Friday, 26 May 2017

கோவில்களில் மணி இருப்பது ஏன்?.. மூளைக்குள் ஏற்படும் அதிரடி மாற்றம்!..

கோவில்களில் மணி இருப்பது ஏன்?.. மூளைக்குள் ஏற்படும் அதிரடி மாற்றம்!..



கோவில்கள் மனிதனிடம் உள்ள தீய அலைகளை அழித்து நல்ல சிந்தனையை மேம்படுத்தவே முக்கியமாக கட்டப்பட்டது.
பெரும்பாலான கோவில்களில் மணி இருக்கும்.
சரி கோவிலில் மணி எதற்கு தொங்கவிடப்பட்டுள்ளது?
கோவில் மணி அடிக்கும் போதும் ஓம்கார ஒலி ஒலிக்கிறது. பூஜை நேரங்களில் தெய்வீக சூழ்நிலைக்குப் பொருந்தாத ஓசைகளை மூழ்கடித்து இறைவனிடம் மனிதனின் மனம் லயிக்க மணியானது உதவுகிறது.
கோவிலில் மணி இருப்பதற்கு அறிவியல் காரணங்களும் இருக்கிறது தெரியுமா?
கோவில் மணிகள் பெரும்பாலும் கேட்மியம், துத்தநாகம், நிக்கல், வெள்ளி, ஈயம் போன்ற பல உலோகங்களால் சரியான கலவையில் உருவாக்கப்படுகிறது.
இவை மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு வருகின்றன. மணியை அடித்தவுடன் வரும் சத்தமானது 10லிருந்து 20 வினாடிகளுக்கு எதிரொலிக்கும். அந்த சில வினாடிகளில் மனித உடலில் இருக்கும் ஏழு குணப்படுத்தும் மையங்களுக்கும் இது சென்று மனதை ஒருநிலைப்படுத்துகிறது.
மேலும், மணிச்சத்தமானது மனிதனின் உள்கோட்டில் ஒரு வித பாசிட்விங் வைப்ரேஷன்களை உருவாக்கி எண்ண ஓட்டங்களை கட்டுபடுத்தி ஒரு நேர்கோட்டுக்கு கொண்டு வருகிறது.
பூஜை நேரங்களில் அமங்கலமான வார்த்தைகளோ, பேச்சுக்களோ பக்தர்களின் காதில்விழுந்து பக்தி மனோபாவத்தைக் குறைத்து விடாதிருக்கவும் மணி அடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

குளிக்கும் போது அல்லது திசை நோக்கி நின்று

 குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு ...