Sunday, 1 March 2026

நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து).......

 நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து).......

.
இதய பிரச்சினைகளுக்கு, (ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, இது சார்ந்த, ட்ரெட் மில், ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்க..)
உடல் உறிஞ்ச தகுதியில்லாத கழிவாக தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றவும்...
"நிறை மாத கர்பிணி" போன்ற தோற்றத்தை தரும் பலரின் பானை வயிற்றை flat ஆக்க்கவும்...
பச்சைபூண்டு மிக மிக சிறந்தது!
சிலர் இதை அப்படியே சாப்பிட முயற்சித்து,
அதில் உள்ள அமிலத்தன்மையின் வீரியம் தாங்கமுடியாமல் "சமைத்து_சாப்பிடுதல்" என்ற வசதியான குறிப்பை சாதகமாக்கி கொண்டு, முயற்சித்து, பயன் இல்லாமல் பாதியிலேயே விட்டு விடுவார்கள்!
பூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் ஒப்பற்ற மருத்துவ குணம் உடையது!...
சமைத்தால், அதன் இயல்பு தன்மை வெகுவாக பாதிக்கப்படும்! இயற்கையாகவே, சமைத்து கெடாத பூண்டு துண்டங்களை நன்கு கடித்து உமிழ் நீரில் செரிமானம் செய்தலே,பூண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும் சரியான முறையாகும்!
செய்முறை:
பத்து முழு பூண்டை உரித்து, தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கி, சுத்தமான பருத்தி துணியில் 8லிருந்து12 மணி நேரம் நிழலில் காய வைத்த பின்,
அதனுடன் 5 முழு எலுமிச்சை பழங்களின் சாற்றோடு,
மூழ்கும் வரை தேன் ஊற்றி, குறைந்தது 50 நாட்கள் ஊரவைத்த பின், காலை மாலை 1/2 ஸ்பூன் பூண்டு துண்டங்களை ருசித்து ரசித்து சாப்பிட,
ஆரோக்யத்தை அருகிலேயே வைத்துக்கொள்ளலாம்!
சாப்பிட அவ்வளவு ருசியாகவும், அடுத்த நாள் தானாக உடலும் மனமும் நாடும் ஒரு பதார்த்தமாக விளங்கும்...

சுக்கிரனுக்கு திரிகோணத்தில் (1, 5, 9 ஆகிய வீடுகளில்) சந்திரன் அமைந்திருந்தால்

 ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனுக்கு திரிகோணத்தில் (1, 5, 9 ஆகிய வீடுகளில்) சந்திரன் அமைந்திருந்தால் என்ன பலன் என்பதை பார்க்கலாம்!

சுக்கிரன் என்பவர் கலை, செல்வம், சுகபோகங்கள் மற்றும் மனைவியைக் குறிக்கும் காரக கிரகம் ஆவார், சந்திரன் என்பவர் மனோகாரகன், பயணம், இடமாற்றம் மற்றும் தாயைக் குறிப்பவர். இவ்விரு சுப கிரகங்களும் திரிகோண உறவு கொள்ளும்போது, அந்த ஜாதகர் இயல்பாகவே மிகவும் மென்மையான மற்றும் ரசனை மிக்க மனப்பக்குவம் கொண்டவராக இருப்பார். கலை உணர்வு, இசை மற்றும் கற்பனைத் திறன் இவர்களிடம் மேலோங்கி நிற்கும். குறிப்பாக, பெண் கிரகங்களான இவை இரண்டும் இணைவதால், ஜாதகருக்குப் பெண் வழியில் லாபங்களும், பெண்களால் ஆதரவும் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
பொருளாதார ரீதியாகப் பார்த்தால், சுக்கிரன் மற்றும் சந்திரனின் இந்தத் தொடர்பு 'தன யோகத்தை' வழங்கக்கூடியது. சந்திரன் திரவப் பொருட்கள் மற்றும் பயணங்களைக் குறிப்பதால், உணவு விடுதிகள், பால் பொருட்கள், துணி வியாபாரம் அல்லது வெளிநாடு தொடர்பான தொழில்கள் மூலம் ஜாதகர் பெரும் செல்வத்தைச் சேர்க்க முடியும். இவர்கள் அடிக்கடி பயணம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்களாகவும், அந்தப் பயணங்களின் மூலம் ஆதாயம் பெறுபவர்களாகவும் இருப்பார்கள். ஆடம்பரப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் மற்றும் அழகான வாகனங்கள் மீது இவர்களுக்குத் தனி ஈர்ப்பு இருக்கும்.
சமூகத்தில் இவர்களது பேச்சுக்கும் நடத்தைக்கும் ஒரு தனி மரியாதை இருக்கும், ஏனெனில் இவர்கள் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள்.
திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை, ஒரு ஆணின் ஜாதகத்தில் சுக்கிரனுக்குத் திரிகோணத்தில் சந்திரன் இருந்தால், அவருக்கு அமையப் போகும் மனைவி மிகவும் அழகானவராகவும், அன்பானவராகவும், குடும்பத்தை நிர்வகிப்பதில் வல்லவராகவும் இருப்பார். இருப்பினும், சந்திரன் தேய்ந்து வளரும் இயல்புடையவர் என்பதால், குடும்பச் சூழலில் அவ்வப்போது சில மாற்றங்கள் அல்லது இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். தாய்க்கும் மகளுக்கும் அல்லது மனைவிக்கும் இடையே ஒரு நல்ல பிணைப்பு இருக்க இந்த கிரக நிலை உதவும். ஆன்மீக ரீதியாகப் பார்த்தால், இவர்களுக்குப் பெண் தெய்வ வழிபாடு அல்லது நீர் நிலைகளுக்கு அருகில் உள்ள கோவில்களுக்குச் செல்வது மிகுந்த மன அமைதியையும் வளர்ச்சியையும் தரும்.
இந்த அமைப்பில் சந்திரன் அல்லது சுக்கிரனுடன் பாவ கிரகங்களான ராகு, கேது அல்லது சனி சேராமல் இருந்தால், ஜாதகர் வாழ்நாள் முழுவதும் நிம்மதியான மற்றும் வளமான வாழ்க்கையை அனுபவிப்பார். ஒருவேளை மற்ற கிரகங்களின் பார்வை இருந்தால் பலன்களில் சிறு மாற்றங்கள் ஏற்படலாம். மொத்தத்தில், சுக்கிரன் - சந்திரன் திரிகோணத் தொடர்பு என்பது வாழ்வின் வசதிகளையும், மன மகிழ்ச்சியையும் ஒருசேர வழங்கக்கூடிய ஒரு உன்னதமான அமைப்பாகும்.

தண்ணீர் குடிப்பதற்கான சரியான நேரமும் நன்மைகளும்! 💧


 தண்ணீர் குடிப்பதற்கான சரியான நேரமும் நன்மைகளும்! 💧

நம்மில் பலர் தண்ணீர் குடிப்போம்… ஆனால் சரியான நேரத்தில் குடிக்கிறோமா? 🤔
தண்ணீர் ஒரு சாதாரண பானம் இல்லை — அது நம் உடலின் உயிர் சக்தி!
இங்கே பாருங்கள் 👇 சரியான நேரத்தில் தண்ணீர் குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்:
---
🕰 🌅 காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கண்ணாடி தண்ணீர்
👉 இரவு முழுவதும் ஓய்வில் இருந்த உடல் உறுப்புகள் மீண்டும் செயல்பட உதவும்
👉 குடல் இயக்கம் சீராகும்
👉 உடலில் தேங்கிய நச்சுக்கள் வெளியேறும்
---
🍽 🥗 உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் தண்ணீர் குடிக்கவும்
👉 ஜீரண சக்தி மேம்படும்
👉 அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க உதவும்
👉 உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்
---
🚿 🚿 குளிப்பதற்கு முன் ஒரு கண்ணாடி தண்ணீர்
👉 இரத்த அழுத்தம் திடீரென உயர்வதை குறைக்க உதவும்
👉 உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்தும்
---
🌙 🛏 தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிக்கவும்
👉 இரவில் இதய செயல்பாடு சீராக இருக்க உதவும்
👉 மாரடைப்பு அபாயத்தை குறைக்க உதவலாம்
---
💺 🪑 உட்கார்ந்து மெதுவாக தண்ணீர் குடிக்கவும்
👉 ஜீரணம் சீராகும்
👉 உடல் சரியாக ஈரப்பதம் பெறும்
👉 சிறுநீரகங்கள் நன்றாக செயல்படும்
---
💡 நினைவில் கொள்ளுங்கள்:
✔ ஒரே முறையில் அதிகமாக குடிக்க வேண்டாம்
✔ தினமும் குறைந்தது 2–3 லிட்டர் தண்ணீர் (உங்கள் உடல் நிலை, வயது, காலநிலை ஆகியவற்றைப் பொறுத்து மாறும்)
✔ தாகம் வந்த பிறகு அல்ல — தாகம் வராமல் இருக்க முன்பே குடிக்கவும்
---
💬 நம்முடைய உடலுக்கு நாமே மருத்துவர்!
இன்று முதல் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை சரிசெய்வோம்.
❤️ இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால்உங்கள் லைக் மற்றும் ஷேர் செய்யுங்கள். குடும்பத்தாரும் ஆரோக்கியமாக இருக்கட்டும்! 💙💧

மரங்களின் கிளையிலிருந்து உதித்த வனதேவதை! மாரிஷா🌳


 மரங்களின் கிளையிலிருந்து உதித்த வனதேவதை! மாரிஷா🌳

இந்தப் பிறப்பு விஷ்ணு புராணத்திலும், பாகவதத்திலும் மிக விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
பத்து இளவரசர்கள் (பிரசேதஸ்கள்) கடலுக்கடியில் கடும் தவம் இருந்தனர். அவர்கள் தவம் முடிந்து வெளியே வந்தபோது, பூமி முழுவதும் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருப்பதைக் கண்டனர். கோபமடைந்த அவர்கள், தங்கள் வாயிலிருந்து நெருப்பையும் காற்றையும் உமிழச் செய்து காடுகளை எரிக்கத் தொடங்கினர்.
மரங்கள் அழிவதைக் கண்ட சந்திர தேவன் (சோமன்), பிரசேதஸ்களைத் தடுத்து நிறுத்தினார். "மரங்களை அழிக்காதீர்கள், என்னிடம் ஒரு பேரழகி இருக்கிறாள்" என்று கூறி மாரிஷாவை அறிமுகப்படுத்தினார்.
மாரிஷா ஒரு அப்சரஸின் மகள். முந்தைய பிறப்பில் அவள் பெற்ற சாபத்தால், இந்தத் தடவை அவள் மரங்களின் பாதுகாப்பில் வளர்ந்தாள். மரங்களின் நுனியில் இருந்த பனித்துளிகள் மற்றும் காற்றைக் கொண்டு, மரங்களின் கிளைகளே அவளை ஒரு குழந்தையாக உருவாக்கிப் பெற்றெடுத்தன.
அதனால்தான் மாரிஷாவை "விருட்ச கன்யை" (மரங்களின் மகள்) என்று அழைப்பார்கள்.
இவள் அந்தப் பத்து பிரசேதஸ்களையும் திருமணம் செய்து கொண்டாள்.
இவர்களுக்குப் பிறந்தவர்தான் புகழ்பெற்ற தக்ஷ பிரஜாபதி (இவர்தான் சிவபெருமானின் மனைவி தாட்சாயிணியின் தந்தை!).
அடர்ந்த காடுகளின் ஆத்மாவாக, மரங்களின் கிளைகளிலேயே உருவாகி வளர்ந்தவள் மாரிஷா. ஒரு பெண்ணின் கருப்பையில் பிறக்காமல், இயற்கையின் மடியில் பனித்துளிகளாலும் காற்றாலும் செதுக்கப்பட்ட 'விருட்ச கன்யை' இவள்.
நவீன அறிவியலில் தாவரங்களுக்கும் உணர்வு உண்டு என்பதை இன்று பேசுகிறோம். ஆனால் அன்றே, மரங்களே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததாக நமது புராணங்கள் கூறுகின்றன. மகாபாரதத்தின் முன்னோடியான தக்ஷனின் தாயான இந்த மாரிஷாவின் பிறப்பு, இயற்கையோடு நமக்குள்ள பிணைப்பை உணர்த்துகிறது!
இது 'தாவரங்களில் இருந்து மனித பரிணாமம்' அல்லது 'இயற்கை வழி கருத்தரிப்பு' குறித்த ஒரு குறியீடு. நமது முன்னோர்கள் இயற்கையை எவ்வளவு உயர்வாக மதித்தார்கள் என்பதற்கு மாரிஷாவே சாட்சி!

அனுமன் செய்த தியாகம்!


 அனுமன் செய்த தியாகம்!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!
இறைவனிடம் செலுத்தும் பக்தியின் பரிமாணத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 'கடவுள் நம் கண்களுக்கும் புலன்களுக்கும் எட்டாத நிலையில் எங்கோ வியாபித்திருக்கிறார். அவர் என்னைக் காத்து ரக்ஷிக்கிறார். அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்’ என்று கருதி, அவரைச் சரணடைந்து பக்தி செலுத்துவது முதல் வகை.
'கடவுள், உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளிலும் ஒவ்வொரு அணுவிலும் வியாபித்திருக்கிறார்; உயிர்களிடம் காட்டும் அன்பின் மூலம் இறைவனுக்குச் சேவை செய்யலாம்’ என்று கருதி, கடவுளை வழிபடுவது இரண்டாவது வகை. 'கடவுள் என்னுள்ளேயே இருக்கிறார். அவரை வேறெங்கும் தேடத் தேவையில்லை. என்னுள்ளே இருந்து என்னை இயக்கும் இறைவனே என்னை வழிநடத்துகிறான்’ என்று கருதி, தன்னைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, தன்னுள்ளே வாழும் இறைவனிடம் சரணாகதி அடைந்து சேவை செய்வது மூன்றாவது வகை.
அனுமனின் பக்தி, இந்த மூன்றாவது வகையைச் சேரும். ராமாயண காவியத்தில் ராமனுக்கு அடுத்தபடியாகப் பேசப்படுபவன் அனுமன். நம் தேசத்தில் பல வகையான ராமாயணங்கள், பல்வேறு காலகட்டத்தில், பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டுக் காலம் காலமாகப் பேசப்பட்டு வருகின்றன. சம்ஸ்கிருத மொழியில் வால்மீகி எழுதிய மூல ராமாயணம், இந்தியில் துளசிதாசர் எழுதிய ராமசரிதமானஸ், தமிழில் கம்பர் எழுதிய கம்பராமாயணம், தெலுங்கில் பக்த போத்தன்னா எழுதிய போத்தன்னா ராமாயணம் ஆகியவை மட்டுமின்றி, அத்யாத்ம ராமாயணம், ஆனந்த ராமாயணம், ஹனுமத் ராமாயணம் எனப் பல்வேறு ராமாயண காவியங்கள் உலகெங்கும் பன்னெடுங்காலமாகப் போற்றிப் பூஜிக்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் 'ஹனுமத் ராமாயணம்’ என்பதை ஹனுமானே அருளியதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஹனுமத் ராமாயணம் தோன்றிய காவிய நிகழ்ச்சி ஒன்றை நினைவுகூர்வோம்.
ஸ்ரீராமனின் பட்டாபிஷேகம் நடந்து முடிந்த பின்னர், ஒருநாள் இமயமலைச் சாரலில் ஒரு சிகரத்தின் மீது ஏறி நடந்துகொண்டிருந்தார் வால்மீகி. சிகரத்தின் சரிவுகளில் இருந்த பாறைகளின் மீதும், கற்களின் மீதும் கல்வெட்டுக்களாகச் சில வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவற்றைப் படிக்க ஆரம்பித்தார் வால்மீகி. அவருக்கு மெய்சிலிர்த்தது. அந்த வாசகங்கள் எல்லாம் ஸ்ரீராமனின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சித்திரிப்பதாக அமைந்திருந்தன. அவை, தான் எழுதிய ராமாயண வரிகளைவிட, கவிதை நயமும் கருத்து நயமும் மிக்கவையாக இருப்பதை உணர்ந்து பிரமித்தார் வால்மீகி. இந்தக் கல்வெட்டுகளில் ஸ்ரீராமனின் கதையை யார் உருவாக்கியிருப்பார்கள் என்று எண்ணியபடியே, இமயத்தின் சிகரத்தை அவர் அடைந்தபோது, அங்கே மற்றோர் ஆச்சரியம் காத்திருந்தது.
அங்கே, அனுமன் யோகநிஷ்டையில் இருந்தபடி ஸ்ரீராம நாமத்தை ஜெபித்துக்கொண்டிருந்தார். அவரது யோக நிஷ்டையைக் கலைக்க விரும்பாத வால்மீகி மஹரிஷி, தானும் ராம நாமம் ஜெபிக்க ஆரம்பித்தார். அந்த நாம ஜெபத்தைக் கேட்ட அனுமன் நிஷ்டையிலிருந்து விழித்தெழுந்து, வால்மீகியை வணங்கி நின்றார். அவரிடம், ராம காவியம் கல்வெட்டுக்களாக அமைந்த வரலாற்றைப் பற்றிக் கேட்டார் மஹரிஷி.
அதற்கு அனுமன் மிகுந்த விநயத்துடன், ''ஸ்ரீராமனின் கல்யாண குணங்களையும் அவரது பெருமைகளையும் இங்கே காணும் கற்களில் நான்தான் எனது நகத்தால் செதுக்கி வைத்தேன். யுகம் யுகமாக ஸ்ரீராமனின் கதை பேசப்பட வேண்டும் என்பதற்காக இந்தக் காரியத்தைச் செய்தேன். ஸ்ரீராமனை ரிஷ்யமுக பர்வதத்தில் நான் சந்தித்தது முதல், பட்டாபிஷேகம் வரை எனக்குத் தெரிந்த ராம கதையை உருவாக்கினேன். ஆனாலும், தங்களின் ராமாயணத்துக்கு இது ஈடாகாது!'' என்றார்.
அப்போது வால்மீகி மஹரிஷியின் கண்களில் நீர் கசிந்ததை அனுமன் கவனித்தார். அதற்கான காரணத்தை மஹரிஷியிடம் பணிவோடு கேட்டார். மேலும், தான் கல்லில் செதுக்கிய ராமாயண காவிய வரிகளில் தவறேதும் இருந்தால், எடுத்துச் சொல்லும்படியும் வேண்டினார். வால்மீகியின் கண்களில் மேலும் நீர் பெருகியது. 'எத்தகைய சிறப்பான காரியத்தைச் செய்துவிட்டு, எவ்வளவு தன்னடக்கத்துடன் அனுமன் இருக்கிறார்’ என்பதை எண்ணிப் பெருமிதம் அடைந்தார்.
''ஹனுமான்! நீ ஸ்ரீராமனின் சிரேஷ்டமான பக்தன். உன்னால் கல்லில் பொறிக்கப்பட்ட ராமாயணத்தில் தவறு இருக்க முடியுமா? நீ எழுதிய காவிய வரிகளில் காணும் பக்திப் பரவசம் என்னை நெகிழ வைத்துவிட்டது. இது, என் ஆனந்தக் கண்ணீர்தான். நான் எழுதிய ராமாயணம் இதற்கு ஈடு இணையாகாது. உன்னுடைய ராமாயணத்தை உலகோர் படிக்கும்போது, என் ராமாயணம் காலப் போக்கில் மறைந்துவிடும்'' என்றார்.
அதைக் கேட்ட மாத்திரத்தில், அனுமனின் கண்களில் தாரை தாரையாக நீர் சுரந்தது. உணர்ச்சிவசப்பட்ட அனுமன், பாறைகளில் தான் செதுக்கியிருந்த ராமாயண காவிய வரிகளை எல்லாம் தனது வாலால் துப்புரவாக அழித்துவிட்டார். பின்னர் வால்மீகியை வணங்கி, ''தாங்கள் எழுதிய ஸ்ரீராம காவியமே மிகச் சிறப்பானது! காலத்தால் அழியாதது! நான் செதுக்கியது வெறுமே என் உணர்ச்சிகளின் பிரதிபலிப்புதான். தாங்கள் உருவாக்கியதுதான் ஸ்ரீராமனே பாராட்டிய காவியம். அதற்கு ஈடு இணை எதுவும் இருக்காது'' என்று அமைதியுடன் கூறினார்.
அனுமனின் பக்தியைப் பற்றி வால்மீகி ஏற்கெனவே தெரிந்துகொண்டிருந்தார். அவரது தியாகத்தை இப்போது புரிந்துகொண்டார். அனுமனை மனமார வாழ்த்தினார். ''ஹனுமான்! நீ எழுதிய ராமாயண எழுத்துக்களை அழித்து விட்டாய். ஆனால், அந்தக் கருத்துக்கள் என் மனதில் ஆழப் பதிந்துவிட்டன. எனது ராம காவியத்தில் நீ செதுக்கிய ராம கதையும் இடம் பெறும்'' என்று கூறி, வாழ்த்திச் சென்றார்.
அதன்படி, வால்மீகி ராமாயணத்தின் ஒரு பகுதியாக அமைந்தது ஹனுமத் ராமாயணம். அனுமன் கண்ட ராமனை இந்தக் காவிய வரிகளில் இன்றும் நாம் தரிசிக்கிறோம். அனுமன் வாயுபுத்திரன். சிவபெருமானின் அம்ஸாவதாரம். சூரியனைக் குருவாகக் கொண்டு நான்கு வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றவர். எளிமையே உருவானவர். அடக்கமானவர். அவரது திறமையும் வலிமையும் அவருக்கே தெரியாது. ராமாயண காவியத்தில் எங்கேயும் எப்போதும் கோபப்படாதவர், அனுமன்தான். இலங்கையை எரித்ததுகூட கோபத்தினால் அல்ல; ராவணனுக்கு புத்தி கற்பிக்கவேதான்.
சீதாபிராட்டியால் சிரஞ்ஜீவி என்று ஆசிர்வதிக்கப்பட்ட அனுமன், இன்றைக்கும் சிரஞ்ஜீவியாக நம்மிடையேதான் உலவிக் கொண்டிருக்கிறார். அனுமன் இருப்பது, 60 அடி உயர சிலையிலோ, அல்லது அற்புதமாகக் கட்டப்பட்ட ஆலயத்திலோ மட்டுமல்ல; ஸ்ரீராம நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் அனுமன் இருக்கிறார்.
"யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூரண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்'
- என்று அனுமனைப் பற்றிய ஸ்லோகம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்துகொண்டிருப்பவர் எவரோ, அவரே அனுமன் என்று தெரிந்துகொள்’ என்பது இதன் பொருள்.
கடைசி வரியில் உள்ள 'ராக்ஷஸாந்தகம்’ என்பது, 'அவர் உன் உள்ளத்தில் தேங்கி நிற்கும் ஆணவம், அஹங்காரம், கோபம், த்வேஷம் போன்ற ராக்ஷஸ குணங்களை அழிப்பவர்’ என்பதைக் குறிக்கும்.
அனுமனை உபாஸித்து அருள் பெற, 'ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம’ என்று ராம நாமத்தின் பெருமையைச் சொன்னாலே போதும்; அனுமன் அந்த பக்தர்களுக்கும் சேவகனாகி அருள்புரிவார்.
அஞ்சனை மைந்தனாம் அனுமனை வழிபடுவதால் நமது உள்ளத்தில் நேர்மை, தூய்மை, தியாகம், பக்தி, எளிமை, அடக்கம் போன்ற உயர்ந்த குணங்கள் உருவாகி, நம்மை உயர்த்துகின்றன என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கும்பகோணத்தில் எந்தெந்த கோயிலுக்குச் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என தகவல்கள்...


 கும்பகோணத்தில் எந்தெந்த கோயிலுக்குச் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என தகவல்கள்...

கும்பகோணத்தை சுற்றினால் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.
கோவில் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கும்பகோணம் தான். தமிழகத்தில் அதிகப்படியான கோயில்களை கொண்ட ஒரு மாநகரம் என்றால் அது கும்பகோணம் தான்.
இங்கு பல்வேறு விதமான கோவில்கள் உள்ளன. அதிலும் நவக்கிரகங்கள் கொண்ட கோவில்கள் மிகவும் அதிகம்.
அதிகப்படியானோர் இந்த பகுதிக்கு தோஷங்களை நீக்க மற்றும் திருமண தடைக்கு இலக்கு வேண்டி வருகின்றனர்.
இதனால் தான் இது கோவில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் எந்த கோவிலுக்கு சென்றால் என்ன பலன்
🌹கும்பகோணம் திருக்கோயில்கள் "கருமுதல் சதாபிஷேகம்" வரை பலனடைய இந்த கோவில்களை மட்டும் வழிபட்டால் போதும்.*
🌹கரு உருவாக (புத்திரபாக்கியம்) - கருவளர்ச்சேரி.
🌹 கரு பாதுகாத்து சுகப்பிரசவம் பெற - திருக்கருக்காவூர்.
🌹நோயற்ற வாழ்வு பெறுவதற்கு - வைத்தீஸ்வரன் கோவில்.
🌹ஞானம் பெற - சுவாமிமலை.
🌹கல்வி மற்றும் கலைகள் வளர்ச்சிக்கு - கூத்தனூர்.
🌹எடுத்த காரியம் வெற்றி மற்றும் மனதைரியம் கிடைக்க - பட்டீஸ்வரம்.
🌹உயர் பதவியை அடைய - கும்பகோணம் பிரம்மன் கோயில்.
🌹 செல்வம் பெறுவதற்கு - ஒப்பிலியப்பன் கோவில்.
🌹கடன் நிவர்த்தி பெற - திருச்சேறை சரபரமேஸ்வரர்.
🌹இழந்த செல்வத்தை மீண்டும் பெற - திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி.
🌹பெண்கள் ருது ஆவதற்கும்,
ருது பிரச்சினைகள் தீர - கும்பகோணம் காசி விஸ்வநாதர் (நவ கன்னிகை).
🌹 திருமணத்தடைகள் நீங்க - திருமணஞ்சேரி.
🌹 நல்ல கணவனை அடைய - கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் மங்களாம்பிகை.
🌹 மனைவி, கணவன் ஒற்றுமை பெற - திருச்சத்திமுற்றம் குழந்தைபாக்கியத்திற்கு.இரட்டை லிங்கேஸ்வரர்.சென்னியமங்கலம்.திப்பிராஜபுரம்
🌹பில்லி சூனியம் செய்வினை நீக்க - அய்யாவாடி ஸ்ரீ பிரத்தியங்கிர தேவி.
🌹கோர்ட்டு வழக்குகளில் நியாயம் வெற்றியடைய - திருபுவனம் சரபேஸ்வரர்.
• பாவங்கள் அகல - கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடல்.
• எம பயம் நீங்க - ஸ்ரீ வாஞ்சியம்.
• நீண்ட ஆயுள் பெற - திருக்கடையூர்.

நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து).......

 நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து)....... . இதய பிரச்சினைகளுக்கு, (ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன்...