Friday, 21 October 2022
நோய் தீர்க்கும் ராகங்கள்!!!!
இசையை ரசிக்காத மனிதர்களே இல்லை, இசைக்கு இறைவனும் மயங்குவான் எனக் கூறுவதைக் கேட்டிருக்கிறோம்.
சத்தத்தில் சங்கீதம் இருக்கு - அதை கேட்கத்தான் நெஞ்சத்தில் இருக்கு.
என்ற கவிஞர் முகிலன் எழுதிய இவ்வரியில் இயற்கையின் ஒவ்வொரு படைப்பிலும் ஒரு சத்தம் ஒளி வடிவாகவும், இசை வடிவாகவும் இருக்கிறது. அதைக் கேட்காத நெஞ்சம் கிறுக்கு (மயக்கநிலை) ஆகிவிடும் எனக் கூறுகிறார்.
இயந்திர வாழ்வில் ஓய்வில்லாமல்,உறக்கமில்லாமல், நல்ல உணவுகளைக் கூட நேரத்திற்கு சாப்பிட முடியாமல் பலர் இருப்பதால் பல நோய்கள் மனிதர்களைத் தாக்கும் போது பெரும்பாலானவர்கள் மருந்தை எடுத்துக் கொள்கின்றனர்.
இச்சூழலில் நோய்களை இசையின் மூலம் குணப்படுத்துவது பலருக்கும் தெரியாத ஒன்றாகவே உள்ளது. அதெப்படி இசை மூலம்
குணமாக்க முடியும்? இசைக்கு அப்படி ஒரு திறன் உண்டா? எனப் பல கேள்விகள் எழுவது இயற்கையே. ஆனால் அந்த இசையால்
பற்பல நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பதே உண்மையான ஒன்றாகும்.
!!நோய் தீர்க்கும் ராகங்கள்!!
இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை
இசை மூலம் நம் முன்னோர்கள் சில அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.
அகத்தியர் பாடியே ஒரு மலையை உருக வைத்தாராம். பேரரசர் அக்பர் அவையில் இருந்த சங்கீதச் சக்கரவர்த்தியான தான்சேன்
என்ற இசைக்கலைஞர் “தீபக்” என்ற ராகத்தைப் பாடி அணைந்த விளக்குகளை மீண்டும் எரிய வைத்தாராம்.
சுகமான, இதமான இசையைக் கேட்டதன் மூலம் நரம்பு சம்பந்தமான கோளாறுகள், நரம்பு தளர்ச்சி, சோகமான நிகழ்வில் ஏற்படும் அதிர்ச்சிகள் என இவைகளை இசை ஒரு கட்டுக்குள் கொண்டு வருகின்றன. ஒரு நபர் இசைக்கும் வயலின் இசையைக் கேட்டாலே கொடிய தலைவலியும் போய்விடும் என்கின்றனர். ஹிஸ்டீரியா என்ற நோயை நரம்புக் கருவிகளின் இசை குணமாக்கி விடுகிறதாம்.
நல்ல இசை நம் மனதையும் எண்ணங்களையும் அமைதிப் படுத்துவதோடு, ரத்த அழுத்தம், மன அழுத்தம், மன இறுக்கம்,
தூக்கமின்மை, சீரற்ற இதயத்துடிப்பு போன்ற நோய்கள் இசையைக் கேட்பதமன் மூலம் குணப்படுத்தமுடியும் என்கின்றனர்
நம் நோய் தீர்க்கும் சில ராகங்களையும், அந்த ராகத்தில் அமைந்த திரைப் பாடல்களையும், இந்த ராகத்தில் அமைந்த பாடல்களைக்
கேட்டால் தீரும் நோய்களைப் பற்றியும் இங்கே இனி காணலாம்.
அதிகாலையில் கேட்க வேண்டிய ராகம் - பூபாளம்
* பாடல் : சலங்கயிட்டால் ஒரு மாது
படம் : மைதிலி என்னைக் காதலி
* பாடல் : செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
படம் : முள்ளும் மலரும்
அந்தி மாலையில் கேட்கவேண்டிய ராகம் - மலையமாருதம், சக்கரவாகம்
* பாடல் : கண்மணி நீ வர காத்திருந்தேன் – மலையமருதம்
படம் : தென்றலே என்னைத் தொடு
* பாடல் : நீ பாதி நான் பாதி கண்ணே - சக்கரவாகம்
படம் : கேளடி கண்மணி
* பாடல் : பூப்பூக்கும் மாசம் தை மாசம் - மலையமாருதம்
படம் : வருசம் 16
* பாடல் : உள்ளத்தில் நல்ல உள்ளம் - சக்கரவாகம்
படம் : கர்ணன்
* பாடல் : ஓராறு முகமும் ஈராறு கரமும்
படம் : டி.எம்.எஸ். பக்திப் பாடல்கள்
* பாடல் : நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
படம் : தியாகம்
சிறுநீரகப் பிரச்சனை தீரவும், மழை வேண்டியும்- அமிர்தவர்ஷினி
*பாடல்: தூங்காத விழிகள் ரெண்டு.
படம் : அக்னி நட்சத்திரம்
கடின மனம் இளக கல்நெஞ்சம் கரைய - அரிகாம் போதி
*பாடல்: கண்ணுக்கு மை அழகு
படம் : புதிய முகம்
*பாடல்: உன்னை ஒன்று கேட்பேன்
படம் : புதிய பறவை
*பாடல்: ஒரே பாடல் உன்னை அழைக்கும்
படம் : எங்கிருந்தோ வந்தாள்.
*பாடல்: பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்
படம் : வருசம் பதினாறு.
மனதை வாட்டும் பல துன்பங்களின் தாக்கம் குறைந்து அமைதி ஏற்பட - ஆனந்த பைரவி, ஸ்ரீ ரஞ்சனி, கமாஸ், நாயகி,சகானா,
நீலாம்பரி
*பாடல்: நாதம் எழுந்ததடி – ஸ்ரீ ரஞ்சனி
படம் : கோபுர வாசலிலே
*பாடல்: வசந்த காலங்கள் இசைந்து - ஸ்ரீ ரஞ்சனி
படம் : ரயில் பயணங்களில்
*பாடல்: மெட்டுப்போடு மெட்டுப்போடு – ஆனந்த பைரவி
படம் : டூயட்
*பாடல்: கற்பகவள்ளி நின் பொற்பாதங்கள் - ஆனந்த பைரவி
படம் : டி.எம்.எஸ். பக்திப்பாடல்கள்.
*பாடல்: வரம் தந்த சாமிக்கு சுகமான லாலி - நீலாம்பரி
படம் : சிப்பிக்குள் முத்து.
*பாடல்: பூவே இளைய பூவே - நீலாம்பரி
படம் : கோழி கூவுது
*பாடல்: சித்திரம் பேசுதடி என் சிந்தை - கமாஸ்
படம் : சபாஷ் மீனா
மனம் சார்ந்த பிரச்சனை தீர - அம்சத்வனி, பீம்பிளாஸ்
*பாடல் : காலம் மாறலாம் நம் காதல் - அம்சத்வனி
படம் : வாழ்க்கை
*பாடல்: சிந்து நதிக்கரையோரம் அந்தி நேரம் - பீம்பிளாஸ்
படம் : நல்லதொரு குடும்பம்
*பாடல்: தோகை இளமயில் ஆடி வருகுது - அம்சத்வனி
படம் : பயணங்கள் முடிவதில்லை
*பாடல்: வா…வா…வா… கண்ணா வா -அம்சத்வனி
படம் : வேலைக்காரன்
*பாடல்: இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை - பீம்பிளாஸ்
படம் : திருவிளையாடல்
*பாடல்: பன்னிரு விழிகளிலே பணிவுடன்
படம் : சீர்காழி கோவிந்தராசன் பக்திப்பாடல்கள்
*பாடல்: அழகென்ற சொல்லுக்கு முருகா
படம் : டி.எம்.எஸ். பக்திப்பாடல்கள்
*பாடல்: வாராய் நீ வாராய்
படம் : மந்திரி குமாரி
இதய நோய் தீர கேட்க வேண்டிய ராகம் - சந்திரக கூன்ஸ்
நீரிழிவு நோய் தீர கேட்க வேண்டிய ராகம் - பகாடி, ஜகன் மோகினி
பெரும் உணர்ச்சிக்கும், உத்வேகம் வர கேட்க வேண்டிய ராகம் - அடான
*பாடல்: யார் தருவார் இந்த அரியாசனம் - அடான
படம் : சரஸ்வதி சபதம்
*பாடல்: வருகிறார் உனைத் தேடி - அடான
படம் : அம்பிகாபதி
மனதை வசீகரிக்க, மயக்க - ஆனந்த பைரவி , உசேனி, கரகரப்பிரியா
*பாடல் : தானா வந்த சந்தனமே - கரகரப்பிரியா
படம் : ஊருவிட்டு ஊரு வந்து
*பாடல் : கம்பன் எங்கே போனான் - கரகரப்பிரியா
படம் : ஜாதிமல்லி
*பாடல்: மெட்டுப்போடு மெட்டுப்போடு - ஆனந்த பைரவி
படம் : டூயட்
*பாடல்: சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா - கரகரப்பிரியா
படம் : அழகன்
*பாடல்: மாதவிப் பொன் மயிலாள் - கரகரப்பிரியா
படம் : இருமலர்கள்
சோகத்தை சுகமாக்க - முகாரி , நாதநாமக்கிரியா
*பாடல்: கனவு கண்டேன் நான் - முகாரி
படம் : பூம்புகார்
*பாடல்: சொல்லடி அபிராமி
படம் : ஆதிபராசக்தி
பாடல்: எந்தன் பொன் வண்ணமே அன்பு
படம் : நான் வாழவைப்பேன்
பாம்புகளை அடக்குவதற்கு - அசாவேரி ராகம்
வாயுத்தொல்லை தீர -ஜெயஜெயந்தி ராகம்
வயிற்றுவலி தீர - நாஜீவதாரா
எந்த நேரத்தில் என்ன பாட்டு கேட்க வேண்டும் ?
திருவெண்காடு டி.தண்டபாணி தேசிகர் எந்த நேரத்தில் என்ன ராகத்தில் அமைந்த பாடல்களைக் கேட்கலாம் என்று ஒரு
வரையறை கூறுகிறார்.
நேரம் - ராகம்
5-6 மணி (காலை நேரம்)
பூபாளம்
6-7 மணிக்கு
பிலஹரி
7-8 மணிக்கு
தன்யாசி
8-10 மணிக்கு
ஆரபி, சாவேரி
10-11 மணிக்கு
மத்யமாவதி
11-12 மணிக்கு
மனிரங்கு
12-1 மணி (மதிய நேரம்)
ஸ்ரீராகம்
1-2 மணிக்கு
மாண்டு
2-3 மணிக்கு
பைரவி, கரகரப்பிரியா
3-4 மணிக்கு
கல்யாணி, யமுனா கல்யாணி
4-5 மணிக்கு (மாலை நேரம்)
காம்போதி, மோகனம், ஆனந்த பைரவி, நீலாம்பரி, பியாகடை, மலையமாருதம்
இப்படியான பல ராகங்கள், மனிதனுக்குள் இருக்கும் பல்வித நோய்களைக் குணப்படுத்துகிறது. . பாட்டைக் கேட்டல் நோய் தீரும்
என்பது கரும்பு தின்னக் கூலியா என்பது போல, நம் உடல் நலமும், மன நலமும் நம்மிடம் உள்ளது. நம் நோய்க்கான மருந்து இந்த
ராகங்களில் உள்ளது.
இனிமை கூட்டும் பாடல்களையும், இசைகளையும் ரசிப்போம் அமைதி பெறுவோம்.
நன்றி....
Friday, 7 October 2022
மனிதனின் ஆயுட்காலம் குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள்
மனிதனின் ஆயுட்காலம் குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள்
*1. உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை
*2. இரவில் கண் விழித்திருத்தல்
*3. காலை உணவை தவிர்த்தல்
*5. பணத்தை நோக்கிய ஓட்டம்
*6. பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல்
*7. கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல்
வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள்
கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை தொட்டி அல்ல
நேரத்துக்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னை தானே சீராக்குகிறது*
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சூடாக நீர் அருந்துங்கள்.
தினமும் ஒரு பழத்தையேனும் வெறும் வயிற்றில் உண்ணுங்கள்.
போதியளவு நீர் அருந்துங்கள்.
இளநீர் போன்றவை மிக நல்லது
பச்சையாக உண்ணக்கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக்கடலை, வெள்ளரிப் பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததை தினமும் உண்ணுங்கள்.
காலை உணவை தவிர்க்காது ஆரோக்கியமானதை தேர்வு செய்து உண்ணுங்கள்.
அளவாக உண்ணுங்கள்.
எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்.
தொடர்ந்து உட்கார்ந்து கொண்டு இருப்பதை குறையுங்கள்.
யோகா தியானம் உணவை போல் அத்தியாவசியமான ஒன்று.
மூன்று வேளை உண்பதால் இரண்டு வேளை அவசியம் 20 நிமிடம் நடை பயிற்சி செய்யுங்கள்.
இறுக்கமாக இருக்காது சிரித்து பேசி மகிழ்ச்சியாக இருங்கள்.
உங்கள் வட்டத்தை இயந்திரத்தோடு குறுக்கிக் கொள்ளாதீர்கள்.
அழுது வடியும் சீரியல்களை பார்த்து உங்கள் இதயத்தை வாட்டாமல், சிரிக்க வைக்கும் காட்சிகளை கண்டு களியுங்கள்
ஆளைக் கொல்லும் கவலைகளைப் புறந்தள்ளி ஆளுமையைத் தரும் தன்னம்பிக்கையை ஆடையாக அணியுங்கள்.
மனதுக்கு பிடித்த விசயங்களை மட்டும் செய்து வரவும்.......
Subscribe to:
Posts (Atom)
என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார்
என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார். இதன் விளைவாக சுவர்கள் நிறமாற்றம் அடைந்தன, அவர் தொட்ட இடமெல்லாம் அவர...

-
எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/ குழந்தைக்கு முடி எடுக்கக்கூடாத க...
-
ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் திருக்கோவிலை உலகம் உற்று நோக்கிறது!!! ஸ்ரீ ஆனந்தாய்பேச்சியம்மன் (எங்கும் இல்லாத ஏழு கலசம்) '...
-
எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/ உடல்கட்டு மந்திரம் நாம் பல்வேறு...