Wednesday, 7 January 2026

*கர்மா தடம் மாறாது !!*



*கர்மா தடம் மாறாது !!*
*ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவோர் போவோரெல்லாம் அவனுக்கு பொருள் ! உணவு ஆகியவற்றை கொடுப்பார்கள் ! அவனுக்கு பக்கத்தில் ஒரு பிச்சைக்காரன் அமர்ந்திருப்பான் ! இருவரும் நண்பர்கள் ! அடுத்தவர்களை கவர்ந்திழுக்க பார்வையற்றவன் இனிய குரலில் பாடுவான் !!*
*ஒரு நாள் அவன் பாடிக்கொண்டிருந்தான் ! அவ்வழியே அந்த நாட்டு அரசன் சென்று கொண்டிருந்தான் ! பாட்டு அரசனை கவர்ந்தது !!*
*நீ அருமையாக பாடுகிறாய் ! உனக்கு ஏதாவது பரிசளிக்க விரும்புகிறேன் ! என்ன வேண்டும் கேள் ? என்றான் அரசன் !!*
*மகிழ்ந்து போனான் பார்வையற்றவன் ! அரசே ! நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆசை ! அரசராகிய நீங்கள் சாப்பிடும் மதிய உணவை ஒரு நாளாவது நான் சாப்பிட வேண்டும் ! இந்த ஆசையை நிறை வேற்றுவீர்களா ? என்று கேட்டான் !!*
*இதென்ன பிரமாதம் ! நாளையே உன்னுடைய ஆசையை பூர்த்தி செய்கிறேன் ! மதியம் உணவுடன் சந்திக்கிறேன் ! என்று சொல்லிவிட்டு அரசன் நகர்ந்தான் !!*
*மதிய உணவை அரசன் கொண்டு வருவான் ! அதைச் திருப்தியாக சாப்பிட வேண்டும் ! அதற்கு வசதியாக காலையிலிருந்தே எந்த உணவையும் சாப்பிடக்கூடாது ! அதிக பசியோடு இருந்தால் ? அதிகமாக சாப்பிடலாம் ! என்று அவன் மனம் கணக்குப் போட்டது !!*
*அடுத்த நாள் விடிந்தது !அரசனின் வருகைக்காக காத்திருந்தான் ! வழக்கம் போல் பலர் அவனுக்கு உணவு கொடுக்க முன் வந்தார்கள் ! அரசன் கொண்டு வரும் உணவு பற்றிய சிந்தனையால் ? மற்றவர்கள் கொடுத்ததை வாங்க மறுத்து விட்டான் ! மதியம் மணி இரண்டானது ! மூன்றானது ! அரசன் வரவேயில்லை ! நேரம் ஓடிக் கொண்டிருந்தது ! இரவு எட்டு மணியானது ! ஆள் நடமாட்டமே இல்லாமல் அந்த இடமே ஓய்ந்து போனது ! கோபத்தோடும் பசியோடும் உட்கார்ந்திருந்தான் பார்வை அற்றவன் ! அந்த நேரத்தில் அரசன் அங்கு வந்தான் !!*
*தம்பி! எப்படி இருக்கிறாய் ? அரண்மனை சாப்பாடு நன்றாக இருந்ததா ? எங்கே பொற்காசு மூட்டை எங்கே ? குதிரை எங்கே ? என்று கேட்டான் அரசன் !!*
*சாப்பாடா ? காலையிலிருந்து பசியோடு காத்திருக்கிறேன் ! இப்போது தானே நீங்களே வருகிறீர்கள் ! என்றான் சோகமாக !!*
*யோசித்தான் அரசன் ! பிறகு பேசினான் ! சாப்பாட்டுக் கூடையோடு கிளம்பினேன் ! திடீரென்று தலை சுற்றியது ! வைத்தியர்கள் என்னை சோதித்து விட்டு ஓய்வு எடுக்குமாறு சொன்னார்கள் ! அதனால் என்னுடைய பாதுகாவலன் மூலமாக உணவை கொடுத்து அனுப்பினேன் ! அதை நீ சாப்பிடவில்லையா ? என்றவாறு பக்கத்தில் இருந்த பாதுகாவலனை விசாரித்தான் !!*
*அரசே ! இவரிடம் உணவை கொடுத்தேன் ! ஆனால் ? இவர் வாங்க மறுத்து விட்டார் ! அதனால் ? அதை திரும்ப எடுத்துச் செல்வதை விட ? யாரிடமாவது கொடுத்தால் ? உபயோகமாக இருக்குமே என்று நினைத்து ! பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம் கொடுத்து விட்டு அரண்மனை திரும்பினேன் ! உங்களிடம் விஷயத்தை தெரிவிப்பதற்காக வந்தேன் ! நீங்கள் ஓய்வில் இருந்தீர்கள் ! அரசியாரிடம் சொல்லி விட்டு வந்து விட்டேன் ! என்றான் பாதுகாவலன் !!*
*தலையில் கைவைத்தபடி அமர்ந்தான் அரசன் ! அப்போது அங்கிருந்த சாது பேசினார் !!*
*தம்பி! நடந்த விவரங்களை என்னால் யூகிக்க முடிகிறது ! அரசன் சாப்பிடும் உணவை கேட்டாய் ! தானே நேரில் வந்து கொடுக்கிறேன் என்று சொன்னது அரசனின் பெருந்தன்மை ! ஆனால் ? அரசன் வந்து நேரில் கொடுத்தால் மட்டுமே அது அரச உணவு என்று நீ நினைத்தாய் ? அதுதான் இவ்வளவு குழப்பங்களுக்கு காரணம் ! இதுவரை நடந்தது மட்டுமே உனக்குத் தெரியும் ! இதற்கு மேலும் பல விஷயங்கள் நடந்துள்ளது ! என்று சொல்லி விட்டு அமைதி ஆனார் சாது !!*
*அந்த இடமே அமைதியானது ! சாது மீண்டும் பேசத் தொடங்கினார் !!*
*உணவை கொடுத்து அனுப்பிய அரசன் ! இரண்டாவது பாதுகாவலனை அழைத்தான் ! ஆயிரம் பொற் காசுகளை ஒரு மூட்டையாக கட்டி ! மரத்தடியில் அரச உணவை சாப்பிட்டுக் கொண்டிருப்பவனிடம் இந்த மூட்டையை ஒப்படைத்து விட்டு வா ! என்று அனுப்பினார் ! இரண்டாவது காவலன் சாப்பிட்டுக் கொண்டிருந்த உனது நண்பனிடம் ஆயிரம் பொற்காசுகளை கொடுத்து விட்டு நகர்ந்தான் ! அந்த பொற்காசு உனக்காக கொடுக்கப்பட்டது ! குழப்பம் இதோடு தீரவில்லை ! அரசன் மூன்றாவதாக ஒரு காவலனை அழைத்தான் ! அவனிடம் ஒரு குதிரையை கொடுத்து ! மரத்தடியில் பொற்காசு மூட்டையுடன் இருப்பவனிடம் ? குதிரையை கொடுக்கும் படி அனுப்பினான் ! பொற்காசு மூட்டையுடன் நின்று கொண்டிருந்த உன் நண்பன் ! குதிரையை பெற்றுக் கொண்டு ? நாட்டைவிட்டே போய் விட்டான் ! இப்போது உன்னுடைய நண்பன் செல்வந்தன் ! உன்னுடைய புரிதலில் ஏற்பட்ட சிறிய தவறால் ? நீ இன்று பசியோடு இருக்கிறாய் ! இதை விதி என்பதா ? அல்லது வாய்ப்பை சரியாக புரிந்து கொள்ளாமல் கோட்டை விட்டாய் என்று சொல்வதா ? ஒன்று மட்டும் நிச்சயம் ! உன்னுடைய வரம் ! உனக்கு சாபமாகவும் ? உன் நண்பனுக்கு வரமாகவும் மாறிவிட்டது ! என்று சொல்லி முடித்தார் சாது !!*
*அமைதியாக இருந்த அரசன் பேசினான் ! கவலைப்படாதே ! நாளை உனக்கு உணவு ! பொற்காசு ! குதிரை ! ஆகிய எல்லாவற்றையும் மீண்டும் அனுப்பி வைக்கிறேன் ! என்று சொல்லி விட்டு நகர்ந்தான் அரசன் !!*
*அடுத்த நாள் அரசனின் வருகைக்காக காத்திருந்தான் பார்வையற்றவன் ! அரசன் வரவேயில்லை ! முந்தய இரவே உடல் நிலை சரியில்லாத அரசன் இறந்து போன செய்தி ! இன்னமும் அவனுக்கு எட்டவில்லை !!*
*வாய்ப்பு என்பது எல்லோரிடமும் சொல்லிவிட்டு வந்து கதவை தட்டுவதில்லை ! அப்படியே சொல்லி விட்டு வந்தாலும் ? அதை மிகச் சரியாக உபயோகப் படுத்திக் கொள்ளும் புத்திசாலித்தனமும் ? அதிர்ஷ்டமும் ? நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது ? என்பது தெரியவில்லை ! வாய்ப்பு கதவைத் தட்டும் போது ? காதை பொத்திக் கொண்டால் ? பலன்கள் எப்படி கிடைக்கும் ? அந்த வாய்ப்பை சரியாக பயன் படுத்திக் கொள்ளும் மற்றொருவனிடம் சென்று தஞ்சமடையும் !!*
*"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு"*
*திரு அம்பலத்தரசன் திருவடி நிழலில் என்றும் உன் அடியேன்*!

எதை நாம் செய்கிறோமோ, அதுவே நமக்கும் நடக்கும்”.


 எதை நாம் செய்கிறோமோ, அதுவே நமக்கும் நடக்கும்”.

ஒரு நாள் சாயங்கால வேளையில் வயதான பெண்மணி ஒருவர் கார் அருகில் வெகு நேரமாக நிற்பதை ஒருவர் கவணித்தார்.வாகணங்கள் செல்லும்போது அந்த பெண்மணி கை காட்டி நிறுத்தப்பார்த்தார் ,ஆனால் எந்த வாகனமும் நிற்கவில்லை.
அந்த நபர் அருகில் சென்று என்ன பிரச்சனை என்று அந்த பெண்மணியிடம் கேட்டார்.கார் டயர் பஞ்சர் ஆகி விட்டது என்று அந்த பெண்மணி கூறினார்.
என் பெயர் தயாளன் நீங்கள் காரில் உட்காருங்கள் நான் டயர் மாத்தி கொடுக்கிறேன் என்று டயரை கழட்ட ஆரம்பித்தார்.சிறிது நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு டயரை மாத்தினார் .
அந்த பெண்மணி உங்களுக்கு நான் எவ்வளவு பணம் தர வேண்டும் என்று கேட்டார்.நான் சிறியதாக ஒரு டீக்கடை நடத்தி வருகிறேன் ,அதில் இருந்து வரும் பணமே எனக்கு போதும்.நீங்கள் பணம் எதுவும் தரவேண்டாம் என்றார்.
நீங்கள் கஷ்டப்படும் நேரத்தில் என்னாலான உதவி செய்தேன் அவ்வளவே.நீங்கள் பண உதவி செய்ய வேண்டும் என்றால் வேறு யாராவது ஒரு நபர் கஷ்டத்தில் இருக்கும்போது என்னை நினைத்து பாருங்கள், அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்றார்.
உதவி செய்வது என்பது ஒரு சக்கரம் மாதிரி சுழன்று கொண்டே இருக்க வேண்டும்.நான் உங்களுக்கு உதவி செய்தேன் நீங்கள் வேறு யாருக்காவது கஷ்டத்தில் இருக்கும்போது உதவி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு தயாளன் நடக்க ஆரம்பித்தார்.
அந்த பெண்மணி தயாளனை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு காரை எடுத்து கொண்டு சென்றார்.வழியில் தலைவலி எடுப்பது போல் இருக்கவே அருகில் உள்ள டீக்கடை அருகே காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.
டீக்கடை பார்ப்பதற்க்கு ரொம்பவே பரிதாபமாக இருந்தது,உள்ளே இருந்து ஒரு பெண் வந்து என்ன வேண்டும் அம்மா என்று கேட்டார்.வயதான பெண்மணி டீ கடையில் வேலை செய்யும் பெண்ணை பார்த்தார், அந்த பெண் ஒன்பது மாத கர்ப்பிணி என்பதை அவரிடம் பேசி தெரிந்து கொண்டார்.
குடிக்க டீ கொண்டு வாம்மா என்றார்.தயாளன் சொன்னது அவருக்கு நினைவு வந்தது.அந்த அம்மா டீ குடித்துவிட்டு 5000 ரூபாய் பணத்தை டேபிள் மேல் வைத்து விட்டு சென்று விட்டார்.
டீ கடையில் வேலை செய்த பெண் காபி டம்பளரை கழுவி வைத்து விட்டு வந்தார். டேபிளில் கட்டாக பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.அதை எடுத்து கொண்டு அந்த வயதான பெண்மணியிடம் கொடுக்க ஓடினார்,அதற்குள் கார் கிளம்பி சென்று விட்டது.
கடையில் இருக்கும் வேலை எல்லாம் முடித்து விட்டு, கையில் அந்த வயதான பெண்மணி விட்டு சென்ற பணத்தையும் எடுத்து கொண்டு வீட்டுக்கு சென்றார்.
பிரசவ செலவுக்கு என்ன செய்ய போகிறோம் என்று புலம்பி கொண்டு இருந்த தன் கணவருக்கு இந்த பணத்தை காட்ட வேண்டும் என்று அருகில் சென்றார்.ஆனால் மிகுந்த அசதியால் தூங்கி கொண்டு இருந்தார் நம்ம தயாளன்.

சக்கரத்தாழ்வாரும் நரசிம்மரும் இணைந்திருப்பதன் பின்னணி ரகசியம்!



சக்கரத்தாழ்வாரும் நரசிம்மரும் இணைந்திருப்பதன் பின்னணி ரகசியம்!

📖 பெருமாள் கோயில்களில்
சக்கரத்தாழ்வாருக்கு எப்போதும் தனி சன்னிதி இருப்பதை நாம் அனைவரும் பார்த்திருப்போம்.
ஆனால்…
அந்த சன்னிதியில்,
சக்கரத்தாழ்வாரின் பின்புறம் கண்ணாடி வழியாக
யோக நரசிம்மர் காட்சி தருவது ஏன்?
என்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா?
அதன் ஆழ்ந்த ஆன்மிக ரகசியத்தை இப்போது அறிந்துகொள்வோம்…
🌀 யார் இந்த சக்கரத்தாழ்வார்?
திருமால் தமது திருக்கரங்களில்
ஐந்து முக்கிய ஆயுதங்களை ஏந்தியிருப்பார்.
அதில்,
🔹 பாஞ்சஜன்யம் (சங்கு)
🔹 சுதர்சன சக்கரம்
இவை இரண்டும் மிக முக்கியமானவை.
👉 பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு
பெருமாள் நேரில் வருவதற்கு முன்பே,
சுதர்சன சக்கரம் முன்னதாக பாய்ந்து சென்று
துன்பங்களைச் சுட்டெரிக்கிறது
என்பது ஐதீகம்.
🔸 பதினாறு திருக்கரங்களுடன்
சக்கரத்தாழ்வார் அருள் புரிகிறார்.
🔸 ராமாவதாரத்தில்,
பகவானின் உடன் பிறந்த சகோதரரான
பரதன்,
கலியுகத்தில்
சக்கரத்தாழ்வாராக அவதரித்தார்
என்று வைணவ மரபு கூறுகிறது.
🦁 நரசிம்ம பெருமாள் – அவசரத் திருக்கோலம்
திருமாலின் பத்து அவதாரங்களில்
மிகவும் தனித்துவமானது
நரசிம்ம அவதாரம்.
🔹 தாயின் கருவில் தோன்றாமல்
🔹 நேரம், இடம், ஆயுதம் எதுவுமின்றி
🔹 தூணிலிருந்து திடீரென வெளிப்பட்டவர்
அதனால் தான்
நரசிம்மரை “அவசரத் திருக்கோலம்”
என்று அழைப்பார்கள்.
👉 “இந்தத் தூணில் உன் நாராயணன் இருக்கிறாரா?”
என்று இரணியன் கேட்ட அந்தக் கணமே,
பிரகலாதன் கூப்பிட்ட குரலுக்காக
ஓடோடி வந்து காத்தவர் நரசிம்மர்.
🔥 சக்கரத்தாழ்வாரும் நரசிம்மரும் இணைந்திருப்பது ஏன்?
இதுதான் இந்தக் கதையின் முக்கிய ரகசியம்…
🔹 சக்கரத்தாழ்வார்
👉 பக்தர்களின் அழைப்பைத் தாங்க முடியாமல்
உடனடியாக பாய்ந்து சென்று காப்பவர்.
🔹 நரசிம்மர்
👉 “நாளை” என்று சொல்லாதவர்.
👉 கூப்பிட்ட அந்தக் கணமே அருள்புரிபவர்.
💡 அதனால்,
பக்தனின் துன்பம் தோன்றும் அந்த நொடியிலே,
👉 முன்னணியில் சக்கரம் சுழன்று காப்பாற்றுகிறது
👉 பின்னணியில் நரசிம்மர் ஓடோடி வந்து அருள் பொழிகிறார்
என்பதை உணர்த்தவே,
சக்கரத்தாழ்வாரின் பின்னால்
யோக நரசிம்மர் அமர்ந்திருப்பதாக
ஆகம ரகசியம் கூறுகிறது.
🌼 வழிபாட்டு பலன்
🔸 சக்கரத்தாழ்வாரை நம்பி வழிபட்டால்
👉 சங்கடங்கள் நீங்கும்
👉 எதிரிகள் விலகுவர்
👉 வாழ்வில் சகல நன்மைகளும் உண்டாகும்
🔸 நரசிம்மரை வணங்கினால்
👉 பயம் அகலும்
👉 துன்பங்கள் உடனே தீரும்
👉 தீய சக்திகள் அணுகாது
👉 இருவரையும் ஒருசேர வணங்குவது
அருளின் உச்ச நிலை என்று சொல்லப்படுகிறது.
🌟 சாரம் (Conclusion)
சக்கரத்தாழ்வாரும் நரசிம்மரும்
இணைந்து இருப்பது வெறும் சிற்ப வடிவமல்ல…
👉 அது உடனடி காப்பின் தெய்வீக உறுதி
👉 பக்தனின் கண்ணீருக்கு கிடைக்கும்
நாராயணனின் அதிவேக அருள்

சந்திரனின் சாபம்

 


சந்திரனின் சாபம்
விநாயகப் பெருமானுக்கும் சந்திரனுக்கும் இடையே நடந்த அந்தப் புகழ்பெற்ற புராணக் கதையை நாம் அனைவரும் கேட்டிருப்போம். விநாயகர் நிறைய இனிப்புகளைச் சாப்பிட்டுவிட்டு, தன் வாகனமான மூஞ்சூறு மீது ஏறிச் சென்றார். குறுக்கே ஒரு பாம்பு வர, மூஞ்சூறு மிரள, விநாயகர் கீழே விழுந்தார். அவர் வயிறு வெடித்து இனிப்புகள் சிதறின. இதை வானத்திலிருந்து பார்த்த சந்திரன், ஆணவத்துடன் கேலியாகச் சிரித்தான். இதனால் கோபமடைந்த விநாயகர், சந்திரன் தேய்ந்து இருளில் மறையட்டும் என்று சாபமிட்டார்.
வெளியே பார்ப்பதற்கு இது ஒரு புராணக் கதை போலத் தெரிந்தாலும், இதன் உள்ளே நமது உடல் நலம், தூக்கச் சுழற்சி மற்றும் மனதிற்கும் உடலுக்கும் இடையிலான சமநிலை குறித்த ஆழமான அறிவியல் ரகசியம் ஒளிந்து கிணற்றிருக்கிறது.
உடல் vs மனம்
இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்களை நமக்குள் இருக்கும் சக்திகளாகப் பார்ப்போம்:
  1. விநாயகர்: அவர் நமது உடலின் ஆழ்ந்த ஞானத்தைக் குறிக்கிறார். நமது செரிமானம், "குடல் உணர்வு" (Gut feeling) மற்றும் நம்மை நிலைநிறுத்தும் உடலமைப்பின் அஸ்திவாரம் அவர்தான்.
  2. சந்திரன்: இது நமது மனதைக் குறிக்கிறது. கடலில் அலைகளைக் கட்டுப்படுத்துவது போல, நமது மனநிலை, தூக்க முறைகள் மற்றும் கால உணர்வைக் கட்டுப்படுத்துவது சந்திரன். சந்திரன் அழகானது, எப்போதும் 'தலையில்' (வானத்தில்) இருப்பது, அதனால் கீழே இருக்கும் உடலை விட தான் உயர்ந்தவன் என்று அது நினைக்கிறது.
மனம் உடலை ஏளனம் செய்யும்போது...
சந்திரன் விநாயகரைப் பார்த்துச் சிரிப்பது என்பது, நமது மனம் நமது உடலை மதிக்காமல் ஏளனம் செய்வதைக் குறிக்கும் ஒரு குறியீடு.
இன்றைய நவீன வாழ்க்கையில் நாம் இதைத் தான் செய்கிறோம். உடல் தூக்கத்திற்காகக் கெஞ்சும்போது, நமது மனம் மொபைல் திரையைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. உடல் களைப்பில் இருக்கும்போது, காபி குடித்து அதைத் தள்ளுகிறோம். அதாவது, நமது "சந்திரன்" (சிந்திக்கும் மனம்) நமது "விநாயகரை" (உடல்) பார்த்துச் சிரிக்கிறது. நமது உடல் தேவைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் நாம் என்று நினைக்கிறோம். ஆனால் உடல் நலம் பாதிக்கும்போது, விநாயகர் கீழே விழுவதைப் போல நமது வாழ்க்கையே சரிந்து விடுகிறது.
சாபம்: இருளின் அவசியம்
விநாயகர் கொடுத்த சாபம் ஒரு பழிவாங்கல் அல்ல; அது ஒரு உயிரியல் திருத்தம் (Biological Correction).
மனம் எப்போதும் 24 மணி நேரமும் விழிப்போடு, பிரகாசமாக இருக்க விரும்புகிறது. ஆனால், இயற்கையின் விதிப்படி, ஒவ்வொரு உழைப்பிற்கும் பின் ஒரு முழுமையான ஓய்வு தேவை. சந்திரனைத் தேயச் செய்ததன் மூலம், "நீ எப்போதும் பிரகாசித்துக் கொண்டே இருக்க முடியாது" என்ற பாடத்தை விநாயகர் புகட்டினார். நமது ஆற்றல் என்பது ஒரு நேர்க்கோடு அல்ல; அது ஒரு சுழற்சி. நாம் முழு ஆற்றலுடன் செயல்பட வேண்டுமானால், அவ்வப்போது ஓய்வு என்னும் இருளுக்குள் சென்று நம்மைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
சதுர்த்தி அன்று சந்திரனைப் பார்க்கக் கூடாது - ஏன்?
சதுர்த்தி அன்று சந்திரனைப் பார்த்தால் வீண்பழி வரும் என்பது ஐதீகம். இதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான உயிரியல் காரணம் இருக்கிறது.
நமது உடலுக்குள் இருக்கும் கடிகாரம் (Internal body clock) ஒளியினால் பெரிதும் பாதிக்கப்படும். மாதத்தின் குறிப்பிட்ட நாட்களில் நமது மூளை தன் வேதியியல் சமநிலையை 'ரீசெட்' (Reset) செய்ய முயற்சிக்கும். அமாவாசைக்கு சில நாட்கள் கழித்து இது நடக்கும். குறிப்பாக இந்த நான்காம் நாளில் (சதுர்த்தி), நமது உடல் சிஸ்டம் மிகவும் மென்மையான நிலையில் இருக்கும். இந்தச் சமயத்தில் பிரகாசமான நிலவொளியோ அல்லது மொபைல் திரையின் ஒளியோ நமது கண்ணில் பட்டால், அந்த 'ரீசெட்' ஆகும் முறை பாதிக்கப்படும். இது ஒரு புகைப்படத்தை உருவாக்கும் இருட்டறையில் திடீரென்று கதவைத் திறந்து வெளிச்சத்தைப் பாய்ச்சுவது போன்றது.
வீண்பழி (False Stigma)
தவறான நேரத்தில் அதிகப்படியான ஒளி நமது உடலில் படும்போது, அது மனநிலை மாற்றத்தையும் (Mood swings) குழப்பத்தையும் உண்டாக்குகிறது. இதனால் நாம் எரிச்சலடைகிறோம், மற்றவர்களிடம் தவறாகப் பேசுகிறோம். உலகம் நமக்கு எதிராக இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றம் உருவாகிறது. இதற்குப் பெயர் தான் "மித்யா கலுஷம்" அல்லது வீண்பழி. இந்தப் பிரச்சனைக்குக் காரணம் வெளி உலகம் அல்ல, நமது உடலின் உயிரியல் சுழற்சி (Biological rhythm) சீர்குலைந்தது தான்.
விநாயகர்-சந்திரன் புராணம் நமக்குச் சொல்வது இதுதான்: மனம் (சந்திரன்) உடலுக்கு (விநாயகர்) சேவை செய்ய வேண்டுமே தவிர, அதன் தலைவனாக இருக்கக் கூடாது.
உடல் சோர்வாக இருக்கும்போது அதை ஏளனம் செய்யாமல், அதற்கு மதிப்புக் கொடுத்து ஓய்வு எடுக்க வேண்டும். இருள் என்பது வெறும் இருட்டல்ல; அது குணப்படுத்தும் தாய் போன்றது. இயற்கைச் சுழற்சியை மதித்து நடந்தால், நமது மனமும் உடலும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஒரு சிற்பி

 ஒருவருக்கு #தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி
ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும்.

அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார்.
தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு #சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார். எமன் வந்தார். பார்த்தார், திகைத்துப் போனார். மூன்றும் சிலைகளா? இல்லை இரண்டுதான் என்பதை யூகித்துவிட்டார்.
ஆனால் எவை சிலைகள், எது #சிற்பி என்பதைத்தான் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நேர்த்தி. தவறாக சிலையின் மீது கயிற்றை வீசிவிடக்கூடாதே! நேரம் ஓடிக்கொண்டிருந்தது.
யோசித்தார். ஒரு யோசனை வந்தது.
சத்தமாக வாய்விட்டுச் சொன்னார், ‘அட என்ன தத்ரூபமாக இருக்கிறது! இவற்றைச் செய்த சிற்பியை என்னால் பாராட்டாமல் இருக்கவே முடியாது. என்னாலேயே எது சிலை எது #ஆள் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே!’ இப்படி சொல்லிவிட்டு மூன்று சிலைகளையும் உன்னிப்பாக கவனித்தார். அவர் எதிர்பார்த்தது நடந்தது. நடுவில் படுத்திருந்த சிலையின் உதட்டில் லேசான முறுவல் தெரிந்தது. தற்பெருமைதான், வேறென்ன!. சடாரென வீசினார் கயிற்றை.
கெடுத்தது எது? தான் என்கிற #ஈகோ. ஆக பலருடைய பிரச்சனைகளுக்கு, மனவருத்தங்கள்,மற்றும் சோர்வுகளுக்கு காரணம், நான் தான் தனது நான் தான் பெரியவன் என்கின்ற எண்ணங்களை ஒழித்தோம் என்றால் நாம் மிகப்பெரிய வெற்றியாளர்கள்.

இந்த 32 உளவியல் தந்திரங்கள் தெரிஞ்சா உங்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது


 இந்த 32 உளவியல் தந்திரங்கள் தெரிஞ்சா உங்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது! Part-2

17. “என்னை மன்னிச்சிடு” சொல்றதுக்கு பதில் “நன்றி” சொல்லுங்க: ஏன்னா, “நீங்க எனக்காக காத்திருந்ததுக்கு நன்றி”ன்னு சொல்றது உங்க தன்னம்பிக்கையைக் காட்டும். “மன்னிச்சிடுங்க லேட் ஆயிடுச்சி”ன்னு சொல்றது அடிமைத்தனத்தைக் காட்டும்.
18. யாருடைய ஒப்புதல் (validation)-காகவும் ஏங்காதீங்க: ஏன்னா, பிறர் சரின்னு சொல்லனும்னு காத்திருக்கிறவங்களுக்கு அதிகாரம் இல்லாமப் போயிடும்.
19. மௌனத்தை அமைதிக்கான ஆயுதமா பயன்படுத்துங்க: குறைவா பேசுறவங்க நல்லா பழக மாட்டாங்கன்னு அர்த்தமில்ல. அவங்கள யாராலும் கணிக்க முடியாதுன்னு அர்த்தம்.
20. நீங்க முடியாதுன்னு சொல்லும்போது மக்கள் எப்படி ரியாக்ட் பண்றாங்கன்னு கவனிங்க: ஏன்னா, அதுதான் அவங்களோட உண்மையான முகம்!
21. உணர்வுகளுக்கு பெயர் வைத்துப் பழகுங்கள் (Emotional labelling): எந்த ஒரு விஷயத்துக்கும் ரியாக்ட் பண்றதுக்கு பதில் உங்க உணர்வுகளுக்கு பெயர் வையுங்கள். அப்போ அவை உங்களை கட்டுப்படுத்தாது.
22. உங்க லட்சியங்களை ரகசியமா வச்சிக்குங்க: ஏன்னா, உங்க நோக்கம் என்னன்னு தெரியாதப்போ உங்களை யாராலும் தாக்க முடியாது.
23. பிறரின் புகழ்ச்சி/பாராட்டுகள் உங்க கண்களை மறைக்க விடாதீங்க: ஏன்னா, பாராட்டுகள் பெரும்பாலும் நம்மைக் கட்டிப்போடும் பாசமாகவே செயல்படும்.
24. உங்க ரியாக்‌ஷன்களை எப்போதும் கணிக்க முடியாதபடி வைத்துக்கொள்ளுங்கள்: ஏன்னா, அப்போதான் நம்மை மேனிபுலேட் செய்பவர்கள் என்ன நினைக்கிறான் என்று குழம்பி ஓடிப்போவார்கள்.
25. தேவையில்லாம தன் விஷயங்களை அதிகம் பகிர்பவர்களிடம் கவனமா இருங்க: ஏன்னா, நம் விஷயங்களை நம்மிடம் இருந்து கறப்பதற்கான சூழ்ச்சி அது.
26. உணர்ச்சிவசப்படும் மக்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள்: ஏன்னா, அவங்ககிட்ட லாஜிக் வேலை செய்யாது.
27. யாராவது உங்க மேல அபாண்டமா பழி சுமத்தினா, “எதை வச்சு நீங்க அந்த முடிவுக்கு வந்தீங்க”ன்னு கேளுங்க: ஏன்னா, அப்போதான் அவங்க காரணம் சொல்ல முடியாம திணறுவாங்க.
28. ஒரு கருத்துவேறுபாடு நடக்கும்போது பாதியிலேயே கிளம்பிடுங்க: ஏன்னா, காட்டுக் கத்தலா கத்துறதை விட மௌனம் சக்திவாய்ந்தது.
29. ஒருவருடன் கருத்துவேறுபாடு வரும்போது பெயர்சொல்லி பேசுங்கள்: ஏன்னா, அப்போதான் அந்த உரையாடலின் கோபம் உடனே குறையும்.
30. இன்செக்கியூரான மக்களிடம் உங்கள் வெற்றியை நியாயப்படுத்தி பேசாதீங்க: உங்க வளர்ச்சியை விளக்கிப் பேச பேச உங்க மேல அவங்களுக்கு வெறுப்புதான் வரும்.
31. நீங்கள் வெற்றி அடையும்போது மக்கள் எப்படி ரியாக்ட் பண்றாங்கன்னு கவனிங்க: மகிழ்ச்சி உங்கள் நலம்விரும்பிகளை அடையாளம் காட்டும், அசௌகரியம் வயிற்றெரிச்சல்/பொறாமையைக் காட்டும்.
32. உணர்ச்சிகளை நம்புவதை விட செயல்களை நம்புங்கள்: ஏன்னா, மக்கள் எதை மீண்டும் மீண்டும் செய்கிறார்களோ அதுவே அவர்கள் ஆழ்மனதை படம்பிடித்துக் காட்டிவிடும். 

நமசிவய வந்தது எப்படி?


 நமசிவய வந்தது எப்படி?

ம சி வ ய= 51
எப்படி?
தமிழில் மெய் எழுத்துகள் 18
அதில்
எட்டாம் எழுத்து ந்
பத்தாம் எழுத்து ம்
மூன்றாம் எழுத்து ச்
பதினான்காம் எழுத்து வ்
பதினொன்றாம் எழுத்து ய்
8+10+3+14+11=46
மெய் என்றால் உடல் நமது உடலில் இந்த ஐந்து எழுத்தும ஐந்து இடத்தில் உடல் எழுத்தாய் விளங்கி நிற்க
அதற்கு உயிர்ப்பு கூட்ட உயிர் எழுத்தாக
அ+அ+இ+அ+அ
என்ற அட்சரத்தைக் கூட்டி
ந ம சி வ ய
என்ற மந்திரம் உருப்பெற்றது
மேற் சொன்ன எண்ணிக்கையில் உயிர்எழுத்து ஒன்று கூட்ட அதாவது
8+1=9
10+1=11
3+1=4
14+1=15
11+1=12
ஆகக் கூட்ட
9+11+4+15+12=51 என்று வரும்.
இதில் ஓம் என்பது மூலமந்திரம்
ஆகவே அது மூலாதாரத்தோடு தொடர்புள்ளது.
இந்த ஐந்தெழுத்தும் மூலத்தின் துணையின்றி வேலை செய்யாது.
ஓம் தாய் எழுத்து மற்றவை சேய் எழுத்து (தாய் எழுந்து போனால் குட்டிகள் தானே போகும்)
ஓம்நமசிவய
இது் மூலாதாரம் தொடங்கி அடுத்த ஐந்து சக்கரங்களையும் இயக்கும்
ஆகவே ஆறு ஆதாரங்களை இப்படி சூட்சமமாக சொல்லிவைத்தனர்...
51அட்சரம்
5+1=6
6 ஆதாரங்கள்.
ஓமென்ற ஆதாரம் ஆறுக்குள்ளே உண்டப்பா நூற்றியெட்டு வர்மம்தானே!
- அகத்தியர் பாடல்
(அடுத்து விரிவாக இன்னும் ஆழமாக இந்த பிரயோகத்தை சித்தி செய்யும் முறைகளை நம்முடைய திருமந்திர சிவயோக whatsaap வகுப்பில் கற்பிக்கிறேன். தேவைப்படுபவர்கள் சித்தர்களின் குரல் ஆலோசகர் ராம்குமார் (+918148285865) அவர்களை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்களை நிரப்பி திருமந்திர வகுப்பில் கற்று ஒரு தெய்வீக நிலையுள்ள நினைத்ததையெல்லாம் சாதிக்கும் சிவயோகியாக உருவாகுங்கள்...)
- திருமந்திர ரகசிய குறிப்புகளில் இருந்து....

வெல்லவே #முடியாதது


 "#வெல்லவே #முடியாதது..."*

*தர்மம்*
மஹாபாரதப்போர்...
18 நாள் யுத்தம்...
வெற்றி பாண்டவர்களுக்கு...
ஆனால், ஒரு விஷயம்...
கெளரவர்கள் பக்கத்தில் எப்பேர்ப்பட்ட மஹா ரதர்கள் — துரியோதனன், பீஷ்மர், துரோணர், கர்ணன், ஜயத்ரதன் என்று மிகப் பெரிய பட்டியல்...
இவர்களை எப்படிப் பாண்டவர்கள் வென்றார்கள்...?
ஸ்ரீ கிருஷ்ணர் இல்லாவிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கவே முடியாது.
1) ஜயத்ரதன்
2) பீஷ்மர்
3) துரோணர்
4) கர்ணன்
5) துரியோதனன்
6) விதுரர்
இவர்களின் வீழ்ச்சிக்காகக் ஸ்ரீ கிருஷ்ணர் தீட்டிய திட்டம் தான் வெற்றியை தந்தது.
இதில் யாரை வீழ்த்த தீட்டிய திட்டம் சிறப்பு வாய்ந்தது தெரியுமா?
அநேகப் பேர் கர்ணனின் வீழ்ச்சிக்குக் ஸ்ரீகிருஷ்ணர் தீட்டிய யுக்தி தான் சிறப்பு வாய்ந்தது என்று நினைப்பார்கள்.
இன்னும் சிலபேர் ஜயத்ரதனைக் கொல்ல சூரியனை மறைத்தது தான் உயர்ந்தது என்றும் நினைக்கலாம்.
இதே மாதிரிதான் பீஷ்மர், துரோணர் இவர்களுக்கு எதிராக எடுத்த முயற்சிகள்...
ஆனால் சரியான விடை...
விதுரருக்காக ஸ்ரீகிருஷ்ணர் தீட்டிய திட்டம் தான் சிறப்பு வாய்ந்தது.
*இது என்ன புது குழப்பம்?*
*விதுரர் எங்கே சண்டை போட்டார்?*
அவரை வீழ்த்தக் ஸ்ரீகிருஷ்ணன் ஏன் திட்டம் போட வேண்டும்? என்ற கேள்விக்கு விடை சொல்லும் முன்...
யுத்தம் நடக்கும் முன்பு நடந்த சம்பவங்களை பார்ப்போம்...
முதலில் விதுரரை பற்றி தெரிந்து கொள்வோம்...
*யார் இந்த விதுரர்?*
*விதுரர்...*
திருதராஷ்டிரருக்கும், பாண்டுவுக்கும் தம்பி... அதாவது, பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் சித்தப்பா... விதுரரின் தாயார் ஒரு பணிப்பெண்ணாக இருந்தவர்.
*விதுரர் மகா நீதிமான்...*
தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர்... தர்மராஜர்... அப்பழுக்கில்லாதவர்...
'பெண்களை தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக என எந்த நிலையிலும் அவர்களை உயர்வாக வைத்து போற்ற வேண்டியவர்கள்' என தர்ம சாஸ்திரம் சொல்கிறது.
திரெளபதியை துச்சாதனன் துகில் உரியும்போது விதுரர் ஒருவரை தவிர மற்ற பெரிய வீரர்கள் அனைவரும் வாய் திறக்காமல் மெளனமாகத்தானே இருந்தார்கள்...
அதற்கான தண்டனை தான்... விதுரரை தவிர மற்ற பெரிய வீரர்கள் அனைவருக்கும் யுத்தத்தில் மரணம் அடைய வேண்டும் என்பது தர்மத்தின் நியதி.
கெளரவர் பக்கத்திலிருந்து போராடும் பெரிய பெரிய வீரர்களை வீழ்த்தக் ஸ்ரீகிருஷ்ணர் போட்ட திட்டங்கள் அவ்வளவு கடினமானது இல்லை.
ஏனெனில், ஒவ்வொருவருக்கும் ஒரு பலஹீனம் இருந்தது. எனவே அவர்களை எளிதில் வீழ்த்த முடிந்தது.
ஆனால், மேற்கண்ட பண்புகளால் விதுரரை மட்டும் வீழ்த்தவே முடியாது...
விதுரர் 'வில்' எடுத்தால் அவரை ஜெயிக்கவே முடியாது...
யுத்தம் என்று வந்தால்... மற்ற பெரியவர்கள் - பீஷ்மர், துரோணர் போல் விதுரரும் செஞ்சோற்றுக் கடனுக்காக, கெளரவர்கள் பக்கம் நின்று போரிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெற முடியாது.
மஹாபாரதப் போரின் முடிவே வேறே மாதிரி ஆகி இருக்கும்.
அதனால்... எல்லோரையும் விட மிக முக்கயமான நபர்... *விதுரர்* தான்.
அவர் கெளரவர்களுக்காக நிச்சயம் போரிடக் கூடாது. மேலும், தர்மநெறி படி விதுரர் போரில் மரணமடைய கூடிய நியதியும் கிடையாது.
*விதுரரை போரிடாமல் எப்படி தடுப்பது?*
ஸ்ரீகிருஷ்ணர் தர்ம வியூகம் அமைக்கிறார்.
அதன்படி, பாரதப்போரைத் தடுக்க, ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுக்காகத் தூது செல்கிறார்.
'கிருஷ்ணர் வருகிறார்' என்று தெரிந்ததும்... திருதராஷ்டிர மகாராஜா தடபுடல் வரவேற்பு எற்பாடு செய்திருந்தார்.
துரியோதனன் சபைக்குச் செல்லும் நாளுக்கு முந்தின இரவு, 'ஸ்ரீகிருஷ்ணர் யார் வீட்டில் தங்குவார்?' என்ற கேள்வி பிறந்தது.
நான், நீ என்று எல்லோரும் அவரை அழைத்தார்கள்.
ஸ்ரீகிருஷ்ணரோ, “நான் தூதுவன்... என் வேலை வெற்றி பெற்றால்தான் உங்கள் உபசரணைகளை ஏற்றுக்கொள்வேன்.
இப்போது இந்த இரவில் நான் விதுரர் வீட்டுக்குச் சென்று என் பொழுதைக் கழிக்கிறேன்...” என்றார்.
விதுரருக்கு மகா சந்தோஷம்... தனக்கு பிரியமான கிருஷ்ணர் தன் விருந்தினராக வருவதைப் பெரும் பாக்கியமாகக் கருதினார். விதுரர் வீட்டில் கிருஷ்ணர் இரவு பொழுதைக் கழித்தார்... மறுநாள், அரச சபையில் ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுக்காக வாதாடினார்.
துரியோதனன், "ஒரு ஊசி முனை நிலத்தைக்கூடப் பாண்டவர்களுக்குக் கொடுக்க முடியாது..." என்று சொல்லி கிருஷ்ணரையும் அவமதித்துப் பேசினான்.
கிருஷ்ணரும், "யுத்தம் நிச்சயம்..." என்று சொல்லிவிட்டு பாண்டவர் முகாமுக்குத் திரும்பினார்.
வழியில்... கிருஷ்ணருடைய சாரதி, "சுவாமி! எந்த நோக்கத்தில் நீங்கள் விதுரர் மாளிகையில் தங்க நிச்சயத்தீர்கள்?” என்றான்.
கிருஷ்ணா் சொன்னார், "அனைத்தும் நல்லதுக்கே... இதன் விளைவு இப்போது துரியோதனன் சபையில் நடந்து கொண்டிருக்கிறது...” என்று சொல்லி சிரித்தார்.
அதேபோன்று... அப்போது துரியோதனன் சபையில் எல்லோரும் துரியோதனனிடம் கெஞ்சி, 'கிருஷ்ணா் பேச்சைக் கேட்டு யுத்தத்தை தவிர்க்க வேண்டும்...' என்று வாதாடினார்கள்.
அதில் விதுரர் குரல் தான் ஓங்கி ஒலித்தது.
ஏற்கனவே துச்சாதனன் துயில் உறியும் போது விதுரர் தட்டி கேட்டது... பாண்டவ தூதரான கிருஷ்ணரை விதுரர் தன் வீட்டில் முதல் நாள் இரவு தங்கவைத்து உபசாரம் செய்தது...
என துரியோதனனுக்கு விதுரர் மேல் வெறுப்பு இருந்தது...
இதன்மூலம் அவர் பாண்டவர்கள் கட்சி என்றும் ஒரு நினைப்பு.
இப்போதும் விதுரர், கிருஷ்ணர் பேச்சைக் கேட்டு கொண்டு போரை நிறுத்த வாதாடியதும், துரியோதனனுக்குக் கோபம் பொத்துக் கொண்டுவந்தது...
என்ன பேசுகிறோம் என்ற நினைப்பில்லாமல் நாக்கில் நரம்பின்றி விதுரரை அவமானப்படுத்திப் பேசினான். குறிப்பாக, அவரை ‘தாசி புத்திரன்’ என்று திட்டித்தீர்த்தான்.
இதனால், விதுரர் மிகுந்த அவமானமடைந்தார்... ஆவேசமடைந்த விதுரர், சபையோர்கள் நடுங்க சபதமிட்டார். "உனக்கு அழிவு காலம் நெருங்கி விட்டது துரியோதனா!... இனி உனக்காக நான், என் வில்லை எடுத்துப் போரிட மாட்டேன்...
அதே சமயம் நான் பாண்டவர்கள் பக்கமும் செல்லமாட்டேன்... எனக்கு இங்கே இனிமேல் வேலையில்லை...” என்று சொல்லித் தன்னுடைய வில்லை இரண்டாக உடைத்துவிட்டுச்
சபையிலிருந்து வெளியேறினார்.
யுத்தம் முடியும் வரை அவர் தீர்த்த யாத்திரையிலிருந்து திரும்பவில்லை...
இப்பொழுது புரிந்து இருக்கும் ஸ்ரீகிருஷ்ணர், விதுரர் வீட்டில் ஏன் தங்கினாரென்று...
தங்காமல் இருந்தால்... விதுரர் வில்லை உடைத்து வெளியேறியிருப்பாரா?
துரியோதனனுக்காகப் போராட வேண்டிய ஒரு கட்டாயம் விதுரருக்கு வந்திருக்கும் அல்லவா?
விதுரர் வைத்திருந்த 'வில்' தர்ம சக்கரம் கொண்ட மஹாவிஷ்ணுவின் வில்...
'கோதண்டம்' எனப்படும் அந்த வில்லை எவராலும் வெல்ல முடியாது.
அர்ஜுனன் கையில் உள்ள வில் பிரம்மாவுடையது. 'காண்டீபம்' என்பது அதன் பெயர்.
போரில் விதுரர் கோதண்டத்துடன் வந்து நின்று விட்டால் ஆனானப்பட்ட அர்ஜுனனால் கூட தன் வில்லான காண்டீபம் கொண்டு அவரை வெல்ல முடியாது!
இதுவே பாண்டவர்களுடைய வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது...!
தர்மராஜனான விதுரரை ஜெயிக்கவே முடியாது என்ற *தர்மம்* உணர்ந்த ஸ்ரீகிருஷ்ணர் செய்த மஹா தர்ம யுக்தி தான் மஹாபாரத வெற்றி...!
*தர்மத்தை யாராலும் வெல்லவும் முடியாது...*
*தர்மத்தை போற்றுவோம்...*
*நம் தலைமுறைகளுக்கும் தர்மத்தை போதிப்போம்...*
🙏🕉🙏🕉🙏🕉🙏

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...