Friday, 8 August 2025

தாய் மாமன் உறவு என்பது

 தாய் மாமன் உறவு என்பது வெறும் ரத்த பந்தம் மட்டுமல்ல –

அது பாசத்தாலும், பொறுப்பாலும் பிணைக்கப்பட்ட ஓர் ஆழமான உறவு.❤️
💠 தாய் மாமனின் கடமைகளும், அன்பும் 💠
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் தாய் மாமனுக்கு தனி இடம் உண்டு.
ஒரு குழந்தையின் பிறப்பிலிருந்து,
காது குத்து
மொட்டை
பூப்புனித நீராட்டு விழா
எனப் பல முக்கிய நிகழ்வுகளில் தாய் மாமனின் பங்கு இன்றியமையாதது.
மிகவும் முக்கியமாக,
ஒரு பெண்ணின் திருமணத்தில்,
மாங்கல்யச் சரடு எடுத்துத் தருவது,
சீர்வரிசை செய்வது
என பல சடங்குகளில் தாய் மாமன் முன்னிலை வகிக்கிறார்.
தன் சகோதரியின் பிள்ளைகளை,
தன் சொந்த பிள்ளைகளாகவே கருதி,
அவர்களுக்குத் துணையாகவும்,
அன்பான வழிகாட்டியாகவும் திகழ்கிறார்.
தன் குடும்பம் மட்டுமல்லாமல்,
தன் சகோதரியின் குடும்பத்தின் நலனுக்காகவும்,
மகிழ்ச்சிக்காகவும்,
தான் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யத் தயங்குவதில்லை.
💠 தாய் மாமன் உறவின் முக்கியத்துவம் 💠
தமிழ்ச் சமூகத்தில், தாய் மாமனின் உறவுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் தனித்துவமானது.
இந்த உறவு, தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் பிணைப்பு.
இது வெறும் சடங்குகளுக்காக மட்டுமல்ல –
அது பாசத்தின் வெளிப்பாடாகவும்,
அரவணைப்பின் அடையாளமாகவும் உள்ளது.
🙏 இன்று நம்மால் செய்யக் கூடிய சிறு நன்றி 🙏
இன்று தாய் மாமன் தினத்தை முன்னிட்டு,
உங்கள் தாய் மாமனுக்கு
🟢 வாழ்த்துகளைத் தெரிவிக்கவும்
🟢 அவரது அன்புக்கும், அர்ப்பணிப்புக்கும் நன்றி சொல்லவும்
🟢 ஒரு அழைப்பு, ஒரு செய்தி, அல்லது ஒரு சிறு பரிசு…
அவர் முகத்தில் வரும் ஒரு சிரிப்பு…
உங்கள் நெஞ்சத்தை நெகிழவைக்கும்!
🪔 தாயின் பாசத்துடன் நம்மை தீண்டும் அந்த நிழல் மரத்துக்கு – நன்றி, தாய் மாமா! 🪔

கனிகள் உண்ணப் பிணிகள் தீரும்


 கனிகள் உண்ணப் பிணிகள் தீரும்

**************************************
எலுமிச்சை ராஜகனி
************************
மங்கல கனி மத்திர கனி திருஷ்டி கனி செம்பு சத்து அதிகம் குளிர்ச்சியானது உடல் சூடு தணியும் பித்தம் குறையும் விட்டமின் சி அதிகம் சோர்வு தீரும் சுறு சுறுப்பு தரும் இரத்த சுத்தி கிருமிநாசினி லெமன் சாறு தேன் கலந்து சாப்பிட பற்பல பிணிகள் போகும்.
தக்காளி.
***********
விட்டமின் b12 தக்காளி ரசம் உடலுக்கு நல்லது தக்காளி ஜூஸ்சாப்பிட தோல் நன்றாக இருக்கும். தக்காளி சூப் உடலுக்கு தெம்பு தக்காளி பச்சடி ஜாம் சுவை மிகுந்தது எலும்பு வளர்ச்சி பல் உறுதி ரத்த சுத்தி.
வெள்ளரிப்பழம்.
*****************
சூடு குறையும் அரிப்பு வெள்ளை வெட்டை போகும் .
வில்வபழம் .
*************
எந்தவித நோயையும் குணப்படுத்தும் ஆஸ்துமா குணமாகும் மலடு நீங்கும் நினைவாற்றல் பெருகும் வாய்ப்புண் குடலற்புண் தீரும் .
ஆப்பிள் .
*********
தினமும் ஒரு பழம் சாப்பிட இளமை அழகு தரும் குடல் நோய்கள் தீரும் சகல விட்டமின்களும் உண்டு .
ரத்த சுத்தி Liver Tonic .கற்கள் கரைக்கும் இரைப்பை அமில நீக்கி .வலிப்பு வாதம் போம். இதய நிவாரணி .
பேரிச்சை .
*************
மாதவிலக்கு தடைபடாது கண் ஒளிபெறும் இரும்பு சத்து சுண்ணாம்புச் சத்து மிக்கது ஆண்மைக் குறைவை நீக்கி வீர்ய சக்தி உண்டாகும் பற்கள் உறுதி நோய் எதிர்ப்பு சக்தி.
திராட்சை .
**********
ரத்த சுத்தி. உள் வெளி உறுப்புகள் பலப்படும் .தோலை பாதுகாக்கும். ஜீரண சக்தி மிக்கது. குடற் புண் தீரும். வாயுக்கோளாறு நரம்புத் தளர்ச்சி குணமாகும் முக வசீகரம் வைட்டமின் சி ரத்த விருத்தி இதய பலம்.
நாவல் .
*******
குளிர்ச்சி தரும் .ரத்த மூலம் குணமாகும் .நீரிழிவுக்கு நல்ல மருந்து. கருப்பை கோளாறு குணமடையும். வைட்டமின் a நீரிழிவு நிவாரணி.
நேற்றைய தொடர்ச்சி.
கனிகள் உண்ணப் பிணிகள் தீரும்.
அன்னாசி.
************
சூடு .ஆரம்பநிலை கருவை கலைக்கும். ரத்த சுத்தி. ரத்தவிருத்தி. பித்தம் தணியும். தேனில் சாப்பிட ஈரல் பல படும் .ஆண்மை குறைவிற்கு பாலில் சேர்த்து சாப்பிடவும். கபம் போம் .களைப்பும் போகும். வைட்டமின்-சி குடற்புழுக்களை அளழிக்கும் .கண் நோய் குணமாகும் இடுப்பு வலி போகும். கழிவகற்றி புழு நீக்கி. மலமிளக்கி. ஈரல் வலுப்பெறும் .
விளாம்பழம்.
***************
சர்க்கரை சேர்த்து சாப்பிடவேண்டும் பித்தம் வாந்தி மயக்கம் தீரும். தோல் நோய் தீரும். ரத்த சுத்தி நினைவாற்றல் தரும். எலும்புகள் பலமடையும். வைட்டமின் ஏ ஜீரணசக்தி இதயம் பலம். மூலம் போக்கி, நரம்பு சக்தி, வீர்ய விருத்தி.
மாதுளை .
***********
நல்ல ஜீரணசக்தி ,புளிப்பு மாதுளையால் வாந்தி போகும், கருவில் வளரும் குழந்தை ஆரோக்கியத்துடன் வளரும், ரத்த சுத்தி ,ஆண்மைக்கு நல்லது ,தேனுடன் சாப்பிட மேனி அழகும் ,வைட்டமின் ஏ ,இதய வலி வயிற்று புண் தீரும். நீரிழிவு மூலம் போம் .மலடு நீங்கி.
மாம்பழம் .
***********
விட்டமின் ஏ, ரத்தசுத்தி ,சூடு ,பால் சர்க்கரை கலந்து சாப்பிட நரம்புத் தளர்ச்சி மூட்டுவலி போகும் ,கண்னொளி பெருகும்,
பப்பாளி .
**********
விர்யசக்தி, ரத்தவிருத்தி ,விட்டமின் ஏ ,சூடு ,கண் பார்வை தெளிவுபெறும் ,தோல் நோய்களை தடுக்கும் ,சிறுநீரக கற்களை கரைக்கும், ஜீரணசக்தி மாதவிலக்கு கோளாறு போக்கும், நோய் அணுகாது நச்சுக் கிருமிகளைக் கொள்ளும் ஆற்றல் உடையது ,ஜீரண காரி லிவர் டானிக், புண் ஆற்றி
வாழைப்பழம் .
****************
விட்டமின் ஏ, இரும்பு சுண்ணாம்பு சத்து ,ஆண்மை விருத்திக்கு செவ்வாழை ,சூடு தணிய மலைவாழை ,
வீர்ய சக்தி பெற ரஸ்தாளி ,மலமிளக்கிக்கு பூவன் வாழைப்பழம், மூல நோயாளிக்கும் ஏற்றது ,பஞ்சாமிர்தம் நல்ல டானிக் சுவைத்து உன்ன சளி உண்டாகாது.
பலாப்பழம்.
*************
தேன் கலந்து சாப்பிட சுவை மிகவும். சுண்ணாம்பு இரும்பு சத்துடையது. குங்குமப்பூ கலந்து சாப்பிட உயிர் சக்தி உண்டாகும் .கக்குவான் இருமல் போம் கழிவு நீக்கி வீர்ய விருத்தி ,எரிவு போக்கி .
ஆரஞ்சு .
*********
தேன் கலந்து சாப்பிட உடல் தேறும், நோயாளிக்கு உயிர் போன்றது ,உள்ளுறுப்பு சூடு தணியும் ,விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தி உடையது ,ரத்த சுத்தி, தினமும் சாப்பிட கண் நோய்கள் வராது ,மூளைக்கு நல்ல பலம் ,இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும் ,காலையில் சாப்பிட குடல்புண் குணமாகும், கால்சியம் ,நுரையீரல் சுத்தி.
ஊக்க டானிக்.
நெல்லிக்கணி
****************
இதய நோய் சிறந்தது. வாந்தி பேதி போம்.இரத்த சுத்தி, கண்நோய்கள் குணமாகும் ,குடல் கழிகவற்றி ,முப்பிணி சமன் ,குளிர்ச்சி ,கருப்பை நோய் போகும் ,வைட்டமின்-சி இளமைப் பொலிவு கூடும்! நீரிழிவு நோய் தீர,பல் ஈறு பாதுகாப்பு ,தோல் பாதுகாப்பு .
************************************************

*ஆவணி அவிட்டம் திருநாள்* *பூணூலின் உண்மையான மகிமை*

 *ஆவணி அவிட்டம் திருநாள்* *


பூணூலின் உண்மையான மகிமை*

*ஆகஸ்ட் 9, ஆவணி அவிட்டம்*🌷
‘புது பூணூல் போட்டாச்சா?’ என்று கேட்கையிலேயே, அது ஆவணி அவிட்டப் பண்டிகையென்று சிறு குழந்தைகள் கூட சொல்லிவிடும். பூணூல் அணியும் வழக்கமுள்ள இந்துக்களான அந்தணர், வைசியர்கள், சமணரௌகள், விஸ்வகர்மா போன்றவர்கள் ஆவணி அவிட்டப் பண்டிகையன்று, பழைய பூணூலை மாற்றி புதுப் பூணூல் அணிவார்கள். ஆவணி அவிட்ட பண்டிகை கிராமப்புறங்களில் ஆற்றங்கரைப் பக்கத்திலும், நகரங்களில் கோயில்கள், பொது மண்டபங்கள் மற்றும் வீடுகளில் நடைபெறும்.
ஆவணி அவிட்டம் கொண்டாடும் காலம்: ரிக் வேதம் பின்பற்றுவர்கள், ஆவணி மாத திருவோண நட்சத்திரத்திலும், யஜுர் வேதத்தினர் ஆவணி மாத பௌர்ணமியிலும், சாம வேதக்காரர்கள், ஆவணி மாத அஸ்த நட்சத்திரத்திலும் ஆவணி அவிட்டம் கொண்டாடுவார்கள். கேரளாவிலும், குஜராத்திலும் அதர்வண வேதத்தினர் இதனைக் கொண்டாடுகின்றனர்.
சாம வேதத்தைப் பொறுத்தவரை மந்திரங்கள் அதிகம். எருக்க இலையில் அரிசி வைத்து நீரில் தர்ப்பணம் செய்வார்கள். தேவ, ரிஷி, பிதுர் ஆகிய பல்வேறு தர்ப்பணங்கள் செய்து, வேள்வி வளர்த்து, கும்பம் வைத்து பூஜை செய்வார்கள். வடமொழியில் ‘அத்யயனம்’ என்றால் கல்வி. வேதம் பற்றிய கல்வியை உபகர்மா அல்லது ஆவணி அவிட்டம் என்பார்கள். உபகர்மா எனும் வேதத்தைத் தொடர்ந்து சொல்லி வந்தால், மந்திரத்திற்கு பலன் அதிகமாகும்.
தலை ஆவணி அவிட்டம்: சிறு வயதில், முதன் முதலில் பூணூல் அணிவித்து பிரம்மோபதேசம் செய்யப்பட்ட சிறுவர்களுக்கு, அதன் பிறகு வரும் ஆவணி அவிட்டம் ‘தலை ஆவணி அவிட்ட’மாகும். அன்று சிறுவர்களுக்கு பட்டம் கட்டி விசேஷ மந்திரங்களைக் கூறி ஆசீர்வதிப்பது வழக்கம்.
காஞ்சி பெரியவர் பூணூல் மாற்றுவது குறித்து கூறிய சில செய்திகள்:
பூணூலை வருடம் ஒரு முறை ஆவணி அவிட்டம் அன்று மட்டும் மாற்றுவது சரி கிடையாது. மாதந்தோறும் பூணூலை மாற்றுவது அவசியம். அதாவது, அமாவாசை தர்ப்பணம் செய்கையில் மாற்றி விடவேண்டும். தீட்டுப் பட்டால் மாற்ற வேண்டும். அதேபோல், வீட்டில் குழந்தை பிறந்து 11ம் நாள் புண்ணியாஜனமன்று பூணூல் மாற்றுதல் அவசியம். துக்கம் விசாரிக்க சென்று வந்தால் பூணூலை மாற்ற வேண்டும். பூணூல் என்பது காயத்ரி மந்திரம் செய்தது. வெறும் நூல் கிடையாது. உடம்பை ரட்சிக்கும் புனித நூலாகிய பூணூலை, மறந்தும்கூட முதுகு சொறியப் பயன்படுத்துவது கூடாது.
ஆவணி அவிட்டம் தர்ப்பண பலன்கள்: ரிஷிகள், தேவர்கள் மற்றும் முன்னோர்களது ஆசிகள் கிடைக்கும். சரஸ்வதி கடாட்சம் ஏற்படும். தீய சக்திகள் அண்டாது. உடல் தேஜஸுடன் விளங்கும். முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும்.
காயத்ரி ஜபம் (மந்திரம்) விபரங்கள்:
ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் வருவது காயத்ரி ஜபம். வேதங்களின் தாய் காயத்ரி எனக் கூறப்படுகிறது.
‘ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்’
என்கிற சக்தி வாய்ந்த மந்திரமாகிய காயத்ரி ஜபத்தை, சங்கல்பம் செய்த பின்னர் 108 அல்லது 1008 முறைகள் உச்சரித்து ஜபம் செய்ய வேண்டும். மேலும், இதை தினமும் சூரிய நமஸ்காரத்திற்குப் பின்னும் செய்யலாம்.
அசல்பதிவேற்றியவருக்கு நன்றி.
காயத்ரி ஜபம் செய்கையில், மோதிர விரலின் இரண்டாவது கணு தொடங்கி கீழ் நோக்கி வந்து சுண்டு விரலின் முதல் கணு வரை மேல் நோக்கி சென்று, ஆள்காட்டி விரலின் அடிக்கணு வரை வந்தால் பத்து எண்ணிக்கை வரும். ஒவ்வொரு பத்தாக எண்ணி 108, 1008 எனச் செய்யலாம். முத்து, பவளம் போன்ற மாலைகளை கைகளால் உருட்டியவாறும் எண்ணலாம்.
காயத்ரி மந்திரத்தில் சக்தி வாய்ந்த பத்து பதங்கள் உள்ளன. அவை: 1. தத், 2. ஸவிது, 3. வரேண்யம், 4. பர்கோ, 5. தேவஸ்ய, 6. தீமஹி, 7. தியோ, 8. யோ, 9. த:, 10. ப்ரசோதயாத் ஆகியவையாகும்.
காயத்ரி ஜபம் செய்வதின் மூலம் முகத்தில் அமைதி தவழும், எடுத்த காரியத்தை தடங்கலின்றி முடிக்க முடியும், நோய்கள் நம்மை அண்டாது, நினைத்தது நடக்கும். ஆவணி அவிட்டமும், காயத்ரி ஜபமும் ஆண்களுக்குரிய பண்டிகைகள் என்றாலும், வீட்டுப் பெண்களும் இதில் ஈடுபாட்டுடன் அமர்க்களமாக ஸத்தி விருந்து தயாரித்து சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.🌷

தாய் மாமன் உறவு என்பது

 தாய் மாமன் உறவு என்பது வெறும் ரத்த பந்தம் மட்டுமல்ல – அது பாசத்தாலும், பொறுப்பாலும் பிணைக்கப்பட்ட ஓர் ஆழமான உறவு. தாய் மாமனின் கடமைகளும், ...