம் தான் அந்த மூன்று பொருள்களில் ஏதாவது ஒன்று.
இது ஒரு சூட்சும முறை. லட்சுமிகரமான தீபத்தை ஏற்றும்போது அதன் பலனை முழுமையாகப் பெறுவதற்கு நம் முன்னோர்கள் நமக்காக சொல்லி வைக்கப்பட்டுள்ள சாஸ்திரம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த முறையை ஆண்கள் மட்டும் தான் பின்பற்ற வேண்டுமா? பெண்கள் பின்பற்ற கூடாதா என்ற கேள்வி கட்டாயம் எழும்.
பெண்களும் இந்த முறையை பின்பற்றலாம் அதில் எந்த ஒரு தவறும் இல்லை.
இது பல பேருக்கு தெரியாது. தெரிந்தவர்கள் இன்றும் இந்த பழக்கங்களை கடைப்பிடித்து தான் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்கள், தங்கள் குடும்பத்தை விட்டு தனியாக தங்கி இருப்பார்கள் அல்லவா!
அந்த இடங்களில் ஆண்களுக்கு தீபமேற்றும் பழக்கம் இருந்தால்
கூட, இந்த சூட்சம முறையினைக் கடைப்பிடிப்பதில் தவறில்லை...

நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து).......

 நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து)....... . இதய பிரச்சினைகளுக்கு, (ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன்...