Sunday, 4 January 2026

ஒரு குரு இருந்தார்.


 ஒரு குரு இருந்தார்.

ஒரு நாள் அவரை தேடி ஒருவன் வந்தான்.
ஐயா நான் ரொம்ப துன்பத்திலே இருக்கிறேன். அதிலிருந்து விடுதலையடைய ஆசைப்படுகிறேன். துன்பத்திலிருந்து நான் விடுதலை அடைந்து புத்தராக மாற வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும். சொல்லுங்கள் என்றான்.
அவ்வளவுதான் உடனே அந்த குரு மற்ற சீடர்களைக் கூப்பிட்டார். உடனே இந்த ஆளை இங்கிருந்து விரட்டுங்கள் என்றார் .
எல்லோரும் சேர்ந்து அந்த ஆளை ஓட ஓட விரட்டி அடித்தார்கள்.
அவன் ஓடிப் போய்விட்டான்.
என்ன இது அவன் எதுவும் தவறாக கேட்டுவிடவில்லையே ஒரு சாதாரண மனிதத்தன்மையுள்ள கேள்வியை உண்மையிலேயே ரொம்ப ஆர்வத்தோடுதான் கேட்டிருக்கிறான்.
எதற்காக இப்படி அவனை விரட்டி அடித்தார்கள்.
அநியாயம் என்றார் அங்கு இருந்த ஒருவர்.
அந்த குரு சொன்னார் அந்த ஆள் கேட்டது ரொம்ப முட்டாள்தனமானது. அதற்காகத்தான் அவனை விரட்டி அடித்தேன் என்றார்.
என்ன சொல்கிறீர்கள் என்று இழுத்தார் இவர்.
ஆமாம் அவன் ஏற்கனவே புத்தராகத்தான் இருக்கிறான். அதனால் அவன் புத்தராக மாற வேண்டும் என்று ஏதாவது முயற்சி செய்தால் அதை இழந்து விடுவான். நாங்கள் எதற்காக அவனை விரட்டினோம் என்பதை அவன் புரிந்து கொண்டால் அதன் பிறகு அவன் சகல முயற்சிகளையும் கைவிட்டு விடுவான்.
முயற்சி செய்து அடைவதற்கு அது ஒன்றும் உலகப் பொருள் அல்ல. அவன் எப்படி இருக்கிறானோ அப்படி இருந்தால் போதும் அவ்வளவுதான் என்றார்.
புத்தரை யாரும் அடைய வேண்டியதில்லை. அவர்களுக்குள்ளேயே இருக்கிறார். எப்பவும் இருந்து கொண்டிருக்கிறார் .
அதுதான் உங்களுடைய இயற்கைத்தன்மை.
அதைப் பற்றி விசாரிக்கவும் வேண்டாம்.
அதை அடைவதற்கு முயற்சி செய்யவும் வேண்டாம்.
சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும் விரட்டியடித்த அந்த ஆள் இன்னொரு குருவிடம் போய் அவரிடம் நடந்த விபரத்தை சொன்னான்.
அதன் பிறகு அவரிடம் அதே கேள்வியைக் கேட்டான்.
நான் புத்தராக மாற ஆசைப்படுகிறேன் என்ன செய்யலாம் என்றார்.
அவரும் இவனை விரட்ட ஆரம்பித்துவிட்டார். அங்கே இருந்தும் ஓடினான்.
இவர்களுக்கு எதிராக உள்ள இன்னொரு குருவிடம் போனான். இதே கேள்வியைக் கேட்டான்.
அவரிடம் இருந்த வாளை எடுத்துக் கொண்டு இவனை வெட்ட வந்துவிட்டார்.
மறுபடியும் அங்கிருந்து தப்பித்து ஓடினான்.
இவனக்கு ஒன்றும் புரியவில்லை எதற்காக இப்படி எல்லோரும் விரட்டுகிறார்கள்.
நாம் என்ன தப்பாக கேட்டுவிட்டோம் என்று யோசித்தான்.
அதன்பிறகு ஒருவரிடம் இதைப் பற்றி சொல்லி புலம்பினான்.
அவர் சொன்னார் நீ மறுபடியும் அந்த முதல் குருவிடம் போ.
அவர் ரொம்ப நல்லவர் பயப்படாமல் போ என்றார்.
இவனும் மறுபடியும் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரிடம் போனான்.
எதற்காக திரும்பி வந்தாய் என்று கேட்டார் அந்த குரு.
இவன் மெதுவாக ஆரம்பித்தான். ஐயா நீங்கள் எவ்வளவோ பரவாயில்லை.
விரட்டியதோடு விட்டீர்கள். மற்றவர்கள் எல்லாம் என்னை கொலை செய்யவே வந்து விட்டார்கள்.
அதனால் உங்களிடமே திரும்பி வந்து விட்டேன் என்றான்.
இப்போது அந்த குரு சொன்னார் தம்பி இது ஏற்கனவே எங்களுக்குள்ளே இருக்கிற ஒரு ஒப்பந்தம்.
நாங்கள் மூன்றுபேரும் பேசி வைத்துக்கொண்டு தான் இதுமாதிரி உன்னை விரட்டினோம். சரி அது போகட்டும் .
இனிமேல் நீ இங்கேயே இரு. ஆனால் அந்தக் கேள்வியை மறுபடியும் கேட்காதே.
ஏனென்றால் நீ எப்பவுமே அதுவாகத் தான் இருக்கிறாய்.
நீ புத்தர் மாதிரி வாழ்ந்தால் போதும் புத்தர் மாதிரி ஆக வேண்டும் என்று நினைக்காதே என்றார்.
அதன் பிறகு அந்த மனிதன் ஞான நிலையை அடைந்தான்.
புத்தத்தன்மை என்பதே நீங்கள் நீங்களாகவே இருப்பதுதான். நீங்கள் இன்னொருவராக மாறுவது புத்ததன்மை இல்லை.
நீங்கள் உங்கள் தன்மையில் வாழும் போது எல்லாம் உங்களை வந்து சேரும்.
எவ்வித முயற்சியும் இல்லாமல் அந்த வெறுமையை உங்களால் பிடிக்க முடியும் என்கிறார் ஓஷோ.
இன்றைக்கு பல சந்தர்ப்பங்களில் நாம் நாமாக இருப்பதில்லை அதுதான் வேதனை. 🙏🙏🙏

ஒரே பீடத்தில் இரண்டு சிவலிங்கங்கள்

 


ஒரே பீடத்தில் இரண்டு சிவலிங்கங்கள்! 🔱 நீங்கள் தரிசிக்க வேண்டிய அதிசய திருத்தலம் - பெருவனம் இரட்டையப்பன் கோயில்! 🙏

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பெருவனம் அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் பல ஆன்மீக ரகசியங்களைக் கொண்டது. இந்தத் தலத்தின் சிறப்புகளைத் தெரிந்துகொண்டு, ஒருமுறை தரிசித்து வாருங்கள்! 🌸
✨ இந்தக் கோயிலின் தனிச்சிறப்புகள்:
✅ இரட்டையப்பன்: இக்கோயிலின் மிகப்பெரிய அதிசயம் ஒரே ஆவுடையில் (பீடத்தில்) இரண்டு சிவலிங்கங்கள் இருப்பதுதான்! இதனால் சிவபெருமான் இங்கே "இரட்டையப்பன்" என்று அழைக்கப்படுகிறார்.
✅ அர்த்தநாரீஸ்வரர் கோலம்: இங்கே சிவன் மேற்கு நோக்கி அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தருகிறார். அவருக்குப் பின்புறம் அன்னை பார்வதி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். 🔱
✅ பரசுராம பிரதிஷ்டை: கேரளா உருவான காலத்திலேயே பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மிகத்தொன்மையான தலம் இது.
✅ தலைமைத் தலம்: இக்கோயிலைச் சுற்றி 24 உப கோயில்கள் உள்ளன. இந்த 24 கோயில்களிலும் திருவிழா தொடங்கும் முன்பு, பெருவனம் சிவனிடம் அனுமதி பெறுவது இன்றும் மாறாத மரபு! 🚩
✅ காவல் தெய்வங்கள்: கோயிலின் நான்கு திசைகளிலும் நான்கு சாஸ்தாக்கள் (ஐயப்பன்) காவல் தெய்வங்களாக வீற்றிருக்கிறார்கள்.
🙌 வழிபாட்டுப் பலன்கள்:
🔹 பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், தம்பதி ஒற்றுமை பெருகவும் இத்தலம் மிகவும் விசேஷமானது. 👨‍👩‍👧‍👦
🔹 திருமணத் தடைகள் நீங்க இங்குச் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்படுகிறது. 💍
🔹 கல்வி மற்றும் தொழிலில் வெற்றி பெற 'சங்காபிஷேகம்' சிறந்த நேர்த்திக்கடனாகும். 📚💼
🔹 60, 70, 80 வயது பூர்த்தியடைந்தவர்கள் நீண்ட ஆயுளுக்காக இங்கு 'மிருத்யுஞ்ஜய ஹோமம்' செய்கின்றனர். 😇
⏰ தரிசன நேரம்: காலை 5:00 - 10:30 மணி வரை. மாலை 5:00 - இரவு 8:00 மணி வரை.
📍 அமைவிடம்: பெருவனம், திருச்சூர் மாவட்டம், கேரளா.
இந்த அறிய தகவலை உங்கள் நண்பர்களுக்கும், ஆன்மீக அன்பர்களுக்கும் பகிருங்கள்! 🔄 "ஓம் நமச்சிவாய

கேஸ் அடுப்பை சிம்மில் வைத்தால் கேஸ் உபயோகம் குறையுமா? -என்பது கேள்வி.


 கேஸ் அடுப்பை சிம்மில் வைத்தால் கேஸ் உபயோகம் குறையுமா? -என்பது கேள்வி.

சிம்மில் வைத்தால் கேஸ் பயன்பாடு அந்த நேரம் நிச்சயம் குறையும். ஆனால் அது எதனை நீங்கள் எவ்வளவு நேரம் சூடுபடுத்த வேண்டியதுள்ளது என்பதைப் பொறுத்தது.
ஒரு பாத்திரத்தில் 3 லிட்டர் தண்ணீரை 100° கொதிக்க வைக்க பர்னரை முழு அளவில் எரிய வைத்தால் இது கொதிப்பதற்கு சுமார் 15 நிமிடங்கள் ஆகும். இதையே பர்னரை சிம்மில் வைத்திருந்தால் தண்ணீர் 100° கொதிக்க 40 நிமிடங்கள் வரை ஆகும்! எனவே தண்ணீர் கொதிக்க இரண்டிற்கும் ஆகும் கேஸ் செலவு கிட்டத்தட்ட ஒரே அளவாகத்தான் இருக்கும்; நேரம்தான் வித்தியாசம்!
கேஸ் அடுப்பில் 2 , 3 அல்லது 4 என அளவில் வித்தியாசமான பர்னர்கள் அமைத்திருப்பது நாம் அதிகமான பாத்திரங்களில் ஒரே நேரத்தில் உணவை விரைவில் சமைப்பதற்கு வசதியாக இருக்க மட்டுமே!
வீட்டில் ரோஸ்ட் தோசை சுடுவதானால் அடுப்பின் மீடியம் பர்னரை முதலில் முழு அளவில் எரியச் செய்து தோசைக்கல்லை முதலில் முழு அளவில் சூடுபடுத்த வேண்டும். தோசை மாவை கல்லில் ஊற்றி பரவலாகத் தேய்தவுடனேயே உடனடியாக அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். இவ்வித வேலைகளுக்காக பர்னர்கள் குறைத்துக் கூட்டும் விதமாக அமைந்து உள்ளது.
பர்னர்கள் சிறிது ,நடுத்தரம், பெரியது என அமைக்கப்பட்டுள்ளதற்கும் இவைகளைக் கூட்டிக் குறைக்கும் விதமாக அமைந்துள்ளது நாம் எதனை எப்படி அந்த கேஸ் அடுப்பில் சமைக்கின்றோம் என்பதற்காகவே.
நீங்கள் புதிதாக கேஸ் அடுப்பு வாங்குவதென்பது உங்கள் குடும்பத்தின் தேவை, அளவு மற்றும் வசதியைப் பொறுத்ததே.
வேலைக்குப் போகும் பெண்களுக்கு அதிக பர்னர்கள் உள்ள அடுப்பு மிகவும் சிறந்தது. இதனால் ஒரே நேரத்தில் வெவ்வேறு பாத்திரங்களில் உணவை வைத்து துரிதமாக சமையல் வேலைகளை முடிக்க இயலும்.
மற்றபடி பர்னரைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள உள் தட்டுகள் சுலபமாக எடுத்து சுத்தம் செய்ய வசதியாக இருக்க வேண்டும். பால் பொங்கி வழிந்தால் இவைகளை சுலபமாக எடுத்து சுத்தம் செய்து பொருத்த வசதியாக இருக்க வேண்டும்.
எவர்சில்வர் அடுப்புகளை விட கிளாஸ் டாப் அடுப்புகளானால் இதனை சுத்தம் செய்வது சுலபமாக இருக்கும்.
அடுப்பின் பித்தளை பர்னர்கள் முந்தைய அலுமினிய பர்னர்களை விட சுத்தம் செய்வது இலகுவானது

ஒரு ஊரில் ஒரு பெரிய ஞானி இருந்தார்.


 



ஒரு ஊரில் ஒரு பெரிய ஞானி இருந்தார்.

அவர் படுக்கையில் இருந்தார்.
இன்னும் கொஞ்ச நேரம்தான் இந்த உலகத்தில் இருக்கப் போகிறார்.
அவரைச் சுற்றி ஏகப்பட்ட கூட்டம்.
ஏற்கனவே அவருடைய உபதேசங்களை கேட்டவர்கள் பலபேர் வந்து அவரைச்சுற்றி நிற்கிறார்கள்.
அந்த ஞானி மெதுவாக கண்ணை திறந்து பார்க்கிறார்.
எல்லோரும் அவருடைய கடைசி வார்த்தையை கேட்பதற்கு ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த ஞானி மெதுவாக எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்.
நான் என்னுடைய வாழ்நாள் பூராகவும் உங்களுக்கு நிறைய போதனைகள் சொல்லிக்கொண்டு வந்தேன்.
பேரானந்தம் , மகிழ்ச்சி , தியானம், இதைப்பற்றியெல்லாம் சொல்லியிருக்கிறேன்.
இப்போது நான் வேறு ஒரு கரைக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.
இனிமேல் திரும்பி வரமாட்டேன்.
நீங்கள் நான் சொன்னதை எல்லாம் கேட்டீர்கள். ஆனால் எதையும் நடைமுறைப்படுத்தி பார்க்கவில்லை. எல்லாம் கேட்டது மட்டுமே!
பின்னர் அதை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தீர்கள். மேலும் அதைத் தள்ளிப் போடுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை . இப்போது நான் போய்க் கொண்டிருக்கிறேன் உங்களில் யாராவது என்னோடு வருவதற்கு தயாரா ? என்று கேட்டார்.
அவ்வளவுதான் யாரும் வாய் திறக்கவில்லை.
ஒரே மௌனம். சத்தமே இல்லை. ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டே நிற்கிறார்கள் .
அந்தக் கூட்டத்தில் ஒரு ஆள் அந்த ஞானி உடன் 40 வருடத்துக்கு மேலாக இருக்கின்றவன் அவனும் வாய் திறக்காமல் இன்னொருத்தன் முகத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறான்.
இந்த சமயத்தில் பின்னால் நின்று கொண்டிருந்த ஒருவன் கையை தூக்கினான்.
ஞானி அவனைப் பார்த்தார் சரி ஒருவனாவது நம்மோடு வருவதற்கு தயாராக இருக்கிறான் என்று நினைத்தார்.
ஆனால் அந்த ஆள் என்ன சொன்னார் தெரியுமா?
ஐயா நீங்கள் கேட்கும்போது நான் உடனே எழுந்திருக்கவில்லை. கையை மட்டும் தான் தூக்கினேன். என்ன காரணம் என்றால் நான் எப்படி அடுத்த கரைக்கு வந்து சேர்வது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
அந்த விவரத்தை மட்டும் உங்களிடமிருந்து தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
ஏனென்றால் இப்போது நான் உங்களுடன் வருவதற்கு தயாராக இல்லை.
எவ்வளவோ காரியங்கள் நான் இன்னும் இங்கே முடிக்க வேண்டியிருக்கிறது.
வீட்டுக்கு விருந்தினர் வந்திருக்கிறார்.
என்னுடைய மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டி இருக்கிறது.
அதனால் இன்றைக்கு உங்களோடு வர முடியவில்லை.
அது மட்டும் இல்லாமல் இப்போது உங்களுடன் அடுத்த கரைக்கு வந்தால் திரும்பி வர முடியாது என்று சொல்கிறீர்கள்.
அதனால் இப்போது நான் வரவில்லை. இன்னொரு நாள் நிச்சயமாக அங்கு வந்து உங்களை சந்திக்கிறேன்.
அதனால் நீங்கள் இன்னொரு தடவை அந்தக் கரையை அடைவது எப்படி என்பதை எங்களுக்கு விளக்கமாக சொல்லவேண்டும். ஏற்கனவே பல தடவைகள் சொல்லி இருக்கிறீர்கள்.
தயவுசெய்து இந்த ஒரு தடவை சொன்னீர்கள் என்றால் உதவியாக இருக்கும்.
அடுத்த கரையை அடைவது எப்படி என்பதை நான் ஞாபகப்படுத்தி கொள்வேன் என்றார்.
ஆனால் உண்மை என்ன தெரியுமா? இந்த சரியான சமயம் வரவே இல்லையாம்.
இந்த கதை அந்த ஒரு ஆளுக்கு மட்டும் அல்ல.
கிட்டத்தட்ட நம் எல்லோருக்கும் இது பொருந்தும்.
எல்லோரும் அந்த சரியான தருணத்திற்காகதான் காத்துக் கொண்டிருக்கிறோம்.
அதற்காக ஜோசியம் பார்க்கிறோம். கைரேகை பார்க்கிறோம்.
நாளைக்கு என்ன நடக்கும் என்ற ஆவலில் இருக்கிறோம்.
ஆனால் அந்த ஒரு நாள் ஒருபோதும் வரப்போவதில்லை.
நாம்தான் தள்ளிப் போடுவதற்காக பல அர்த்தமில்லாத காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம். காத்திருப்பதில் நமது வாழ்வு முடிகின்றது.
இன்றைய சிந்தனை நமக்கு இருப்பதில்லை. நாளைய சிந்தனையில் இன்றைய பொழுதை ஓட்டி விடுகிறோம். நாளைக்கு நாளை மறுநாள் பற்றிய சிந்தனை. இப்படியே போய்க் கொண்டிருக்கிறது நம் வாழ்க்கை.
நம்முள் மாற்றம் ஏற்படாமல் இப்படி இருக்கின்ற வாழ்க்கையில் அடுத்த கரையை அடைவது என்பது சாத்தியமில்லாத ஒன்று.

எதற்கும்_சத்தியம்_செய்யாதீர்கள்.


எதற்கும்_சத்தியம்_செய்யாதீர்கள்.

👍🏾#சிலர்_எதற்கெடுத்தாலும் சத்தியம் செய்வார்கள்.
#சத்தியம்_என்பது சாதாரண வார்த்தையல்ல. ஒரு சத்தியம் செய்து விட்டால் அந்த சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும், அல்லது செய்து முடிக்கவேண்டும். நாம் செய்யும் சத்தியத்தை காப்பாற்ற முடியுமா? என்றால் மிக மிக குறைவே. சிலர் தெய்வத்தின் பெயரைச்சொல்லியும், விளக்கின்மீது சத்தியம் செய்தும், சிலர் தன் தலைமீது அல்லது பிள்ளைகளின் தலை மீது சத்தியம் செய்தும் வருகிறார்கள். இது மாபெரும் குற்றமாகும். அதைவிட சிலர் கோயில் முன்பு கற்பூரத்தை ஏற்றி சத்தியம் செய்வார்கள். இப்படிப்பட்ட செயலை இவர்களுக்கு யார் சொல்லிக்கொடுத்தார்களோ தெரியவில்லை. குற்றத்திலிருந்து தப்பிக்கவே இந்த சத்தியம் என்ற சொல் பயன்படுகிறது. சில நேரங்களில் நீதியை நிலைநாட்டப் பயன்படுகிறது. சில வேளைகளில் கட்டாயமாகப் பயன்படுத்தப்படுகிறது.
சத்தியம் என்ற வார்த்தை சாதாரண வார்த்தையல்ல. ராகு பகவானுக்கு அதிதேவதை காளியம்மனாகும். சத்தியம் செய்பவர்கள் அந்த காளியின் சாபத்திற்கும் ஆளாகிறார்கள். இதுவரை எதற்கெடுத்தாலும் சத்தியம் செய்தவர்கள் படும் கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதை அனுபவித்தவர்களுக்கேத் தெரியும். அவர்களுடைய ஜாதகத்தைப் பார்த்தால் யோகமாக இருக்கும். ஆனால் அவர்கள் படும் கஷ்டம் பாவமாக இருக்கும். சொல்ல முடியாத கஷ்டத்தில் தத்தளித்துக் கொண்டிருப்பார்கள். அதை சிலர் முன்ஜென்ம பாவம் என்றும், முன்னோர்கள் சாபமென்றும் சொல்வார்கள். அவர்களைக் கேட்டுப்பார்த்தால் எங்கோ எப்போதோ ஒரு சத்தியம் செய்திருப்பது தெரியவரும்.
புராணங்களில் சத்தியத்தைக்காப்பாற்ற எவ்வளவு அனுபவித்தார்கள், கஷ்டப்பட்டார்கள், துன்ப பட்டார்கள் என்பதைப் பார்க்கலாம். சபதமும்-சத்தியம்போல்தான். சபதத்தை நிறைவேற்ற போராட வேண்டும். சத்தியத்தைக் காப்பாற்ற கஷ்டப்படவேண்டும். மக்கள் சத்தியத்தை காப்பாற்ற முடியாமல் போனால் காளியின் கோபத்திற்கும் ஆளாகலாம். காளிதேவி அதிவேக சக்தி. அவள் சத்தியத்திற்கு காவளாக இருக்கிறாள். அந்த சத்தியத்தை தவறுபவர்களை அவள் கண்டிப்பாக தண்டிப்பாள். அதனால் சத்தியம் செய்யாதீர்கள். சத்தியத்தை காப்பாற்ற முடியும் என்பவர்கள் மட்டும் சத்தியம் செய்யுங்கள். சத்தியம் செய்வது. ஒரு நொடியில் நடப்பது. ஆனால் அந்த சத்தியத்தைக் காப்பாற்ற எவ்வளவு காலம் போராட வேண்டும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
பிள்ளைகளுக்கு பெற்றவர்களும், ஆசிரியர்களும் இந்த சத்தியம் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லிவரலாம். ஆண் தெய்வங்களின் மீது சத்தியம் செய்தால் உங்கள் குடும்பத்திலுள்ள ஆண்கள் பாதிக்கப்படுவார்கள். ஆண் பிள்ளைகள் இல்லையென்றால் உங்களுக்கு பின்வரும் சந்நதியில் பாதிக்கப்படுவார்கள். பெண் தெய்வங்களின் மீது சத்தியம் செய்தாள் உங்கள் குடும்பத்திலுள்ள பெண்கள் பாதிக்கப் படுவார்கள்.
இந்த சத்தியத்தால் விளையும் வினைகளை உடைத்தெரிபவள் காளி மட்டுமே. அவளை முறைப்படி வணங்கினால் மட்டுமே அந்த மறந்துவிட்ட, மறைக்கப்பட்ட சத்தியத்தின் பாதிப்பு விலகும்

உடல் கழிவுகளை வெளியேற்றக்கூடிய ஒரு அற்புதமான மருத்துவ குறிப்பு

 


உடல் கழிவுகளை வெளியேற்றக்கூடிய ஒரு அற்புதமான மருத்துவ குறிப்பு

➡️ இது சித்தர்கள் கூறிய மலமிளக்கி. பொதுவாக அது வாதமாகட்டும், பித்தம் ஆகட்டும், கபம் ஆகட்டும் உடல் கழிவுகள் சரிவர நீங்கினால் மட்டுமே, வாதம், பித்தம், கபம் மூன்றும் தன்னிலை பெறும்.
ஒரு பழமொழி ஒன்றும் சொல்வார்கள்.
"வாதம் தீருவது பேதியாலே "
"பித்தம் தீர்வது வாந்தியாலே"
"கபம் தீர்வது நசியத்தாலே"
ஆகையால் தான் வாத நோயாளிகள் வரும் பொழுது முதலில் பேதி மருந்து எடுத்து, குடல் சுத்தி செய்து வாதத்தை தன்னிலைப்படுத்தி அதன் பிறகு, இரண்டாவது நாளில் இருந்து மருந்து எடுக்க வேண்டும் என்றும் சொல்வது உண்டு.
➡️ மூன்று மாதம் அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை பேதி மருந்து எடுத்து குடல் சுத்தம் செய்ய வேண்டும்.
தற்போது இருக்கின்ற காலகட்டத்தில் அனைவரும் கட்டாயமாக மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூட சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு குடல் சுத்தம் செய்வதற்கு பல மருந்துகளை பற்றி நாம் ஏற்கனவே பார்த்து உள்ளோம். குறிப்பாக அகஸ்தியர் குழம்பு அற்புதமான பேதி மாத்திரை. மேலும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கக்கூடிய ராஜ பேதி மாத்திரை. அல்லது கௌசிகர் குழம்பு இதுபோன்று நிறைய பேதி மருந்துகள் உள்ளன.
➡️ நாம் தற்போது பார்க்க இருப்பது தினமும் இரவில் எடுக்கக் கூடிய அற்புதமான உடல்கழிவுகளை நீக்கும் சூரணம். மேற்கத்திய நாடுகளில் சொல்லக்கூடிய அதாவது Western detoxification எல்லாம் இதற்கு முன்னால் ஒன்றுமே இல்லை என்றே சொல்லாம்.
➡️ உடல் கழிவு நீக்கிக் கொள்வதற்காக நாம் பலவிதமான பச்சிலைகள், சில காய்கறிகளின் சாறு என்று எடுத்துக் கொண்டாலும் அவையும் உடல் கழிவுகளை நீக்கும் ஆனால், முழுமையாக உடல் கழிவுகளை நீக்கும் என்று கூற முடியாது. மேலும், தற்போது நாம் பார்க்கக் கூடிய மருந்தே மிகச் சிறந்த detoxification. ஆக உடல் கழிவுகளை தினம் தினம் அன்றன்றே நீக்கிக்கொள்ள வேண்டும்.
➡️ பொதுவாக நம்முடைய உயிர் ஆனது ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று கட்டுகளால் ஆனது . அதேபோல் நமது உடல் ஆனது நீர்க்கட்டு,மலக்கட்டு மற்றும் கபக்கட்டு இவற்றினால் ஆனது.
இந்த மூன்று கட்டுகளையும் உடைக்க வேண்டும். இதற்கு மிகவும் அற்புதமான பொருட்கள் இரண்டு மட்டும் தான். அவை, கடுக்காய் மற்றும் சிவதை சூரணம்.
*🌷கடுக்காய்:* தாயை விட ஒரு படி மேலானது கடுக்காய். சுத்தி செய்த கடுக்காய் பொடி தேவையான அளவு.
🌷சிவதை சூரணம் :
சிவதை சூரணத்திற்கு உடல் கழிவுகளை வெளியேற்றும் ஒரு அற்புதமான குணம் உண்டு. சில பேர்க்கு வயிறு உப்புசத்தின் காரணமாக பசியே எடுக்காது. வயிற்றில் வாயு சேர்ந்து விடும். ஆக, வாயுவின் உற்பத்தி மூலக்கூறு எங்கே இருக்கின்றது என்றால் வயிற்றில். வயிற்றில் வாயு சேரும் அதுமட்டுமல்லாமல் , வயிற்றில் கபம் உருவாகும். இவ்வாறு கபம் உருவாவதால் பித்தம் என்ற தீ குறைந்து விடும். கபம் மேலோங்குவதால் பித்தம் குறைந்து விடும். நீர் மேலோங்குவதால் அங்கு நெருப்பு இருக்க முடியாது. இதன் காரணமாக பசியே இல்லை என்று சொல்வார்கள். இது போன்ற பிரச்சனைகளுக்கு எல்லாம் வயிற்றில் உள்ள கபத்தை நீக்கி, உடல் கழிவுகளை முறையாக வெளியேற்றி, நீர்கட்டு, மலக்கட்டு, கபக் கட்டு இவற்றை நீக்கி, உடலை அற்புதமாக பொன் போன்று மாற்றக்கூடிய ஒரு சூரணம் தான் கடுக்காயும், சிவதை வேர் சூரணமும்.
➡️ சூரணத்திற்கு தேவையான பொருட்கள்:
🌷 கடுக்காய் தோல் பொடி 50g (சுத்தித்தது).
🌷 சிவதை வேர் சூரணம் அல்லது திரிவிருட்சூரணம் - 50g.
* இரண்டையும் சம அளவு கலந்து கொள்ள வேண்டும். தற்போது உடல் கழிவு நீக்க சூரணம் தயார்.
➡️ imcops - ல் சித்தாவில் சிவதை வேர் பொடிச் சூரணம் கிடைக்கின்றது. அல்லது imcops - ல் சித்தாவில் ஆயுர்வேதா மருந்து, திருவிருட்சூரணம் என்று கிடைக்கிறது. இந்த இரண்டில் எது கிடைத்தாலும் வாங்கிக் கொள்ளலாம்.
➡️ கடுக்காய் சுத்தி செய்யும் முறை :
கடுக்காயை அரிசி கழுவிய தண்ணீரில் ஒரு ஆறு மணி நேரம் அல்லது 8 மணி நேரம் நன்கு ஊற வைத்து அதன் பிறகு கடுகாய்தோலை மட்டும் எடுத்து வெயிலில் நன்கு காய வைத்து, நன்கு காய்ந்த பிறகு பொடி செய்து கொள்ளவேண்டும். கொட்டையை பயன்படுத்தக் கூடாது. தூக்கி போட்டு விடவும். இதுவே கடுக்காயின் பொதுவான சுத்திமுறை.
➡️ சூரணத்தை பயன்படுத்தும் முறை :
இவ்வாறு கடுக்காய் தோல் பொடி மற்றும் சிவதை வேர் பொடி சம அளவு கலந்த சூரணத்தை தினமும் இரவு சாப்பாட்டுக்கு பிறகு 9 முதல் ஒன்பது முப்பது மணி வரையில் ஒரு அரை டீஸ்பூன் அதாவது இரண்டு முதல் 3 கிராம் அளவு சுடு தண்ணீரில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு எடுத்துக் கொள்ளும்போது சிலருக்கு முதல் நாள் மட்டும் பேதி அதிகமாக செல்லும். கவலைப்பட தேவையில்லை. இரண்டு மற்றும் மூன்று நாட்களில் இருந்து சாதாரணமாகவே பேதியாகும்.
ஆனால், ஒரு சிலருக்கு இரண்டு மட்டும் மூன்றாம் நாட்களிலும் பேதி அதிகமாக போவதாக இருந்தால் 1/2 டீஸ்பூன் இந்த பொடியை சுடு தண்ணீரில் கலந்து அதனுடன் சில துளிகள் எலுமிச்சை பழச்சாறு கலந்து அருந்தலாம். இவ்வாறு எடுத்துக் கொள்வதால் அதிகமாக செல்லக்கூடிய பேதி கட்டப்பட்டு சாதாரணமாகவே கழிவுகள் உடலை விட்டு சீராக வெளியேறும்.
➡️ இந்த சூரணம் ஒரு சாதாரண மலமிளக்கி என்று எண்ணுதல் கூடாது. இது உடலை நோய் வராமல் பாதுகாக்க கூடிய ஒரு அற்புதமான ஒரு திவ்ய ஔஷதம் ஆகும். இந்த சூரணம் நோயினுடைய அடிக்கூறினை முழுவதுமாக வேர் அறுக்கக்கூடிய ஒன்றாகும். இந்த சிவதை வேர் பொடியும், கடுக்காய் தோல் பொடியும் கலந்த ஒரு சூரணம்.
அனைவரும் பயன்படுத்தி உடல் நலம் காப்போம். ஆரோக்கியமாக வாழ்வோம்.

கருடரஹஸ்யம்


 *#கருடரஹஸ்யம்*👆👇

🦅🦅🦅🦅🦅***********************🦅🦅🦅🦅🦅
🦅சிலவற்றைப் பார்த்தால் யோகம். சிலவற்றைப் பார்க்காமல் இருந்தால் யோகம். பார்க்க வேண்டிய விஷயங்களைப் பார்ப்பதன் மூலம் நம்முடைய யோக பலன்களை வளர்த்துக் கொள்ளலாம்.
🦅உயர்ந்த விஷயங்களைப் பார்ப்பதை தரிசனம் என்று சொல்கிறோம்.
🦅கோயில்களுக்குச் சென்று இறைவனை, “பார்த்துவிட்டு வந்தோம்” என்று சொல்வதில்லை. “தரிசனம் செய்து விட்டு வந்தோம்” என்றுதான் சொல்கிறோம்.
எந்த தரிசனம் உயர்ந்ததோ, மங்கலமானதோ அதற்கு *சுதர்சனம்* (நல்ல தரிசனம்) என்று பெயர்.
🦅சில பெருமாள் கோயில்களில் தனியாக சுதர்சனர் சந்நதி இருக்கும். அதைத்தவறாமல் தரிசித்து வர வேண்டும்.
🦅‘‘ *வனமாலி கதி சார்ங்கி சங்கீ சக்ரீச நந்தகி ஸ்ரீமன் நாரயணோ* *விஷ்ணுர் வாசு தேவோ அபி ரக்ஷது* .
🦅 ”என்று சொல்லித் தான், பெருமாளை சொல்வார்கள். அவ்வகையில் #தரிசனங்களில்உயர்ந்ததரிசனம்கருடதரிசனம்
🦅பெருமாள் கோயில்களில் நான்கு மூலை களிலும் கருடனை தரிசிக்கலாம். கருடன் சந்நதி, பலிபீடம், கொடிமரம் பிறகுதான் பெருமாள் சந்நதி.
🦅பெருமாள் கோயிலை “ *புள்ளரையன் கோயில்* ’’ என்றே ஆண்டாள் பாடுகிறாள்.
🦅`புள்’ என்றால் பறவை. `அரையன்’ என்றால் தலைவன். பறவைகளுக்கு தலைவன் அல்லவா கருடன்.
🦅கருடன், கச்யபர் – விநதை தம்பதிக்கு இரண்டாவது மகனாவார். ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். கருடாழ்வார்,
🦅மங்களாலயன், பக்ஷிராஜன், சுபர்ணன், புஷ்பப்பிரியன், வினதைச் சிறுவன், வேத ஸ்வரூபன், வைனதேயன் போன்ற எண்ணற்ற பெயர்களால் அழைக்கப் படுகிறார்.
🦅இவருக்கு ருத்ரை மற்றும் சுகீர்த்தி என்னும் இரண்டு மனைவியர் உள்ளனர்.
இன்றைக்கும் பல ஊர்களில் ஆயிரக் கணக்கான மக்கள் கருட தரிசனத் திற்காக மாலை வேளையில் காத்திருப்பதைக் காணலாம்.
🦅குறிப்பாக, வியாழக் கிழமைகளில் கருட தரிசனத்தைக் காண்பதற்காக சில குறிப்பிட்ட இடங்களைத் தேர்ந்தெடுத்து மக்கள் கூடுகிறார்கள்.
🍁ஆயிரம் ஆயிரம் சுப சகுனங்கள் கிட்டினாலும் #ஒரு_கருடதரிசனத்திற்கு ஈடாகாது ! தன்னிகரற்றது கருட தரிசனம் ! கருடன் மட்டுமே இறக்கைகளை அசைக்காமல் பறக்கும் சக்தி உடையவர்.
🦅 *எனவே உயர பறக்கும் போது இறக்கைகளை அசைக்காமல் இருந்தால், அது கருடன் என்று முடிவு செய்யலாம்.*
🦅வானத்தில் கருடனைப் பார்க்கும் போது கைகூப்பி வணங்கக் கூடாது. கன்னத்தில் போட்டுக் கொள்ளவும் கூடாது. “ *#மங்களானி_பவந்து’* ’ என மனதில் சொல்லிக் கொள்ள வேண்டும்.
🦅 *கெட்ட சகுனங்கள், துர்சேட்டைகள், துர்குறிகள் போன்ற அசுபங்கள் அனைத்தும் கருட தரிசனத்தால், சூரியனைக் கண்ட பனிபோல் பறந்தோடி விடும்* !
🦅பெருமாள் கோயில்களில் உற்சவங்கள் நடக்கின்றபொழுது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகன சேவை நடக்கும்.
🦅அதிலே கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருள்வதை காண்பதற்காக கூட்டம் அலை மோதும். அதனை `கருட சேவை’ என்கிறோம்.
🦅திருவரங்கம், காஞ்சிபுரம், திருப்பதி, நவதிருப்பதிகள், திருநாங்கூர், திருநாராயணபுரம் நாச்சியார் கோவில் ஆகிய திருத் தலங்களில் நிகழும் கருட சேவைகள் தனிச் சிறப்பு டையது.
*#காஞ்சியில்கருடசேவையை அதிகாலையில் தரிசிப்பது மிகவும் விசேஷம்.*
🦅எல்லா திவ்ய தேசங்களிலும் இரண்டு கரங்களையும் குவித்து வணங்கும் கருடாழ்வாரைத் தான் காணமுடியும். திருக்கண்ணங்குடி என்ற திவ்ய தேசத்தில் மட்டும் இரண்டு கைகளையும், கட்டிக் கொண்டு தரிசனம் தருகிறார்.
இந்தக் காட்சி, வைகுண்டத்தில் கருடன் எழுந்தருளி யுள்ள காட்சியாகும்.
🦅கருடனை ` *#வேதாத்மா* ’ என்று நமது இந்து மத பெரியோர்கள் வர்ணிக்கிறார்கள். வேதத்தின் பொருளாகிய பெருமாள், வேதத்தின் மீது ஆரோகணித்து வருவதைத்தான் கருட சேவை என்று நாம் சொல்கிறோம்.
🦅சாதாரணமாக நாம் கருடனை தரிசிக்கும் பொழுது, பெருமாளை தன் முதுகில் சுமந்து கொண்டு, யாரோ ஒரு பக்தனைக் காப்பாற்று வதற்காக விரைவாகப் போகிறார் என்று கிராமத்தில் நமது பெரியோர்கள் சொல்லுவார்கள். அந்த நேரத்தில் நாம் அவரை தரிசிக்கும் பொழுது நம்முடைய தோஷங்கள் எல்லாம் விலகி விடும்.
🦅 *கருடாழ்வாருக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து, மல்லிகைப்பூ, மரிக்கொழுந்து, கதிர்ப்பச்சை (தமனகம்), செண்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது.*
🦅சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடியில் எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீநிவாசப் பெருமாள். இங்கு #மூலைக்கருடன் வழிபாடு சிறப்பானது.
நல்லது நடக்கவும், தீமைகள் மறையவும் இங்கு மூலைக் கருடனுக்கு சிதறுகாய் உடைப்பது வழக்கம். கருடனைப் போல், வேதம் பிரத்யட்சமாக தெரியும்.
🦅ஆனால், கருடன் மீது கண்ணுக்குத் தெரியாமல் அமர்ந்து செல்லும் பெருமாளை போல, வேதத்தின் பொருளை உணரத் தான் முடியும். அது கண்ணுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் அர்ச்சாவதார பெருமாளை கருடன் மீது ஆரோகணம் செய்து கருட சேவை நடத்துகின்றோம்.
🦅பெருமாளைக் காண்கின்ற கண்களால் கருட தரிசனத்தையும் காண வேண்டும்.
🦅கருடனைத் தரிசிப்பது #சுபசகுனம் ஆகாயத்தில் கருடன் வட்டமிடுவதோ, குரலெழுப்புவதோ நல்லதொரு அறிகுறி. “ *#கருடத்வனி* ” என்ற ஒரு ராகமே உண்டு. அதனைக் கேட்பது புண்ணியமானது.
🦅ராமாயணத்தில் ராம, லட்சுமணர்கள், விஷ அம்பால் அடிபட்டு மயக்க முற்று இருக்கின்றார்கள். பகவானே மனுஷ ரூபம் எடுத்து வந்ததால் அஸ்திர சஸ்திரங்களுக்கு கட்டுப்பட்டவன் போல் நடந்து கொள்ளுகின்றான்.
🦅அப்பொழுது கருடன் மேலே பறந்து வர, அந்த நிழல் பட்டு, உடம்பில் தைத்திருந்த விஷ அம்புகள் நீங்குகின்றன.
🦅 *மனதில் தெளிவின்மையும், மயக்கமும், குழப்பமும், தோஷங்களும் விஞ்சி நிற்கின்ற பொழுது, கருட தரிசனத்தைக் காண்பதன் மூலமாக, தெளிவு பிறக்கும் என்பது சான்றோர் வாக்கு. அதனால், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கருட தரிசனம் காண்பதன் மூலமாக நம்முடைய தோஷங்கள் நீங்கும். மனம் தெளிவு பெறும். செயல்கள் வெற்றி பெறும்.*
🦅 *கருடனின் நிழல் பட்ட நிலத்தில் நல்ல விளைச்சல் உண்டாகும்.* காரணம், வேத ஒலிகளுக்குத் தாவரங்களை நன்கு வளர வைக்கும் சக்தி உண்டு.
🦅 *கருட புராணத்தை அமாவாசை, பவுர்ணமி, மாதப் பிறப்பு, கிரகணம், சிராத்தம் போன்ற முக்கிய தினங்களில் படிப்பது காரியத் தடைகளை அகற்றி ஜெயம் அளிக்கும்.*
🙏 *கருடனைத் தரிசித்தால் கிடைக்கும் நன்மைகள் அபாரமானது.*
🙏முதலில் கருட சேவையைத் தரிசிப்பதன் மூலம் அக அழுக்கு களாகிய பாவம் போகும்.
🦅ஜாதகத்தில் பல தடைகளை உண்டு பண்ணும், ராகு – கேது தோஷமாகிய நாக தோஷம் போகும்.
🦅சுப காரியத் தடைகள் நீங்கும். தோல் வியாதிகள், நீண்ட நாள் வியாதிகள் குணமாகும்.
🦅கருட பஞ்சமி நாளில் விரதமிருந்து கருடனைப் பூஜை செய்ய, பிறக்கும் குழந்தைகள் அறிவும், வீரமும் உடையவர்களாக விளங்குவர்.
' கருட தரிசனம்
ஒவ்வொரு கிழமையில்*
ஒவ்வொரு பலனைத்தரும்* .
------------------------------------------------------------------
🦅1. ஞாயிறு கருட தரிசனம் – நோய் அகலும்.
🦅2. திங்கள் கருட தரிசனம் – குடும்ப நலம் பெருகும்.
🦅3. செவ்வாய் கருட தரிசனம் – தைரியம் கூடும்.
🦅4. புதன் கருட தரிசனம் – எதிரிகள் இல்லா நிலை உருவாகும்.
🦅5. வியாழன் கருட தரிசனம் – சகல நன்மையை தரும்.
🦅6. வெள்ளி கருட தரிசனம் – பணவரவு கிட்டும்.
🦅7. சனி கருட தரிசனம் – நற்கதி அடையலாம்.
🦅🦅 *கருட தரிசனம் காணும்போது,*👇🦅🦅

ஒரு குரு இருந்தார்.

 ஒரு குரு இருந்தார். ஒரு நாள் அவரை தேடி ஒருவன் வந்தான். ஐயா நான் ரொம்ப துன்பத்திலே இருக்கிறேன். அதிலிருந்து விடுதலையடைய ஆசைப்படுகிறேன். துன்...