Monday, 5 April 2021

ராமேஸ்வரம்சென்று


 ராமேஸ்வரம்சென்று 

 செல்வதற்குமுன் குலதெய்வ கோயிலுக்கு செல்ல வேண்டும் அல்லது இஷ்ட தெய்வ வழிபாடு பிரார்த்தனைக்கு வேண்டுதல் வைக்க வேண்டும் முதலில் ராமநாதபுரத்தில் இருந்து சரியாக 17 வது கிலோ மீட்டரில் வடக்கு பகுதியில் உள்ளது தேவிபட்டணம் என்ற கோவிலுக்கு செல்ல வேண்டும் கடலுக்குள் இருக்கும் நவபாஷாண நவகிரக சிலைகள் உள்ளது மூன்று முறை அல்லது ஒன்பது முறை சுற்றி வலம் வந்து சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் அங்கிருந்து மீண்டும் ராமநாதபுரம் வந்து அங்கே இருந்து தெற்கே 17 கிலோ மீட்டர் பயணம் செய்தால் அங்கே சேதுகரை ஆஞ்சநேயர் கோயில் உள்ளது அங்கே தசரத மகாராஜா சக்கரவர்த்தி குழந்தை வரத்திற்காக யாகம் செய்த இடம் கடலில் ஸ்நானம் செய்வது நலம் அல்லது தீர்த்தம் தலையில் தெளித்து வரலாம் அங்கே உள்ள ஆஞ்சநேயரை வழிபடுவதுசிறப்புஅங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் அருகில் திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் கோவில் உள்ளது ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் செய்த இடம் குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பிறப்பில் பிரச்சனை உள்ளவர்கள் திருப்புல்லாணில்சிறப்புவழிபடு செய்வது நலம் பால் அபிஷேகம் இங்கு சில நேரங்களில் பாலபிஷேகம் தருவார்கள் இங்கே உள்ள அறநிலைத்துறை கேளுங்கள் சரியான பதில் கிடைக்கும் நான்காவதாகஇரவில்  ராமேஸ்வரத்தில் தங்கிஅம்மாவாசை அன்றுஅதிகாலையில்குறைந்தது அரை மணி நேரமாவது காலையில் சூரிய உதயத்தில்அக்னி தீர்த்தத்தில்மகிழ்ச்சியாக நீராடுவது சிறப்பிலும் சிறப்பு   அதற்கடுத்து ராமேஸ்வரம் கோயிலில் அதிகாலையில் நாலரை மணி அளவில் பாவங்கள் தீர்க்கக்கூடிய ஸ்படிகலிங்க பூஜை நடக்கும் பூஜையை முடித்துக்கொண்டு பிறகு தனுஷ்கோடி சென்றுகடல் மணலில் லிங்கம் செய்து  பூஜை செய்ய வேண்டும் மணல் லிங்கத்தை மீண்டும் கடலிலே விட்டுவிட்டு வரவேண்டும்  பிறகு ராமேஸ்வரம் வந்துயாருக்காவது திதி கொடுக்க வேண்டுமென்றால் குறைந்த செலவில் பிதுர்தர்ப்பணம் செய்து கொள்ளவும்  அன்னதானம்பசுவுக்குஅகத்திக்கீரை பழவகைகள் கொடுக்கலாம்இல்லாத ஏழைகளுக்கு உணவு வாங்கி கொடுக்கலாம் முடிந்தவரை தர்மம் செய் கருமம் விலகும்   அதற்கு அடுத்தது 22 விதமான தீர்த்தங்கள் உண்டுகடைசி தீர்த்தம் கோடி தீர்த்தமாடி முடிந்து ராமநாதசாமிஇறைவனை தரிசித்து விட்டு அம்பாள் பர்வதா பத்தினி சன்னதிக்கு சென்று அம்பாளை தரிசிக்க வேண்டும்அம்பாள் சன்னதியில்அம்பாளின் பீடத்திற்கு அடியில்ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டஸ்ரீ சக்கரம் இங்குஉள்ளது இங்கு வந்து வணங்குபவர்களுக்கு எல்லாம்பிரார்த்தனை நிறைவேற மூன்றுமுறை அம்பாள் கோவிலில் சுற்றி வர வேண்டும்அம்பாள் சன்னதியில் குறைந்தது பத்து நிமிடமாவது அமர்ந்து குறைகளை சொல்லி வாருங்கள் கோவிலின் இரண்டாவது பிரகாரத்தில்நடராஜர் சன்னதிக்கு நேர் பின்புறம் பதஞ்சலி மகரிஷி உடைய ஜீவசமாதிஉள்ளதுதீபமும் போட்டோவும் இருக்கும் குறைந்தது 10 நிமிடமாவது தியானம் செய்யுங்கள்   முடிந்தவரை தர்மம் செய் கருமம் விலகும்கோவிலில் இருந்து திரும்பியவுடன் குலதெய்வ கோயிலில் சென்று வழிபடுங்கள்

No comments:

Post a Comment

என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார்

 என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார். இதன் விளைவாக சுவர்கள் நிறமாற்றம் அடைந்தன, அவர் தொட்ட இடமெல்லாம் அவர...