Saturday, 22 November 2025

சித்தர்கள் ஜீவ சமாதியான இடம்,* _அவர்கள் வாழ்ந்த நாட்கள்._

 


சித்தர்கள் ஜீவ சமாதியான இடம்,* _அவர்கள் வாழ்ந்த நாட்கள்._

*1. அகஸ்தியர்* – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.
*2. பதஞ்சலி* – 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.
*3. கமலமுனி* – 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.
*4. திருமூலர்* – 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார்.
*5. குதம்பை சித்தர்* – 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.
*6. கோரக்கர்* – 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.
*7. தன்வந்திரி* – 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.
*8. சுந்தராணந்தர்* – 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.
*9. கொங்ணர்* – 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.
*10. சட்டமுனி* – 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.
*11. வான்மீகர்* – 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.
*12. ராமதேவர்* – 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.
*13. நந்தீஸ்வரர்* – 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.
*14. இடைக்காடர்* – 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.
*15. மச்சமுனி* – 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.
*16. கருவூரார்* – 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.
*17. போகர்* – 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.
*18. பாம்பாட்டி சித்தர்* – 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்.
*(மரணமில்லா பெருவாழ்வு – சாகா கல்வி)* உலகில் உள்ள மனிதர்கள் வெல்ல முடியாத மரணத்தை வென்றவன் தமிழன்.
_வாழ்க தமிழ், வளர்க தமிழ்... வெல்க சித்தர்கள் நுண்ணறிவு!!!_
_“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!!!!

முளைப்பாரி வைப்பதன் அறிவியல் காரணங்கள்*

 


முளைப்பாரி வைப்பதன் அறிவியல் காரணங்கள்*

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
🛑விவசாயிகள் பருவம் பார்த்து விவசாயம் செய்து அறுவடை செய்யும் நேரத்தில் முதலில் அடுத்த போகத்திற்கான தரமான விதைகளை தன்னுடைய நிலத்திலேயே தேர்வு செய்ய காலம்காலமாக கடைபிடித்த தொழில்நுட்பம் முளைப்பாரி.
🛑விதைகளை தேர்வு செய்வதிலேயே பல நுட்பங்களை கடைப்பிடிப்பார்கள். நோய்தாக்குதல் இல்லாத தரமான பயிர்களில் இருந்து நன்றாக விளைந்த விதைகளை தேர்வு செய்வார்கள். அவ்வாறு தேர்வு செய்த நெல்,தானிய விதைகளை குதிர்களிலும்,கோட்டை கட்டியும்,சணல் அல்லது துணி சாக்குகளிலும் கொட்டி வைத்து பாதுகாப்பார்கள். அந்த விதைகளை பூச்சி தாக்குதலில் இருந்து காப்பாற்ற ஒவ்வொரு அமாவாசையன்றும் பனி மற்றும் வெயிலில் காய வைத்து, அவற்றுடன் வேம்பு, மஞ்சள், நொச்சி, வசம்பு மற்றும் பல மூலிகைகள் சேர்த்து பாதுகாப்பார்கள்.
🛑அவ்வாறு பாதுகாத்த விதைகளை அடுத்தப் பருவத்தில் விதைப்பதற்கு முன் விதைகளின் முளைப்புத் திறனை சோதனை செய்த பிறகே விதைப்பது தமிழர்களின் பண்ணெடுங்கால வழக்கமாக இருந்திருக்கிறது.
🛑அப்படி நம் முன்னோர்கள் குழுவாக சேர்ந்து கூட்டு முயற்சியாக செய்ததுதான் முளைப்பாரி திருவிழாவாகும்.
🛑பெரும்பாலும் மாசி,பங்குனி,சித்திரை மாதங்களில் கோடை சாகுபடிக்கான விதைகளை முளைப்பாரி சோதனை செய்து கோடை சாகுபடி மேற்கொள்வார்கள். இன்னும் சில பகுதிகளில் விதைக்கும் காலத்திற்கு முன்னர் சோதிப்பார்கள். வளர்பிறை நாட்களில் விதைகளை பாவி, ஒன்பதாம் நாள் ஊர்வலம் எடுத்து சென்று காட்சிப்படுத்துவார்கள். பின்னர் 10 ம் நாள் ஓடும் தண்ணீரில் கரைப்பார்கள். அந்த தொழில்நுட்பம்தான் காலப்போக்கில் மக்களின் பார்வையிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக முளைப்பாரி திருவிழாவாகவும், திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களின்போது பெண்கள் முளைப்பாரி சட்டிக்களை தூக்கி சுற்றும் நிகழ்வாகவும் தமிழர்களால் கொண்டாடப்பட்டது.
🛑கிராமங்களில் உள்ள நாட்டுப்புற பெண் தெய்வங்களுக்கு முளைப்பாரி இட்டு பொங்கல் வைத்து கொண்டாடப்படும். பெண்கள் வளமையின் குறியீடாக திகழ்வதால்,விதை முதல் ஜல்லிக்கட்டு காளை, முளைப்பாரி தேர்வு, பாதுகாப்பு வரை பெண்கள் வசம் தமிழர்களால் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. வளர்பிறை காலங்களில் காப்புக்கட்டி முளைப்பாரிக்கான வேலை தொடங்கப்படும். அதற்கு குறியீடாக வீட்டின் நிலைப்பகுதியில் வேப்ப இலை தோரணம் கட்டி ஊருக்கு, 'இந்த வீட்டில் முளைப்பாரி போட்டுள்ளார்கள்' என்று அறிவிப்பு செய்யபட்டிருக்கிறது. முளைப்பாரி போடுவதற்கு மண்பானை,பனை,மூங்கில் கூடைகள் எடுத்து ஆறு அல்லது குளத்தில் வண்டல் மண் எடுத்து வந்து அதனுடன் மக்கிய எடுக்கிலையை சேர்த்து,முளைப்பாரி சட்டி தயார் செய்யப்படும். பின் பாதுகாத்த விதைகளை சாணப்பால் அல்லது பஞ்சகவ்யம் போன்றவற்றில் ஊற வைத்து, விதை நேர்த்தி செய்திருக்கிறார்கள். பின் அந்த விதையை சணல் சாக்கில் வைக்கோல் சேர்த்து இரவில் முளைக்கட்டப்படும். முளைக்கட்டிய பின் விதைகளை மண் கலவைகள் நிரம்பிய தொட்டியில் விதைப்பார்கள். அதிக சூரிய ஒளிப்படாத இடங்களில் வைக்கப்பட்டு காலை,மாலை நேரங்களில் தண்ணீர் தெளிப்பார்கள். முளைப்பாரி போட்ட வீடுளில் மாமிசம் சமைப்பதில்லை. அனைவரும் சுத்தமாக இருக்க அறிவுறுத்தப்படுவார்கள். அந்நாட்களில் வெளிநபர் யாரையும் வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை.
🛑மேலும் பெண்கள் மாதவிடாய் காலங்கலில் முளைப்பாரியின் அருகில் அனுமதிக்கப்படுவதில்லை. அந்த நேரங்களில் அவர்களின் உடம்பில் இருந்து அதிகப்படியான வெப்பம் மற்றும் தேவையில்லாத கழிவுகள் வெளியேறுவதால், அது பச்சிளம் குழந்தை போல் உள்ள முளைப்பாரியின் வளர்ச்சியை பாதிக்கும் என்று அனுமதிக்காமல் இருந்திருக்கிறார்கள். 🛑காலப்போக்கில்தான் அது பெண்களை இழிவுபடுத்தும் தீட்டு என்று திசைமாறிவிட்டது. முளைப்பாரி போட்ட மறுநாளில் இருந்து வீட்டின் முன்பு வட்டமாக நின்று கொண்டு பெண்கள் கும்மியடிப்பார்கள். இந்த கும்மி ஓசை எழுப்புவது போல் முளைப்பாரியும் முளைத்து வெளிவரும் என்று நம்பிக்கை. அதில் இருந்து ஒன்பதாம் நாளில் இவ்வாறு பாதுகாத்த முளைப்பாரியை ஊர் பொது இடத்தில் வைப்பார்கள். அப்போது ஊரின் அனுபவ விவசாயிகள், யாருடைய விதையின் முளைப்பாரி வீரியமாக வளர்ந்துள்ளதோ, அவருடைய முளைப்பாரியை சுட்டிக்காட்டி அனைவருக்கும் சிறந்த விதையாக அடையாளம் காட்டுவார்கள். அந்த
🛑விதை அந்த வருடத்தின் ஊரின் செழிப்பை நிர்ணயிக்கும் குறீயீடாக இருக்கும். அப்படி செழிப்பான விதை முளைப்பாரியை செய்து காட்ட ஒவ்வொரு விவசாயியும் அடுத்தடுத்த வருடங்களில் ஆர்வம் காட்டுவர்
🛑பின் அந்த முளைப்பாரிகளை சுற்றி வட்டமாக பெண்கள் நின்று பாடலுடன் கும்மி கொட்டுவர். இன்னொரு பக்கம், அனைவரும் பார்க்கும் வண்ணம் ஒயிலாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம், புலியாட்டம் என்று பாரம்பரிய கலைகளை சிறுவர்களும், இளைஞர்களும் செய்து காட்டுவர்.
🛑அந்த
முளைப்பாரியை தூக்கியபடி இதே ஆரவாரத்துடன் ஊர் முழுக்க சுற்றி வருவார்கள். பின் ஊரே ஒன்றுகூடி பொங்கல் வைத்து, கொழுக்கட்டை, மாவிளக்கு, துள்ளுமாவு, இளநீர், பானகம், நீர்மோர், வேப்பிலை கரகம் வைத்து பெண் தெய்வத்திற்கு படைப்பர். இந்த சடங்கினால் கோடை காலங்களில் ஏற்படும் அம்மை போன்ற நோய்கள் தொற்றாமல் தடுக்கப்படும். பின்பு பத்தாம் நாளில் இந்த முளைப்பாரியை ஓடும் நீரில் கரைத்து, பயிர் போகும் இடமெல்லாம் செழிக்க பாட்டுடன் வழியனுப்பி வைத்து திருவிழாவை முடித்து வைப்பார்கள். இந்த முளைப்பாரி கரைப்பு நிகழ்வானது விவசாயிகளுக்கு துணை புரியும் நீர்நிலைகளின் அவசியத்தை நினைவில் நிறுத்துவதற்காக நடத்தப்படுகிறது. இப்படி வழிபாடு,திருவிழாவில் மட்டுமட்டுமல்லாது முளைப்பாரி அவசியத்தை அனைவரும் அறிந்தே இருக்க வேண்டும் என்பதற்காக திருமணம் உள்ளிட்ட முக்கிய சுப நிகழ்வுகளிலும் முளைப்பாரி வைபோகத்தை தவறாமல் இடம்பெற செய்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். கோவலன், கண்ணகி திருமணத்தின்போது தானிய முளைப்பாரி கொண்ட குடங்களை பெண்கள் ஏந்தி வந்தததை சிலப்பதிகாரம், 'விரித்தபாலிகை முளைக்குட நிரையினர்' என்று சுட்டுகிறது.
🛑இப்படி,விதைநேர்த்தியின் முக்கிய அங்கமாக இருந்த முளைப்பாரி திருவிழாவையும் யாரும் இப்போது நடத்துவதில்லை. திருமண சுபநிகழ்ச்சிகளிலும் யாரும் முளைப்பாரி சட்டிகளை ஏந்தி சுற்றுவதில்லை. அதனால்தான்,நமது பாரம்பரிய விதைகளை நாம் இழந்து, இன்று ஹைபிரிட் விதைகளை முளைக்க வைத்து, அதை உண்டு ஹைஸ்பீடில் மேலே போகிறோம். நமது முன்னோர்கள் கண்டறிந்த அதிசய அட்சய விதைநேர்த்தி தொழில்நுட்பமான முளைப்பாரி நிகழ்வை மறுபடியும் செயல்படுத்து, பாரம்பரிய விதைகளை மீட்டெடுப்போம். புதையும் நமது விவசாயிகளின் வாழ்வை தெம்பூட்டுவோம்.

நமது வயலில் விளைந்த இரத்தசாலி விதை நெல்/ அரிசி கிடைக்கும்.


 நமது வயலில் விளைந்த இரத்தசாலி விதை நெல்/ அரிசி கிடைக்கும்.

அரிசி ரகத்திலேயே மிக பழமையான ஒன்று பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மருத்துவர்களால் மருந்தாகவும்,நோயாளர்களுக்கு உணவாகவும்,துணை மருந்தாகவும் கொடுத்துவருகின்றனர்.இரத்தசாலி நெல் ரகம் 110 முதல் 120 நாட்கள் வயதுள்ள குட்டையான சன்ன ரகம்,சம்பா பருவத்திற்க்கு ஏற்ற ரகம்.இயல்பாகவே நெல் வயலில் அதிகம் எலி காணப்படும்,இரத்தசாலி பயிரிட்டுள்ள வயலில் இதன் வாசனைக்கு இருமடங்கு எலிதொல்லை உண்டு, மேலும் நெல்மணிகள் உதிரும் தன்னை சற்று அதிகம் எனவே பராமரிப்பு இந்த ரகத்திற்கு அதிகம் தேவை கை அறுவடைதான் செய்து நல்லது,இதுவும் ஒரு காரணம் தற்போது இந்த ரகம் அழிந்துவர.
இரத்தசாலி என்று பெயர் வர காரணம் நெல் தோல் மற்றும் அரிசி நிறம் இரத்த நிறத்தை ஒத்து காணப்படுவதாலும்,இரத்தம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் அகற்றுவதே ஆகும்.
கேரளாவில், மலப்புரம்,மத்திய திருவிதாங்கூர், வடக்கு கேரளம்,கன்னியாகுமரியில் சிலபகுதியிலும் பயிரிடப்பட்ட ரகமாகும்,அழிவின் விளிம்பில் இருந்த இந்த ரகத்தை தற்போது சில விவசாயகள் மீட்டு மறுபடியும் பயிர்செய்து வருகின்றனர்,தமிழ்நாட்டிலும் தற்போது பயிரிட தொடங்கி உள்ளனர்..
வாதம்,பித்தம் மற்றும் கபம் நாடி நிலைகளை சுத்தி செய்து அதன் இயல்பில் இயங்க கேரள பாரம்பரிய ஆயுர்வேத வைத்தியர்கள் இரத்தசாலி அரிசியை பலநூற்றாண்டுகளாக பயன்படுத்தி வந்தார்கள்,தற்போது வெகுசிலரே பயன்படுத்தி வருகின்றனர்.
இரத்தசாலி அரிசி பல்வேறு நோய்களுக்கு நல்ல நிவாரணம் அளிக்கிறது.பாரம்பரிய ஆயுர்வேத வைத்தியர் கூறி இரத்தசாலி அரிசியின் பயன்கள் கீழே தொகுத்து கொடுத்துள்ளோம்..
நலிந்து மெலிந்து இருப்பவர்களை புஷ்டியாக்கும் இரத்தசாலி சோறு.
நரம்பு பலவீனத்தை களைகிறது,உடல் வலிமைக்கு உதவும் இரத்தசாலி கஞ்சி.
இரத்த அழுத்தம்,சிறுநீரக கோளாரு ,நீரிழிவு நோயாளிகளுக் துணை உணவாகவும்,மருந்தாகும் கொடுத்து வருகின்றனர்.
தாய்பால் சுரப்பு குறைவுள்ளவர்களுக்கு இரத்தசாலி அரிசி,பனைவெல்லம்,ஏலக்காய்,பசும்பால் கலந்த கஞ்சி நல்ல பலன்தரும்
அலர்ஜி,தோல் நோய்,கர்ப்பை சார்ந்த பிரச்சினைகள், வயிறு தொந்தரவு,கல்லீரல் தொந்தரவுகளுக்கு உணவாக கொடுக்கலாம்.
மலமிலக்கி ஆக செயல்படும்.சிறுநீர் எரிச்சல் சரி செய்யும் உமிழ்நீர் சுரப்பு பற்றாகுறை உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும், பிரசவத்திற்கு பின் வரும் மலசிக்கல்,செரிமான கோளாறுகளுக்கு நல்ல உணவாகும்.
அரிசி கழுவிய நீரில் உடலை கழுவ தோல் அழற்சி குணாக தொடங்கும்.தோல் நோய்களுக்கு வெண்ணையிடன் கலந்து பூசலாம்.
மஞ்சள் பொடியுடன் சம அளவு இரத்தசாலி அரிசி பொடி கலந்து பசை போல வீக்கத்தின் மேல் இட்டு துணி வைத்து கட்ட நல்ல பலன் தரும்.
இவ்வாறாக ஒரு அரிசியே மருந்தாகவும்,மருந்தே உணவாகவும் செயல்படும் அரிசியில் இரத்தசாலி அரிசிக்கு எப்போதும் நல்ல இடம் உண்டு.

கோபம் இருந்தால் மகிழ்ச்சி இருக்காது..


 கோபம் இருந்தால் மகிழ்ச்சி இருக்காது..

கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பது பழமொழி ஆனால், கோபம் இருந்தால் அதன் பின் என்ன நல்ல குணம் இருந்தாலும் அதனால் பயனில்லை என்பதே தற்கால நிதர்சனம். கோபம் இருந்தால் மகிழ்ச்சி இருக்காது.
குடும்ப உறவுகள் பல பிரச்னைக்குள்ளாவதே கோபத்தால் தான். இதைச் சம்பந்தப்பட்டவர்கள் உணர்வதே இல்லை. Image Credit
கோபம் இருந்தால் மகிழ்ச்சி இருக்காது
துவக்கத்தில் கோபத்தால், பல நட்புகளை இழந்தேன்.
பின்னர் என்ன பிரச்னை? என்று சுயபரிசோதனை செய்து, பிரச்சனைகளுக்குக் காரணம் கோபம் தான் என்று அறிந்து அதை நிறுத்திய பிறகு அனைத்தும் சுகமானது.
கோபம் இருப்பவரிடம் எவரும் பழக மாட்டார்கள், பழக வேண்டிய சூழ்நிலை வந்தால், வேண்டா வெறுப்பாகப் பேசுவார்கள்.
கோபத்தால் அடைவதை விட இழப்பதே அதிகம் இருக்கும்.
குடும்பத்தில் இருவரில் ஒரு வாழ்க்கைத் துணையிடம் கோபம் இருந்தாலும் அக்குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது.
இருவருமே கோபக்காரர்கள் என்றால் அக்குடும்பமே நரகத்தில் தான் தினமும் வாழ்க்கை நடத்தும்.
கோபத்தால் எதையுமே சாதிக்க முடியாது ஆனால், அதைப் புரிந்து கொள்ளாமல் கோபப்பட்டு அந்தச் சூழ்நிலையை மேலும் மோசமாக்கி கொள்வார்கள்.
தாங்கள் செய்வது தான் சரி என்று வாதிடுவார்கள்.
கோபத்தில் இருக்கும் போது எதுவுமே புரியாது, யார் என்ன கூறினாலும் தவறாகவே தோன்றும், நல்லதை கூறினாலும் ஏற்றுக்கொள்ளச் சுயகௌரவம் (Ego) தடுக்கும்.
தற்காலப் பெற்றோர்
தற்போது குடும்பங்களில் பிரச்சனைகளுக்கு முக்கியக் காரணமே கோபம் தான். இதைப் பலர் உணர்வதே இல்லை.
குறிப்பாகக் குழந்தைகளிடம் கோபத்தைக் காட்டினால் நிலைமை மேலும் மோசமாகும்.
இதைத் தற்காலப் பெரும்பான்மை பெற்றோர் உணர்வதில்லை. இவர்களே எவர் சொல்வதையும் கேட்க மாட்டார்கள் ஆனால், குழந்தைகள் கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
குழந்தைகளிடம் சில நிமிடங்கள் செலவழித்துப் பொறுமையாக எடுத்துக்கூறினால் எளிதாகப் பிரச்சனைகள் முடிந்து விடும்.
ஆனால், உணராமல் பொறுமை இழந்து கத்தி, கோபப்பட்டு ஒவ்வொரு நாளையும் எப்போதும் சிக்கலாக்கி கொள்வதே தற்காலப் பெற்றோரின் வழக்கம்.
உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால், அதற்காகக் கோபப்பட்டால், அப்பிரச்சனை சரியாகாது அப்பிரச்சனை மேலும் மோசமடையும்.
எதனால் கோபப்படுகிறோம், அதைத் தவிர்ப்பது எப்படி என்று ஒரு முறை யோசித்தால், நீங்கள் செய்வது முட்டாள்தனம் என்று உங்களுக்கே புரியும்.
தற்போதைய காலத் தம்பதியினரிடம் உள்ள பிரச்சனை கோபம், சுய கௌரவம், பொறுமையின்மை போன்றவை.
இந்த மூன்றும் உள்ள குடும்பத்தில் மகிழ்ச்சி என்பதே இருக்காது. எப்போதும் இறுக்கமான சூழ்நிலையே நிலவும்.
உங்கள் வீட்டில் எப்படி? என்று யோசித்துப்பாருங்கள்.
பலரும் நினைப்பது போல வாழ்க்கை கடுமையானது அல்ல, பிரச்சனையானதும் அல்ல. நாம் நடந்து கொள்வதிலேயே அனைத்தும் அடங்கி உள்ளது.
எதிலும் விதிவிலக்குகள் உண்டு ஆனால், அதை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
அனைத்தையுமே பிரச்சனையாகப் பார்க்கும் மனநிலை பலரிடையே பரவி வருகிறது.
இது மிகத்தவறான எண்ணம்.
எதிர்மறை எண்ணங்கள்
சிலர் கிட்ட பேசினால், “அட! என்னங்க.. ஒரே பிரச்சனையாக இருக்குது.. எல்லாமே எதிரா நடக்குது.. எதுவுமே சரியில்லை” என்று எதிர்மறையாகவே பேசுவார்கள்.
இந்த எதிர்மறை நிலையில் இருந்து மாறி “எல்லாமே நல்லா நடக்குது, இப்பிரச்சனை சரியாகி விடும்” என்று நேர்மறையாக நினைத்துப்பாருங்க, வித்யாசத்தை உணர முடியும்.
சில மாதங்களில் உங்களுக்கே பிரச்சனைகள் இல்லாத மாதிரி உணர்வு இருக்கும்.
பின்னர் “நமக்குப் பிரச்சனையே இல்லையே.. எதற்கு இவ்வளோ நாள் புலம்பிட்டு இருந்தோம்” என்று குழப்பமாக இருக்கும். கோபம் நம்மை யோசிக்க விடாது.
பிரச்னை இல்லாத மனிதர் என்று உலகில் எவருமில்லை. எனவே, எல்லாமே பிரச்னை என்று நினைத்தால், வாழ்க்கையில் நிம்மதி இருக்காது.
மகிழ்ச்சி நம்மிடமே உள்ளது. இதை உணராத வரை கோபத்தால் இழப்பு மட்டுமே!

அரசமர இலையின் அற்புத பயன்கள்

 அரசமர இலையின் அற்புத பயன்கள்

நம் முன்னோர்கள் பயன்படுத்திய முக்கியமான பொருள்களில் ஒன்றுதான் அரச மரத்து இலை. அரசமரம் முன்பெல்லாம் அனைத்து தெருக்களிலும் இருக்கும், அதிகளவு ஆக்சிஜன் வழங்கக்கூடிய இதனை நாம் விநாயகர் இருக்கும் வீடாக மட்டுமே பார்த்தோம். ஆனால் உண்மையில் அரச மரத்து இலை மிகச்சிறந்த மூலிகையாகும். அரச மரத்து இலைகளை பற்றி நமக்கு தெரியாதவற்றை இங்கு பார்க்கலாம்.
அரசமரம்
அரசமரம் பெரும்பாலும் இந்திய காடுகளிலும், சில இடங்களில் வீட்டின் அருகிலும் காணப்படுகிறது. இதன் இலைகளில் அதிகளவு டானிக் அமிலம், அஸ்பார்டிக் அமிலம், ஸ்டெராய்டு, வைட்டமின்கள், மெத்தயோனின், கிளைசின் என
எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இவையெல்லாம் அரசமர இலைகளை மிகச்சிறந்த ஆயுர்வேத மருந்தாக மாற்றியுள்ளது. ஆனால் நாம் அரசமர இலைகளை சமையலுக்கு பயன்படும் பொருளாக மட்டுமே அறிவோம்.
சளி மற்றும் காய்ச்சல்
தொடர்ச்சியாக சளி மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் அரசமர இலைகளை பாலுடன் சேர்த்து கொதிக்கவைத்து பின்னர் அதனுடன் சர்க்கரை சேர்த்து தினமும் இரண்டு முறை குடித்து வர விரைவில் காய்ச்சல் குணமாகும். ஆனால் குழந்தைகளுக்கு இதனை கொடுக்கும் முன் மருத்துவருடன் ஆலோசிக்கவும்.
ஆஸ்துமா
அரசமர இலைகள் மட்டுமின்றி காய்களும் மருத்துவ குணமுடையதுதான். அரசமர இலைகளையும், காய்களையும் எடுத்து காயவைத்து பொடியாக்கி கொள்ளவும். பின்னர் அவற்றை சமமான அளவில் கலந்து கொள்ளவும். இந்த பொடியை நீருடன்கலந்து 14 நாட்கள் தொடர்ந்து குடித்துவந்தால் விரைவில் அற்புத பலனையளிக்கும்.
கண்வலி
அரசமரத்து இலைகளின் பால் கண்வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும். கண்வலி இருக்கும்போது அரசமர இலைகளை கசக்கி அதனை கண்களில் ஊற்றினால் சில நிமிடங்களில் வலி குறைய தொடங்கும்.
பல் ஆரோக்கியம்
அரசமரத்தின் கொளுந்து இலைகள் அல்லது புதியதாக வளரும் மரத்தின் வேர் போன்றவற்றை உபயோகித்து பல் துலக்குவது பற்களில் உள்ள கறைகளை போக்குவதோடு பற்களை பாக்டீரிய தாக்குதல்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
பாம்புக்கடி
ஒருவேளை பாம்புக்கடித்துவிட்டால் அரசமர இலைகளை கசக்கி இரண்டு ஸ்பூன் கொடுத்தால் அது பாதுகாப்பு கவசமாக செயல்பட்டு விஷம் மேற்கொண்டு உடலில் பரவுவதை தடுக்கிறது.
மஞ்சள் காமாலை
இளஞ்சிவப்பான அரசமர இலைகளை எடுத்துக்கொண்டு அதனை சாறாக்கி அதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து தினமும் மூன்று முறை குடிக்க வேண்டும். இது மஞ்சள் காமாலையை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தக்கூடியது.
சருமபாதுகாப்பு
இதன் இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர சருமத்தில் ஏற்படும் அரிப்புகள், தடிப்புகள் போன்றவை குறையும். சாப்பிட பிடிக்கவில்லையெனில் இலைகளை பயன்படுத்தி தேநீர் தயாரித்தும் குடிக்கலாம்.
கல்லீரல் பாதுகாப்பு
சில இலைகளை எடுத்துக்கொண்டு அவற்றுடன் கற்கண்டை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். இதனை நீருடன் நன்கு கலந்து பின் வடிகட்டி கொள்ளவும். இந்த நீரை தினமும் குடித்து வந்தால் கல்லீரல் பாதுகாப்பாய் இருக்கும். அதிக குடிப்பழக்கம் உள்ளவர்கள் இதனை செய்வது மிகச்சிறந்த பலனையளிக்கும்.
மலச்சிக்கல்
மலச்சிக்கலை குணமாக்க இது சிறந்த மருந்து. சிறிதளவு அரசமர இலையின் தூள், சோம்பு மற்றும் வெல்லத்தை எடுத்துக்கொள்ளவும். இதனை பாலுடன் கலந்து தூங்க செல்லும்முன் குடிக்கவும். சிலமணி நேரங்களிலியே உடனடி நிவாரணத்தை உணரலாம்.
இதய ஆரோக்கியம்
சில மென்மையான இலைகளை எடுத்துக்கொண்டு அதனை இரவில் தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள். காலையில் தண்ணீரை வடிகட்டி தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் அது இதயம் படபடப்பாய் உணர்வதை குறைப்பதோடு இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் செய்யும்.
வயிற்றுப்போக்கு
சில கொளுந்து அரசமர இலைகளை எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிது கொத்தமல்லி தழைகளை சேர்த்து பின் சிறிது பனங்கற்கண்டை சேர்த்து வாயில் போட்டு மென்றால்வயிற்றுப்போக்கிலிருந்து உடனடி தீர்வை பெறலாம்.
சர்க்கரைநோய்
சர்க்கரைநோய் பிரச்சினை உள்ளவர்கள் அரசமர காயின் பொடியையும், கடுக்காய் பொடியையும் சமமான அளவில் பாலுடன் கலந்து குடித்துவர உடலில் உள்ள சர்க்கரையின் அளவு தானாக குறையும்.
இரத்த சுத்திகரிப்பு
சிறிதளவு அரசமர விதை தூளை தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். இரைப்பை சார்ந்த கோளாறுகள் உள்ளவர்கள் இதில் கசாயம் தயாரித்து அதனுடன் தென் சேர்ந்து குடித்து வந்தால் விரைவில் குணமடையலாம்....

சஷ்டியை நோக்க சரவண பவனார்..." இந்த வரிகளை எழுதியவர் யார் தெரியுமா?...

 "


சஷ்டியை நோக்க சரவண பவனார்..." இந்த வரிகளை எழுதியவர் யார் தெரியுமா?...

'சஷ்டியை நோக்கச் சரவண பவனார், சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்' என்று தொடங்கும் கந்த சஷ்டி கவசம் நம் மனதில் உள்ள பயத்தை போக்கி நமக்கு புது தெம்பை அளிக்கும். அத்தகைய சிறப்பு வாய்ந்த முருகப்பெருமானின் கந்த சஷ்டி கவசம் உருவான கதை தெரியுமா? அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
பாலதேவராயர் சுவாமிகள் தீவிரமான முருகபக்தர். ஒருசமயம் அவருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்படுகிறது. எவ்வளவோ சிகிச்சைகள் எடுத்தும் அவருடைய கடுமையான வயிற்று வலி தீரவில்லை. இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான பாலதேவராயர் கடலில் விழுந்து தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்று எண்ணி திருச்செந்தூர் வருகிறார்.
அவர் வந்த சமயம் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா ஆரம்பமாகியிருந்தது. கந்த சஷ்டி விழா முடிந்ததும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணிய பாலதேவராயர் கந்த சஷ்டி விரதம் இருக்க ஆரம்பிக்கிறார்.
முதல் நாள் திருச்செந்தூர் கடலில் நீராடிவிட்டு முருகப்பெருமானை தரிசித்துவிட்டு கோவில் மண்டபத்தில் அமர்ந்து கண்களை மூடி தியானத்தில் இருக்க ஆரம்பிக்கிறார். அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள் புரிந்ததோடு மட்டுமல்லாமல் தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார்.
அடுத்த நொடியே பாலதேவராயர் மனதில் பக்தி வெல்லம் பெருக்கெடுத்து ஓடியது. திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார். அடுத்த ஐந்து நாட்களும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசத்தை இயற்றி முடித்தார்.
அதன் பிறகு அவரை வெகுநாளாக வாட்டி வந்த வயிற்று வலி காணாமல் போனது. இது முருகப்பெருமானின் திருவிளையாடல் என்று உணர்ந்த பாலதேவராயர் கண்ணீர் மல்க முருகப்பெருமானை வேண்டி தொழுதார்.
சஷ்டி கவசத்தை ஒருவர் நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால், நோய்கள் அண்டாது; மனம் வாடாது; குறைவின்றி பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழலாம். நவக்கிரகங்கள் மனம் குளிர்ந்து நன்மை செய்யும், குழந்தை பேருக்கிட்டும். இன்னும் எண்ணற்ற பலன்கள் கிடைக்கு

Friday, 21 November 2025

பக்கவாதம் எப்படி ஏற்படுகின்றது???


 பக்கவாதம் எப்படி ஏற்படுகின்றது???

பொது நல மருத்துவர்
மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதை
"ஸ்ட்ரோக்" என்று அழைக்கிறோம்
இதயத்தில் இருந்து மூளைக்கு
ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் பழுது மற்றும் மூளைக்குள் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் பழுது ஆகியவற்றால் ரத்த ஓட்டத்தில் சுணக்கம் ஏற்படுகின்றது.
எப்படி இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடையை "ஹார்ட் அட்டாக்" ( இதய ரத்த ஓட்ட முடக்கம்) என்று அழைக்கிறோமோ
அதைப்போல இந்த ஸ்ட்ரோக்கை "ப்ரைன் அட்டாக்" ( மூளை ரத்த ஓட்ட முடக்கம்) என்று அழைக்கலாம்.
"மூளை" என்பது நமது தலைமைச்செயலகம் என்பதை அனைவரும் அறிவோம்
நமது இச்சை செயல்கள் அனைத்திற்கும் பிறப்பிடம் மூளை தான்.
நமது எண்ணங்கள்
செயல்பாடுகள் அனைத்திற்கும் மூல காரணம் மூளை
மூளைக்குத்தான் நமது ரத்த ஓட்டத்தின் பெரும்பங்கு செல்கிறது.
இப்படிப்பட்ட மூளையையும் முடக்கும் விதமாக ரத்த ஓட்ட சுணக்கம் இரண்டு வகைகளில் நடக்கும்
முதல் வகை
ரத்த ஓட்டத்தில் ஏற்படும் அடைப்பு
(ISCHAEMIC STROKE) இது தான் அரிதி பெரும்பான்மை பேருக்கு ஏற்படும்.
இரண்டாவது வகை
ரத்தக்குழாய்களில் ஏற்படும் கசிவு
(HAEMORRHAGIC STROKE) . மேற்சொன்ன இரண்டில் இது தான் அதிக ஆபத்தானது.
இந்த அடைப்பு
மூளைக்குள் உள்ள ரத்த குழாய்களில் மெல்ல மெல்ல அடைப்பு ஏற்படுவதால் இருக்கலாம். இதை THROMBOTIC STROKE
என்று அழைக்கிறோம்
அல்லது
வேறெங்கோ ரத்தக்கட்டி ஏற்பட்டு அது உடைந்து மூளைக்கான ரத்த நாளங்களுக்குள் வந்து அடைப்பு ஏற்படுத்துவது இதை EMBOLIC STROKE என்று அழைக்கிறோம்
மூளையில் ரத்த ஓட்டம் தடைபடுகிறது என்பதற்கான அறிகுறிகள் யாது????
இதை சுருக்கமாக BE FAST என்று கூறுவோம்.
Balance
நடையில் தள்ளாட்டம்
சரியாக நேர்க்கோட்டில் நடக்க இயலாமல் போவது.
Eye sight
திடீரென ஒரு அல்லது இரு கண்ணிலும் பார்வை பறிபோவது அல்லது பார்வைக்குறைபாடு ஏற்படுவது
Facial palsy
ஒரு பக்க முகம் தொங்கிப்போவது.
வாய் ஒரு பக்கமாக இழுத்துக்கொள்வது
Arm down
ஒரு பக்க கை அல்லது ஒரு பக்க கை மற்றும் கால் இயங்காமல் தொங்கி விடுவது.
Speech
நன்றாகப்பேசிக்கொண்டிருந்தவர்
பேச்சு குளறுவது அல்லது பேச இயலாமல் போவது
Time
இத்தகைய அறிகுறிகள் தோன்றினால் உடனே குறித்த நேரத்தில் மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவமனையை அடைய வேண்டும்.
எவ்வளவு நேரத்தில் மூளை சிறப்பு மருத்துவமனையை அடைய வேண்டும்???
ஒருவருக்கு மூளை ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டதும்
அந்த குறிப்பிட்ட இடத்தைச்சுற்றி உள்ள அளவில் குறைவான மூளையின் பகுதிக்கு ரத்த ஓட்டம் தடைபட்டு அங்கிருக்கும் செல்கள் முற்றிலும் இறந்து விடும். இதை CORE AREA என்று கூறுகிறோம்.
இது ஐந்தே நிமிடங்களில் நிகழ்ந்து விடும்.
ஆனால் அடைப்பு ஏற்பட்ட அந்த மையப்பகுதியைச்சுற்றி இருக்கும் பெரும்பான்மை பகுதிகளுக்கு இன்னும் ரத்த ஓட்டம் முழுமையாக தடைபட்டிருக்காது.
மிகக்குறைவான ரத்த ஓட்டத்தில் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு அந்த பகுதியின் மூளை செல்கள் காத்திருக்கும். அந்த பெரும்பகுதியை ISCHAEMIC PENUMBRA என்று அழைக்கிறோம்
இந்த காத்திருப்பு காலம் தான் GOLDEN PERIOD FOR STROKE என்று அழைக்கப்படுகின்றது
இது வெறும் மூன்று மணிநேரம் மட்டுமே.
எனவே ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்ட நிமிடத்தில் இருந்து 180 நிமிடங்களுக்குள் எவ்வளவு சீக்கிரம் அடைய முடியுமோ அவ்வளவு சீக்கிரம்
மூளை சிறப்பு மருத்துவமனையை அடைந்தால் அவருக்கு ரத்தக்கட்டியை கரைக்கும் மருந்து கொடுக்கப்பட்டு மீண்டும் மூளையின் பெரும்பகுதிக்கு ரத்த ஓட்டம் பாய்ச்சப்பட்டு காப்பாற்றப்படும்.
ஆனால் போதிய விழிப்புணர்வு இன்றி
முக்கியமான இந்த மூன்று மணிநேரங்களை
வீட்டிலேயோ அல்லது பயணத்தில் கழித்து விட்டு தாமதமாக கொண்டு செல்லும் போது ரத்தக்கட்டி நன்றாக உறைந்து கரைக்கும் தன்மை இல்லாமல் போய் விடுகிறது.
அதற்குப்பிறகும் ரத்தக்கட்டியை கரைக்கும் ஆஞ்சியோப்ளாஸ்டி சிகிச்சை முயன்று பார்க்கப்பட்டாலும் முதல் மூன்று மணிநேரங்களுக்குள் செல்பவர்களுக்கு கிட்டத்தட்ட முழுமையாக வாதம் சரியாகும் விந்தையைக் காண முடியும்.
60 வயதைத் தாண்டிய ஆண்களுக்கு பெண்களை விட அதிக ரிஸ்க் உண்டு.
தெற்காசியாவைச் சேர்ந்த நமக்கு ஸ்ட்ரோக் ரிஸ்க் அதிகம்.
உயர் ரத்த அழுத்தம்
போதிய உறக்கமின்மை
புகை பழக்கம்
உடல் பருமன்
உடல் உழைப்பின்மை போன்றவை
இதற்கான வேறு சில சரிசெய்யக்கூடிய காரணங்கள் ஆகும்.
தற்போது பல இளைஞர்களுக்கும் பக்கவாதம் வருவதை காண முடிகின்றது
மன அமைதியுடன்
ரத்த அழுத்தத்தை முறையான சிகிச்சை மூலம் பேணி
புகை பழக்கத்தை விட்டொழித்து
உடல் பருமன் குறைத்து
உடலை வளைத்து உழைப்பு செய்து
வாழ்ந்தால் இந்த பக்கவாதம் வருவதை தடுக்க இயலும்
பக்க வாதம் வந்தவர்களுக்கு முறையான
பேச்சு பயிற்சி
இயன்முறை மருத்துவம்
சுய வேலைகளுக்கான பயிற்சி போன்றவற்றை சரியான நேரத்தில் கொடுத்தால் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.
பக்கவாதம் வந்த முதியோர்களை கவனிக்கும் போது தண்ணீர் மெத்தையில் வைத்து பராமரிக்க வேண்டும் அல்லது அவர்களை இருபக்கவாட்டிலும் திரும்பி திரும்பி அரை மணிநேரத்திற்கு ஒருமுறை படுக்கச்செய்ய வேண்டும். முதுகில் அழுத்தம் தராத துணிகளை போடவேண்டும். அவர்களால் அசைய முடியாமல் போவதால் முதுகுப்பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு பெரிய புண்கள் ஏற்பட்டு சீழ் பிடித்து பெரும் பிரச்சனையாக மாறும் வாய்ப்பு உண்டு.
பக்க வாதம் குறித்த விழிப்புணர்வையும்
GOLDEN HOUR மூன்று மணிநேரம் குறித்த விழிப்புணர்வையும் நாமும் பெற்று பிறர்க்கும் எடுத்துக்கூறுங்கள் 

மானிட உடலில் மரபணு என ஒன்று உண்டு


 மானிட உடலில் மரபணு என ஒன்று உண்டு அதுதான் வம்ச வம்சமாக பல விஷயங்களை அடுத்த சந்ததிக்கு கடத்துகின்றது , மரபணுவில் எல்லா வம்ச ரகசியங்களும் ஒளிந்திருக்கின்றன, ஒரு உயிரின் எல்லா ரகசியங்களும் அதில் அடங்கியுள்ளது என 1953ல் அந்த அறிவிப்பு வரும்போது உலகமே அரண்டு போனது

அந்த மரபணுவுக்கு Deoxyribo Nucleic Acid (DNA)என பெயரிட்டு அந்த விஞ்ஞானி விளக்கியபோது அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தே போனார்கள், அந்த கண்டுபிடிப்பே மருத்துவ உலகில் பெரும் மாற்றத்தை கொடுத்தது பின் அது பயோ படிப்புகள் எனும் பெரும் விஞ்ஞான பிரிவு தொடங்க அடிப்படையானது அப்படியே புலன் விசாரணைகளிலும் இன்னும் பலவற்றிலும் இது மாற்றத்தை கொண்டுவந்தது
இந்த கண்டுபிடிப்பை உலகுக்கு தந்தவர் ஜேம்ஸ் வாட்சன், அவர் தன் 97ம் வயதில் இன்று காலமானார், நோபல் பரிசு வென்ற அவருக்கு இன்று உலகம் அஞ்சலி செலுத்தி கொண்டிருக்கின்றது
விஞ்ஞான உலகில் இது புதிய கண்டுபிடிப்பு உலகினை மாற்றிய மிக முக்கிய சாதனை என சொல்லபட்டாலும் அது இந்துக்கள் சொனன பெரும் நுணுக்கமான உண்மையின் விஞ்ஞனா விளக்கமே அன்றி வேறல்ல‌
இந்துக்கள் இதனை இந்த ரகசியத்தைத்தான் நாக வழிபாடு என்றார்கள், இன்றைய விஞ்ஞானம் வெறுமனே மானிட உடலின் டி.என்.ஏ எனும் மரபணுவினை கண்டறிந்துவிட்டதாக பெருமை கொள்ளலாம் ஆனால் இந்துமதம் மானிட உடல் தாண்டி அண்ட சராசார இயக்கமே இந்த நாகவடிவில் இருப்பதை அங்கும் ஒரு டி.என்.ஏ தத்துவம் இருப்பதை சொல்லி எல்லாம் ஒரே சக்தியே என்பதை சொன்னது
அதுதான் நாக வழிபாடும் இந்து தெய்வமெல்லாம் கொண்டிருக்கும் நாக அடையாளமுமாயிற்று
நாக வழிபாடு என்பது சந்ததிப் பெருக்கத்துக்கு முக்கியம். அதன் பின்னிப் பிணையும் சக்தி போல மானிட சுபாவமும் உண்டு.
நாகத்தின் சாபமே குழந்தையின்மை என்பதும், கர்மவினை காரணமாக மாய‌ சர்ப்பம் கருமுட்டையினை தின்றுவிடும் என்பதும் இந்துக்கள் என்றோ அறிந்த ஒன்று.
இதனால் எல்லா வரங்களை போலவே குழந்தை வரத்துக்கும் நாகத்தை வணங்கினார்கள், மகப்பேறு வரத்தில் முக்கிய பங்கு நாகத்துக்கு உண்டு என்றார்கள்
இதனாலேயே பாம்பினை வணங்கும் இந்திய, சீன தேசங்கள் எப்போதும் மக்கள் தொகை மிகுந்து காணப்பட்டன, இன்றும் அந்த வளம் உண்டு.
நாக வழிபாடு என்பது ஒரு வகையான சூட்சுமமான பிரபஞ்ச வழிபாடு, டி.என்.ஏ எனும் மரபணுவினை இயக்க நிலைக்கு கொண்டுவந்து பிரபஞ்சத்தோடு தொடர்பு கொள்ள வைக்கும் வழிபாடு
நாக வழிபாடு என அது சொன்னதெல்லாம் பிரபஞ்ச ஞானத்தை பெறும் வழியே
செல்வம், செழுமை, அதிகாரம், உடல் நலம், மனநலம், யோக மேன்மை, ஞானம் என எல்லாமும் அடைய முடியும்.
பாம்பே ஞானத்தின் அடையாளமானது, கேது எனும் கிரகம் ஞானத்தை வழங்கும் கிரகமாக கருதப்பட்டு, நாகம் பிள்ளையாரின் பூனூலாகவும் ஆனது.
இந்துமரபில் பூனூல் அணிவதும் நாக வடிவக் குறியீடே, அதுதான் நெற்றியில் நீண்ட திலகமாகவும் வந்தது, நெற்றியில் ஆற்றல் சுருண்டிருக்கின்றது எனும் வட்ட வடிவ பொட்டாகவும் வந்தது.
இங்கு எல்லாமே நாக தத்துவம், அதுவன்றி வேறல்ல‌.
மிகபெரிய ரகசியம் ஒன்றை இந்துக்கள் பாம்பில் வைத்தார்கள் ஒரு மாபெரும் தத்துவத்தை சொன்னார்கள், அது உலக இயக்கம் உடல் இயக்கம் இன்னும் எலல இயக்கத்துக்குமான ஒற்றுமை
ஆம், இங்கே எல்லாமே அலை வடிவில் இயங்குகின்றது, இந்த பிரபஞ்சமே ஒருவித அலைவரிசையில் இயங்குவதாக் விஞ்ஞானம் சொல்கின்றது
ஏறி இறங்கி செல்லும் ஒரு அலை அது, சக்தியின் இயக்கம் அலை அலையாக இயங்குகின்றது
இந்த அலைவடிவத்தை வரைபடத்தில் வரைந்தால் ஏறி இறங்கி ஏறி இறங்கி செல்வதை காணமுடியும், அதனை நன்றாக கவனித்தால் அது பாம்பு நெளிந்ததை போல் இருக்கும்
இந்த பிரபஞ்சம் அப்படி அலையால் இயங்குகின்றது, மானிட உடலில் ரத்தம் அப்படி அலை அலையாய் பாய்கின்றது, காற்றும் கடலும் எல்லா இயக்கமும் அந்த அலை போன்ற இயக்கத்திலேதான் இயங்குகின்றன‌
(மின்சாரம் கூட அந்த இயக்கமே, மின்னணு கருவிகளும் அந்த இயக்கமே, இதனாலே வரைபடங்களில் அலை அலையான வடிவங்களை நாகம் போல் காணமுடியும்
இதுதான் நாகதத்துவம்)
இந்த சூட்சுமத்தை உணர்ந்த ரிஷிகள் ஏழு பெரும் சக்திகள் உலகை இயக்குவததை உணர்ந்து அதை ஏழு பெரும் நாகங்கள் என்றார்கள்
மானிட மனதில் அலை அலையாய் எழும் சிந்தனைகளுக்கும் அந்த இயக்கத்துக்கும் ஒற்றுமையினை உணர்ந்தார்கள்
இந்த சலனம் இந்த இயக்கத்தை கட்டுபடுத்தும் ஒரே சக்தி அந்த பரம்பொருள் என்றார்கள்
அந்த பரம்பொருளே இந்த இயக்கத்துக்கெல்லாம் அதிபதி எல்லாமே அவன் கட்டுப்பாடு என சொல்ல இறைவனை அந்த நாகத்தோடு சொன்னார்கள்
இயக்கம் இறைவனுக்கு கட்டுபட்டது என சொல்ல விஷ்ணுவினை பாம்பின் மேல் படுக்க வைத்தார்கள் நாகம் அவனுக்கு சுருண்டு கட்டுபட்டது என்பது இயக்கத்தை கட்டுபடுத்துவது பரமாத்மா என்றார்கள்
சிவனுக்கு அப்படியே கழுத்தில் நாகமிட்டு சொன்னார்கள், முருகனுக்கும் விநாயகனுக்கும் சூரியனுக்கும் அன்னை சக்திக்கும் சொன்னார்கள்
எல்லா இயக்கத்தையும் நாக வடிவில் சொல்லி அதனை கட்டுபடுத்துவது இறைவன் என்றார்கள்
இன்னொன்றை சூசகமாக சொன்னார்கள், இயக்கத்தை கட்டுபடுத்தும் அந்த சலனமற்ற நிலையே இறைநிலை என்றார்கள், பாம்பு என்பது இயக்கம் அதை கட்டுபடுத்துவது இறை நிலை,மனதை கட்டுபடுத்தினால் இறைநிலை அடையலாம் என அழகாக சொன்னார்கள்
இந்துஸ்தானில் நாக அடையாளமில்லாமல் வழிபாடே இல்லை, கோவில்கள் இல்லை, பூஜைகள் இல்லை, எதுவுமில்லை.
இந்துக்கள் நாகங்களில் பிரபஞ்ச இயக்கம் கண்டார்கள், உடல் நலனை கண்டார்கள் உடலின் செல் முதல் விந்துமுதல், ரத்தகுழாய், மரபணு முதல் நரம்பு நாடி குடல் வரை பாம்பின் சாயலை கண்டார்கள்
மூலத்தில் சுருண்டிருக்கும் சக்தி எழும்பி தலையில் விரியும் அந்த இயக்கத்தை நாகமென உணர்ந்தார்கள்
இந்துக்களின் தர்ப்பணம் எனும் முன்னோர் வழிபாடும் அதன் தாத்பரியமே
இன்றைய விஞ்ஞானம் மனித மரபணுக்களில் 84 அம்சங்கள் உள்ளன. அதில் முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாகக் கொடுப்பது உண்டு. சில அம்சங்கள் ஆதியில் இருந்து வருவதும் உண்டு
முன்னோர்களிடம் இருந்து பெற்ற இந்த மரபணுக்களை அடுத்த சந்ததிக்குக் கொண்டு செல்ல வேண்டியது, அதை வருங்கால சந்ததிக்கு கொண்டு செல்லுவது ஆண்கள் கடமை என்பதால் அவர்களாலே தான் அது முடியும் என்பதால் ஆண்களை முன்னிறுத்தினார்கள்.
அதே நேரம் பெண்கள் குறிப்பிட்ட நிலையில் குறிப்பிட்ட, இடங்களில் தர்ப்பணம் செய்யவும் இந்துமதம் அனுமதித்தது.
ஏன் சில தலைமுறை பெயர்களை சொல்லச் சொன்னார்கள்?
ஒரு மனிதன் தன் எல்லா தலைமுறையும் அறிந்திருக்க முடியாது. அது சாத்தியமுமில்லை. ஆனால் சில தலைமுறையினை அறிந்திருந்தால் வந்த வழி தெரியும். பூர்வீகம் தெரியும். இச்சமூகத்துக்கு அவர்கள் என்னென்ன கடமைகள் செய்தார்கள் என்பதும் தெரியும்.
அப்படியே நாம் என்ன செய்யவேண்டும் என்பதும் தெரிய வரும் அல்லது என்ன செய்யக்கூடாது என்பதாவது தெரிய வரும்.
இதனாலே சில தலைமுறைகளை நினைத்துப் பார்க்கச் சொன்னவர்கள், இன்னும் ஆழமாகச் சிந்திக்கச் சொன்னார்கள்.
மூன்று அல்லது ஏழு தலைமுறைக்கு முன் யார் மூலம், அதன் முன்னோர்கள் யார், அவர்கள் முன்னோர்கள் யார் என்பதை சிந்திக்க சொன்னார்கள்.
அப்படி சிந்திக்கும் போது மூல மரபணு ஒன்றே என்பதும், எல்லோரும் அங்கிருந்துதான் உருவானோம் என்பதும் தெரிய வரும்.
விஞ்ஞானம் இதனை மிகத் தெளிவாகச் சொல்கின்றது. அதன் பரிணாம விதிப்படி தொடக்கத்தில் இருந்த ஒரு உயிரில் இருந்து தான் இங்கு எல்லாமும் தோன்றிற்று. மானிடனும் அதனில் இருந்து வந்தவனே என்கின்றது.
இதைத்தான் தர்ப்பணம் செய்யும் போதும் இந்துமதம் போதித்தது.
இன்று டி.எ.ஏ என விஞ்ஞானம் சொல்லும் மரபணுவினை என்றோ போதித்தது இந்துமதம் இதனாலே சிலவகை பெரும் நோய்கள் குலதெய்வ கோவிலில் தீரும் என்றது, காரணம் குலதெய்வ கோவிலில் இருக்கும் சக்தியும் காலம் காலமாக அந்த மரபில் நிற்கும் சக்தி இந்த மரபணுவினை தொடும்போது அதனுடன் கலக்கும் போது அந்த உடல் நோயில் இருந்துவிடுதலையாகின்றது
குலதெய்வ வழிபாடு ஏன் அவசியம் என்றால் அங்கேதான் வம்ச வம்சமாக வரும் அந்த பலமும் அருளும் இந்த பிரபஞ்சத்துடனான தொடர்பும் பெருகும் அது ஒருவனை மனதாலும் உடலாலும் பலமாக்கி வழிநடத்தும்
இந்த சூட்சுமமெல்லாம் கொண்டதே முன்னோர் வழிபாடு
இந்த ஜேம்ஸ் வாட்சன் சொன்ன மரபணு படம் அப்படியே இந்துக்கள் சொன்ன இரு நாகங்கள் வடிவாக இருந்தது, மரபணு என இன்றைய விஞ்ஞானம் சொன்னதையே அன்று நாக வழிபாடு என சொல்லி அது முன்னோர்களுடம் பிரபஞ்சத்துடனும் கலந்திருக்கும் வழிகளையும் சொல்லி, உடல் நலம் பிள்ளைபேறு மனநலம் பிரபஞ்ச யோக சக்தி என எல்லா சக்திகளையும் பெற போதித்த மதம் இந்துமதம்
விஞ்ஞானம் என்பது இந்துக்களின் எல்லா ஞான ரகசியங்களையும் விளக்கி நிருபிக்க வந்த வடிவமே அன்றி அது புதிதாய் சொல்லவோ உருவாக்கவோ எதுவுமில்லை, இந்துமதம் சிகரத்தில் ஏறி நின்று கண்ட உண்மைகளை சாட்சியாய் சொல்ல இப்போதுதான் மலை அடிவாரத்தின் அருகே வந்து கொண்டிருக்கின்றது விஞ்ஞானம்

Tuesday, 18 November 2025

நீங்கள் ஏதாவது நோயால் அவதிப்படுகிறீர்களா?*


 நீங்கள் ஏதாவது நோயால் அவதிப்படுகிறீர்களா?*

கவலைப்படாதீர்கள்...
உங்களுக்கு மருந்தும் வேண்டாம்,💊✖
மருத்துவரும் வேண்டாம்,👨‍⚕️✖
மருத்துவமனையும் வேண்டாம்!🏥✖
✅ உங்கள் பழக்கங்களை திருத்திக் கொள்வதன் மூலமாக மட்டுமே உங்கள் நோயை நீங்களே சரி செய்யலாம்:
🌞 அதிகாலை எழுங்கள்!
🚽 மலம் முழுமையாக நீக்கி, குடலை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்!
☀️ காலை சூரிய ஒளியை பெற்றுக்கொள்ளுங்கள்!
💨 தூய காற்றில் மூச்சு பயிற்சி செய்யுங்கள்!
💪 உடல் வியர்க்க வேலை அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள்!
🚿 தினம் இருமுறை குளிர்ச்சியான குளியல் எடுங்கள்!
😄 நல்ல எண்ணங்கள் கொண்டு இருங்கள்! தினமும் சிரிக்க மறக்காதீர்கள்!
🥦 சமைக்காத, இயற்கை உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள்!!!
⌛ முந்தைய உணவு முழுவதும் செரித்த பிறகு மட்டுமே மீண்டும் சாப்பிடுங்கள்!
💧 தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள்!
📱 மாலை 6 மணிக்கு மேல் செல்போன் பார்ப்பதைத் தவிருங்கள்!
🙏 சிறிது நேரம் அமைதியாய் இருங்கள்! தியானம் செய்யுங்கள்!
😴 சீக்கிரமாக தூங்குங்கள்! 8 மணி நேர ஆழ்ந்த உறக்கத்தைப் பெறுங்கள்!
✨ இந்தப் பழக்கங்களைத் தவறாமல் கடைபிடித்து வாருங்கள்! உங்கள் நோய்கள் அனைத்தும் உண்மையில் நிரந்தரமாக குனமடைவதை நீங்களே உணருவீர்கள்!
🥥 இயற்கை உணவே உண்மையான மருந்து!
🌳 இயற்கை அன்னையே உண்மையான மருத்துவர்!
🌿இயற்கைச் சூழலே உண்மையான மருத்துவமனை!!! 

சித்தர்கள் ஜீவ சமாதியான இடம்,* _அவர்கள் வாழ்ந்த நாட்கள்._

  சித்தர்கள் ஜீவ சமாதியான இடம்,* _அவர்கள் வாழ்ந்த நாட்கள்._ *1. அகஸ்தியர்* – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார். *2. பதஞ்சல...