Monday, 6 March 2017

ஆகாச கருடன்கிழங்கு


ஆகாச கருடன்கிழங்கு 

கட்டிப் போட்டால்குட்டி போடும்என்றழைக்கப்படும்ஆகாச

கருடன்கயிற்றில்கட்டித்தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை

உறிஞ்சிக் கொண்டே கொடி வீசித் தளிர்க்கும்.இது வெகு சீக்கிரம் தழைத்து

வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும்.இந்தக் கிழங்கு ஒரு கருடனுக்குச்

சமம்.அதாவது கருடன் வந்தால் அந்த இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும்

அணுகாது.அப்படி வந்தால் அவற்றின் விடம் பங்கப்படும்.அவ்வளவு

சக்தியுள்ளது இந்த ஆகாச கருடன் கிழங்கு.

கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி சூனியம்,செய்வினை

போன்றவை அணுகாது.அப்படி மீறிய சக்தி வந்தால் இந்த ஆகாச கருடன்

தன்னுயிரை விட்டு நம்மைக் காத்துவிடும்.அதாவது இதை மீறிய சக்தி

நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் அதன் உயிரை அச்சக்திக்கு பலியாக

இட்டு நம்மைக் காக்கும்.(மீச்சக்திக்கு பலியான கிழங்கு கருகி அழுகிவிடும்).

தொட்டால் சிணுங்கி.நமஸ்காரிஎன்ற இந்த மூலிகை காந்த சக்தி உடையது.

தெய்வீக மூலிகையுமாம். தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள்

மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள வாற்றல்

பெருகி மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக்கும். நினைத்தது நடக்கும்.

மனதில் உணர்ச்சி ஊட்டி சிற்றின்பத்தை மிகுவிக்கும்.அதனால்

காமவர்த்தினிஎன்றும் கூறுவர். மாந்திரீகத் தன்மை உடையது.

பகரவே இன்னமொரு மூலிகேளு

பாங்கான சிணுங்கியப்பா காப்புக்கட்டிநிகரவே

பூசையிடு மந்திரத்தால் நினைவாக

உத்தமனே தூபமிட்டு வைத்துக் கொள்ளே.

என்பது ஒரு பழம் பாடல், இதன் வேரை வழிபாடு செய்து பிடுங்கி மாந்திரீகம்

செய்யப் பயன்படுத்துவர்.




ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்
திருகோவிலில்செயலார் ஜோதிடமாமணி 
ஜோதிட விசாரத், ஜோதிடத்னா பிரசன்ன திலகம் 
திருப்பூர் மாவட்ட தேவசாரஜோதிட 
சங்கத்தின் தலைவர் ஜோதிஷஆதித்யா,
திரு A.V. சம்பத் [எ] சண்முகராஜ் தம்பிரான் ஜி 
                             
                      செல்:+91 99941-50658




No comments:

Post a Comment

என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார்

 என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார். இதன் விளைவாக சுவர்கள் நிறமாற்றம் அடைந்தன, அவர் தொட்ட இடமெல்லாம் அவர...