Thursday, 5 March 2026

ஒரு ஊரில் ஒரு ஞானி இருந்தார் அவரிடம் இறந்தவர்களை உயிர்ப்பிக்க வைக்கும் மந்திரம் இருப்பதை தெரிந்து கொண்ட ஒருவன்

 


ஒரு ஊரில் ஒரு ஞானி இருந்தார் அவரிடம் இறந்தவர்களை உயிர்ப்பிக்க வைக்கும் மந்திரம் இருப்பதை தெரிந்து கொண்ட ஒருவன் அதனை எப்படியாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அவரிடம் வந்து சீடனாக சேர்ந்து அவருக்கு சேவை செய்தான். பல நாட்களுக்கு பிறகு ஞானி சீடனை அழைத்து உனது சேவையில் மகிழ்ச்சி அடைந்தேன் உனக்கு என்ன வேண்டும் சொர்க்கம் வேண்டுமா பிறவியில்லதா நிலை வேண்டுமா இறப்பில்லாத நிலை வேண்டுமா என்ன வரம் வேண்டும் கேள் தருகிறேன் என்றார்.

அதற்கு சீடன் எனக்கு சொர்க்கமும் வேண்டாம். இறப்பில்லா நிலையும் வேண்டாம். பிறவியில்லா நிலையும் வேண்டாம் தங்களுக்கு தெரிந்த இறந்தவரைப் பிழைக்க வைக்கும் மந்திரத்தை மட்டும் கற்றுத் தாருங்கள் என்று கேட்டான்.
அதற்கு ஞானி இந்த மந்திரத்தை உனக்கு சொல்லிக் கொடுத்தால் அந்த மந்திரத்தை வைத்து நீ என்ன செய்வாய். நீ இறந்தால் உன்னை நீயே உயிர்பித்துக் கொள்ள முடியாது. உனக்கு உபயோகப்படாது மேலும் உனக்கு ஆபத்தையும் விளைவிக்கலாம். மற்றவர்களை உயிர்ப்பிப்பதால் உனக்கு எந்த உபயோகமும் இல்லை. ஆகையால் உனக்கு உபயோகமாக வேறு எதேயாவது கேட்டு பெற்றுக் கொள் என்றார்.
அதற்கு சீடன் என்னுடைய மரணத்தைப் பற்றி நான் கவலைப் படவில்லை இறந்தவர்களை உயிர்ப்பிக்க வைக்கும் மந்திரத்தை அறிவதில்தான் எனக்கு ஆர்வம் உள்ளது. ஆகையால் அதனை எனக்கு சொல்லிக் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டான்.
ஞானி சீடனுக்கு எவ்வளவோ புத்திமதி கூறினார். சீடர்கள் கேட்பதாக இல்லை. மந்திரத்தை சொல்லிக் கொடுங்கள் இல்லை என்றால் எதுவும் வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்தான். இறுதியில் ஞானி அவனுக்கு அந்த மந்திரத்தை கற்றுக்கொடுத்தார். உடனே சீடன் அங்கிருந்து புறப்பட்டு அருகில் இருக்கும் கிராமத்திற்கு சென்றான்.
அன்றைய தினம் அந்த கிராமத்தில் இறந்தவர்கள் ஒருவரும் இல்லை. காட்டு வழியில் அடுத்த கிராமத்திற்கு சென்றான். காட்டுப் பகுதியில் செல்லும் போது ஒரு எழும்புக்கூடு கிடந்தது. மந்திரம் எவ்வாறு வேலை செய்யும் என்ற ஆர்வ மிகுதியில் இந்த எலும்புக் கூட்டிற்கு உயிரூட்டிப் பார்க்கலாம் என்று மந்திரத்தை உச்சரித்தான்.
அது ஒரு சிங்கத்தின் எழும்புக்கூடு மந்திரத்தின் வலிமையால் சிங்கம் உயிர் பெற்று சீடனை அடித்துக் கொன்றது
கருத்து:
ஏராளமான ஞானம் மறைத்துப் புதைக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் அது தவறானவர் கையில் கிடைத்து விடக்கூடாது என்பதற்காகத்தான். அவை தகுதி படைத்தவர்களுக்கே கிடைக்கும்...

No comments:

Post a Comment

நெய் தேங்காய் உணர்த்தும்

 உடல்… உயிர்… ஆன்மா… நெய் தேங்காய் உணர்த்தும் சரணாகதி தத்துவம் மலைகளைக் கடந்து, மனதை சுத்தமாக்கி, “சுவாமியே சரணம் ஐயப்பா” என்று முழங்கிச் செ...