Tuesday, 31 March 2026

சரஸ்வதி வழிபட்ட திருத்தலங்கள்‌ | #சரஸ்வதி


 சரஸ்வதி வழிபட்ட திருத்தலங்கள்‌ | #சரஸ்வதி

வழிப்பட்ட தலங்களில்‌ முதன்மை யானது காளத்தியாகும்‌ | ஒரு முனிவரின்‌ சாபத்தால்‌ ஊமையாகிப்போன சரஸ்வதி இங்கு வந்து
வழிபட்‌ டாள்‌ | அவள்‌ இங்கு சரஸ்வதி தீர்த்தம்‌ என்ற பெயரில்‌ காளத்தீசுவரர்‌ ஆலயத்திற்குள்ளேயே ஒரு தீர்த்‌தத்தை உண்டாக்கி அதில்‌ நீராடி சிவவழிபாடு செய்து வந்தாள்‌ | அதனால்‌ அவளுடைய ஊழைைத்துவம்‌ நீங்கி விட்டது | மேலும்‌ பலர்‌ இங்குவந்து இதில்‌ மூழ்கி இதனை அருந்தியதால்‌ தனது ஊமைத்தன்மை நீங்கி அறிவு பெற்றுள்ளனர்‌ |
இங்குள்ள தீர்த்தத்தை அருந்தினால்‌ நல்ல
கல்வியறிவு உண்டாகும்‌ என்று நம்புகின்றனர்‌ |
வாக்தேவி ஓசையாக வெளிப்படும்போது #வாணி என்றும்‌, அறிவாக வெளிப்படும்போது சரஸ்‌வதி என்றும்‌ அழைக்கப்படுகின்றாள்‌ | #பிரம்மதேவனின்‌ வலப்புறம்‌
அவள்‌ வாணியாகவும்‌ இடது புறத்‌தில்‌ சரஸ்வதியாகவும்‌ வீற்றிருக்கின்றாள்‌ | இந்த இரண்டு உருவத்துடனும்‌
அவள்‌ #சிவபெருமானை பெருவேளூரில்‌ வழிபட்டாள்‌ |
அதனால்‌ அந்த சிவ லிங்கம்‌ வாணிசரஸ்வதீசுவரர்‌ அழைக்கப்படுகிறது | #பெருவேளூர்‌
#தஞ்சை மாவட்டம்‌ திருப்பூந்துருத்தி புஷ்வனேசுவரர்‌ ஆலயத்தில்‌ கருவறைக்‌ கோட்ட தேவதையாக சரஸ்வதி அமைந்துள்ளதைக்‌ காண்கிறோம்‌ | இவள்‌ மேலிரண்டு கரங்களில்‌ அட்சமாலையுடன்‌ சுவடி யையும்‌
முன்னிரு கரங்களில்‌ அபய ஊரு முத்திரை
களையும்‌ கொண்டுள்ளாள்‌ | #திருப்பூந்துருத்தி |
#இராமேசுவரத்தில்‌ சரஸ்வதி மூன்று வடிவங்‌ களில்‌ இருந்து வழிபட்டு அமைத்த தீர்த்தங்கள்‌ முறையே காயத்திரி, சாவித்திரி, சரஸ்வதி #தீர்த்தங்கள்‌ என்ற பெயரில்‌ வரிசையாக உள்ளன | #ஸ்ரீஜாதகசமுத்ரா |
வாக்தேவி, மூன்று காலங்களில்‌ (சந்தியா தேவதையாக விளங்குகையில்‌) காயத்திரி, சாவித்திரி சரஸ்வதி என்ற மூன்று வடிவங்களைக்‌ கொள்கின்‌றாள்‌ | இந்த மூன்று வடிவுடன்‌ அவள்‌ வழிபட்ட தலம்‌ #திருவீழிமிழலையாகும்‌ |
இங்குள்ள மூன்று லிங்கங்‌ கள்‌ காயத்ரீஸ்வரர்‌,
சாவித்திரீஸ்வரர்‌, சரஸ்வதீசுவரர்‌ என்று அழைக்கப்படுகின்றன |
திருநெய்த்தானம்‌ சரஸ்வதி பூசித்துப்‌ பேறு பெற்றதலமாகும்‌ | இது #திருஐயாறு சப்தத்தானத்‌ தலங்‌ களில்‌ ஒன்றாகும்‌. இங்கு சரஸ்வதி அமைத்த தீர்த்தம்‌ உள்ளது |
குருகாவூரில்‌ -பிரமதேவன்‌ வழிபட்டபோது அவனுடன்‌ சரஸ்வதியும்‌ சிவலிங்க பூசைசெய்தாள்‌ | அங்கு அவள்‌ உண்டாக்கிய தீர்த்தம்‌ சரஸ்வதி தீர்த்தம்‌ இந்நாளில்‌ (வடக்குக்குளம்‌) என்று அழைக்‌கப்படுகின்றது |
கல்வி கரையிலா கச்சி என்று புகழப்‌ பெறும்‌ காஞ்சியில்‌ அமைந்திருப்பது கச்சபேசுவரர்‌ ஆலயமாகும்‌ |
இது சரஸ்வதி சிவபூசைச்‌ செய்து பேறுபெற்றத்‌ தலங்களில்‌ ஒன்றாகும்‌ |
இங்குச்‌ சரஸ்வதி தேவிக்கான தனிச்‌ சந்நிதி உள்ளது |
மேலே சொல்லப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மேலும் ஒருவருக்கு பயனுள்ளதாக்குங்கள் | ஷேர் செய்யுங்கள் | நன்றி! |

No comments:

Post a Comment

#பிரபஞ்சத்தின்ரகசியம்:

  #பிரபஞ்சத்தின்ரகசியம் : நீ எதை விதைக்கிறாயோ, அதையே அறுவடை செய்வாய்! ​இந்த உலகம் ஒரு பெரிய #கண்ணாடி . நீ எதைக் காட்டுகிறாயோ, அதையே அது பிரத...