Saturday, 16 December 2017

கர்ணன்

கர்ணன்


...
கர்ணன்
தேர்சக்கரத்தில்
சிக்கிய தனது உயிரை
தூக்க முற்ப்பட்டு
தன் உயிரை இழந்த கர்ணன்.
எது அந்த தேர் சக்கரம்....?
அது
ஏன் கர்ணனின்
இறுதி பயணத்தில்
அந்த தேர் சக்கரம்
குறிப்பிடதக்க அங்கம் வகுத்தது....?
கர்ணன்
பெயரிலே அவன் விதி எழுதப்பட்டது
அத்தகைய
ஞான புதையல்
இந்திய மகா காவியங்கள்.
கர்ணன் வாழ்வு அனைத்தும்
கர்ணன் பெயரிலே
தலை எழுத்தாக பொறிக்கப்பட்டது.
ஒருவருக்கு பெயர் அமைவதும்
தலை எழுத்து வழியிலே தான்.
ராமன்
ஏறு முகம்.
ராவணன்
இறங்கு முகம்
தர்மன்
ஏறு முகம்
கர்ணன்
இறங்கு முகம்.
மனித உடலில் அமைந்த
சூட்சம சக்கரங்கள்
அவன் பெயருக்கு ஏற்றவாறு இயங்கும்
அது தன் இலக்கை
பெயரின் உச்சரிப்பிலே
உருண்டு
ஏறுவது
இறங்குவதும் ஆக இருக்கும்
என்பது
அறிவியல் பூர்வமான
ஞானமார்க்கமே ...
...
ஒருவனின் பெயர்
மூலாதாரத்தில் இருந்து
சகஸ்ரம் நோக்கி அமையபெற்றால்
அது ஏறு முகம்
உதாரணம்
சிவன்
விஷ்ணு
பிரம்மா
ராமன்
தர்மன்
ஒருவன் பெயர்
சகஸ்ரத்தில் இருந்து
மூலாதாரம் நோக்கி வந்தால்
இறங்கு முகம்
உதாரணம்
ராவணன்
கர்ணன்
சகுனி
தூரியோதனன்
இதில்
கர்ணணுக்கு மட்டும்
மிக சிறந்த
ஒரு சிறப்பு உண்டு.
பாரத இதிகாச த்தில்
யாருக்குமே கிடைக்காத சிறப்பு
கர்ணனின் சிறப்பே.
...
கீழ் முகமாக வாழ்வு அமைந்தாலும்
அதையே
தர்மனை மிஞ்சும்
மேல் நோக்கு முகத்தில் சென்று
வாழ்வை
சிறப்புடையதாக்கி
வாழ்வில் எடுத்த தவறான முடிவால்
அழியும் நிலையில் உள்ள ஒருவன்
அதே வாழ்வில்
வாழ்வை வென்ற நிலைக்கு
கர்ம பயணத்தால்
தர்மமாக வாழ்ந்தவன் கர்ணன்.
பிறக்கும் போது
ஒருவன் உயிர் இருக்கும் இடம்
உச்சந்தலை
அது நின்ற இடம்
நெற்றிப்பொட்டான ஆஞ்னா சக்கரம்.
சாதாரண மனிதர்கள்
இறக்கும் போது
அவர்கள் உயிர் இருக்கும் இடம்
மூலாதார சக்கரத்தில்.
யோக கலாசாரம் என்பது
மூலாதார சக்கரத்தில்
மாட்டிய உயிரை
மீண்டும் தூக்கி சென்று
ஆஞ்னா வில் அமர வைத்து
உச்சந்தலையில்
உயிரை
சிம்மாசனம் இட்டு அமர வைப்பதே யோகம்.
அவர்களே
சிவ
சித்தர்கள்
மகா ரிஷிகள்
அதற்க்கும் மேல் நோக்கிய
பயணத்தில் இறங்கு பவர்கள்
சிவனாக உருவமாறிய
சிவன்
மாக குரு சித்தர்கள்
இவர்களை
இறை தூதுவர்கள் என்றும்
சம காலத்தில் அழைக்கப்படுகிறார்கள்.
....
கர்ணன்
....
தனது
அத்தனை திவ்யத்தையும்
அன்பாக
வாரி கொடுத்தே
மூலாதார சக்கரத்தில் வீழந்தவன்.
இறுதியில்
மூலாதார சக்கரத்தில்
மாட்டிய இந்த உயிரை
மீட்ட போராடியவன் ..
அந்த நேரத்தில் கர்ணனுக்கு
உதவாமல்
அறிவை தூக்கி கொண்டு
தேரை விட்டு ஓடியவர்
கர்மன்
ஆகையால்
கர்ணணுக்கு
நினைவாற்றல் இல்லாமால் ஆனது.
மூலாதார சிக்கல்
உலகிலே
ஒருவனை யாராலும்
காப்பாற்ற முடியாது ...
காரணம்
அது
கர்ம சிக்கல்.
மூலாதாரத்தில் சிக்கி
கர்ணன் மாண்ட வந்த போது
தர்மம் தாங்கியது
தர்மம் ஒருவன் பக்கத்தில்
இருக்கும் போது
எவனாலும்
எமனாலும்
ஒருவரை வதைக்க முடியாது...
அந்த
தர்மத்தை
இறைக்கே தானம் செய்த கர்ணன்
அதன் பின்னே
கர்ணணை
அர்ஜுனன் அம்பால்
கர்ணன் உயிரை
நெருங்க முடிந்தது...
இறக்கும் முன்
தர்மத்தை
இறைவனுக்கே தானம் செய்ததால்
கர்ணண்
தர்மனையும் மிஞ்சிய
ஏறுமுகமாக பயணத்தில் ஏறி
மூலாதாரத்தில் இருந்து
இறை ஆதாரத்திற்க்கு சென்றவன்
கர்ணன் ஒருவரே
என்பதே
கர்ணணை அனைவரும் ரசிக்க
காரணமான
கர்ண மகா சிறப்பே.
மூலாதாரம் நோக்கிய
லௌகிய வாழ்வு அமைந்தாலும்
எண்ணத்தால்
ஈகையால்
அன்பால்
தர்மத்தால்
உச்ச நிலையை அடைய முடியும்
என்பதற்கு
உலகின்
மகா சான்று
சூர்ய புத்திரன்
மாவீரன்
அன்பு கர்ணணே

No comments:

Post a Comment

என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார்

 என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார். இதன் விளைவாக சுவர்கள் நிறமாற்றம் அடைந்தன, அவர் தொட்ட இடமெல்லாம் அவர...