Monday, 16 February 2026

உனது வேண்டுதல் உண்மை எனில் இறைவனை ஏன் போலி பொருட்களால் அபிஷேகம் செய்கிறாய்?


 உனது வேண்டுதல் உண்மை எனில் இறைவனை ஏன் போலி பொருட்களால் அபிஷேகம் செய்கிறாய்?

அந்த திருமேனியும் உனது உடல் போன்றுதான்
கலப்பட எண்ணெய்
கலப்பட சீயக்காய்
கலப்பட திரவியப்பொடி
கலப்பட பால்
கலப்பட தயிர்
கலப்பட நெய்
கலப்பட தேன்
கலப்பட சந்தனம்
கலப்பட மஞ்சள்
கலப்பட பன்னீர்
கலப்பட விபூதி
கொஞ்சம்கூட மனம் இன்றி இப்படி கலப்பட பொருள்கொண்டு அபிஷேகம் செய்து இறைவனை பிரார்த்தனை செய்தால் - வழிபட்டால் பலன் கிடைக்குமா?
நீ நிஜமாக நடந்துக்கொள்ளாமல் இறைவன் மட்டும் உனக்கு நிஜமாக அருள்புரியவேண்டும் என நினைப்பது நியாயமா?
எவனோ கலப்பட பொருளால் பணம் சம்பாதிக்க நீ ஏன் பாவத்தை சம்பாதிக்கவேண்டும்?
நன்கு யோசி ....!
வெறும் நீர் கொண்டு அபிஷேகம் செய்தாலே போதும்
அல்லது பூஜை இடத்திலேயே ய பிழிந்த பழச்சாறு அல்லது இளநீர் போதும்
அபிஷேகம் நிஜமானதாகவும் தரமான பொருளால் அமைந்தால் அதுவே இறைவனின் மனதுக்கு இதமானதாகும்
கலப்பட பாலியஸ்டர் துணியை தவிர்த்து பருத்தி துணிகளை இறைவனுக்கு சாற்றி அருள் பெறு
பித்தளையை தங்கம் என ஏற்பாயா? உனக்கு ஒரு நியாயம் இறைவன் திருமேனிக்கு ஒரு நியாயமா?
அற்புதமான ஆயிரம் வருடம் தொன்மையான அருள்பாலிக்கும் இறைவன் திருவுருவத்தை உன்சுயநலத்தால் பாழாக்கினால் இறைவன் பொருத்துக்கொண்டு இருக்கமாட்டார்
நல்லது செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை தீயதை கோவிலுக்கு செய்யாதே!
இறைவனின் அருள் பெற உண்மையாக நடந்துக்கொள்
அனைத்துமே இயற்கையாக கிடைக்கிறது மனம் இருப்பின் தேடினால் கிடைக்கும்
கறந்த பசும்பால், பசுந்தயிர், நல்ல தரமான நெய் இன்றும் கிடைக்கிறது
சந்தன கட்டையை அரைத்து சிறிது சந்தனம் போதும்
நாட்டு ரோஜா, வெற்றிவேரை ஊறவைத்து பன்னீர் தயாரிக்கலாம்
தரமான தேன் கிடைக்கிறது
சீயக்காய், மஞ்சள் வாங்கி அரைத்து பயன்படுத்தலாம்
கண் எதிரில் எள் போட்டு செக்கில் நல்லெண்ணைய் ஆட்டி பெறலாம்
பசும்விரட்டியை எரித்து சாம்பலை நன்கு சல்லித்து வீபூதியை உருவாக்கலாம்
இது அவசர உலகம் என்பதெல்லாம் பொய், சோம்பேரித்தனம் மற்றும் நிஜமான பக்தி இல்லாமல் "பரம்பொருளான" இறைவனை ஒரு “தரும் பொருள்” என நினைப்பதுதான் காரணம்
யாரோ சிலர் முறைகேடாக பணம் சம்பாதிக்க பக்தியை ஒரு கருவியாக்கி, அந்த கலப்பட பொருளை விற்பதும்
அதை இறைவனுக்கு அபிஷேகம் செய்து பலன் தேடும் அப்பாவி பக்தன் பாவத்தை சம்பாதிக்கவேண்டுமா

No comments:

Post a Comment

*கல்யாணமாம் கல்யாணம்*

 *கல்யாணமாம் கல்யாணம்* முப்பது வருஷத்துக்கு முன்னால ஒரு கல்யாணவீட்டுக்கு போனோம்னா... ஆண்கள் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்ட...