Wednesday, 5 April 2017

அறிஞரின் அவையிலிருந்து

                                அறிஞரின் அவையிலிருந்து 





  • அச்சம் என்பது அறியாமையில் இருந்தே ஊற்றெடுக்கிறது
  • அறிவாளர் எப்போதும் மோசமான கனவராக வறுமையில் மடிகிறார்
  • அறிவாளரின் சிந்தனை எப்போதும் ஒரு நூற்றாண்டு முன்பே பிறக்கிறது
  • அறிவுள்ளவர்க்கு வாழ்க்கை என்றும் இன்பத் திருவிழாவே
  • ஆசிரமங்கள் புனிதரையும் கல்லுரிகள் அறிஞர்களையும் வெளியேற்றிவிடும்
  • ஆசிரமத்தில் இடமில்லை கல்லூரியில் அறிஞர்க்குஇடமில்லை
  • ஆர்வம் இல்லாதுஎந்த சாதனையையும் சாதிக்க முடியாது
  • ஆர்வமும் அறிவின் ஆழமும் கொண்டே சொற்பொழிவு நிகழ்கின்றது
  • ஆற்றலை வீணாக செலவு செய்வது தற்கொலைக்கு ஒப்பாகும்
  • இதயம் விரியட்டும் பழிவாங்கும் எண்ணம் இம்மியும் வேண்டார்
  • இயற்கையின் இரகசியம் பொறுமை அதை கற்றுக் கொள்வோம்
  • உண்மைகள் அழகானது ஆனால் பொய்கள் அதை விட கவர்ச்சியானது
  • உழைப்பு ஒரு போதும் வீணாவதில்லை என்ற உண்மையை உணர்ந்தவனே
  • உழைப்பும் கருணையும் உள்ளவர்க்கு வாழ்வு ஒன்று சிறியதல்ல
  • உள்ளுணர்வை இறுதி வரை தொடர்ந்து நம்பி பின் செல்,தோல்வி கிடையாது
  • உறங்கும் மனதை உசுப்பி எழுப்புவதே கவிதையின் வெற்றி
  • உன் அகந்தையை விட்டு விடு எதிரிகள் பலர் ஆயுதமிழப்பார்கள்
  • எல்லா தீமைகளும் தானே தீரும் வகையிலேயே படைக்கப்பட்டுள்ளன
  • எல்லாருக்கும் கண் திறக்கும் கதவு திறக்கும் வழிகாட்டியாக இரு
  • ஒரு இளஞனை பராமரிப்பதற்கு எல்லையற்ற பொறுமை வேண்டும்
  • ஒரு பழக்கத்துக்கு அடிமையாவது என்பது கண்கட்டி நடப்பது போன்றது
  • ஒரு மனிதனின் அதிஸ்ட்டம் அவனது குணத்தில் விளைந்த கனிகளே
  • ஒரு ரகசியக் கதவு வழியாக ஒவ்வொருவருக்குள் இறைவன் வருகிறான்
  • ஒருவன் பிறருக்கு தரும் மரியாதைப் பொருத்தே அவனுக்கும் மரியாதை
  • ஒவ்வொரு சத்ய மீறலும் சமூகத்தின் முதுகில் குத்தப்பட்ட கத்தி
  • கருணை என்ற நிலத்திலேதான் ஞானம் என்ற பயிர் விளைகிறது
  • கருணை என்ற நிலத்திலேதான் ஞானம் என்ற பயிர் விளைகிறது
  • கல்வியின் இரகசியம் மாணவனை மதிப்பது தான்
  • கல்வியின் வெற்றி இரகசியம் மாணவருக்கு தரப்படும் மரியாதையே
  • சபலத்தை தவிர்ப்பவனுக்கு ஆண்மபலம் அதிகரிக்கிறது
  • சமூகபாதுகாப்பு என்பது அதன் அங்கத்தினர் அறிவை வரைவிட பாதுகாப்பதில்லை
  • சாதரணமானதில் இருந்து அசாதரணமதைக் கண்டுபிடிப்பத்தே ஞானம்
  • சிறந்த சொல் வன்மையால் திருடரையும் மனநோயையும் மாற்றலாம்
  • சிறிய விஷயங்களுக்கு என்பது மாபெரும் தியாகங்களால் விளைந்தது
  • தடை செய்யபட்டு எரிக்கப்பட்ட புத்தகங்களின் வெளிச்சம் உலகுக்கு விளக்கானது
  • தத்துவஞானிகள் ஒருபோது நல்ல கணவணாக வாழ்மிடிந்ததில்லை
  • தன்னம்பிக்கையே மாவீரனின் இரகசிய சாரம்
  • துணிவுள்ள தலைவன் நமது எல்லையற்ற ஆற்றலை நமக்கு புரிய வைப்பார்
  • தெளிவான சித்தாந்தங்கள் தெளிவான பலன்களை ஆதாரமாகும்
  • தேசத்தின் நாகரீகம் நகரத்தின் செல்வரால் அல்ல அவரது நடத்தையால் தான்
  • தொலை நோக்கு அறிவென்பது மனிதனின் சிறப்பறிவு அது வெற்றிக்குவழிகாட்டும்
  • தோற்றுவிடுவொம் என்ற அச்சம் அனைவரது உதிரத்தில் ஊறிக்கிடக்கிறது
  • நகரங்களில் நுழைந்ததுமே உண்மையின் மீது நம்பிக்கை தளர்கிறது
  • நமது பண்பாடு புலன்களுக்கு கீழ்படிந்து விட்டது ஆன்மைக்கு அழகல்ல
  • நல்ல குணங்கள் மன உறுதியை கற்பிக்கிறது
  • நல்ல கொள்கைளின் நல்ல விளைவுகள் நற்கனிகளாகும்
  • நாகரீகத்தின் பெரும் பகுதி பெண்களாலே உருவாக்கப்படுகின்றது
  • நாகரீகம் என்ப நகர வளங்கல் அல்ல அதன் மனிதனின் நன்னடத்தையே
  • நாம் எதயாவது பெற விரும்பினால் அதற்கு தயார்படுத்தி கொள்ள வேண்டும்
  • நாம் ஒதுக்கித் தள்ளிய நமது சிந்தனைகள் பிறரால் வெற்றியடைவது வேதனை
  • பண்பாடு என்பது சுவற்றுக்கு வெள்ளையடிக்கும் வேலையல்ல
  • பலகீனமானவர்களே அதிஷ்டாத்தை நம்பிக் காத்திருப்பவர்கள்
  • பலம் உள்ளவனாக முதலில் பலகீனங்களை கண்டுபித்து களையெடு
  • பலர் தடை செய்து எரிக்கப்பட்ட புத்தகங்களின் தீ உலகுக்கு ஒளியூட்டியுள்ளது
  • பள்ளிகள் நம்மை நிரந்தரமாக வார்த்தைச் சிறையில் பூட்டி விடுகின்றன
  • புரட்சியின் சிறப்பு புரட்சியாளரின் குறைகளால் சீர்கெட்டு போவதில்லை
  • பூமி என்பவள் தனது வயஅதை பூவினால் மறைத்து கொள்கிரான்
  • பேரறிவை விட நல்ல நடத்தையே உலகில் போற்றபடும்
  • மதுவை விட உழைப்பு என்பதே ஓயாத கவலைகளுக்கு நல்ல மருந்து
  • மற்றவரை உயர்த்த வேண்டுமானால் நாம் உயர்ந்த இடத்தில் இருக்க வேன்டும்
  • மாற்ற முடியும் என்று மாறாத நம்பிக்கை உடையவரே ஆசிரியராக முடியும்
  • மாட்டு வண்டியும் சூர்ய தேர் போல் ஓடும் மனம் திருந்தினால்
  • மாணவரை வார்த்தைகளை மூட்டைகட்டி பொதி சுமக்க வைக்கிறார்
  • மாபெரும் அறிவாளரின் உடலின் ஆயுள் மிகச் சிறியதுபுகழின் ஆயுள் மிகப்பெரியது
  • யாராவது புதிதாக சரியான உண்மை சொன்னால் சமுதாயமே ஆச்சர்யப்படும்
  • வாழ்வின் நீள‌த்தை விட அதன் ஆழமே முக்யமானது
  • ஆசை உணர்வாகி அறிவாகி செயலாகி உயிர்த்து தழைப்பதேமுன்னேற்றம்
  • வேறெதையும் விட அச்சமே தோல்விகளுக்கு மூலகாரணமே
  • ஜ்ன்னல் இல்லாத கண்ணாடி சிறையில் மனம் சிதைகிறது

மதிப்பு

                                                                               மதிப்பு



 ஒரு மில்லி செகண்டின் மதிப்பை
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்
ஒரு செகண்டின் மதிப்பை
விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்
ஒரு நிமிடத்தின் மதிப்பை
தூக்கிலடப் படும் கைதியைக் கேட்டால் தெரியும்
ஒரு மணி நேரத்தின் மதிப்பை
உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்
ஒரு நாளின் மதிப்பை
அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்
ஒரு வாரத்தின் மதிப்பை
ஒரு வார பத்திரிக்கையின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்
ஒரு மாதத்தின் மதிப்பை
குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்
ஒரு வருடத்தின் மதிப்பை
தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைக் கேட்டால் தெரியும்
ஒரு வாழ்வின் மதிப்பை

நேரத்தைத் தவற விடுபவரையும்; தாரத்தைக் கதற விடுபவரையும் கேட்டால் தெரியும்..!

ஊக்கம்

                                                                        ஊக்கம்



  • ஊகம் என்பது நடக்கும் முன்பே நல்லறிவால் உணர்வதுவே
  • ஊக்கம் என்பது நடக்க இயலாததை நற்செயலால் செய்வதுவே
  • கிடைக்கவில்லையே என்று ஏங்கி அழவது ஏக்கம்
  • கிடைக்கவிலையே என்று ஒங்கி உழைப்பது ஊக்கம்
  • விரலுக்கு ஏற்பவே வீக்கம்
  • உழைப்புக்கு தக்கவே ஊக்கம்
  • மெய்மையும் வாய்மையும் வீர ஆசாரமும்
  • புத்தி சேர் உத்தியும் யுத்தி சேர் ஊக்கமும் உடையவன் தலைவன்
  • தனது மூளை சிறப்பானது என நினைப்பவன் கர்வத்தில் சறுக்குகிறான்
  • தனது வேலை சிறப்பானது என செய்பவன் உலகத்தில் சாதிக்கிறான்
  • கலகலப்பாக வாழ்பவருக்கு கண்ணீர் சுரக்க நேரமில்லை
  • சுறுசுறுப்பாக உழைப்பவருக்கும் துயரை நினைக்க நேரமில்லை
  • எறும்புகள் விதை உருட்டும்
  • ஆனைகள் மரம் உருட்டும்
  • குறும்புகள் கோள் பேசும்
  • அறிஞர்கள் கோள்களை சுற்றுவார்
  • வென்றவர்களோ மறுவாய்ப்பு தேடி ஒடுகிறார்கள்
  • தோற்றவர்களே ஒரு சாக்கு தேடி அசைகிறார்கள்
  • உற்சாகமில்லாத தொழிலாளி எரிபொருள் இல்லாத வாகனம்
  • உணர்வில்லாத தலைவன் உயிர் இல்லாத பொம்மை.                    
ஆர்வம்
  • அரைக் கதவை திறந்து வைத்தால் எலியும் பூனையுமே வரும்
  • அரை மனதில் செய்து வைத்தால் தோல்வியும் துயரமுமே வரும்
  • ஆர்வத்தோடு செய்யும் செயல்கள் உயர்வைத் தரும்
  • ஆர்வமில்லாது  செய்யும் செயல்கள் அயர்வைத் தரும்
  • ஆசையென்ற தீயெரிந்தால் மானமெல்லாம் கரிசாம்பலாகும்
  • ஆர்வமென்ற ஆனைநடந்தால் தடையெல்லாம் தவிடுபொடியாகும்
  • ஈர்ப்புடன் கேட்கும் பாடமும் இசையாக இனிக்கும்
  • ஈடுபாட்டுடன் சுமக்கும் பாரமும் எளிதாக இருக்கும்
  • விருப்பமில்லாது முயல்பவர்கள் துவங்குமுன்பே தோற்றவராவார்
  • விருப்பமில்லாது மணந்தவர்கள் பிறக்கு முன்மே இறந்தவராவார்
  • ஆர்வமில்லாத உழைப்பு எண்ணெய் இல்லாத விளக்கு
  • அறிவில்லாத முனைப்பு மூடி இல்லாத விளக்கு
  • இரக்கம் இல்லாதவனுக்கு கொடுக்க வராது
  • ஈடுபாடு இல்லாதவனுக்கு படிப்பு வராது
  • உறக்கம் இல்லாதவனுக்கு அமைதி வராது
  • உழைப்பு இல்லாதவனுக்கு எதுவும் வராது
  • நாம் ஒரு கார்யத்தை விரும்பி செய்தால் மகிழ்வோம்
  • நாம் செய்யும் கார்யர்த்தை விரும்ப ஆரம்பித்தால் மிக மகிழ்வோம்
  • சுறுசுறுப்பு என்பது அமைதியானவரது விவேகம்
  • பரபரபப்பு என்பது அவசரப்பட்ட வந்து அடங்காத வேகம்.             
முனைப்பு
  • கற்று விட்டோம் என்ற களைப்பு உள்ளவரெல்லாம் முதியவரே
  • கற்க வேண்டும் என்ற துடிப்பு உள்ளவரெல்லாம் இளையவரே
  • முகவரியில்லாத கடிதங்கள் வேண்டியவரை சேர்வதில்லை
  • முனைப்பில்லாத மனிதர்கள் முன்னேற்றம் அடைவதில்லை
  • கடையில் நின்று இனிப்புக்காக ஏங்கும் குழந்தையாய் வளராதே
  • கடலில் சென்று மக்களுக்காக போராடும் தலைவனாக உயர்ந்திடு
  • ஏற்றுக் கொள்ளாமல் எதிர்ப்பவர்கள் தரும் துயரம் சிறிது
  • ஏற்றுக் கொள்ளாமல் சம்மதிப்பவர்கள் தரும் துயரம் பெரிது
  • தானே உலகைச் சுற்றி வருபவன் தலைவனாவான்
  • வீணே ஊரைச் சுற்றி வருபவன் கழுதையாவான்
  • மண்ணுக்குள் கிடப்பதுவும் மகுடத்தில் மிளிர்வதுவும் முன் விளைப்பயனே
  • மண்ணில் சிறப்பதுவும் மனிதனாக உயர்வதுவும் நம் செயலில் பயனே
  • ஒரு ஙாலை மடிக்கும் போது அறிவு மட்டுமே கிடைக்கிறது
  • ஒரு செயலை முடிக்கும் போது அனுபவமும் கூட கிடைக்கிறது
  • விதியும் சதியும் நடந்தால் பசுமைகளும் பாலையாகும்
  • நதியும் மதியும் நடந்தால் பாலைவனமும் சோலைவனமாகும்
  • நன்றாகப் பாடுபவன் ஊருக்கே தெரிந்தவனாவன்
  • நன்றாகப் பாடுபடுப‌வன் உலகுக்கே தெரிந்தவனாவான்
  • நேரமும் காற்றும் இளமைப்பொழுதும் காத்திருப்பதில்லை
  • வாய்ப்பும் வாகனமும் நொடிப்பொழுதும் காத்திருத்ததில்லை                
ஆற்றல்

  • வினை தெரிந்து உரைத்தல் பெரிதல்ல‌
  • அதை நன்கு ஆற்ற்லே ஆற்றலெனப்படும்
  • உள்ளத்து எழுச்சியும் உவகையும் ஊக்கமும்
  • தளராத முயற்சியும் தகுந்தவர் சார்பு மிகுந்தால் விதியையும் வெல்லலாமே
  • அவித்த கிழங்கை வெட்டுவது வீரமாகாது
  • அடுத்தவர் திறமையை திருடுவது தர்மமாகாது
  • கொடுத்தால் மழை போல கொட்ட வேண்டும்
  • எடுத்தால் கடல் போல எடுக்க வேண்டும்
  • விடுத்தால் அம்பு போல பாய வேண்டும்
  • அழித்தால் தீ போல அழிக்க வேண்டும்
  • எழுத்தறியாதவன் எழுத்தைப் படுக்கும் போது குருடன்
  • இசையறியாதவன் இசையைக் கேட்டும் போது செவிடன்
  • கொடுத்தறியாதவன் ஏழைவந்து கேட்கும் போது முடவன்
  • கொள்கையில்லாதவன் சபை வந்து பேசும் போது ஊமன்
  • அறிவின் நீளமே ஆற்றல் வளரும் 
  • செறிவின் நீளமே போற்றல் வளரும்
  • அன்பின் நீளமே சொந்தம் பெருகும்
  • பண்பின் நீளமே பந்தம் பெருகும்
  • ஆற்றல் என்பது நம்மை போற்றி வந்தவரை காப்பது
  • போற்றல் என்பது நம்மை வாழ வைத்தவரை வணங்குவது
  • துயரம் ஒரு தடைகல் தூக்க முடியாது தாண்டி செல்வோம்
  • துன்பம் ஒரு நதிநீர் மூழ்க கூடாது நீந்தி செல்வோம்

கடமை

                                                                      கடமை




  • கதவைத் திறந்து வை காற்று தானே வரும்
  • கடமையை செய்து வை புகழ் தானே வரும்
  • கயமை என்பது மற்றவர் துன்பத்திலே இன்பம் தேடுவது
  • கடமை என்பது மற்றவர் இன்பத்திலே இன்பம் தேடுவது
  • கயமைக்கு உடனே பலன் கிடைக்கும் நெடுநாள் சிறையிருக்க வேண்டும்
  • கடமைக்கும் பலன் கிடைக்கும் நெடுநாள் காத்திருக்க வேண்டும்
  • கள்ளமில்லாதவன் செல்வம் வளர் பிறை போல வளரும்
  • கடைமையறியாதவன் வளமை தேய் பிறை போலத்தேயும்
  • சிலர் வாழ்க்கையை கடமைக்காக சலித்து வாழ்கின்றனர்
  • சிலர் வாழ்க்கையையே கடமெயென அர்ப்பணித்து வாழ்கின்றனர்
  • உரிமையை இழந்தவன் அடிமை என இகழப்பவொன்
  • கடமையைச் செய்யாதவன் கயவன் என இழிவுபவொன்
  • ஒரு செயலை செய்து விடுவதால் சில துயரம் வரும்
  • ஒரு செயலை செய்யாமல் விடுவதால் பெருந்துயரம் வரும்
  • விளையாட்டை விளையாட்டாக விளையாடி மகிழுங்கள்
  • கடமையை கண் போல கருத்தோடு செய்யுங்கள்
  • கண்ணோடு பிறக்கும் 
  • ஒவ்வொரு மனிதனுக்கும் உலகில் ஒரு காட்சியிருக்கிறது
  • கையோடு பிறக்கும் 
  • ஒவ்வொரு உயிருக்கும் உலகில் ஒரு வேலையிருக்கிறது
  • ஒரு துளி உதிரம் போகப்போக உன் உயிரும் போகிறது
  • ஒரு துளி நேரம் வீணாகப் போக உன் உதிரம் உதிர்கிறது
பொறுப்பு

  • முணுமுணுப்பவன் வேலையை முழுமையாக முடிப்பதில்லை
  • தொணதொணப்பவன் வேலையை செய்யவும் விடுவதில்லை
  • நாளைக்காக  இன்று வருத்தப்படுவது சோர்வு தரும்
  • நாளைக்காக இன்று திட்டமிடுவது தீர்வு தரும்
  • ஒரு நல்ல இதயம் ஓராயிரம் தலைகளுக்கு ஈடாகாது
  • ஒரு நல்ல செயல் ஓராயிரம் வார்த்தைகளுக்கு ஈடாகாது
  • பொறுப்புடன் பொன்னான வேலை செய்பவர் அமைதியாயிருப்பார்
  • வெறுப்புடன் வீணான வேலை செய்பவர் ஆர்ப்பரிப்ப்பார்
  • புது மனைவியின் பளபளப்பும் புது பதவியின் சலசலப்பும் சிலநாளே
  • புது பணக்காரன் மினுமினுப்பும் 
  • புது வேலைக்காரன் சுறுசுறுப்பும் சிலதானே
  • அறிஞர்கள் ஒரு செயலைப் பற்றி விவாதித்தே கெடுக்கிறார்கள்
  • அறிவாலிகள் ஒரு செயலை யோச்க்காது செய்து கெடுக்கிறார்கள்
  • பேசக் கூடாத நேரத்தில் பேசுவதும் குற்றம்
  • பேச வேண்டிய நேரத்தில் பேசாததும் குற்றம்
  • சந்தர்ப்பத்தால் விழுபவன் விதி வழி போகும் ஓடம்
  • சங்கல்பத்தால் வெல்பவன் மதி வழி போகும் பாடம்
  • பூவினது உயர்வு பொய் கையுள் ஆளத்தளவே
  • உள்ளமது கலங்காத ஊக்கமே ஒருவனது ஆக்கத்தளவு
  • பொறுப்பை விரும்பும் திறமையே அவனை அளவிடும் அளவீடு
  • புகழை விரும்பும் முனைப்பே அவனை மதிப்பிடும் மதிப்பீடு
கவனம்

  • நெருப்பால் அழியும் கயிற்றுப் பாலம் அல்லவோ
  • விழித்துக் கொண்டிருந்தவர் எல்லாம் பிழைத்துக் கொள்வார்
  • நடக்கும் போது விழுவது காலின் குற்றமல்ல கண்ணின் குற்றமே
  • முயற்சியின் போது தோற்பது செயலின் குற்றமல்ல மனிதனின் குற்றமே
  • நிலவுக்கு பறந்து செல்ல ஆசைப்படுங்கள் ஆனால்
  • பூமியில் கால் ஊன்றி வாழப்பழகுங்கள்
  • குறுக்கு வாட்டில் தலையாட்டியதால் தோற்றுப் போனவர் ஏராளம்
  • நெடுக்கு வாட்டில் தலையாட்டியதால் மாட்டி கொண்டவர் ஏராளம்
  • வாழும் போது கண்களை மூடிக்கொண்டே வாழ்கிறோம்
  • இறக்கும் போது கண்களை திறந்து கொண்டே இறக்கிறோம்
  • நடக்கும் போது வானம் பார்க்காதே தரையைப்பார்
  • கற்கும் போது வாயைப் பார்க்காதே கைளயப்பார்
  • குளக்கரை இருக்கும் கொக்கென அடங்கி
  • கால நேரம் பார்த்து இருப்பார் கர்ம வீரர்
  • ஆத்திரத்தில் முடிவெடுத்தது எல்லாம் சாவகாசமாக வருத்தப்படு
  • அவசரத்தில் முடித்தது எல்லாம் சர்வநாசமாகப் போய்விடும்
  • கவனமாக கேட்கத் தெரிந்தால் முட்டாளின் பேச்சுக் கூட புரியும்
  • கவனமாக செய்யத் தெரிந்தால் முடியாத செயல் கூட முடியும்
  • கார்யத்தை கெடுப்பவர்கள் வெளியில் மட்டும் இல்லை
  • கவனத்தை சிதறடிப்பது வெளியில் இருந்து வருவதில்லை
காலம்

  • சிரிக்க மறந்தவன் சீரழிந்து சிரமப்படுவான்
  • சீக்கிரம் எழுபவன் சிகரத்தை தொடுவான்
  • கண்மூடி உறங்கி விட்டு காலத்தை குறை சொல்வதேன்
  • வாய் மூடி வணங்கி விட்டு மற்றவரை குற்றம் சொல்வதென்ன‌
  • கப்பல் போல நாம் காலத்தை நடத்திச் சென்றால் புகழடைவோம்
  • கழுகு போல நம்மை காலம் தூக்கிச் சென்றால் இகழடைவோம்
  • காலத்தை பராமரிக்க கற்ற பின் மனிதனானான்
  • காமத்தை பாரமரிக்க கற்றவனே அறிஞனானான்
  • காலத்தை கடத்துபவர் புழுதியில் கிடப்பார்
  • காலத்தை நடத்துபவர் புகழில் நடப்பார்
  • காலத்தை விட காயத்தை ஆற்றும் சிறந்த மருத்துவனில்லை
  • காலத்தை விட பாடத்தை சொல்லும் சிறந்த ஆசானில்லை
  • நேற்று காலத்தை நான் உதாசீனம் செய்தேன்
  • இன்று காலமே என்னை உதாசீனம் செய்கிறது
  • காலம் வரும் வரை கழுகு போல அமைதியாக காத்திருங்கள்
  • வாய்ப்பு வரும் போது புயல் போல புறப்பட்டு செல்லுங்கள்
  • காலத்தின் கால்கள் திரும்பி நடப்பதில்லை நடந்ததை மறந்து விட்டு
  • கடிகாரத்தில் கால்கள் திரும்பி சுழல்வதில்லை கடந்ததை துறந்து விடு
  • துயர் என்பது நம் வீட்டு எல்லை வரட்டும் என சிந்திக்க வேண்டும்
  • துயரின் வீட்டு எல்லை சென்று நாம் சிந்திக்க வேண்டும்
வாய்ப்பு

  • மக்கு போல வந்த வாய்ப்பை நழுவ விட்டவன் ஏமாளி
  • கொக்கு போல வரும் வாய்ப்புக்கு தவம் இருப்பவன் அறிவாளி
  • அலைகள் கூட ஆற்றல் உள்ளவன் பக்கமே
  • அதிட்டம் கூட அறிவு உள்ளவர் அருகிலே
  • வாய்ப்பு வரும் போது வாய் திறந்து பேசாதவர் மனாதுக்குள் அழுவார்
  • வாய்ப்பு வரும் போது கை நீட்டி பிடிக்காதவர் காலத்துக்கும் அழுவார்
  • வாழ்வென்பது விளையாட்டு எதிர் வரும் துயரை பலமாக அடி
  • வாழ்வென்பது விளையாட்டு வாய்ப்பு வரும் போது இலாவகமாக பிடி
  • வல்லவனுக்கு பதவி மறுக்கப்பட்டாலும் பலருக்கு பதவி தரும் தலைவனாவான்
  • நல்லவனுக்கு உதவி மறுக்கப்பட்டாலும் பலருக்கு உதவி தரும் அறிஞனாவான்
  • அதிட்டம் கண்ணடித்த போது உறங்கினான்
  •        அவள் அடுத்தவனுடன் போய் விட்டாள்
  • அதிட்டம் கதவை தட்டிய போது உறங்கினான்
  •         அவள் அடுத்த வீட்டுக்குப் போய் விட்டாள்
  • திறமையுள்ளவர் புறக்கணிக்கப்பட்டால் தீமை வளரும்
  • வறுமையுள்ளவர் வஞ்சிக்கப்பட்டால் வன்முறை வளரும்
  • வாங்காமல் வருவது வம்பு மட்டுமே
  • கேட்காமல் கிடைப்பது வசை மட்டுமே
  • நிர்ப்பந்தங்கள் வரும் போது முதுகு வளைந்து விடாதே
  • சந்தர்பங்கள் வரும் போது கதவு சாத்தி விடாதே
முன்னேற்றம்


  • முடவனுக்கு கல் தடையாகும் முயல்வனுக்கு அது படியாகும்
  • பயந்தவனுக்கு துயரம் துக்கமாகும் வியந்தவனுக்கு அது ஞானமாகும்
  • ஏழ்மை கல்வித்கு தடையென்பது
  •  உண்மையானால் அறிஞரே இருக்கமுடியாது
  • வறுமை வாழ்வுக்கு தடையென்பது 
  •  உண்மையானால் உலகே இருக்கமுடியாது
  • எதிர்காலமென்பது முகபக்கம் அதை பார்ப்பவர்க்கு தடுமாற்றம் இல்லை
  • இறந்தகாலமென்பது முதுகுபக்கம் இதை பார்ப்பவர்க்கு முன்னேற்றம் இல்லை
  • தொண்டனாக வாழ்ந்து சிறந்தவனே நல்ல தலைவானாவான்
  • தொழிலாளியாக வாழ்ந்து உயர்ந்தவனே நல்ல முதலாளியாவான்
  • கடமைகளை முடித்து வா
  • உரிமை உன் மணைவி போல காத்திருக்கு
  • தகுதிகளை சேர்த்து வா
  • பதவி உன் செருப்பு போல காத்திருக்கு
  • இளைஞனின் வேகம்
  • முதுமையின் விவேகம் உள்ள தொழிலாளிவிரவில் முதலாளியாவார்
  • ஆண்மையின் வேகம்
  • அறிஞனின் விவேகம் உள்ள தொண்டன் விரைவில் தலைவணாவான்
  • உழைக்காமல் உயர நினைப்பது சாவியில்லாது பூட்டை திறக்கும் முயற்சி
  • கற்காமல் வாழ நினைப்பது ரணியில்லாமல் மாடி ஏறும் முயற்சி
  • உயர்ந்த கட்டிடங்கள் ஏற உயர்ந்த ஏணிகள் தேவை
  • உயர்ந்த புகழிள் சிகரங்கள் ஏற உயர்ந்த எண்ணங்கள் தேவை.

தன்னம்பிக்கை

                                                         தன்னம்பிக்கை





  • உன்னை அறிவில்லாதவன் என்று நீ எண்ணுவது தவறு
  • உன்னை அறிவில்லாதவன் என்று பிறர் சொல்வதை நம்புவது பெரும் தவறு
  • தன்னை நம்புபவர் அதிட்டத்தை நம்புவதில்லை
  • தன்னையே நம்பாதவர் அதையும் நம்புவதில்லை
  • விழவது நம் வாடிக்கை
  • வெம்பி நீ அழவதுதான் வேடிக்கை
  • தொழுவது நம் நம்பிக்கை
  • நம்பி நீ எழுவதுதான் தன்னம்பிக்கை
  • மூடனோ முடியாததை முடியும் என்று நினைந்து தோற்கிறான்
  • முடவனோ முடிந்ததை முடியாது எனப் பயந்தே தோற்கிறான்
  • கண்ணிலே நம்பிக்கை இருந்தால் கல்லீலே  தெய்வம் உண்டு
  • கையிலே நம்பிக்கை இருந்தால் வரலாற்றிலே பெயர் உண்டு
  • வெற்றி நிச்சயம் என்ற எண்ணமே வெற்றிக்கு முதல் இரகசியம்
  • தோல்வி நிச்சயம் என்ற அச்சமே தோல்விக்கு மூல காரணம்
  • உங்களது சந்தேகங்களையே சந்தேகித்து விரட்டுங்கள்
  • உங்களின் நம்பிக்கைகளின் மீதே நம்பிக்கை வையுங்கள்
  • என்னாலும் செய்ய முடியும் என்பது நம்பிக்கை
  • என்னால்தான் செய்யமுடியும் என்பது அகந்தை
  • பறக்கத் துணிந்தவருக்கு இறகுகள் பாரமில்லை
  • இறக்கத் துணிந்தவருக்கு மரணம் ஒரு பயமில்லை.                                 


போராட்டம்


  • விமர்சனம் என்பது கடல் பயணத்தின் தடை கல் விலகிச்செல்ல முடியும்
  • வீண்பகை என்பது சாலை பயணத்தின் தடை கல் தகர்த்தே செல்ல முடியும்
  • உரிமை மேல் ஆண்மை பாராட்டாதவர் சாந்தம்
  • பெருமை இல்லாத பிணத்தில் பிறந்ததோர் சாந்தக்குளிரே
  • உன் சுயசக்தியே உனது ஆயுதம் துஞ்சாமல் போராடு
  • உன் சுயபுத்தியே உனது ஆசான் அஞ்சாமல் போராடு
  • மயங்குபவர் மன்னராக முடிவதில்லை
  • தயங்குபவர் தலைவராக இருப்பதில்லை
  • கலங்குபவர் கலைகளில் சிறப்பதில்லை
  • கசங்குபவர் முண்ணனியில் வருவதில்லை
  • எடை இல்லாது விலையில்லை
  • நடை இல்லாது நாட்டியமில்லை
  • படை இல்லாது போருமில்லை
  • தடை இல்லாது வெற்றியுமில்லை
  • காவியினால் மட்டுமே வறுமைக்கு சாவி கிடைக்காது
  • கருணையினால் மட்டுமே ஏழ்மைக்கு தீர்வு கிடைக்காது
  • துடுப்பு இலொலாமல் தோனியில்லை
  • துணை இல்லாமல் பயணமில்லை
  • படி இல்லாமல் ஏணியில்லை
  • அடி வாங்காது ஏற்றமில்லை
  • கடல்கள் மையத்திலிருந்து பல புயல்கள் புறப்படுகின்றன‌
  • இதயத்திலிருந்து பல புரட்சிகள் புறப்படுகின்றன,


மனோசக்தி
  • தண்ணீரை வீணாக்காமல் சேமியுங்கள் நாளை இதை விட வறட்சி வரும்
  • கண்ணீரை வீணாக்காமல் சேமியுங்கள் நாளை இதை விட துயரம் வரும்
  • ஒரு நொடி அழும் போது மரணம் ஓரடி முன்னோறுகிறது
  • ஒரு நொடி சிரிக்கும் போது மரணம் ஒரடி பின்னேறுகிறது
  • கவ்விய கவலையும் துயரும் விட்டு விட்டால்
  • உலகு எல்லாம் சேரினும் நம் முன் தீயிலிட்ட பங்சே
  • சிதைந்த போதும் உரம் உடையோர் பதையார் சிறிதும்
  • புதைப்படும் கணைக்கும் புறம் கொடாது யாணை
  • அண்டத்தையே பிண்டமாக்கும் அழிவு சக்தி அனுவுக்குள்ளே
  • பிண்டத்தையே அண்டமாக்கும் ஆக்க சக்தி ஆன்மாவுக்குள்ளே
  • உள்ளத்திலே உறுதியிருந்தால் கை தொட்ட கல்லும் பொன்னாகும்
  • உடலிலே உழைப்பிருந்தால் காலன் பயமும் மறைந்து போய்விடும்
  • வீரமுள்ள மனிதனை கொல்ல முடியும் தோற்கடிக்க முடியாது
  • விவேகமுள் அறிஞனை விரட்ட முடியும் வீழ்த்த முடியாது
  • நல்ல தொழிலாளியிடம் கடின வேலை தருகிறார் முதலாளி
  • நல்ல இருதயத்திடம் தனது வேலையைத்தருகிறான் இறைவன்
  • தீராத பசியை விட ஒயாத உணவால் மாண்டவர் பலர்
  • ஒயாத உழைப்பை விட தீராத உறக்கத்தில் அழிந்தவர் பலர்
  • துயரத்தின் தீயில் இருந்தே பல மாமேதைகள் கருவானர்கள்
  • துன்பத்தின் சாம்பலில் இருந்தே பல மாமனிதர்கள் உருவானர்கள்


மனோதிடம்


  • குளிரிலும் கோடையிலும் சமமாக இருப்பது உடலின் வெப்பம்
  • குறையிலும் நிறையினும் சமமாக வாழ்வது மனிதின் நுட்பம்
  • துயரங்கள் சிலரை சுட்ட எஃகு போல உறுதியாக்குகிறது
  • தோல்விகள் சிலரை சுட்ட கடுகு போல சிதைத்து விடுகிறது
  • உடல் தளர்வது தோலில் ஏற்படும் காயம் போல‌
  • உளம் தளர்வது எலும்பில் ஏற்படும் முறிவு போல‌
  • பலமில்லாதவர்கள் பாதையின் கற்கள் தடைக்கற்கள்
  • பலமுள்ளவர்கள் பாதையின் தடைகள் படிக்கற்கள்
  • இத்தனி உலகிலே எத்தனை துயர் கண்டாலும் அத்தனையும்
  • நம் அழுக்கையெரித்து நல் சுவர்ணமாக சோதிக்கத்தானே
  • பிறவிக்குருடனின் பால் நிறம் கொக்கு போல என்றாணம் ஒரு மூடன்
  • சற்றே பாதையாதிருந்து பாரும் எதிலும் பேரின்பமே திகழும்
  • துயரென்பது நரி போல ஒடதுடத்துரத்தும் நின்றதும் நின்று விடும்
  • துன்பமென்பது நிழழ்போல ஒட ஒடத் தொடரும் நின்றதும் நின்று விடும்
  • கையகலமே அவன் கொடை
  • கருணை மனத்தின் அகலமே மாண்பு
  • கண்ண கலமே அவள் கல்வி
  • கலங்காத இதயத்தின் அகலமே அவன் வாழ்வு
  • திறமையான வாளுக்குத் தேவை உறுதியான கைப்பிடி
  • வலிமையான கைகளுக்குத் தேவை உறுதியான இருதயம்


அஞ்சாமை
  • தங்கத்தை தீயிட்டாலும் அதன் தரம் குணம் மாறுவதில்லை
  • அங்கத்தை தீயிட்டாலும் ஆன்றோர் பொய் பேசுவதில்லை
  • இழப்பு இல்லாமல் ஒரு லாபம் அடைய முடியாது
  • ஆபத்து இல்லாமல் ஒரு வெற்றி அடைய முடியாது
  • அஞ்சாமை என்பது தெளிந்த அறிவின் விளைவாகும்
  • துஞ்சாமை என்பது துணிந்த துணிவின் விளைவாகும்
  • அஞ்சாமையுடன் நெஞ்சிலிருந்து வீரத்திருமகள் கட்டியனைப்பான்
  • துஞ்சாமையுன் விழியிலிருந்தால் வெற்றித்திருமகள் வீட்டிலிருப்பான்
  • உழைப்பதற்கு முதுகு வளை
  • எதிர்ப்பவர்க்கு முதுகு வளைக்காதே
  • அறிஞருக்கு தலை வணங்கு
  • அறிவானுக்கு தலை குணியாதே
  • வளைந்து நெளிந்து குழைந்து தளர்ந்து வாழ்வது புழுவின் வாழ்க்கை
  • நிமிர்ந்து துணிந்து பாய்ந்து வளர்ந்து வெல்வது புலியின் வாழ்க்கை
  • கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாத கால்கள் ஊர் போய்ச் சேரும்
  • வில்லுக்கும் சொல்லுக்கு அஞ்சாத காதுக்கு புகழ் வந்து சேரும்
  • வளைந்து கொடுப்பவர் எந்தக் கதவுக்குள்ளும் நுழைந்து விடுவார்
  • நிமிர்ந்து நடப்பவர் எந்தத் தடையையும் தாண்டிவிடுவார்
  • அஞ்சாமை என்பது ஆண் முகத்தில் மீசை
  • ஆணவம் என்பது பெண் முகத்தில் மீசை


கொள்கை

  • பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கொள்கை வைக்கிறான்
  • பிறக்கும் ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஒரு செய்தி அனுப்புகிறான்
  • அற்புதமான இலட்சியத்திற்காக உதவியை உதறி விடு
  • அற்பனுன இலட்சியத்துக்காக இலட்சியத்தை உதறி விடாதே
  • அற்ப தூசுகள் காற்று வரும் போது பறக்கலாம் என காத்திருப்பார்கள்
  • அற்ப மனிதரும் அதிட்டம் வரும் போது ஆடலாம் என காத்திருப்பார்கள்
  • ஆடையை விட்டபின் கிடைத்தது வெற்றியுமல்ல‌
  • கொள்கையை விட்ட பின் அடைந்தது கோட்டையுமல்ல‌
  • கொள்கை என்பது பழமைக்கும் புதுமைக்கும் இடையே தடையாகக் கூடாது
  • குறிக்கொள் என்பது பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக வேண்டும்
  • துக்கத்துக்கு அழுவது முகம் துடைப்பது போல ஒரு பழக்கமாகி விட்டது
  • கொள்கையை பேசுவது மூக்கு சிந்துவது போல ஒரு வழக்கமாகி விட்டது
  • வெற்றி தொடர்ந்த போது பாதை மாறாதே
  • தோல்வி தொடர்ந்த போதும் கொள்கை மாறாதே
  • கொள்கை பிடிப்புள்ளவர் வாழ்வு நெடும் பயணத்தின் நீளம்
  • குரங்கு பிடிப்புள்ளவர் வாழ்வு செக்கு மாட்டின் வட்டம்
  • ஆடையை அவிழ்த்தவருக்கு பரிசு என்றால் யார் வெல்லுவார் தெரியாதா
  • கொள்கையை விட்டவருக்கு பதவி என்றால் யார் வெல்லுவார் தெரியாதா
  • இலக்கு இல்லாத கப்பல்கள் கரை சேர்வதில்லை
  • இலட்சியம் இல்லாத மனிதர்கள் வெற்றி காண்பதில்லை

நேரம் நல்ல நேரம்

                                                                நேரம் நல்ல நேரம்



 |
காலம் இயற்கை சொத்து
இந்த உலகில் நேற்று வரை வாழ்ந்த மனிதர்களுக்கு இயற்கை அளித்த சொத்து... ஒரு நாளில் 24 மணி நேரம் தான்.
இந்த உலகில் இன்று வாழும் மனிதர்களுக்கு இயற்கை அளித்த சொத்து... ஒரு நாளில் 24 மணி நேரம் தான்.
இதே போல், இந்த உலகில் இனி வர இருக்கும் அனைத்து மனிதர்களுக்கும் இயற்கை கொடுக்க இருக்கும் சொத்து... ஒரு நாளில் 24 மணி நேரம் தான்.
இந்த காலம், குறிப்பாக ஒரு நாளில் 24 மணி நேரம் என்பது ஒரு வழிப்பாதை.
வாழ்வில் தனி மனிதன் எந்த ஒரு காலக்கட்டத்திலும் நேரத்தை செலவு செய்து விட்டால், வாழ்நாளில் அந்த நேரத்தை எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் திரும்பப் பெற முடியாது.
இதை தெளிவாக உணர்ந்து கொண்டு ஒவ்வொரு இளைஞனும் நேரத்தை பல வேலைகளுக்கு செலவு செய்யும் முன் தெளிவாகத் திட்டமிட்டு, நேரத்தை சேமித்து, உடல் ஆரோக்கியத்தை காக்க மன ஆரோக்கியத்தை வளர்க்க அந்த நேரத்தை செலவு செய்ய வேண்டும்.
வெற்றி ... தோல்வி
தனி ஒரு மனிதனின் வாழ்க்கையில் வெற்றி மற்றும் தோல்வி அவனது முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்தின் அளவைப் பொறுத்து இல்லை. மாறாக, ஒரு தனி மனிதன் தன்னுடைய வாழும் காலத்தில் திட்டமிட்டு காலத்தை செலவிடும் முறையில்தான் உள்ளது.
காலத்தை சரியான முறையில் திட்டமிட்டு ஒரு இளைஞன் பயன்படுத்தினால் , மனித வாழ்வில் வெற்றி மற்றும் மேலும், பலப்பல மேன்மைகள் அடைவது நிச்சயம்.
அதே சமயம் ஒரு இளைஞன் காலத்தை தவறான முறையில் திட்டமிடாமல் பயன்படுத்தினால் , வாழ்வில் தோல்வி நிச்சயம்.
காலத்தே பயிர் செய்
இளைஞனே ! சற்று சிந்தித்துப் பார்த்தால் புரியும். மனித வாழ்க்கையே நம் கையில் என்பதைவிட காலத்தின் கையில் என்பது தெளிவாகப் புரியும்.
இதனால் தான் நம் முன்னோர்கள் பல அனுபவ மொழிகளை சொல்லி உள்ளார்கள். அவைகள் 
காலத்தே பயிர் செய்
காலம் பொன் போன்றது
காலமும், கடல் அலையும், யாருக்காகவும் காத்து இருக்காது.
காலத்தின் அருமை
இன்றைய 114 கோடி இந்திய மக்களில் 57 கோடி பேர் இளைஞர்கள். இந்த 57 கோடி இளைஞர்களில் எத்தனை பேர் காலத்தின் அருமையை உணர்ந்து உள்ளனர் ?
பதில் விரல் விட்டு எண்ணி விடலாம். இதுதான் எதார்த்த உணமை
காலத்தின் அருமையை உணர்ந்தால், TV முன் உட்கார்ந்து பொழுது போக்கு என்ற போர்வையில் இன்றைய இளைஞர்கள் பல மணி நேரம் வீணடிக்க மாட்டார்கள்.
காலத்தின் மேன்மை
இன்றைய இளைஞர்களில் பலர் இளமை முறுக்கில் காலத்தின் அருமை புரியாமல், காலத்தின் மேன்மையை உணராமலும் இளமை காலத்தை வீணடிக்கிறார்கள்.
இளமை காலம் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளும் காலம்.
இதை உணாராமல், இன்றைய இளைஞர்கள் பொழுது போக்குக்காக மாதம் ஒரு முறை மற்றும் இரு முறை பார்க்க வேண்டிய திரைப்படங்களை கணிசமான நேரம் செலவு செய்து பார்க்கின்றனர். 
நேரப் போராட்டம்
இந்திய சாதாரண இளைஞனுக்கு உடல் ஆரோக்கிய பயிற்சி செய்ய திறந்த மைதானம் மற்றும் ஜிம்முக்கு போக நேரம் இல்லை !
இந்திய சாதாரண இளைஞனுக்கு பேட்மிட்டன், டென்னிஸ், வாலிபால் போன்ற பல விளையாட்டுகளை விளையாட நேரம் இல்லை !!
இந்திய சாதாரண இளைஞனுக்கு பலப்பல நல்ல அறைவை தூண்டும் புத்தகங்கள் படித்து, அறிவை வளர்த்துக் கொள்ள நேரம் இல்லை !!
இன்றைய இளைஞனுக்கு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க நேரம் இல்லை ! மன ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்ள நேரம் இல்லை !!
நேரப் போராட்டம்
தினம், தினம் ஒரு பெட்டிக் கடைக்கு 50க்கும் மேற்பட்ட செய்தித்தாள்கள் வருகின்றன. ஆனால், இன்றைய இந்திய இளைஞனுக்கு இரு செய்தித்தாளை கூட முழுமையாக படிக்க நேரம் இல்லை.
அவ்வளவு ஏன்?
ஒரு செய்தித்தாளில் மேம்போக்காக சில தலைப்புகளைக் கூட படிக்க நேரம் இல்லை.
இந்திய இளைஞன் தினம், தினம் பல வேலைகளை திறம்பட செய்ய நேரத்தோடு போராடிக் கொண்டே இருக்கிறான். இந்த நேரப் போராட்டம் இளமைக் காலத்தில் ஆரம்பித்து, வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 6 வயது முதல் 60 வயது வரை நேரப் போராட்டம்.
வாழ்க்கை அஸ்திவாரம்
ஒரு பல் மாடி கட்டிடம் கட்ட ஆரம்பிக்கும் போதே, பின்னாளில் உயர இருக்கும் உயரத்தை கட்டிடத்திற்கு போடப்படும் அஸ்திவாரத்தைக் கொண்டே கண்க்கிட்டுவிடலாம்.
அதே போல், ஒரு மனிதன், வாழ்க்கையில் அடைய இருக்கும் வளர்ச்சி, அவனுடைய இளமைக் காலத்தில் அதிலும் குறிப்பாக முதல் 30 ஆண்டு கால வாழ்க்கையில் நேரத்தை எவ்வாறு முறையாக முறைப்படுத்திக் கொண்டு செயல்படுகிறான் என்பதில் தான் உள்ளது.
உண்மை....
"உண்மை என்பது எளிது,
எளிமையாக இருப்பதால் உண்மையை 
மக்கள் மறந்துவிட்டார்கள்"
- சுவாமி விவேகானந்தர்.
தன்னடக்கம்,
தன் நம்பிக்கை,


 தன் வழி......

ஒளவையாரின் ஆத்திச்சூடி

                                                 ஒளவையாரின் ஆத்திச்சூடி




1. அறம் செய விரும்பு

எப்பொழுதும் நல்ல காரியங்களை மட்டுமே செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். மறந்தும் மனதால்கூட மற்றவர்களுக்கு கெடுதல் தரும் விஷயங்களைப் பற்றி நினைக்கக் கூடாது.

2. ஆறுவது சினம்
கோபம் கொள்ளக் கூடாது. கோபத்தைத் தணிக்க வேண்டும். கோபத்தைக் குறைக்க வேண்டும். கோபம் வரும்போது பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. கோபம் குறைந்த பிறகு ஆற அமர யோசித்து எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். எனவே கோபத்தைக் குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. கோபம் கொள்ளாமல் இருப்பது அதைவிட சிறப்பாக இருக்கும்.

3. இயல்வது கரவேல்
நம்மால் இயன்றதை ஒளிக்காமல் மறைக்காமல் செய்ய வேண்டும். செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு அதை ஏன் மறைக்க வேண்டும்? அது மட்டுமல்ல. செய்ய நினப்பதை உடனே செய்துவிட வேண்டும். அதை ஒத்திப் போட்டால் பிறகு அதை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக் கூடும். எனவே நம்மால் முடிந்ததை உடனடியாக செய்து விட வேண்டும். அதையும் யாருக்கும் தெரியாமல் மறைக்காமல் செய்து விட வேண்டும்.

4. ஈவது விலக்கேல்
பிறருக்கு உதவி செய்வதைத் தடுக்கக் கூடாது. அதாவது நம்மால் பிறருக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை, மற்றவர்கள் பிறருக்கு செய்யும் உதவியை செய்ய விடாமல் தடுக்கக் கூடாது.

5. உடையது விளம்பேல்
உன்னிடம் இருக்கும் நன்மை தீமைகளை பிறரிடம் கூறாதே. உன்னிடம் சில நல்ல குணங்களும் இருக்கும். சில கெட்ட குண்ங்களும் இருக்கும். நல்ல குண்ங்களைப் பற்றி கூறி பெருமை பீற்றிக் கொள்ளவும் கூடாது. கெட்ட குணங்களைப் பற்றி கூறி நம்மை சிறுமைப்படுத்திக் கொள்ளவும் கூடாது.

6. ஊக்கமது கைவிடேல்
எந்த ஒரு செயலில் ஈடுபடும்போதும் இடையில் சில தடங்கல்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அந்த மாதிரி நேரங்களில் நாம் நம் மனதளவில் உற்சாகத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். நம் தைரியத்தைக் கைவிட்டு விடக்கூடாது. உடல் அளவில் இருக்கும் தைரியத்தை விட மனதளவில் கொள்ளும் தைரியம் வேகத்தையும் கொடுக்கும். வெற்றியையும் கொடுக்கும். ஆகவே எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும்.

7. எண் எழுத்து இகழேல்
எண்கள் சம்பந்தப்பட்ட கணிதம், எழுத்துகள் சம்பந்தப்பட்ட இலக்கியம் இவை இரண்டும் நம்முடைய இரண்டு கண்களைப் போன்றவை. இவற்றை இகழ்ந்து ஒதுக்கக்கூடாது. எந்த ஒரு பொருளையும் நாம் பார்க்கும்போதும் நம்முடைய இரண்டு கண்களையும்தான் பயன்படுத்துகிறோம். ஒரு கண்ணால் பார்த்தால் ஒரு பாதியைத்தான் காண முடியும். ஆகவே கணிதம், இலக்கியம் இவை இரண்டையுமே இகழ்ந்து ஒதுக்கக் கூடாது.

8. ஏற்பது இகழ்ச்சி
பிறரிடம் போய் யாசிப்பது இழிவாகும். சிலர் வீறாப்பாக பேசும்போது, ’நான் பிச்சை எடுத்து சாப்பிட்டாலும் சாப்பிடுவேனே தவிர உன்கிட்டே கையேந்த மாட்டேன்’ என்று சொல்வதை கேட்டிருப்போம். பேச்சுக்கு வேண்டுமானால் அப்படி பேசலாம். பிறரிடம் சென்று பிச்சை எடுத்து சாப்பிடுவது மிகவும் இழிவான ஒரு செயலாகும்.

9. ஐயம் இட்டு உண்
பிச்சை கேட்பவர்களுக்கு உணவு கொடுத்த பின்னர் சாப்பிட வேண்டும். பிச்சை எடுத்து சாப்பிடுவது இழிவான செயல்தான் என்றாலும் அவ்வாறு பிச்சை கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அவர்களுக்கு கொடுத்து விட்டு பிறகு மீதி இருப்பதை நாம் சாப்பிடுவதுதான் நல்ல செயலாகும்.

10. ஒப்புரவு ஒழுகு
உலக அனுபவத்தை அறிந்து அதற்கேற்ப நடந்துகொள். ஊரோடு ஒத்துப் போ! என்று சொல்லக் கேட்டிருப்போம். நம்மை சுற்றி சில நல்ல விஷயங்களும் சில கெட்ட விஷயங்களும் நடந்து கொண்டேதான் இருக்கும். அந்தந்த சூழ்நிலைக்கேற்ப நாம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.

11. ஓதுவது ஒழியேல்
நேரம் கிடைக்கும் போதெல்லாம் படியுங்கள். படிப்பதை மட்டும் விட்டுவிடவே கூடாது. செல்வம் இருக்கும் இடத்தில்தான் சிறந்தது. ஆனால் நாம் கற்றிருக்கும் கல்வியானது நாம் செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பைக் கொடுக்கும். அதோடுமட்டுமில்லை நாம் கற்றதை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுப்பது இன்னும் நல்லது. உங்களுக்கு ஒன்று தெரியுமா?  நாம் நமது மூளையின் இரண்டு சதவீத அளவைத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

12. ஔவியம் பேசேல்
மற்றவர்களைப் பற்றி பேசும்போது பொறாமையோடு பேசக் கூடாது. அவ்வாறு பேசுவதால் ந்ம்மை அறியாமலே அவர்களை நமது எதிரியாக உருவாக்கி விடுகிறோம். போட்டி இருக்கலாம். ஆனால் பொறாமை இருக்கக்கூடாது. போட்டி இருந்தால் அங்கே ஆரோக்கியமான வளர்ச்சி இருக்கும். பொறாமை இருந்தால் அங்கே நிச்சயமாக அழிவுதான் இருக்கும். பொறாமை நம்மை அழித்து விடும். எனவே அடுத்தவர்களைப் பற்றி பெசும்போது பொறாமையை தவிர்த்து பெருமையோடு பேசுவது ந்ன்றாக இருக்கும்.

13. அஃகஞ் சுருக்கேல்
தானியங்களை தராசில் எடை போடும்போது அளவு குறைக்கக் கூடாது. நாம் சூப்பர் மார்க்கெட் செல்லும்போது அங்கே ‘எலக்ட்ரானிக் ஸ்கேல்‘ பார்த்திருப்போம். அதில் எடை போடும்போது துல்லியமாக மில்லி கிராம் அளவில் எடை போடுவர்கள். அதுவே காய்கறி கடையில் கை தராசில் எடை போடுபவர்கள் அளவுக்கு அதிகமாகவே போடுவார்கள். சில இடங்களில் தராசின் எடைக்கற்களின் அடியில் ஓட்டை போட்டோ, அல்லது தராசு தட்டின் அடியில் புளியை ஒட்டி வைத்தோ ஏமாற்றுவார்கள். அவ்வாறு செய்வது பாவம். (இந்த் காலத்தில் பாவ புண்ணியத்தைப் பற்றி யார் பார்க்கிறார்கள்?)

14. கண்டு ஒன்று சொல்லேல்
நம் கண்களால் பார்த்ததைத் தவிர வேறு எதையும் சொல்லக் கூடாது. எந்த ஒரு விஷயமும் நாம் மற்றவர்களிடம் சொல்லியதை, அவர்கள் வேறு ஒருவரிடம் சொல்லும்போது அதற்கு கண், காது, மூக்கு வைத்து ஒரு உருவமாக்கி, ஒன்றை பத்தாக்கிக் கூறி விடுவர்கள். அதனால் பலப்பல பிரச்சினைகள் உருவாகலாம். ஆகவேதான் நாம் ஏதாவது சொல்ல நினைத்தாலும் அதை மிகைப்படுத்தாமல் சொல்ல வேண்டும்.

15. நுப்போல் வளை
பெரும் சூறைக்காற்றிலும்கூட மூங்கில் மரம் தன்னைத்தானே வளைத்து, நெழித்துக் கொண்டு ஒடிந்து விழுந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ளும். தமிழ் எழுத்துக்களில் 'ங' என்ற எழுத்தைப் போல அனைவரையும் இணைந்து செல்ல வேண்டும். அவ்வாறு இருந்தால் மற்றவர்களையும் பகைத்துக் கொள்ளாமல் நம்மையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

16. சனி நீராடு
நம் உடலின் வெப்பத்தைத் தணிக்க வாரம் ஒரு முறையாவது தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். வாரக் கடைசி நாளான சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டால் அடுத்த வாரம் முழுவதும் சுறுசுறுப்பக இருக்கலாம்.

17. ஞயம்பட உரை
ஒரு விஷயத்தை, அது நல்ல விஷயமோ, கெட்ட விஷயமோ, அதிர்ச்சியான விஷயமோ, துக்க விஷயமோ, அதை மற்றவர்களிடம் கூறும்போது மிகவும் கனிவான முறையில் கூறினால் நன்றாக இருக்கும். அதுவும் அறிவு சார்ந்த விஷயங்களைக் கூறும்போது இன்னும் இனிமையான, கனிவான முறையில் கூறினால் வேகமாக சென்றடையும்.

18. இடம்பட வீடு எடேல்
தேவைக்கு அதிகமாக வீட்டைப் பெரிதாக அமைக்காதே. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அது நம் வீட்டுக்கும் பொருந்தும். வீட்டைக் கட்டிப் பார் & கல்யாணம் பண்ணிப் பார் என்பார்கள். சுப விரயமான வீடு ஒரு வகையில் சேமிப்பு என்றாலும், அகலக்கால் வைக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. கை மீறி கடன் படாமல் தேவையான் அளவுக்கு கட்டிக் கொள்வது மிகவும் நல்லது. கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன். அந்த நிலை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

19. இணக்கம் அறிந்து இணங்கு
ஒருவருடன் நட்புறவு கொள்ள நினைத்தால், அதற்கு முன் அவர் நல்லவரா? கெட்டவரா? என்பதைத் தீர அறிந்து, அதன் பிறகு நட்பு பாராட்ட வேண்டும். குறிப்பாக பெண்கள் & கண்டதும் காதல் என்பது மிகமிக கேவலமானது. அதனால் பிற்காலத்தில் அவதிபபடப் போவது பெண்கள் மட்டுமே. தராதரம் அறிந்து பழகுவது மிகவும் நல்லது. ஒருவர் நல்லவராயிருப்பாரேயானால் அவரைத் தேடிப்போய் பழகுவது நல்லது. கெட்டவராயிருந்தால் கோடி கொட்டிக் கொடுத்தாலும் அவரது நட்பை ஒதுக்கி விடுவது நல்லது.

20. தந்தை தாய் பேண்
நம்மைப் பெற்ற தாய், தந்தையரைப் பேணிக் காக்க வேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் & இவர்களில் முதல் இரண்டு இடத்தைப் பிடித்துள்ள நம் பெற்றோரை & நம்மை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்திய நம் பெற்றோரை ந(£)ம் கடைசிக் காலம் வரை அவர்களை நன்றாக ஆதரித்து, கவனித்துக்கொள்ள வேண்டும்.

21. நன்றி மறவேல்
ஒருவர் நமக்கு செய்த உதவியை நாம் என்றும் மறக்கக் கூடாது. நாம் மற்றவர்களுக்கு செய்த உதவியை அன்றே அப்பொழுதே மறந்து விட வேண்டும். ஆனல் மற்றவர்கள் நமக்கு செய்த உதவியை எந்த காலத்திலும் மறந்து விடாமல் நன்றி பாரட்ட வேண்டும். அவ்வாறு மறப்பவர்களுக்கு எக்காலத்திலும் மன்னிப்பே கிடைக்காது.

22. பருவத்தே பயிர் செய்.
உரிய காலத்திலே உழுது பயிரிட்டால் விழைச்சல் நன்றாக இருக்கும். ஐந்தில் வழையாதது ஐம்பதில் வழையுமா? தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பர். குழந்தைப் பருவத்திலிருந்தே நாம் கற்றுக் கொடுக்கும் ஒவ்வொரு விஷயங்களும் குழந்தைகள் மனதில் பசுமரத்தாணி போல் ஆழமாக பதியும். அதுவே பிற்காலத்தில் குழந்தைகளை நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் ஆக்கும். சிசு கருவிலிருக்கும்போதே அதன் தாய் தனது எண்ணங்கள் மூலமாக நல்ல விஷயங்களை விதைத்து, பிறகு குழந்தை பிறந்தபின் குரல் வழியாக சொல்லி வளர்த்தால் இன்னும் ஆழமாக பதியும்.

23. மண் பறித்து உண்ணேல்
அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படக் கூடாது. அதிலும் மற்றவருடைய நிலத்தை அபகரித்து அதை மூலம் உண்டு வாழக்கூடாது. மண், பெண், பொன் & இம்மூன்றிலும் ஆசை வைக்கக் கூடாது. அடுத்தவர் இடத்துக்கு ஆசைப்பட்டாலும், அடுத்தவர் மனைவிக்கு ஆசைப்பட்டாலும், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டாலும், அது நம்மை அழித்து விடும்.

24. இயல்பு அலாதன வெயேல்
நம் உடலும் சரி, மனமும் சரி, அவை சில பழக்க வழக்கங்களுக்கு கட்டுப்பட்டிருக்கும். அத்தகைய வழக்கத்துக்கு மாறான காரியத்தைச் செய்யக்கூடாது. உடலைப் பொறுத்தவரை, நேரம் தவறாமல் சாப்பிடுவதும், மனதைப் பொறுத்தவரை பொய் சொல்லாதிருப்பதும் நல்லது. நேரம் தவறி சாப்பிட்டு உடலை கெடுத்துக் கொள்வதும், சொல்லிய ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய் சொல்லி மனதைக் கெடுத்துக் கொள்வதும் தேவைதானா?

25. அரவம் ஆடேல்
பாம்போடு விளையாடினால் என்ன ஆகும்? பாம்பு கடித்தால் விஷம் ஏறி சாவு நிச்சயம். அது போலத்தான் தீயவர்களோடு உறவு வைத்துக் கொண்டால் அதன் பின்விழைவுகள் நிச்சயம் கெடுதலாகத்தான் இருக்கும். ஆகவே தீயவர் நட்பு என்றும் வேண்டவே வேண்டாம்.

26. இலவம் பஞ்சில் துயில்
தரையில் படுத்து தூங்கிப் பாருங்கள்! வெறும் கட்டிலில் படுத்து தூங்கிப் பாருங்கள்! பஞ்சு மெத்தையில் படுத்து தூங்கிப் பாருங்கள்!  இலவம் பஞ்சு மெத்தையில் படுத்து தூங்கிப் பாருங்கள்! எது சுகம்? இலவம் பஞ்சு மெத்தைதானே. அது போலவே நம் மனதையும் மென்மையாக வைத்துக் கொள்ளுங்கள். நமக்கும், நம்முடன் பழகும் மற்றவர்களுக்கும் அது மென்மையாக, இனிமையாக இருக்கும்.

27. வஞ்சகம் பேசேல்
எண்ணம் போல் வாழ்வு என்பார்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது. மனதில் வஞ்சம் வைத்துப் பேசுவது, பொறாமையோடு பேசுவது, கடுப்புடன் பேசுவது & இவையெல்லாம் மற்றவர்களிடம் நம்மைப் பற்றிய தவறான எண்ணங்களைத்தான் உருவாக்கும். கள்ளம் கபடம் இல்லாமல் பேசுவது குழந்தைத்தனமான அன்பான எண்ணங்களையே உருவாக்கும். ஆகவே மற்றவர்களை உயர்த்தியோ தாழ்த்தியோ பேசாமல் இயல்பாக பேசுவது நலம்.

28. அழகு அலாதன செயேல்
மற்றவர்களை உயர்த்தியோ தாழ்த்தியோ பேசாமல் இயல்பாக பேசுவது நலம். அது போலவே பிறர் இகழந்து பேசக்கூடிய செயலையும் நாம் செய்யாமல் இருப்பதும் நலம். அது மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதற்கு சமமானது.

29. இளமையில் கல்
ஐந்தில் வழையாதது ஐம்பதில் வழையுமா? தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பர். குழந்தைப் பருவத்திலிருந்தே நாம் கற்றுக் கொடுக்கும் ஒவ்வொரு விஷயங்களும் குழந்தைகள் மனதில் பசுமரத்தாணி போல் ஆழமாக பதியும். அதுவே பிற்காலத்தில் குழந்தைகளை நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் ஆக்கும். ஆகவே சிறு வயதிலிருந்தே கல்வியைக் கற்பது மிகச் சிறப்பாகும்

30. அரனை மறவேல்
கடவுளை வணங்க மறக்கக் கூடாது. இன்பமாக இருக்கும் போது மறந்து விடுவதும், துன்பம் வரும்போது மட்டும் கடவுளைத் தேடுவதும் மனித இயல்பு. அவ்வாறு இல்லாமல் எப்பொழுதும் கடவுளை மறக்காமல் வணங்கி வந்தால் கடவுள் அருள் நமக்கு கிடைக்கும்.

31. அனந்தல் ஆடேல்
கடலின் ஆழம் தெரியாமல் உள்ளே இறங்கக் கூடாது. அதோடு கடலின் அலைகள் எப்போது பெரிதாகும்? எப்போது சிறியதாக வரும் என்று தெரியாமல் நீந்தி விளையாடினால் ஆபத்து நேரிடும்.

32. கடிவது மற
கடுமையான சொற்களை பயன்படுத்தி பேசக்கூடாது. பிறருக்கு கோபம் உண்டாகக் கூடிய சொற்களை பயன்படுத்தக் கூடாது. ஒரு நண்பனை உருவாக்குவது மிகவும் கடினம். ஆனால் ஒரு எதிரியை உருவாக்க ஒரு கடுஞ்சொல் போதும். கடுமையான பேச்சு ஒரு நண்பனையே பகைவனாக்கிவிடும். ஆகவே எப்பொழுதும் கடுமையான சொற்களை தவிர்த்து இனிமையாக பேச பழகிக் கொள்ள வேண்டும்.

33. காப்பது விரதம்
மூன்று வேளை பட்டினி கிடந்து மூன்றாவது வேளையில் வயிறு முட்ட சாப்பிடுவது விரதம் அல்ல. பிற உயிர்களுக்கு ஆபத்து நேரிடாமல் அதைக் காத்து இரட்சிப்பதுதான் உண்மையான விரதம் ஆகும். இதை வேறு விதமாக சொல்வதென்றால் பிற உயிர்களை கொன்று தின்னும் வழக்கத்தைக் கைவிட வேண்டும்.

34. கிழமைப் பட வாழ்
தனக்கு மட்டுமின்றி பிறருக்கும் உதவியாக வாழ வேண்டும். ஏதோ பிறந்தோம். ஏதோ வாழ்ந்தோம் என்று இல்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களையும் வாழ வைப்பவனே மனிதன். முதலில் நம்மையும், நம் குடும்பத்தாரையும், பிற சொந்தக்காரர்களையும், அதன் பிறகு நண்பர்களையும் வாழ வைக்க வேண்டும். இறுதியாக முடிந்தால் ஊருக்காக உழைக்கலாம்.

35. கீழ்மை அகற்று
மற்றவர்கள் முகம் சுழிக்கக்கூடிய வகையில் கேவலமான, கீழ்த்தரமான செய்கைகளை செய்யக் கூடாது. அந்த மாதிரியான எண்ணங்களை நம் மனதிலிருந்தே அகற்றி விட வேண்டும்.

36. குணமது கைவிடேல்
நல்ல குணங்களை விட்டுவிடக் கூடாது. நல்ல குணம் என்பது நம்முடன் கூடப் பிறந்தது. பிறருக்கு உதவுவதும், நல்ல விஷயங்களையே நினைப்பதும், செய்வதும்தான் நல்ல குணங்கள். அத்தகைய நல்ல குணங்களைப் பெற்றவர்கள் சிலர் இருப்பதால்தான் இவ்வுலகில் சிறிதேனும் மழையாவது பெய்கிறது. அவர்கள் தங்கள் குணங்களை மாற்றிக்கொள்ளாமல் வாழ வேண்டும்.

37. கூடிப் பிரியேல்
நல்ல நண்பர்களை விட்டு பிரியக் கூடாது. நல்ல குணங்கள், பண்புகள் கொண்டவர்களோடு தொடர்பு கொண்டு நண்பர்கள் ஆன பிறகு எக்காரணம் கொண்டும் அவர்களை விட்டுப் பிரியக்கூடாது. ஆபத்தான காலகட்டங்களில் நமக்கு உதவி செய்ய, நாம் அழைக்காமலே ஓடி வருபவர்கள் நல்ல நண்பர்கள்தான்.

38. கெடுப்பது ஒழி
யாருக்கும் கெட்டது செய்யக்கூடாது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. கெட்டது செய்ய வேண்டாம். கெட்டதை செய்யும் எண்ணத்தை மனதாலும் நினைக்கக் கூடாது. நல்ல எண்ணம் கொண்டவர்கள் மனதில் அத்தகைய எண்ணங்கள் வராது.

39. கேள்வி முயல்
அறிஞர்கள் சொற்களை கேட்டுத் தெரிந்து நடந்து கொள்ள வேண்டும். எவ்வளவு புத்தகங்களைப் பார்த்திருந்தாலும், படித்திருந்தாலும்கூட நல்ல அறிஞர்களின் பேச்சுக்களை ஆவலுடன் காது கொடுத்து கேட்க வேண்டும். அதோடுமட்டுமல்ல & சந்தேகங்களை கேட்டு தெளிந்து அதை பின்பற்றி நடந்து கொள்ளவும் வேண்டும்.

40. கைவினை கரவேல்
கைத்தொழில்களை கற்றுக்கொண்டு அதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். வேலை கிடைக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருப்பதைவிட ஒரு தொழிலை செய்ய கற்றுக் கொண்டால் நம் சொந்த காலிலே நின்று கொள்ளலாம். அடுத்தவர்களிடம் கையேந்த வேண்டிய சூழ்நிலை உருவாகாமல் இருக்கும். அவ்வாறு கற்றுக்கொண்ட கைத்தொழிலை அடுத்தவர்களுக்கும் கற்றுக்கொடுத்தால் இன்னும் சிலருக்கு வாழ கற்றுக்கொடுத்த புண்ணியமும் கிடைக்கும்.

41. கொள்ளை விரும்பேல்
மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாதே. இருப்பதைக் கொண்டு இனிய வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ள வேண்டும். பேராசைப்பட வேண்டாம். அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட வேண்டாம்.

42. கோதாட்டு ஒழி
ஆபத்தான விளையாட்டுக்களில் ஈடுபடாதே. அது நமக்கோ அல்லது மற்றவர்களுக்கோ ஆபத்து ஏற்படுத்தும் என்று தெரிந்தால், அத்தகைய விளையாட்டுகளை தவிர்த்து விடலாம். தீ சுடும் என்று தெரிந்தும் சுட்டுக்கொள்ளாமல் இருப்பது நல்லது அல்லவா?

43. சக்கர நெறி நில்
அரசு ஆணைகளை மதித்து நடந்து கொள்ள வேண்டும். நடைமுறை நெறிகளை வகுத்து அதை ஆணையாக மாற்றி தருவதுதான் அரசாங்கம். அரச கட்டளையை மதித்து நடப்பவனே நேர்மையானவன். நேர்மையானவன் வாழ்வில் என்றும் வெற்றி பெறுவான்.

44. சான்றோர் இனத்திரு
அறிஞர் பெருமக்களின் குழுவோடு சேர்ந்து இருப்பது பெருமை ஆகும். செல்வம் இருக்கும் இடத்தில்தான் பெருமை. ஆனால் கல்வி கற்றவைகளுக்கு செல்லும் இடமெல்லாம் பெருமை. பூவோடு செர்ந்த நாரும் மணம் பெரும். அதுபோல அறிவில் சிறந்த பெரியவைகளின் உறவால் நாமும் சிறப்பு பெறலாம்.

45. சித்திரம் பேசேல்
பொய்யை உண்மை போல பேசக் கூடாது. ஒரு பொய்யை திரும்பத் திரும்பப் பேசினால் அது உண்மையாகி விடும் என்பார்கள். ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய் சொல்ல நேரிடும். அதன் விழைவு & நாம் கெட்டவர்களாவதுடன் அடுத்தவர் மனதை புண்படுத்துவதுடன், அடுத்தவர் வாழ்வை கெடுத்தும் விடும்.

46. சீர்மை மறவேல்
நல்ல செயல்களை மறந்துவிட வேண்டாம். மனம் போல் வாழ்வு என்பார்கள். மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்லதையே செய்ய நினைக்க வேண்டும். நல்ல எண்ணங்களே நல்ல செயல்களாக உருவெடுக்கும். நல்ல செயல்களை செய்யும் போது நல்ல நண்பர்களும், நல்ல உறவுகளும் உருவாவார்கள். நம்மைச் சுற்றி நல்லவர்கள் கூடும்போது நம் வாழ்வும் சிறப்பாக இருக்கும்

47. சுளிக்கச் சொல்லேல்
மற்றவர் முகம் கோணும்படியான சொற்களை பேசக்கூடாது. காதால் கேட்பதற்கே கூசும்படியான அருவெருப்பான, கேவலமான பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டும். கையால் ஒரு அடி அடித்துவிட்டாலும் அன்பால் அதை மறந்துவிட செய்யலாம். ஆனால் வாயால் பேசும் ஒரு தீய வார்த்தை மனதை விட்டு அகலாது.

48. சூது விரும்பேல்
சூதாட்டங்களில் ஈடுபட வேண்டாம். சூதாட்டங்களினால் பொருள் நஷ்டமும் மனக்கஷ்டமும்தான் உண்டாகும். சூதாட்டங்களில் விளையாடி மனைவியையும், நாட்டையும் இழந்த பாண்டவர்கள் கதையை கேட்டிருப்போம். சூதாட்டத்தில் வீட்டையும், பொருளையும் இழந்தவர்கள் ஏரளம்.

49. செய்வன திருந்தச் செய்
செய்யும் வேலையை திறம்படச் செய்ய வேண்டும். நாம் செய்ய நினைக்கும் வேலையை மனதாலும், உடலாலும் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த வேலையில் நம் திறமையைக் காட்ட முடியும். நமக்கு திருப்தி வந்தால்தான் வாடிக்கையாளரை நாம் திருப்திப்படுத்த முடியும். ஆகவே நமக்கு கொடுத்த வேலையை சுத்தமாக செய்து கொடுக்க வேண்டும்.

50. சேரிடம் அறிந்து சேர்
நல்ல நண்பர்கள், நல்ல அறிஞர்கள் என்று தீர ஆராய்ந்து அவர்களோடு உறவு வைத்துக் கொள்ள வேண்டும். பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெரும். ஆனால் பன்றியுடன் சேர்ந்த கன்றும் மலம் தின்னும். எனவே தரம் அறிந்து அவர்களோடு சேர்ந்து கொள்ள வேண்டும்.

51. சை எனத் திரியேல்
மற்றவர் நம்மை இகழ்ந்து பேசும்படி நடந்து கொள்ளக் கூடாது. ‘ச்சே! உன்னைப் போயி.....’ என்று வார்த்தையை முடிக்காமலே பேசுவார்கள். அந்த மாதிரி பேசுவதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்ள வேண்டும்.

52. சொல் சோர்வு படேல்
யார்கூட பேசினாலும் நம் பேச்சு இறுக்கமாகவோ அல்லது மனம் தளர்ந்த சோர்வான பேச்சாகவோ இருக்கக் கூடாது. இயல்பான பேச்சாக இருக்க வேண்டும். சுறுசுறுப்பான, தன்னம்பிக்கையான பேச்சு நம் வாழ்வில் உயர்வை கொடுக்கும்.

53. சோம்பித் திரியேல்
எப்போதும் சோம்பேறித்தனமாக இருக்கக் கூடாது. எந்த முயற்சியும் எடுக்காமல் சோம்பேறித்தனமாக ஊரைச் சுற்றித் திரியக் கூடாது. மற்றவர் எதிரில் நின்று பேசும்போது சோம்பல் முறிக்கக் கூடாது. சோம்பேறித்தனம் தூக்கத்தையே கொடுக்கும். வெற்றியை கொடுக்காது.

54. தக்கோன் எனத் திரி
நம்மை கௌரவமானவன் என்று பிறர் எண்ணும்படி நடக்க வேண்டும். நம்மை பார்க்கும்போதே நம் மீது ஒரு மரியாதை வரும்படியாக நடந்து கொள்ள வேண்டும். அது பயம் கலந்ததாக இருக்கக் கூடாது. கௌரவமான மரியாதையாக இருக்க வேண்டும்.

55. தானமது விரும்பு
இல்லாதவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். தானத்தில் சிறந்தது அன்னதானம். அடுத்தவர் பசியை போக்க அன்னதானம் செய்யலாம். அந்தணர்களுக்கு பசு தானம் செய்வது புண்ணியத்தைக் கொடுக்கும்.

56. திருமாலுக்கு அடிமை செய்
பெருமாள் கோவிலுக்கு சென்று சேவை செய்தால் புண்ணியம் கிடைக்கும். ஆக்கல், காத்தல், அழித்தல் & இம்மூன்றில் காத்தல் தொழிலை செய்யும் பெருமாளுக்கு சேவை செய்ய வேண்டும். ‘பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி‘. அப்போ வயதில் பெரிய முதியவர்களுக்கு செய்யும் சேவையும் பெருமாளுக்கு செய்த மாதிரிதானே?

57. தீவினை அகற்று
பிறருக்குத் தீமை உண்டாகும் செயல்களை அறவே செய்யக் கூடாது. நல்லது செய்யா விட்டாலும் பரவாயில்லை. தெரிந்தும் தீய செயல்களை செய்ய மனதாலும் நினைக்க வேண்டாம்.

58. துன்பத்திற்கு இடம் கொடேல்
பிறர் மனம் வருந்தும்படியாகவோ, மனம் புண்படும்படியாகவோ நடந்து கொள்ளக் கூடாது. பேசவும் கூடாது.

59. தூக்கி வினைசெய்
எந்தக் காரியத்தை செய்தாலும் அதை நன்கு ஆராய்ந்து தெளிந்து செய்ய வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் பொறுமையாக தீர ஆரய்ந்து அறிந்து செய்ய வேண்டும்.

60. தெய்வம் இகழேல்
நாம் வணங்கும் கடவுளை இகழ்ந்து பேசக்கூடாது. மாதா, பிதா, குரு, தெய்வம் & இவர்களை இகழ்ந்து பேசினால் பாவம் சேரும். இவர்களிடம் தலை வணங்கி பேச வேண்டும்.

61. தேசத்தோடு ஒத்து வாழ்
ஊரோடு ஒத்துப் போ! என்பார்கள். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. ஊர்கூடி தேர் இழுத்தால் தேர் நிலை வந்து சேரும். நாட்டு மக்களோடு ஒற்றுமையாக இணைந்து வாழ்ந்தால் நமக்கு உயர்வு நிச்சயமகக் கிடைக்கும்.

62. தையல் சொல் கேளேல்
மனைவியின் இழிந்த சொற்களைக் கேட்டு நடக்கக் கூடாது. மனைவி மந்திரி மாதிரி என்பார்கள். நல்ல அறிவுரைகளை சொல்லி வழி நடத்துபவர்களே நல்ல மந்திரிகள். அவ்வாறில்லாமல் தவறான வழிகாட்டும் மனைவியின் சொல் கேட்டு நடப்பவர்கள் துன்பத்தையே சந்திக்க நேரிடும்.

63. தொண்மை மறவேல்
காலங்காலமாக செய்து வரும் பழமையான காரியங்களை மறந்து விடக்கூடாது. இன்றைக்கும் நாம் செய்யும் பல காரியங்களுக்கும் மூலகாரணமாக இருப்பது நம் மூதாதையர் தொன்று தொட்டு செய்து வரும் காரணகாரியங்களே! வயதில் மூத்த பெரியவர்கள் இருக்கும் வீடு நிச்சயம்  சுபிட்சமாக இருக்கும்.

64. தோற்பன தொடரேல்
தோல்வி பயம் கூடாது. இருந்தாலும் தோல்வி நிச்சயம் உண்டாகும் என்று தெரிந்தும் அதில் ஈடுபடக்கூடாது. தீ சுடும் என்று தெரிந்தும் கையை சுட்டுக்கொள்வது முட்டாள்தனமானது அல்லவா?

65. நன்மை கடைப்பிடி
நல்ல காரியங்களை செய்ய வேண்டும். மற்றவர்களுக்கும் நன்மை தரும் செயல்களையே நாம் எப்போதும் செய்ய வேண்டும். மற்றவர்கள் நன்றாக இருந்தால்தான் அவர்களால் நமக்கு தொல்லைகள் இருக்காது. எனவே நாமும் நன்றாக இருப்போம்.

66. நாடு ஒப்பன செய்
நாட்டு மக்கள் ஒத்துக்கொள்ளக்கூடிய காரியங்களை மட்டுமே செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எதிரிகளைத்தான் சம்பாதித்துக்கொள்ள முடியும். நல்ல நண்பர்களை உருவாக்கிக்கொள்வதைவிட எதிரிகளை உருவாக்கிக்கொள்ளாமல் இருப்பது ரொம்ப நல்லது.

67.நிலையில் பிரியேல்
நம் தரத்தை விட்டுக் கொடுத்து கேவலமாக நடந்து கொள்ளக் கூடாது. நமக்கென்று ஒரு கௌரவம் இருக்கிறது. நம் பேச்சும், நடத்தையும் அதற்கு தகுந்தாற்போல இருக்க வேண்டும்.

68. நீர் விளையாடேல்
ஆபத்து நிறைந்த காட்டாற்று வெள்ளத்தில் இறங்கி நீந்தக் கூடாது. அவரவர் பலம் அவரவர்க்கு. தேங்கிக் கிடக்கும் நீரில் நீந்துவதும், காட்டாற்று வெள்ளத்தில் நீந்துவதும் வேறு வேறு. காட்டாற்று வெள்ளத்தில் எதிர் நீச்சல் போடுவதைவிட நீர் போகிறபோக்கில் சென்று கரை ஏறுவதே புத்திசாலித்தனம். வாழ்க்கையிலும் அப்படித்தான்.

69. நுண்மை நுகரேல்
நோயை உண்டுபண்ணும் உணவை உண்ணக் கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. உணவே மருந்து. தேவை அறிந்து உண்பது உடலுக்கு நல்லது.

70. நூல் பல கல்
நிறைய படிக்க வேண்டும். நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். அறிவு வளர்ச்சிக்கான வெவ்வேறு வகையான நூல்களை அதிகமாகப் படிக்க வேண்டும். செல்வம் இருக்கும் இடத்தில்தான் சிறப்பு. கற்றவர்க்கோ செல்லும் இடமெல்லாம் சிறப்பு.

71. நெல் பயிர் விளை
உழவன் சேற்றில் கை வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். மக்களின் உணவு ஆதாரனம் அரிசி. அதற்கு விழை ஆதாரமான நெல் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். மனிதனின் உணவு தேவை பூர்த்தியானால் மற்றவை தானாகவே நடக்கும்.

72. நேர்பட ஒழுகு
நேர்மையாக இருக்க வேண்டும். சொன்ன சொல் தவறக் கூடாது. வாக்கு சுத்தமாக இருக்க வேண்டும். உண்மை இருக்கும் இடத்தில் நேர்மை இருக்கும். உண்மை, உழைப்பு, உயர்வு. உண்மையாக உழைத்தால் உயர்வை அடையலாம்.

73. நைவினை நணுகேல்
இகழ்ச்சி தரும் விஷயங்களைச் செய்யக்கூடாது. நாமும் கேவலப்பட்டு அடுத்தவரையும் கேவலப்படுத்த வேண்டாம்.

74. நொய்ய உரையேல்
பிறர் மனம் நோகும்படியாக பேசக் கூடாது. எப்போதும் அன்பான வார்த்தைகளைப் பேச வேண்டும்.

75. நோய்க்கு இடம் கொடேல்
உடலில் நோய் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுத்தம், சுகாதாரம் இருக்கும் இடத்தில் நோய் வராது. நம்மை நாமே பேணி பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதற்கான வழிவகைகளை நாமேதான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

76. பழிப்பன பகரேல்
மற்றவர் சாபத்திற்கு ஆளாகாதே. அடுத்தவர் பழிக்கும்படியான இழிவான சொற்களை பேசவும் வேண்டாம். அவர் சாபத்திற்கு ஆளாகவும் வேண்டாம். கல்லடி பட்டாலும் படலாமே தவிர சொல்லடி படக்கூடாது. அளவாக, அன்பாக பேச வேண்டும்.

77. பாம்பொடு பழகேல்
பாம்போடு விளையாட வேண்டாம். எது நல்ல பாம்பு? எது கெட்ட பாம்பு? எது விஷமுள்ள பாம்பு? எது விஷமில்லாத பாம்பு? யாருக்கு தெரியும்? ஆபத்து என்று தெரிந்தும் பாம்போடு விளையாட முடியுமா? ஆனால் கெட்டவன் என்று தெரிந்த பின்பும் அவரோடு பழகுவது நல்லதல்ல.

78. பிழைபடச் சொல்லேல்
தவறான கருத்துக்களை தரும் பேச்சை பேச வேண்டாம். நாம் ஒன்று பேச, அடுத்தவர் அதை வேறு மாதிரி புரிந்துகொண்டு, அதற்கு கண், காது, மூக்கு வைத்து உருவமாக்கி விடுவார்கள். எதையும் நேரிடையாக பேச பழகிக்கொள்ள வேண்டும்.

79. பீடு பெற நில்
மற்றவர்கள் மதிக்கும்படியாக நாம் நடந்து கொள்ள வேண்டும். ஒருவனுடைய இறப்பில்தான் அவனுடைய உண்மையான மதிப்பு தெரியவரும். உயிரோடு இருக்கும் காலத்தில் முன் ஒன்று பேசுவார்கள். பின்னால் ஒன்று பேசுவார்கள். ஆகவே இப்போது நாம் வாழும் வாழ்க்கையை மற்றவர் மதிக்கும்படியாக வழ்ந்து காட்ட வேண்டும்.

80. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
புகழோடு வாழ்ந்த பெரியோர்களை வணங்கி, அவர்களைப் பின்பற்றி வாழ வேண்டும். முன் ஏறு சென்ற தடத்தில் பின் ஏறு சென்றால் ஆழமாக உழ முடியும். கோடு போட்டால் ரோடு போட கற்றுக்கொள்ள வேண்டும். பெரியோர் காட்டிய வழியை பின்பற்றி வாழ்ந்தால் மேன்மை அடைய முடியும்.

81. பூமி திருத்தி உண்
நிலத்தைப் பண்படுத்தி, அதில் பயிர் செய்து, விளைந்த நெல்லைக் கொண்டு உண்ண வேண்டும். அடுத்தவர் வாழ்வை வாழாதே. நீயே உழைத்து வாழ். உன் சொந்த காலில் நில். கால் வயிற்றுக் கஞ்சியானாலும் நீயே உழைத்துக் குடி. அடுத்தவரிடம் கையேந்தாதே!

82. பெரியாரைத் துணைக் கொள்
அறிவார்ந்த பெரியோர்களின் அறிவுரைகளை கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும். கோடி கொடுத்தேனும் பெரியோரை தேடிப்பிடி. அரிய பெரியோர்கள் எங்கிருந்தாலும் அவர்களைத் தேடிச் சென்று, நட்பு பாராட்டி அவர்கள் அறிவுரையை கேட்டு நடந்தால் நம் வாழ்வில் எப்போதும் முன்னேற்றம்தான்.

83. பேதைமை அகற்று
மூடனாக வாழக்கூடாது. எதையும் சிந்தித்து ஆராய்ந்து நடக்க வேண்டும். மூட நம்பிக்கை வேண்டாம்.

84. பையலோடு இணங்கேல்
முட்டாளோடு பழகக் கூடாது. ‘ஒரு வாழப்பழம் இங்கேருக்கு. இன்னொன்னு எங்க? அதாண்ணே இது‘ & இதை கேட்கும்போது சிரிப்பு வரும். இந்த மாதிரி முட்டள்களோடு பழகினால் நம்மையும் அப்படித்தானே நினைப்பார்கள்.

85. பொருள் தனைப் போற்றி வாழ்.
சம்பாதிப்பது பெரிதல்ல. சம்பாதித்த பொன்னையும், பொருளையும் பாதுகாப்பது பெரிது. சேர்த்து வைத்த சொத்தை காப்பாற்றி வாழ வேண்டும். மற்றவர் கண்பட வாழக்கூடாது.

86. போர்த் தொழில் புரியேல்.
சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். போர் என்றாலே அங்கு அழிவு நிச்சயம். போர்க்குணம் என்பது மூர்க்க குணம். கோபப்பட்டு வார்த்தையை விடக் கூடாது. கோபமான நேரங்களில் எந்த முடிவும் எடுக்கக்கூடாது. அது நிச்சயம் தப்பாகத்தான் முடியும்.

87. மனம் தடுமாறேல்.
மனதில் குழப்பம் கூடாது. எந்த சூழ்நிலையிலும் மனம் கலங்கி, செய்வது அறியாமல் தடுமாற்றம் கொள்ள வேண்டாம். நின்று நிதானித்து பொறுமையுடன் எதையும் செய்வது நல்லது.

89. மிகை படச் சொல்லேல்
எதையும் அதிகப்படுத்தி பேசக் கூடாது. ஒன்றை பத்தாக்குவதோ, ஈறைப் பேன் ஆக்குவதோ கூடாது.

90. மீதூண் விரும்பேல்
அளவுக்கு அதிகமாக உண்ண வேண்டாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அதேபோல அளவோடு பேச வேண்டும். அளவுக்கு மீறிய பேச்சும் நம்மீது நம்பிக்கையை குறைக்கும்.

91. முனை முகத்து நில்லேல்.
போர் முனைக்கு செல்பவன் ஆயுதம் இல்லாமல் செல்லக்கூடாது. கோவிலுக்கு செல்லும்போது மனதில் பக்தியுடன் செல்ல வேண்டும். அவ்வாறு நாம் செல்லும் இடம் அறிந்து அதற்கேற்ற முன்னேற்பாடுகளுடன் செல்ல வேண்டும்.

92. மூர்க்கரோடு இணங்கேல்.
முரட்டுக் குணம் கொண்டவர்கள், அறிவில்லா மூடர்கள் & இவர்களோடு சேரக்கூடாது. ஒருவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவனது நண்பர்களைப் பற்றி விசாரித்தாலே போதும் என்பார்கள்.

93. மெல்லி நல்லாள்தோள் சேர்
நல்ல மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம். அத்தகைய நல்ல மனைவியோடு நன்றாக இணைந்து வாழ்ந்து வீட்டை கொவிலாக்க வேண்டும்.

94. மேன் மக்கள் சொல் கேள்.
பெற்றோர், சான்றோர், ஆசிரியர் போன்ற பெரியோர்களின் அறிவுரையைக் கேட்டு நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு பெரியோர் சொல்பேச்சு கேட்டு நடந்தால் எப்போதும் நன்மையே உண்டாகும்.

95. மைவிழியார் மனை அகல்.
விலைமாதர் வீட்டுக்குப் போக வேண்டாம். ஒழுக்கம் தவறுவதின் முதல் படி விலைமாதர் பழக்கம்தான். அது குடும்ப உறவை சீர்குலைத்து விடும். அத்தகைய பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளாமல் இருப்பதே நல்லது.

96. மொழிவது அற மொழி
சொல்வதை தெளிவாக சொல்ல வேண்டும். சொல்லலாமா? கூடாதா? என்கிற சந்தேகமின்றி தெளிவாகக் கூற வேண்டும்.

97. மோகத்தை முனி
பெண் மீது கொள்ளும் அளவுக்கு மிஞ்சிய ஆசையே மோகம். அதுவே அழிவுக்கு வழிவகுக்கும். ஆகவே ஆசையை குறைத்து விடு. ஆசையை வெறுத்து விடு. ஆசையை அடக்கி விடு.

98. வல்லமை பேசேல்
உன்னிடம் உள்ள திறமையைப் பற்றி நீயே புகழ்ந்து பேசக் கூடாது. அவ்வாறு தற்பெருமை பேசினால் மற்றவர்கள் நம்மை மதிக்கக்கூட மாட்டார்கள்.

99. வாது முற்கூறேல்
வலியப்போய் யாருடனும் விவாதம் செய்யக் கூடாது. வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாம்.

100. வித்தை விரும்பு
ஆய கலைகளையும் கற்றுக் கொள்ள மனதில் எண்ணம் வேண்டும். கனவு காண். அப்போதுதான் நீ நினைப்பதை அடைய முடியும்.

101. வீடு பெற நில்
இறைவன் அடிபணிந்து முக்தி அடைய முயற்சி செய்ய வேண்டும். இறை பணியே முக்திக்கு வழி.

102. உத்தமனாய் இரு
ஒழுக்கம் முதலான நல்ல குணம் உள்ளவராக வாழ வேண்டும். அவ்வாறு வாழ்பவர்களே மற்றவர்கள் பின்பற்றி வாழும் உத்தம நிலையை அடைவார்கள்.

103. ஊருடன் கூடிவாழ்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. ஊர் உறவோடு இணைந்து ஒற்றுமையாக வாழ வேண்டும். ஒற்றுமையே உயர்வுக்கு வழி.

104. வெட்டெனப் பேசேல்
வெட்டு ஒன்னு. துண்டு ரெண்டு என்கிற மாதிரி பேசக்கூடாது. ‘வார்த்தையைக் கொட்டாதே! அள்ள முடியாது.‘ என்பார்கள். ஆகவே பேச்சில் கடுஞ்சொற்களைத் தவிர்ப்பது நல்லது.

105. வேண்டி வினை செயேல்
தெரிந்தே யாருக்கும் தீமை செய்யக் கூடாது. தெரியாமல் செய்வது தவறு. தெரிந்து செய்வது தப்பு. தவறு மன்னிக்கக்கூடியது. தப்பு தண்டனைக்குரியது.

106. வைகறைத் துயில் எழு
சூரிய உதயத்திற்குமுன் கண்விழிக்க வேண்டும். அவ்வாறு எழுபவர் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அதிகாலை தூக்கம் குடும்பத்திற்கு ஆகாது.

107. ஒன்னாரைத் தேறேல்.
எதிரி என்று தெரிந்த பிறகு அவரிடம் நம்பிக்கை கொள்வது தவறு. தெரிந்தே கிணற்றில் குதிக்கலாமா?

108. ஓரம் சொல்லேல்
எதையும் யாருக்காகவும் ஒருதலைப் பட்சமாகக் கூறக் கூடாது அவ்வாறு கூறுவது நீதி தவறுவதாகும். நீதி தவறிய பாண்டிய மன்னனால் மதுரையே எரிந்தது. 

முதலாளிகள் வேலையாட்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

முதலாளிகள் வேலையாட்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? 



 ஒரு நிறுவனமோ அல்லது கடையோ செழிப்பாக இருக்க, செம்மையான முறையில் செயல்பட முதலாளியும், தொழிலாளியும் ஆரோக்கியமான மனோநிலையில் இருக்க வேண்டும். முதலாளிகள் சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் வேலையாட்கள் அற்புதமாக செயல்படுவார்கள். அதற்கான சில டிப்ஸ் பின்வருமாறு:
1. வெற்றிக்கான 80/20 சட்டத்தை எப்போதும் நினைவில் கொண்டிருங்கள். அதாவது எண்பது சதவீத நேரங்களில் நான் சரியான தீர்மானங்களை எடுப்பேன். ஆனால் இருபது சதவீத நேரங்களில் நானும் தவறான தீர்மானங்கள் எடுக்கிறேன். தவறுகளைச் செய்கிறேன். அல்லது சிறப்பாக செய்திருக்க மாட்டேன். என்னுடைய பணியாளர்களுக்கும் இதே 80/20 சட்டத்தின்படியான சுதந்திரத்தை அளிக்கிறேன். அவர்கள் தவறு செய்யவும் வாய்ப்புண்டு என்பதை அறிகிறேன்.
2. நம் பணியாளர்களின் முன்னேற்றத்தை சோதிக்கலாம். தவறில்லை. ஆனால் எப்போதும் அவர்களையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இப்படித்தான் வேலை செய்ய வேண்டுமென கூறக் கூடாது. நம்முடைய ‘நிபுணத்துவ’ அணுகுமுறைக்குச் சாதகமாக அவர்களின் வேலையைத் தள்ளிவிடக் கூடாது. தலைவராக நீங்களிருப்பதால் மற்றவர்களுக்கு சாதகமாக இருக்கும் பொருட்டு அவர்களுடைய தீர்மானங்களை மாற்றக் கூடாது. 
3. நீங்கள் அதிகாரம் அளிப்பவரிடம் (வேலையாளிடம்) நம்பிக்கையுடனிருக்க வேண்டும். 
4. உங்கள் முறைப்படிதான் அது செய்யப்பட வேண்டும் என்ற முறையிலிருந்து விடுபட்டு இளைப்பாறுங்கள்.
5. வேகமாகச் செய்யும் ஆசையிடமிருந்து பொறுமையுடனிருங்கள்.
6. அதிகாரத்தை அளிப்பதில் உள்ள உங்கள் சுதந்தரத்தின் மூலம் மற்றவர்களின் முன்னேற்றத்தைக் காணுங்கள்.
7. தகுதியுள்ள மக்களைத் தேர்ந்தெடுங்கள். 
8. அவர்கள் மீதுள்ள உறுதியை வெளிப்படுத்துங்கள். 
9.அவர்களுடைய கடமைகளைத் தெளிவாக்குங்கள். 
10. சரியான அதிகாரத்தை அவர்களுக்கு அளியுங்கள். 
11. எப்படி வேலை செய்ய வேண்டுமென அவர்களுக்கு அடிக்கடி கூறாதீர்கள்.
12. எதற்கெல்லாம் உங்களுக்கு கணக்கு கூறவேண்டுமென்பதை அவர்களுக்கு கூறுங்கள்.
13. அவர்கள் செயல்படும் முறையைக் கவனியுங்கள்.
14. எப்போதாவது தவறு செய்வதற்கு இடமளியுங்கள். சாத்தியமிருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்.
15. சிறப்பாக செய்யப்பட்ட வேலைகளுக்கு புகழையும், பெருமைகளையும் அளியுங்கள்.
இந்த வழிமுறைகளையெல்லாம் கடைப்பிடித்துப் பாருங்கள். உங்கள் வேலையாட்கள் மிகச்சிறப்பாக செயல்படுவார்கள்.

Tuesday, 4 April 2017

வெற்றிக்கு வழி..!

                                                    வெற்றிக்கு வழி..! 




  How to success in life?
தன்னம்பிக்கை என்பது என்ன? 
தன்னுள்ளே எழும் நம்பிக்கையைத்தான் தன்னம்பிக்கை என்கிறோம். ஒரு மனிதன் தன்னுடைய எண்ணத்தில் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்து முடித்துவிடுவோம் என்று உறுதியாக எண்ணுவதே தன்னம்பிக்கை. 
அந்த எண்ணம் தொடர.. தொடர.... அது வலுப்பெற்று, எந்த தடை வந்தாலும் அதைச் சமாளிக்கும் ஸ்திரத் தன்மையைப் பெற்றுவிடுகிறது. எனவே அந்த எண்ணத்தை (மனதை) எந்த ஒரு தடையாலும், சக்தியாலும் தகர்க்க முடியாது. அதுதான் தன்னம்பிக்கை. 
ஊக்கம்: 
சில சமயங்களில் புறச்சூழல் மற்றும் அகச்சூழலால் தன்னம்பிக்கையில் தளர்வு ஏற்படும். அவ்வாறு தளர்வு ஏற்படும்பொழுது மீண்டும் அதை வலுப்பெறச் செய்து, அதனுடைய ஸ்திரத்தன்மை மீட்டுக்கொண்டுவரப் பயன்படுவதுதான் ஊக்கம். ஊக்கம் ஒருவருடைய மனநிலையை அப்படியே முழுமையாக மாற்றிவிடக் கூடிய சக்தியுடையது. 
இதை தடகளப் போட்டிகளில் நாம் கண்கூடாக காண முடியும். ஒருவர் எட்ட முடியாத உயரத்தை தாண்ட நினைக்கிறார். அவருள் இருக்கும் சக்தியை குறிப்பிட்ட உயரம் வரை மட்டுமே எம்பி குதிக்க முடியும் என்ற நிர்ணயம் செய்துவிடுகிறது. என்றாலும் சுற்றி இருக்கும் பார்வையாளர்களை கைத்தட்டி ஆரவாரம் செய்யச் சொல்கிறார். காரணம் அவருள் இருக்கும் மாபெரும் சக்தி திரட்டுவதற்காக. அவ்வாறு கைத்தட்டி ஆரம்வாரம் செய்யும்பொழுது அவருடைய சாதாரணமான மனநிலையில் ஒரு உந்துதல் ஏற்பட்டு, புதிய சக்தி பிறக்கிறது. இறுதியில் அந்த வீரர் உலகே வியக்கும் வண்ணம் புதிய உலகசாதனையை படைத்துவிடுகிறார். 
இதுதான் ஊக்கத்தின் மகிமை. 
விடா முயற்சி: 
முயற்சி என்பது எல்லோரிடத்திலும் உள்ளது.. விலங்குகளிடம் கூட இந்த முயற்சி உண்டு. ஆனால் விடா முயற்சி? 
அது ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது.. ஒரு சில தோல்விகளிலேயே மனம் உடைந்து போனவர்கள் மீண்டும் அம் முயற்சியை தொடர்வதில்லை.. காரணம் அவர்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட எதிர்மறையான முடிவு. 
'இனிமேல் நம்மால் அது முடியாது' என்று அவர்கள் மனதில் அவர்கள் எடுத்துக்கொண்ட முடிவு. 
ஆனால் விடாமுயற்சி என்பது சாகும்வரை, தன்னுடைய எல்லையை அடையும் வரை, நினைத்ததை சாதித்து முடிக்கும் வரை ஒருபோதும் சோர்ந்துவிடுவதில்லை. 
உறுதியான முடிவு அங்கே நிலைப்பெற்றிருக்கும். எப்படியும் வென்றுவிடுவோம்.. எப்படியவும் இலக்கை அடைந்துவிடுவோம் என்ற ஒரு வெறியுடன் கூடிய திடமான முடிவு மனதில் இருந்துகொண்டே இருக்கும். 
இவ்வாறானவர்கள் விரைவில் வென்றுவிடுவார்கள். காரணம் விடாய முயற்சியே!
மேற்கண்டவைகளைப் பின்பற்றினாலே வாழ்க்கையில் வென்று சாதனை புரியலாம். ஒவ்வொரு வார்த்தையையும் செயல்படுத்த வேண்டும்.. செயல்படுத்தினால் நிச்சயம் வெற்றி நம்மைத் தேடிவரும். 
பதிவைப் படித்தோமா, கருத்தை பகிர்ந்தோமா.. என்றிராமல் பதிவில் உள்ள சொற்களை உள்வாங்கி, அவற்றை அப்படியே செயல்படுத்துதலில் வெற்றி அடங்கியுள்ளது. 
இந்த பதிவைப் படித்த முடித்துவிட்டீர்களா? அட.. நீங்களும் ஒரு வெற்றியாளர்தான்.. எப்படி என்றால் பதிவை முழுமையாக படித்து முடித்ததே ஒரு வெற்றிகரமான செயல்தானே.. !
இப்படி ஒவ்வொரு செயலிலும் வெற்றி... வெற்றி.... என்று மகிழ்ச்சியான, நேர்மறையான எண்ணத்துடன் செயல்பட்டாலே, விரைவில் நினைத்ததை அடைய முடியும். இதுதான் வெற்றிக்கு வழியும் கூட.

இதுவும் கடந்து போகும்

                                           இதுவும் கடந்து போகும் 


எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/


 ஒரு ஊரில் மக்கள் மத்தியில் புத்தர் பேசத் தொடங்கினார். ஒரு குரல் அவர் பேசுவதை இடைமறித...்தது. 
தொடர்ந்து புத்தரை நோக்கி, 
“புத்தரேÐ நாங்கள் உங்களைப் போன்ற எத்தனையோ ஞானிகளைச் சந்தித்தும், அவர்களது பிரசங்கங்களை கேட்டும் விட்டோம். 
ஆனால் எங்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. இப்போதும் எங்களுக்கு பிரச்சனை இருக்கிறது. 
எங்களுக்கு மட்டுமல்ல இவ்வுலகில் உள்ள அனைவருக்குமே ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது.
அதனால் எல்லோருடைய சிக்கலும் தீரும்படியாக, அனைத்து மனிதர்களுடைய வாழ்விலும் பிரகாசம் தெரியும்படி மந்திரங்களைச் சொல்லித் தாருங்கள். 
தேவையற்ற பிரசங்கம் வேண்டாம். நாங்கள் மனப்பாடம் செய்து எல்லோருக்கும் சொல்லத்தக்க அளவில் சிறியதாக இருக்க வேண்டும். 
நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான மந்திரத்தைச் சொல்லுங்கள். உங்களைக் குருவாக ஏற்றுக்கொள்கிறோம்” என்றது அக்குரல்.
மௌனமாக சிரித்த புத்தர், 
“இதுவும் கடந்து போகும்” என்று அழுத்தம் திருத்தமாகச் 
சொன்னார். 
அந்த கணமே அக்கூட்டம் ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்தது. புத்தரின் மந்திரத்தை மனசுக்குள் அசைபோட்டது.
நன்றாகப் படித்திருந்தும் பணம் சம்பாதிக்க முடியாமல் தாழ்வு மனப்பான்மையால் உழன்று கொண்டிருந்த இளைஞனுக்கு தன்னம்பிக்கையைத் தந்தது அந்த வார்த்தை.
“இதுவும் கடந்து போகும்” என்ற வார்த்தையால் என்னுடைய நிலை கண்டிப்பாக மாறிவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. 
இம்மந்திரத்தைத் தினந்தோறும் உச்சரித்து இன்னமும் எனக்கு வேண்டிய பலம் பெற்றுக்கொள்வேன்” என்று உரக்கச் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.
“இம்மந்திரத்தால் என்னுடைய நீண்ட கால நோய் கண்டிப்பாகத் தீர்ந்துவிடும். இனிமேலும் எனக்கு இந்நிலை தொடராது. இது மிகவும் நல்ல மந்திரம் என்று கூறிச் சென்றான்” நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தவன்.
“இந்த பணம் தொடர்ந்து என்னுடன் இருக்காது என்பதைப் புத்தர் எனக்கு இம்மந்திரத்தின் மூலம் புரிய வைத்துவிட்டார். இனி இந்தப் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொண்டேன்” என்று கூறிச் சென்றான் பணக்காரனாக இருந்தவன்.
அடுத்து இருந்த அழகான பெண்,
“என்னுடைய அழகு எப்போதும் என்னுடன் வராது என்பதை இம்மந்திரம் எனக்குப் புரிய வைத்துவிட்டது” என்று கிளம்பினாள்.
கடைசியாக, தினந்தோறும் உழைத்து ஓடாய்த் தேய்ந்த பெண்மணி கிளம்பும் போது,
“இத்தனை நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். மரணம் வரையிலும் உழைக்கத்தான் வேண்டியிருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த மந்திரத்தின் மூலம் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. என்னுடைய நிலையும் மாறிவிடும்” என்று நம்பிக்கையுடன் சென்றார்..
ஆம்,நண்பர்களே.,
தோல்விகள் தழுவும்போது “இதுவும் கடந்து போகும்” 
என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சோர்ந்து விட மாட்டீர்கள்.
நல்ல மனிதர்களும்,நண்பர்களும் உங்கள் வாழ்வில் 
வரும்போது ‘இதுவும் கடந்து போகும்” என்பதை நினைவில்
கொள்ளுங்கள்.
அவர்கள் இருக்கும்போது போது கொளரவிப்பீர்கள்.
அவர்கள் விலகும்போது பாதிக்கடைய மாட்டீர்கள்.
எத்தனையோ மனிதர்களை மாற்றிய இந்த உன்னத சொல் 
உங்கள் வாழ்விலும் இனி ஒளி ஏற்றும். 
“இதுவும் கடந்து போகும்” என்பதை 
உறுதியுடன் நம்புங்கள். கண்டிப்பாக மாறிவிடும். 
தோல்வியைச் சந்திப்பவர்கள், 
நோயில் இருப்பவர்கள், 
சிக்கலில் மாட்டியவர்கள், 
திசை தெரியாமல் இருப்பவர்கள் அனைவரும் தினமும் 
இதை மனதில் சொல்லிக்கொண்டே இருங்கள். 
ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியே.

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
இன்றைய நாள் உற்சாகமும், உத்வேகமும்
தரும் நாளாக உங்களுக்கு அமையட்டும்..
இன்றைய சிந்தனை..

முன்னோர்கள் பழக்கவழக்கங்கள்

                       முன்னோர்கள்  பழக்கவழக்கங்கள் 

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/


 01.வயிறு பசித்தால்  மட்டுமே உணவினை உண்ண வேண்டும், பிறரின்
    கட்டாயத்திற்காக உணவினை உண்ணக்கூடாது.
02.உணவினை வியாதிக்கு மருந்து உண்ணுவது போல உண்ணவேண்டும்.
    ருசிக்காக உண்ணக்கூடாது. அது உடல் நலனை பாதிக்கும். உண்ணும் போது
    மகிழ்வுடன் உண்ண  வேண்டும்.
03.குழந்தைகளுக்கு முன் எதையும் அவர்களுக்கு தராமல் உண்ணக்கூடாது.
    அதிலும் புகைத்தல், மது அருந்துதல் நிச்சயம் கூடாது.
04.எந்த பானத்தையும் எச்சில் செய்து குடிக்க கூடாது. நாம் குடித்த எச்சில்
    பானத்தையோ அல்லது உணவையோ நம்மை விட பெரியவர்களுக்கு
   தெரிந்தே தரக்கூடாது.
05. உணவினை நிந்திக்க கூடாது , உணவினை வீணாக எறிதல் கூடாது . 
    அன்னதானம் செய்பவர்களை எந்த காரணம் கொண்டும் இழிவாகப் 
    பேசக்கூடாது.
06. பந்தியின் நடுவே எழுந்திருக்கக்  கூடாது, சாப்பிடும் போது
     கோபப்படக்கூடாது, உண்ணும் போது குழந்தைகளை விரட்டுவது, அழுவது
    கூடாது .உண்ணும் போது புறங்கையை நக்குவது, மிக சப்தத்துடன்
    உறுஞ்சுவதுக்  கூடாது.
07. உணவு உண்ணும் போது படுத்துக்கொள்ளக் கூடாது, கால்களை
     நீட்டிக்கொண்டு உண்ணக்கூடாது. முதியவர்களை தவிர மற்றவர்கள்
     தரையில் அமர்ந்துதான் உண்ண  வேண்டும்.
08. ஈராமான ஆடைகளையோ அல்லது ஒற்றை ஆடையுடனோ உணவு 
      உண்ணக்கூடாது.(இவை ஓரளவு வசதியுள்ளவர்களுக்கு, உண்ண
      உணவில்லாத பரம ஏழைக்கல்ல ).
09. நிச்சயம் பாதுகை அணிந்துகொண்டு உணவு உண்ணக்கூடாது. உண்ணும்
      போது முகம்,கைகால்கள் சுத்தம் செய்த பின்னரே உணவருந்த வேண்டும்.
10. தரமான நல்ல நிலையிலுள்ள பொருட்களை மட்டுமே தானமாக
     தரவேண்டும்.தரமில்லாத மற்றும் பாழான பொருட்களை யாருக்கும்
     தானமாக தரக்கூடாது.
11. வயது வந்த பெண்களை தகுந்த காலத்தில்,தகுந்த வரனுக்கு தங்களின்
     வசதிக்கு ஏற்ப திருமணம் செய்து தந்துவிடவேண்டும். பலனை
     எதிர்ப்பார்த்து அவர்களின் திருமணத்தை தள்ளி வைத்தல் கூடாது.
12. கர்ப்பமாக உள்ள பெண்கள் சூரியன் மறையும் நேரத்தில் உணவு
      உண்ணக்கூடாது. ஆடையில்லாமல் வெற்று உடலுடன் குளித்தல் கூடாது.
     மாலை நேரத்தில் உறங்குதல் கூடாது.
13. கர்ப்பமான பெண்கள் மன அமைதித்தரும் பாடல்கள் மற்றும் அன்பு
      பாசம்,தைரியம் வளர்க்கும் கதைகள் கேட்பது,படிப்பது  போன்றவற்றில்
     இடுபாடுக்காட்டவேண்டும்.
14. பொதுவாக பெண்கள், அதிலும்  குறிப்பாக கர்ப்பமான பெண்கள்  நடுநிசியில்
      மயானம் மற்றும் பாழடைந்த கிணறு உள்ள பகுதிக்கு செல்லக்கூடாது.
      கிரஹண காலங்களில் கர்ப்பிணிகள் வீட்டை விட்டு  வெளிவருதல்
      கூடாது.
15. கிரஹண காலங்களில் வயிற்றில் உணவு இருத்தல் கூடாது.
     கிரஹணத்திற்கு  8 மணிநேரத்துக்கு முன்பாக உணவு
     உண்டு  விடவேண்டும்.
16. பெண்கள் பூசணிக்காயை சுற்றி உடைக்க கூடாது, மனைவி கர்ப்பமான
      காலத்தில், கணவன் பிணம் சுமக்கக்கூடாது மற்றும் சுடுகாட்டிற்கு
     செல்லக்கூடாது.
17. எந்த மதத்துடைய புராண,இதிகாசங்களையும் பழித்தலோ அல்லது கேலி
     செய்தலோ நிச்சயம் கூடாது.
18. வழிப்பாட்டு தளங்கள் மற்றும் பாதைகளில் அசுத்தம் செய்தல் கூடாது.
     ஆண்டவன் வழிப்பாட்டு தளங்கள் உள்ள மலைகளில் மற்றும் அதன் வேறு
     எந்த பகுதியலும் சிறுநீர் மற்றும் மலம் கழித்தல் கூடாது.
19. பள்ளிகள்,மருத்துவமனைகள் மற்றும் ஆலயங்கள் அமைந்துள்ள
     இடங்களில் அசுத்தம் செய்வதோ ,சத்தம்செய்வதோ  மற்றும்  மதுபானக்    .
     கடைகள் அமைத்தலோ  கூடாது.
20. ஆண்டவனின் பெயர் அல்லது படங்கள் உள்ள ஆடைகளை அணிந்து
      கொள்ளக்கூடாது. விளம்பரப் பொருட்களில் எந்த கடவுள் படங்களையும் 
      அச்சடித்து வியாபாரம் செய்தல் கூடாது. அது கடவுளை இழிவு செய்யும்
      செயலாகும்.
21. நகங்களை அளவுக்கு அதிகமாக வளர்தலும், அதனை பற்களால் கடித்து
     துப்புதலும் செய்யக்கூடாது. இதன் மூலம் கண்களுக்கு புலப்படாத
    தேவையில்லாதா கிருமிகள் பரவும்.
22. வாங்கிய கடனை திருப்பிதராமல் ஏமாற்றக்கூடாது. கடன் தருவதையும்,
     பெறுவதையும் தவிர்க்க வேண்டும் அது இருவருக்கும் நன்மை பயக்கும்.
23. பிணத்தின் புகையும்,காலை வெயிலும் மற்றும் இரவில் தயிரும் கூடாது.
24. ஜீவன்களின் முட்டைகளையோ அல்லது அதன் சிசுகலையோ கொள்வது
     கூடாது.
25. காமந்தகாரன், துறவிபோல் வேஷம் போடுபவன், தேசவிரோதி,தர்ம
     சிந்தனை இல்லாதவன், மற்றவர்களை குற்றம் கூறுபவன்,பெண்களிடம்
     தேவையில்லாமல்  சிரித்து சிரித்து பேசுபவன், கடவுளை இழிந்து பேசி
     தன்னை  உயர்த்தி கொள்பவன் இவர்களை வீட்டில் சேர்க்கக்கூடாது.
26. விடிகாலை 5 மணிக்கு விழித்தெழ வேண்டும், விழித்தவுடன் நம்மை .
     தாங்கும் பூமித்தாயை வணங்கி எழ வேண்டும்.
27. தினமும் நீரால் உடல் சுத்தம் மிக்க அவசியம்,வாரம் ஒருமுறை
     கட்டாயமாக தலைகுளியலும் செய்தல் வேண்டும்.
28. காலை, மாலை இரு வேளையிலும் தீபமேற்றி வீட்டின் முன் வாசலை
      திறந்த நிலையிலும், பின் வாசலை மூடிய நிலையிலும் வைத்தல்
     வேண்டும்.
29. வீட்டில் இரு வேலைகளிலும் மணி சப்தத்துடன் கூடிய பூஜை செய்தல்
      வேண்டும்.
30. வாழை இலைகளில் உணவு பரிமாறும் போது உப்பிட்ட பதார்த்தங்களை
      நடு மட்டைக்கு மேலேயும், உப்பில்லாதவைகளை நடு மட்டைக்கு 
     கீழேயும் பரிமாறவேண்டும்.
31.கோவில் இல்லா ஊரில் குடியிருக்க  கூடாது, ஆலய பிரசாதங்களை
     அலட்சியம் செய்தலோ அல்லது வீண் செய்தலோ கூடாது. ஆலயங்களில்
     நுழைந்து விட்டால் வீண் பேச்சுக்கள் மற்றும் அரட்டைகள் கூடாது(
     இக்காலத்தில் செல்போன் பேசக்கூடாது).
32. மனைவி கணவனை பற்றியோ அல்லது கணவன் மனைவியை பற்றியோ
     அடுத்தவரிடம் தவறாக பேசக்கூடாது.
33. இல்லறம் என்ற வண்டிக்கு கணவன் மனைவி என்ற சக்கரம் சீராக
      இருந்தால் தான் பயணம் வெற்றிப்பெறும். கணவன் மனைவியிடையே   
      விட்டுக்கொடுத்தல் வேண்டும்.
34. காமம் என்பது பெண்ணின் மீது வைப்பது மட்டும் அல்ல. காமம் என்பது ஒரு
     பொருளின் மீது வைக்கின்ற அதிகப்படியான ஆசையும்  காமம் எனப்படும்.
     காமத்தின் மகன் கோபம், கோபத்தின் குமரன் மயக்கம்.
35. வசதியில்லாத புதுமண தம்பதியினர் கடவுள் படம் நிறைந்த அறையில்
     தாம்பத்தியம் வைக்க நேரிட்டால் அது தவறில்லை. 
     கணவனும்,மனைவியும் வாழ்வது பிழையன்று. "இல்லறம் அல்லது
     நல்லறமன்று" என்கிறார் ஔவையார் .
36. இறைவன் அனைத்து உயிரிலும் உள்ளான் எனவே கோவில்களில்
      உயிரினங்களை பலியிடக்கூடாது அது மிக பெரிய பாவமாகும் .
37. கோழி முட்டை சைவ உணவாகாது. அதில் கரு இருப்பதினால் அது மாமிச
      உணவே ஆகும். ( காந்தியடிகள் மருத்துவர் கூறியும் கோழி முட்டையை
      உண்ண  மறுத்தார் என்பதை அவரின் வரலாறு மூலம் அறிய முடிகிறது.)
38. பிறர் மனைவியை மனதினால்  கூட நினைக்கக்கூடாது, பிறர் சொத்தினை
     அபகரிக்க கூடாது, தேவையின்றி பருவ பெண்களை தொட்டு பேசக்கூடாது 
     அது நமது சகோதிரியாக இருந்தாலும் கூட.
39. எப்பொழுதும் பிறர் மனம் புண்படும்படி பேசக்  கூடாது. வாயில்லா
     ஜீவன்களை  துன்புறுத்தக்கூடாது.
40. தாய்,தந்தை, குரு  மற்றும் வயது முதிர்ந்த பெரியவர்களின்  சாபத்திற்கு
     ஆளாகக்கூடாது.
41. நமது கடமையை பிறர் செய்விக்க கூடாது.
42.தானம் தர யோசிக்கக்கூடாது, தந்தபின் தந்ததிற்காக வருந்தக்கூடாது,
     பெற்றவரின் சொத்தாக மாறிய பின் நாம் சொந்தம் கொண்டாட கூடாது.
43. இளைஞ்சர்கள் சிறிது நேரமாவது குழந்தைகள் மற்றும் உறவினருடன் பேசி
      பழகி இன்பதுன்பங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும்.
44. தீண்டாமையை ஒரு போதும் ஏற்கக்கூடாது. யாரையும் தள்ளிவைத்து   
      வாழ்தல் கூடாது.
45. அரசாங்க நெறிமுறைகளை தவறாமால் கடைபிடிக்க வேண்டும்.
      அரசாங்கத்துக்கு புறம்பாக நடக்க கூடாது. தவறை அகிம்சைவழியில்
      சுட்டிக்காட்டலாம், அதிகாரத்தை நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது.
46. வயதானவரையும், நோய்வாய்பட்டவரையும் அலட்சியம்  செய்தல்                       கூடாது. 
47.சாலை விதிகளை மீறக்கூடாது . சட்டம் பொதுவானது எந்த ஒரு தனி
     மனிதனும் அதனை மீறி நடக்க உரிமையில்லை.
48. இயற்கை வளங்களை அழித்தல் கூடாது.வாழும் காலத்தில் நம்மால் 
     முடிந்தது ஒரு மரமாவது வளர்க்கவேண்டும். நமக்கென என இருத்தல்   
      கூடாது.
49. மனைவியை தவிர பிற பெண்களிடம் உறவு வைத்தல் கூடாது.   
     ஒருவனுக்கு ஒருத்தி என மரபு மீறாமல் வாழ்தல் வேண்டும். பகல்
     பொழுதில் கணவன்,மனைவி உறவு வைத்தல் கூடாது. பெற்றோர்,   
     பெரியவர்கள்  மற்றும் குழந்தைகள் இருக்கும் போது கணவன்,  மனைவி 
     கண்ணியமின்றி  நடத்தல் கூடாது.
50. உணவு  பொருட்களில்  ஏமாற்றுதல் கூடாது. கையூட்டு பெறுதல்   பாவம்
      அதனை செய்யக் கூடாது.அது நேரடியாக இல்லாமல் மறைவாக பிறருக்கு
      செய்யும் துரோகம்.

நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து).......

 நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து)....... . இதய பிரச்சினைகளுக்கு, (ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன்...