Monday, 16 February 2026

எது... மரணம்

 எது... மரணம்

கழுத்துக்கு கீழாக இயங்க மறுக்கும் மனிதனும் உயிரோடு இருக்கிறான்
கழுத்துக்கு மேலாக இயங்கும் மறுக்கும் மூலை சாவு அடைந்த மனிதனும் உயிரோடு இருக்கிறான்..
அப்படியானால் கழுத்துக்கு மேலான பகுதியிலும் உயிரில்லை கழுத்துக்கு கீலான பகுதியிலும் உயிரில்லை என்றால் உயிர் எங்கே தான் இருக்கிறது..
நவீன விஞ்ஞானம் இதை வெளிப்படுத்த மறுக்கிறது
உண்மையில் இந்த நவீன விஞ்ஞானத்தால் உயிர் எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க முடியவில்லை என்று தான் நான் கருதுகிறேன்..
தாயின் வயிற்றில் உருவாகும் குழந்தை உருவாகி வளரும் காலங்களில்
உயிர் இல்லை அது பிறந்த பின்பு சுவாசித்த பின்பு தனித்த உயிராக மாறுகிறது..
தனி சுவாசம் பெற்ற பின்பு சிசுவாக மாறும் பிண்டம் தாயின் வயிற்றுக்குள் வளரும் போது உயிரற்றதாக வளர்கிறதா உயிரில்லாமல் அது எப்படி வளரும்
உண்மையில் சிவம் போற்றும் சைவம் என்னதான் சொல்கிறது எனக்கு தெரியாது
ஆனால் நம்முடைய அப்புச்சிகள் ஐயன்கள் சித்தராய் வாழ்ந்து மறைந்த அவர்கள் சொல்லியது தெரியும்
உக்கிரமமான பழிவாங்கும் வீரர் பக்தர் கருப்பராயர் போன்ற கோவில்களில் சப்த கன்னிகள் என்று ஏழு கன்னிகள் வைத்திருக்கிறார்களே அதனுடைய உண்மையான அர்த்தம் என்ன.
அவைகள் மனித சடலத்தில் இயங்கி உயிரை உருவாக்கும் சக்தி நிலையங்கள் தான்
சிவம்
பைரவம்
வரம்.... ஷம்போ
மனிதன் உடம்புக்குள் இயங்கும் ஆறு சக்கர சூட்சும புள்ளிகளும்
தலைக்கு மேலாக ஏழாவதாக தலைக்கு வெளியே இருக்கும் சூட்சும புள்ளியும்
உடலுக்குள் இருக்கும் ஆறு நிலையங்களை சரியாக பராமரித்தால் உடலுக்கு வெளியே இருக்கும் ஏழாவது ஞான ஆரோக்கியத்தை அதிகப்படுத்த முடியும் அந்த ஞான ஒளி வட்டம் தன்னுடைய தொடர்பை துண்டித்துக் கொண்டால் அல்லது கீழே உடலுக்குள் இருக்கும் ஆறு நிலையங்கள் ஒன்றுக்குள் ஒன்றாக இணைந்து செயல்படும் அந்த இணைப்பு துண்டித்தால் அது உயிரிழப்பாக மாறுகிறது...
தன்னை விடுவித்துக் கொள்ள விரும்பும் ஒரு சித்துக்களை ஐயன்கள் சிறுகச் சிறுக ஒவ்வொரு சக்தி நிலையங்களில் இருந்தும் அந்த சக்தி நிலையங்களை அதனுடைய இயக்கத்தை குறைத்து அதிலிருந்து தன்னுடைய ஆன்ம பற்றை கணக்கிட்டி குறைத்துக் கொள்கிறார்கள் படிப்படியாக எந்த நிலையில் இருந்து எந்த சக்கரத்துக்குள் போக வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள் அதிலிருந்து மெதுவாக விடுபட்டு தன்னைத்தானே விடுவித்துக் கொள்கிறார்கள்
இப்படி ஜீவனை விரும்பி விடுவித்துக் கொண்டால் அது ஜீவ சமாதி..
இந்த முயற்சிக்கு முன்பாக ஒரு மனிதனுடைய மரணத்தை மிகவும் ஆழமாக அவர்கள் ஆராய்ந்து இருக்கிறார்கள்
நான் பலமுறை சொன்னது தான் கண்கள் திறக்காமல் வாய் திறக்காமல் மலம் சலம் கலியாமல் எவருடைய உயிர் உடலை விட்டு வெளியேறுகிறதோ அந்த உடல் தான் சாவம்
மற்றைய உடல்கள் பிரேதம் பிணம்..
சவம் விட்டு சென்ற ஆத்மா பிறப்பதில்லை என்பதை நிரூபிப்பதற்காகத்தான் அதற்குப் பின்பாக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கொண்டாடுவதில்லை 16 நாட்களுக்கு மேல் எந்த பந்தமும் இல்லை மாண்டவரோடு எந்த தொடர்பும் இல்லை என்று சொல்கிறார்கள்
உங்கள் முன்னோர்களை நீங்கள் வணங்குவது உண்மையிலேயே அவர்களுக்கு நன்றி செலுத்துவதாக இருந்தால் ஒரு மரியாதை செலுத்துவதாக இருந்தால் சரி அது உங்கள் விருப்பம் ஆனால் நீங்கள் வணங்குவதால் தான் அவர்கள் அங்கே வாழ்கிறார்கள் என்பது முட்டாள்தனத்தின் உச்சம்
ஓர் உயிர் பிரிந்த பின்பு அது அதனுடைய பிரார்த்தனையின்படி அடுத்த பிறப்பை நோக்கி நகர்கிறது
அல்லது சிவஜோதியில் கலந்து ஆண்மை நிலையில் இருந்து ஜோதி நிலைக்கு தன்னை மாற்றிக் கொள்கிறது ஜோதி நிலைக்கு மாறிய ஒரு ஆத்மாவோடு நீங்கள் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியாது அதேபோல் மறுபிறப்பு பயணத்திற்குள் புகுந்த ஆன்மாவோடு நீங்கள் தொடர்பு கொள்ள முடியாது அது அடுத்த பிறப்பில் அது எங்கோ அதனுடைய வாழ்வை தொடங்கி இருக்கும் எந்த ஆத்மா சிவனை நோக்கி நகர்ந்து எந்த பிறப்பில் ஆத்ம நிலையிலிருந்து விடுதலை அடைந்து ஜோதி நிலையை அடைகிறதோ அது அத்தோடு பிறப்பு சுழற்சியில் இருந்து விடுபடுகிறது
சரி முருகா இதெல்லாம் இன்னைக்கு எதற்காக பேசுகிறாய் என்று கேட்கிறீர்களா.
இந்த உங்களுக்கு சவத்துக்குள் இருக்கும் ஆறு ஜெனரேட்டர் யூனிட் ரீசெட் செய்வதற்கும் அதனுடைய தூசு தொகுப்புகள் அகற்றி நல்லபடியாக அவை இயங்குவதற்கும் வரும் சிவராத்திரி நாளில் நீங்கள் இரவு விழித்திருந்தால் முடிந்தவரை குறைவயிறாக விழித்திருந்தால் இறை ஆற்றல் ஆறு நிலைகளிலும் உள்ள சின்ன சின்ன பழுதுகளை சரியாக்கி தருவார்கள்... சிவ தூதுவ சக்திகள்..
இதை நம்புவதும் நம்பாமல் போவதும் ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணிப்பதும் விழித்திருப்பதும் விழித்திருக்காமல் போவதும் உங்கள் உடைய விருப்பம்
கோயில்கள் எப்படி ஒரு சக்தி நிலையை சரியாக்கும் இயந்திரமாகத்தான் வடிவமைத்திருக்கிறார்கள் பழைய கற்க கோயில்கள் உங்கள் ஊர்களுக்கு அருகில் இருந்தால் நீங்கள் அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் ஈஷா வளாகத்தில் பெரிய அளவில் கொண்டாட்டம் தொடங்குகிறார்கள் வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ளுங்கள்
பிரைன் உயிரில்லை பிரைனுக்கு ஆக்சிஜனை அனுப்பும் சப்போர்ட் ஆர்கன்களும் உயிரில்லை...
ஷம்போ 🙏
இதை முட்டாள்தன என விமர்சிக்கும் அறிவாளிகளை வரவேற்கிறேன் 🤠🥸😏🤫😝🤪😁😫
ஆசீர்வாதங்கள்
நீங்கள் ஒவ்வொரு மாதமும் வரும் சிவராத்திரி அன்று அஸ்தமனத்திலிருந்து அடுத்த நாள் உதயம் வரைக்கும் ஆன காலகட்டத்தில் நீங்கள் அமைதியாய் விழித்திருக்க பழகுங்கள் உங்களுக்குள் பெரிய மாற்றத்தை அது தரும்
(😝😁 ரொம்ப ஆழமா போய் பேசினால் இப்போது அரை மெண்டல் என்கிறார்கள் அப்புறம் என்னை முழு மெண்டல் ஆக்கி விடுவார்கள் ஆதலால் கொஞ்சம் மேம்போக்காக பேசியிருக்கிறேன் மாப்பிள்ளை நாம் தனியாக பேசிக்கொள்வோம்

No comments:

Post a Comment

*கல்யாணமாம் கல்யாணம்*

 *கல்யாணமாம் கல்யாணம்* முப்பது வருஷத்துக்கு முன்னால ஒரு கல்யாணவீட்டுக்கு போனோம்னா... ஆண்கள் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்ட...