Monday, 16 February 2026

சிவபெருமானின் மூன்றாவது கண்..



சிவபெருமானின் மூன்றாவது கண்.. ஞானத்தை உணரும் கண்.. நெற்றிக்கண்ணின் சிறப்பு..!

🌟🔥🔱🙏🏽#மும்மூர்த்திகளில் ஒருவர் சிவபெருமான். படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களில் சிவபெருமான் அழித்தல் தொழிலைப் புரிபவர். அதாவது தீயவைகளை அழிப்பவர். சிவபெருமானுக்கு மூன்று கண்கள் உண்டு. அவற்றில் ஒன்று நெற்றிக் கண்.
🛕 #சைவ_சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானது தனித்துவ அடையாளங்களில் நெற்றிக்கண்ணும் ஒன்றாகும். இதன் காரணமாக இவர் முக்கண்ணன் என்றும், நெற்றிக்கண்ணன் என்றும் அழைக்கப்படுகிறார்.
👀 #இதில்_இரண்டு கண்கள் உலகை காணவும், மூன்றாவது கண் ஞானத்தை உணரவும் பயன்படுவதாக நம்பப்படுகிறது. இந்த மூன்றாவது கண் தான் சிவபெருமானின் நெற்றிக்கண் எனப்படுகிறது.
🌟👁️ #நெற்றிக்கண் என்பது வெறும் ஒரு உறுப்பு அல்ல, மாறாக அது ஞானத்தின் உறைவிடமாக கருதப்படுகிறது.
✨ 🔥#சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணைத் திறக்கும் போது அண்ட சராசரம் முழுவதும் ஒளிரும் என்றும், அவரது ஞான ஒளி அனைத்தையும் நிரப்பும் என்றும் சைவ சாஸ்திரங்கள் கூறுகின்றன.
🔥 #சிவபெருமான் மிகவும் கோபமடைந்தால் தனது நெற்றிக்கண்ணைத் திறப்பார் என்றும், அப்போது அங்கிருந்து தீப்பொறிகள் வெளிப்பட்டு அனைத்தையும் சாம்பலாக்கும் என்றும் நம்பப்படுகிறது.
🔥👁️#நெற்றிக்கண் மூலம் சிவபெருமான் கடந்த காலம், இன்றைய காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய மூன்றையும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
🌍 #சிவபெருமானின் நெற்றிக்கண் அழிவுக்கும் ஆக்கத்திற்கும் காரணமாக அமைகிறது. அவர் தனது கோபத்தால் அழிவை ஏற்படுத்தினாலும், தனது ஞானத்தால் உலகைப் படைக்கவும் செய்கிறார்.
🌟 #சிவபெருமானின் நெற்றிக்கண் என்பது ஞானம், கோபம், அழிவு, ஆக்கம் போன்ற பல அம்சங்களை குறிக்கிறது.
🔥 #அழிக்க_உதவும் இந்த மூன்றாவது கண்ணை மனதில் வைத்து தான் பலரும் இவரை அழிக்கும் கடவுள் என்று கூறுகின்றனர். இவரின் நெற்றிக்கண் ஞானக் கண் என்றும் சில நேரம் குறிப்பிடப்படுகிறது.
⚡ #இவருடைய நெற்றிக்கண் மூலமாக தோற்ற நிலைக்கு அப்பாற்பட்டவைகளையும் பார்த்து, தீய சக்தியை அழிப்பார் என்று நம்பப்படுகிறது.
🙏🏽👁️#நெற்றிக்கண் வரலாறு:
🙏💃🏽 #சதி_தேவியின் இறப்புக்கு பின், அவரின் மறைவை எண்ணி இவர் மீளா துயரத்தில் மூழ்கினார். அதனால் ஒரு குகைக்கு சென்று ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தார்.
🌸 🔱🔥#அப்போது தான் சதி தேவி மீண்டும் பார்வதி தேவியாக பிறந்து, இவரை திருமணம் செய்ய தயாரானார்.
🌟 ஆனால் கடவுள்கள் தீவிர முயற்சி செய்தும் கூட, இவரின் தவத்தில் இருந்து இவரை எழுப்ப முடியவில்லை. அப்போது, இவரின் தவத்தை களைக்க, காதல் கடவுளான காமாதேவி அனுப்பி வைக்கப்பட்டார்.
🏹 #காமாதேவி இவரை அம்பு மூலமாக தாக்கிய போது, இவர் தன் நெற்றிக்கண்ணை திறந்து, காமாவை எரித்து சாம்பலாக்கினார். 🔥
🔱👁️ #சிவபெருமானின் நெற்றிக்கண்ணைப் பற்றி இரண்டு கதைகள் நிலவுகின்றன. அவை ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான கருத்தை வலியுறுத்துகின்றன.
💃🏽🔱#பார்வதியின் விளையாட்டு:
ஒருமுறை, பார்வதி தேவி 🎋 விளையாட்டாக சிவபெருமானின் 👁️👁️ கண்களை மூடினார். இதனால் உலகம் முழுவதும் 🌍 இருளில் மூழ்கியது. சிவபெருமான், உலகை இருளில் இருந்து காப்பாற்றுவதற்காக 🔥 தனது உடலில் இருந்து அக்னியை வெளிப்படுத்தி நெற்றிக்கண்ணை உருவாக்கினார். இந்த நெற்றிக்கண் 🌞 உலகிற்கு ஒளியை வழங்கியது.
🔥🙏🏽 #சிவபெருமானின் நெற்றிக்கண் 🌀 அவசர காலத்தையும், தீமைகளின் அழிவு காலத்தையும் குறிக்கிறது. அவரது ஒரு கண் ☀️ சூரியனாகவும், மற்றொரு கண் 🌙 சந்திரனாகவும் கருதப்படுகிறது.
📜 இந்த கதை, பார்வதியின் லீலையின் ஒரு பகுதியாக சிவபெருமானின் நெற்றிக்கண் திறக்கப்பட்டதை விளக்குகிறது.
👹#அந்தகாசுரனின் பிறப்பு மற்றும் மரணம்:
சிவபெருமானின் நெற்றிக்கண்ணின் 🔥 வெப்பத்தால் பார்வதி தேவியின் கைகள் 💧 வியர்த்தன. அந்த வியர்வை துளி மண்ணில் விழுந்தபோது, அது ஒரு குழந்தையாக 👶 உருமாறியது. அந்தகா என்று அழைக்கப்பட்ட அந்த குழந்தையை, சிவபெருமானை வழிபட்டு வந்த குழந்தையில்லா அசுரனுக்கு 🏹 தத்து கொடுத்தனர்.
🛕 #தனது_பிறப்பைப் பற்றிய உண்மை தெரியாமல் வளர்ந்த அந்தகா, தனது தாயின் மீது ❌ காமவெறி கொண்டான். சிவபெருமானிடம் இருந்து ஒரு வரம் 🙏 பெற்றிருந்ததால், அவன் சிவபெருமானாலேயே ⚔️ கொல்லப்பட்டான்.
📜 #இந்த_கதை, உலகத்தில் நிலவும் அனைத்து விதமான ஆசைகளையும் நிராகரிக்கும் நெற்றிக்கண்ணின் இருட்டுப் பக்கத்தை வெளிக்காட்டுகிறது.
👥 #மனித இனம் வாழ்வதற்கு ஆசைகள் எவ்வளவு முக்கியம் என்பதையும், ஆசைகள் இல்லாமல் போனால் உலகம் ஸ்தம்பித்து விடும் என்பதையும் உணர்த்துகிறது.
🔷 #முதலாவது கதை 🌀 பார்வதியின் விளையாட்டின் மூலம் நெற்றிக்கண் திறக்கப்பட்டது, சிவசக்தியின் தத்துவத்தை விளக்குகிறது.
🔶 #இரண்டாவது கதை ⚖️ ஆசைகளின் முக்கியத்துவத்தையும், அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறது.
ஓம் நமசிவாய நம ஓம் 🔥

No comments:

Post a Comment

*கல்யாணமாம் கல்யாணம்*

 *கல்யாணமாம் கல்யாணம்* முப்பது வருஷத்துக்கு முன்னால ஒரு கல்யாணவீட்டுக்கு போனோம்னா... ஆண்கள் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்ட...