Sunday, 1 February 2026

தைப்பூசம் – காலபுருஷ தத்துவத்தில் முருகன்

 🕉️ தைப்பூசம் – காலபுருஷ தத்துவத்தில் முருகன்

காலபுருஷ தத்துவத்தில்
#மகரம் = #சனி = கர்மம்
தைப்பூசம் நாளில் இந்த இரண்டும் நேருக்கு நேர் நிற்கும் காலம்.
👉 #சந்திரன் கடகத்தில் திக்பலம்
👉 #சூரியன் மகரத்தில் (10ம் இடம்) திக்பலம்
இதுவே தைப்பூசத்தின் அடிப்படை ரகசியம்.
🌕 #சந்திரன் – கடகம் – திக்பலம் – மன வாழ்க்கை
சந்திரன் கடகத்தில் சுயபலத்துடன் இருக்கிறான்.
இது மனசு, உணர்ச்சி, தாய், குடும்பம், நினைவுகள்
எல்லாவற்றையும் கிளறி விடும்.
மனதில் பழைய வலி
கடந்த கால சுமை
பயம், குழப்பம்
“என் வாழ்க்கை இப்படிதான் போய்கிட்டிருக்கே” என்ற எண்ணம்
👉 இவை எல்லாம் சந்திரன் திக்பலம் அடையும் போது மேலெழும்.
👉 அதனால்தான் தைப்பூசத்தில் மன உருகி அழுவது, முருகனை பார்த்து கண்ணீர் வருவது, அறியாமலே நெஞ்சு கனத்துப் போவது.
இது பலவீனம் இல்லை.
👉 மன சுத்தி நடக்கும் நேரம்.
☀️ #சூரியன் – மகரம் – 10ம் இடம் – கர்ம வாழ்க்கை
மகரம் என்பது
கருமக்காரகன் சனி வீடு
10ம் இடம் = தொழில், கடமை, பொறுப்பு, உலக வாழ்க்கை
சூரியன் இங்கே இருக்கிறான்.
👉 இது சொல்வது என்ன?
“உனக்கு கடமை இருக்கு”
“உனக்கு பொறுப்பு இருக்கு”
“உன் வாழ்க்கை ஓடணும்”
“நீ ஓடாம நின்னா வாழ்க்கை நின்னுடும்”
👉 அதனால் தைப்பூச காலத்தில்
மனசு ஒரு பக்கம் சோர்வாக இருக்கும்
ஆனால் வாழ்க்கை மறுபக்கம்
“எழு… வேலைக்கு போ… கடமையை பார்”
என்று அழுத்தும்.
இதுதான் சந்திரன் vs சூரியன்.
🪐 சனி – கருமக்காரகன் – நடுவில் நிற்கும் நீதிபதி
இந்த இரண்டுக்கும் நடுவில் இருப்பவன்
👉 சனி.
நீ நினைப்பதெல்லாம் நடக்காது
நீ உழைத்ததுதான் கிடைக்கும்
நீ தவிர்த்த கர்மம் திரும்ப வரும்
சனி மகரத்தில் சூரியனை கட்டுப்படுத்துகிறான்.
கடகத்தில் சந்திரனை அழுத்துகிறான்.
👉 இதுதான் மனித வாழ்க்கை.
🔱 இங்கேதான் முருகப்பெருமான் வருகிறார்
முருகன் =
ஞானம் + தைரியம் + செயல்
“உனக்கு பிரச்சினை இல்ல”
முருகன் சொல்கிறார்:
“பிரச்சினையை எதிர்த்து நில்”
👉 அதனால்தான்
சந்திரன் கொடுத்த மன வேதனைக்கும்
சூரியன் கொடுத்த கர்ம அழுத்தத்துக்கும்
நடுவில்
முருகன் தான் பாலம்.
🕉️ தைப்பூசம் – வாழ்க்கை நடைமுறை உண்மை
மனசு உடையுது
வாழ்க்கை விடல
கடமை துரத்துது
உடம்பு சோருது
ஆனா நிறுத்த முடியல
👉 இதுதான் தைப்பூச கால மனித நிலை.
அதனால்தான்
காவடி
விரதம்
கால்நடை
வலி
கண்ணீர்
👉 இவை எல்லாம் சனி கொடுக்கும் கர்ம சுத்தி.
முருகன் பார்த்து
“ முருகா முருகா முருகா”
என்று சொல்லும்போது
👉 மனசு கடகத்திலிருந்து வெளியே வருகிறது
👉 கர்மம் மகரத்தில் சீராக ஆரம்பிக்கிறது
🌟 ஜோதிட சாரம்
சந்திரன் கடகத்தில் → மனம் உருகும்
சூரியன் மகரத்தில் → வாழ்க்கை கட்டாயப்படுத்தும்
சனி நடுவில் → கர்மம் கணக்கு பார்க்கும்
முருகன் → “நீ விழுந்தாலும் எழுந்து நட” என்பார்
👉 அதுதான் தைப்பூசம்.
🕉️ ஆன்மிக உண்மை
முருகன் வலியை நீக்க மாட்டார்
👉 வலியை தாங்கும் சக்தி தருவார்
முருகன் கர்மத்தை மாற்ற மாட்டார்
👉 கர்மத்தை எதிர்கொள்ளும் தைரியம் தருவார்
அதனால்தான்
தைப்பூசம் =
மனசு உடையும் நாள் அல்ல
மனசு உறுதியாகும் நாள்.

No comments:

Post a Comment

*கல்யாணமாம் கல்யாணம்*

 *கல்யாணமாம் கல்யாணம்* முப்பது வருஷத்துக்கு முன்னால ஒரு கல்யாணவீட்டுக்கு போனோம்னா... ஆண்கள் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்ட...