ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்

▼

Monday, 22 October 2018

ஈசனே

                                                                           ஈசனே

ஈசனே உனை தேடி வந்தேன்
கூசாமல் பேசும் கூட்டம் விட்டு
நேசனே நின் பாதம் அடையவே
பேசாமல் அமர்கிறேன்,
வாய் பேசும் காலம் போக்கியே
கண்பேசும் காலத்தில் வந்தேன்
மெய் பேச மொழியில்லை என்றே
உன் நாமமுரைக்க வந்தேன்,
கருப்பையில் சமமாய் இருந்து
கண்மணியே எனக்கேட்ட என் வாழ்வு
ஒரு கைப்பையே என் உடமையாகிட
உன்அடியே சரணமென்று வந்தேன்,
மகனை வளர்த்தேன்
மகளையும் வளர்த்தேன்
என்னை வளர்க்கத் தவறியதால்
உன்னை நாடும் நிலையாச்சு,
தூணே துனையென்று
தூய உள்ளத்தோடு வந்தேன்
நானே நினைந்துருகுகிறேன்
நிமலனே காத்தருள்வாய்,
ஊரை விட்டு வந்தேன்
உறவை விட்டு வந்தேன்
உடலை விட்டுட்டு சிவனே
உன்னடி சேர்த்தருள்வாய்,
வாழட்டும் எம் வம்சம்
வாழையடி வாழையாக
மோட்சம் தந்த என் பின்னோர்க்கு
சூட்சுமமாய் என் வாழ்த்துக்கள் .
#ஓம்_நமசிவாய

Image may contain: one or more people

at October 22, 2018
Share

No comments:

Post a Comment

‹
›
Home
View web version

About Me

sriannathaipechiamman
View my complete profile
Powered by Blogger.