கேரளாவின்
தலைநகரம் திருவனந்தபுரத்தில், வேண்டுவோர்க்கு வேண்டுவன நல்கும் அற்புதத்
தலமாகத் திகழ்கிறது அருள்மிகு பழஞ்சிறை தேவி திருக்கோயில். இத்தலத்தின் மிக
முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த ஒரு பிரார்த்தனை முறை 'வெடி வழிபாடு'.
கேரளக்
கோயில்களில் வெடி வழிபாடு என்பது மிகவும் பிரபலம். பழஞ்சிறை தேவிக்குச்
செய்யப்படும் இந்த வழிபாடு, நம் வாழ்வின் தடைகளைத் தகர்த்து எறிவதைக்
குறிக்கிறது. மனதிலுள்ள பயம் நீங்கவும், காரியத் தடைகள் அகலவும், எடுத்த
காரியம் வெற்றிகரமாக முடியவும் பக்தர்கள் அம்மனுக்கு வெடி நேர்த்திக்கடன்
செலுத்துகின்றனர். தீய சக்திகள் விலகி, தேவியின் அருள் நமக்குப்
பாதுகாப்பாக இருக்கும் என்பது இதிலுள்ள ஆழமான நம்பிக்கை.
இந்த அம்மனை மனதார நினைத்து 41 நாட்கள் விரதமிருந்து பாடல்கள் பாடி வழிபட்டால், ஜாதக ரீதியான தீராத தோஷங்கள் யாவும் பனிபோல் விலகும்.
யோகீஸ்வரர்
வழிபாடு: இங்குள்ள யோகீஸ்வரர் சன்னதியில் வழங்கப்படும் விபூதி,
குழந்தைகளுக்கு ஏற்படும் 'பால பீடைகள்' (குழந்தை பருவ நோய்கள்) மற்றும்
பயத்தைப் போக்கவல்லது.
கன்னி
பூஜை: மாசி மாதத் திருவிழாவில் பெண் குழந்தைகளுக்கு தேவி வேடமிட்டு 'கன்னி
பூஜை' நடத்தப்படுகிறது. இது அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலனுக்காகச்
செய்யப்படுகிறது.
6
அடி உயரமுள்ள பிரம்மாண்ட நாகராஜா சிலைக்கு பால் அபிஷேகம் செய்து
வழிபட்டால், நீண்ட நாள் கண் நோய்கள், தோல் வியாதிகள் நீங்குவதோடு, புத்திர
பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் அனுபவ உண்மை.
17 யானை சிலைகளும், 6 சிங்க சிலைகளும் தாங்கி நிற்கும் கருவறை அமைப்பு, இக்கோயிலின் தெய்வீக அழகிற்கு மேலும் மெருகூட்டுகிறது.
அம்மனுக்கு அரளிப்பூ சாத்தி, பட்டு வஸ்திரம் அணிவித்து, மனமுருகி வேண்டினால் நினைத்தது நடக்கும்.
வாழ்க வளமுடன்! பழஞ்சிறை தேவியின் அருளால் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கட்டு

No comments:
Post a Comment